Tuesday, May 1, 2018


Boys from TN bag 21st, 27th nationwide JEE Main ranks

TIMES NEWS NETWORK

Chennai: 01.05.2018


While students from the neighbouring Andhra Pradesh and Telangana dominated the Joint EntranceTest (Main) 2018 topper’s list, those from Tamil Nadu were notably absent from the top 20.

Aniswar Srinivatsa Krishnan, a CBSE student from Chennai secured the 21st rank, scoring 335 of 360 in the national-level test for admission to NITs, IIITs, centrally-funded technical institutes and other leading private educational institutions. Those seeking admission in IITs must clear the next level of tests, JEE (Advanced).

Another city CBSE student R Raghu Raman from Adyar secured the 27th rank at the national level and stood second in Tamil Nadu.

“Overall, performance of candidatesfrom TamilNadu, particularly mediocre students, in this year’s JEE Main was not good as many found the mathematics and chemistry papers tough,” said B Pavan Kumar, director of FIITJEE, a prominent private training centre with centres across the state.

The minimum cutoff required for candidates to appear for JEE Advanced has also dropped significantly for the second time in a row. Candidates belonging to the general category become eligible for the next round only if they scored 100 or above in JEE Main in 2016. This came down to 81 in 2017 and 74 this year.

Similarly cutoffs for Other Backward Caste (Non-Creamy Layer), Scheduled Caste and Scheduled Tribe students has come down from 49,32 and27 respectively in 2017 to 45, 29 and 24 respectively this year.

Speaking to TOI, Krishnan, who underwent training at FIITJEE for two years, attributed his high scores to the continuous mock tests he undertook.

Even the state topper found the chemistry paper difficult. “I secured 120 in the other two papers, but lost marks only in Chemistry, as the questions were extremely tricky,” said Krishnan, a student of Devi Academy in Virugambakkam.

Hoping to enter IIT Madrasor IISCBangalore,hesaid that results caught him by surprise as he was expecting a rank of 100 or above.

The other topper, Raman from MaharishiVidhyaMandir said that he underwent special training programs right from Class VI and later attended an integrated course offered by his school in association with FIITJEE.

Of the 2.25 lakh who appeared for JEE Main, nearly 1.11 lakh have been declared eligible for JEE Advanced to be held in May, said an official release from Central Board of Secondary Education which conducted the exam in April. 




Aniswar Srivatsa Krishnan (top) and R Raghu Raman


Govt calls for applications for PG med courses

TIMES NEWS NETWORK

Chennai: 01.05.2018


After the National Boardof Examination (NBE) announced a revised cutoff for admission to PG courses, thestateselection committee secretary Dr G Selvarajan has called for eligible students, who have not yet applied, to submit their applications by May 3.

The revised percentile eligible candidates must have scored for admission to government medical colleges, state quota of self-financing colleges and Annamalai university general category is between 262 and 320, between 223 and 280 for SC/ST and OBC and between 244 and 299 for the physically challenged. For candidates seeking admission under management quota of self-financing colleges, the cutoff is between 262 and 320 for general category, 225 and 280 for SC/ST and OBC and 244 and 299 for the physically challenged.

For candidates seeking admission to PG dental courses in state-run dental college and Annamalai University, the revised percentile issued by the NBE is between 149 and 233 for the general category, between 115 and 203 for SC/ST/OBC and between 133 and 218 for the physically handicapped.

The revised percentilecutoff for MDS courses under management quota of self-financing dental colleges has been revised as between149 and 233 for general category, 155 and 203 for SC/ST/OBC and between 133 and 218 for the physically handicapped.

Candidates who are yet to apply can submit their downloaded applications with a demand draft for ₹5,000 drawn in favour or the secretary, selection committee, Kilpauk and hand it over in person to the secretary, selection committee, Chennai on or before 5pm on May 3.
Man cheats doctor couple of ₹73L, held

TIMES NEWS NETWORK

Chennai: 

 
01.05.2018


Central crime branch (CCB) police on Monday arrested a 57-year-old white collar offender, for cheating a doctor couple by promising to getthem a ₹50croreloan,for which he collected ₹73 lakh as commission, along with signed blank cheques from them.

Panneerselvam, found to be involved in more than 12 cheating cases, was remanded in judicial custody.

Police said, Dr V Kamaraja, a resident of Alwarthirunagar, and his ophthalmologist wife approached Panneerselvam through an agent seeking a loan of ₹50 crore to develop their farm near Sivakasi. Panneerselvam collected the said commission in instalments of ₹13 lakh and two ₹30 lakhs.

The doctors filed a complaint after hedemanded another ₹7 lakhs.Preliminary inquiries revealed that Panneerselvam posed himself close to political power centres in Delhi tothreaten his victims against preferring police complaints.
HC refuses to favour medico’s grace marks plea

Sureshkumar.K@timesgroup.com 01.05.2018

Chennai:

If ‘grace mark’ doctors perform surgeries, patients will have to get well only with the grace of god. So saying, the Madras high court has refused to direct Pondicherry University to grant grace marks to a medical student.

Justice S Vaidyanathan, ridiculing grace marks being awarded in medical courses, observed that citizens would be taken for a ride if such practices were allowed to be continued. If a person who is studying ophthalmology is allowed to clear his papers with grace marks, the patients will have to regain eyesight only with the grace of god, he said.

Justice Vaidyanathan made the observation while dismissing a plea movedby S Bharathi, a third year MBBS student of Sri Manakula Vinayagar Medical College and Hospital, Puducherry seeking direction to the Pondicherry University to grant grace marks to him.

The petitioner said she had cleared all papers in first and second years of the course. The third year consisted of three subjects - community medicine, ENT, and ophthalmology. She appeared for exams in June 2016 and cleared two papers except ophthalmology.

She appeared for the ophthalmology subject in November 2017 and failed again.

Though she secured minimum required score in the subject, she was declared fail for the reason that she did not fulfil the additional minimum requirement of 40% in the university theory exam.

She added that she has secured 29 marks in theory paper instead of required 32 and hence lacked just 3 marks to be declared pass. Pointing out that upto 5 grace marks can be granted to students as per university rules, she made a representation to the university to grant her three marks. Since the authorities failed to respond, she approached the high court.

NO TIME FOR MERCY

ஹெச்-4 விசா பணி அனுமதி ரத்து: என்ன செய்யப்போகிறார்கள் அமெரிக்க இந்தியர்கள்?

Published : 30 Apr 2018 11:40 IST

அகில் குமார்



தனியுடைமை என்று ஒன்று இல்லாத காலகட்டம் மனித வரலாற்றின் தொடக்கத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காக தனது வாழ்வியல் முறைகளை அன்றிலிருந்து படிப்படியாக மாற்றிக்கொண்டே வந்த மனிதன், இன்றைய நிலையில் இருக்கிறான். ஆனால் மகிழ்ச்சிக்கான தேடல்கள் இன்னமும் குறைந்தபாடில்லை.

சில பொருட்களுக்கான, விஷயங்களுக்கான தனியுடைமை என்பது மனிதனுக்கு தேவையான ஒன்றாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டாலும், எல்லாவற்றுக்கும் ஒருவர் தனியுடைமை கோர முடியாது. ஒருவருக்கு ஒன்றை அளித்தும், மற்றவரிடம் இருந்து இன்னொன்றைப் பெற்றும் உலகம் இயங்குவதுதான் உலகமயமாதலின், வேற்றுமையில் ஒற்றுமையின், மனித வாழ்வின் சாரமாக இருக்கிறது.


ஆனால் சமீபமாக தமிழக அளவிலும், இந்திய அளவிலும், உலக அளவிலும் நடந்துவரும் நிகழ்வுகளைப் பார்க்கிறபொழுது உலகமய சிந்தனைகளிலிருந்து விலகி தன் நாடு, தன் இனம், தன் மதம் என்பதை மட்டும் முதன்மைப்படுத்தும் நிலைக்கு மனிதர்கள் போய்கொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது.

சமீபத்தில் இப்படிப்பட்ட தூண்டுதல்களை அளித்துக்கொண்டிருப்பவர்களில் முதன்மையானவராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தேகமின்றிக் குறிப்பிடலாம். அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் பெற்ற வெற்றியே ‘ எல்லாம் அமெரிக்கர்களுக்கே’ என்ற குறுகிய மனப்பான்மையை எல்லோரிடமும் விதைக்க முடிந்ததற்கு கிடைத்த பலனாகத்தான் கருதவேண்டி இருக்கிறது.

ஆட்சிக்கு வந்ததும் முதல்வேலையாக அமெரிக்கா-மெக்சிகோ எல்லை அருகே பிரம்மாண்ட தடுப்புச்சுவர் அமைக்கப்படும், அதற்கான செலவை மெக்சிகோ ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார் ட்ரம்ப். செலவை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சொன்ன மெக்சிகோ அதிபர் நியடோவை அமெரிக்காவுக்கு வரக்கூடாது என்றார். அதனால் திட்டமிட்டிருந்த பயணத்தை மெக்சிகோ அதிபர் ரத்து செய்யவேண்டியதாயிற்று. அன்றிலிருந்து, ஆட்சிக்கு வந்து ஒன்றேகால் ஆண்டுகளைக் கடந்த பின்னும் ட்ரம்ப் நடவடிக்கைகளில் பெரிய மாற்றமில்லை. ச

மீபத்தில் ஸ்டீல் மற்றும் அலுமினியத்துக்கான இறக்குமதி வரியை பலமடங்கு உயர்த்தி உலக வர்த்தகத்தில் குழப்பம் ஏற்படுத்தினார். இந்தியாவை உற்றதோழன் என்று சொல்லிக்கோண்டே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவும் ட்ரம்ப் ஒருபோதும் தயங்குவதில்லை. சில தினங்களுக்கு முன்பு ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கப்போவதாக சொல்லியிருக்கிற நடவடிக்கை அமெரிக்காவில் இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஹெச்-1பி விசா பெற்றவர்களின் மனைவி அல்லது கணவன் அமெரிக்காவில் பணி செய்வதற்கு இருந்த சட்டபூர்வ உரிமையை ரத்து செய்யப் போவதாக சொல்லியிருக்கிறது ட்ரம்ப் நிர்வாகம். இதனால் பாதிக்கப்படப்போவது சுமார் 64,000 இந்தியர்கள்.

ஹெச்-4 விசா பணி அனுமதி திட்டம்

அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டினர் குறிப்பிட்ட காலம் பணிபுரிவதற்கான அனுமதியாக ஹெச்-1பி என்ற விசா அமெரிக்க அரசால் தரப்படுகிறது. ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவி (அல்லது கணவன்) மற்றும் குழந்தைகளுக்கு ஹெச்-4 என்ற விசா அளிக்கப்படுகிறது. இந்த ஹெச்-4 விசாவைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளைத் தொடங்கலாம், ஓட்டுநர் உரிமம் பெறலாம், குழந்தைகள் அமெரிக்கப் பள்ளிகளில் கல்வி பயிலலாம் . ஆனால் அமெரிக்காவில் எந்தப் பணியிலும் இவர்கள் சேர முடியாத நிலை இருந்தது.

பணியில் சேரவேண்டுமென்றால் ஹெச்-1பி விசா தேவை. இல்லையேல் ஹெச்-1பி விசா வைத்திருக்கும் கணவன் அல்லது மனைவி , நிரந்தர வசிப்பிடத் தகுதி எனப்படும் ‘கிரீன் கார்டு’ உடையவராக இருந்தால் அவரது கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் பணிசெய்யும் உரிமையைப் பெறமுடியும். ஆனால் இந்த கிரீன் கார்டை பெறுவதென்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.

இதனைப் பெறுவதற்கு ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குமேல் கூட ஆகலாம். எனவே ஹெச்-4 விசா வைத்திருப்பவர்களையும் பணி செய்ய அனுமதிக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்துவந்தது.

இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்த்த ஒபாமா அரசாங்கம் ஹெச்-4 விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பில் (யுஎஸ்ஐஎஸ்) ஐ-765 என்ற படிவத்தை பூர்த்தி செய்து பணி அனுமதி அட்டையை பெற்றுக்கொண்டால் அமெரிக்காவில் பணிபுரியலாம் என மே 26,2015-ல் சிறப்பு சட்டம் கொண்டுவந்தது. இப்போது இந்த சட்டத்தை ரத்து செய்யும் முடிவில் ட்ரம்ப் நிர்வாகம் இருப்பதாக அமெரிக்காவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் சக் கிராஸ்லேவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் யுஎஸ்ஐஎஸ் அமைப்பின் இயக்குநர் பிரான்சிஸ் சிஸ்னா.

பெண்களுக்கு அதிக பாதிப்பு

இந்த ஹெச்-4 விசா பணி அனுமதி திட்டம் மூலம் 71,287 பேர் பயனடைந்துள்ளதாகச் சொல்கிறது அமெரிக்காவின் மைக்ரேஷன் பாலிஸி இன்ஸ்டிடியூட் ஆய்வு. முக்கியமான தகவல் என்னவென்றால் இதில் 90 சதவீதம் பேர் இந்தியர்கள் (சுமார் 64,000 பேர்). ஹெச்-4 விசா மூலம் பயனடைந்தவர்களில் 94 சதவீதம் பேர் பெண்கள். இதில் இந்தியப் பெண்கள் மட்டும் சுமார் 62,000 பேர் ( 93 சதவீதம்). எனவே இது ஹெச்-4 விசா பற்றிய பிரச்சினை மட்டுமல்ல, பாலினம் சார்ந்த பிரச்சினையும்தான் என அமெரிக்காவின் நாடாளுமன்ற கீழவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய -அமெரிக்கப் பெண்ணும், ஹெச்-4 விசா பணி அனுமதிக்காக தொடர்ந்து குரல் எழுப்பியவருமான பிரமிளா ஜெயபால் கூறியிருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதேவேளையில் பாதிப்பு என்பதை ஹெச்-4 விசாவைப் பயன்படுத்தி பணிக்கு செல்லும் 70,000 பேருக்கான பாதிப்பு என்று சுருக்கிப் பார்க்கமுடியாது. ஒட்டுமொத்த சமூக அமைப்பிலும் இவை பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இருவர் வேலைக்கு செல்லும் குடும்பங்களின் பொருளாதார திட்டமிடல்களை இந்த அறிவிப்பு அதலபாதாளத்தில் தள்ளுகிறது. அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்ப இருக்கிற பணம், அமெரிக்காவில் பயிலும் இந்தியக் குழந்தைகளின் கல்வி போன்றவற்றிலும் இவை பாதிப்பை ஏற்படுத்த இருக்கிறது.

இதன் உச்சவிளைவாக அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் வெளியேறும் சூழல் உருவாகும். இந்த வெளியேற்றம் மூலம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அதே அளவுக்கு அமெரிக்க பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்பதை ட்ரம்ப் நிர்வாகம் உணர்ந்ததுபோல் தெரியவில்லை. அதிகபட்சமாக காக்னிசண்ட் நிறுவனம் முதல் குறைந்தபட்சம் ஃபேஸ்புக் நிறுவனம் வரை இந்தியர்களை ஹெச்-1பி விசா மூலம் வேலைக்கு அமர்த்தியிருக்கிறது.

ஹெச்-4 விசாவின் மூலம் பலர் அமெரிக்காவில் தொழில்முனைவோராக மாறி அமெரிக்க பொருளாதாரத்துக்கு பங்களித்துவருகிறார்கள். இதையெல்லாம் ட்ரம்ப் நிர்வாகம் கணக்கில்கொள்ளாமல் தங்கள் பொருளாதாரத்தை சிதைப்பதோடு மற்ற பொருளாதாரங்களையும் மறைமுகமாக சிதைக்க முயல்கிறது.

அதேவேளையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா முன்வைத்திருக்கும் ‘ஏன் அமெரிக்கர்களின் கணவன் அல்லது மனைவி இந்தியாவில் பணி செய்வதையும் ரத்து செய்யக்கூடாது’ என்ற கேள்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமற்றது. ஒப்பீட்டளவில் அமெரிக்கர்கள் இந்தியாவில் பணிசெய்வது குறைவு. எனவே சித்தராமையா கருத்தை கவனத்தில் கொள்ள தேவையில்லை. தவிர, ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று உலகம் களம் இறங்கினால் மீண்டும் கற்காலத்திற்குத்தான் செல்லவேண்டியிருக்கும்.

மறக்கக்கூடாத மறுபக்கம்

இப்போது இருப்பவர்களை அனுமதித்துவிட்டு இதற்குமேல் அனுமதி அளிக்காமல் இருக்கலாம் என்ற குரல்களும் எழுந்துள்ளன. இருப்பினும் இந்தியர்கள் இவ்வளவு அதிகபட்ச எண்ணிக்கையில் அமெரிக்காவை நாடிச் செல்வது ஏன், இந்தியாவின் உயர் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தரப்பட்ட தொழில்நுட்ப அறிவு பெரும்பாலும் அமெரிக்காவுக்கு தாரை வார்க்கப்படுவது ஏன் போன்றவற்றுக்கு விடைகாணவேண்டியதும் நீண்டகால தீர்வின் அடிப்படையில் முக்கியமானது.

ஹெச்-4 விசா மூலம் வேலை பெறுபவர்களின் குடும்பங்களில் ஏற்கெனவே ஒருவர் வேலைக்கு செல்வதால், ஹெச்-4 விசா மூலம் வேலை பெறுபவர்கள் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்குவர ஒப்புக்கொள்வதாகவும், அதனால் நிறுவனங்கள் இவர்களை வேலைக்கு எடுக்க முன்னுரிமை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஹெச்-1 பி விசா மூலம் வேலைக்கு செல்லும் மணமாகாதவர்கள் வேறு வேலைக்கு மாறுவதிலும், அப்படி மாறினாலும் அதிக சம்பளம் கிடைப்பதிலும் சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. நிறுவனங்களின் இந்த செயல்பாட்டின் மூலம் நேரடியாக பாதிக்கப்படுவது மணமாகாதவர்கள் என்றாலும், குறைந்த சம்பளம் பெறுவதின் மூலம் ஹெச்-4 விசா வைத்திருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படத்தான் செய்கிறது. இத்தகைய சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும் இப்போதைய நிலையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்திய அரசு தனது வலுவான குரலைப் பதிவு செய்யவேண்டியதும், இந்திய அமெரிக்கர்களின் நலனைக் காக்கவேண்டியதும்தான் உடனடி தேவையாகிறது.

-akhilkumar.a@thehindutamil.co.in
அரசு அனுமதியின்றி மருத்துவ படிப்புகள் : எம்.ஜி.ஆர்., பல்கலைக்கு தடை கோரி வழக்கு

Added : மே 01, 2018 02:11

சென்னை: மத்திய அரசு மற்றும் மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை நடத்தும் மருத்துவ படிப்புகளுக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன் முதல் வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.தமிழ்நாடு மருத்துவர்கள் நல சங்கத்தின் பொதுச்செயலர், டாக்டர் கே.சீனிவாசன் தாக்கல் செய்த மனு:

மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி பெறாமல், முதுநிலை மருத்துவ படிப்புகள் உள்ளிட்ட படிப்புகளை, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை நடத்துகிறது. தொலைதுார கல்வி திட்டத்தின் வாயிலாக நடத்தப்படும், குடும்ப மருத்துவ படிப்பு மற்றும் வலி நிவாரண படிப்புக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் பெறப்படவில்லை. மேலும், மருத்துவ அறிவியல் வகுப்புகளில், ஒன்பது படிப்புகளுக்கும், மருத்துவ கவுன்சில் ஒப்புதல் இல்லை.எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, மருத்துவ அறிவியலில், ௧௧ முதுநிலை பட்டய வகுப்புகளை நடத்த முற்பட்டபோது, அதை எதிர்த்து, ௨௫ டாக்டர்கள் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்றம், ரத்து செய்து உத்தரவிட்டது. மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் அனுமதி பெறாமல், அண்ணாமலை பல்கலையும், ௧௫ வகுப்புகளை நடத்த முற்பட்டது. அதை எதிர்த்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க, தடை விதித்தது.எனவே, மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசின் அனுமதியின்றி, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை நடத்தும் வகுப்புகள், சட்டவிரோதமானவை. தற்போது, அனுமதியின்றி நடத்தப்படும், முதுநிலை மருத்துவ பட்டய வகுப்புகள் மற்றும் மருத்துவ அறிவியல் படிப்புகளை, ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, இந்த படிப்புகளை நடத்த, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை, நீதிபதி, வைத்தியநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், பி.எபனேசர் பால் வாதாடினார். மனுவுக்கு, பதில் அளிக்கும்படி, மத்திய சுகாதார துறை, இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தார்.
அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீடு : இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு இழப்பு

Added : மே 01, 2018 00:28

மதுரை : அரசு ஊழியர்களின் மருத்துவ காப்பீடுத் திட்டத் தால், இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுவதாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது.அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு, சம்பளத்தில் பிரீமியத் தொகைபிடித்தம் செய்யப்படுகிறது. சிகிச்சைக்கு பின், மருத்துவச் செலவு தொகையை ஈடு செய்ய, மருத்துவ செலவு தொகையை திரும்ப வழங்கக் கோரி, சிலர் அரசிடம் விண்ணப்பித்தனர். அவை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, பல்வேறு மனுக்கள் தாக்கலாகின.நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன, தலைமை திட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் ஆஜரானார்.இன்சூரன்ஸ் நிறுவன வழக்கறிஞர், 'பிரீமியத் தொகை செலுத்தியதைவிட, கூடுதலாக மருத்துவ செலவு தொகை கோரப்படுகிறது. இதனால், நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. 'விண்ணப்பித்தோரில், 97 சதவீதம் பேருக்கு தொகை வழங்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத மருத்துவமனை, பட்டியலில் இல்லாத நோய்களுக்கு சிகிச்சை பெற்று இருந்தால், தொகை மறுக்கப்படுகிறது' என அறிக்கை தாக்கல் செய்தார்.'தமிழக அரசு ஜூன், 11ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.


ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...