Wednesday, April 12, 2017


கழிவறை கழுவி 1,200 மாணவர்களைப் படிக்க வைத்த தமிழக தம்பதி! #Inspiration

எம்.குமரேசன்


கக்கன் போலீஸ் மந்திரியாக இருந்த சமயம். அவரது மகனுக்கு போலீஸ் வேலை கிடைக்கிறது. முழுத் தகுதி இருந்ததால் பணி வழங்கப்படுகிறது. தந்தையிடம் வந்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டரைக் காட்டுகிறார் அதனை வாங்கிப் பார்த்த கக்கன், கிழித்துப் போட்டு விட்டு, மகனைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்,,' நான் போலீஸ் துறை மந்திரி... எனது மகனுக்கு போலீஸ் துறையில் வேலை கிடைத்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?. அதனால் இந்த உனக்கு வேலை வேண்டாம்' என கோபமாகிறார். அப்படிப்பட்ட நேர்மையாளர்கள் வாழ்ந்த மண் இது. கடைசிக் காலத்தில் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற வழியின்றி, இறந்து போனார் கக்கன்.



நல்ல தலைவர்கள் நாட்டுக்குத் தேவை என வீதிக்கு வீதி கூப்பாடு போடுகிறோம்.... வாய் கிழியப் பேசுகிறோம். தமிழகம் இப்போதுள்ள நிலையில் ‘தலைவர்கள்’ பற்றிச் சொல்லவே தேவையில்லை. காமராஜர், கக்கன் போன்றவர்கள் மீண்டும் பதவிக்கு வர வேண்டுமென விரும்புகிறோம். அத்தகையை தலைவர்களை உருவாக்க நாம் விரும்புகிறோமா... முயற்சிக்கிறோமா என்றால் கேள்விக்குறிதான். நல்ல தலைவர்களாக வருவதற்கு தகுதியும் திறமையும் கொண்டிருப்பவர்களை நாம் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறோமா என்றாலும் நிச்சயம் இல்லை.

உண்மையை சொல்லப் போனால், 'இவர் நல்ல தலைவர்' எனத் தெரிந்தால் அவரைத் தோற்கடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் விசித்திர குணமும் நமக்கு இருக்கிறது. நாம் வாழும் காலத்தில் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நல்லக்கண்ணுவைச் சொல்லலாம். அவரைப் போலவே நாட்டில் பல நல்லக்கண்ணுக்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் லோகநாதன். இவருக்கும் கக்கன்தான் இன்ஸ்பிரேஷன்.

கோவை, சூலுரைச் சேர்ந்தவர் லோகநாதன். சிறிய லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். வயிற்றுப்பாட்டுக்காக லேத் பட்டறை. இந்த பணி போக லோகநாதன் நாமெல்லாம் கண்டாலே முகம் சுளிக்கின்ற பணியும் செய்வார். அது வீடு வீடாக சென்று கழிவறைகளை சுத்தம் செய்வது. லேத் பட்டறை வைத்துதான் நடத்துகிறாரே... பின்னர் எதற்கு கழிவறை சுத்தம் செய்து சம்பாதிக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா?. கழிவறை கழுவி சம்பாதிக்கும் பணத்தில் லோகநாதன் படிக்க வைத்த மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை மட்டும் 15 வருடங்களில் 1,200 பேர். இவர்களின் படிப்புக்காகத்தான் லோகாதன் 'பார்ட் டைம் ஜாப்' போல வீடு வீடாக சென்று கழிவறை கழுவி வருகிறார். ஒரு வீட்டுக்கு மாதம் 400 ரூபாய் வசூலிக்கிறார். அந்த தொகையை கொண்டு ஏழை மாணவர்கள், படிக்க வசதியில்லாதவர்களை பள்ளியில் சேர்க்க வைத்து படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

லோகநாதனிடம் பேசிய போது, '' பெரியார், கக்கன், அண்ணா, காமராஜர் போன்றத் தலைவர்கள், 'எளிமையாக உயர்ந்த சிந்தனையுடன் வாழுங்கள்' என அறிவுறுத்தினார்கள். நானும் அவர்களின் கொள்கையைத்தான் கடைபிடிக்கிறேன். தொடக்கத்தில் கழிவறை சுத்தம் செய்வது கடினமானதாகத்தான் இருந்தது. போகப் போக பழகி விட்டது. எனது மனைவியும் இதனை செய்கிறார். இருவரும் சேர்ந்து கிடைக்கும் பணத்தில் குழந்தைகளின் படிப்புக்கு உதவுகிறோம். குழந்தைகளை அடையாளம் காண, தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று உதவியாக இருக்கிறது. அத்தனையும் வங்கி வழியாகவே பணம் செலுத்துகிறோம். அதனால்,ஒவ்வொன்றுக்கும் கணக்கு உண்டு. எத்தனை காலமாக ஒரு சமூகத்தினர் மட்டுமே நமக்காக இந்த வேலையை செய்து வருகின்றனர். அந்த சமூகத்தினர் சந்திக்கும் கஷ்டங்களையும் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொண்டேன்'' என்கிறார்.

கழிவறைக் கட்டுவதில் இருந்து சுடுகாட்டுக் கொட்டகை அமைப்பது வரை ஊழல் புரியும் கில்லாடிகள் நிறைந்த நம் நாட்டில் லோகநாதனும் ஒரு முறை தேர்தலில் போட்டியிட்டார். கடந்த 2014ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில் லோகநாதன் கோவை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு போட்டியிட்டார். எந்த கட்சியையும் சாராமல் சுயேட்சையாக களமிறங்கிய அவருக்க கிடைத்தது வெறும் 1,744 ஓட்டுகள்தான். அத்தோடு, அரசியல் ஆசையை மூட்டைக் கட்டி வைத்து விட்டு கழிவறை கழுவ சென்று விட்டார்.

தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் குறித்து லோகநாதன், ''நான் ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்க கழிவறையை சுத்தம் செய்கிறேன். அதே போலவே... இளைய சமுதாயத்தினரும் அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய களமிறங்க வேண்டும். களமிறங்குவார்கள் என நம்புகிறேன்'' என்கிறார்.

நான் பேசினால் டெல்லிக்கு சிக்கல்; பேசாவிட்டால், தமிழகத்துக்கு சிக்கல்!' சிறையில் சேகர் ரெட்டியின் மனநிலை #VikatanExclusive

சேகர்ரெட்டி

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனைக்குப் பிறகு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், வாயைத் திறந்தால் டெல்லிக்கும், திறக்கவில்லை என்றால், அ.தி.மு.க-வுக்கும் சிக்கல் என்றும் சேகர் ரெட்டியின் நெருக்கமானவர்கள் சொல்லத் தொடங்கியுள்ளனர்.
சேகர்ரெட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற, கால்கடுக்க வங்கிகள், தபால் நிலையங்கள் முன்பு மக்கள் காத்திருந்த சமயத்தில், 2,000 ரூபாய் புதிய நோட்டுகள் தொழிலதிபர் சேகர்ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் வீடு, அலுவலகங்களில் கைப்பற்றப்பட்டன. அதோடு, கிலோ கணக்கில் தங்கத்தையும் வருமான வரித்துறையினர் பறிமுதல்செய்தனர். இதையடுத்து, சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சேகர் ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்த சில நாட்களிலேயே மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார். சிறைக்குள் இருக்கும் சேகர் ரெட்டியைச் சந்திக்க பல வி.ஐ.பி-க்கள் வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், சேகர்ரெட்டி வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையே  தமிழகத்தில் நடந்துவரும் ஐ.டி.சோதனைக்குப் பிள்ளையார் சுழியாக உள்ளது.

சமீபத்தில் ரெய்டு நடத்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகள், அலுவலகங்களில் நடந்த சோதனையின்போதுகூட சேகர் ரெட்டியின் பெயர் அடிபட்டது. ஏற்கெனவே, முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீடு மற்றும் அவரது மகன் வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வருமான வரித்துறையினரிடம் சிக்கிய டைரியில் உள்ள உள்விவகாரங்கள் அடிப்படையில், அடுத்தடுத்து சோதனைகள் நடந்துவருகின்றன. அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வருமானவரித்துறையினரின் கிடுக்கிப்பிடி தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிறைக்குள் இருக்கும் சேகர் ரெட்டியை, அவருக்கு நெருக்கமானவர்கள் சந்தித்துள்ளனர். அவர்களிடம் சேகர் ரெட்டி, ’நான் வாயைத் திறந்தால் மத்திய அரசுக்கு சிக்கல், வாயைத் திறக்கவில்லை என்றால், மாநில அரசுக்கு சிக்கல்’ என்று மனம்விட்டுப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது இந்தப் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேகர்ரெட்டி

இதுகுறித்துப் பேசிய சேகர் ரெட்டிக்கு நெருக்கமான ஒருவர், "சேகர் ரெட்டியின் கைதுக்குப் பின்னால் ஒர் அரசியலே ஒளிந்திருக்கிறது. இது, மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல அவருடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும். குறிப்பாக, மணல் பிசினஸில் கொடிகட்டிப் பறந்த சேகர் ரெட்டிக்கு, கார்டனில் இருந்த செல்வாக்கு ஊர் அறிந்த ஒன்று. அதுபோல, பா.ஜ.க-வின் டெல்லி முக்கிய பிரமுகர்களுடனும் சேகர்ரெட்டிக்கு பழக்கம் உள்ளது.  சேகர் ரெட்டி வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த நீண்ட ஆலோசனைக்குப் பிறகே மத்திய அரசு கிரீன் சிக்னல் கொடுத்தது. அவரது வீட்டில் பணம், தங்கம் இருப்பது அவருடன் நெருக்கமானவர்களுக்குத் தெரியும். ஏன், மத்திய, மாநில அரசுகளுக்கு கஜானாவாக இருந்தவர்களில் ஒருவர், சேகர்ரெட்டி. நடந்து முடிந்த சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தலின்போது சேகர்ரெட்டி தரப்பிலிருந்தே  'சி'க்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அந்தளவுக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கமானவர்களிடம் சேகர்ரெட்டி நெருக்கமாக இருந்தார். தமிழக அரசியலை கையில் எடுக்க, அவரைப் பலிகடா ஆக்கிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

 இருப்பினும், அவர் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. அவர் மீதுள்ள வழக்குகளை சட்டரீதியாக சந்தித்துவருகிறார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை இன்னும் அடுத்தகட்ட நகர்வை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதைப் பொறுத்திருந்து பாருங்கள். சிறைக்குள் இருந்தபடி அனைத்தையும் உன்னிப்பாக சேகர்ரெட்டி கவனித்துக் கொண்டிருக்கிறார். சேகர் ரெட்டியுடன் நெருக்கத்தில் இருந்தவர்களில் சிலருக்கு, மத்திய அரசின் கருணைப் பார்வை கிடைத்துள்ளதால், அவர்களது வீடு, அலுவலகங்களுக்கு வருமான வரித்துறையினர் செல்லவில்லை. அதே சமயத்தில், மற்றவர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனையை வருமான வரித்துறை தீவிரப்படுத்திவருகிறது. " என்றார்.

சிறையிலிருந்து வெளியேற சேகர்ரெட்டி விரும்பினாலும், அதற்கான வாய்ப்புகள் அவருக்கு ஏற்படவில்லை. ஒருமுறை ஜாமீன் கிடைத்ததும் அவர் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், அடுத்து அவரைக் கைதுசெய்து சிறைக்குத் தள்ளிவிட்டது, அமலாக்கத்துறை. இதனால், சேகர் ரெட்டி சிறைக்குள் இருந்தபடியே தமிழக அரசியல் சூழ்நிலையைக் கவனித்துவருகிறார். சேகர் ரெட்டியை கார்டனுக்கு அழைத்துச் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை என்ற தகவல் அவருக்கும் சென்றுள்ளது. அப்போது, அவர் முகத்தில் எந்தவித ரியாக்ஷனும் இல்லையாம். வழக்கமான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாராம். அதை, சிறைக்குள் இருக்கும் உளவுப் பிரிவினர் கண்காணித்து, உயரதிகாரிகளுக்கு 'நோட்' போட்டுள்ளனர்.

சேகர் ரெட்டியை சிறைக்குள்ளேயே வைத்திருக்க சில முயற்சிகள் நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு, சேகர் ரெட்டி வீடு, அலுவலகங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அவருக்கு எதிராக இருக்கிறது. அதைவைத்தே, சேகர் ரெட்டிக்கு ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில், சேகர் ரெட்டியுடன் நெருக்கத்திலிருந்த அமைச்சர்கள் இருவர் மீது வருமான வரித்துறையினரின் சந்தேகப்பார்வை விழுந்துள்ளது. மேலும், சில முன்னாள் அமைச்சர்களும் வருமான வரித்துறையினரின் சந்தேக வளைத்துக்குள் உள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளை வருமானவரித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். விரைவில் அவர்களது வீடு, அலுவலகங்களுக்கு அதிரடியாகச் செல்ல உள்ளதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


சிறைக்குள் இருக்கும் சேகர் ரெட்டியைச் சந்திக்க வருபவர்களைக் கவனித்துவரும் அமலாக்கத்துறை மற்றும்  உளவுப்பிரிவினர், அது தொடர்பான அறிக்கையை உடனுக்குடன் தெரிவித்துவருகின்றனர். அதன்அடிப்படையில், அ.திமு.க. முக்கிய நிர்வாகிக்கு நெருக்கமான  ஒருவர்,  சில மாதங்களுக்கு முன்பு சேகர் ரெட்டியைச் சந்தித்துப் பேசியுள்ளார். அந்தச் சந்திப்புக்குப் பிறகே, சமீபத்தில் நடந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தெரியவந்ததும், சசிகலா அணி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேகர் ரெட்டியுடன் பிசினஸ் ரீதியாக தொடர்பில் இருந்தவர்களை அழைத்து, சசிகலா தரப்பு ஆலோசனை நடத்தியுள்ளது. அந்த ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதாவது, சேகர் ரெட்டியுடன் பிசினஸ் ரீதியாக தொடர்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளவர்களின் வெளிவராத கணக்கு விவரங்களையும் தோண்டி எடுத்து, அதை வருமான வரித்துறையினரிடம் கொடுக்க உள்ளனர்.

 அதற்கும் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடவும் முடிவுசெய்துள்ளது சசிகலா தரப்பு. இவ்வாறு தொழிலதிபர் சேகர் ரெட்டி மூலம் நடத்தப்படும் அ.தி.மு.க அரசியல் சதுரங்கத்தில், அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.

சிறையில் வைகோ என்ன செய்கிறார்?

SYED ABUTHAHIR A
வைகோ
 
“என்னைச் சிறையில் அடையுங்கள்” என்று நீதிபதியிடம் முறையிட்டதோடு, ''பிணையும் எனக்கு வேண்டாம்'' என்று கூறி பதினைந்து நாள்கள் சிறைவாசத்தை விரும்பி ஏற்றுக்கொண்டவர் வைகோ.
“நான் குற்றம் சாட்டுகிறேன்” என்ற புத்தக வெளியிட்டு விழா சென்னையில் 2009-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பேசிய வைகோ, “மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தார்” என்று கூறி அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்த வழக்கில் வைகோவே நீதிமன்றத்தில் மனு செய்து, ''இந்த வழக்கை விரைந்து முடியுங்கள் அல்லது என்னைச் சிறையில் அடையுங்கள்'' என்று நீதிபதியிடம் முறையிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

 இந்த வழக்கில் வைகோ மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக கூறிய நீதிபதி, வைகோவை பதினைந்து நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். கடந்த ஏப்ரல் 3-ம் தேதி அன்று சென்னை புழல் சிறைக்கு வைகோ கொண்டு செல்லப்பட்டார். ''கட்சிக்காரர்களோ, தனது நண்பர்களோ சிறையில் வந்து தன்னைச் சந்திக்க கூடாது'' என்று எச்சரிக்கை செய்துவிட்டு சிறைக்குள் சென்றார் வைகோ.
சிறைக்குள் வைகோ என்ன செய்கிறார் என அவருக்கு நெருக்கமான வழக்கறிஞர்களிடம் கேட்டபோது, “சிறைக்கு வருவது தலைவருக்கு ஒன்றும் புதிதல்ல என்பதால், சிறையினுள் உற்சாகமாகத்தான் இருக்கிறார்

. சிறைக்குச் செல்லும்போதே தனக்குத் தேவையான உடைகளை முதலில் எடுத்து வரச்சொன்னார். மறுதினம், அவர் வாக்கிங் செல்லும்போது பயன்படுத்தும் ஸ்போர்ட்ஸ் ஷூ, ட்ராக்ஸ், டீசர்ட் போன்றவற்றை எடுத்துவரச் சொன்னார். சிறையில் காலையில் வாக்கிங் போகிறார்; ஷூ, டிசர்ட் சகிதமாக காலைப்பொழுதைக் கழிக்கிறார். வைகோ சிறைக்குள் வந்ததுமே, சிறையில் உள்ள பலர் அவரைக் காண ஆர்வத்தோடு அவருடைய செல்லுக்கு வருகின்றனர். பகல் நேரத்தில் சிறையில் இருக்கும் சக கைதிகளுடன் அவர் பேசுகிறார். விளையாட்டில் வைகோவுக்கு ஆர்வம் அதிகம். பொடாவில் அடைக்கப்பட்டிருந்தபோது, சிறையில் கைதிகளையே இரண்டு அணிகளாகவைத்து வாலிபால் போட்டிகளை நடத்தியவர். இப்போது வாலிபால் விளையாடுவதைக் குறைத்துக்கொண்டதால், சிறையில் கைதிகள் விளையாடினால் அதை உற்சாகப்படுத்திவருகிறார்.


சிறைக்குச் சென்றதுமே அவரிடமிருந்துவந்த முதல் தகவலே, 'புத்தகங்களை வீட்டில் இருந்து எடுத்துவரச் சொல்லுங்கள்' என்பதுதான். பதினைந்து நாள்கள் சிறைவாசத்தில் ஐம்பது புத்தகங்களையாவது படித்துவிட வேண்டும் என்ற குறியில் அவர் உள்ளார். மல்யுத்த வீரர் 'தாராசிங் வரலாறு', ராம்ஜெத்மலானி எழுதிய புத்தகம், 'நீலம் சிவப்பு மஞ்சள்' போன்ற புத்தகங்களை அவர் படித்துவருகிறார். 'சிறைக்காலத்தைப் புத்தகங்கள் படிப்பதில் செலவிட வேண்டும்' என்று அவரே எங்களிடம் சொல்லியுள்ளார். வெளியில் இருந்து சாப்பாடு கொண்டு சென்றால்கூட வேண்டாம் என்று தவிர்த்துவிடுகிறார். ஏப்ரல்-5ம் தேதி அன்று அவருடைய தந்தையாரின் நினைவுதினம் என்பதால் அன்று ஒரு நாள் முழுவதும் மௌனவிரதம் இருந்தார். கடந்த நாற்பது ஆண்டுகளாக மௌனவிரதத்தை விடாமல் கடைப்பிடித்து வருகின்றார்” என்கிறார்கள்.

''சிறையிலிருந்து அவர் வெளியே வரும்போது... அங்கேயே தமக்கான ஆதரவாளர்களை உருவாக்கிவிடுவார்'' என்கிறார்கள் ம.தி.மு.க-வினர். வரும் ஏப்ரல் 17-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளார் வைகோ. அன்றே அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படவும் உள்ளார்.
 அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது கார் ஓட்டுநர் எடுத்துக்கொண்டு ஓடிய ஆவணங்கள் என்ன? - வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை


அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது, கார் ஓட்டுநர் எடுத்துக்கொண்டு ஓடிய ஆவணங்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. 

சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற இருந்ததையொட்டி வாக்காளர் களுக்கு சிலர் பணம் கொடுத்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்தபோது, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை தெரிவித் துள்ளனர். அதைத்தொடர்ந்து கடந்த 7-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மத்திய போலீஸாரின் பாதுகாப்பையும் மீறி தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் சில அமைச்சர்கள் விஜயபாஸ்கரின் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. 

இந்த இடைவெளியை பயன் படுத்தி, தளவாய் சுந்தரம் அங் கிருந்த முக்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு வெளியே வந் தார். அந்த ஆவணத்தை அங் கிருந்த ஒருவரிடம் கொடுத்தார். அதை பாதுகாப்பு படையினர் பார்த்துவிட்டனர். அவரிடம் இருந்து வாங்குவதற்குள், அருகேயிருந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் கார் ஓட்டுநர் உதயகுமார்(30), அந்த ஆவணத்தை அவரிடம் இருந்து பிடுங்கிக்கொண்டு வெளியே ஓட ஆரம்பித்தார்.
அவரை பாதுகாப்பு படை வீரர்கள் துரத்திச் சென்றனர். ஆனால், கையில் வைத்திருந்த ஆவணத்தை அவர் மதில் சுவருக்கு வெளியே வீசி எறிந்தார். வெளியில் இருந்த விஜயபாஸ்கரின் ஆதரவாளர் ஒருவர், அந்த ஆவணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார். அவரை மத்திய போலீ ஸாரால் பிடிக்க முடியவில்லை. 

இதனால், ஆவணத்தை வெளியே வீசிய உதயகுமாரை மத்திய போலீஸார் அடித்ததாக கூறப்படுகிறது. கார் ஓட்டுநர் உதயகுமாரிடம் வருமான வரித் துறையினர் நடத்திய விசாரணை யில், அவர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் என்பது தெரிந்தது. இவர் கடந்த 3 ஆண்டுகளாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கார் ஓட்டுநராக இருக்கிறார். 

அமைச்சரின் கார் ஓட்டுநரை தாக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய போலீ ஸார் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட் டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ் கரின் ஆதரவாளரான முரளி என்ப வர் இந்த புகாரை கொடுத்துள்ளார். புகாரின்பேரில் அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் உள்ள கண் காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். 

நேற்று முன்தினம் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது கார் ஓட்டுநர் மூலம் மறைக்கப்பட்ட ஆவணம் குறித்து துருவி துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.

Payment claim false, says doctor


P. Balaji, professor and head of the Department of Minimal Access Surgery at the Madras Medical College, has refuted “baseless and false news” carried by certain sections of the media regarding alleged payments made to him by the State Health Minister.

In a statement, he pointed to reports that said Health Minister C. Vijaya Baskar had paid him Rs. 5 lakh through his personal assistant, which he allegedly used to settle hotel bills.
“I would like to refute the baseless and false news. I affirm that I have not received any money as fee or otherwise, as alleged,” Dr. Balaji’s statement read.

Deemed varsities should pay bonus’

Tribunal rules varsities are profit-making institutions

Noting that ‘deemed to be universities’ cannot be considered as a non-profit making institution for the purpose of exempting them from paying bonus to their employees, the Industrial Disputes Tribunal, Chennai, has directed Sathyabama University, Chennai, to pay bonus to the drivers and technicians employed in the institution as per the provisions of the Motor Transport Employees Act.
The President of the tribunal A. Kanthakumar passed the order on a plea moved by Pudhiya Jananayaga Vagana Ottunargal Matturm Techniciangal Union.


According to the petitioner, its members have been working in the transport department of the university continuously for several years, and hence, they are entitled for bonus every year as per the Motor Transport Employees Act.

The petitioner added that the university is collecting fee for the transport services provided to its students and teachers and are making huge profit; hence, they are liable to pay bonus to the employees.

Minority institution
Opposing the contention, the university submitted that it is a minority non-profit making institution and is exempted from Acts such as the Motor Transport Employees Act.
“The Payment of Bonus Act, 1965, applies only to factory and other establishments in which 20 or more persons are employed. The Act exempts universities and educational institutions from the provisions of the Act,” the management said.

Refusing to concur with the submissions, the Industrial Disputes Tribunal made it clear that the universities are profit-making institutions and such exemptions cannot be provided to them.

Cancellation of byelection clears the decks for distribution

With the cancellation of the byelection to the R.K. Nagar assembly constituency, the Civil Supplies department is likely to begin issuing smart cards shortly to beneficiaries of the public distribution system (PDS) belonging to the Chennai district.

As per the original plan, the distribution of smart cards was to commence after April 17, by which time, the poll process would have ended.

This formed the basis for the schedule of   printing of the cards district-wise. Chennai was to be covered later. But, as the model code has been lifted following the cancellation of the byelection, officials will have to start covering the city too, possibly by early next week, a senior official says.
Totally, there are 20.1 lakh cards in Chennai with 83.5 lakh beneficiaries. For approximately 59.5 lakh beneficiaries, the linking of Aadhaar numbers has been done. Mobile phone numbers for around 17.7 lakh cards have been registered.

The official points out that the Central government has fixed the deadline of June 30 for the linking of Aadhaar numbers with PDS beneficiaries. As far as the State government is concerned, entitlements will not be denied to any eligible PDS beneficiary, despite not having an Aadhaar number.
“However, our plan is to see to it that all the eligible beneficiaries are provided with Aadhaar numbers. In about 1.3 lakh cards in Chennai, not even one beneficiary listed in these cards has an Aadhaar number. As we regard this number as small, we are toying with the idea of conducting a special drive for all those beneficiaries who do not have Aadhaar numbers,” the official says.
Explaining the procedure for getting smart cards, the official says that the head of family would receive a message on his or her registered mobile number, besides a one-time password. By providing this detail to the respective PDS shop, the person can get the smart card. Any member of his or her family can also receive the card on the presentation of the required information.

No surrender of cards
There is no need to surrender conventional cards to officials of the shops.
Each card would display in Tamil the names of those members of the family concerned whose Aadhaar numbers have been linked.

The front portion of the card would carry the name of the head of family. In respect of a priority household card (akin to the earlier Below Poverty Line cards), the oldest woman member has been designated as the head of family and this is to fulfill the requirements of the National Food Security Act.

NEWS TODAY 30.12.2025