Saturday, April 28, 2018

Ministry of Health and Family Welfare

NEET PG and NEET SS cut off percentile reduced by 15%; about 18000 students to be benefitted

Significant step towards strengthening medical sector: J P Nadda

Posted On: 27 APR 2018 1:21PM by PIB Delhi 
 
The Ministry of Health and Family Welfare has reduced the NEET PG and NEET SS cut off percentile by 15%. The decision is likely to benefit about 18000 students as this will improve the chances of filling up PG seats and minimizing wastage of seats. 

Referring to the decision, Shri J P Nadda, Union Minister of Health and Family Welfare stated that all efforts are being made to fill up the PG seats. “This is a significant step towards strengthening medical sector and indicates the priority given by the government to the health sector. We are making sure that there is adequate manpower for providing quality health services,” Shri Nadda added.

***
MV/SK

மனசு போல வாழ்க்கை 35: மன நலம் காக்கும் மருந்து எது?

Published : 24 Nov 2015 12:23 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்





“வாழ்க்கை வெறுத்து விட்டது. வாழ்வதில் எந்தப் பயனும் தெரியவில்லை. எதுவும் மாறும் என்ற நம்பிக்கை இல்லை. எந்தப் பிடிமானமும் தெரியவில்லை. சாவதைப் பற்றி யோசிக்கிறேன்.”

இப்படி எண்ணுவோர் எண்ணிக்கை பெருகிவருவது கவலை அளிக்கிறது. வாழ்வில் நம்பிக்கை இழந்து, பிடிமானம் தெரியாமல், ஒரு விளிம்பு நிலையில் மக்கள் யோசிப்பது பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரத்தின் பின்விளைவு என்றும் சொல்லலாம். பொருட்களின் மதிப்பு உயர்ந்தும் மனிதர்களின் மதிப்பு குறைந்தும் ஒரு அசுர வேகத்தில் பொருட் குவிப்பில் மக்கள் ஓடுவதில் முதலில் நசுங்கிப்போவது மனித உறவுகளே. இல்லாமையில் வாழும் மக்கள் கூட்டங்கள் மரணத்தை யோசிப்பதில்லை. சாலையில் தூங்கும் மனிதர்கள் கூட நாளையைப் பற்றிய நம்பிக்கையில்தான் ஆழ்ந்து உறங்குகிறார்கள். பொருள் வசதியும் தனிமையும் கொண்டோர்தான் அதிகம் மரணம் பற்றி யோசிக்கிறார்கள்.

துக்கமும் மனமும்

தற்கொலைக்குப் பல காரணங்கள். துக்க நோய், மனச்சிதைவு, ஆளுமைக் குறைபாடுகள் போன்ற மனநோய்கள், குடி, போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், குடும்பப் பிரச்சினைகள் என நிறைய உள்ளன. ஆனால் இந்த சமூகக் காரணிகளில் நகர வாழ்வின் அன்னியத்தன்மை கொண்ட வாழ்முறை முக்கியமானது.

சமூக உறவுகள் இற்றுப்போய், குடும்ப உறவுகளிலும் இடைவெளி வந்து, வேலை சார்ந்த உறவுகள் இயந்திரகதியாக இயங்கும்போது, துக்கப்படும் மனம் பிடிமானம் இன்றி தவிக்கிறது.

இருத்தலியல் தத்துவத்தின் படி வாழ்க்கைக்கு என்று பெரிய அர்த்தமில்லை. நாம்தான் அதற்கு அர்த்தம் கொடுக்கிறோம். வாழ்வில் சலிப்புத்தன்மை வரும்போது குறிக்கோள் இல்லாமல் திரியும் மனம். வாழ்க்கையின் சகலத்தையும் துப்பிவிட்டு எங்காவது போகலாம் என்று தோன்றும். இதைக் குமட்டல் என்று சொல்வார்கள் இருத்தலியல் தத்துவத்தின் ஆதரவாளர்கள்.

எழுத்தாளர் அம்பை ‘வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை’ என்ற சிறுகதையில் அந்த மார்வாடிப் பெண் தான் வாழ்க்கை முழுவதும் எத்தனை ரொட்டிகள் சுட்டிருப்போம் என்று கணக்கிடுவார். அது போல நம் வாழ்க்கை கூட இயந்திர கதியாக, அர்த்தம் இல்லாமல் தோன்றும்.

கொடுப்பதுதான் மருந்து

“நான் வாழ்ந்து யாருக்கு என்ன லாபம்?” என்று கேட்போர் உண்டு. வேலை, குடும்பப் பொறுப்புகள் முடிந்துவிட்டால் அடுத்து என்ன செய்ய என்று தெரியாத பல பெரியவர்களைப் பார்க்கிறோம். எந்த வயதிலும் வாழ்க்கை அசதியாகவும் அர்த்தமில்லாததாகவும் தோன்றலாம்.

ஆனால் மனித வாழ்க்கை எவ்வளவு மகத்தானது? பல லட்சம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் நமக்குக் கிடைத்த அற்புத வாய்ப்பு. நம் உடலும் மனமும் கொண்டுள்ள சக்தி தான் மனித இனத்தை இந்த உலகத்தின் தலைமையாக ஆக்கி உள்ளது.

நம்மால் என்ன செய்ய முடியாது? மனம் நினைக்கின்ற அனைத்தையும் செய்து முடிக்க வல்லவர்கள் நாம்.

‘‘என்னவெல்லாம் இல்லை என்னிடம்’’ என்று பட்டியல் இடுவதற்குப் பதில் ‘‘என்னவெல்லாம் என்னிடம் இருக்கிறது’’ என்று பட்டியல் போட்டால் அது வாழ்க்கையின் கண்ணோட்டத்தையே மாற்றிவிடும்.

உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்க ஒன்று செய்யலாம். உங்களால் பிறருக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோசியுங்கள். கொடுப்பது தான் மன நலத்தைக் காக்கும் பெருமருந்து.

சோகத்தை ஒழிக்கும் வழி

என்ன கொடுக்கலாம்? ஒவ்வொருவரிடமும் கொடுக்க நிறைய உள்ளது. பெரிதாகப் பணம் இருக்க வேண்டும் என்று அவசியமே இல்லை.

பார்வையற்றவருக்குப் படித்துக் காட்டுங்கள். உங்கள் பணியாளர் குழந்தைகளுக்குப் பாடம் எடுங்கள். உறுப்பு தானம் செய்யலாம். நீங்கள் பயன்படுத்தாத பல பொருட்களை நல்ல நிலையில் இல்லாதவருக்குக் கொடுக்கலாம். ஆலயத்தைச் சுத்தப்படுத்தலாம். முதியோர் இல்லத்தில் சென்று அவர்களுடன் அன்பு பாராட்ட. தேர்வுப் பணம் கட்ட முடியாதவருக்குப் பணம் கட்டலாம். மனம் சோர்ந்தவர்களிடம் உற்சாக வார்த்தைகள் பேசலாம். ஆலோசனை சொல்லலாம்.

வசதி உள்ளவர்கள் சேவை மனப்பான்மை கொண்டவர்களுக்கு நிறைய செய்யலாம். கொடுப்பது என்பது தான் முக்கியம். யாருக்கு எதைக் கொடுப்பது என்பது அவரவர் தேர்வுகள்.

கொடுப்பது துக்க நிலையை மாற்றும். துக்கம் சுய நலமான உணர்வு. எனக்கு இது இல்லையே என்ற சுய பரிதாபம் தரும் சோகம் தான் துக்கத்தில் பிரதான பகுதி. தன் மேலுள்ள சிந்தனையை மாற்றப் பிறருக்கு உதவ ஆரம்பியுங்கள். துக்கம் விலகும். புதிய நம்பிக்கைகள் பிறக்கும். பல பிடிமானங்கள் வாழ்க்கையில் உள்ளது தெரியும்.

சொந்த வாழ்வில் சோகங்கள் இல்லாதவர்கள் யார்? ஆனால் பிறரின் சோகத்தைத் துடைக்கத் துணிகையில் சொந்த சோகம் இடம் தெரியாமல் போகும்.

எல்லா உலகத் தலைவர்களும் இதை உணர்ந்தவர்கள் தான். டால்ஸ்டாய் மோசமான தாம்பத்திய வாழ்க்கையை அனுபவித்தவர். ஆனால் இலக்கியம் அவரை இளைப்பாற்றியது. தேசத்துக்கே பிதாவான காந்திஜியின் புதல்வர் ஹரிலால். அவருக்கும் காந்திக்கும் ஒரே மோதலும் முரண்பாடும்தான். ஆனால் தேசப்பணி காந்திஜியைச் சோகத்தில் ஆழ்ந்து விடாமல் பார்த்துக் கொண்டது.

தற்கொலை தீர்வா?

படிப்பில்லை. பணமில்லை. சொந்த பந்த ஆதரவில்லை. பிள்ளைகள் சரியில்லை. நோய்கள். பணியில் பிரச்சினைகள். யாருக்குத் தான் சோகமில்லை? ஆனால் மரணம் அதற்குத் தீர்வில்லை. தற்கொலை செய்தவரின் குடும்பம் எத்தனை காலம் அந்த ரணத்தைச் சுமக்க வேண்டியிருக்கும்?

வாழ்க்கையில் நம்பிக்கைகள் முக்கியம். நமக்கேற்ற பிடிமானங்களைத் தேர்வு செய்து கொள்வது மிக முக்கியம். அது மதமோ, விளையாட்டோ, அரசியலோ, சினிமாவோ, இலக்கியமோ, சமூகச் சேவையோ, வேலையோ ..ஏதோ ஒன்று இருக்கட்டும்.

வாழ்வின் இன்பங்கள் விரைவில் திகட்டி விடும். துக்கங்கள் என்றும் தொடர்ந்து வரும். ஆனால், வாழ்வில் நாம் வைத்துள்ள குறிக்கோள் நம்மைச் சீராக இயக்கிச் செல்லும். சொந்த வாழ்வின் சோகங்களையும் புறந்தள்ள வைக்கும்.

உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்று யோசியுங்களேன்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

''என் வருமானம் குதிரைக்குக் கொள்ளு வாங்கக்கூட பத்தலை!" - கரூரின் கடைசி குதிரைவண்டிக்காரர்

துரை.வேம்பையன்
RAJAMURUGAN N  28.04.2018

''எவ்வளவுதான் விதவிதமான கார், பஸ், வேன்னு ஆயிரத்தெட்டு வாகனங்கள் வரட்டுமே. குதிரைவண்டியில போற, வர்ற சுகமே அலாதியானது தம்பி. இதைச் சொல்லிதான் என் வண்டியில் மக்கள் ஏறி பயணம் போவாங்க. அதெல்லாம் அந்தக் காலம். ஆனா, இன்னிக்கு எங்களைச் சீந்த நாதியில்லை. இருபது வருஷங்களுக்கு முன்னாடி முந்நூறு குதிரைவண்டிகள் கரூர் பஸ் ஸ்டாண்டுகிட்ட நின்னு, 'தொழில்' பார்த்துச்சு. இன்னிக்கு நான் மட்டும் சொத்தக் குதிரையை வெச்சுக்கிட்டு, 'பொழப்பு' நடத்திக்கிட்டிருக்கேன். குதிரைவண்டி மூலமா கிடைக்கும் என் தின வருமானத்துல, குதிரைக்குக் கொள்ளு வாங்ககூட பத்தலை" என்று தனது குதிரைவண்டியில் கட்டிய ஹார்னில், 'நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால்...' என்று எம்.ஜி.ஆர் பாடலைச் சத்தமாக ஒலிக்க, அந்தச் சத்தத்தை சற்று குறைத்துவிட்டு தனது சோகக்கதையை ஆரம்பிக்கிறார் கிருஷ்ணசாமி.

கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவுக்காக இவரது குதிரைவண்டியில் வாசகங்கள் எழுதப்பட்டு, கரூர் முழுக்க விழிப்புஉணர்வு செய்யப்படுகிறது. மதிய சாப்பாட்டுக்காக கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வண்டியை ஓரங்கட்டியவரைச் சந்தித்துப் பேசினோம்.

''எனக்குச் சொந்த ஊர் சணப்பிரட்டி. எனக்கு ரெண்டு பையன், ஒரு பொண்ணு. எல்லோரையும் இந்தக் குதிரைவண்டி வருமானத்துலதான் ஆளாக்கி, ஊரோட கண்ணடையற அளவுக்குக் கல்யாணமும் பண்ணிவெச்சேன். இப்ப அவங்க பிள்ளைங்க, என்னையும் என் மனைவியையும் தனியா தவிக்கவிட்டுட்டு, தனிக்குடித்தனம் போயிட்டாங்க. குதிரை இருக்கு, வண்டி இருக்கு, உழைக்க உடம்புல தெம்பு இருக்குன்னு நம்பிக்கையா இருந்தேன். ஆனா, குதிரைவண்டியில ஏறி எனக்கு வருமானம் தர ஆள் இல்லை தம்பி. எனக்கு உடம்புல சர்க்கரை, பிரஷர், மூச்சிரைப்பு எல்லாம் இருக்கு. அதுக்கு வைத்தியம் பார்த்து சரிபண்ண காசு இல்லை.

குதிரைவண்டியில் குந்தி எங்கப்பா பார்த்த இந்தத் தொழிலை, என் அஞ்சு வயசுல தொடங்கினேன். இன்னிக்கு எனக்கு 67 வயசு. இத்தனை நாளும் இந்தக் குதிரைவண்டியை நம்பியே காலத்தை ஓட்டிட்டேன். இனி என்ன மாத்து வேலை பார்க்க முடியும்? தினமும் கிடைக்கிற 100, 200 வருமானத்துக்காக இந்தக் குதிரைவண்டியை ஓட்டுற பொழப்பைப் பார்க்கிறேன்.

காமராஜர் அய்யா காலத்துல இந்தத் தொழில் எப்படி இருக்கும் தெரியுமா? அப்போ, ஒண்ணும் ரெண்டு பஸ்கள்தான் இருக்கும். அதனால், குதிரைவண்டி, மாட்டுவண்டிகளுக்குதான் மவுசு. கரூர் பஸ் ஸ்டாண்டுகிட்ட 300 குதிரைவண்டிகளும், 200 மாட்டுவண்டிகளும் 'கிராக்கி'களுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கும். வேலாயுதம்பாளையம், உப்பிடமங்கலம், க.பரமத்தின்னு 20 கிலோமீட்டர் வரை சவாரி போவோம். 50 ரூபா அன்னிக்கு நாள் வருமானம். குதிரைக்குத் தீனி 5 ரூபா செலவாவும். மீதி எல்லாம் வருமானம்தான்.



அப்போ 50 ரூபாய்ங்கிறது இப்போதைய சில ஆயிரங்களுக்குச் சமம். நினைச்சபடி வாழ்ந்தேன். அப்புறம், எண்பதுகள்ல குதிரைவண்டியில பயணம் போறவங்க குறைய ஆரம்பிச்சாங்க. இருந்தாலும், அப்போ சாராயக்கடை முக்குக்குமுக்கு இருந்துச்சு. 'ஒண்ணாம் நம்பர் கடைக்கு விடுண்ணே', 'ரெண்டாம் நம்பர் கடைக்குக் குதிரையைப் பத்துண்ணே'ன்னு குடிகாரங்க சவாரி வருவாங்க. கேட்கிற கூலியைவிட அதிகம் கொடுப்பாங்க.

2000-ம் வருடம் வரை எங்க தொழில் நல்லாதான் இருந்துச்சு. அதுக்குப் பிறகு, வருஷத்துக்கு இருபது வண்டிகள்னு குறைய ஆரம்பிச்சு, கடந்த ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடிகூட இருபது வண்டிகள் இருந்துச்சு. அதுவும் படிப்படியா குறைஞ்சு, ஒரு மாசத்துக்கு முன்னால என்கூட மனோகரன்னு ஒருத்தன் குதிரைவண்டி சவாரி போனான். அவனும் இப்போ வண்டியை ஓட்டுறதில்லை. நான் மட்டுமே ஒட்டடை படிஞ்ச சித்திரமா இந்தக் குதிரைவண்டி ஓட்டும் தொழிலை விடாம கட்டிட்டு அழுவுறேன்.

கார், பைக்னு வீட்டுக்கு வீடு வாகனம் இருக்கு. அதெல்லாம்கூட, எங்க தொழிலை பாதிக்கலை. இந்த மினி பஸ்களும், ஷேர் ஆட்டோக்களும் வந்துதான் சந்துபொந்துக்குள்ள எல்லாம் போய், எங்க பொழப்புல வண்டி வண்டியா மண்ணை அள்ளிப் போட்டுட்டாங்க. குதிரைவண்டியில பயணிகள் பயணிக்கிறது ஒழிஞ்சாலும், மார்க்கெட்களுக்கு, கடைகளுக்கு, வீடுகளுக்குப் பொருள்களை ஏத்திட்டு போற சவாரியாச்சும் கிடைச்சுது. லோடு ஆட்டோக்களும், குட்டியானை வண்டியும் திடுதிப்புன்னு கிளம்பி வந்து அதுக்கும் கள்ளிப்பால் ஊத்திடுச்சு.

இது பெண் குதிரை தம்பி. செல்லம்மாள்னு பெயர் வெச்சு செல்லமா வளர்க்கிறேன். நான் சாப்பிட்டாதான் இது சாப்பிடும். பில்லு கட்டு ஒண்ணு 70 ரூபா விற்குது. கொள்ளு ஒரு கிலோ 66 ரூபாய். குறைந்தபட்சம் குதிரைக்குத் தினமும் உணவுக்கு 200 ரூபாய் ஆவுது. ஆனா, எனக்கு ஒருநாள் அதிகப்பட்ச வருமானமே 200 ரூபாய்தான். அதையும் நான் சம்பாதிக்கிறதுக்குக் கால்ல கையில விழுந்து பயணிகளைப் பிடிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துபோயிடும். சில நாள் 50 ரூபாக்கூட தேறாது. வட்டிக்குக் கடன் வாங்கியே காலம் ஓடுது.



குதிரைக்குத் தீனி வாங்க முடியாத நாள்ல நானும் என் மனைவியும் சாப்பிடாம, வயித்துல துணியைக் கட்டிக்கிட்டு படுத்திருவோம். செல்லம்மாள் ராத்திரி முச்சூடும் பசியில கத்திக்கிட்டே இருக்கும். எங்களுக்குப் பொட்டுத்தூக்கம் வராது. இந்த வாழ்க்கையை எண்ணி, பினாத்திக்கிட்டே படுத்திருப்போம். 'எப்படி இருந்த குதிரைவண்டி தொழில், வளர்ச்சிங்கிற பேர்ல இப்படி நொட்டானாயிட்டேன்'னு உள்ளுக்குள்ள புழுங்கிப்போறேன் தம்பி. இந்த ஒரு மாசம் சுத்தமா சவாரி கிடைக்கலை. 10,000 ரூபாய் வட்டிக்கு வாங்கித்தான் எங்க ஜீவனமும் குதிரை ஜீவனமும் நடக்குது.

ஏதோ, புண்ணியம் எந்த வருஷமும் இல்லாத அதிசயமா இந்த அலுவலகத்திலிருந்து ஒரு வாரம் கரூர் நகரம் முழுக்க இப்படி விழிப்புஉணர்வு பண்ண 'பொழப்பு' கொடுத்திருக்காங்க. அதனால, கர்ப்பமா இருக்கிற செல்லாம்மாளைத் தட்டிக்கொடுத்து, அதுக்காகவும் எங்களுக்காகவும் சவாரி ஓட்டுறேன். ஒண்ணு... எங்க உசிரு போகணும். இல்லைன்னா, செல்லம்மாள் காலம் முடியணும். அதுவரைக்கும் கரூர் பஸ்ஸ்டாண்டுல நானும் என் செல்லம்மாளும் சேர்ந்து 'பொழப்பு' பார்த்துக்கிட்டே இருப்போம். அது சவாரி கிடைச்சாலும் சரி, கிடைக்கலைன்னாலும் சரி" என்றபோது, அவரது கண்கள் குளம் கட்டின. குதிரை செல்லம்மாள், தன் பங்குக்குக் கனைத்து அதை ஆமோதிக்கிறது.

'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா... நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா...' என்று ஹார்னில் மறுபடியும் பாடல் ஒலிக்க, இன்னல்களைச் சுமந்தபடி கரூர் நகரச் சாலையில் பயணிக்கத் தொடங்குகிறார்கள் கிருஷ்ணசாமியும் செல்லம்மாளும்!





நமக்கோ அந்தக் காட்சி, பெரும் சோகம் ஒன்று உருண்டு ஓடுவதாகத் தோன்றிற்று!
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற திருத்தேர் பவனி!
மா.அருந்ததி
செ.ராபர்ட்

திருக்கடையூரில் எழுந்தருளி இருக்கும் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நேற்று (27.4.18) திருத்தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



தரங்கம்பாடி, திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் ஆலயம் தருமபுரம் ஆதீனத்துக்கு உரியது. இக்கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்றது. இவ்வாலயம் அகத்தியர், புலஸ்தியர், துர்கை, வாசுகி முதலானோரால் வழிபாடு செய்யப்பட்ட தலமாகும். புகழ்பெற்ற அபிராமி அம்மன் எழுந்தருளியுள்ள பிரசித்தமான தலமும் இது தான். இந்த ஆலயத்தில் சித்திரைத் திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி நேற்று காலை தொடங்கியது. மலர்களாலும், சிவ சின்னங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமிர்தகடேஸ்வரர் எழுந்தருளினார். காலை 7 மணிக்குத் தொடங்கிய தேர் பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரினை இழுத்துச் சென்றனர். தேர் பக்தர்களின் "சிவசிவ" முழக்கத்துடன் கோயிலின் வீதிகளை வலம் வந்தது. இவ்விழாவினை முன்னிட்டு இன்று கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.





இவ்வாலய சிவபெருமான் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்துத் தள்ளி, அவரிடமிருந்து காப்பாற்றி மார்கண்டேயரின் ஆயுளை அதிகரிக்க செய்ததால் இக்கோயில் மணிவிழா, பவள விழா, சதாபிஷேகம் ஆகியவற்றுக்குப் புகழ்பெற்றது. இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் இங்கு ஏராளமான மணிவிழா, பவளவிழா திருமணங்கள் நடைபெற்றன. காலை 7 மணிக்கு தொடங்கிய தேர் பவனி கோயிலின் வீதிகளை வலம் வந்து நண்பகல் 12 மணியளவில் கோயிலின் வாசலில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் பிறகு ஆலயத்தில் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அமிர்தகடேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
''குழந்தைகளைக் காப்பாற்றிய மருத்துவர் கஃபில்கான் குற்றமற்றவர்!'' -அலகாபாத் உயர்நீதிமன்றம்
எம்.குமரேசன்


உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் இறந்தன. அப்போது, பணியில் இருந்த டாக்டர் கஃபீல்கான் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வரவழைத்து சில குழந்தைகளை காப்பாற்றினார். ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு சொந்த பணத்தையே கஃபீல்கான் கொடுத்தார். இக்கட்டான சூழலில் முடிந்த வரை மருத்துவ சேவையாற்றிய அவரை யோகி ஆதித்யநாத் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த 7 மாத காலமாக அவர் சிறையில் இருந்து வருகிறார். ஜாமீனுக்கு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை.



தொடர்ந்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு விண்ணப்பித்தார். ஏப்ரல் 25- ந் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பு மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி. ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கும் கஃபீல்கானுக்கும் எந்த வர்த்தகத் தொடர்பும் இல்லை. குழந்தைகள் இறப்புக்கு கஃபீல்கான்தான் காரணம் என்பதற்கும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. மருத்துவ பணியில் அலட்சியமாக நடந்து கொள்ளவில்லை. இதற்கு முன், எந்த குற்றச்சாட்டுகளும் கூட அவர் மீது இல்லாத நிலையில் சாட்சிகளை மிரட்டக் கூடும் என்பதையும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை' என்று உத்தரவிட்டு கஃபீல்கானுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உறுதி செய்தார்.



சிறையில் இருந்த கஃபீல்கான், ''உத்தரபிரதேச அரசின் தோல்விக்கு தன்னை பலிகடா ஆக்குவதாகவும் தன் குடும்பத்தினரின் உயிருக்கு உத்திரவாதம் இலலை '' என்று ஒரு கடிதம் எழுதியிருந்தார் . டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த கஃபீல்கானின் மனைவி, அந்த கடிதத்தை செய்தியாளர்களுக்கு விநியோகம் செய்தார். செய்தியாளர் சந்திப்பின் போது, சிறையில் கஃபீல்கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கூட மறுக்கப்படுவதாக அவரின் மனைவி குற்றம்சாட்டினார். இதையடுத்து, கோரக்பூர் சிறை நிர்வாகம் அவருக்கு மருத்துவ சிகிச்சை பெற அனுமதியளித்தது.
என் இஷ்டப்படி தான் நீங்க நடக்கணும்’ - நர்சிங் மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை... 

நவீன் இளங்கோவன்

ரமேஷ் கந்தசாமி


Erode:

ஈரோட்டில் தனியார் நர்சிங் பயிற்சி நிறுவனம் ஒன்றில் படிக்கும் மாணவிகள், அந்தக் கல்லூரி முதல்வர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு காந்தி ஜி ரோட்டில் ‘அமானுல்லா ஸ்கூல் ஆஃப் நர்சிங்’ என்ற தனியார் நர்சிங் பயிற்சி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் திருவாரூர், பரமக்குடி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 30 மாணவிகள் நர்சிங் பட்டயப் படித்து வருகின்றனர்.



இதில், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகளை 6 மாதம் படிப்பு, 6 மாதம் ஏதாவதொரு தனியார் மருத்துவமனைகளில் பயிற்சிக்கு என அனுப்புவது வழக்கம். அந்தவகையில், மூன்றாம் ஆண்டு படிக்கும் 7 மாணவிகளை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நர்சிங் பயிற்சிக்காக அனுப்பியிருக்கின்றனர். பயிற்சியில் ஈடுபடும் மாணவிகளுக்கு தனியார் மருத்துவமனை கொடுக்கும் சம்பளத்தில் பாதியை, நர்சிங் பயிற்சி நிறுவனம் எடுத்துக்கொண்டு மீதத்தை மாணவிகளுக்கு வழங்குவதாக சொல்லியிருக்கின்றனர்.



அப்படியிருக்க, கடந்த 2017 -அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை பயிற்சியில் உள்ள மாணவிகள் யாருக்குமே நர்சிங் பயிற்சி நிறுவனம் சம்பளத்தை கொடுக்கவில்லையாம். இதுகுறித்து பலமுறை மாணவிகள், பயிற்சி நிறுவன முதல்வரிடம் கேட்கையில், பல்வேறு காரணங்களைச் சொல்லி மிரட்டியிருக்கிறார்



இதுகுறித்து பாதிக்கப்பட்ட நூர்ஜகான் என்ற மாணவி கூறுகையில், “கடந்த 6 மாதங்களாக தனியார் மருத்துவமனையில் பயிற்சி செய்து வருகிறோம். ஆனால், இதுவரை எங்களுக்கு சம்பளம் முறையாக தரப்படவில்லை. வருகைப்பதிவு குறைந்ததால் அதற்காக சம்பளத்தை பிடித்துக் கொண்டோம் என பதில் சொல்கிறார்கள். ஜூலை மாதத்தோடு எங்களுடைய படிப்பு முடிகிறது. ஆனால், படிப்பு முடிந்தாலும் அடுத்த 6 மாதத்திற்கு பயிற்சியை தொடர வேண்டும் என பயிற்சி நிறுவன முதல்வர் கட்டாயப்படுத்துகிறார். ஏதாவது எதிர்த்துக் கேள்வி கேட்டால், ‘எங்க இஷ்டப்படி தான் நீங்க நடக்கணும். இல்லாட்டி நீங்க பரீட்சை எழுத முடியாது’ன்னு மிரட்டுறாங்க. பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பத்மப்ரியா அவர்கள், மாணவிகளை கை, கால்களை அமுக்கச் சொல்லி தொந்தரவு செய்வதும், வகுப்பு நேரங்களில் வகுப்பறையிலேயே படித்துத் தூங்குவதுமாக செயல்களில் ஈடுபட்டு வருகிறார்”என்று குற்றம் சாட்டினார்.
HC paves way for return of money to Iranian students 

Special Correspondent 

 
CHENNAI, April 28, 2018 00:00 IST

Varsity refused to approve admission as they didn’t clear NEET

The Madras High Court has come to the rescue of 15 Iranian students who were admitted to BDS courses at a private dental college here but were not allowed to continue the course since the Tamil Nadu Dr. MGR Medical University refused to approve their admission for not having cleared the National Eligibity-cum-Entrance Test (NEET).

Justice P.N. Prakash directed Asan Memorial Dental College here to draw a Demand Draft for the admitted amount of Rs. 47.90 lakh in favour of the Consulate General of the Islamic Republic of Iran and produce the DD before the court on June 11 so that the amount could be handed over to the consulate and distributed to the students through it.

The order was passed in the presence of the Consul General Mohammad Haghbin Ghomi and the consulate’s Public Relations Officer Syed Tamjeed Hyder, who flew down to Chennai at the request of the judge and agreed to make sure that the money reached 13 students who had returned to Iran due to expiry of their visa.

The judge pointed out the issue came to light only when Nasser Hamidavi Zegheiri, one of the students, lodged a complaint with the police accusing the management of having taken Rs. 25 lakh for giving admission to the BDS course, but refusing to return the same even after he was discharged from the course by the medical university.

Senior Counsel P.R. Raman, representing the college, denied the allegations and contended that the college had taken only tuition fees from 14 Iranian students and stated that it was ready to pay back that money to those students.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...