Saturday, June 23, 2018

No justice for Traffic Ramasamy 

Udhav Naig 

 
June 23, 2018 00:00 IST



The film is only a ‘loose’ biopic

Popular activist Traffic Ramasamy holds a special place in popular culture of Tamil Nadu. The octogenarian’s relentless activism has had such an influence that he is mentioned casually in conversations revolving around civic issues or transgression of traffic laws.

With social activism and protests at their peak in Tamil Nadu, the makers of ‘Traffic Ramasamy’, featuring actor and director S.A. Chandrasekar in the lead role and directed by Vicky, thought that this was the right time to make this film. Be warned: the film is only a ‘loose’ biopic based on his life, which focuses on how he was instrumental in getting a ban on motorised ‘fish cart’ vehicles.

The problem with this film is that the legal and extra-legal battles (involving politicians and their goons) fought by the activist not only appears to be mostly fictional, but also absurd in how it portrays these legal battles.

It is mostly conventional Tamil cinema, particularly, SAC brand of cinema, popular in the 80s: politicians are shown as the scum of the earth; the police officials are brazenly corrupt and sleazy (there is a scene where a female cop is forcing herself on her driver) and the court house is actually portrayed as a clown house. If a biopic – even a loosely based biopic – is supposed to give a fair idea about his life as an activist, the film fails on that account. The practical problems that an activist faces while straddling the three worlds of world of politics, law enforcers and judiciary are largely ignored in favour of the cinematic and clichéd representation of issues.

In fact, the judge, played by actor Ambika, who is hearing the ‘fish cart’ case, is represented as some sort of a clown, dancing into the court for a Vijay film duet. No, this is not a comment on the functioning of the court. This is not that kind of a film.

It gets weird: there is an attempt to kill the judge and her security officer with an automatic rifle, shoots into the crowd and kills the shooter. The proceedings continue as if nothing has happened.

The film, however, does well to raise a few chuckles by alluding to certain real life characters – there is a politician named ‘Kungfu’ Govindan, there is a businessman named ‘Reddy’ and others. Rohini, who plays SAC’s wife, also does a good job.

There is also another important issue with the film: it doesn’t even hint at the fact that the protagonist has faced criticism from many and has his own set of naysayers. It is a film that portrays him in the most favourable light. But, then, of course, we live in a time wherein activists are heroes by default. Despite the few surprising cameos by Vijay Sethupathi, Prakash Raj, Vijay Antony and others, the film is mostly absurd and doesn’t do justice to the life and work of Traffic Ramasamy.
Seven V-Cs appointed so far under Purohit 

Special Correspondent 

 
CHENNAI, June 23, 2018 00:00 IST


Ever since Banwarilal Purohit assumed charge as Governor-Chancellor in October last, seven Vice-Chancellors have been appointed for various universities.

In the next six months, six more Vice-Chancellors are likely to be appointed for various universities. Totally, there are 20 universities in the State.

Referring to the role being played by Raj Bhavan in ensuring “social inclusion” through the institutions of higher education, R. Rajagopal, Additional Chief Secretary to the Governor, said colleges and universities had been advised to adopt villages for the “Swachh Bharat” campaign.
42 more Indians detained in U.S. 

Varghese K. George 

 
Washington, June 23, 2018 00:00 IST 


THE HINDU 



The detainees are at a New Mexico detention centre, not far from the El Paso border.NEW YORK TIMESNEW YORK TIMES
52 were held earlier for illegal entry

At least 42 Indians have been detained at a facility in New Mexico for illegal entry into the United States, in the second such episode that has come to light this week.

Earlier this week, it emerged that 52 Indians were being detained in a federal prison in Oregon.

The U.S. agencies enforcing immigration do not automatically notify missions of the countries from where the detainees come.

Indian officials approached the Immigration and Customs Enforcement (ICE) after hearing from community leaders about the new batch of detainees. The ICE confirmed that at least 42 detainees at the Otero County Detention Centre in New Mexico, not far from the El Paso border crossing from Mexico, are Indians.

The ICE also provided Indian missions with names of the detained people in Oregon and New Mexico.

Consular help

It is likely that more cases of Indians being detained will emerge, as the Trump Administration continues with its ‘zero tolerance’ enforcement of immigration laws.

“We have established contact with both the detention facilities. A consular official has visited the detention facility in Oregon and another one is scheduled to visit the one in New Mexico. We are monitoring the situation,” the Indian Embassy here said in a statement.

It is unclear whether the detainees want any consular assistance at all. The detention centres allow detainees to contact anyone they want, but they can refuse to meet or talk to visitors. The news of the new batch of Indian detainees emerged from Indian Americans who had spoken to them in recent days.

Indian officials said it was unclear when these people were detained.

Contrary to earlier information from U.S. lawmakers, who visited detainees in the Oregon prison, there is no separation of families or children from their parents among Indian detainees.
துயரம் கடந்த சாதனைப் பெண்

Published : 19 Jun 2018 10:50 IST

எஸ்.விஜயகுமார்




பவிதா

கடினமாக உழைத்துப் படிப்பவர்களால் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும் என்பது அறிந்ததே. என்றாலும்கூட, தனது வாழ்வில் ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்புக்குப் பின்னர்ச் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் மாணவி பவிதா பிரீத்தி. சென்னை சைதாப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியான பவிதா பிரீத்தி பிளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சி பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் ஒருவராகச் சாதனை படைத்துள்ளார்.

வணிகவியல் பிரிவு மாணவியான அவர், பொருளாதாரம் மற்றும் கணக்குப் பதிவியல் பாடங்களில் தலா 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். வணிகவியல், வணிகக் கணிதம் பாடங்களில் சதமடிக்கும் வாய்ப்பை ஒரு மதிப்பெண்ணில் இழந்தாலும் அவற்றில் தலா 199 மதிப்பெண்களைக் கைப்பற்றியுள்ளார். அது மட்டுமல்லாது தமிழில் 194, ஆங்கிலத்தில் 184 என மொழிப் பாடங்களில் தனது திறமையை நிரூபித்துள்ளார். இந்தச் சாதனையை அவர் எத்தகைய சிக்கலை எதிர்கொண்ட பிறகு நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் என்பதில்தான் அனைவருக்குமான படிப்பினை இருக்கிறது.

இரண்டு நாளில் புத்தாண்டு பிறக்கப்போவதை எண்ணி மாணவப் பருவத்துக்கே உரித்தான துறுதுறுப்புடன் காத்திருந்த பவிதாவுக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்துக்கே 2017-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி வாழ்க்கையில் மறக்க முடியாத துயரமான நாளாக அமைந்தது. தனக்கு ஆசானாகவும் இருந்த பாசத்துக்குரிய தந்தை விபத்தில் சிக்கி, ஒரு நாள் முழுவதும் கோமாவில் இருந்து உயிரிழந்தார். அப்போது தனது எதிர்காலத்தை இழந்துவிட்டதுபோல உணர்ந்தார் பவிதா.


அப்பாவின் கனவு, எனது இலக்கு

“தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் அப்பா. கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற உணர்வைக் குழந்தை பருவத்தில் இருந்தே எனக்கும் அக்காவுக்கும் ஊட்டி வளர்த்தார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 484 மதிப்பெண் எடுத்தபோது, சைதாப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் என்னைச் சேர்த்துவிட்ட அப்பா, அங்கு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற சாதனை மாணவர்களின் பெயர் பலகையைக் காண்பித்து, அதில் உன் பெயரும் வர வேண்டும் என்றார்.

தினமும் எனது பாடங்களுக்கான புதிது புதிதான வினாத்தாள்களைக் கொண்டு வந்து அவற்றுக்கு என்னைத் தயார்படுத்தினார். அப்பாவோடு சேர்ந்து அம்மாவும் நான் எழுதியவற்றை விடைத்தாள்களைத் திருத்திக்கொடுத்து, என்னை மேலும் ஊக்கப்படுத்தி வந்தனர். பள்ளி தொலைவில் இருந்ததால் பள்ளிக்குச் சென்று வருவதற்கே தினமும் 4 மணி நேரம் செலவிட வேண்டியிருக்கும்.

அதனால், நான் பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போதே கூர்ந்து கவனித்துக்கொள்வேன். மேலும், ஆசிரியர்கள் வழிகாட்டுதல்படி படிக்க வேண்டிய பாடங்களைப் பட்டியலிட்டுப் பிரித்து, ஒவ்வொரு நாளும் இவ்வளவு படித்து முடிக்க வேண்டும் என்று இலக்கு வைத்துப் படித்து முடித்துவிடுவேன்.


படித்து முடித்தவற்றை வீட்டில் தேர்வெழுதிப் பார்த்துவிடுவேன். வீட்டில் படிக்கும் நேரம் குறைவாகவே இருக்கும்” என்கிறார் பவிதா.

தந்தை கூறியபடி பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, பள்ளியின் சாதனை மாணவியாகப் பெயரெடுக்க வேண்டும் என்ற கனவோடு காத்திருந்தபோதுதான் விபத்தில் அவருடைய தந்தை உயிரிழந்தார். செய்வதறியாது பரிதவித்துப்போன பவிதாவை அவருடைய ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி மீண்டும் பள்ளிக்கு வரவழைத்திருக்கிறார்கள்.

“சான்றோர்களின் பொன்மொழிகளை வீடு முழுவதும் அப்பா வைத்திருந்தார். அவற்றைப் பார்க்கும்போது, எனக்கு ஆறுதல் கிடைத்தது. பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியாகி எங்கள் பள்ளியில் முதல் மாணவியாக, மாநகராட்சிப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் ஒருவராகத் தேர்ச்சி பெற்றதை அறிந்தபோது, அப்பாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன் என்ற மனநிறைவு ஏற்பட்டது.

அப்பாவின் ஆசையில் ஒரு பகுதியை மட்டுமே நிறைவேற்றி இருக்கிறேன். ஐ.ஏ.எஸ். தேர்வெழுதி ஆட்சியராக வர வேண்டும் என்பது அப்பாவின் கனவு, எனது இலக்கு. அதையும் அடைந்தே தீர வேண்டும்” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் சோதனையைக் கடந்து சாதனைப் படைத்திருக்கும் பவிதா பிரீத்தி.

விடுமுறை கால சிறப்பு சேவை: அசத்தும் மதுரை இளைஞர்கள்

Published : 20 Jun 2018 09:46 IST

ஒய்.ஆண்டனி செல்வராஜ்



மாநகராட்சி கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கரும்பலகைக்கு வர்ணம் பூசும் இளைஞர்கள்.

கோடை விடுமுறையில் தூசிபடிந்து கிடக்கும் அரசு பள்ளிகளை சுத்தம் செய்து புதுப்பொலிவாக்கும் சேவையை செய்கிறது மதுரை ‘வா நண்பா’ என்ற இளைஞர்கள் குழு. இவர்களைப் பொருத்தவரை கோடை விடுமுறைக்கு விடுமுறை விடுகிறார்கள். விடுமுறைக் காலத்தில் அரசு பள்ளிகள் பூட்டியே இருக்கும். அந்த சமயங்களில் வகுப்பறைகள் பராமரிப்பு இன்றி தூசி படிந்து காணப்படும். புழக்கம் இல்லாதததால் பறவைகளின் எச்சம், எலிகளின் நடமாட்டத்தால் பள்ளிகள் அலங்கோலமாக மாறிவிடும்.

பள்ளிகள் திறந்ததும் முதல் நாள் வகுப்பறைக்குள் நுழையும் மாணவர்களால் உட்கார முடியாத நிலைமையில் தான் பெரும்பாலான பள்ளிகள் இருக்கும். இதனால் மாணவர்களை வைத் தோ ஆட்களைக் கொண்டோ சுத்தம் செய்த பிறகே மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்பறையில் அமர முடியும். கரும்பலகைகள் வெளுத்துக் கிடக்கும்.

இப்படி கோடை விடுமுறையில் பூட்டியிருக்கும் அரசு பள்ளிகளை சுத்தம் செய்யும் பணியில் மதுரையைச் சேர்ந்த ‘வா நண்பா’ இளைஞர்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஏதாவது ஒரு அரசு பள்ளியை தேர்ந்தெடுத்து சுத்தம் செய்கின்றனர். இதனால் பள்ளி திறந்து முதல் நாள் வரும் மாணவர்களுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

இவர்கள் ஏற்கெனவே ஏரி, குளங்கள், சாலைகள், பஸ் நிறுத்தங்கள், அரசு கழிப்பிடங்களை சுத்தம் செய்து பராமரிப்பது, பள்ளிகள், பொது இடங்கள், சாலைகளில் மரக்கன்றுகள் நடுவது, தேசத் தலைவர்கள் சிலைகளை சுத்தம் செய்வது போன்ற சமூகப்பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

இதுகுறித்த குழுவின் ஒருங்கிணைப்பாளரான எம்.சி.சரவணன் கூறியது:

பள்ளிகள் திறக்கும் போது மாணவர்கள் வகுப்பறையில் மகிழ்ச்சியாகவும், குதூகலமாகவும் இருக்க வேண்டும். பசங்களுக்கு படிக்கிற இடம் பசுமையாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். அதற்காக மதுரையில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளிகள் வளாகத்தில் குப்பைகளை அகற்றுவது, பள்ளி நுழைவு வாயில் முன் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை கிழிப்பது, வகுப்பறையில் தூசி, ஒட்டடைகளை அகற்றுகிறோம். பெஞ்ச், மேஜைகள் உடைந்திருந்தால் அதை சரி செய்து கொடுக்கிறோம். கரும்பலகைகளை வர்ணம் பூசுகிறோம்.

இது எங்களுக்கும் ஒரு புது அனுபவமாகவும் குதூகலமாகவும் இருக்கிறது. நாங்கள் மாநகராட்சி பள்ளிகளில் படித்தவர்கள் என்பதால் படித்த பள்ளிகளை சுத்தம் செய்வதை கடமையாக கருதுகிறோம்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு பள்ளியின் சுற்றுச்சூழலும் ஒரு காரணம். கரும்பலகைளை ஆண்டுதோறும் வர்ணம் பூசக்கூட பள்ளிகளில் நிதி ஆதாரம் இல்லை. அதனால் நாங்கள் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் அரசு பள்ளிகளை பராமரித்து புதுப்பொலிவாக்குகிறோம் என்றார்.

அரசுப் பள்ளிகளை பாதுகாக்கும் பணியில் அவற்றை சுத்தப்படுத்துவதும் முக்கியமானது என்பதை உணர்த்துகின்றனர் இந்த மதுரை இளைஞர்கள்.
சின்ன சின்ன வரலாறு 11: பூட்டு

Published : 22 Jun 2018 11:09 IST


லதா ரகுநாதன்





"ஒரு நிமிஷம்... கதவு சரியா பூட்டியிருக்கேனான்னு செக் பண்ணிட்டு வந்துடுறேன்’’ என்று வீட்டை விட்டுக் கிளம்பும்போது நாம் சொல்லும் அல்லது யோசிக்கும் விஷயம் இதுவாகத்தான் இருக்கும்.

இதற்கான அடிப்படைக் காரணம் "எனது பொருள்".

அதாவது, நான் , எனது, என் வீடு எனும் எண்ணம் தோன்றத் தொடங்கிய நாளிலிருந்து இந்த பூட்டுக்கான தேவையும் தொடங்கிவிட்டது.

நம் பொருளையும் வீட்டையும் பாதுகாக்கிற பூட்டு பற்றிய வரலாறு, தெரியவேண்டாமா நமக்கு?

பூட்டுச்சாவியின் வளர்ச்சியின் ஆரம்பப் புள்ளி ஒரு முடிச்சு. அதாவது பொருள்களை பாதுகாக்க கயிறு அல்லது அதைப்போன்ற ஒரு கட்டுமான பொருள் கொண்டு அவற்றைக் கட்டிவைக்கத்தொடங்கினார்கள். இது எந்த வகையில் பாதுகாப்பு என்பதைப்பார்த்தால், நம் பொருள் களவாடப்பட்டிருக்கிறதா என்பதை காட்டிக்கொடுக்க மட்டுமே இது உபயோகப்பட்டது. இதன் ஜுஜுபித்தனம் புரிய ஆரம்பித்ததும், பாதுகாப்பிற்கான தேடல் தொடங்கியது.

வரலாற்றில் யார் எப்போது என்ற விவரங்கள் தெரியவில்லை. முதலில் சொன்னதுபோல் மனிதன் தன் பொருள் என்று பிரித்துப்பார்க்கத்தொடங்கிய ஏதோ ஒரு காலத்திலேயே பூட்டின் வடிவம் ஜனிக்கத்தொடங்கி இருக்க வேண்டும். வரலாற்று ஏடுகளில் முதல் பூட்டுச்சாவி, அந்தக்கால மெசபடோமியா ராஜ்ஜியத்தின் ஒரு நகரான அஸ்ஸிரியாவில் கி.மு. 4000 லேயே உபயோகத்திலிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் இயந்திர பூட்டுக்களைச்செய்யத்தொடங்கிய கலாச்சாரம் எது என்று தெரியாததால் , எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோமாபுரியில் ஒரே சமகாலத்தில் வேறு வேறு விதமான பூட்டுக்கள் செய்யத்தொடங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பதிவு செய்யப்பட்ட முதல் வகை பின் லாக் எனும் வகை பூட்டு , ஆறாயிரம் வருடங்களுக்கு முன் எகிப்திய நாடுகளில் கட்டையால் செய்யப்பட்டது.இவை மரக்கதவுகளில் பொருத்தப்பட்டிருந்தது. இதற்கான சாவி நம் டூத்ப்ரஷ் போன்ற வடிவுகொண்டு , மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. பூட்டின் வெவ்வேறு ஓட்டைகளில் பொருத்தப்படும்போது, உள்ளே பொருத்தப்பட்ட பின்கள் விலகி, தாழ்ப்பாளை நாம் திறக்க இயலும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்களாலும், ருமேனியர்களாலும் இந்தப் பின் லாக் பூட்டுக்கள் கொஞ்சம்கொஞ்சமாக புதிய உருவம் எடுக்கத்தொடங்கின.

கிரேக்கர்களின் பூட்டு பாதுகாப்புக் குறைவாக கருதப்பட்டது. இதனால் ருமேனியர்கள் உலோகங்களினால் பூட்டுக்கள் செய்யத்தொடங்கினார்கள். இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம், பூட்டை பொருளின் பாதுகாப்பிற்காகக் கண்டுபிடித்த ருமேனியர்கள் , அதன் சாவியையும் பாதுகாக்க வழி கண்டுபிடித்தார்கள். கைகளிலேயே அணிந்து கொள்ளும் விதமாகச் சாவி வடிவமைக்கப்பட்டு, பொருட்களின் பாதுகாப்பை இரட்டிப்பாக்கினார்கள்.

அட, நாம் ஆன் லைன் பாங்கிங் செய்யும்போது வரும் டபுள் லெவல் செக்கிங் போலத்தான்!

முதலாம் நூற்றாண்டில் ரோம சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி அடைந்தபின் பூட்டின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய பூட்டாகப்போடப்பட்டது. பணப்பற்றாக்குறை மற்றும் தொழில் நுட்ப பற்றாக்குறை என்று பல காரணங்கள். ஆகவே இருக்கும் மாதிரி பூட்டுக்களையே சிக்கலாக்கி, ஒரு சாவியை விட்டுப் பல சாவிகள் கொண்டு திறக்க, கண்களுக்குத்தெரியாத கீஹோல்கள் என்று சிறிய மாற்றங்களே காணப்பட்டன.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பூட்டுக்களின் புதிய வளர்ச்சி ஆரம்பமானது. ராபர்ட் பரோனின் 1778 ம் வருடம் கண்டுபிடித்த டபுள் ஆக்டிங் டம்ப்ளர் லாக், 1784 ம் வருடம் ஜோசப் ப்ரம்மைய்யாவின் ப்ரமாஹ் பூட்டு, 1818 ம் ஆண்டு ஜெர்மையாவின் சப் பூட்டுக்கள், 1848ல் லினெஸ் ஏலின் பின் டம்ப்ளர் பூட்டு, 1857 ல் ஜேம்ஸ் சர்ஜெண்டின் தானே பூட்டிக்கொள்ளும் பூட்டு, 1916ல் சாம்வேல் சேகலின் ஜெமி ப்ரூஃப் பூட்டு, 1924ல் ஹாரி சோரெஃப்பின் முதல் பாட்லாக்.....

ஆனால் யார் கண்டது... இன்னும் ஒரு நூறு வருடங்களுக்குப்பின் இந்த வகை பூட்டுக்கள் வழக்கொழிந்து போகலாம். இயந்திர வகையிலிருந்து தற்போது மின்னணுவிற்கு பூட்டின் தன்மை மாறுபடத்தொடங்கி உள்ளது.

ஸ்மார்ட் கார்டுகள் கொண்டு , சிரி கொண்டு, அலெக்சா கொண்டு ஒரு வாய்ச் சொல்லிலேயே கதவைத் திறக்க முடிகிறது. ஃபேஸ் ரெகக்னுஷன் பழக்கத்திற்கு வந்துவிட்டது. ஆக என் கையில் சாவி என்பது மாறிப்போக நாமே சாவியாக மாறிவிட்டால் இந்தப் பூட்டு சாவிக்கான தேவை இல்லாமல் போய்விடும்.

இதுவரையில் பூட்டுக்கள் வைத்து நடத்தப்பட்ட போட்டிகளைப்பார்ப்போம்.

சொத்தைப் பாதுகாக்க எனும் நோக்கத்தால் தயாரிக்கப்பட்டதால், எப்போதுமே பூட்டுக்களின் தரத்தை நிர்ணயிக்கப் போட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. 1818ல் வைக்கப்பட்ட ஒரு போட்டியில் ஒரு கைதேர்ந்த பூட்டை உடைப்பவர் மூன்று மாதம் மிககஷ்டப்பட்டு உடைக்க நினைத்த சப் டிடெக்டர் பூட்டு உடைக்கமுடியாமல் போனதால், இதை வடிவமைத்த ஜெர்மியா சப்பிற்கு நூறு டாலர்கள் பரிசளிக்கப்பட்டன.

1784 ல் ப்ரமா லாக் கம்பெனியால் தயாரிக்கப்பட்ட சாலெஞ் லாக் லண்டன் பிகடெலியில் 67 வருடங்கள் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டு, பின் ஆல்பிரட் சார்ல்ஸ் ஹாப் என்பவரால் 16 நாட்கள் 51 மணி நேர உழைப்பிற்குப் பின்னர் திறக்கப்பட்டு அதற்கான பரிசான 200 டாலர்கள் வழங்கப்பட்டன.

இந்தியாவைப்பொருத்தவரையில் பூட்டு என்று சொன்னால் நம் நினைவில் வருவது அலிகார் பூட்டுக்கள் மற்றும் திண்டுக்கல் பூட்டுக்கள்.அலிகார் பூட்டுக்கள் புதிர் பூட்டுக்கள், அலங்காரப்பூட்டுக்கள், கைவிலங்கு பூட்டு, பொய் திறப்புக்கள் கொண்டவை என்று பல வகையில் தயாரிக்கப்பட்டன. மிக அதிக அளவில் இவை ஏற்றுமதியும் செய்யப்பட்டன.

பூட்டு பற்றி சொல்லும்போது சாவி பற்றியும் சொல்லியாகவேண்டும். செட்டிநாட்டுப் பகுதிகளில், இன்றைக்கும் பல வீடுகளில், கதவுடன் கொண்ட பூட்டு பொருத்தப்பட்டிருக்கும். அதன் சாவியைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு உள்ளங்கை நீளத்தை விட பெரிதாகவே இருக்கும். தவிர, அந்தச் சாவி கனமாகவும் இருக்கும்.

திண்டுக்கல்லில் இருந்து வந்த மங்கோ பூட்டுக்கள் அவற்றுடன் நம் வாழ் நாள் முழுவதும் அவை இருக்கும் என்ற டேக்குடன் வந்தன.

திண்டுக்கல் பூட்டுக்கள் கைகளால் செய்யப்பட்டவை. அலிகார் பூட்டுக்கள் இயந்திரங்களால் செய்யப்பட்டவை. அதனால் திண்டுக்கல் பூட்டுக்களின் விலை அலிகார் பூட்டைவிட இரண்டு மடங்கு அதிகம்.இரும்பினால் செய்யப்பட்டு பின் நிக்கல் அல்லது க்ரோமியம் கொண்டு இவை பூசப்பட்டன.ஒரு காலத்தில் இவை அரசாங்க தேவைகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டன.

இங்கே பேலன்ஸ்டைன் நாட்டைப்பற்றி ஒன்று சொல்லவேண்டும். 1948 ல் நடந்த ஒரு போரில் பாலஸ்தீனர்கள் அகதிகளாக நாட்டை விட்டு துரத்தப்பட்டார்கள். அப்போது, அவர்களின் வீட்டின் சாவியை பத்திரமாக கைகளில் எடுத்துக்கொண்டு சென்றார்களாம். என்றாவது திரும்பி வந்தால் உபயோகப்படும் என்று. அவை தற்போது அவர்களின் வாரிசுகளின் கைகளில் வழிவழிச்சொத்தாக இன்றும் பாதுகாக்கப்படுகிறதாம்.

யார் கண்டது , இனி வரும் காலங்களில் பூட்டுச்சாவிகள் வழக்கொழிந்து சென்றபின் நாமும் நம் கைகளில் நம் வீட்டுச்சாவி அல்லது பீரோ சாவியை நம் சொத்தாக பாதுகாக்கக்கூடும்.

பொருட்களைப் பாதுகாக்க, வீட்டையே பாதுகாக்க எத்தனை நவீனமான பூட்டுகள் வந்தாலும் போனாலும், ’அவனுக்கு ஒரு வாய்ப்பூட்டு போட்டா தேவலை’ என்று சொல்வது, தொடர்ந்துகொண்டே இருக்கும் போல!

பொருளை எப்படியேனும் காபந்துபண்ணிவிடலாம். நம் சொற்களை காபந்து பண்ண பூட்டு தேவை... வாய்ப்பூட்டு தேவை!
மருந்துகளைக் கைவிடுவதன் ஆபத்துகள்!

Published : 22 Jun 2018 07:53 IST

எஸ்.சுஜாதா

 


மருத்துவ அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, இன்று பெரும்பாலான நோய்களை மருந்துகளின் துணைகொண்டு முழுமையாக குணப்படுத்த முடியும் அல்லது குறைந்தபட்சம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனால், நாள்பட்ட நோய்களுக்காக மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை லட்சக்கணக்கானவர்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வதில்லை என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.

விழிப்புணர்வு அதிகம் பெற்ற அமெரிக்கர்களிலேயே 30% பேர் மருந்துச் சீட்டை, மருந்துக் கடைக்கு எடுத்துச் செல்வதில்லை. சுமார் 50% மக்கள் நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்கு எடுத்துக்கொள்வதில்லை. மருந்துகளை எடுத்துக்கொள்ளாததால் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1.25 லட்சம் பேர் மரணமடைகிறார்கள். 10% பேர் நோயால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்கள் மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால் மிகப் பெரிய செலவுகளைத் தவிர்த்திருக்க முடியும் என்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள்.

இந்தியாவிலும் மருத்துவமனைக்கு வருபவர்களில் நான்கில் ஒரு பங்கினர் தொடர்ச்சியாக மருந்துகளை எடுத்துக்கொள்வதில்லை. இன்னும் ஒரு பகுதியினர் பிரச்சினை வரும்போது மட்டும் மருந்துகளை எடுத்துக்கொண்டு, பிறகு விட்டுவிடுகிறார்கள்.

என்னென்ன காரணங்கள்?

பின்விளைவுகள்: யாரோ ஒருவருக்கு இந்த மருந்து எடுத்துக்கொண்டதால் மோசமான பின்விளைவு ஏற்பட்டதாகச் சொன்னதை நினைத்து பயந்துகொண்டு, மருந்துகளைக் கைவிடுகிறார்கள்.

புரிந்துகொள்ளாமை: இந்த நோய்க்கு இவ்வளவு காலம் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற புரிதல் இல்லாமை.

வாங்கும் சக்தி குறைவு: அதிக விலைக்கு விற்கப்படும் மருந்துகளை வாங்கும் சக்தி இல்லாத மக்கள், மருந்துகளை எடுத்துக்கொள்வதில்லை.

அதிக எதிர்பார்ப்பு: மருந்துகளை விழுங்கியவுடன் தீர்வை எதிர்பார்ப்பது. அப்படி உடனடித் தீர்வு கிடைக்காவிட்டால், மருந்துகளைச் சாப்பிடுவதில்லை.

மன அழுத்தம்: மருந்துகளிலேயே தங்கள் வாழ்க்கை ஓடுகிறதே என்று மன அழுத்தத்தில் விழுகிறவர்கள் மருந்துகளைப் புறக்கணிக்கிறார்கள்.

நம்பிக்கையின்மை: பொதுவாக மருத்துவர்களும் மருந்து நிறுவனங்களும் நோயாளிகளை ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் முக்கியக் காரணம்.

ஆரோக்கியக் கேடு: தொடர்ந்து சில மருந்துகளை எடுத்துக்கொண்டால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம் என்பதால், மருந்துகளை ஆரோக்கியக் கேடாக எண்ணி விட்டுவிடுகின்றனர்.

பெண்கள்: வீட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, தங்கள் உயிரைத் துச்சமாகக் கருதும் பெண்கள், மருந்துகளைப் புறக்கணிப்பதில் முன்னணியில் இருக் கிறார்கள்.

தீர்வு என்ன?

நம் நாட்டில் நோயாளிகளிடம் பெரும்பாலான மருத்துவர்கள் நோயின் தன்மையையும், மருந்துகளின் அவசியத்தையும் தெளிவாக விளக்கிச் சொல்வதில்லை. ஏழை, எளிய மக்களால் வாங்க இயலாத மருந்துகளுக்குப் பதில் விலை குறைந்த மருந்துகளைப் பரிந்துரைப்பதில்லை. உயிரின் மகத்துவத்தை நோயாளிகளும் மருத்துவர்களும் மட்டுமின்றி மருந்து நிறுவனங்களும் புரிந்துகொண்டால், மருந்துகள் எடுத்துக்கொள்ளாமல் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கலாம்!

எஸ். சுஜாதா,

தொடர்புக்கு: sujatha.s@thehindutamil.co.in

NEWS TODAY 25.07.2026