Thursday, May 17, 2018

62 கைதிகள் தேர்ச்சி

Added : மே 17, 2018 02:13

சென்னை: தமிழகத்தில் உள்ள சிறைகளில் இருந்து, 103 கைதிகள், பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அதில், ஆறு பெண் கைதிகள் உட்பட, 73 பேர் தேர்வு எழுதினர். நேற்று வெளியான தேர்வு முடிவில், புழல், கடலுார், சேலம், பாளையங்கோட்டை, வேலுார், திருச்சி, மதுரை மற்றும் மகளிர் தனிச் சிறைகளில் இருந்து தேர்வு எழுதிய, நான்கு பெண் கைதிகள் உட்பட மொத்தம், 62 பேர் தேர்ச்சி பெற்றனர்.இவர்களில், கோவை மத்திய சிறையில் கைதி, தமிழழகன், 1,050 மதிப்பெண் பெற்றுள்ளார். அவர், வணிகவியல் பாடத்தில், 200க்கு, 199 மதிப்பெண்பெற்றுள்ளார். வேலுார் சிறை கைதி பால்ராஜ், 1,022, புழல் சிறை கைதி, சூளை இப்ராகிம், 1,005 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

வேலுார் மாவட்டத்தில், டீக்கடை, செங்கல் சூளை, பீடி கம்ெபனி, தோல் தொழிற்சாலைகளில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களில், 17 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆம்பூரைச் சேர்ந்த பஷீரா யாஸ்மின், 1,200க்கு, 943 மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.01.2026