Thursday, May 17, 2018

மது கடைகளை மூட வலியுறுத்தி மரணித்த மாணவர் சாதனை

Added : மே 17, 2018 02:16




திருநெல்வேலி: தமிழகத்தில், மதுக்கடைகளை ஒழிக்க வேண்டி, துாக்கிட்டு தற்கொலை செய்த மாணவர், பிளஸ் 2 தேர்வில், 1,024 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், கே. ரெட்டிபட்டியைச் சேர்ந்த மாணவர் தினேஷ் நல்லசிவன். மது பழக்கத்திற்கு அடிமையான, தன் தந்தையின் செயல்பாட்டை நினைத்து, கடந்த சில தினங்களுக்கு முன், திருநெல்வேலி ரயில்வே பாலத்தின் கீழ், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'என் தந்தை போன்றவர்கள், மதுவிற்கு அடிமையாகி குடும்பத்தை நிர்கதியாக்கி வருகின்றனர். 'எனவே, தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட, அரசு முன்வர வேண்டும். இல்லையெனில், நான் ஆவியாக வந்து மதுக்கடைகளை மூடுவேன்' என்று தெரிவித்து இருந்தார்.மாணவர் தினேஷ், நாமக்கல் தனியார் பள்ளி யில், பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு, மருத்துவர் ஆகும் கனவில், 'நீட்' தேர்விற்கும் விண்ணப்பித்திருந்தார். நீட் தேர்விற்கு இரண்டு தினங்களுக்கு முன், அவர் தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று வெளியான, பிளஸ் 2 தேர்வில் தினேஷ், 1,024 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.தமிழ் - 194, ஆங்கிலம் - 148, இயற்பியல் - 186, வேதியியல் - 173, உயிரியல் - 129, கணக்கு - 194 என, மொத்தம், 1024 மதிப்பெண் பெற்றுஉள்ளார்.'மதிப்பெண் வாங்கி என்ன பயன்... அவன் உயிரோடு இல்லையே' என்று அவரது உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.01.2026