Thursday, April 13, 2017

திருமங்கலம் – நேரு பூங்கா இடையே வரும் மே மாதம் முதல் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

ஏப்ரல் 13, 04:15 AM

சென்னை,
பாதுகாப்பு ஆணையர் இதற்கான ஆய்வை நேற்று தொடங்கினார்.

முதல் சுரங்கப்பாதை

மெட்ரோ ரெயில் சேவைக்காக கோயம்பேடு முதல் திருமங்கலம் வரை உயர்த்தப்பட்ட பாதையிலும், திருமங்கலத்தில் இருந்து அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக எழும்பூர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2012–ம் ஆண்டு நேரு பூங்காவில் தொடங்கியது. இந்தப்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் நடந்து வந்தது.

இருந்தாலும், பெங்களூரில் உள்ள மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் வந்து ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கினால் மட்டுமே பயணிகளுக்கான ரெயில் சேவையை இந்தப்பாதையில் தொடங்க முடியும்.பாதுகாப்பு ஆணையர்

இந்தப்பாதைக்காக அரசிடம் பெறப்பட்ட அனுமதி குறித்த ஆவணங்களை, பெங்களூரில் உள்ள மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்துக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தினர் அனுப்பி வைத்தனர். இந்த ஆவணங்களை பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் இந்தப்பாதையில் ஆய்வு செய்வதற்காக மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனேகரன் தன்னுடைய குழுவினருடன் நேற்று சென்னைக்கு வந்து ஆய்வு செய்து வருகிறார்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரனிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–பயணிகளின் பாதுகாப்பு

கேள்வி:– திருமங்கலம் – நேரு பூங்கா இடையே எத்தனை நாள் ஆய்வு செய்ய உள்ளீர்கள்?

பதில்:– இன்று (நேற்று) தொடங்கி 2 நாட்கள் ஆய்வு செய்கிறோம். இதில் முதல்நாள் கோயம்பேடு– திருமங்கலம்– ஷெனாய் நகர் வரை 3.3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 2 வழிப்பாதையிலும், 2–வது நாளில் ஷெனாய் நகர் முதல் நேரு பூங்கா வரை 4.3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஒரு வழிப்பாதையிலும் ஆய்வு செய்ய உள்ளோம்.

கேள்வி:– திருமங்கலம்– நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்ட பாதையில் உங்களுடைய ஆய்வு எவ்வாறு இருக்கும்?

பதில்:– பயணிகளின் பாதுகாப்பை மையமாக கொண்டு தான் எங்கள் ஆய்வு இருக்கும்.ஊழியர்களுக்கு அனுபவம்

கேள்வி:– பயணிகள் பாதுகாப்பில் எடுத்துக் கொள்ளப்படும் அம்சங்கள் எவை?

பதில்:– ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரெயிலிலும், ரெயில் நிலையத்திலும் வேண்டிய அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்பட்டு உள்ளதா?, ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக பயணிகளை எவ்வாறு அப்புறப்படுத்துவது? தீ ஏற்பட்டால் அணைப்பதற்கான கருவிகள் உள்ளனவா? தீ தடுப்பு எச்சரிக்கை அலாரம் செயல்படும் விதம்?, குளிர்சாதன கருவிகள் செயல்படும் விதம், பராமரிக்கும் முறை, பாதுகாப்பு கருவிகளை கையாள்வது குறித்த போதிய அனுபவம் ரெயில் நிலையங்களில் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.80 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை

கேள்வி:– சுரங்கப்பாதையில் ரெயிலை வேகமாக ஓட்டிப்பார்த்து ஆய்வு செய்யும் திட்டம் உள்ளதா?

பதில்:– நாளை (இன்று) பகல் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலும் மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை செய்ய உள்ளோம். அதற்காக தண்டவாளத்தின் உறுதி தன்மையை தீவிரமாக ஆய்வு செய்வோம்.

கேள்வி:– இயற்கை பேரிடர் காலங்களில் சுரங்கப்பாதையில் எந்த அளவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்?

பதில்:– மழை, வெள்ள பெருக்கு காலங்களில் மழைநீர் சுரங்கப்பாதையில் புகுந்துவிடாமல் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இயற்கை பேரிடரால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் கருவிகளும் உள்ளன.அதிர்வுகளை தடுக்கும் வசதி

கேள்வி:– மேல்மட்ட பாதையிலும், சுரங்கப்பாதையிலும் ஆய்வு செய்வதில் என்ன வித்தியாசம் உள்ளது?

பதில்:– மேல்மட்ட பாதையில் மின்சாரம் மேல்பகுதியில் சற்று உயரத்தில் இருக்கும் இதனை உரசியப்படி ரெயில்கள் இயக்கப்படும். ஆனால் சுரங்கப்பாதையில் ரெயிலின் மேல்பகுதியில் சற்று அருகிலேயே மின்பாதை இருக்கும். எனவே இதனை எச்சரிக்கையுடன் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. சுரங்கப்பாதையில் காற்று வந்து செல்வதற்கான வசதி முறையாக அமைக்கப்பட்டுள்ளதா? தீ விபத்து ஏற்பட்டால் பயணிகளை எவ்வாறு காப்பாற்றுவது, அதில் ஏற்படும் புகையை எவ்வாறு வெளியேற்றுவது, ஓடும் ரெயில் திடீரென்று நின்று விட்டால், பின்னால் வரும் ரெயிலை என்ன செய்வது?, அதேபோல் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு என்ன வசதி செய்யப்பட்டுள்ளது? குறிப்பாக ரெயில் மற்றும் ரெயில் நிலைய கதவுகள் முறையாக திறக்கப்படுகிறதா? என்பது குறித்தும் பல்வேறு அம்சங்களில் ஆய்வு செய்யப்படுகிறது.

கேள்வி:– கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரிக்கு கீழே சுரங்கப்பாதையில் ரெயில்கள் இயக்கும் போது அதிர்வுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

பதில்:– டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட பாதையில் ஒரு இடத்தில் லேசான அதிர்வு காணப்பட்டது. அது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. அதேபோல் சென்னையில் அதிர்வுகளை தடுக்கும் வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளதால் இங்கு அதிர்வு ஏற்பட வாய்ப்பு இல்லை.மே மாதம் ரெயில் போக்குவரத்து

கேள்வி:– திருமங்கலம்–நேருபூங்கா இடையே முதல் சுரங்கப்பாதையில் எப்போது ரெயில்கள் இயக்கப்படும்?

பதில்:– ஆய்வு முடித்த பின்னர், பணிகளில் சில மாற்றங்கள் இருந்தால் அவற்றை சரி செய்த பின்னர், சான்றிதழ் வழங்கப்படும். அதனடிப்படையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் ரெயில் இயக்கப்படும் நாள் முடிவு செய்யப்படும். எப்படியும் மே மாதம் ரெயில் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.அண்ணாசாலையில் விரிசல்

கேள்வி:– மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணியின் போது அண்ணாசாலையில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனை வரும் காலங்களில் தவிர்க்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

பதில்:– பாதுகாப்பான முறையில் தான் பணிகள் நடந்து வருகிறது. மண்ணின் உறுதிதன்மையை அறிந்து அதற்கு ஏற்றார் போல் பணிகளை செய்து வருகிறோம். அண்ணாசாலையில் ஒரு சில இடங்களில் களிமண், வண்டல் மண் மற்றும் பாறைகள், கிராணைட் பாறைகள் மாறி மாறி இருக்கின்றன. இவற்றிற்கிடையில் பணிகளை செய்யும் போது இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுகிறது. இதனை உடனடியாக சரி செய்ய ஒப்பந்தக்காரர்கள் ஆட்களை நியமித்து உள்ளனர். இதன் மூலம் உடனுக்குடன் சீர்செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.45 கிலோ மீட்டர் தூரம்

பின்னர் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக அலுவலர் பங்கஜ்குமார் பன்சால் கூறியதாவது:–

திருமங்கலம்–நேரு பூங்காவை இடையே மே மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து நேரு பூங்கா சென்டிரல் ரெயில் நிலையப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து சின்னமலை –வண்ணாரப்பேட்டை இடையே பணிகளை முடித்து ரெயிலை இயக்கவும் திட்டமிட்டு உள்ளோம்.

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக நடந்து வரும் 45 கிலோ மீட்டர் தூரம் பணிகள் முற்றிலுமாக முடிவடைந்து 2018–ம் ஆண்டு அனைத்து பாதைகளிலும் ரெயில்கள் இயக்கப்படும். நீட்டிப்பு செய்யப்பட்ட விம்கோ நகர் பகுதிகளில் 2019–ம் ஆண்டு பணிகளை முடித்து ரெயிலை இயக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் தன்னுடைய குழுவினருடன் ஆய்வை தொடங்கினார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சென்னை புத்தக கண்காட்சியை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. 
 
சென்னை,

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க(பபாசி) செயலாளர் கே.எஸ்.புகழேந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சென்னை புத்தக கண்காட்சியை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. சென்னை தவிர மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் ‘பபாசி’ புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு உலக புத்தகத் திருவிழாவை சிறப்பான முறையில் கொண்டாடும் நோக்கத்துடன் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வருகிற 21-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரை புத்தக கண்காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ‘பபாசி’ செய்து வருகிறது.

21-ந்தேதி மாலை 5 மணிக்கு தொடக்க விழா நடைபெறும். விடுமுறை நாட்களான ஏப்ரல் 22, 23, 29, 30, மே 1-ந்தேதிகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும், ஏப்ரல் 24, 25, 26, 27, 28 ஆகிய வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தக கண்காட்சி நடைபெறும். எல்லா புத்தகங்களுக்கும் 10 சதவீதம் கழிவு உண்டு. நுழைவுக் கட்டணம் இலவசம்.

குழந்தைகள் புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்களுக்கு என்று சிறப்பு அரங்குகள் இடம் பெறுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
தஞ்சை அருகே தண்ணீர் தேடி வீட்டு வாசலில் கிடந்த முதலை

பதிவு செய்த நாள் 12 ஏப்  2017 22:27

தஞ்சாவூர்: தஞ்சை அருகே, தண்ணீர் தேடி வீட்டு வாசலுக்கு முதலை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில், கண்மாய்களில் எப்போதும் தண்ணீர் இருந்து வரும் நிலையில், அங்கே முதலைகள் அதிகளவில் வசித்து வந்தன. ஆனால், தற்போது கோடை வறட்சியின் காரணமாக தண்ணீர் இன்றி போனதால், அங்கு இருக்கும் முதலைகள் தண்ணீர் தேடி, ஊருக்குள் வர துவங்கிவிட்டன. இந்நிலையில், கண்மாயின் கரையை ஒட்டியுள்ள வடுகக்குடியில், ஒரு வீட்டின் முன், 6 அடி நீளமுள்ள முதலை நேற்று தண்ணீர் தேடி வந்த நிலையில், வீட்டின் வாசலில் கிடந்தது. காலை வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வந்த போது, முதலை கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்புத் துறையினர் முதலையை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அரசு விழாவில் பங்கேற்க விஜயபாஸ்கருக்கு தடை
பதவியை பறிக்கவும் பழனிசாமி ஆலோசனை


அமைச்சர் பதவியில் இருந்து, விஜயபாஸ்கரை நீக்க, முதல்வர் ஆலோசித்து வருகிறார். சென்னையில், நேற்று நடந்த, அரசு மருத்துவமனை கட்டடங்கள் திறப்பு விழாவில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதிலாக, அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.



அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் வழங்கப்பட்டதற்கான ஆவணங் கள் சிக்கின.அந்த பணத்தை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மூலம் வழங்கியதும், ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த,  அமைச்சர் விஜய பாஸ்கர் பதவி விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. ஆனால், விஜய பாஸ்கர் அமைச்சர் பதவி யில் இருந்து விலகவில்லை.ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதை தவிர்க்க, அவரை அமைச்சர் பதவி யில்இருந்து நீக்க, முதல்வர் பழனிசாமி முடிவு செய்தார்; அதை தினகரன் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால், அமைச்சரவையில் இருந்து, விஜயபாஸ்கரை நீக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இச்சூழ்நிலையில், நேற்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, உள்ளிருப்பு பயிற்சி மருத்துவர்கள் விடுதி, பார்வையாளர்கள் இரவு காப்பகம், தேர்வுக் கூடம், விரிவுரையாளர்கள் அறை உள்ளிட்ட, ஏழு கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.

இதில், சுகாதாரத் துறை அமைச்சர் என்றமுறையில் விஜயபாஸ்கர் பங்கேற்க வேண்டும்; ஆனால், அவருக்கு முதல்வர் பழனிசாமி தடை போட்டு விட்டார். அதனால், அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, நிதி அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று, கட்டடங்களை திறந்து வைத்தார். பகல், 12:00 மணிக்கு மேல், தலைமை செயலகத்தில், முதல்வர் தலைமையில், மூத்த அமைச்சர்கள்

ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், அமைச்சர் விஜயபாஸ்கரும் கலந்து கொண் டார்.கூட்டத்தில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்தும், விஜயபாஸ்கர் பதவி விலகல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர் பதவி விலக வேண்டும் என, முதல்வர், மூத்த அமைச்சர்கள், கட்சியினர் நிர்ப்பந்தம் செய்வதால், விரைவில் அவர் பதவி விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -
இதே நாளில் அன்று

பதிவு செய்த நாள் 12 ஏப்   2017 21:42




1930 ஏப்ரல் 13

சிறந்த தமிழ் அறிஞரும், சிந்தனையாளரும், பாடலாசிரியருமான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, செங்கப்படுத்தான்காடு எனும் கிராமத்தில், அருணாச்சலனார் - - விசாலாட்சி தம்பதிக்கு மகனாக, 1930 ஏப்., 13ல் பிறந்தார்.பள்ளிப் படிப்பை முடித்த இவர், திராவிட இயக்கத்திலும், கம்யூனிச கொள்கையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.பாட்டாளி மக்களின் ஆசை, ஆவேசங்களை பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் எழுதினார். அவர் இயற்றிய பல பாடல்கள், 'ஜனசக்தி' பத்திரிகையில் வெளியானது. 1955 ல், படித்த பெண் என்ற திரைப்படம் மூலம், பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட இவர், புகழ் பெற்ற கவிஞரானார். இவர், எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட பிரபல நடிகர்களுக்கு, கருத்துள்ள பல்வேறு தமிழ் பாடல்களை இயற்றியுள்ளார். 1959 அக்., 8 ல், தன் சிறு வயதில் காலமானார். அவர் பிறந்த தினம், இன்று.

எம்.பி.பி.எஸ்., சேர பிளஸ் 2 மதிப்பெண் தேவையா? : 'நீட்' தேர்வால் மாணவர்கள் குழப்பம்

'நீட்' தேர்வால், மருத்துவப் படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடப்படுமா என்ற குழப்பத்திற்கு, சுகாதாரத் துறை விளக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு களில் சேர, தேசிய அளவிலான, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்விலிருந்து விலக்கு கேட்டு, தமிழக சட்டசபை யில் மசோதா நிறைவேற்றப் பட்டது. அதற்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் இன்னும் கிடைக்க வில்லை. 'நீட்' தேர்வுக்கு இன்னும், 25 நாட்களே உள்ளன. இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கில், 'நீட்' தேர்வு மதிப்பெண்படி, மாணவர்கள் சேர்க்கப்படுவரா; பிளஸ் 2 மதிப்பெண்ணும் கணக்கிடப்படுமா என, பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.மாநிலங்களே முடிவு செய்யலாம்

இது குறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது: 'நீட்' நுழைவுத் தேர்வு என்பது, தகுதியை முடிவு செய்யும் தேர்வாகவே கருதப்படுகிறது. அதில் தேர்ச்சி பெற்றால் போதும். கடந்த ஆண்டில், 'நீட்' தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என, தனியார் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு, மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. 'நீட்' தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணுக்கு மேல், எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும் என்பதை, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

குறைந்தபட்ச மதிப்பெண் : தமிழகத்தில், 'நீட்' தேர்வில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றவர்கள், முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என, சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இது போன்று, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கும், 'நீட்' தேர்வின் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி பெறலாம். அவர்களில், பிளஸ் 2வில் யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கின்றனரோ, அவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை கொடுத்து, 'அட்மிஷன்' நடத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையில், 'நீட்' தேர்வு மற்றும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான அட்மிஷன் குறித்த வழிமுறைகளை, தமிழக சுகாதாரத் துறை விளக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Wednesday, April 12, 2017

MGR’s ‘Adimaippenn’ gets digital revival

Two brothers have taken up the task of digitally reviving the soundtrack of the classic hit

To mark MGR’s centenary year, his film Adimaippenn (1969) is all set for a release following a digital revival. All the six songs in the film, composed by KV Mahadevan, were chartbusters, and are popular even today.

SP Balasubrahmanyam made his singing debut in this film with ‘Thaai Illamal Naan Illai’. Music composer duo Prasad and Ganesh (who are brothers) ensured none lost its evergreen appeal.

 “It was in an era where two-track compositions were in vogue, but nothing came in our way of remastering it in 120 tracks in the latest 5.1 format. The challenge was in retaining the essence of the solo numbers, which were in the fixed tempo. The pick of the album is definitely SPB’s ‘Aayiram Nilave Vaa’. Thuruvan and Ramalingam had played the tabla for the original. Now, we have Ganapathy rendering it,” Prasad says.

“Sai Nagaraj, an ardent MGR fan, has procured the remake rights. He has watched Adimaippenn almost 150 times and remembers every frame of the movie. His only request was for the reworked sound to retain the essence of the original — rich with bongos, drums and violin.”
Apart from S Janaki, P Suseela and TM Soundararajan crooning other songs, KV Mahadevan even managed to get Jayalalithaa to sing ‘Amma Endral Anbu’.



With over 600 devotional albums to its credit, the duo has three films — Silukuvar Patti, Kaiyile Kasu Irundha and Kapathunga Naliya Cinemavai — lined up for release.

NEWS TODAY 30.12.2025