Thursday, April 13, 2017


கில்லாடி சரத்... விழிபிதுங்கும் வருமான வரித்துறை !

MUTHUKRISHNAN S

ஏழு வருட அ.தி.மு.க-சமத்துவ மக்கள் கட்சி உறவு, 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு உடைந்தது. அந்தக் கட்சியின் எம்எல்ஏ-வாக இருந்த எர்ணாவூர் நாராயணனைப் பிரித்து, அ.தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுக்க ஏற்பாடுசெய்தனர். அதன்படியே, எர்ணாவூர் நாராயணனும் ஜெயலலிதாவை ஆதரித்தார். ஆனால், வேட்புமனு தாக்கலுக்கு சில நாட்களுக்கு முன்பு... சரத், அ.தி.மு.க உறவு மீண்டும் மலர்ந்தது. திருச்செந்தூர் தொகுதி சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகுதியில், தி.மு.க சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணனிடம் சரத் தோற்றார். அதன் பிறகு, அ.தி.மு.க-வில் அவரை கண்டுகொள்ளவில்லை. அவ்வப்போது அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டிருந்தார்.





திரைப்பட வாய்ப்பும் இல்லாமல், நடிகர் சங்கத்திலும் பொறுப்புகள் இல்லாமல், பரபரப்பு அரசியலும் செய்யாமல் அமைதியாக கொட்டிவாக்கம் வீட்டில் முடங்கிக்கிடந்தார். அவரை நைசாகப் பேசி, ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தரும்படி அழைத்துச்சென்றனர். அவரும் ஓ.பி.எஸ்-க்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று மட்டும் சொல்லிவிட்டு வந்தார். இடைத்தேர்தல் ஆதரவு பற்றி வெளிப்படையாகச் சொல்லாமல், ஓ.பி.எஸ் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டார். கொட்டிவாக்கம் வீட்டுக்குச் சென்ற அவரை டி.டி.வி.தினகரன் டீம் சந்தித்தது. அவரது மனதை மாற்றி, தொப்பி சின்னத்தை ஆதரித்து ஓட்டுக் கேட்க வேண்டும் என்றும், அதற்கு சில டீலிங்குகளையும் பேசினர். அதே நேரத்தில், பி.ஜே.பி-யும் தூதுவிட்டது. இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தினகரன் டீமின் டீலிங் முடிந்தது. அதற்காக, பெரிய தொகை ஒன்றும் கைமாறியதாகச் சொல்லப்பட்டது. திடீர் என்று அணி மாறியதால், ஓ.பி.எஸ் அணியை விட பி.ஜே.பி-தான் கடுமையாக அதிர்ச்சி அடைந்தது.


அந்த நேரத்தில்தான், ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா பிரச்னையும் விஸ்வரூபம் எடுத்தது. அதன்பிறகுதான் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. இடைத்தேர்தலுக்காக பணம் கைமாறிய தகவல் உறுதியானதால்தான், சரத் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் போனார்கள். அங்கு, சோதனை போட்டுப் போட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் டயர்டு ஆனார்களே தவிர, சரத் வீட்டில் பணம் எதுவும் சிக்கவில்லை. சரத் வீட்டுக்குக் கொண்டுசென்ற அந்தப் பணம் எங்கே சென்றது என அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், வருமான வரித்துறையினர் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டனர். எங்கே தாங்கள் போட்ட கணக்கு தப்பாகிவிட்டதோ என்று மண்டையைபோட்டு குழப்பினர்.





இருந்தாலும், சரத் மனைவி ராதிகா நடத்தும் ராடன் டி.வி அலுவலகத்தில் அந்தப் பணம் இருக்கக்கூடும் என்று அங்கு சென்றார்கள். அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். அங்கேயும் ஒன்றும் சிக்கவில்லை. அந்தப் பணம் மீண்டும் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத் வீட்டுக்கே எடுத்துவரப்பட்டுவிட்டது என்று மீண்டும் கொட்டிவாக்கம் வீட்டுக்குப் படையெடுத்தார்கள். மீண்டும், சரத் வீட்டில் சோதனை நடந்தது. இப்படி மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் சோதனை நடத்தி, வருமான வரித்துறையினர் டயர்டு ஆகிவிட்டார்கள்.


இந்த நிலையில்தான் சரத் மற்றும் அவரது மனைவி ராதிகாவை வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி அழைத்தனர். அதன்படி விசாரணைக்கு அவர்கள் இருவரும் ஆஜரானார்கள். அவர்களிடம் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. அப்போது,ரூ.4.97 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக சரத், ராதிகா ஒப்புக்கொண்டனர் என வருமானவரித்துறை தரப்பில் இருந்து தகவலைக் கசியவிட்டனர். இது எதையும் சரத் தரப்பில் இருந்து பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், தன்னை விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பாடம் புகட்டுவேன் என்று மட்டும் சரத்குமார் நரம்பு புடைக்கச் சொல்லி இருக்கிறார். கறுப்புப் பணத்தை பிடிக்கப்போன வருமான வரித்துறை அதிகாரிகள், வரி ஏய்ப்பு விஷயத்தைக் கண்டுபிடித்துச் சொல்லி இருக்கிறார்கள். வருமான வரி சோதனை என்ற பெயரில் சென்று, அவர்கள் தங்கள் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டதுதான் மிச்சம் என்று சரத் தரப்பு சொல்லிச் சிரிக்கிறது. விழிபிதுங்கி நின்று, இப்போது என்ன பலன்? ரெய்டுக்குப் போகும்போதே நல்லா பிளான் பண்ணி போக வேண்டாமா..? கில்லாடி சரத்!


- எஸ்.முத்துகிருஷ்ணன்

இனி கல்லறைக்கும் காவல் தேவை! பிணத்துடன் உறவு கொண்ட கயவர்கள்


இறந்தப் பெண்ணுடன் உடலுறவுக் கொண்ட இளைஞர்கள்
லகம் முழுவதும் இந்த நேரத்தில் ஏதோ ஓர் இடத்தில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிக் கொண்டிருப்பார். படித்தவர், படிக்காதவர் என்று வரைமுறை எல்லாம் இப்போது கிடையாது. தனது உடலின் செக்ஸ் தேவைக்காக அலையும் சில ஆண்கள், எந்த இடம்... யார் என்றுகூடப் பார்க்காமல் அவர்களுக்குப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தல்கள் கொடுப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுநாள் வரையில் உயிரோடு இருக்கும் பெண்ணுக்குத்தான் ஆபத்து என்று கூறிக்கொண்டிருந்தோம். இப்போது இறந்த பெண்ணுக்கும் ஆபத்து வந்துவிட்டது. ஆம். ஓர் இறந்த பெண்ணின் உடலுடன் உடலுறவு வைத்திருக்கிறார்கள் வக்கிரபுத்தி படைத்த சில ஆண்கள். இந்த வரிகளைப் படிக்கும்போதே உங்களுக்குக் கோபம் வரலாம். அவ்வளவு பெரிய கொடூரம்தான் இங்கு நடந்துள்ளது. 
உத்தரப்பிரதேசம், கசியாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இறந்து புதைக்கப்பட்ட பெண்ணின் உடலைத் தோண்டி எடுத்து இரண்டு இளைஞர்கள் உறவு வைத்துக் கொண்டுள்ளார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட 26 வயது பெண்ணை, புதைத்த இடத்தில் இருந்து தோண்டியெடுத்து... அந்தப் பிணத்துடன் உறவு வைத்துவிட்டுப் பின் அந்தப் பிணத்தை நிர்வாணமாக விட்டுச் சென்றுள்ளனர். இரவில் நடந்த இந்தச் சம்பவத்தை, அந்தக் கிராம மக்கள் காலையில்தான் கவனித்துள்ளார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்களுக்கு இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து 20 அடி தூரத்தில் இருந்த அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்த மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு போலீஸில் புகார் அளித்துள்ளார்கள். அதன்படி, ''அந்தப் பெண்ணைக் குழுவாகச் சேர்ந்து, கொடூரமாகப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளனர் என்றும், அவர்கள் 20 அடி தூரத்தில்வைத்து இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர்'' என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணின் உறவினர்களை விசாரித்ததில், ''இந்தச் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் பிரசவ வலியால் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். ஆனால், பிரசவிக்கும்போது  அவர் உயிர் இழந்துவிட்டார். இது, எங்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது'' என்று தெரிவித்துள்ளனர். ''இந்தச் சம்பவத்தில் இரண்டுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என்றும், 4.5 அடி பள்ளத்தைத் தோண்டி அவர்கள் எடுத்துள்ளார்கள்'' என்றும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அந்தக் கிராம மக்களும் ஒன்றாக இணைந்து, ''இத்தகையக் கொடூரச் செயலைச் செய்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இறந்த பெண்ணுடன் உறவுகொண்டது ஒருபக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது... மறுபக்கம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஓர் இளைஞர் நாயுடன் உறவு வைத்துக் கொண்டுள்ளார். இந்தச் சம்பவமும் அந்தப் பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் அந்த நபர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
சில கொடூர எண்ணம் படைத்த ஆண்களை நினைத்துத்தான் பெண்கள் பயந்து... இரவு நேரங்களில் வெளியில் செல்ல முடியாமலும், பொது இடங்களில் பிடித்த உடையில் செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுபோன்ற சம்பவத்தால் இனி, கல்லறைகளும் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். 

வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க இப்படிச் செய்கிறார்கள்! ஏர்டெல், வோடஃபோன், ஐடியாமீது ஜியோ புகார்!


ராகினி ஆத்ம வெண்டி மு.

’டிராய்’ விதிமுறைகளை மீறியதாக ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள்மீது ரிலையன்ஸ் ஜியோ, டிராயிடம் புகார் அளித்துள்ளது.



ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள டிராய் விதிமுறைகளை மீறிச் செயல்படுத்துவதாக, ரிலையன்ஸ் ஜியோ புகார் ஒன்றினைப் பதிவுசெய்துள்ளது.

மேற்கூறப்பட்ட மூன்று நிறுவனங்களும் அவர்களிடமிருந்து வெளியேற விரும்பும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள, நியாயமற்ற, ஏமாற்றும் ஆஃபர்களை மறைமுகமாக வழங்குவதாகக் கூறப்படுகிறது. இது, ‘டிராய்- 1999-ம்’ விதிமுறைகளை மீறும் செயலாகும் என ஜியோ குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களைக் கவர அளிக்கும் திட்டங்களைப் பொதுவாக, அதிகாரபூர்வமாக அறிவிக்காமல், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒவ்வொரு ஆஃபர் என வெளியிடுவது முறையற்ற செயல் என்றும் ரிலையன்ஸ் ஜியோ புகார் அளித்துள்ளது.

யார் இந்த ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன்? ஏன் இந்த வன்முறை வெறி இவருக்கு...?!

JAYAPRAKASH T



தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் மதுபானக் கடைகளை அகற்றுமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் இருந்த 230 டாஸ்மாக் கடைகளில் 164 கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் வருமானத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்துவந்த திருப்பூர் மாவட்டத்துக்குள் அடங்கிய பெரும்பாலான கடைகள் நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டன. இதனால் 90 சதவிகித வருமானம் பாதிப்புக்குள்ளானது. இதனால், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த டாஸ்மாக் அதிகாரிகள் மாற்று இடம்தேடி பம்பரமாய்ச் சுழன்றனர். ஆனால், எங்கு சென்றாலும் டாஸ்மாக் கடைக்கு இடம்கொடுக்க யாரும் முன்வரவில்லை. மாறாக தங்களுடைய எதிர்ப்பையும் தீவிரமாக வெளிப்படுத்தினர்.



இந்நிலையில் அகற்றப்பட்ட மதுபானக்கடை ஒன்றை திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் ஏப்ரல் 11-ம் தேதி அன்று டாஸ்மாக் நிர்வாகம் திறக்க இருப்பதாகத் தகவல் வெளியானதையடுத்து, கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் அந்தப் பகுதியில் குழுமினர். காலை முதலே சாலையில் இறங்கிப் போராடத் தொடங்கினர். வீரியத்துடன் நடைபெற்ற போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர காவல்துறை பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், மக்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. 'இப்பகுதியில் மதுபானக்கடை திறக்கப்பட மாட்டாது' என அதிகாரபூர்வமாக எழுதிக்கொடுத்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம்" என மக்கள் உறுதிபடத் தெரிவித்துவிட்டதால், மாலை 4 மணியளவில் காவல்துறையினர் தங்கள் அதிகாரத்தை முன்னெடுக்கத் தொடங்கினர். மதுபானக் கடைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதுடன், வெறியுடன் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறை வெறியாட்டத்திற்குத் தலைமை தாங்கியவர் திருப்பூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் (ஏ.டி.எஸ்.பி) பாண்டியராஜன்.

திருப்பூர் மாவட்ட உதவிக் கண்காணிப்பாளராக பாண்டியராஜன் பொறுப்பேற்று, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 2005-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று ஆண்டிப்பட்டியில் பயிற்சி டி.எஸ்.பியாகப் பணியில் சேர்ந்த இவரின் சொந்த ஊர் மதுரை திருமங்கலம். பெரியகுளம், உத்தமபாளையம் பகுதிகளில் தொடர்ந்து பணியாற்றியவர். அதன்பிறகு திருச்சுழி, பழனி ஆகிய ஊர்களில் டி.எஸ்.பியாகப் பணிபுரிந்திருக்கிறார். இவர் பழனியில் பணியாற்றியபோது, கேரளாவுக்கு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த மணல் கடத்தலைக் கண்டுகொள்ளாமல் இருந்தவர். பின்னர் விழுப்புரம் ஏ.டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னரே திருப்பூரில் பணியமர்த்தப்பட்டார். தன் கீழ் வேலை செய்யும் காவலர்களை பலரது முன்னிலையில் கடினமான, தடித்த வார்த்தைகளால் திட்டக்கூடிய சுபாவம் கொண்டவர் என பாண்டியராஜனைப் பற்றி காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.


மாவட்டத்தின் எந்தப் பகுதியில் போராட்டம் என்றாலும் தன் படையினரோடு சென்று போராட்டக்காரர்களை பயமுறுத்தும் வகையில் மிரட்டலான தொனியிலேயே பேசுவார். சில மாதங்களுக்குமுன் பல்லடம் சுல்தான்பேட்டைப் பகுதி டாஸ்மாக் பிரச்னையில் இதேபோன்ற போராட்டம் நடைபெற்றபோதும், அங்கு சென்று போராட்டக்காரர்களை மிரட்டும் தொனியில் பேசியவர். ஆனால், போராட்டத்தை சுமுகமாக முடித்து வைத்தார்.

ஆனால், சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அவர் நடந்துகொண்ட விதம், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தடியடி நடத்தியதும் அங்கிருந்து கலைந்து சென்ற பெண்கள் கூட்டத்துக்குள் புகுந்து, தன் முழு பலத்தையும் அந்தப் பெண்களின்மீது காட்டியிருக்கிறார். எதிரே வந்த பெண்ணின் கன்னத்தில் பாண்டியராஜன் அறைந்ததால், காயம் அடைந்த அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடிய மக்களின்மீது, இந்த அளவுக்கு உக்கிரமான வன்முறையை காவல்துறை ஏன் கட்டவிழ்த்து விட வேண்டும்? பலமுறை அறிவுறுத்தியும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை என்றால், அனைவரையும் கைது செய்திருக்கலாமே? அதிரடிப்படையை அழைத்து வந்து அடிதடியில் ஈடுபட வைத்த ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜனுக்கு, பேருந்துகளை வரவழைத்து அனைவரையும் கைது செய்வதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது?


காலையிலிருந்து 9 மணிநேரம் கடந்தும் போராட்டம் நடத்திய மக்கள், அந்த உறுதியின் மூலம் தங்களின் எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைக் கைது செய்து ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்தாலும் அங்கிருந்துகொண்டே டாஸ்மாக் ஒழிக என்ற கோஷத்தை அவர்கள் முழங்கிக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். எனவே, இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் எந்த ஒரு தருணத்திலும் மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது என்பதையே போராட்டக்காரர்கள்மீதான காவல்துறையினரின் தாக்குதல் வெளிப்படுத்துகிறது. மக்கள் தெருவுக்கு வந்து போராடி, அதன்மூலம் அவர்களின் கோரிக்கை நிறைவேறினால், எல்லா ஊர்களிலும் மக்கள் போராட்டம் நடத்தத் தயாராகிவிடுவார்கள். அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கக்கூடாது என்ற முனைப்பு ஆளும் வர்க்கத்துக்கு அதிகமாகவே உள்ளது. அதற்கு, மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரி பாண்டியராஜன் உடந்தையாக இருந்துள்ளார். மக்கள் கிளர்ந்து எழுந்து ஒரு போராட்டத்தை நீண்ட நாட்கள் நடத்தினால், இந்த அரசு முதலில் அதை முடக்கவே நினைக்கிறது. இல்லையேல் வேறு ஒரு புதிய போராட்டத்துக்கு அரசே வழிவகை செய்து கொடுத்துவிட்டு, அதற்குமுன் நடந்த போராட்டத்தின் வீரியத்தைக் குறைக்கத் துடிக்கிறது.

ஒருவேளை மக்கள் ஒன்றிணைந்து போராடி தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடச்செய்துவிட்டால், தினந்தோறும் சரக்கடித்து விட்டு குடிபோதையில் பைக் ஓட்டிவரும் குடிமகன்களை இனி சிக்னலில் மடக்கி, காவல்துறையினர் ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தமுடியாமல் போய்விடுமே என்ற அச்ச உணர்வில் தன்னிச்சையாக முடிவெடுத்து இந்த வெறியாட்டத்தை நிகழ்த்தினார்களா?

கண்ணியமான முறையில் நடைபெற்ற ஒரு போராட்டத்தை, யாருடைய உயர்மட்ட தூண்டுதலின் பேரில் ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் சீர்குலைத்தார்? யார் இந்தப் பாண்டியராஜன்? அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்று பார்ப்போம்.

திண்டுக்கல் மாவட்ட திமுக பொருளாளராக இருப்பவர் மணி முருகன். இவர், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமிக்கு மிகவும் நெருக்கமானவராவார். டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீது அத்துமீறிக் கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன், மணி முருகனின் நெருங்கிய உறவினர். மேலும் முதல்வராக இருந்த ஜெயலலிதா கொடநாடு சென்று ஓய்வு எடுக்கும்போதெல்லாம், பாண்டியராஜன் அங்கு சென்று பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவாராம். அந்த வகையில் கார்டன்வட்டாரத்துடன் பாண்டியராஜன் நெருக்கமாகி, தனது செல்வாக்கை உறவினர் மணி முருகன் மூலம் ஐ. பெரியசாமிக்கும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். தி.மு.க ஆட்சியில் இல்லாதபோதிலும் ஐ. பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டத்தில் செல்வாக்குடன் வலம் வந்ததற்கு, பாண்டியராஜன் ஏற்படுத்திக்கொடுத்த கார்டன் தொடர்புதான் என்று தி.மு.க-வினரே தெரிவிக்கிறார்கள். அந்த அளவுக்கு செல்வாக்குடன் திகழ்ந்த பாண்டியராஜன், தற்போது யாருடைய தூண்டுதலின்பேரில், போராட்டக்காரர்கள்மீது இதுபோன்ற வன்முறை வெறியாட்டத்தை நடத்தினார் என்பது தெரியவில்லை. எல்லாம் காவல்துறை அதிகாரி பாண்டியராஜனுக்கே வெளிச்சம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

அரசு ஊழியர்கள் ஏப்.25ல் வேலைநிறுத்தம் - 3 லட்சம் பேர் பங்கேற்பு!!!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஏப். 25 முதல் நடக்கும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்  3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக சங்கத்தின் மாநில தலைவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வேலைநிறுத்த ஆயத்த மாநாடு சிவகங்கையில் நடந்தது. இதில்   பங்கேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது: 2003க்கு பின் அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் என பிடித்தம் செய்த ரூ.15 ஆயிரம் கோடி எங்கே போனதென தெரியவில்லை. இதுகுறித்து சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணை குழு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் தெரிவித்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை
.
இதனால் 2003க்கு பின் பணியில் சேர்ந்து இறந்துள்ள ஊழியர்களின் குடும்பங்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் பாதிப்படைந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான அரசுத்துறை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர், கிராம உதவியாளர், சத்துணவு ஊழியர் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்த உள்ளோம். இதில் சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்; ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம்

பதிவு செய்த நாள் 13ஏப்  2017   03:08




புதுடில்லி: இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, வீட்டிற்கே வந்து, நேரில் டிக்கெட்டை தந்து, கட்டணம் பெறும் வசதியை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது.

ரயில்களில் பயணிகள் வருகையை அதிகரிக்க, பல புதிய திட்டங்களை, இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி வருகிறது. இவற்றை, ஐ.ஆர்.சி.டி.சி., அமல்படுத்தி வருகிறது. இந்த வகையில், ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளத்தில், ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

டிக்கெட்டிற்கான கட்டணத்தையும், அதன் வாயிலாக செலுத்த வசதி செய்யப்பட்டது. இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்த விபரங்கள், பயணியின் மொபைல் எண்ணிற்கு, குறுஞ்செய்தி மற்றும் இ - மெயில் மூலம் தெரிவிக்கப்படுவதால், காகித பயன்பாடு வெகுவாக குறைந்தது.

புது வசதி :

டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு இல்லாதவர்களுக்காக, இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களின் வீட்டிற்கு வந்து, டிக்கெட்டை கொடுத்துவிட்டு அதற்கான கட்டணத்தை பெற்றுச் செல்லும், 'கேஷ் ஆன் டெலிவரி' முறையை, நாடு முழுவதும், 600 நகரங்களில், ஐ.ஆர்.சி.டி.சி., துவங்கியுள்ளது.இந்த வசதியை பயன்படுத்த விரும்புவோர், ஆதார் அட்டை மற்றும், 'பான்' அட்டை வைத்திருக்க வேண்டும்.

ஐ.ஆர்.சி.டி.சி., தளத்தில், பணம் செலுத்தும் முறையை தேர்வு செய்யும் போது, சி.ஓ.டி., எனப்படும், 'கேஷ் ஆன் டெலிவரி'யை தேர்வு செய்ய வேண்டும்.பயண நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன், டிக்கெட் முன்பதிவு செய்கையில், இந்த வசதியை பயன்படுத்த முடியும். இவ்வாறு முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யும் போது, அதற்கான பணம், பயணியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால், வங்கிக் கணக்கு குறித்த தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.

நோயாளியும் மருத்துவரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொண்டு செயல்படுவதுதான் தீர்வு தரும்

‘சிகிச்சை பலனளிக்காமல் நோயாளி மரணம் - மருத்துவர் மீது தாக்குதல்’ எனும் செய்திகள் அடிக்கடி கண்ணில் படுகின்றன. தமிழகத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களில் முக்கால்வாசிப் பேர் ஏதாவது ஒரு வன்முறையைச் சந்திப்பதாக இந்திய மருத்துவச் சங்கம் ஒரு புள்ளிவிவரம் தந்திருக்கிறது. இதன் பின்னணியில் இருக்கும் பிரச்சினைகள் என்னென்ன? 

முன்பெல்லாம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ‘குடும்ப மருத்துவர்’ இருப்பார். எந்தவொரு நோய்க்கும் அவரிடம்தான் சிகிச்சைக்கு வருவார்கள். இப்போது நோயாளிகள் முதல்கட்ட சிகிச்சைக்கே சிறப்பு மருத்துவரிடம் நேரடியாகச் சென்றுவிடுகின்றனர். தேவைக்கு அதிகமாகப் பரிசோதனைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கிறார்களோ, தேவையில்லாமல் மருத்துவமனையில் தங்கச் சொல்கிறார்களோ என்பன போன்ற சந்தேகங்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. சந்தேகப் பார்வையோடு மருத்துவரை அணுகும்போது, நோய் குணமாகவில்லை - உயிர் காப்பாற்றப்படவில்லை - என்றால், மருத்துவர் மேலிருந்த நம்பிக்கையும் கலைந்துவிடுகிறது. 

விழிப்புணர்வின்மை 
 
பெரும்பாலும் விபத்தில் அடிபட்டவர்கள் இறப்பது, அறுவை சிகிச்சையில் மரணம் ஏற்படுவது போன்ற நிலைமைகளில்தான் மருத்துவர்கள் தாக்கப்படுகிறார்கள். பணி நேரத்தில் மருத்துவர்கள் மருத்துவமனையில் இல்லை, தவறான சிகிச்சை அல்லது தாமதமாகச் சிகிச்சை தரப்பட்டது, அலட்சியமாக சிகிச்சை செய்யப்பட்டது போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் இம்மாதிரியான தாக்குதல்கள் நடக்கின்றன. ஒரு சில இடங்களில் நிகழ்கிற இத்தகைய முறைகேடுகள் உண்மை எனத் தெரியவந்தால், இந்திய மருத்துவர்கள் சங்கம் அந்த மருத்துவர் மீதும் மருத்துவமனை மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கிறது. 

ஒருவருக்கு சிகிச்சை பலன் தராமல் போவ தற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது, தாமதமாகச் சிகிச்சைக்கு வருவது. மேற்கத்திய நாடுகளைப் போல் இந்தியாவில் மருத்துவ விழிப்புணர்வு இன்னமும் மேம்படவில்லை. அதிலும் விபத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நிலைமைகளில் நோயாளிகள் எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு வருகிறார்களோ அவ்வளவு விரைவாக சிகிச்சைக்குப் பலன் கிடைக்கும். ஆனால், பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை. 

அரசின் குறை 
 
மருத்துவமனைகளில், குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் ஆபத்தான நேரங்களில் உயிர் காக்கும் எல்லா சிகிச்சைகளும் கிடைக்கும் என்றே மக்கள் நம்புகிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கிற வசதிகள் அங்கு இல்லாதபோது ஏமாற்றம் அடைகிறார்கள். அரசு மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டியது ஒரு அரசின் கடமை. அதை ஏன் செய்யவில்லை என்று நோயாளியோ அவரது உறவினரோ அரசிடம் கேட்பதில்லை. மருத்துவருடன்தான் மோதுகிறார்கள். 

அரசு மருத்துவமனைகளில் அளவுக்கு அதிகமாக நோயாளிகள் வரும்போது மருத்து வரும் சரி, நோயாளியும் சரி பொறுமை இழக்கிறார்கள்; சோர்வடைந்துவிடுகிறார்கள். பொதுவாக, மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் இரவு நேரங்களில் வரும் நோயா ளிகளின் ஆரம்பக்கட்ட சிகிச்சைகளைத் தருவ தற்குப் பயிற்சி மருத்துவர்களும் முதுகலை மாணவர்களும்தான் பணியில் இருப்பார்கள். தொடர் பணிச்சுமை காரணமாக இவர்கள் சோர்வடைவதால், சில சமயம் சிகிச்சை தாமதமாகலாம். ஒரு விபத்து நடக்கும்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருபவர்களும் உதவிக்கு வருபவர்களும் கும்பலாகக் கூடிவிடுவார்கள். அப்போது அனைவருக்கும் உடனடியாகச் சிகிச்சை தரப்பட வேண்டும் என்று உறவினர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால், அதற்கு ஆள் பலம் / மருத்துவ வசதிகள் அங்கே இருக்காது. அவசரக் கால மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள எண்ணிக்கையில் இந்தியாவில் எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லை என்பதே உண்மை. தவிரவும், விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது, கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய மருத்துவமனை நடைமுறை விதிகளாலும் தாமதம் ஏற்படுவதுண்டு. இந்தக் குறைகள் எல்லாமே அரசு தலையிட்டு நிவர்த்தி செய்ய வேண்டியவை. 

என்ன செய்யலாம்? 
 
நாட்டில் மருத்துவர்கள் பலரும் தற்போது எந்நேரம், எவரிடமிருந்து தாக்குதல் நடக்குமோ என்று பயந்துகொண்டுதான் மருத்துவ சேவையைத் தொடர்கிறார்கள். தங்கள் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிற நிலைமையையும் மருத்துவர்களிடம் காண முடிகிறது. எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவதுபோல செய்திகளைப் பரபரப்பாகத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் ஊடகங்கள் உண்மை அறியாது வன்முறையைத் தூண்டும் நிகழ்வுகளைப் பெரிதுபடுத்துகின்றன. எரிகிற வீட்டில் எடுத்தது லாபம் என்பதுபோல் சில சமூக விரோதிகள் பாதிக்கப்பட்டவர்களோடு சேர்ந்துகொண்டு மருத்துவர்களை மிரட்டிப் பணம் பறிக்கவும் துணிகிறார்கள். இம்மாதிரியான நிலைமைகள் நீடித்தால், அது மக்கள் சமுதாயத்துக்கு நல்லதில்லை. 

தேவையில்லாமல் மருத்துவர்களை நோகடிக்கும்போது அவர்களின் சேவை மனப்பான்மையில் தொய்வு ஏற்படுவது இயல்பு. மேலும், பணியில் பாதுகாப்பின்மை தரும் மன அழுத்தம் மருத்துவர்களை மட்டுமல்ல, அவர் களிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நோயாளி களையும் பாதிக்கும். ஆபத்தில் இருக்கும் அவசர நோயாளிகளுக்குச் சிகிச்சைகள் தரப்படுவதைத் தவிர்க்கக்கூடும். எனவே, இந்த நிலைமைகளைச் சீர்படுத்தும் முதல்படியாக, அனைத்து மருத்துவர்களுக்கும் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதற்குக் காவல் துறை மூலம் அரசு தேவை யான ஏற்பாடுகளைச் செய்ய முன் வரவேண்டும். 

சிந்திக்க வேண்டிய தருணம் 
 
மருத்துவச் சேவையில் கவனக்குறைவு, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும்போது, அவை நிரூபிக்கப்படும் வரை மருத்துவர்களுக்குப் பாது காப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஒரு சட்டமும் உள்ளது. ஆனால், காவல் துறை அதைப் பயன்படுத்தி மருத்துவரைத் தாக்கியவர் களுக்குத் தண்டனை பெற்றுத் தந்ததாக இதுவரை வரலாறு இல்லை. மாறாக, அவசரப்பட்டு மருத்துவர்களைத்தான் கைது செய்கிறார்கள்.
மருத்துவச் சேவை என்பது உயிர் காக்கும் உன்னத சேவை. நாட்டில் ஆரோக்கிய மான சமுதாயம் நிலைப்பதற்கு மருத்துவர் களின் உதவி கட்டாயம் தேவை. மனிதநேயமும் செயலில் நேர்மையும் மருத்துவச் சேவையில் குறைந்துவிடக் கூடாது. அதேநேரம், மருத்துவர்கள் கடவுள்கள் அல்ல; அவர்களும் மனிதர்கள்தான்; மனிதத் தவறுகள் அவர் களுக்கும் ஏற்படலாம்; பொறுமை காக்க வேண்டும் என்ற மனப்பக்குவத்தை மக்கள் ஏற்படுத்திக்கொள்வதும், நோயாளியும் மருத்து வரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொண்டு செயல்படுவதும்தான் நோயாளி மருத்துவர் உறவை மேம்பட வைக்கும். அப்போது நோயா ளிக்கு நோய்ப் பாதுகாப்பும் மருத்துவருக்குப் பணிப் பாதுகாப்பும் கிடைக்கும். அனைவரும் சிந்திக்க வேண்டிய நேரம் இது. 

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

NEWS TODAY 30.12.2025