Wednesday, April 11, 2018


உஷார்! சரியான தூக்கமில்லா விட்டால் மனித மூளை தன்னைத் தானே சாப்பிடத் தொடங்கி விடுமாம்!


By RKV | Published on : 10th April 2018 02:16 PM |


மனித மூளையின் ஆரோக்யமான செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு நாளின் முடிவிலும் போதுமான பரிபூரண தூக்கம் அவசியம். அப்படி தேவையான நேரங்களில் உடலும், மனமும் தூக்கத்துக்காகக் கெஞ்சக் கெஞ்ச அதைப் பொருட்படுத்தாமல் அசட்டை செய்து நாம் மேலும், மேலுமென தூக்கத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தோமெனில் நமது மூளை ஒரு கட்டத்தில் தன்னைத்தானே சாப்பிடத் தொடங்கி விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குறைவான தூக்கம் கணிசமான அளவில் மூளையின் முக்கியமான நியூரான் இழப்பிற்கு காரணமாகி விடுகிறது.

அது மட்டுமல்ல மூளையின் லட்சக் கணக்கான சினாப்டிக் பரிமாற்றங்களையும் அது தடுத்து விடுகிறது. இப்படியொரு அசம்பாவிதம் நிகழ ஒருமுறை நாம் அனுமதித்து விட்டோம் எனில் மீண்டும் அதை சரி செய்து கொள்வதென்பது முடியவே முடியாத காரியமாம். பிறகு நீங்கள் ஆற, அமர நன்கு தூங்கி ஓய்வெடுத்தாலும் பயனில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதோடு தூக்கமின்மை என்பது மனிதர்களிடையே அதிகளவில் அல்சைமர் நோயின் தாக்குதல் மற்றும் நரம்பியல் தொடர்பான குறைபாடுகள் அதிகரிக்கவும் காரணமாக அமைந்து விடுகிறது.

மிகக்குறைவான தூக்கத்தால் ஆஸ்டோசைட்ஸ் பாதிப்பு வரவும் வாய்ப்பிருக்கிறது. ஆஸ்ட்ரோசைட்ஸ் பிரச்னை இருந்தால் அதனால் பாதிப்படைந்தவர்கள் பார்ப்பதற்கு துறுதுறுவென்று சுறுசுறுப்பாக இருப்பவர்களைப் போல தோன்றினாலும் அவர்களது மூளைச் செல்களுக்குள் மிகப்பெரிய ஆபத்து இருப்பது அவர்களுடன் பழகும் மனிதர்களுக்கே தெரிய வாய்ப்பில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு மூளையின் தகவல் பரிமாற்றங்களில் முக்கியப்பங்காற்றும் சினாப்டிக் செல்கள் குழப்பமடைந்து மூளையை தனக்குத் தானே ரீமாடல் செய்து கொள்வதால் அவர்கள் அவ்விதமாக இயங்குகிறார்களே தவிர அவர்களுடைய உற்சாகமென்பது அணையப் போகிற விளக்கில் திடீரென அதிக சுடரொளி தெரிவதைப்போன்றது தானாம்.

மருத்துவர்களால் வரையறுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தூக்க நேரமான 8 மணி நேரத் தூக்கத்தை நாம் நிராகரித்தோம் என்றால் மிக மோசமாக மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கும் உள்ளார்ந்த மீள் எண்ணங்களால் மிகுந்த தொல்லைக்கு உள்ளாகும் அபாயம் ஏற்படும். இதனால் மனிதர்கள் உள்ளார்ந்த கவலைகள் மற்றும் மன உளைச்சல்களுக்கு ஆட்பட்டு சுயவிசாரத்தில் இறங்கும் அபாயம் அதிகரிக்கும்.

இப்படி மனிதர்கள் தமக்குள் சுயவிசாரங்களில் ஆழ்ந்து போகும் போது அவர்களுடைய வாழ்நாள் அளவு தானாகக் குறைந்து விடுகிறது என்பதோடு வாழ்வின் தரமும் குறைந்து விடுகிறது. அதாவது உப்புச் சப்பில்லாமல் வாழ்ந்து மடிய வேண்டிய நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள்.

இம்மாதிரியான ஆழ்மன விசாரங்கள் தன்னைத்தானே உருக்கிக் கொள்வதோடு முடிந்து விடுவதில்லை, தன் சக மனிதர்களையும் தன்னை அணுக விடாது தன்னைச் சுற்றி மனதளவில் ஒரு வேலியிட்டுக் கொண்டு மனநோய் உள்ளிட்ட உளவியல் நோய்களில் வீழ இட்டுச் செல்லும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் சரியான தூக்கமின்றி ஆண்டுக்கணக்காக வாழ நேர்பவர்கள் ஒருபாதி மனநோயாளிகளாகி விடுகிறார்கள். அவர்களுக்குத் திடீரென கோபம் வரும், திடீரென நன்றாகப் பேசுவார்கள், சட்டென மூர்க்கமாகி எப்பேர்ப்பட்ட நட்பையும், உறவையும் துண்டித்துக் கொள்ளத் தயங்க மாட்டார்கள். ஒரு நிலையான பாதுகாப்பான மனநிலையின்றி மனதளவில் ஊசலாடிக் கொண்டே இருப்பார்கள். மனநல மருத்துவர்களின் கணிப்பின் படி குறைவான தூக்கத்துக்கும் மனநலப் பிரச்னைகளுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் தான் மனநல மருத்துவர்கள் முதல் அனைத்து மருத்துவர்களும் எல்லாவித உடல் நலக் கோளாறுகளுக்கும் போதுமான தூக்கமின்மையையே முதல் காரணமாக முன் வைத்து நோயாளிகளின் ஆரோக்யமான தூக்க நேரத்தைப் பற்றி அறிவுறுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்.

தூக்கமின்மை என்பது மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மையம், இதயத்தின் ஆரோக்யமான செயல்பாடு, மற்றும் பாலியல் ஈடுபாடு உள்ளிட்ட விவகாரங்களில் கூட குறிப்பிடத்தக்க அளவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்கிறார்கள் மருத்துவர்கள். நாளடைவில் அதே நிலை நீடிக்குமானால் கேன்சர் நோயின் தாக்கத்துக்கு தூக்கமின்மையும் ஒரு காரணமாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். இப்படி தூக்கமின்மை என்ற ஒரு விஷயம் மனிதனை பல்வேறு உடல் மற்றும் மனநலன் சார்ந்த ஆரோக்யக் கேடுகளுக்கு இட்டுச் செல்கிறது என்பதை மக்கள் உணர்ந்தார்கள் எனில் நிச்சயம் இனியொரு முறை தங்களது தூக்க நேரத்தை ஒத்திப்போடவோ அசட்டையாக நிராகரிக்கவோ மாட்டார்கள் என நம்புவோம்.

பாம்பு விஷமுள்ளதா? விஷமற்றதா? எளிதாகக் கண்டறிய டிப்ஸ்!


By RKV | Published on : 11th April 2018 05:29 PM |



புறநகர் பகுதிகளில் வீடு கட்டிக் கொண்டு குடி புகுந்து புதிதாக செட்டிலாகி இருக்கிறீர்களா? வீடுகள் நெருக்கமாக இல்லாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக புதர் மாதிரியாக கருவேல மரங்களும், பார்த்தீனியங்களுமாக நிறைந்து போய் ஏரியாவே ஏதாவது காட்டுக்குள் குடியேறியதைப் போன்ற உணர்வைத் தருகிறதா?! அங்கே குடியிருப்பதற்கு உங்களுக்கு சில பயங்களும், பீதிகளும் இருக்கலாம். திருட்டு முதல் பீதியாக இருந்தாலும் அதைக்கூட வாட்ச்மேன், செக்யூரிட்டு என்று சமாளித்து விடுவீர்கள். ஆனால் இந்தப் பாம்புப் பயம் இருக்கிறதே அதை மட்டும் யாரை வைத்தும் நம்மால் சமாளிக்க முடியாது. பாம்பு மட்டும் யதேச்சையாக துரதிர்ஷ்டவசத்தில் நம் கண்ணில் பட்டு விட்டால் போச்சு! ஒன்று அந்தப் பாம்பு அடித்துக் கொல்லப்பட்டே ஆக வேண்டும் அல்லது நாம் தினம் தினம் அதைக் குறித்த பயத்தில் செத்து செத்துப் பிழைத்துக் கொண்டிருப்போம். இந்தத் தொல்லையெல்லாம் எதற்கு? ஒரு பாம்பு உங்கள் கண்களில் தட்டுப்பட்டு விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைப் பார்த்த மாத்திரத்தில் உங்களால் அது விஷமுள்ள பாம்பா அல்லது விஷமற்ற பாம்பா? என்று கண்டறியத் தெரிந்து விட்டால் பிறகு அதைக் கொல்வதா? வேண்டாமா? என்று முடிவெடுத்து விடலாமில்லையா? முடிவெடுப்பது கூட அப்புறம் தான். முதலில் உங்கள் கண்ணில் பட்ட பாம்பு விஷமற்றது என்று தெரிந்தால் உள்ளே நிம்மதியாக உணர்வோமே! அது தான் முக்கியம்.



விஷமுள்ள பாம்பு எனில் கண்கள் நீள்வட்டமாக இருக்கும், மூக்குத்துவாரத்தோடு சேர்த்து அதற்கு சற்றுக் கீழே ஒரு எக்ஸ்ட்ரா துளையும் இருக்கும். வால் பகுதியில் உடலின் அடிப்பாகத்தில் வரிகள் ஒரே வரிசையாக இருக்கும்.



விஷமற்ற பாம்பு எனில் கண்கள் வட்டமாக இருக்கும். மூக்குத்துவாரம் மட்டுமே இருக்கும். எக்ஸ்ட்ரா துளை தென்படாது, வால் பகுதியில் உடலின் அடிப்பாகத்தில் வரிகள் இரண்டு வரிசையாகத் தொடர்ந்து முடிவடையும்.


நோய் முதல் நாடி...


By பா. ராஜா | Published on : 10th April 2018 01:19 AM |
dinamani 

முன்பெல்லாம் நடுத்தர வயதைக் கடந்த நண்பர்களோ, உறவினர்களோ சந்தித்துக் கொள்ளும்போது, 'நன்றாக இருக்கிறீர்களா? அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் நன்றாக இருக்கிறார்களா?' என்று பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்வர். இதுவே தொன்றுதொட்டு நிலவிவரும் வழக்கம். ஆனால், தற்போது, நண்பர்களும் உறவினர்களும் சந்தித்துக் கொள்ளும்போது முதலில் விசாரிப்பது, 'ஷுகர் கண்ட்ரோல்ல இருக்கா, பிரஷர் நார்மலா?' என்பதாகத்தான் உள்ளது.

அனைத்துவித நோய்களுக்கும் வைத்தியம் பார்க்கும் ஒரு மருத்துவர் 'பொது மருத்துவர்' என்ற பெயரில் இருந்த காலம் மாறி, தற்போது உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனியாக வைத்தியம் பார்ப்பதற்கு சிறப்பு மருத்துவர்கள் என்ற பெயரில் உலா வருகின்றனர். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒவ்வொரு மருத்துவமனையில் அந்த சிறப்பு மருத்துவர் பணி செய்துவருகிறார். அவ்வளவு டிமாண்ட். அனைத்துப் பொருள்களும் இங்கே கிடைக்கும் என்பது போல, அனைத்து நோய்களுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என 'மல்டிஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ்' என்றழைக்கப்படும் பல்நோக்கு மருத்துவமனைகள் நகர், புறநகர், ஏன் கிராமப் பகுதிகள் வரையிலும் இன்று நீக்கமற நிறைந்துள்ளன.

மக்கள்தொகை பெருகப் பெருக, நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது எனலாம். இதற்கு வாழ்க்கைச் சூழல், பணிச் சூழல், கண்ணுக்குத் தெரியாத வேதி நச்சுகள் கலந்த உணவுப் பொருள்கள், துரித உணவுகள், உடல் உழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை என பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில், நமக்கு வரும் நோய்களில் பலவற்றை முற்றிலும் குணப்படுத்துவதைவிட, அவற்றை முற்றவிடாமல் தடுக்கும் சிகிச்சைகளையே நாம் மேற்கொண்டு வருகிறோம்.
உலக அளவில் மக்களைப் பாடாய்படுத்திவரும் நோய்களில் முதலிடம் வகிப்பது டையபட்டீஸ் மெல்லிடஸ் எனப்படும் சர்க்கரை நோய். டைப்-2 சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில் முதலிடம் வகிக்கிறது இந்தியா (பெருமைப்பட வேண்டாம்). நம் நாட்டில் சுமார் 5 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் இந்திய மருத்துவத் துறைக்கு இது ஒரு சவாலாக விளங்கும் என்றும் கூறப்படுகிறது.

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்ததன் மூலம் உலகம் முழுவதும் சுமார் 34 லட்சம் பேர் இறந்தனர். இந்தியாவில் இறந்தோர் எண்ணிக்கை மட்டும் 58 சதவீதமாம்.

அடுத்து புற்றுநோய். இந்தியாவைப் பொருத்தவரையில் பெண்களை அதிகம் தாக்கும் நோயாக உள்ளது புற்றுநோய். சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக புற்றுநோயாளிகளைக் கொண்ட நாடாக உள்ளது இந்தியா. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 5% என்ற அளவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் புற்றுநோயால் சுமார் 1 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோயால் அதிகம் பேர் இறக்கின்றனர் என்றும், இது பெண்கள் பிரசவ காலத்தில் இறக்கும் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கருப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோயால் கேரளம், தமிழ்நாடு, தில்லி ஆகிய மாநிலங்களில் அதிகமானோர் இறக்கின்றனர் எனத் தெரியவருகிறது.
அடுத்தது இதய நோய். நெஞ்சு வலி, மாரடைப்பு என பல பெயர்களில் அழைக்கப்படும் இந் நோயால் இந்தியாவில் 30 முதல் 40 வயதுக்குள்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனராம்.

இதய நோய் வருவதற்கு முக்கிய காரணம், இந்தியர்கள் மேலைநாட்டு கலாசாரத்தைப் பின்பற்றுவதுதான் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் இதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவில், நகர்ப்புறங்களைவிட, கிராமப்புறங்களில் வசிப்போர் அதிகமாக இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2020-ஆம் ஆண்டில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
உடல் உழைப்பின்மையால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்துள்ளதாம். இதனால் இறப்போரின் எண்ணிக்கையானது, உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளதாம். உடல் உழைப்பின்னமையால் ஏற்படும் உடல் பருமன், தோள்பட்டை, கழுத்து ஆகிய பகுதிகளில் ஏற்படும் வலி ஆகியவற்றால் பலர் இறக்கும் நிலை ஏற்படுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கு கூறப்படவை சில நோய்கள் பற்றியே. புள்ளிவிவரத்துக்கு ஏது எல்லை?

இந்த புள்ளிவிவரங்கள் நம்மை அச்சுறுத்துகின்றன. ஒவ்வொரு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்பட ஆண்டில் ஒவ்வொரு நாளை ஒதுக்கி பலவித பிரசாரங்களை மேற்கொள்கிறோம். அந்த நாளில் மட்டும் அந்த குறிப்பிட்ட நோய் குறித்துப் பேசுகிறோம். விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறுகிறோம். சிலர் விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். அவ்வளவே.
உடல் நலம் குறித்த விழிப்புணர்வு முன்காலத்தைவிட அதிகரித்திருப்பதுபோல தோற்றம் இருந்தாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைச் செயல்படுத்தும் வகையில் நம்மை மாற்றிக் கொள்ளவில்லை என்றே கூற வேண்டும்.

நவீன கால ஜீவிதம் நம் உடல் ஆரோக்கியத்தை பலி வாங்கி வருகிறது என்று ஆழமாக உணர்ந்து, நம் அன்றாட வாழ்வியலை மாற்றிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. அந்த சிந்தனை மாற்றம் ஏற்படுமா?
Education
The state government is likely to seek amendments on two specific orders of the Madras High Court.


 Nearly a year after the Madras High Court ordered changes to postgraduate medical admissions in the state, the Tamil Nadu government is all set to move the Supreme Court for amendments.
According to the Times of India, the state government is likely to seek amendments on two specific orders of the high court. In May 2017, the Madras High Court had scrapped the policy of reserving 50% of the seats for in-service government doctors. Additionally, the court ruled that incentive marks for government doctors can only be awarded based on Medical Council of India (MCI) rules.

As per the report, the Tamil Nadu Health Minister said that the government would urge the apex court to “direct the Medical Council of India to amend rules for postgraduate admissions so that the state can use its traditional methods of incentives while admitting students.”

In February, the MCI increased Tamil Nadu’s share of postgraduate seats by 101, taking it to 1189. According to TNIE, this is applicable to government-run medical colleges in the state. The increased seats would come into effect in this academic year (2018-19).

Last year’s merit list for postgraduate admissions was scrapped by the Madras HC since the government had listed all public healthcare centres in the state as being in rural areas. The government had done this to incentivise in-service government doctors to take up posting in remote, rural areas. However, this meant that over 90% of the admissions were filled by government doctors.

According to ToI, a representation of doctors from Doctors’ Association for Social Equality met with the Union Health Minister JP Nadda requesting Tamil Nadu to be exempt from NEET. The National Eligibility cum Entrance Test has been a contentious issue in the state. 
Plea to quash Medical Council of India notification on recruitment of Senior Resident

By Express News Service | Published: 10th April 2018 05:17 AM |

CHENNAI: A PIL petition has been filed in the Madras High Court to quash a notification dated June 5, 2017, of the Medical Council of India (MCI), making MD/MS degree-holders also eligible for the Senior Resident post in the broad specialty as well as super-specialty categories.The First Bench of Chief Justice Indira Banerjee and Justice Abdul Quddhose, before which the PIL from Dr G Jaysia of Kalappa Naicken Patti village in Namakkal came up for hearing on Monday, ordered notice returnable by Friday (April 13).

According to the petitioner, who has completed the diploma course in Medical Radiology Diagnosis and is presently working as Senior Resident in Radio Diagnosis in the Government Mohan Kumaramangalam Medical College and Hospital, the MCI notification, making the MS and MD degree-holders also eligible for promotion as Senior Residents, is illegal and totally ultra vires of the Constitution.

It would completely wipe out the promotional opportunities of doctors holding diplomas to become Senior Residents. Various promotional avenues are open for the MS/MD degree-holders, whereas for the diploma-holders the only avenue is the post of Senior Resident, the petitioner said.

MCI NOTIFICATION



NEWS TODAY 21.12.2025