Thursday, May 17, 2018

எடியூரப்பா பதவியேற்க தடையில்லை; சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

Updated : மே 17, 2018 06:07 | Added : மே 17, 2018 04:43 | 



  புதுடில்லி : எடியூரப்பா பதவியேற்புக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இன்று(மே-17) காலை கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்கிறார்.

இதுதொடர்பாக, 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நடைபெற்ற வாதத்தின் போது மத்திய அரசின் வழக்கறிஞர் ரோஹத்கி தெரிவிக்கையில், 'காங்., மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். கவர்னரை அவரது பணியை செய்ய விடுங்கள். அவர் வேலைகளில் தலையிட வேண்டாம். ஆட்சியமைக்க அழைப்பது கவர்னரின் கடமை. கவர்னரும், ஜனாதிபதியும் எந்த நீதிமன்றத்துக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. கவர்னர் கடமையாற்றுவதை தடுத்துவிட்டால் எந்த சட்டமும் இயற்றப்பட்டது' என்றார்.

தடையில்லை:

இதனை தொடர்ந்து, நீதிபதிகள் நீண்ட ஆலோசனைக்கு பின், எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் அளித்து, முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று காலை 9 மணிக்கு கர்நாடகாவில் எடியூரப்பா பதவியேற்க உள்ளார்.

எடியூரப்பாவுக்கு நோட்டீஸ்:

விடிய விடிய நடந்த வாதங்களை கேட்ட பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்க தடையில்லை. நாளை(மே 18) மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் கடிதங்களை நாளை காலை 10 மணிக்குள் எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும். மே 15ம் தேதி கவர்னருக்கு எடியூரப்பா எழுதிய கடிதத்தின் நகலை தாக்கல் செய்ய வேண்டும். பதவியேற்பு வழக்கு இறுதித்தீர்ப்புக்கு உட்பட்டது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிளஸ்–2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் மாவட்டம் 28–வது முறையாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை




பிளஸ்–2 தேர்வு முடிவுகளின் படி விருதுநகர் மாவட்டம் உதயமாகி 33 ஆண்டுகளில் 28–வது முறையாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மே 17, 2018, 04:15 AM

விருதுநகர்,

பிளஸ்–2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 24,297 மணவ–மாணவிகளில் 23,580 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.05 ஆகும். இதன்படி இம்மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தேர்வு எழுதிய 10,797 மாணவர்களில் 10,285 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.26 ஆகும். தேர்வு எழுதிய 13,500 மாணவிகளில் 13,295 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.48 ஆகும்.

விருதுநகர் மாவட்டம் கடந்த 1985–ம் ஆண்டு உதயமானது. 1985–ம் ஆண்டிலிருந்து 2010– ம் ஆண்டு வரை இம்மாவட்டம் தொடர்ந்து 25 ஆண்டுகள் பிளஸ்–2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து 2015–ம் ஆண்டும் 2017–ம் ஆண்டும் முதலிடம் பெற்றது. தற்போது இந்த ஆண்டு 28–வது முறையாக மாநில அளவில் பிளஸ்–2 தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இம்மாவட்டத்திலுள்ள 3 கல்வி மாவட்டங்களில் அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் தேர்வெழுதிய 7,921 மாணவ–மாணவிகளில் 7,650 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.58 ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் தேர்வெழுதிய 7,670 பேரில் 7,430 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.87 ஆகும். விருதுநகர் கல்வி மாவட்டத்தில் தேர்வெழுதிய 8,706 பேரில் 8,500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.63 ஆகும்.

பள்ளி கல்வித்துறை பிளஸ்–2 தேர்வில் மாநில மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களின் பெயர்களை அறிவிக்கக்கூடாது என்று தடை விதித்துள்ள நிலையில் இம்மாவட்டத்தில் முதல் மூன்று அதிக மதிப்பெண்கள் பெற்ற விவரங்கள் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர் 1,178 மதிப்பெண்களும் 2–ம் இடம் பெற்றவர் 1,177 மதிப்பெண்களும் 3–ம் இடம் பெற்றவர் 1,174 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர் 1,171 மதிப்பெண்களும் 2–ம் பெற்றவர் 1,170 மதிப்பெண்களும் 3–ம் இடம் பெற்றவர் 1,168 மதிப்பெண்களூம் பெற்றுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 1–ம் இடம் பிடித்தவர் 1,177 மதிப்பெண்களூம் 2–ம் இடம் பெற்றவர் 1,176 மதிப்பெண்களூம், 3–ம் இடம் பெற்றவர் 1,170 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 73 மாணவ–மாணவிகள் 1,151 லிருந்து 1,180 வரையிலும், 215 மாணவ–மாணவிகள் 1,126 லிருந்து 1,150 வரையிலும், 354 மாணவ–மாணவிகள் 1,101 லிருந்து 1,125 வரையிலும் 2,643 மாணவ–மாணவிகள் 1,001 லிருந்து 1,100 வரையிலும் 4,155 பேர் 901 லிருந்து 1,000 வரையிலும், 5,094 பேர் 801 லிருந்து 900 வரையிலும் 5,083 பேர் 701 லிருந்து 800 வரையிலும், 6,680 பேர் 700–க்கு கீழும் மதிப்பெண் பெற்றிருந்தனர்.

அறிவியல் பாட தேர்வினை 6,516 மாணவர்களும் 8,173 மாணவிகளும் ஆகமொத்தம் 14,689 பேர் எழுதியிருந்தனர். இதில் 6,275 மாணவர்களும் 8,078 மாணவிகளும் ஆக மொத்தம் 14,353 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 97.71 ஆகும். வணிகவியல் பாட பிரிவு தேர்வினை 3,033 மாணவர்களும் 4,179 மாணவிகளும் ஆகமொத்தம் 7,212 பேர் தேர்வு எழுதினர். இதில் 2,877 மாணவர்களும் 4,092 மாணவிகளும் ஆகமொத்தம் 6,969 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.63 ஆகும். கலை பிரிவில் 150 மாணவர்களும் 196 மாணவிகளும் ஆக மொத்தம் 346 பேர் தேர்வு எழுதினர். இத்ல் 141 மாணவர்களும் 191 மாணவிகளும் ஆகமொத்தம் 332 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 95.95 ஆகும். தொழில்நுட்ப பாடப்பிரிவில் 1,098 மாணவர்களூம் 952 மாணவிகளும் ஆக மொத்தம் 2,050 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 992 மாணவர்களூம் 934 மாணவிகளும் ஆகமொத்தம் 1,926 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.95 ஆகும்.

ஆங்கிலப் பாடத்தில் தேர்வெழுதிய 24,297 பேரில் 24,022 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 98.87 ஆகும். மொழிப்பாடத்தில் தேர்வெழுதிய 24,297 பேரில் 24,130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.31 ஆகும். இயற்பியல் பாடத்தில் தேர்வெழுதிய 14,689 பேரில் 14,513 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.8 ஆகும்.

வேதியியல் பாடத்தேர்வு எழுதிய 14,689 பேரில் 14,403 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.05 ஆகும். உயிரியல் பாடத்தேர்வு எழுதிய 8,814 பேரில் 8,685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.54 ஆகும். தாவரவியல் பாடத் தேர்வில் தேர்வெழுதிய 2,392 பேரில் 2,346 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.08 ஆகும். விலங்கியல் தேர்வெழுதிய 2,392 பேரில் 2,324 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.16 ஆகும். கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வெழுதிய 7,517 பேரில் 7,444 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.03 ஆகும்.

கணக்கு பாட தேர்வெழுதிய 11,606 பேரில் 11,464 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.78 ஆகும். வரலாற்று பாட தேர்வெழுதிய 4,100 பேரில் 4,028 பேர் தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி சதவீதம் 98.24 ஆகும். வணிகவியல் பாட தேர்வு எழுதிய 8,349 பேரில் 8,156 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.69 ஆகும். கணக்கியல் பாட தேர்வெழுதிய 7,561 பேரில் 7,408 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.98 ஆகும். பொருளியல் பாட தேர்வு எழுதிய 7,558 பேரில் 7,377 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.61 ஆகும்.

இம்மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் தேர்வெழுதிய 96 பேரில் 71 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 73.96 ஆகும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தேர்வெழுதிய 125 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 100 ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வெழுதிய 11,342 பேர்களில் 11,164 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 98.43 ஆகும்.

அரசு பள்ளிகளில் தேர்வெழுதிய 8,153 பேரில் 7,685 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94.26 ஆகும். மாநில அளவில் அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. நகராட்சி பள்ளிகளில் தேர்வெழுதிய 357 பேரில் 351 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.32 ஆகும். சுயநிதி பள்ளிகளில் தேர்வெழுதிய 2,884 பேரில் 2,861 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.26 ஆகும். அரசிடம் இருந்து பகுதி உதவி பெறும் பள்ளிகளில் தேர்வெழுதிய 1,340 பேரில் 1,323 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.73 ஆகும்.
மாவட்ட செய்திகள்

சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை; 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது



சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

மே 17, 2018, 05:18 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. ஆனால் அவ்வப்போது சூறைக்காற்றுடன் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதையொட்டி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இந்த மழையால் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். இந்தநிலையில் சேலத்தில் நேற்று பகலில் கடும் வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து மாலை வானம் மேமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

மாநகரில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையில் நனையாமல் இருக்க இருசக்கர வாகனங்களில் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் குடைகள் பிடித்தவாறும், தலையில் துணிகளை போட்டுக்கொண்டும் சென்றனர். சேலம் பெரமனூர் நாராயணபிள்ளை தெருவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. அதேபோல் மழைநீர் வீடுகளை சூழ்ந்தது.

இந்த வீடுகளில் தேங்கிய தண்ணீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர். இதனால் அவர்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். மழையின் போது வீசிய சூறைக்காற்றால் பல இடங்களில் மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்தன. சாய்ந்த மரங்களை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.

மழையின் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் சரிசெய்யப்பட்டு மின்வினியோகம் செய்யப்பட்டது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு இடையே சென்று வந்தனர். சேறும், சகதியுமாக உள்ள சாலைகளை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத நர்சரி, பிரைமரி பள்ளிகளின் பட்டியல் வெளியீடு





சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத நர்சரி, பிரைமரி பள்ளிகளின் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.

மே 17, 2018, 05:29 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெறாத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் பட்டியலை அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், முறையாக தமிழக அரசின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா? என்றும், அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா? என்று ஆய்வு செய்யுமாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதன்குமாருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள 21 ஒன்றியங்களில் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், தங்களது பகுதியில் உள்ள நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெரும்பாலான நர்சரி, பிரைமரி பள்ளிகள் தொடர் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஒருசில பள்ளிகளில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதது தெரியவந்தது.

இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் மொத்தம் 107 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் மட்டுமே அரசு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும், 112 தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவதாகவும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல்கள் அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலங்களில் உள்ள தகவல் பலகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் நகர்ப்புற உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் நேற்று சேலம் மாநகரில் அங்கீகாரம் பெற்ற நர்சரி, பிரைமரி பள்ளிகள் எது? அங்கீகாரம் பெறாத பள்ளிகள் எது? தொடக்க அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் எது? போன்ற விவரங்களை உதவி தொடக்க கல்வி அலுவலர் மகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் ஒட்டினர். இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலங்களிலும் அங்கீகாரம் பெறாத நர்சரி, பிரைமரி பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு அங்கீகாரம் இல்லாத நர்சரி, பிரைமரி பள்ளிகள் அடங்கிய பட்டியல் தயாரித்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தையை பள்ளியில் சேர்க்கும் முன்பு அந்த பள்ளி அரசு அங்கீகாரம் பெற்றுள்ளதா? என தெரிந்து சேர்க்க வேண்டும். மேலும், அரசு விதிமுறைகளை பின்பற்றாத 35 தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளை மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரத்தை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றனர்.
மாநில செய்திகள்

தொழிற்பயிற்சிக்காக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் 99 தமிழக மாணவர்களுக்கு பாஸ்போர்ட், விசா, பயணச்சீட்டு




தொழிற்பயிற்சிக்காக வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த 99 மாணவர்களுக்கு பாஸ்போர்ட், விசா, பயணச்சீட்டு ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

மே 17, 2018, 05:31 AM
சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 23.8.2016 அன்று சட்டசபையில் 110-ம் விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் திறன் மேம்படும் வகையில் வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சி பெற அந்த கல்லூரிகள் வகை செய்கின்றன.

அதைப்போன்று, அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்திடும் வகையில், அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் 15 நாட்கள் தொழில்நுட்ப பயிற்சி பெறும்வகையில், வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் 15 நாட்கள் தொழிற்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு, தங்கள் அறிவுத் திறனை உலகளவில் மேம்படுத்துவதற்கும், சர்வதேச அளவில் தொழில்நுட்ப கல்வியில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியை அறியவும், அவர்களின் ஆய்வு திறனை வளர்க்கவும் வழிவகை ஏற்படும்.

இத்திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தும் விதமாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்து விளங்கும் 50 பேர்களும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்து விளங்கும் 49 பேரும், என மொத்தம் 99 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் 15 நாட்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தொழிற்பயிற்சி பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், 2017-18-ம் கல்வி ஆண்டில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் அறிவியல், மெட்டலார்ஜி, புரடக்‌ஷன் டெக்னாலஜி அண்டு இன்பர்மேஷன் தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளைச் சார்ந்த 61 மாணவர்கள் ஆஸ்திரேலியாவின், மெல்போர்னில் உள்ள ஸ்வைன்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 19.5.2018 முதல் 2.6.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் இரு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

சிவில் மற்றும் பி.டெக். பாடப் பிரிவுகளைச் சேர்ந்த 14 மாணவர்கள் ஜெர்மனி நாட்டில் உள்ள லெய்ப்னிஸ் பல்கலைக்கழகத்தில் 18.6.2018 முதல் 2.7.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் ஒரு பேராசிரியரின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேசன் தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளைச் சார்ந்த 24 மாணவர்கள் ஜப்பான் நாட்டில் உள்ள யோகோகாமா தேசிய பல்கலைக்கழகத்தில் 18.6.2018 முதல் 2.7.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் இரு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 99 மாணவர்கள், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தொழிற்பயிற்சி பெறுவதற்காக செல்வதற்கு முன்பு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு பாஸ்போர்ட், விசா மற்றும் பயணச்சீட்டுகளை வழங்கிடும் அடையாளமாக 7 மாணவ, மாணவிகளுக்கு அவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, May 16, 2018

சென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா?!
ரஞ்சித் ரூஸோ

vikatan   16.05.2018

கேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்கியமான மலையக மாவட்டமான வயநாடு, 34 டிகிரி அக்னி வெயில் கொளுத்தும் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை எப்போது சென்றாலும் இதன் செழிப்பைப் பார்க்கலாம், மேகக் கூட்டங்களோடு கைக்குலுக்கலாம், ஏலக்காய் முதல் ஏத்தம்பழம் வரை சுவைக்கலாம், அருவியில் குளிக்கலாம்... என்ஜாய் பண்ணலாம்.



உங்கள் வயநாடு ட்ரிப்பை முழுவதுமாக அனுபவிக்கச் சென்னையில் இருந்து பைக் ரைடு போவது சிறப்பானது. `எவ்வளவோ ரூட் இருக்கப்போ, நான் ஏன்டா பெங்களூர் வழியா பைக்ல போகணும்...' என விடிவி கணேஷ் குரலில் கேட்பது கேட்கிறது. காரணத்தை நீங்கள் ரைடு போனால்தான் உணர முடியும். ஒரு சின்ன பேக்பேக்கை எடுத்து அதில் 2 நாளுக்குத் தேவையானவற்றை மடித்துவைத்துக்கொண்டு கிளம்புங்கள். எந்த பைக்கில் வேண்டுமென்றாலும் ரைடு போகலாம். 200 cc-க்கு மேல் உள்ள பைக்கை தேர்ந்தெடுத்தால் ரைடு இன்னும் சிறப்பானதாக இருக்கும். ரைடிங் ஜேக்கட், பூட்ஸ், கிளவுஸ் அணிவது பாதுகாப்புக்கு மட்டுமல்ல பைக் ரைடில் களைப்பைக் குறைக்கும். நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் போவதால் DOT, ECE சான்றிதழ் ஹெல்மெட் பாதுகாப்பானது. மேற்சொன்ன விஷயங்கள் மிக முக்கியமானவை.



கூகுள் மேப் பேச்சை கேட்காதீர்கள். சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை வழியாக வேலூர், ஆம்பூரை கடந்து பெங்களூருக்குள் நுழைந்த உடன் எலக்ட்ரானிக் சிட்டி பாலத்தின் மீது ஏறாமல் கீழே சென்றால் கனக்புரா சாலை வரும். அதன் வழியே கனக்புராவை கடந்து மைசூர் நைஸ் ரோடு வழியாகப் போகலாம். மைசூர் நைஸ் ரோடு எக்ஸ்பிரஸ்வேயில் பைக்கின் வேகத்தை அனுபவிக்கலாம். ஆனால், 100 முதல் 120 கி.மீ வேகத்தில் போவது நல்லது. அதற்கு மேல் போனால் இன்ஜின் அதிகமாகச் சூடாகும். பைக்கை அவ்வப்போது நிறுத்தவேண்டியிருக்கும். மாலை 3 மணிக்கு கிளம்பினால், 8 மணிக்கெல்லாம் பெங்களூரை அடைந்துவிடலாம். விடியற்காலையில் பெங்களூரில் இருந்து கிளம்பினால் பயணத்துக்கு சரியாக இருக்கும்.



கனக்புராவைத் தாண்டி அதே சாலையில் மாண்டியா வரை செல்லாமல் மத்துரு, மலவள்ளி, சாமராஜநகர் வழியாகப் பயணித்தால் பெட்ரோல் கொஞ்சம் மிச்சம்பிடிக்க முடியும். மலவள்ளியைத் தாண்டிவிட்டால் சாலை, விவசாய நிலங்கள், கிராமங்கள், மலைக் குன்றுகள், காவல் தெய்வங்கள் தவிர எதுவுமே இருக்காது. இன்னும் கமர்ஸியல் ஆக்கப்படாத இடங்கள் இவை. சில இடங்களில் அவ்வப்போது நின்று இளைப்பாறுவது நல்லது. பெங்களூரில் இருந்து இந்த வழியாக பயணித்தால் 5 முதல் 6 மணிநேரத்தில் பந்திபூரை அடைந்துவிடுவோம். புலி மற்றும் சிறுத்தைகள் வாழும்காடு பந்திபூர். அடர்த்தியாக மரங்கள் இருக்காது. பாதை வளைந்து நெளிந்து பாம்புகள் போல போகும். வளைவான பாதைகள் நெய் ஊற்றிச் செய்த லட்டுபோல. அனுபவித்துக்கொண்டே இருக்கலாம். லட்டில் திராட்சை வருவதுபோல, ஸ்பீடு பிரேக்கரும் இங்கு அதிகம். சில கிலோமீட்டர்களுக்கு ஒரு ஸ்பீடு பிரேக்கர் வரும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.



போகும் வழியில் மான்கள், புலித்தடங்கள், காட்டு யானை போன்றவற்றை பார்க்கலாம். பார்த்தால் இன்னும் த்ரில் கூடிவிடும். பந்திபூரை தாண்டியதும் முத்தங்கா வன உயிர்க் காப்பகம் உள்ளது. இதில் பாதுகாப்புடன் வனத்தில் சுற்றிவரலாம். வனத்துறையினர் ஏற்பாட்டில் யானைச் சவாரிகூட இங்கு உண்டு. முத்தங்காவை அடுத்து 30 நிமிட பயணத்தில் வயநாடு வந்துவிடும். சுல்தான் பத்தேரி, வயநாடு இரண்டு இடங்களிலும் தங்குவதற்கான வசதிகள் உண்டு. வயநாடு பாதை பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. வளைந்து வளைந்து பயணிப்பது செம த்ரில்லிங்காக இருக்கும்.



வயநாடு வருவதற்கு மாண்டியா, ஹன்சூர் வழியாக இன்னொரு பாதையும் உள்ளது. நம் பாதையைவிட அந்தப் பாதையின் தூரம் குறைவு. ஆனால், முழுவதும் நெடுஞ்சாலையில் மட்டுமே பயணிக்க வேண்டும். கர்நாடகாவின் செழுமையைப் பார்க்க குறைவான வாய்ப்புகளே இருக்கும். மோட்டல்கள் அதிகம் என்பதால் பொதுவான உணவுகளே இருக்கும் கர்நாடக கிராமங்களின் உணவுகளை ருசிக்கமுடியாது.



(நாகர்ஹோலே வழியாக வயநாடு போகும் பாதை)






மைசூருக்கு போகும் ஆசை இருந்தால் இந்தப் பாதை வழியாக போகலாம். இந்த வழியில் நாகர்ஹோலே தேசிய பூங்கா உள்ளது. இது பந்திபூர் போல் வளைந்து நெளிந்து போகும் பாதை அல்ல. அடர்த்தியான காடு, அமைதியான நேர் பாதை. இந்தப் பாதையில் பந்திபூரைவிட வாகனங்கள் குறைவு என்பதால் கார் டிரைவிங் அருமையாக இருக்கும். வயநாடை பார்த்துவிட்டு இன்னும் இரண்டு நாள் லீவ் எடுப்போம் என்று முடிவெடுத்துவிட்டால், இங்கிருந்து 100 கி.மீ தொலைவில் கோழிக்கோடு கடற்கரை உள்ளது. 60 கி.மீ தொலைவில் மசினகுடி உள்ளது. அருகிலேயே தெங்குமரஹடா காடு உள்ளது. தெங்குமரஹடாவுக்கு போக வனத்துறை அதிகாரிகளின் ஒப்புதல் வேண்டும். பந்திபூர், நாகர்ஹோலே இரண்டு காடுகளுக்குள்ளும் இரவு 10 மணிக்குமேல் அனுமதி கிடையாது. அதனால், அதற்கேற்ப பயணத்தை திட்டமிட்டால் சரியான நேரத்தில் வயநாடு அடையலாம்.

‘It May Be Morally Wrong To Glorify The Corrupt, But Cannot Interfere’: Madras HC Rejects DMK MLA’s Plea To Remove Jayalalithaa Portrait From TN Assembly [Read Order] | Live Law

‘It May Be Morally Wrong To Glorify The Corrupt, But Cannot Interfere’: Madras HC Rejects DMK MLA’s Plea To Remove Jayalalithaa Portrait From TN Assembly [Read Order] | Live Law: The bar on appointment to a responsible position possibly cannot be stretched to be a bar on display of the photograph of a former Chief Minister charged with a serious offence, the Court said. The Madras High Court has dismissed a plea seeking removal of the portrait of Late J. Jayalalithaa from the precincts of …

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...