Thursday, May 17, 2018

62 கைதிகள் தேர்ச்சி

Added : மே 17, 2018 02:13

சென்னை: தமிழகத்தில் உள்ள சிறைகளில் இருந்து, 103 கைதிகள், பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அதில், ஆறு பெண் கைதிகள் உட்பட, 73 பேர் தேர்வு எழுதினர். நேற்று வெளியான தேர்வு முடிவில், புழல், கடலுார், சேலம், பாளையங்கோட்டை, வேலுார், திருச்சி, மதுரை மற்றும் மகளிர் தனிச் சிறைகளில் இருந்து தேர்வு எழுதிய, நான்கு பெண் கைதிகள் உட்பட மொத்தம், 62 பேர் தேர்ச்சி பெற்றனர்.இவர்களில், கோவை மத்திய சிறையில் கைதி, தமிழழகன், 1,050 மதிப்பெண் பெற்றுள்ளார். அவர், வணிகவியல் பாடத்தில், 200க்கு, 199 மதிப்பெண்பெற்றுள்ளார். வேலுார் சிறை கைதி பால்ராஜ், 1,022, புழல் சிறை கைதி, சூளை இப்ராகிம், 1,005 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

வேலுார் மாவட்டத்தில், டீக்கடை, செங்கல் சூளை, பீடி கம்ெபனி, தோல் தொழிற்சாலைகளில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களில், 17 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆம்பூரைச் சேர்ந்த பஷீரா யாஸ்மின், 1,200க்கு, 943 மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றார்.
முதுநிலை இயன்முறை மருத்துவம் படிக்க வாய்ப்பு

Added : மே 17, 2018 02:08

சென்னை: முதுநிலை இயன்முறை மருத்துவ படிப்பில் சேர, வரும், 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் செயல்படும், தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.டி., எனப்படும், முதுநிலை இயன்முறை படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இடஒதுக்கீடு மற்றும் இளநிலை படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புவோர், www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில், வரும், 22ம் தேதி வரை, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.நேரடி விண்ணப்ப வினியோகம் கிடையாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு, மே, 23ம் தேதி மாலை, 5:45 மணிக்குள் கிடைக்கும் வகையில், அனுப்பி வைக்க வேண்டும்.
மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் எப்போது?

Added : மே 17, 2018 02:08

சென்னை: ''தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கவுன்சிலிங், ஜூன், மூன்றாம் வாரம் துவங்கும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, மே, 6ல், நடந்தது. இதன் முடிவு, ஜூன், 5ல் வெளியாக உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகி உள்ளதால், மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு, மாணவர்களிடம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறுகையில், ''எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங், ஜூன் மூன்றாம் வாரத்தில் நடைபெறும்,'' என்றார்.
ஆரவாரம், கொண்டாட்டமின்றி வீடு தேடி வந்த, 'ரிசல்ட்'

dinamalar 17.05.2018

பொது தேர்வு முடிவுகளில், பாராட்டு, வாழ்த்து, கேக் ஊட்டுவது என்ற ஆரவாரத்துக்கு, அறவே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுஉள்ளது.



பரபரப்பான பொது தேர்வு முடிவுகள், மிகவும் அமைதியாக வெளியிடப்பட்டதால், ஆசிரியர் களும், பெற்றோரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

பாராட்டு மழை

தமிழகத்தில், 15 ஆண்டுகளுக்கு முன், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்பிற்கு, தமிழக அளவிலான நுழைவு தேர்வு ரத்தான பின், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, இன்ஜி., மற்றும் மருத்துவ படிப்பு களுக்கு சேர்க்கை நடந்தது. இதனால், பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கும், அதன், 'கட் ஆப்' மதிப் பெண்ணுக்கும், அதிக முக்கியத்துவம் ஏற்பட்டது.

மாநில அளவில், எந்த பள்ளி, 'டாப்' மதிப்பெண் பெறுகிறது; பள்ளி அளவில், முதல் மதிப்பெண் பெறும் மாணவ - மாணவியர் யார் என்பதில் கடும் போட்டி ஏற்பட்டது. தேர்வு முடிவை வெளியிடும் போது, மாநில அளவில், 'டாப்பர்' ஆக வரும் மாணவர்கள், சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு அமைச்சர் களும், அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர்.

அவர்கள், 'டாப்பர்' ஆக வர, என்ன முயற்சி எடுத்தனர் என, ஊடகங்களில் பேட்டி எடுக்கப்படும். பெரும்பாலானவர்கள், 'டாக்டர் ஆக வேண்டும்; கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே லட்சியம்' என, தெரிவிப்பர்.இப்படி கூறிய பல மாணவர்கள், உயர்கல்வியை முடித்ததும், முதல் ஆளாக, வெளிநாடுகளிலும், பெருநகரங்களிலும்

பணியில் சேர்வதோடு, கிராமங்களை கண்டுகொள்வதில்லை. பள்ளி அளவில் முதலிடம் பெறும் மாணவர்களை, மற்ற மாணவர்கள், தோளில் துாக்கி வைத்து கொண்டாடுவர். அவர்களின், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள், கேக் ஊட்டி, போட்டோவுக்கு, 'போஸ் கொடுப்பர்.

இரண்டு ஆண்டுகளாக, 'டாப்பர்' என்ற, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஆரோக்கிய மற்ற கொண்டாட்டங்கள் தவிர்க்கப் பட்டுள்ளன. இதே போல, தேர்வு முடிவை, தனியார் இணைய தளங் களில்வெளியிடும் நிலையும் படிப்படியாக மாற்றப் பட்டு, தேர்வுத் துறையே தங்கள் இணைய தளத்தில், நேரடியாக தேர்வு முடிவுகளை வெளியிட துவங்கியது.

புதுமைகள்

இந்த முறை, மாணவர்களுக்கு எளிதாக இருந்தா லும், கிராமப்புற மாணவர்கள் அல்லது கோடை விடுமுறையில், வெளியூர்களில் உள்ள மாணவர் கள், இணையதள இணைப்பு உள்ள பகுதியை தேடி வந்து, தேர்வு முடிவை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த அலைச்சலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாணவர் களின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக, தேர்வு முடிவை வெளியிடும் முறை, 2017 முதல் அறிமுகம் ஆகியுள்ளது.

இதனால், மாணவர்கள் இருக்கும் இடத்திலேயே, தேர்வு முடிவை, மதிப்பெண்ணுடன் அறியும் வசதி கிடைத்துள்ளது. மொத்தத்தில், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மன உளைச்சல் மற்றும் அலைச்சலுக்கு கல்வி துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

வெறிச்சோடிய தேர்வுத்துறை வளாகம்

மாநில, மாவட்ட அளவில், மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை தேடிப்பிடித்து, அவர்களிடம் ஊடகத்தினர் பேட்டி எடுப்பர். இதற்கு, இரண்டு ஆண்டுகளாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தேர்வுமுடிவுகள், தேர்வுத் துறை அலுவலகத்தில் ஊடகத்தினருக்கு வழங்கப்படும். இந்த தகவல்களை பெற, செய்தியாளர்கள், கேமரா, மைக் சகிதமாக, காலை முதல் தேர்வுத்துறை வாயிலில் காத்திருப்பர்.

தேர்வு முடிவு வெளியிடும் நேரத்தில், பட்டியலை பெற்று, முதலில் யார், 'பிரேக்கிங் நியூஸ்' வழங்குவது என, போட்டி ஏற்படும். அதனால், பட்டியல் வினியோகத்தின் போது, தள்ளு முள்ளு ஏற்படும். இதற்கும், இந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொது தேர்வு முடிவின் போது, கேமராக்கள் குவிந்திருக்கும், தேர்வுத்துறை அலுவலக வளாகம் நேற்று, ஆள் நடமாட்ட மின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, இன்று முதல், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு வேண்டும் என, கருதுவோர், தாங்கள் தேர்வு எழுதிய பள்ளி மற்றும் தேர்வு மையத்திற்கு சென்று, இன்று முதல், வரும், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மறுமதிப்பீடு தேவைப்படுவோர், முதலில், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முடிவு நேற்று அறிவிக்கப் பட்ட நிலையில், மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, வரும், 21ம் தேதி முதல், பள்ளிகளில் பெற்று கொள்ளலாம். மேலும்,www.dge.tn.nic.in என்ற இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.

விருதுநகர், 'டாப்' - விழுப்புரம் கடைசி

பிளஸ் 2 தேர்ச்சி பட்டியலில், மாவட்ட அளவில், விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. சென்னை மாவட்டம், 14ம் இடம் பெற்றுள்ளது.

தேர்வில் மகன் தோல்வி: இனிப்பு வழங்கிய தந்தை

Updated : மே 17, 2018 01:30 | Added : மே 17, 2018 01:26 | 




போபால்:மத்திய பிரதேசத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மகன் தோல்வி அடைந்ததை, அவனது தந்தை, இனிப்பு வழங்கி, உற்சாகமாக நடனமாடி கொண்டாடினார்.

மத்திய பிரதேசத்தில், 10வது மற்றும் பிளஸ் ௨ பொது தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இதில், 10ம் வகுப்பில், 34 சதவீத மாணவர்களும், பிளஸ் ௨வில், 32 சதவீத மாணவர்களும் தோல்வி அடைந்தனர்.

இதனால், மனமுடைந்து, 11 மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றனர். இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், ம.பி., யின் சாகர் என்ற பகுதியை சேர்ந்த, சுரேந்திரா என்பவரின் மகன், 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தான். இதை கேள்விப்பட்ட சுரேந்திரா, இனிப்புகள் வாங்கி, சொந்தக்காரர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்.மேள தாளங்களை வரவழைத்து, அப்பகுதியில் நடனமாடியபடி ஊர்வலம் சென்று, தன் மகனின் தோல்வியை கொண்டாடினார்.

இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். முதலில், அதிர்ச்சி அடைந்த சுரேந்திராவின் மகன், பின்னர் மெல்ல, கொண்டாட்டங்களில் இணைந்து கொண்டான்.
'மகனின் தோல்வியை ஏன் கொண்டாடுகிறீர்கள்' என, பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:

தேர்வில் தோல்வி அடைந்தால், வாழ்க்கையே முடிந்துவிட்டதாக மாணவர்கள் நினைக்கின்றனர்; அது தவறு. ஒரு பாதை மூடிவிட்டால், வேறு பாதைகள் திறக்கும் என்பது அவர்களுக்கு புரிய வேண்டும்.இதற்காக மனமுடைந்து தவறான முடிவுகளை தேடிச் செல்லக் கூடாது. எனவே, அந்த மனநிலையை மாற்றவே, இதை கொண்டாடுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
சட்ட வல்லுனர்கள் ஆலோசனைக்கு பின் கவர்னர்... அழைப்பு : கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்பு : 15 நாட்களில் மெஜாரிட்டி நிரூபிக்க அவகாசம்

Updated : மே 17, 2018 00:25 | Added : மே 17, 2018 00:23




  பெங்களூரு: கர்நாடக தேர்தலில், அதிக இடங்களை பிடித்துள்ள, பா.ஜ.,வின் எடியூரப்பாவை, ஆட்சி அமைக்குமாறு, கவர்னர் வஜுபாய் வாலா, நேற்றிரவு அழைப்பு விடுத்தார். இன்று காலை, 9:00 மணிக்கு, கர்நாடகாவின், 27வது முதல்வராக பதவியேற்கிறார். இவருடன், நான்கு அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். அவருக்கு, 15 நாட்களில் மெஜாரிட்டி நிரூபிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், 15ல் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகின. மொத்தமுள்ள, 222 தொகுதிகளில், 104ல் பா.ஜ.,வும், 78ல் காங்கிரசும், 37ல் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளமும் வெற்றி பெற்றுள்ளன. மூன்றில், பிற கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சி அமைக்க, 112 எம்.எல்.ஏ., ஆதரவு தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசு பொறுப்பேற்பதில் இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையே, பா.ஜ., ஆட்சி அமைப்பதை தடுக்கும் வகையில், காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சேர்ந்து, மாநிலத்தில் ஆட்சி அமைக்க, கவர்னரிடம் கோரிக்கை விடுத்துள்ளன. மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, குமாரசாமி முதல்வராக பதவியேற்க, முழு ஆதரவு அளிப்பதாக, காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது. எனினும், காங்., கட்சியின் சட்டசபை தலைவர், இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லை. காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ், எம்.எல்.ஏ.,க்கள் என, மொத்தம், 116 உறுப்பினர்களின் பலம் இருப்பதாக, கவர்னரிடம், குமாரசாமி கடிதம் அளித்துள்ளார். அதே சமயம், 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ள, பா.ஜ., அதன் சட்டசபை தலைவராக, எடியூரப்பாவை தேர்ந்தெடுத்துள்ளது.தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள, பா.ஜ., எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்க, கவர்னரிடம் உரிமை கோரியது.இதையறிந்த, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் முன் அணிவகுக்க, அனுமதி கோரினர். ஆனால், அவர் மறுப்பு தெரிவித்து, 10 பேரை மட்டுமே அனுமதித்தார். இதனால், ராஜ்பவன் முன், பா.ஜ.,வுக்கு எதிராக, இரு கட்சி தொண்டர்களும் கோஷம் எழுப்பினர். அவர்களை மிகவும் சிரமப்பட்டு, போலீசார் அப்புறப்படுத்தினர்.பின், கவர்னரை, ம.ஜ.த., தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் சந்தித்தனர். 'தங்கள் கூட்டணிக்கு தான் முழு பெரும்பான்மை உள்ளது. இதன் சட்டசபை குழு தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், தன்னை ஆட்சி அமைக்க, அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினர். இதற்கு பதிலளித்த கவர்னர், ''சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை செய்தும், இது போன்ற நிலை, கோவா மாநிலத்தில் ஏற்பட்ட போது, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆராய்ந்தும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கிறேன்,'' என, தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், தமிழகத்தில் நடந்த, 'கூவத்துார் பார்முலா'வை பின்பற்றி, நீச்சல் குளம், பார் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய, பிடதியிலுள்ள ஈகிள் டன் சொகுசு விடுதிக்கு, காங்., சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள், சொகுசு பஸ்களில் நேற்று அழைத்துச் செல்லப்பட்டனர்.இதற்கிடையில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரு வசந்த்நகரிலுள்ள நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றில், இரண்டு நாட்களாக அடைக்கப்பட்டுள்ளனர்.பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., ஆகிய மூன்று கட்சிகளுமே தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், கவர்னர் வஜுபாய் வாலா, உச்சநீதிமன்ற மூத்த வக்கீல்கள் சோலி சொரப்பா, முகுல் ரோத்தகி ஆகியோருடன் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். நேற்றிரவு, 9:30 மணியளவில், பா.ஜ.,வை ஆட்சி அமைக்கும்படி அக்கட்சி தலைமை அலுவலகத்துக்கு கவர்னர் வஜுபாய் வாலா எழுதிய அதிகாரபூர்வ கடிதம் வெளியானது. 15 நாட்களுக்குள், சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, முதல்வராக எடியூரப்பா, இன்று காலை 9:00 மணிக்கு பதவியேற்பதாக, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் முரளிதர்ராவ் அறிவித்தார். இவருடன், ஈஸ்வரப்பா, அசோக், கோவிந்த் கார்ஜோல், ஸ்ரீராமுலு ஆகிய நான்கு அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த காங்கிரஸ், ம.ஜ.த.,வினர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர்.

சுயேச்சையை தப்ப விட்ட ஈஸ்வரப்பா : முல்பாகல் சுயேச்சை எம்.எல்.ஏ., நாகேஷை, காங்கிரஸ் பிரமுகர் டி.கே.சிவகுமார், நேற்று முன்தினமே தன்னுடன் அழைத்து வந்தார். மற்றொரு சுயேச்சை எம்.எல்.ஏ.,வான ராணிபென்னுாரின் சங்கரை, பா.ஜ.,வை சேர்ந்த மேலவை எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா, பெங்களூரு டாலர்ஸ் காலனியிலுள்ள எடியூரப்பா வீட்டுக்கு அழைத்து வந்து, பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்தார். இதை அறிந்த, சங்கரின் மைத்துனர்களும், எம்.எல்.ஏ.,க்களுமான பைரதி பசவராஜ், பைரதி சுரேஷ் ஆகியோர், தொலைபேசியில் பேசி, உடனடியாக சித்தராமையா வீட்டுக்கு வருமாறு உத்தரவிட்டனர். அங்கு வந்த சங்கரை, சித்தராமையா, தன் காரில் ஏற்றி கொண்டு, குயின்ஸ் ரோடு காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்தார். சங்கரை தப்பிக்க விட்ட, ஈஸ்வரப்பாவை, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கடுமையாக திட்டினார்.

ஆனந்த் சிங் வராததால் பரபரப்பு : காங்., - எம்.எல்.ஏ.,க்கள், ௭௮ பேரில், பல்லாரி விஜயநகராவை சேர்ந்த ஆனந்த் சிங் மட்டும் வரவில்லை. காலை முதல் மாலை வரை காத்திருந்தும் பயனில்லாமல் போனது. ரிசார்ட்டுக்கு செல்வதற்கு தயாரான நிலையில், அவர் வராததால் பதற்றம் ஏற்பட்டது. அவரை தொடர்பு கொண்டு முயற்சித்தும், தொடர்பில் கிடைக்கவில்லை. அவருக்கு நெருங்கியவர்களிடம் விசாரித்த போது, விமானத்தில் பெங்களூரு வருவதாக அறிந்த காங்கிரஸ் தலைவர்கள், ஜமிர் அகமது கான், நாகேந்திரா ஆகியோர் சென்றனர். ஆனால், ஆனந்த் சிங் வராததால், திரும்பி வந்தனர். இவர், தேர்தலுக்கு முன், பா.ஜ.,விலிருந்து காங்கிரசுக்கு தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரமலான் நோன்பு இன்று துவக்கம்

Added : மே 17, 2018 05:53



சென்னை: இஸ்லாமியர்கள் புனித கடமையான, ரமலான் நோன்பு, இன்று(மே-17) துவங்குவதாக, தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு, இன்று துவங்குகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, தமிழக அரசின் தலைமை காஜி, முகமது சலாவுதீன் அய்யூபி, நேற்று அறிவித்தார். ரமலான் மாத பிறை, பல பகுதிகளில் தென்பட்டதால், நோன்பு துவங்குவதாக, அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...