Saturday, July 8, 2017

பேரறிவாளனுக்கு பரோல்: தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கம்

By DIN | Published on : 08th July 2017 12:22 PM  |



சென்னை: பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து சட்டப்பேரவையில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, பேரறிவாளனுக்கு பரோல் அளிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து தலைமை வழக்குறைஞரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பின்னணி : 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், பெற்றோரைக் கவனித்துக் கொள்வதற்காக 30 நாள்கள் விடுப்பு வழங்கும்படி விடுத்த கோரிக்கையைச் சிறைத் துறை ஏற்கனவே நிராகரித்து விட்டது.

மத்திய சட்டங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தால் அவர் தண்டிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு தண்டனை நிறுத்தச் சட்டத்தின்படி அவருக்கு சாதாரண விடுப்பு வழங்க முடியாது என்று வேலூர் மண்டல சிறைத் துறை துணைத் தலைவர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மத்தியச் சட்டங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மாநில அரசுகள் சிறை விடுப்பு வழங்கியதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு இரு ஆண்டுகளில் 5 மாதங்கள் சிறை விடுப்பு வழங்கப்பட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட மற்றொரு தமிழரான ரவிச்சந்திரனுக்கு 4 முறை சிறை விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய சட்டங்களின்படி விதிக்கப்பட்ட தண்டனையை பேரறிவாளன் அனுபவித்து முடித்து விட்டார். இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட வாழ்நாள் சிறைத் தண்டனையை மட்டும்தான் தற்போது அவர் அனுபவித்து வருகிறார். எனவே பேரறிவாளனுக்கு உடனடியாக சிறை விடுப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், முதல்வர் பழனிசாமி இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட படிகள் ஜூலை மாத சம்பளத்துடன் கிடைக்கும்

By DIN  |   Published on : 08th July 2017 12:55 AM  |   
மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட படிகளை உயர்த்துவது தொடர்பான அறிவிக்கை அரசிதழில் வியாழக்கிழமை வெளியானது. உயர்த்தப்பட்ட படிகள் ஜூலை 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளத்துடன் கூடுதல் படிகள் கிடைக்கும்.
இதன் மூலம் 34 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 14 லட்சம் பாதுகாப்புப் படை வீரர்களும் பயனடைவார்கள். படிகள் உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.30,748.23 கோடி கூடுதலாக செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
7- ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அப்படியே அமல்படுத்தியிருந்தால் கூட மத்திய அரசுக்கு ரூ.29,300 கோடிதான் செலவாகும். ஆனால் மத்திய அரசு தானாக முன்வந்து சில படிகளை உயர்த்தியதால் கூடுதலாக ரூ.1448.23 கோடி செலவு ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 53 படிகளை நிறுத்த வேண்டும் என்று ஊதியக் குழு பரிந்துரைத்திருந்தது. ஆனால், அவற்றில் 12 படிகளைத் தொடர்வது என்று மத்திய அரசு முடிவெடுத்தது.
முன்னதாக, படிகளை மாற்றி அமைப்பது தொடர்பாக ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை பரிசீலிக்க அதிகாரமளிக்கப்பட்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழு அளித்த பரிந்துரைகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கடந்த மாத இறுதியில் ஒப்புதல் அளித்தது. இப்போது அரசு அறிவிக்கை மூலம் அவை அமல்படுத்தப்பட்டுள்ளன.


4 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு
Published on : 08th July 2017 09:17 AM |

நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் அதிகமானவர்கள் இந்தியர்களே என கூறப்படுகிறது.

அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சுமார் 1,92,000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 71,000 பேர் அமெரிக்காவிலும், 1,21,000 பேர் மற்ற நாடுகளிலும் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் ஒரு பெரிய மறுசீரமைப்பை மேற்கொள்ளவும், வாடிக்கையாளர் மற்றும் பங்குதாரர்கள் சேவையை மேம்படுத்துவதற்காக சில மாற்றங்கள் மேற்கொள்ளபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க நாளிதழ் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், இந்தியாவில் பிறந்த சத்யா நாதெல்லா தலைமையிலான தொழில்நுட்ப நிறுவனம் சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பணியாளர்களை குறைக்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளது.

இதில், அமெரிக்காவிற்கு வெளியே வேலை செய்பவர்களே அதிகமாக வேலை இழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்புடைய செய்தித்தொடர்பாளர் ஒருவரால் கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் வெளிநாடுகளில் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு வேலை செய்து வருபவர்கள் வேலை இழக்க அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்தியாவை சேர்ந்தவர்களே அதிகயளவில் வேலையை இழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பிற நிறுவனங்களில் நடப்பதை போன்று தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலும் மாற்றங்கள் நடந்து வருகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த முடிவால் அதில் பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த வாரம், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பணியில் ஒரு மறுபரிசீலனை செய்துள்ளதுடன் உலகம் முழுவதும் 50 ஆயிரம் மக்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பணியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் "சரியான நேரத்தில் சரியான வாடிக்கையாளர்களுக்கான உரிமை வளங்களை சீரமைக்க எங்களுக்கு உதவும்" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வரவிருக்கும் ஆண்டுகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் "மிகப்பெரிய 4.5 டிரில்லியன் டாலர் சந்தை வாய்ப்பை" பெறும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரலில் ஏடிஎம்களுக்கு கடும் தட்டுப்பாடு: அலைக்கழிக்கப்படும் பயணிகள்!
By ENS | Published on : 08th July 2017 10:59 AM |



சென்னை: தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து போகும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல அடிப்படைக் குறைபாடுகளில் ஏடிஎம் தட்டுப்பாடும் ஒன்று.

தென்னிந்தியாவின் மிக முக்கிய ரயில் சந்திப்புகளில் ஒன்றான சென்னை சென்ட்ரலில், ஏடிஎம் தட்டுப்பாட்டால் ஏராளமான பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்துக்குள் சுமார் 11 வங்கிகளின் ஏடிஎம்கள் அமைந்துள்ளன. ஆனால்,அவற்றில் 3 ஏடிஎம்கள் மட்டுமே வழக்கமாக திறந்திருக்கும். இதனால், அந்த 3 ஏடிஎம்களிலும் எப்போதும் நீண்ட வரிசை இருப்பதையும் பார்க்க முடிகிறது. அதிலும் சில சமயங்களில் அந்த மூன்று ஏடிஎம்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டோ பழுதானால் இன்னும் நிலைமை மோசமாகிவிடும்.

வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள், அவசரத் தேவைக்காக பணம் எடுக்க ஒவ்வொரு ஏடிஎம்மாக ஏறி இறங்குவதும் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகளை கேட்டபோது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஏடிஎம்களும் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு, ரயில்வேக்கும் வங்கிகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்டவை.

ஆரம்பத்தில் ரயில்வேக்கு வங்கிகளிடம் இருந்து உரிய கட்டணம் செலுத்தப்படவில்லை. அதனால் ஏடிஎம்கள் மூடப்பட்டிருந்தன. ஆனால், தற்போது அனைத்து நிலுவைகளும் கட்டப்பட்டுவிட்டன. மேலும், 5 முக்கிய வங்கிகளின் ஒப்பந்தங்கள் காலாவதியாகிவிட்டன. அந்த இடங்களுக்காக மறு டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அந்த 5 வங்கி ஏடிஎம்களைத் தவிர மற்ற ஏடிஎம்கள் ஏன் மூடியே இருக்கின்றன என்ற கேள்விக்கு, அதுபற்றி வங்கிகளிடம்தான் கேட்டறிய வேண்டும் என்ற பதில் கிடைத்தது.
படித்துவிட்டீர்களா...! ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான முழு (PDF) தொகுப்பு

By வெங்கடேசன். ஆர் | Published on : 08th July 2017 11:37 AM




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, டிஇடி, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், 31.08.2015 முதல் சத்யா ஐ.ஏ.எஸ். அகாதெமி, சென்னை தொகுத்து அளிக்கும் மாதிரி வினா-விடை பகுதி, மாதம்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.

ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதத்திற்கான முழுமையான (PDF) தொகுப்பு தேதிவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேதியான வாரியாக கிளிக் செய்து படித்து பயன்பெறவும்.

வாழ்த்துக்கள்...

2017 ஜனவரி:

01.01.2017 02.01.2017 03.01.2017 04.01.2017
05.01.2017 06.01.2017 07.01.2017 08.01.2017
09.02.2017 10.01.2017 11.01.2017 12.01.2017
13.01.2017 14.01.2017 15.01.2017 16.01.2017
17.01.2017 18.01.2017 19.01.2017 20.01.2017
21.01.2017 22.01.2017 23.01.2017 24.01.2017
25.01.2017 26.01.2017 27.01.2017 28.01.2017
29.01.2017 30.01.2017 31.01.2017


2017 பிப்ரவரி:
01.02.2017 02.02.2017 03.02.2017 04.02.2017
05.02.2017 06.02.2017 07.02.2017 08.02.2017
09.02.2017 10.02.2017 11.02.2017 12.02.2017
13.02.2017 14.02.2017 15.02.2017 16.02.2017
17.02.2017 18.02.2017 19.02.2017 20.02.2017
21.02.2017 22.02.2017 23.02.2017 24.02.2017
25.02.2017 26.02.2017 27.02.2017 28.02.2017


மார்ச் 2017:

01.03.2017 02.03.2017 03.03.2017 04.03.2017 05.03.2017 06.03.2017 07.03.2017
08.03.2017 09.03.2017 10.03.2017 11.03.2017 12.03.2017 13.03.2017 14.03.2017
15.03.2017 16.03.2017 16.03.2017 17.03.2017 18.03.2017 19.03.2017 20.03.2017
21.03.2017 22.03.2017 24.03.2017 25.03.2017 26.03.2017 27.03.2017 28.03.2017
29.03.2017 30.03.2017 31.03.2017


ஏப்ரல் 2017:
01.04.2017 02.04.2017 03.04.2017 04.04.2017 05.04.2017 06.04.2017 07.04.2017
08.04.2017 09.04.2017 10.04.2017 11.04.2017 12.04.2017 13.04.2017 14.04.2017
15.04.2017 16.04.2017 17.04.2017 18.04.2017 19.04.2017 20.04.2017 21.04.2017
22.04.2017 23.04.2017 24.04.2017 25.09.2017 26.07.2017 27.04.2017 28.04.2017
29.04.2017 30.04.2017



மே 2017:
01.05.2017 02.05.2017 03.05.2017 04.05.2017 05.05.2017 06.05.2017 07.05.2017
08.05.2017 09.05.2017 10.05.2017 11.05.2017 12.05.2017 13.05.2017 14.05.2017
15.05.2017 16.05.2017 17.05.2017 18.05.2017 19.05.2017 20.05.2017 21.05.2017
22.05.2017 23.05.2017 24.05.2017 25.05.2017 26.05.2017 27.05.2017 28.05.2017
29.05.2017 30.05.2017 31.05.2017


ஜூன் 2017:
01.06.2017 02.06.2017 03.06.2017 04.06.2017 05.06.2017 06.06.2017 07.06.2017
08.06.2017 09.06.2017 10.06.2017 11.06.2017 12.06.2017 13.06.2017 14.06.2017
15.06.207 16.06.2017 17.06.2017 18.06.2017 19.06.2017 20.06.2017 21.06.2017
22.06.2017 23.06.2017 24.06.2017 25.06.2017 26.06.2017 27.06.2017 28.06.2017
29.06.2017 30.06.2017
Pondicherry University bars 304 MBBS students from writing first year exams

Bosco Dominique| TNN | Jul 7, 2017, 10.10 AM IST

.

PUDUCHERRY: Pondicherry University has barred 304 MBBS students, who joined under management quota in three private medical colleges, from appearing for first year examinations as neither the Puducherry government nor the college managements submitted necessary documents to prove their basic academic qualifications.

Pondicherry University, which had deferred the examinations for the first year MBBS students for the academic year 2016-17 by a month, finally decided to hold it from July 13 for rest of the students, including 146 students, who joined the course under state quota in these colleges. The university had not received the proof of academic qualification of students, who joined the course in three private colleges under management quota.

"The first year MBBS exam is conducted only for those students whose qualifications are recognized and registered as matriculates of our university for the academic year 2016-17. For the remaining students admitted under management quota, examination will be conducted on receipt of recognition order from the academic section of the university," said controller of examinations (in-charge) K Tharanikkarasu in an official communication

The Puducherry government and private medical colleges have to submit the list of students joining MBBS course under state and management quotas with documents proving their academic qualifications to Pondicherry University. "The university recognized the lists of MBBS students under state quota but raised a few queries on the lists of MBBS students under management quota and sought the concurrence of the government," said a university official.

An official of the health directorate said the directorate has begun the process of issuing concurrence to the university and added that the government will soon decide on the issue. "We are waiting for government's direction," said the official.

The university has barred 112 students from Pondicherry institute of medical sciences (Pims), 97 students from Sri Venkateshwaraa medical college hospital and research centre (SVMC) and 95 students from Sri Manakula Vinayagar medical college and hospital (SMVMC) while permitting 38 students from Pims, 53 in SVMC and 55 in SMVMC to appear for first year MBBS examinations.

The university will hold theory examinations from July 13 to 19 and practical examinations from July 24 to 29. The university, which will commence online registration and issue hall tickets from July 7, will close registration by July 10.

There are 1,200 MBBS seats - 150 in government medical college, 450 in three private medical college and hospital (Pims, SVMC and SMVMC) and 600 seats in four institutions affiliated by deemed universities. The private colleges and institutions surrendered 283 seats under State quota.

Centralized admission committee (Centac) drew a merit list based on the plus two marks of the students and filled up 127 seats in government medical college (remaining 23 seats went to all India pool) and 283 seats (surrendered by private medical colleges to the government) in private medical colleges. The private colleges and institutions filled the remaining 767 seats under management quota.
Consider OCI students on par with NRIs: HC

By Express News Service | Published: 08th July 2017 02:49 AM |

BENGALURU: The High Court on Friday directed the state government to consider Overseas Citizens of India (OCI) card holder students for non-government seats by treating them on par with Non-Resident Indians (NRIs) for admission to first-year MBBS/BDS courses.

A division bench of Justices H G Ramesh and S Sujatha issued the direction after disposing of a batch of petitions, filed by several OCI students seeking directions to the government to consider them for government seats as they had their primary and secondary education in Karnataka.

The division bench also said that OCI students will be considered for admission under various categories of seats if they are eligible, except for government quota seats.










00:33 / 00:33









The petitioners have challenged the Rule 5(1) of Karnataka Selection of Candidates for Admission to Government seats in Professional Educational Institutions Rules, 2006 which provides powers to restrict admission to Indian citizens only.

NEWS TODAY 20.08.2026