Friday, April 14, 2017

சுடுகாட்டில் இலவச 'வை - பை' வசதி; முதல்முறையாக மாநகராட்சியில் அறிமுகம்

பதிவு செய்த நாள் 14 ஏப்  2017  01:02



சென்னை: தமிழகத்திலேயே முதல்முறையாக, சென்னை மாநகராட்சி சுடுகாட்டில், நாளை முதல், இலவச, 'வை பை' வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், ஈமச்சடங்கு நிகழ்ச்சிக்கு நேரில் வர முடியாதோர், ஆன்லைன் மூலம், அதை பார்க்கலாம்.

கண்காணிப்பு கேமரா

சென்னை மாநகராட்சி பராமரிப்பில், 136 சுடுகாடுகள் உள்ளன. இவற்றில் குறிப்பிட்ட சில சுடுகாடுகளை, தனியார் தொண்டு நிறுவனங்களின் பராமரிப்பிற்கு, மாநகராட்சி அனுமதி வழங்கி வருகிறது.இதில், ஐ.சி.டபிள்யூ.ஓ., என்ற தொண்டு நிறுவனத்திடம், 2014 மார்ச் முதல், அண்ணா நகர் மண்டலம், வேலங்காடு மயானம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது இந்த தொண்டு நிறுவனம், மாநகராட்சியின் ஏழு மயானங்களை பராமரிக்கிறது. இந்நிறுவனம், மாநகராட்சியின் ஒத்துழைப்போடு, மயானங்களில் பல்வேறு புதுமைகளை செய்து வருகிறது.

மயானங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன; பராமரிப்பாளர் பணியில், பெண்களே இருப்பர்; ஈமச் சடங்கு செய்ய சுடுகாட்டிற்கு வருவோர், ஓய்வெடுப்பதற்கு வசதியாக இருக்கை மற்றும் ஏர் கூலர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மைக் மூலம் சில அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பூ மாலைகளை, குப்பையில் வீசாமல், சேகரித்து அதில் இருந்து உரம் தயாரித்து, சுடுகாட்டில் வளர்க்கப்படும் பூச்செடிகள், மரங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து பதிவுகளும் கணினியில் ஏற்றம் செய்யப்படுகின்றன.

இவ்வாறு, மயான பராமரிப்பு பணியில் அசத்தும், இந்த தொண்டு நிறுவனம், மேலும் ஒரு புதுமையாக, தமிழகத்திலேயே முதல்முறையாக, சுடுகாட்டில், இலவச வை - பை வசதிக்கு செய்துள்ளது. நாளை முதல், வேலங்காடு மயானத்தில், இந்த வசதி கிடைக்கும்.

நேரலை

மயான பராமரிப்பாளர் பிரவீனா கூறியதாவது: அடுத்தகட்டமாக, மற்ற மயானங்களிலும், வை - பை வசதி ஏற்படுத்தப்படும். சில நேரங்களில், இறந்தவரின் மகன், மகள், உறவினர்கள், வெளிநாடுகளில் இருந்து, உடனடியாக, சென்னைக்கு வர முடியாத சூழல் உள்ளது. அவ்வாறு வெளிநாடுகளில் இருப்போர், வை - பை வசதி மூலம், ஆன்லைனில், ஈமச் சடங்கு நிகழ்ச்சியை நேரலையில் பார்த்து, சற்று ஆறுதல் அடையலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், இன்று முதல் மூன்று  நாட்களுக்கு, இயல்பை விட, மூன்று டிகிரி செல்சியஸ் வெயில் அதிகரிக்கும். 
 

 சென்னை

உள்ளிட்ட பல நகரங்கள், அக்னியின் உக்கிரத் தால் தகிக்கும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது.



மார்ச், 1ல் கோடை காலம் துவங்கியது. படிப்பாக அதிகரித்து, ஏப்., 1 முதல், வெயிலின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, கடலுார், நாகை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில், பகலில் கடும் வெயிலும், இரவில் கடல் காற்றும் வீசுகிறது.

இந்நிலையில், வங்க கடலின் தெற்கு பகுதி யில், அந்தமான் அருகே, நேற்று காற்றழுத்த   தாழ்வு நிலை உருவானது. இது, படிப்படியாக வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுகிறது.இதுகுறித்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,

''வங்க கடலில் உருவாகியுள்ள, காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, மத்திய கிழக்கு பகுதியை நோக்கிநகரும். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த மூன்று நாட்களுக்கு, இயல்பை விட வெயிலின் அளவு, இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்,'' என்றார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், 'காற்றழுத்த தாழ்வு பகுதியால், வங்க கடலில் காற்று பலமாக வீசும். மீனவர் கள், அந்தமான் கடற்பகுதியை நோக்கி, மீன் பிடிக்க செல்ல வேண்டாம். அந்தமான் கடற் பகுதியில், கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது' என, கூறப்பட்டுள்ளது.

அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில், கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். உள் மாவட்டங் களில் ஒரு சிலஇடங்களில்,வெப்ப சலனத்தால்,

மழைபெய்யும் என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று மாலை நிலவரப்படி, வேலுார், திருப்பத்துார், சேலத்தில் கோடை வெயில், 40 டிகிரி செல்சியஸ் அளவை தாண்டியது. தர்மபுரி, மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய இடங்களில், 39; சென்னையில், 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. குன்னுார், கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களில், லேசான மழை பெய்துள்ளது.

வெயில் அதிகமாவது எப்படி

காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால், வழக்கமாக மழை தான் பெய்யும். ஆனால், இந்த முறை காற்றழுத்த தாழ்வு பகுதி, கடற்பகுதியிலேயே பயணிக்க உள்ளது. எனவே, தாழ்வு பகுதி வலுப்பெற்று செல்லும் போது, சுற்றுப் பகுதிகளிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி செல்லும்.இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி,

தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், ஈரப்பதம் குறையும். எனவே,வெயிலின் அளவு அதிகரிக்கும் என, வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - நமது நிருபர் -

நீட்' விண்ணப்பம்: சி.பி.எஸ்.இ., விளக்கம்

பதிவு செய்த நாள் 13 ஏப்  2017   23:12

'நீட் தேர்வு விண்ணப்பத்தில், புகைப்படம் மற்றும் பெற்றோர் பெயரில் பிழையிருந்தாலும், விண்ணப்பம் ஏற்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவுத்தேர்வு, மே, 7ல் நடக்கிறது; 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஏப்., 5ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு முடிந்த நிலையில், தற்போது, விண்ணப்ப பரிசீலனை நடந்து வருகிறது.

விண்ணப்ப பதிவில் பிழைகளை திருத்த, ஏப்., 12ல், அவகாசம் தரப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது,

அதில் கூறியுள்ளதாவது: தேர்வுக்கான விண்ணப்ப பதிவில், விண்ணப்பதாரர்களின் புகைப்படத்துடன் பெயர் மற்றும் தேதி தவறாக பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர். அதை பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். அதேபோல், தாய், தந்தை பெயரை மாற்றி பதிவு செய்ததாக, பலர் தெரிவித்துள்ளனர்; அவர்களின் விண்ணப்பங்களும் ஏற்கப்படும். தேர்வில் வெற்றி பெற்று, கவுன்சிலிங் சென்றால், அப்போது உரிய ஆதாரங்களை காட்டி, மாணவர் சேர்க்கை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
சுற்றுலாவுக்கான சிறந்த இடம் ஸ்பெயின்

பதிவு செய்த நாள் 14 ஏப்  2017   02:26



மேட்ரிட்: சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லும் நாடுகளின் பட்டியலில் ஸ்பெயின் முதலிடத்தை பெற்றுள்ளது என உலக பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. 136 நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

ஒரு நாட்டின் மொத்த வருவாயில் சுற்றுலாத்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன்மூலம் அந்நாட்டுக்கு உலகளவில் பெருமையும் கிடைக்கிறது. 2016ம் ஆண்டுக்கான உலகளவில் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தாண்டு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பிரான்ஸ் இந்தாண்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுற்கு அந்நாட்டில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக கூறப்படுகிறது. ஸ்பெயினில் சுற்றுலாப் பயணிகளுக்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் ஸ்பெயினில் நிறைவாக உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி மூன்றவாது இடத்திற்கும், கடந்தாண்டில் 9வது இடத்தில் இருந்த ஜப்பான் இம்முறை நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 40வது இடத்தில் உள்ளது.

'டாப் 10' நாடுகள்

1. ஸ்பெயின்
2. பிரான்ஸ்
3. ஜெர்மனி
4. ஜப்பான்
5. பிரிட்டன்
6. அமெரிக்கா
7. ஆஸ்திரேலியா
8. இத்தாலி
9.. கனடா
10. சுவிட்சர்லாந்து

மணமான பெண்களுக்கு பாஸ்போர்ட்டில் சலுகை: மோடி

பதிவு செய்த நாள்
ஏப் 14,2017 08:04



புதுடில்லி : திருமணமான பெண்கள், பாஸ்போர்ட்டில் இனி தங்களது பெற்றோர் பெயருக்கு பதிலாக கணவரின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு சார்பாக டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வீடியோ கான்பரன்சிங் வழியாக, பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: பெண்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது திருமணம் அல்லது விவாகரத்து ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. தாய் அல்லது தந்தை பெயருக்கு பதிலாக கணவரின் பெயரை மாற்றவேண்டிய அவசியம் இல்லை. பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்பது குறித்து அவர்களே முடிவெடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலையங்கம்.... குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடை வேண்டாம்

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு, ‘தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் இருக்கும் அனைத்து மதுக்கடைகள், கிளப்கள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்கள் எல்லாவற்றையும் ஏப்ரல் 1–ந்தேதி முதல் மூடவேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது.

ஏப்ரல் 14, 02:00 AM

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு, ‘தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் இருக்கும் அனைத்து மதுக்கடைகள், கிளப்கள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்கள் எல்லாவற்றையும் ஏப்ரல் 1–ந்தேதி முதல் மூடவேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 622 கடைகளில், ஏறத்தாழ 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. இதில் பல கடைகள் இன்னமும் மூடப்படவில்லை. இந்த கடைகளுக்கு பதிலாக, மாற்று இடங்களை தேடி டாஸ்மாக் நிறுவனம் கடைகளை அமைத்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் நெடுஞ்சாலை ஓரமாக இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டு, அதற்கு பதிலாக, புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. மக்கள் நடமாட்டம் உள்ள தங்கள் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையை அமைக்கக்கூடாது என்று அந்த கிராமமக்கள் குறிப்பாக, ஏராளமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமையில் போலீசாரும், அதிரடிப்படையினரும் அங்கு வந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு மறியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களிடம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் வந்து அங்கிருந்த ஈசுவரி என்ற பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில், தனக்கு செவித்திறன் குறைந்துவிட்டதாக அந்த பெண் கூறுகிறார். மேலும், பலரும் போலீசாரின் தாக்குதலில் காயம் அடைந்தனர். ஒட்டுமொத்த தமிழகத்தையே இந்த செயல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உண்ணாவிரத போராட்டம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு என்று எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன.

சாமளாபுரத்தில் மட்டுமல்லாமல், நெல்லை மாவட்டம் தென்காசி, நாகப்பட்டினம் மாவட்டம் அண்ணா பேட்டை, சேலம் ரெயில் நிலையம் எதிரே, மேச்சேரி அருகேயுள்ள குக்கன்பட்டி காட்டு வளவு கிராமம், நாமக்கல் பட்டறைமேடு, கன்னியாகுமரி மாவட்டம் கல்லுவிளை, ஈரோடு மாவட்டம் தட்டாங்காட்டுபுதூர், சிவகங்கை மாவட்டம் குருந்தனி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, வேலூர் மாவட்டம் சின்னபேராம்பட்டு ஆத்துமேடு, கோவை பெரியநாயக்கன்பாளையம் ரங்கநாதபுரம் பகுதி உள்பட தமிழ்நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் மக்கள் அதிகம் கூடும்பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை தொடங்கக்கூடாது என பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. காஞ்சீபுரம் மாவட்டம் ஆலத்தூரில் புதிய கடைக்காக கட்டப்பட்ட கட்டிடத்தை மக்களே இடித்து தள்ளியிருக்கிறார்கள். இப்போது சாமளாபுரம் கடை மூடப்பட்டுள்ளது. இதை ஒரு பாடமாகக்கொண்டு, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள், கடைப்பகுதிகள், மருத்துவமனைகள், சந்தைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்ற பகுதிகளின் அருகிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தொடங்கக்கூடாது என்ற விதிப்படி செயல்படவேண்டும். அங்கெல்லாம் டாஸ்மாக் கடைகளை திறப்பதை தவிர்ப்பதோடு அல்லாமல், மக்கள் எதிர்ப்பு இருக்கும் அனைத்து இடங்களிலும் அவர்களின் கஷ்டங்களையும் உணர்ந்து அங்கெல்லாம் தொடங்காமல், ஊருக்கு ஒதுக்குப்புறமாக மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் டாஸ்மாக் கடைகளை தொடங்கவேண்டும். பொதுமக்கள் வேண்டாம் என்று சொல்லும் இடங்களை தவிர்ப்பதில் தயக்கம் காட்டக்கூடாது. டாஸ்மாக் கடைகளை தங்கள் குடியிருப்பு பகுதிகள், தாங்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் தொடங்கக்கூடாது என்று மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்கள் என்றால், இந்த கடைகளால் அவர்கள் அடைந்த இன்னல்களின் வலி அவர்களுக்குத்தான் தெரியும். அதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
துபாயில் இருந்து வந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கி ஓடுபாதையில் ஓடும் போது திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் 164 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

 சென்னை விமான நிலையத்தில்
ஓடு பாதையில் இறங்கிய விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு
164 பயணிகள் உயிர் தப்பினர்

ஏப்ரல் 13, 04:45 AM

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை துபாயில் இருந்து 164 பயணிகளுடன் விமானம் வந்தது. அந்த விமானம் சென்னையில் தரை இறங்கி, ஓடுபாதையில் ஓடிக்கொண்டு இருந்தபோது திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டு சக்கரங்கள் சுழலவில்லை.

இதனால் விமானத்தில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. இதை அறிந்த விமானி, சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை ஓடுபாதையிலேயே பத்திரமாக நிறுத்தினார்.

164 பேர் உயிர் தப்பினர்

விமானியின் சாமர்த்தியம் காரணமாக விமானத்தில் இருந்த 164 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். அந்த விமானம் ஓடுபாதையில் நின்றதால் மற்ற விமானங்கள் தரை இறங்க முடியாமல் பாதிப்பு ஏற்படும் என்பதால் உடனடியாக இழுவை வாகனங்கள் மூலமாக ஓடுபாதையில் நின்ற விமானத்தை இழுத்து வந்து வழக்கமாக விமானங்கள் நிறுத்தப்படும் இடத்தில் நிறுத்தப்பட்டது.

பின்னர் பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். அதன்பிறகு விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை பழுது பார்க்கும் பணி நடைபெற்றது.

அந்த விமானம் சென்னையில் இருந்து மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். எந்திரக்கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு சுமார் 1 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...