Monday, July 24, 2017



சொத்து குவிப்பு: நேருவுக்கு சிக்கல்
சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி:சொத்துக் குவிப்பு வழக்கில், தி.மு.க.,வின், முன்னாள் தமிழக அமைச்சர், நேரு மற்றும் அவர் மனைவியை விடுவித்து, சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது.



தமிழகத்தில், 2006 - 2011ல், தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தவர், நேரு; தற்போது, திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.

அதிகரிப்பு

இவர், அமைச்சராக பதவி வகித்தபோது, தன் பெயரிலும், மனைவி சாந்தா, மகன் அருண் பெயரிலும் வருவாய்க்கு அதிகமாக சொத்துக் களை வாங்கி குவித்ததாக, 2011ல் வழக்கு தொடரப்பட்டது.கடந்த, 2006ல், இவர்கள் பெய ரில், 2.83 கோடி ரூபாயாக இருந்த சொத்து மதிப்பு, 2011ல், 18.52 கோடி ரூபாயாக அதிகரித் ததாக, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

செய்யப்பட்ட பின், தங்களை விடுவிக்கும்படி, கீழ் கோர்ட்டில், நேரு உள்ளிட்ட மூவரும் மனு தாக்கல் செய்தனர். ஆனால், வழக்கிலிருந்து, நேரு, சாந்தாவை விடுவிக்காத கீழ் கோர்ட், அருணின் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டில், மூவரும் மேல்முறையீடு செய்தனர். அவர்களின் மனுக்களை விசாரித்த ஐகோர்ட், நேருவையும், அவர் மனைவியையும், வழக்கில் இருந்து விடுவித் தது; இருப்பினும், மகன் அருணின் சொத்து, வரு வாய் குறித்து மேல் விசாரணை நடத்த வேண்டும் என, ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேல் முறையீடு

நேருவையும், அவர் மனைவி சாந்தாவையும், வழக்கில் இருந்து விடுவித்ததை எதிர்த்து,சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில், நேரு சார்பில் ஆஜரான வழக்கறி ஞர், நேருவுக்கு, அவர் மகன் அருண் மூலமாக வரு வாய் கிடைத்ததாகவும், அருண் தனக்கு கிடைக்கும் வருவாய்க்கு, டி.டி.எஸ்., எனப்படும் முறையில், வருவாய் கிடைக்கும்போதே வரி செலுத்தி விட்ட தாகவும், அதனால், வருவாய்க்கு மீறிய சொத்து சேர்த்ததாக கூற முடியாது என்றும் வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்க றிஞர், முகுல் ரோஹத்கி, 'ஆரம்ப நிலையி லேயே, நேருவும், அவர் மனைவியும், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 'அவர்கள் மீதான குற்றச் சாட்டுகள் தீர விசாரிக்கப்பட வேண்டி உள்ளது. அருண் மீதான சொத்து குவிப்பு குற்றச்சாட்டையும்விசாரிக்க வேண்டும்' என்றார். வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவா ராய் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்த வழக் கில், நேரு, அவர் மனைவி சாந்தா ஆகியோரை விடுவித்து, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அருண் மீதான குற்றச்சாட்டு களை விசாரிக்க வேண்டும் என்ற, கீழ் கோர்ட்டின் உத்தரவு உறுதி செய்யப் படுகிறது.

விசாரணை

நேரு, அவர் மனைவி, மகன் மீதான குற்றச் சாட்டுகள் குறித்த விசாரணையை, புலனாய்வு துறை விரைவில் முடிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, இவர்கள் மீதான வழக்கு விசார ணையை, கீழ் கோர்ட் தொடர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
சதுரகிரி மலைப்பாதையில் நெரிசல் : மூச்சுத்திணறி 2 பக்தர்கள் பலி
பதிவு செய்த நாள்23ஜூலை
2017
23:41




வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், நேற்று ஆடி அமாவாசை விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். மலைப்பாதைகளில் நெரிசல் ஏற்பட்டு, 6 மணிநேரம் பக்தர்கள் தவித்தனர்.

வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலை கோயில் ஆடி அமாவாசைவிழா, ஜூலை 21 ல் பிரதோஷ வழிபாட்டுடன் துவங்கியது. அதனைதொடர்ந்து சிவராத்திரிவிழா நடந்தது. முக்கிய நிகழ்வான ஆடி அமாவாசை விழா நேற்று நடந்தது. மலையில் சுயமாக எழுந்தருளிய சுந்தர மகாலிங்கசுவாமி, சித்தர்கள் வழிபட்ட சந்தனமகாலி்ங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு, சிவராத்திரி அலங்காரம் கலைக்கப்பட்டு அமாவாசைக்காக காலையில் சிறப்புஅபிஷேகம் நடந்தது. பின்னர் சுந்தரமகாலிங்கசுவாமி நாகாபரண அலங்காரத்தில், சந்தனமகாலிங்கசுவாமி ராஜ அலங்காரத்தில், சுந்தரமூர்த்தி சுவாமி புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இம்மூன்று கோயில்களிலும் பரம்பரிய முறைப்படி சங்கொலி முழங்கி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அமாவாசை வழிபாட்டிற்காக நேற்று இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முக்கிய விழாவாக இருந்ததாலும் விடுமுறை நாளாக இருந்ததாலும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். மலையிலும், அடிவாரத்திலும், மலைப்பாதையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தடுப்பு உடைப்பு : இவ்விழாவிற்கு பக்தர்கள் இரவில் மலையேறிச் செல்வது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்தது. இரு ஆண்டுகளாக இரவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதேபோல்இந்த ஆண்டு இரவில் மலையேறுவதற்காக நேற்று முன்தினம் இரவே பக்தர்கள் அடிவாரத்தில் குவிந்தனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அடிவாரத்தில் குவிந்ததால் அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த இயலவில்லை. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நெரிசல் அதிகமானதை தொடர்ந்து தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு மலையில் ஏறினர்.
பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. 15 நிமிடத்திற்கு ஒருமுறை ஆயிரம் பேர் வீதம் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மலைப்பாதையில் அடிவாரத்திலிருந்து சில மீட்டர் துாரத்தில் உள்ள மாங்கேனி ஓடை என்ற இடத்திலிருந்து துவங்கி மலைப்பாதை முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் ஒவ்வொரு இடத்தையும் கடந்து செல்வதற்கு 6 மணி நேரத்திற்கு மேல் ஆனது. பாதுகாப்பிற்கு 1800 போலீசார் குவிக்கப்பட்டும் மலைப்பாதையில் ஒரு போலீஸ்காரர் கூட பணியில் இல்லை. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியும், கடும் வெயிலில் தண்ணீர் இல்லாமலும் மயக்கமடைந்தனர். அவர்களை கூட்டத்திலிருந்து வெளியேற்றுவதற்கும், பக்தர்களை பாதுகாப்பதற்கும் யாரும் இல்லை. ஆனால் அடிவாரத்திலும், மலையிலும் ஆங்காங்கு போலீசார் கூடி அரட்டையடித்தபடி இருந்தனர்.

நெரிசலில் டி.ஜி.பி., : டி.ஜி.பி. ராஜேந்திரன், மதுரை கலெக்டர் வீரராகவராவ் மலைக்கு சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அவர்களும் கூட்ட நெரிசலில் சிக்கினர். போலீசார் அவர்களுக்கு பாதை ஏற்படுத்தி கொடுத்து மீட்டு வந்தனர். முறையான திட்டமிடல் இல்லாததாலும், மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள், காவல்துறையினர் ஒருங்கிணைந்து பணியாற்றாததாலும் பக்தர்கள் சிரமப்பட்டனர். மலைப்பாதையில் நெரிசல், வாகனங்களை முறைப்படுத்துவதில் குழப்பம், போக்குவரத்து வசதிகள் செய்யாதது என பல பிரச்னைகளை பக்தர்கள் சந்தித்தனர்.

சிவகாசி, வேலுார் பக்தர்கள் பலி : சிவகாசியை சேர்ந்த ரவிக்குமார்,40, உறவினர்கள், நண்பர்களுடன் மலைக்கு சென்றார். சுந்தரமூர்த்தி சுவாமி கோயில் அருகே வந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மருத்துவக்குழுவினர் அவருக்கு முதலுதவிசெய்தனர். சிகிச்சை பலனின்றி அங்கேயே இறந்தார். இருவரது உடலும் சுமைதுாக்கும் பணியாளர்கள் மூலம் அடிவாரம் கொண்டுவரப்பட்டு, பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

வேலுார், கொசப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி,63, உறவினர்களுடன் நேற்று சதுரகிரி மலைக்கு வந்தார். காலையில் மலையேறத் துவங்கியவர் கூட்ட நெரிசல் காரணமாக ஆங்காங்கே இளைப்பாறியபடி மலையேறினார். மாலையில் கோணத்தலைவாசல் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். அவருடன் வந்தவர்கள் முதலுதவி செய்தனர். மருத்துவக்குழுவினர் வருவதற்குள் இறந்தார். ஒரேநாளில் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு : மலையில் மொட்டை எடுத்த பக்தர்கள் குளிக்க முடியாமல், பாட்டில் குடிநீரை வாங்கி குளித்தனர். 10 ரூபாய் பாட்டிலின் விலை 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மதியத்திற்குள் மலையில் இருந்த கடைகளில் பாட்டில்கள் விற்பனையாகி விட்டதால், தண்ணீரை விலைக்கு வாங்கி குடிக்கவும் முடியாத நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டது.

சுமையுடன் நடை : வெளியூர்களிலிருந்து வாகனங்களில் வந்தவர்கள் அடிவாரத்திற்கு 7 கி.மீ., முன் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் சிறப்பு பஸ், ஆட்டோக்களில் அடிவாரம் வரை செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அந்த இடத்திலிருந்து சிறப்பு பஸ், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் அடிவாரம் வரை 7 கி.மீ., சுமைகளையும் துாக்கிக்கொண்டு நடந்தே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
பல்கலை துணைவேந்தர்கள் வசூலுக்கு முற்றுப்புள்ளி

பதிவு செய்த நாள்24ஜூலை
2017
01:10


பல்கலைகளில், துணைவேந்தர்களின் முறைகேடுகளை தடுக்க, பேராசிரியர் நியமனம், புத்தகம் அச்சிடுவது போன்றவற்றில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

தமிழக பல்கலைகளில், பல துணைவேந்தர்கள் மீது, அவ்வப்போது, முறைகேடு மற்றும் விதி மீறல் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில், மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
கோவை பாரதியார் பல்கலையில் பேராசிரியர்கள் நியமனம் மற்றும் பழைய விடைத்தாள் காகிதங்களை விற்றதில் முறைகேடு நடந்துள்ளதாக, தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அது போல, மற்ற பல்கலைகளிலும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனத்தில், துணைவேந்தர்கள் அதிக அக்கறை காட்டுவதாக தெரிய வந்துள்ளது.இதையடுத்து, கல்வியாளர்களாக தேர்வு செய்யப்படும், துணைவேந்தர்கள் கல்வி கற்பிப்பதிலும், கல்லுாரிகளில் படிப்புகளை தரம் உயர்த்துவதிலும், அக்கறை காட்டாமல், நிர்வாகம், நியமனம் என, முறைகேடாக பணத்தை சேர்ப்பதில், கவனத்தை செலுத்துவதால், ஊழல் புகார்கள் எழுகின்றன.

எனவே, துணைவேந்தர்களின் அதிகாரம் மற்றும் வேலைப்பளுவை குறைக்கவும், உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதன் படி, இனி வரும் ஆண்டுகளில், பல்கலைகளில் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர் நியமனங்களில் துணைவேந்தர்கள் ஈடுபடக்கூடாது. அதற்காக, புதிதாக உயர் கல்வி பணி நியமன முகமை அமைக்க உள்ளது.
அது போல, பல்கலை மற்றும் அரசு கல்லுாரிகளில் குவியும் பழைய காகித கட்டுகள், பயனில்லாத புத்தகங்கள், காலாவதியான விடைத்தாள்கள் போன்றவற்றை, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனமான, டி.என்.பி.எல்., காகித நிறுவனத்துக்கு மட்டுமே விற்க வேண்டும்.
பல்கலை மற்றும் கல்லுாரிகளில், மாணவர்களுக்கான புத்தகங்களை, தமிழ்நாடு பாடநுால் கழகம் மூலம், 'டெண்டர்' முறையில் வழங்கப்பட வேண்டும். தனியாக பல்கலைகளின் விருப்பத்துக்கு, அச்சகர்களிடம் வழங்க கூடாது என, புதிய முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

- நமது நிருபர் -
அரபு நாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர் எண்ணிக்கை குறைகிறது
பதிவு செய்த நாள்
ஜூலை 24,2017 13:32


புதுடில்லி : வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எண்ணெய் விலை குறைவால் வளைகுடா நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. இதன் காரணமாக 2014 மற்றும் 2016ம் ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் வேலை செய்த அதிக அளவிலான இந்தியர்கள் தங்களின் வேலையை விட்டு விலகி உள்ளனர்.
வளைகுடா ஒருங்கிணைப்பு கழகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, 2014 ம் ஆண்டு 7,75,845 இந்தியர்களும், 2016 ல் 5,07,296 இந்தியர்களும் வேலையை விட்டுள்ளனர். ஐஎஸ் பயங்கரவாத தாக்குதலும் இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. சவுதி செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது.

பக்ரைனில் கட்டுமான கம்பெனி ஒன்றில் பணியாற்றும் 1500 இந்தியர்களில் 700 பேர் மீண்டும் தங்களின் பணி ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ள மறுத்துள்ளனர். வளைகுடா நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதும் அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்த்து வருவதாகவும், அங்கு இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புவதும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை
பதிவு செய்த நாள்24ஜூலை
2017
10:15



புதுடில்லி: கடந்த வாரம் பார்லி.,யில் பாஸ்போர்ட் விண்ணப்ப முறை தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை எளிமையாக்கப்பட உள்ளது என பதிலளித்துள்ளது.

மத்திய அமைச்சர் வி.கே.சிங் அளித்துள்ள பதிலில், பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை. ஆதார் அல்லது பான் கார்டை சமர்ப்பித்தாலே போதும். அதுவே பிறப்பு சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், அவர்களை பராமரித்த காப்பகத்திடம் இருந்து பிறந்த தேதி தொடர்பான ஆவணத்தை பெற்று அளிக்கலாம். புதிய பாஸ்போர்டில் தனிநபர் விபரங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சிடப்பட்டிருக்கும். 60 வயதிற்கு மேல் மற்றும் 8 வயதிற்கு கீழுள்ள அனைத்து பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கும் பாஸ்போர்ட் கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும். ஆன் லைனில் விண்ணப்பம் செய்வோர் பெற்றோரில் தந்தை அல்லது தாய் யாராவது ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும்.

இணைப்பு படிவத்தின் எண்ணிக்கையும் 15 லிருந்த 9 ஆக குறைக்கப்பட உள்ளது. அது சுய ஒப்பம் இருந்தாலே போதுமானது. ஒப்புகை கையெழுத்து பெற வேண்டிய அவசியமில்லை. திருமணம் ஆனோர் திருமண சான்றிதழ் சமர்ப்பிக்கவோ, அவர்கள் விவாகரத்து பெற்றிருந்தால் அவர்களின் கணவர் அல்லது மனைவியின் பெயரையோ குறிப்பிடவோ தேவையில்லை என தெரிவித்துள்ளார்.



`Ranklists show 30% med seats to go to students 
from Chennai, Kancheepuram and Tiruvallur'


The number of students from other states securing MBBS seats from the government quota on the basis of nativity will go up from about 47 in 2016 to nearly 500 this year, if the state admits students on the basis of NEET. This would be a 11-fold increase in the 85% government quota seats in 22 state-run medical colleges and state quota seats in 10 self-financing medical colleges compared to 2016.Data from the directorate of medical education shows that this year 58 candidates from Karnataka, 44 from Kerala and 17 from Andhra Pradesh applied on the basis of nativity and qualified for MBBS admissions, besides 381 more students from other states. Last year, there were less than 50 students from outside TN.
This year, the number of government quota seats went down to 3,377 from 3,609 in 2016, but the percentage of government seats for other state students might go up from 1.30% to 14%.
Baffled by these numbers, state health minister C Vijaya Baskar, higher education minister K P Anbalagan and four other ministers, who left for New Delhi on Sunday , will camp there to convince Union ministers and MPs that Tamil Nadu should be exempted from NEET, at least for 2017. Meritorious students within our state will be diTuesday rectly affected by this,“ said Vijaya Baskar. On , chief minister Edappadi K Palaniswami is likely to meet prime minister Narendra Modi to discuss the NEET issue after the swearing-in ceremony of Ram Nath Kovind as President.
The provisional rank lists worked out by the selection committee show that this year students from districts such as Tiruvarur, Ramanathapuram and Nagapattimam were getting fewer seats, Vijaya Baskar told TOIon Sunday . In Dharmapuri, the share dipped from nearly to 6% to 1.5%. “Nearly 30% of the students were from Chennai, Kancheepuram and Tiruvallur,“ he said. Counselling for medical admissions, which was scheduled to begin on July 17, was put on hold after the Madras high court quashed the government order that reserved 85% of government quota seats to students from the state board. The state ap pealed to a division bench stating that less than 6% of state board students who cleared NEET in Tamil Nadu can get admission compared to three in 10 students from CBSE if 85% of seats are not reserved for state board students.
A senior official from the directorate said more than 1,400 state board students and around 1,000 from the CBSE and other boards would secure government college seats. This year, 48% of seats are likely to go to students of CBSE and other boards. “But among the 1000 students from CBSE, a majority are from Chennai. This is because a majority of CBSE schools are in the city. The state has just 268 CBSE schools,“ he said.
Meanwhile, CBSE students signed a petition on change.org, addressed to the Madras high court, Union human resource and development minister Prakash Javadekhar, Medical Council of India, Supreme Court of India, CBSE chairman R K Chaturvedi and Modi. The petition filed by Harini P had received over 600 signatures by Sunday evening.
Harini, who took a year's break to study for NEET, hoped Tamil Nadu would be asked to hold the state's medical admissions based solely on NEET. “ A deserving student should get the medical seat no matter how the system, syllabus and the qualifying exam changes,“ she said. Medical Council of India (MCI) vicepresident Dr Bhirmanandham said the state should improve the syllabus and teaching methodologies to help state board students secure better NEET scores.
BE on schedule or lose affiliation points
TIMES NEWS NETWORK


Ever-changing exam schedules that stretch on for weeks, eating into intern ships and fest plans, catching students unaware at the last moment is an all too familiar routine at engineering colleges in Tamil Nadu. While an academic calendar spelt out by Anna University exists, most engineering colleges choose to ignore this, tweaking and rescheduling dates. In a bid to curb this rampant practice, the state higher education department will soon enforce the exam schedule on each of Anna University's 500-odd affiliated colleges in the state.Higher education secretary Sunil Paliwal, on Sunday, said the state is floating the idea to keep check on colleges that breach the schedule. “We will bring it into the affiliation system. The new rule will ensure that a college pushing a test that was supposed to start for instance on July 3 to July 15, will stand to lose affiliation points,“ he said, adding that students are supposed to plan activities around their academics, without having to miss out on extracur ricular opportunities.
“All 23 regional education officers have recently conducted meetings with engineering college principals in the state to address them on this issue,“ said Paliwal.By losing `affiliation points' he says colleges can stand to lose seats. This is because affiliation points determine the standing of an affiliated college, and a drop in points could be bad news for a seat demand.
“While we cannot send instructions to other autonomous colleges, we will send them the guidelines,“ said TV Geetha, dean, CEG.
Along with this, a new system for arrears was also announced.The arrear-clearing window for Anna University that climbed upto as many as six years before has been set at three years now.
This means, a student pursuing a BEBtech course has to clear all arrears within seven years (4 year course + 3 year window).
“As many as 8,000 papers were up for correction this year, and students have to suffer because of the large number of back papers that fill up. We will cut it down to 1,800 from this year,“ added Paliwal.
BArch vacancies to be filled by new exam
Chennai: The state has launched a new exam called Tamil Nadu Aptitude Test in Architecture (Tanata 2017) to fill the 1,034 vacant undergraduate architecture seats. The exam will be conducted in August and will admit students into BArch programmes across 49 Anna University affiliated institutions, including its constituent college School of Architecture and Planning (SAP). There are 3,043 architecture seats up for grabs but many lie vacant. Only about 2,009 students from TN cleared the entrance for architecture -Nata (National Aptitude Test in Architecture) -leaving a gap in enrolment. Tanata looks to fill this, and is throwing open the seats to candidates who took Nata 2016 as well. Registrations can be done online.

NEWS TODAY 22.08.2026