Sunday, November 26, 2017


Deemed to be univs file plea against SC order

Vinayashree J | TNN | Updated: Nov 26, 2017, 07:38 IST


 
 CHENNAI: In the wake of the Supreme Court's directive instructing 123 deemed to be universities across the country to drop the 'university' tag from their names, several institutions have decided to file an impleading petition requesting that the order be reconsidered. The petition was filed on Monday by the Education Promotion Society of India (EPSI) on their behalf.

At least 28 institutions from Tamil Nadu are among the list of 123. The executive secretary of EPSI, Palanivel, said most of the institutions in the state were part of the petition.

An official from a deemed to be university in Chennai said it was the UGC which asked institutions to use the university tag earlier. "Now, again we are being asked to drop the tag without any logical reason given for the change. This is one of the points we have raised in the petition," said the official on condition of anonymity. Officials from many institutions said the tag was used for branding purposes, adding that the change in name could Daffect admissions.

Campus heads said the move was unexpected as it was a directive arising out of a case regarding distance education courses run by deemed to be universities through correspondence. "Just because four institutions were giving out invalid engineering degrees, the rest also have come under the radar," said the head of a reputed engineering institution in Chennai.

Koteswara Rao, director, academics, Vel Tech SR and RR University, said the institution was complying with the order by dropping the university tag. The administrative head of the Chennai Mathematical Institute, Sripathi, said the institution had dropped the tag much earlier.

Illegal admissions: SC puts Allahabad HC judges in dock for violating ‘judicial propriety

Amit Anand Choudhary | TNN | Nov 26, 2017, 00:58 IST

Highlights

Apex court said order passed by the HC for some unfathomable and inscrutable reason
The HC had allowed the college to admit students without waiting for a response from the Centre and the Medical Council of India

The court called it a case of “judicial indiscipline”


File photo used for representational purpose

NEW DELHI: The permission given by a division bench of the Allahabad high court to a Lucknow-based medical college to admit students just three days after the Supreme Court rejected the plea has elicited a strong reaction from the apex court, which called it a case of "judicial indiscipline" as it minced no words to reprimand the judges for violating judicial propriety.

A bench of Chief Justice of India Dipak Misra and Justices A M Khanwilkar and D Y Chandrachud expressed "shock" at how the HC could virtually overrule the apex court order and slammed the judges for passing an order "for some unfathomable and inscrutable reason", a deviation which has the "potentiality to take justice to her coffin".

"It is a most unfortunate situation that the division bench has paved such a path. One cannot but say that the adjudication by the division bench tantamounts to a state as if they dragged themselves to the realm of 'willing suspension of disbelief'. Possibly, they assumed that they could do what they intended to do. A judge cannot think in terms of 'what pleases the prince has the force of law'. Frankly speaking, the law does not allow so, for law has to be observed by requisite respect for law," the SC bench said.

The bench noted that the SC had, on August 28, restrained the HC from passing any interim order in favour of the medical college for the current academic year while allowing the institution to withdraw its petition. The HC, however, allowed the college to admit students for the 2017-18 batch on September 1 without waiting for a response from the Centre and the Medical Council of India.

"It is clear as the cloudless sky that the judgment of the high court shows unnecessary and uncalled-for hurry, unjustified haste and an unreasonable sense of promptitude possibly being oblivious of the fact that the stand of the Medical Council of India and the central government could not be given indecent burial when they were parties on record. Such a procedure cannot be countenanced in law," the apex court said.

Top Comment  As a Doctor I am subject to dissection, scrutiny, post mortem and trial by public whenever a patient has morbidty or mortality. Even though at that time of treatment the facts and treatment available... Read MoreMahesh DC

"The content of the August 28 order is graphically clear. The HC was not allowed to pass any interim order pertaining to the academic session 2017-18 but the division bench of HC, for some unfathomable and inscrutable reason, referred to certain judgments of this court and allowed the prayer. It is beyond our comprehension as to how the high court could have even remotely thought of passing an order granting the letter of permission for the academic session 2016-17 and renewal for 2017-18," it said.

The apex court said: "It is necessary to add and repeat that the division bench had no reason to abandon the concept of judicial propriety and transgress the rules and further proceed on a path where it was not required to. Such things create institutional problems and we are sure that the judges shall be guided by it."

மாணவிகள் தற்கொலை சம்பவம்: தலைமை ஆசிரியை உள்பட இருவர் பணியிடை நீக்கம்

By DIN  |   Published on : 26th November 2017 04:08 AM
dead
அரக்கோணம் அருகே பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அப்பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியை ஆகிய இருவரும் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி (16), சங்கரி (16), தீபா (16), மனீஷா (16) ஆகிய 4 மாணவிகள் பிளஸ் 1 படித்து வந்தனர். இந்த 4 மாணவிகளும் சரியாகப் படிக்காததால் வகுப்பாசிரியை, அவர்கள் 4 பேரையும் வெள்ளிக்கிழமை திட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து மாணவிகள் 4 பேரும் ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மாணவிகளின் தற்கொலைக்கான காரணங்களை அறிய, கல்வித் துறையினரும், காவல் துறையினரும் தனித் தனியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டார். மேலும், பள்ளியில் ஆசிரியைகளிடம் ஏடிஎஸ்பி வனிதா விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், சனிக்கிழமை மாணவிகளின் சடலங்களை பிரேதப் பரிசோதனை செய்ய முயன்ற போது, அவர்களின் உறவினர்கள் மற்றும் பனப்பாக்கம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியை, வகுப்பு ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்த பிறகே பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து கல்வித் துறையிடம் இருந்த அறிக்கை பெற்ற ஆட்சியர், சென்னை பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து அவர், பள்ளியின் தலைமை ஆசிரியை ரமாமணி, வகுப்பாசிரியை மீனாட்சி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட ஆசிரியை லில்லியையும் பணியில் இருந்து நிறுத்த உத்தரவிடப்பட்டது. இத்தகவல் போராட்டக்காரர்களுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து மாணவிகளின் சடலங்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன.

கடையடைப்பு: மாணவிகளின் தற்கொலை சம்பவத்தை அடுத்து பனப்பாக்கம் நகரில் பெரும்பாலான கடைகள் அடைக் கப்பட்டன. ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆட்டோக்கள் இயங்கவில்லை.

சாலை மறியல்: பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மாணவிகளின் சடலங்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து தனித் தனியாக அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பனப்பாக்கம் கிராமத்துக்குக் கொண்டு வரப்பட்டன. 

பனப்பாக்கம் நகர எல்லையில் வந்த போது, அமரர் ஊர்திகளை மறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மண்டலச் செயலாளர் ரத்தினநற்குமரன், வடக்கு மாவட்டச் செயலாளர் கெளதமன், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிச் செயலாளர் அன்புக்கரசி பிரபாகரன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இறந்த மாணவிகள் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். 2 ஏக்கர் நிலம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். தற்கொலைக்கு காரணமான தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து, குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் (பொறுப்பு) அப்துல் மூனீர், அரக்கோணம் டி.எஸ்.பி. குத்தாலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

எம்எல்ஏ நேரில் ஆறுதல்: இறந்த 4 மாணவிகளின் வீடுகளுக்கும் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் வேலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.ஜி.விஜயன், என்.டி.பி.தயாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் எம்எல்ஏ சு.ரவி கூறியதாவது: இறந்த மாணவிகள் குடும்பத்தினரின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த 7 அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அந்த உறவை முறித்துக் கொள்ளுங்கள்!

By உமா பார்வதி  |   Published on : 24th November 2017 06:43 PM  | 
 நேசிப்பவரை பிரிவது போல் உயிர்வலி தரக் கூடியது வேறெதுவும் இருக்க முடியாது. ஆனால் எதிர்பாராதவிதமாக ஏற்படக் கூடிய அப்பிரிவை மனமொத்து ஏற்றுக் கொள்ளாவிட்டால் உங்களுடைய மிச்ச வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. உங்கள் காதலன் அல்லது காதலி, கணவன் அல்லது மனைவி என நெருக்கமான உறவுகளில் யார் பிரிந்தாலும் அதைப் பக்குவமான மனநிலையில் காரண காரியங்களை யோசித்துச் செயல்பட வேண்டும். ஆனால் பிரிவதற்கு முன் ஆயிரம் தடவை யோசித்துவிடுங்கள். ஏனெனில் பிரிந்துவிட்ட பின்னர் மீண்டும் இணையும் சாத்தியங்கள் குறைவு. உடைந்து போன உறவுகளை என்னதான் செல்லோ டேப் போட்டு ஒட்டினாலும், அவை முன்பு போலிருக்காது என்பது பலரும் அறிந்த உண்மை. பின்வரும் ஏழு விஷயங்களில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த உறவைத் தொடர வேண்டாம்.

1. திருமணத்துக்குப் பிறகும் உங்களுடைய பழைய காதலைப் பற்றியே எப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?

இது உங்களுடைய வாழ்க்கையை சிதைத்துவிடும் செயல். உங்கள் துணை உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எதிர்ச் செயல் இது. பழைய காதலைப் பற்றி எப்போதாவது அசைபோடுவது அல்லது மறக்க முடியாமல் தவிப்பது மனித இயல்புதான். நீங்களோ அல்லது உங்கள் துணையோ பழைய காதலை சதா சர்வ காலம் சிலாகித்துக் கொண்டிருந்தால் அல்லது அதை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் இப்போதைய வாழ்க்கை கசக்கத் தொடங்கும். சிறுகச் சிறுக அதிலிருந்து நீங்கள் விடுபட்டால்தான் உங்களால் புதிய வாழ்க்கைக்குள் உங்களை பொருத்திக் கொள்ள முடியும்.
மேலும் ஒரு உறவுக்கு நீங்கள் மதிப்பு கொடுப்பவர்களாக இருந்தால் முழுமையாக உங்களை அதற்கு ஒப்புக் கொடுக்க வேண்டும். இல்லை எனில் உங்களையும் ஏமாற்றி உங்கள் துணையையும் ஏமாற்றுபவர்களாகி விடுவீர்கள். வண்டி உருண்டோட அச்சாணி தேவை, என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே, ரெண்டு அன்புள்ளம் தேவை என்ற பாடல் வரிகளில் பொதிந்துள்ள உண்மை மறுக்க முடியாதது. உங்களால் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் புதிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் பிரிவுதான் இதற்கான ஒரே தீர்வு. இல்லையென்றால் வாழ்க்கை வண்டி ஓடாமல் நின்று விடும் அல்லது விபத்து ஏற்படக் கூடும். 
2. மனக்கசப்புடன் நீடிப்பது அல்லது நீண்ட நாட்கள் மகிழ்ச்சியின்றி இருப்பது
எந்த ஒரு உறவிலும் பிரச்னைகள் வரும் போகும். அது இயல்புதான். அவை சமாளிக்கும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் இருவரில் ஒருவர் தொடர்ந்து மற்றவரை சீண்டிக் கொண்டிருந்தும், தொடர்ந்து கஷ்டப்படுத்திக் கொண்டும் இருந்தால் அத்தகைய உறவில் அர்த்தம் இல்லை. உங்கள் துணை சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் தர வேண்டும். மாறாக வெறுப்பையே தந்து கொண்டிருந்தால் உடன் வாழ்வது வதை முகாமில் இருப்பது போலத்தான். கட்டாயத்தின் பிடியில் வாழ்க்கை கசக்கவே செய்யும். எனவே அத்தகைய உறவுநிலையைத் தொடர்வதில் பயனில்லை.
3. கேள்விக்குறியாகும் எதிர்காலம்

ஒருவர் மீது மற்றவர் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டு பிரச்னைகளுடன் வாழ்க்கையைத் தொடர்ந்தால் இறுக்கமான சிக்கலாகி எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும். ஏன் வீட்டுக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டால் உங்கள் துணையால் நீங்கள் தீவிரமாக மனம் பாதிப்பு அடைந்துள்ளீர்கள் என்று அர்த்தம். உங்களின் மனக் கசப்பு, மன அழுத்தமாக மாறிவிடலாம். இதற்கு முதல் தீர்வு கவுன்சிலிங். அதன் பின்னாரும் அவ்வுறவு சீர்படவிலை எனில் பிரிந்து விடுவதுதான் ஒரே தீர்வு.  அதுதான் இருவருக்கும் நல்லது. முடிவெடுக்காமல் பிரச்னையை ஜவ்வு போல் இழுத்தடிப்பது சரியாக வராது.
   
4. உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறதா?
உங்களுடைய துணை உங்களின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் உறுதுணையாக இருக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் புது முயற்சிகளுக்கும் தொழிலில் அல்லது வாழ்க்கையின் பங்களிப்புக்கும்  பக்கபலமாக இருக்க வேண்டும். உங்களை உற்சாகப்படுத்தி தன்னுடைய ஆதரவைத் எல்லா காலகட்டத்திலும் நிபந்தனை அற்ற அன்புடன் முழு மனத்துடன் தர வேண்டும். அப்படி செய்யாமல், அதற்கு நேர் எதிராக உங்கள் வளர்ச்சியில் பொறாமை கொண்டும், அதைத் தடுக்கும் முயற்சிகளில் அவர் இறங்கினால் நீங்கள் விழிப்படைய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். 

5. உங்கள் சுயமரியாதை குறைகிறதா?
ஒரு உறவை இருவரும் சேர்ந்து அன்பாலும் நம்பிக்கையாலும் கட்டமைத்தால் தான் அது நீடிக்கும். மாறாக உங்கள் சுய மரியாதைக்கும், நேர்மைக்கும் அல்லது நீங்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கும் நல்லொழுக்கங்களுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உங்கள் துணையின் செயல்கள் இருந்தால் அதிகம் யோசிக்காமல் பிரிந்துவிடுங்கள். எதை விடவும் மானம் மரியாதை மிகவும் முக்கியம். வாழ்க்கை இந்த உறவுக்கு மேலாக உள்ளது என்ற தன்னம்பிக்கை கொள்ளுங்கள். தனித்து உங்களால் ஜெயிக்க முடியுமெனில் அதையே தேர்ந்தெடுங்கள்.

6. உங்கள் இருவரின் உலகமும் வெவ்வேறாக இருந்தால்?
உங்கள் இருவரின் குணநலன்கள் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தால் ஒரு கூரைக்குக் கீழ் வாழவே முடியாது. ஆரம்ப கட்ட மயக்கங்கள் தீர்ந்த பின் நீங்கள் கிழக்கு என்றால் உங்கள் துணை மேற்கு என்பார். சிறிய விஷயமோ பெரிய விஷயமோ எவ்வித உடன்படிக்கைக்கும் வரவே முடியாது. அத்தகைய நிலையில் தினம் தினம் வீடே யுத்தகளமாகும். இது அடிப்படை கோளாறு எனவே எவ்வளவு முயற்சித்தாலும் சரியாக வராது. இதற்கு பேசாமல் பிரிந்து விடுவதே மேல்.

7. உங்கள் துணை உங்களை ஏமாற்றுகிறாரா?
நம்பிக்கைத் துரோகம் என்பது யாராலும் மன்னிக்க முடியாதது. உங்களை உடலளவில் அல்லது மனத்தளவில் காயப்படுத்தும் செயல்களை உங்கள் துணை தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் எதிர்ப்புணர்வை நிச்சயம் காட்ட வேண்டும். அவர்களிடம் எவ்வளவு அன்பைப் பொழிந்தாலும் அவர்கள் திருந்த மாட்டார்கள். விழலுக்கு நீர் இரைத்தாற் போல உங்கள் பொறுமையும் அன்பும் வீணாகிவிடும். இன்று சரியாகிவிடுவார் நாளை இந்தப் போக்கு மாறிவிடும் என்று நீங்கள் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலும், அதுவும் அவர்களுக்கு சாதகமாகிவிடும். அவர்கள் ஆட்களை மாற்றிக் கொள்வார்களே அன்றி துரோகம் செய்வதை நிறுத்த மாட்டார்கள். பாம்பை கூடையில் வைத்து சுமப்பதைப் போன்றுதான் துரோகம் செய்பவர்களுடன் குடித்தனம் நடத்துவது. எனவே விரைவில் அந்த உறவிலிருந்து வெளிவந்துவிடுங்கள். துரோகிகளிடம் போராடுவதை விட இந்தப் பெரிய வாழ்க்கையில் செய்வதற்கு அழகான விஷயங்கள் அனேகம் உள்ளது. வெட்டி விட்டு வந்துவிடுங்கள். வாழ்க்கை சுகமாகும்.




பொங்கல் பண்டிகை: அரசுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்

By DIN  |   Published on : 26th November 2017 03:39 AM  | 

பொங்கல் பண்டிகைக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக அரசு விரைவுப் பேருந்துகளில் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது. 

வரும் ஜனவரி 13 முதல் 17 }ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களாகும். இதையொட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக இந்த ஆண்டும் சிறப்புப் பேருந்துகளை அரசு இயக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகவுள்ள நிலையில், பொங்கல் பண்டிகை சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
300 கி.மீ. தொலைவுக்கு மேல்...அதாவது, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 300 கி.மீ. தொலைவுக்கு மேல் செல்லும் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய தமிழகம் முழுவதும் 125 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. இதில், சென்னையில் மட்டும் கோயம்பேடு, தியாகராய நகர், திருவான்மியூர், தாம்பரம் உட்பட 19 இடங்களில் இந்த முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. அரசு விரைவுப் பேருந்துகளில் 60 நாள்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பயணிகள் தற்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது:

பொங்கல் பண்டிகைக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. வழக்கமாக முன்பதிவு செய்யும் மையங்களிலோ அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்திலோ பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 12,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு அதைவிடக் கூடுதலாக பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம். முன்னதாக, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டியும் மக்களின் தேவைக்கேற்ப தென்மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

 

இன்ஜினியர் உயிரை பறித்த, 'கட் - அவுட்' கம்பம் அமெரிக்காவிலிருந்து பெண் பார்க்க வந்த போது சோகம்

Added : நவ 26, 2017 01:07



கோவை, கோவையில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுக்காக நடுசாலையில் அமைக்கப்பட்ட,
'கட் - அவுட்' கம்பத்தில் மோதி, அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.கோவை, சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி; இவரது மகன் ரகுபதி, 32; அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். பெண் பார்ப்பதற்காக, 12 நாட்களுக்கு முன் கோவை வந்தார். இன்று மீண்டும்,அமெரிக்கா திரும்ப திட்டமிட்டிருந்தார்.அமெரிக்கா செல்லும் முன், பழநி கோவிலுக்கு செல்ல முடிவு செய்தவர், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, பைக்கில், சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டு புறப்பட்டார். பஸ் ஸ்டாண்டில் பைக்கை நிறுத்தி, பஸ்சில் பழநி செல்லவிருந்தார். கோவை அரசு மருத்துவ கல்லுாரியை தாண்டி, ஹோப்காலேஜ் மேம்பாலம் மீது பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.


சாலையின் நடுவில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுக்காக, 50 அடி உயரத்தில் கட் - அவுட் கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. நடுசாலையில் சவுக்குக் கட்டைகளால் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவு மீது, ரகுபதி சென்ற பைக் மோதியது.நிலை தடுமாறி சாலையில் விழுந்தவர் மீது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி, நிற்காமல் சென்றது.
விபத்தில் தலை சிதைந்து, சம்பவ இடத்திலேயே ரகுபதி பரிதாபமாகஉயிரிழந்தார்.
போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கோவையில், டிச., 3ல், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடக்க உள்ளது. இதற்காக, மாநகர் முழுவதும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன.அவிநாசி சாலையில், சிட்ரா மற்றும் விபத்து நடந்த ஹோப்காலேஜ் சந்திப்பு உட்பட பல்வேறு இடங்களில், 50 அடிக்கும் மேலான உயரத்தில், நடுசாலையில் கட் - அவுட்டுக்காக கம்பங்கள் கட்டப்பட்டன. இந்த ஆடம்பர
ஏற்பாடுகள், கோவை மக்களை முகம் சுளிக்க வைத்து உள்ளன.
இதற்கேற்ப, நேற்று சாப்ட்வேர் இன்ஜினியர் விபத்தில் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நேற்று மதியம் சாலையில் அமைக்கப்பட்ட அனைத்து
தோரணங்களையும் அகற்ற, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

'சாலையிலேயே வைப்போம்'


நேற்று முன்தினம் மாலை, சிட்ரா சந்திப்பு அருகே நடுரோட்டில், அலங்கார வளைவு கட்டப்பட்டு வந்தது. இதை பார்த்த ரோந்து போலீசார், பணிகளை நிறுத்த அறிவுறுத்தினார். ஆனால், 'நாங்கள் பைபாஸ் சாலையிலேயே தோரணம் கட்டுவோம்' என, பதிலளித்துள்ளனர்.
பின், போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, சிட்ரா அருகே அமைக்கப்படவிருந்த வரவேற்பு வளைவு அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதேபோன்று, ஹோப்காலேஜ் பகுதியிலும் எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால், உயிரிழப்பை தடுத்திருக்கலாம்.


அனுமதி வாங்கவில்லை


வாலிபர் உயிரிழப்பு குறித்து, சமூக வலை
தளங்களில் தகவல்கள் பரவின. அதில், 'விபத்துக்கு கோவை மாநகராட்சி கமிஷனர் தான் காரணம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு சமூக வலைதளத்தில் பதிலளித்த, கமிஷனர்
விஜயகார்த்திகேயன், 'உரிய அனுமதி வாங்காமல்
அலங்கார வளைவுகளை அமைத்துள்ளனர். அவற்றை உடனடியாக அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிட்டிருந்தார்.
மூதாட்டியை 17 வயது குமரியாக்கிய, 'ஆதார்'

Added : நவ 26, 2017 01:01


பெரம்பலுார் பெரம்பலுாரில், 60 வயதாகும் மூதாட்டி, 2000ல் பிறந்ததாக பதிவு செய்து, 'ஆதார்' கார்டு கொடுத்து உள்ளனர். 


அதை திருத்தம் செய்யக் கோரி, பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில், மூதாட்டி மனு
கொடுத்தார்.


பெரம்பலுார் மாவட்டம், அரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த, செல்வாம்பாள் என்ற, 60 வயது மூதாட்டிக்கு வழங்கிய ஆதார் கார்டில், 19.10.2000 என, பிறந்த தேதி பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கணவர் பெயர், கருப்பையா என்பதற்கு பதிலாக, காருப்பையா என, அச்சிடப்பட்டிருக்கிறது.
அதனால், பிறந்த தேதி, கணவர் பெயர் ஆகியவற்றை திருத்தம் செய்ய, பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, ஆதார் கார்டு போட்டோ எடுக்கும் மையத்தில், செல்வாம்பாள் மனு கொடுத்தார்.


அப்போது, அவர் கூறுகையில், ''ஏற்கனவே, இந்த ஆதார் கார்டை பெற, நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்று பதிவு செய்தேன். ஆறு மாசம் ஆச்சு கார்டு வர. அதிலும் என்னை குமரியாக்கிவிட்டனர். வயதான காலத்தில், கலெக்டர் அலுவலகத்திற்கு அலைகிறேன்,'' என்றார்.


NEWS TODAY 07.07.2026