Thursday, May 17, 2018

தவறான சிகிச்சையால் பாதிப்பு : இழப்பீடு வழங்க உத்தரவு

Added : மே 17, 2018 06:15

சென்னை: தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மருத்துவமனை நிர்வாகம், 1.90 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர், ரேணுகா, 45. உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மேற்கு தாம்பரத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார்.

மன உளைச்சல் ; டாக்டர் பரிசோதனை செய்த போது, கர்ப்ப பையில் கட்டி இருப்பது தெரியவந்தது. அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை பின், அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது.சோதனை செய்த போது, சிகிச்சையின் போது, சிறுநீரக குழாய் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. மீண்டும் அறுவை சிகிச்சை செய்து, சரி செய்யப்பட்டது. இதற்கு, 80 ஆயிரம் ரூபாய் செலவானது. தவறான சிகிச்சையால், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால், மன உளைச்சலுக்கு ஆளானேன். மருத்துவச் செலவுடன், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என, செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில், ரேணுகா, 2013ல் வழக்கு தொடர்ந்தார்.வழக்கு விசாரணையில், 'பிரபல அறுவை சிகிச்சை நிபுணரால், சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில், தவறேதும் நடக்கவில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இழப்பீடு : இந்த வழக்கு விசாரணையில், நீதிபதி கலியமூர்த்தி, நீதித் துறை உறுப்பினர்கள் பிரமிளா, பாபு வரதராஜன் பிறப்பித்த உத்தரவு:மருத்துவமனை நிர்வாகம் உரிய சேவை வழங்கவில்லை. மருத்துவச் செலவு தொகை, 80 ஆயிரம் ரூபாயுடன், இழப்பீடாக, ஒரு லட்சம் ரூபாய், மன உளைச்சலுக்கு, 10 ஆயிரம் ரூபாய் என, மொத்தம், 1.90 லட்சம் ரூபாய், மருத்துவமனை நிர்வாகம், மனுதாரருக்கு வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.01.2026