Thursday, November 2, 2017


மழை நேரத்தில் சென்னையின் ட்ராபிக் அப்டேட்ஸ் தெரிந்துகொள்ள ஈஸி வழி! #TrafficAlert

Posted By: Mohan Prabhaharan
Published: Wednesday, November 1, 2017, 19:00 [IST]

Oneindia Tamil

சென்னை : சென்னையின் ட்ராபிக் நிலவரத்தை சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறையின் பிரத்யேக ட்விட்டர் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். இது தங்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதாக பயனாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

சென்னை மாநகரத்தின் ட்ராபிக் நிலவரம் பற்றி சொல்லவே வேண்டாம். காலை, மாலை என்று வகை தொகை இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். சாதரண காலங்களிலேயே அப்படி என்றால் மழைக்காலங்களில் அவ்வுளவு தான். வாகன ஓட்டிகளின் சிரமத்தை சொல்லவே முடியாது.




தற்போது இந்த பிரச்னைக்கு தீர்க்கும் நோக்கில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை களமிறங்கி உள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளில் ட்ராபிக் எப்படி இருக்கிறது, மழையால் போக்குவரத்தில் மாற்றம் எதாவது இருக்கிறதா என்பதைத் தெரிவிப்பதற்காக சென்னை போக்குவரத்துக்காவல்துறை புதிய ட்விட்டர் பக்கத்தை துவங்கி உள்ளது.

@CCTraffic_Alert என்கிற அந்தப் பக்கத்தை மக்கள் பின் தொடர்ந்து, சென்னையின் ட்ராபிக் குறித்த அப்டேட்டுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் தங்கள் நேரம் சேமிக்கப்படுவதாகவும், பயணத்திற்கு திட்டமிட்டுக் கொள்ளவும் முடிகிறது என்று மக்கள் தெரிவிக்கிறார்கள்.

நீங்களும் அந்தப் பக்கத்தை தொடர https://twitter.com/CCTPolice_Alert இந்த சுட்டியை அழுத்தவும்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களுக்கு பரிசளித்து வாழ்த்திய காதலன் நள்ளிரவில் மணப்பெண்ணுடன் ஓட்டம்

2017-11-02@ 00:50:23




வேலூர்: காட்பாடி அருகே நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாலிபர், மணமக்களுக்கு பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்துவிட்டு, இரவோடு இரவாக மணப்பெண்ணை அழைத்து சென்று கோயிலில் தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திருவலம் பொன்னை கூட் ரோடை சேர்ந்தவர் சுகுமார். இவர் இறந்து விட்டார். இவரது மகள் நிரோஷினி(24) தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவரும் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் அப்ரன்டீஸாக உள்ள குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையை சேர்ந்த விக்னேஷ்(25) என்பவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், நிரோஷினிக்கு அவரது குடும்பத்தினர் உறவிலேயே மாப்பிள்ளை பார்த்து நவம்பர் 1ம் தேதி திருமணம் நிச்சயம் செய்தனர்.

திருமணம் ராணிப்பேட்டை பெல் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடப்பதாக இருந்தது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. அப்போது திடீரென இரண்டு பரிசு பொருட்களுடன் மண்டபத்துக்கு வந்த நிரோஷினியின் காதலன் விக்னேஷ் ஆளுக்கொரு பரிசு பொருளை கொடுத்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது எந்த சலனத்தையும் நிரோஷினி காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், மணமகனோ பரிசு கொடுத்தவர் மணமகளின் தூரத்து உறவுக்காரராக இருக்கும் என்று நினைத்து ஜாலியாக பேசி, சாப்பிட்டு விட்டு போகும்படி கேட்டுக் கொண்டார். அங்கிருந்த செல்லும்போது நிரோஷினிக்கு புரியும்படி, பரிசு பார்சலை பிரித்து பார்க்கும்படி சைகை காட்டிவிட்டு சென்றுள்ளார். அதிகாலை 3 மணியளவில் மணமக்களுக்கு நலுங்கு வைக்கும் சடங்குகள் தொடங்கின. முதலில் மணமகனுக்கு சடங்குகள் நடந்தன.

பின்னர் மணமகள் அறையில் சென்று பார்த்த உறவினர்கள், நிரோஷினி இல்லாததை கண்டு அதிர்ந்தனர். ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மண்டபம் முழுவதும் தேடினர். நலுங்கு முடிந்து திருமணத்துக்கு தயாரான மணமகனுக்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டது. அவர் அதிர்ச்சியில் உறைந்தார். எங்குதேடியும் நிரோஷினி கிடைக்காததால் அவருக்கு திடீரென உறைத்தது. இரவு தன்னிடமும், நிரோஷினியிடமும் பேசிய நபர் குறித்து விசாரித்தார். நள்ளிரவு வரை அவர் மண்டபத்துக்குள் அங்குமிங்கும் பரபரப்பாக திரிந்ததாக பலரும் கூறினர். இதையடுத்தே மணமகள் காதலனுடன் ஓடியது தெரியவந்தது. இதனால் களை கட்டிய திருமண மண்டபம் சோகத்தில் மூழ்கியது. இருதரப்பு உறவினர்களும் மண்டபத்தில் இருந்து புறப்பட்டனர்.

மணமகனும் விரக்தியில் தனது உறவினர்களுடன் சோகமாக திரும்பி சென்றார். மணமகளின் உறவினர்களோ மதியம் 12 மணி வரை தேடும் முயற்சியை தொடர்ந்தனர். அப்போதுதான் அவர்களுக்கு லத்தேரி காவல்நிலையத்தில் விக்னேஷ் என்ற வாலிபருடன் நிரோஷினி மணமக்களாக மாறி தஞ்சமடைந்திருப்பதும், அவர் அந்த வாலிபரை லத்தேரி பெருமாள் கோயிலில் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. மேலும் லத்தேரி போலீசார் மணமகள் தரப்பினரை காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர். அங்கு பேச்சுவார்த்தை நடத்தி காதல்ஜோடி மேஜர் என்பதால், அவர்களது திருமணத்தை தடுக்க வழியில்லை என்று கூறினர். அப்போது காதலனுடன் தான் செல்வேன் என்று நிரோஷினி கூறியதால் அவருடன் அனுப்பி வைத்தனர்.

தி.மலையில் கிரிவலத்திற்கு உகந்த நேரம்


திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
ஐப்பசி மாத பவுர்ணமி, நாளை மதியம், 12:30 மணிக்கு துவங்கி, நாளை மறுநாள், பகல் 11:04 மணி வரை உள்ளது. இது, பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தத்தளிக்கும் சென்னை: காரணம் பருவமழையா? கண்டுகொள்ளாத அரசாங்கமா?

Published : 01 Nov 2017 14:46 IST

பாரதி ஆனந்த்சென்னை




சென்னை கணேசபுரம் ஆடுதொட்டி | படம்: எல்.சீனிவாசன்

வடகிழக்கு பருவமழையோ   அல்லது தென்மேற்கு பருவமழையோ எதுவாக இருந்தாலும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த தேதியில் தொடங்குகிறது என்றால் அது மகிழ்ச்சிக்குரிய விஷயம். புகை கக்கும் தொழிற்சாலைகள், மண் வளம் தின்னும் பிளாஸ்டிக் கழிவுகள், வாகனப் புகை இன்னும் எத்தனையோ மாசுகளை மட்டுமே நாம் இயற்கைக்கு தந்தாலும் பேரன்போடு நமக்கு இன்னும் பருவம் தவறாமல் மழையைக் கொடுத்திருக்கிறது இயற்கை அன்னை.

அத்தகைய வரத்தை வணங்கி இன்புற வேண்டும். ஆனால் சென்னை மக்களோ மழை வந்தாலே பீதியில் ஆழ்ந்துவிடுகின்றனர். காரணம் 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. அந்த வெள்ளப்பெருக்குதான் தலைநகர் சென்னையில் வடிகால்கள் ஏதும் தூர்வாரப்படவில்லை, முகத்துவாரங்களை கழிவுகள் மூடிக்கொண்டிருக்கிறது, ஏரிகளில் கட்டிடங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை உரக்க உணர்த்தியது. ஆனால், அரசு உணர்ந்ததா?

ஞாயிற்றுக்கிழமையில் இருந்துதான் சென்னையில் பரவலாக மழை பெய்கிறது. ஆனால் இரண்டு மூன்று நாட்களிலேயே சென்னையின் பல்வேறு பகுதிகளும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இப்படி தண்ணீர் தேங்குவதற்கு என்னதான் காரணம்?

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமனிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் பேசியபோது, "இரண்டு நாள் மழைக்கே நகரில் பல இடங்களில் தேங்கியிருக்கிறதுதான். ஆனால், இதற்கு ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தை மட்டுமே கைகாட்டிவிடமுடியாது. 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு தவற்றை செய்திருக்கிறோம். அதை ஓரிரு ஆண்டுகளில் சரிசெய்துவிட முடியாது. இப்போது அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரும் பணிகளை சிறப்பாக செய்ய ஆரம்பித்தால் 3 அல்லது 4 வருடங்களில் வெற்றிகரமாக முடித்துவிடலாம்.

இப்படி சாதாரண மழைக்கே தண்ணீர் பெருக்கெடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றால் மழைநீர் கால்வாய்களை சீர் செய்தால் மட்டும் போதாது. மையக் கால்வாய்களான கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆற்றின் கொள்ளவு குறைந்திருக்கிறது. இதற்குப் பிரதான காரணம் ஆக்கிரமிப்புகள் மட்டுமே. 2105-ல் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்குப் பிறகு தமிழக அரசு தெரிந்தே கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தில் சுமார் 480 ஏக்கரை காமராஜர் துறைமுகத்துக்காக ஆக்கிரமித்திருக்கிறது. இது பேராபத்தை விளைவிக்கக்கூடியது.

ஏனெனில் குடிசை ஆக்கிரமிப்புகளால் அதில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே பாதிப்பு. ஆனால், வல்லூர் அனல்மின் நிலையம் போன்ற நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் அது ஒட்டுமொத்த ஊருக்கே பாதிப்பு.

இரண்டு விஷயங்களை இந்த அரசு செய்ய வேண்டியுள்ளது. முதலாவதாக, பணக்காரர்கள், குடிசைவாசிகள் என பேதம் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

வல்லூர் அனல்மின் நிலையத்துக்காக அரசே முகத்துவாரத்தை ஆக்கிரமிக்கிறது என்றால் அது மக்கள் மத்தியில் தவறான முன்னுதாரணமாக இருக்கும். இதே குடிசைவாசிகளாக இருந்தால் போலீஸைக் கொண்டு கட்டாயமாக அப்புறப்படுத்தும் அரசு, ஆக்கிரமிப்புகளை அனுமதிக்காததில் நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டாமா? இரட்டை நிலைப்பாட்டைத் தவிர்த்து அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அரசு அகற்ற வேண்டும்.

இரண்டாவதாக, மழைநீர் கால்வாய்களை தூர்வாருவது மட்டுமல்ல தற்போது நல்ல நிலையில் இருக்கும் நீர்நிலைகளை சீரமைத்து பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட வேண்டும். இவையே தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்கவும் சாதாரண மழைக்கு சாலையில் வெள்ளம் தேங்குவதைத் தடுக்கவும் தீர்வு"

இவ்வாறு அவர் கூறினார்.

எண்ணூரில் இருந்து முட்டுக்காடு வரையில், ஏறக்குறைய 49 கிலோமீட்டர் உள்ள கால்வாயை தூர்வாரி இருந்தால், சென்னை மாநகரில் எந்தவொரு இடத்திலும் தண்ணீர் தேங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கும் நிலையில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம்.

ஆனால், அவர் பிரதமர் வருகைக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் இருப்பதால் கேள்விகளை வாட்ஸ் அப்பில் அனுப்புமாறு மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார். இதனையடுத்து வாட்ஸ் அப் மூலம் கேள்விகள் அனுப்பியுள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம்.

வாட்ஸ் அப்பில் 'டெலிட்' வசதி அறிமுகம்: ஆனால் 7 நிமிடம்தான் அவகாசம்
Published : 01 Nov 2017 12:00 IST
க.சே.ரமணி பிரபா தேவி



வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு அனுப்பிய தகவலை அழிக்கும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால், அனுப்பிய தகவலை 7 நிமிடங்களுக்குள் அழிக்கவேண்டும்.

இதன்மூலம் குழுக்களுக்கும் தனி நபர்களுக்கும் தவறுதலாகவோ, தெரியாமலோ அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை திரும்பப் பெறமுடியும். ஆனால் பெறுபவர்களுக்கு ’இந்த செய்தி அழிக்கப்பட்டது’ என்ற செய்தி வாட்ஸ் அப் தரப்பில் இருந்து அனுப்பப்படும். எப்படி அழிப்பது?

முதலில் ப்ளே ஸ்டோர் சென்று வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்துகொள்ள வேண்டும். செய்திகளையோ, புகைப்படங்களையோ மற்ற ஆவணங்களையோ அழிக்கும் வசதியை மேம்படுத்தப்பட்ட (Updated) வாட்ஸ் அப் சேவையில் மட்டுமே பெற முடியும்.

இதன் பின்னர் செய்தியை அழிக்கும் 'டெலிட்' பொத்தானைத் தொட்டால், மூன்று தெரிவுகள் திரையில் மிளிரும். நமக்கு மட்டும் அழிக்கவேண்டுமா (Delete for me), வெளியே வந்துவிடலாமா (Cancel), எல்லோருக்கும் அழிக்க வேண்டுமா (Delete for Everyone) என்பன அவை.

இதில் 'Delete for Everyone' தேர்வு மூலம் செய்திகளை அழிக்கமுடியும். ஆனால் செய்தியை அனுப்பிய 7 நிமிடங்களுக்குள் அழிக்கவேண்டும். உடனே நமக்கு 'இந்த மெசேஜை நீக்கிவிட்டீர்கள்' (You deleted this message) என்று வாட்ஸ் அப் நமக்கு செய்தி அனுப்பும்.



இதன்மூலம் குழுக்களுக்கும் தனி நபர்களுக்கும் தவறுதலாகவோ, தெரியாமலோ அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை திரும்பப் பெறமுடியும். ஆனால் பெறுபவர்களுக்கு 'இந்த செய்தி அழிக்கப்பட்டது' (This message was deleted)என்ற செய்தி வாட்ஸ் அப் தரப்பில் இருந்து அனுப்பப்படும்.

ஏராளமான குறுஞ்செய்தி செயலிகள் இணைய சந்தையில் வரத் தொடங்கியுள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப் தனது பயனர்களுக்குத் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஃபேஸ்புக் நிறுவுனம், வாட்ஸ் அப்பைக் கையகப்படுத்திய பிறகு, இத்தகைய சிறப்பம்சங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஐந்து பட்டங்கள்.. பதினாறு பட்டயங்கள்.. அசரவைக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநர்!

Published : 01 Nov 2017 10:41 IST

ஆர்.டி.சிவசங்கர்



இசைக் கருவிகளுடன் பிரகாஷ்..



‘ஊட்டியைச் சேர்ந்த பிரகாஷ் 5 டிகிரி படித்து, 16 பட்டயப் படிப்புகளையும் முடித்திருக்கிறார். அத்துடன் 18 இசைக் கருவிகளையும் இசைக்கத் தெரிந்திருக்கிறார். இத்தனையும் கற்ற இவர், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நடத்துநர்!’ வாசகர் ஒருவர் ‘தி இந்து - இங்கே.. இவர்கள்..இப்படி!’ பகுதிக்கான அலைபேசி (044 42890013) எண்ணில் இப்படியொரு தவலை பதிவு செய்திருந்தார்.

ஆர்வக் கோளாறு

உதகை அருகே கடநாடு கிராமம் பிரகாஷின் சொந்த ஊர். தற்போது உதகையில் வசிக்கும் இவர், அரசு போக்குவரத்துக் கழகத்தின் உதகை கிளை 1-ல் நடத்துநராக பணியாற்றுகிறார். இவரது வீட்டுக்குள் நுழைந்ததுமே ஏதோ ஒலிப்பதிவு கூடத்துக்குள் நுழைந்துவிட்ட பிரம்மை ஏற்படுகிறது. வீட்டின் ஒரு பக்கத்தை இசைக் கருவிகள், ஒலிவாங்கி மற்றும் ஒலிபரப்பு கருவிகள் ஆக்கிரமித்திருக்க.. இன்னொரு பக்கம், பழுதுநீக்க வந்திருந்த தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் குவிந்து கிடக்கின்றன.

இதையெல்லாம் பார்த்து பிரம்மித்து நின்ற நம்மை சிரித்துக் கொண்டே வரவேற்ற பிரகாஷ், “ரொம்பப் பயந்துடாதீங்க. நடத்துநர் பணியும் எலெக்ட்ரானிக் சாதனங்களை ரிப்பேர் பண்றதும் தான் நம்ம தொழில். இசையும், கூடுதலா படிச்ச படிப்புகளும் ஆர்வக் கோளாறு!” என்றார்.

தபேலா, மிருதங்கம், டிரம்ஸ், புல்லாங்குழல், செனாய், கிளாரிநெட், டிரம்பெட், வயலின், கீ போர்ட்டு, புல்புல்தாரா, என 18 வகையான இசைக் கருவிகளை அநாயசமாக வாசித்து வியக்க வைக்கிறார் பிரகாஷ். 2010-ல், தமிழக அரசு கலைச்சுடர்மணி விருது வழங்கி இவரை கவுரவித்திருக்கிறது. இவரது தந்தை கிருஷ்ணன் தலைமை ஆசிரியராக இருந்தவர். வாசிப்புப் பிரியரான தந்தையார் தந்த ஊக்கமும் ஆக்கமுமே படிப்பின் மீதான தனது ஆர்வத்தை அதிகப்படுத்தியது என்று சொல்லும் பிரகாஷ், இளங்கலையில் இரண்டு, முதுகலையில் மூன்று என மொத்தம் ஐந்து பட்டங்களை பெற்றிருக்கிறார். அத்துடன், இசை, ஓவியம், கணினி, ஹார்டுவேர், நகை வடிவமைப்பு, வேளாண்மை உள்ளிட்ட 16 துறைசார்ந்த படிப்புகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பட்டயங்களையும் பெற்றிருக்கிறார்.

ஓய்வு நேரத்தில் இசை மற்றும் ஓவியப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தும் பிரகாஷிடம், “இவ்வளவும் படித்துவிட்டு எதற்காக நடத்துநர் பணியைத் தேர்வு செய்தீர்கள்?” என்று கேட்டதற்கு, “படிப்புக்கு வயதும் இல்லை; எல்லையும் இல்லை. படிக்க ஆர்வம் இருந்ததால் தொடர்ந்து படித்தேன். முடிந்தவரை எல்லாத் துறைகளையும் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன். அதுதான் நான் படித்துப்பெற்ற பட்டயங்கள். நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள் தாமதமாகக் கிடைத்ததால் அரசுப் பணிக்கான வாய்ப்புகள் சிலவற்றை தவறவிட்டேன். கடைசியில், நமக்கு அமைந்தது நடத்துநர் பணிதான். இதையும் ஆத்ம திருப்தியுடன் செய்கிறேன்” என்றார் பிரகாஷ்.

NEET PG 2018: Notification out, exam on January 7

NEET PG 2018: Check the eligibility, application form, exam date, syllabus and other details here

By: Express Web Desk | New Delhi | Published:November 1, 2017 3:44 pm

NEET 2018 results will be announced on January 31

NEET 2018: National Board of Examinations (NBE) will conduct NEET 2018 on January 7. In a notification released on the official website – nbe.edu.in, the board has announced that the registration process will begin on October 31. The last date to submit the applications is by November 27, 2017.

NEET 2018 results will be announced on January 31. Medical aspirants applying for the exam need to have Aadhaar card/ registration number

NEET (National Eligibility Entrance Test) is the single eligibility cum entrance examination for admission to postgraduate medical courses (MD/ MS and PG Diploma courses).

Eligibility criteria:

Education: Only those candidates can apply who have an MBBS degree or provisional MBBS pass certificate from a recognised college. He/ She should possess permanent or provisional registration certificate of MBBS qualification issued by the Medical Council of India or State Medical Council.

Candidate should also have completed one year of internship or are expected to complete the internship on or before March 31, 2018.

Registration fees: For general category and OBC, it is Rs 3,750 while for SC/ST/ PWD/ PH, it is Rs 2,750.

The Computer Based Test (CBT) will comprise of 300 multiple choice questions from the MBBS curriculum followed at medical colleges in India. The syllabus for the exam shall comprise of subjects/knowledge areas as per the Graduate Medical Education Regulations issued by Medical Council of India with prior approval of Government of India

NEWS TODAY 01.07.2026