Sunday, September 2, 2018

Dental

Not many takers for seats in private dental colleges

R. Sujatha

CHENNAI, SEPTEMBER 02, 2018 00:00 IST

UPDATED: SEPTEMBER 02, 2018 04:30 IST

High fee structures keep students away from self-financing institutions

High scores in NEET have resulted in tougher competition this year.

The Hindu had indicated (‘Rise in pass percentage could see competition intensify’ published on June 5) that the competition was likely to be tougher in the MBC category.

Tougher competition has not, however, led to more students seeking admission to self-financing colleges. Though medical seats under management category were filled, the same did not happen for dental seats.

Vacant seats

At the end of counselling for government quota seats in self-financing dental colleges on Thursday, 284 seats remained vacant.

Last year, 265 seats remained vacant in management quota even after the second mop-up round. Counselling for management quota seats ended on Saturday with a total of 569 seats remaining vacant. There will be another mop-up round to fill the vacancies next week, officials said.

High fee structures, sometimes double of what has been stipulated by the fee fixation committee and the prospectus, have left students stranded, despite having good score in NEET.

Harrowing experience

Kantesh Kumar Singh, father of a medical aspirant, who after a harrowing experience in a self-financing college last year, approached the DME and the Health department for reprieve, but got none. He termed the mention of “tuition fee” in the State’s MBBS prospectus as ambiguous.

Despite seeking details under the Right to Information Act, no response was forthcoming, he added.

The fee fixation committee has determined Rs. 6 lakh as tuition fee, but colleges routinely flout the norms and demand as much as Rs. 8 lakh per annum.

Poor response has forced at least one college to announce that it would charge government-stipulated fee only.

But it has probably come too late.

The Directorate of Medical Education has also proposed to conduct one more mop-up round in the first week of September.

The Dental Council of India has given time till September 15 to complete the admission process.

There will be another mop-up round to fill the vacancies next week, officials said

Monday, August 27, 2018

காற்றில் கரையாத நினைவுகள் 24: எது பொற்காலம்!

Published : 14 Aug 2018 09:11 IST
 
வெ.இறையன்பு



மனம் பழையவற்றை வசந்தகாலமாக எண்ணிப் பார்க்கும் விசித்திரம் கொண்டது. சிலநேரங்களில் விடு பட்டவைகூட மகிழ்ச்சியானதாக தோன் றும். விடுதலையானவன் சிறைச்சாலையைக் கடக்கும்போது சோகப்படுவதுபோன்ற ஒருவித மயக்கம் அது. சமூக அளவில் இந்த 50 ஆண்டுகளில் எத்தனையோ விரும்பத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக் கின்றன. கல்லூரியில் கிராம முகாம் சென்றபோது, அங்கிருந்த தேநீர் கடைகளில் இரட்டைக் குவளைகள் இருப்பதைப் பார்த்து வேதனைப் பட்டோம். ஒருவரை ‘ஒதுக்கிவைக்கப்பட்டவர்’ எனக் குத்திக் காட்டு வதற்கு அதனினும் வேறு முத்திரை இல்லை. இன்று எல்லா இடங் களிலும் காகிதக் குவளைகள் அந்த அவலத்தை அறவே நீக்கி விட்டன. மனிதர்கள் செய்ய முடியாததை தொழில்நுட்பம் சாதித்துவிட்டது.

இந்திய ஆட்சிப் பணி என்பது கனவாக இருந்த காலம் மாறி எண்ணற்ற சிற்றூர்களில் இருந்து தமிழில் படித்தவர்கள் எழுதித் தேர்ச்சி பெற்று இந்தியாவெங்கும் உயர்ந்த பணிகளில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறோம். மாதிரித் தாள்கள் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள சென்னையில் ஒரு வாரம் தங்கியிருந்து நடையாக நடந்து அவற்றைப் பெற்ற அனுபவம் எனக்கு உண்டு.

இன்று விரலைச் சொடுக்கினால் விவரங்கள் குவியல் குவியலாக வந்துவிழும் இணைய வசதி. அரிய புத்தகங்களை எளிதில் பெறும் வசதி. உலகின் எந்த மூலையில் கிடைக்கும் புத்தகத்தையும் கணினியில் பதிவிறக்கம் செய்து விடலாம். அறிவு ஒரு சாராருக்கே சொந்தம் என்பதை அடித்து ஒடித்த விஞ்ஞான முன்னேற்றம். எந்த நாட்டுக்கும் ஒரு விநாடியில் மின்னஞ்சல் அனுப்ப முடியும் என்ற அதிவேக தகவல் பரிமாற்ற வசதி.

நிறைய குழந்தைகள் பெரிய வயிற்றுடன். வெளிறிய முகத்துடன். குழி விழுந்த கண்களுடன் போஷாக்குக் குறைவுடன் இருந்த நிலை மாறி இன்று ‘ஊளைச் சதையை குறைப்பது எப்படி?’ என்கிற கவலையில் பெற்றோர். அன்று கோழிமுட்டை என்பது ஒரு சில கடைகளில் இரும்புக் கூடையில் உறியில் தொங்கும் அபூர்வ வஸ்து. பால் காலையில் மட்டுமே கிடைக்கும் அரிய பண்டமாக இருந்த நிலை மாறி, 24 மணி நேரமும் பாக்கெட்டில் வாங்கி வரும் பொருள்.

வதவதவென பிள்ளைகளைப் பெறுவது வாடிக்கையாக இருந்தது. பெண்கள் உடல்நலம் குறைந்து, ஆண்கள் கவலைகள் நிறைந்து அப்போதெல்லாம் கதைகளில் ‘40 வயதுப் பெரியவர்’ என்று எழுதும் வழக்கம் இருந்தது. இன்று 60 வயது நிறைந்தவர்களும் 20 வயதுபோல இருக்க முனைகிறார்கள். வயது என்கிற வரையறை இன்று எடுபடுவதில்லை.

எங்கு பார்த்தாலும் ஓலைக் குடிசைகள் இருந்த சிற்றூர்கள் இன்று மெல்ல மெல்ல மாறி வருகின்றன. அப்போது ஓட்டு வீடு அரிது. மாடி வீட்டை கல்வீடு என்று அழைப்பார்கள். இன்று பல வீடுகள் மச்சு வீடுகளாக மாறி வருகின்றன. அரசு கட்டித் தரும் வீடுகளும், மானியத்தால் உருவாக்கப்படும் இல்லங்களும் நிமிர்ந்து நிற்கின்றன. அன்று வசதியுள்ளவர் உபயோகித்த ஆடைகளை வாங்கி அணிந்து கொள்ள சிலர் ஆயத்தமாக இருந்தார்கள். இன்று பழைய துணிகளை யாரும் பெற விருப்பமாக இல்லை.

இன்றைய தலைமுறை சென்ற தலைமுறையைவிட உயரமாகிக்கொண்டிருக்கிறது. ஊட்டச்சத்துக்கள், புரதம் போன்றவை தாராளமாகக் கிடைப்பதும் இதற்குக் காரணம். தெளிவான முகமும், தோற்றப் பொலிவும் அனைவருக்கும் சாத்தியமாகும் நிலை உருவாகிக்கொண்டு வருகிறது. பலரது முகத்தில் படித்த களையும், கற்றறிந்த தேஜசும் காணப்படுகின்றன. கல்லூரிக் கல்வி ஒரு சில ருக்கு மட்டுமே என்பது மாறி மேனிலைப் பள்ளி களாக மூலைமுடுக்குகளிலெல்லாம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. பொறியியல் படிப்பு சிற்றூர்களிலும் கிடைக்கிறது. பள்ளிப் பக்கமே எட்டிப் பார்க்காத குடும்பங்களில் மருத்துவமும், பொறியியலும் சாத்தியமாகியிருக்கின்றன.

வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. வாங்கும் திறன் அதிகரித்திருக்கிறது. பஞ்சம், பட்டினி ஆகியவற்றின் தாக்கம் குறைந்திருக்கிறது. சோப்புகூட ஆடம்பரப் பொருள் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. இன்று சின்னச்சின்ன ஊர்களிலும் உடல் தூய்மையை உறுதிசெய்யும் பொருட்கள் சின்னப் பொட்டலங்களாக கண் சிமிட்டி மின்னுகின்றன. ஊருக்கு ஓர் ஆங்கிலப் பள்ளி என்றிருந்த நிலை மாறி திரும்பிய பக்கமெல்லாம் ‘ஆங்கிலவழி படிப்பு’ என்று அந்நிய மொழியில் படிப்பது இப்போது சர்வசகஜமாகிவிட்டது. ஆனால், தமிழும் சரியாகப் படிக்கத் தெரியாமல் ஆங்கிலமும் முறையாக பேசத் தெரியாமல் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு காலாய்த் தடுமாறும் தலைமுறை ஒன்று உருவாகியிருக்கிறது.

இன்று சமூக விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. திரைத் துறையினரும் நடிப்பு மட்டுமே வாழ்வு என நினைக்காமல் மக்களின் நாடித் துடிப்புகளையும் அறிந்து களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி எதையோ தொலைத்த உணர்வு எங்கள் தலைமுறையில் அனைவருக்கும் இருக்கிறது. அந்த இனம்புரியாத சோகத்தை எப்படி ஆற்றுவது என்று புரியாமல் அடிக்கடி பழைய நினைவுகளில் மூழ்கி மகிழ்ச்சியாக இருந்த காலங்களை மனத்தால் வருடிப் பார்க்கின் றோம்.

பிள்ளைகளுக்கு எல்லாம் வாங்கித் தந்தும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்று தோன்ற வில்லை. ஆனால் அன்று எதுவுமே யாரும் வாங்கித் தராமலேயே நாங்கள் மகிழ்ச்சியாக இருந்த உணர்வு. இன்று வீட்டில் பொருட்களெல்லாம் குவிந்தும் ஒருவித வெறுமை. உறுப்பினர்கள் நிறைந்தும் ஒருவிதத் தனிமை.

மிகுந்த பாதுகாப்பான வாழ்க்கைக்கு நடுவில் ஏதோ பயம் ஊஞ்சலாடுகிறது. தூங்கி எழும்போது பொழுதை ரசித்துக்கொண்டு எழுபவர்கள் குறைவு. எதுவும் இல்லாதபோது இருந்த சுதந்தரம் எல்லாம் இருக்கும்போது பறிபோனதைப் போன்ற பரிதாபம்.

நம் உறவுகளையும், உரிமைகளையும் யாரோ வழிப்பறி செய்ததைப்போன்ற எண் ணம். ஏதோ ஒன்று குறைகிற மாதிரியே எப்போதும் இருக்கிறது. சுவர்கள் பலமாக இருந்தாலும் இதயம் பலவீனமாக இருக்கிறது.

நாகையில் கல்லார் தர்காவில் கந்தூரி விழாவின்போது அங்கு இருக்கும் இஸ்லாமிய நண்பர்கள் அக்கரைப் பேட்டை நைனியப்ப நாட்டாரை `அப்பா’ என்று அழைப்பதைப் பார்த்து பூரித்துப் போயிருக்கிறேன். சின்ன வயதில் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் சுபான் பாயும், விக்டர் குடும்பமும் அண்ணன், தம்பிகளாக உறவு வைத்து அழைத்துப் பழகியது நினைவுக்கு வந்தது. இப்போது அக்கம்பக்கங்களில் ஏனோ கண்ணுக்குத் தெரியாத இமயத் தடுப்புகள் பிரி வினைகளின் பெயரால் எல்லா இடங் களிலும் விரவிக் கிடப்பதைப் போன்ற வேதனை.

புதிய புதிய சந்திப்புகளில் பழைய உறவுகளையும், நட்புகளையும் தொலைத்துக்கொண்டே இருக்கிறோம். எல்லாம் மேம்போக்காக இருக்கும் பழக்கத்தில் மையத்தைத் தவற விடுகி றோம்.

இழந்தவற்றை நினைவுபடுத்த எப்போதும் இல்லாத அளவு எல்லா இடங்களிலும் பழைய மாணவர்கள் சந்திப்பு. அங்கு வழியிலேயே இடறி விழுந்தவர்கள் நினைவில் இதயம் வலிக்கிறது.

ஓய்வுக்குப் பிறகு சகோதர சகோதரிகள் ஒரே இடத்தில் ஒன்றாய்த் தங்க முடியாதா! செலவைப் பிரித்து உணவைப் பகிர்ந்து உயிரை நீட்டிக்க முடியாதா! ஒரே சமையலறையில் உள்ளங்கள் ஒன்றாக மாலையில் பழங்கதைகள் பேசி களித்திருக்க இயலாதா! அதிக நாட்கள் முடியாவிட்டாலும் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு வாரமாவது ஒன்றாய்க் கூடி மகிழலாமே!

அப்போது அந்தப் பொற்காலம் திரும்பலாம்.

அன்பின் ஆதிக்கம் அனைத்து சுயநலங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு எழும்பி நிற்கும் காலம்தானே பொற்காலமாக இருக்க முடியும்!

- நிறைந்தது -
வாஜ்பாய்: அள்ள அள்ளக்குறையாத உயர்ந்த பண்புகளின் பொக்கிஷம்

Published : 18 Aug 2018 12:08 IST

பால்நிலவன்



நல்ல தலைவர்களை வாழும்போதே அரசியலிலிருந்து அப்புறப்படுத்தும் நாம், அவர்கள் மறைவின்போது கொஞ்சமாவது நினைவுகூர வேண்டும். அதிலும், அரசியல் நாகரிகத்தின் இலக்கணமாகத் திகழ்ந்தவர், தென்னகத்தின் மீது குறிப்பாக தமிழகத்தின் மீது உள்ளார்ந்த நேசம் செலுத்திவந்த வாஜ்பாயைப் பற்றிப் பேசுவது நல்ல அரசியலைப் பற்றிப் பேசுவதாகும்.

சுவரில் மாட்டப்படும் இன்னுமொரு படமாக இல்லாமல் சுழலும் பூமிக்கு ஒரு பாடமாக வாழ்ந்தவர் வாஜ்பாய். அவரை நாம் அறிந்துகொண்ட செய்திகளை விட அறியாத சிறப்புகளே அதிகம்.

அரசியல் பாதையில் ஒரு 'பெஸ்ட் பார்லிமென்டேரியன்' என்று பெயரெடுத்த ஒருவருக்கு இந்தியாவை அங்குலம் அங்குலமாக நேசித்ததோ மனித உறவுகளை மேம்படுத்தி அழகு பார்த்ததோ ஆச்சரியம் இல்லைதான்.

நேற்று திருவல்லிக்கேணி லாம்சி பிளாஸா டீ ஸ்டாலில் அவ்வளவு டேபிள்கள் கூட்டம் நிறைந்திருக்க எங்கள் டேபிளுக்கு தானாக விரும்பி வந்து அமர்ந்த ஒரு நண்பர் கேட்டார். 'பெஸ்ட் பார்லிமென்டேரியன்' ரைட்டு, ஆட்சியைத் தக்கவைக்க போயஸ் கார்டனுக்கு நடையா நடந்தாரே அவ்வளவு உயர்ந்த தலைவரே அப்படி இறங்கி வரலாமா? என்று.

சரியான கேள்வி, உயர்ந்த தலைவர்கள்தான் இறங்கி வரமுடியும். அன்றைக்கு அதிமுகவிடம் நிறைய எம்.பி.க்கள் இருந்தனர். ஆட்சியைத் தக்கவைப்பது என்பதைவிட காங்கிரஸுக்கு மாற்றாக, திடமான ஓர் ஆட்சியை நிலைப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இருந்தது. ஆனால் அவ்வளவு பெரிய மனிதர் நேரில் வந்தும் போயஸ் கார்டன் அதைக் கருத்தில் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. காரணம் அவர்களுக்கும் நிறைய கோரிக்கைகள் இருந்தன. ஆதரவு தர முன்வருபவர்கள் கோரிக்கைகள், நிபந்தனைகளை வைக்கத்தானே செய்வார்கள். ஒரு கட்டத்தில் அவரது ஆட்சியே கவிழ்க்கப்பட்டது.

அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. இன்னுமொரு பொதுத் தேர்தலில் நம்பிக்கையோடு களமிறங்கினார். பலமான கூட்டணியோடு ஆட்சியைக் கைப்பற்றினார் என்பதை மட்டும் அப்போதைக்குப் பதிலாக சொல்லமுடிந்தது.

உண்மையில், ''குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேனும் காத்தல் அரிது'' என்ற குறளுக்கு உதாரணமாகத் திகழ்ந்த மனிதர் அவர். 23 கட்சிகளை இணைத்து அடுத்த ஐந்து ஆண்டுகள் ஒரு ஸ்திரமான காங்கிரஸ் அல்லாத ஒரு மாற்று அரசியலை இந்தியாவில் நிலைப்படுத்தினார் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா?

ஆனால் அது உண்மையான பாஜக ஆட்சிக்கு உதாரணமாகத் திகழ்ந்த ஆட்சி அது. அதற்குள் சில நடவடிக்கைகளில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் மிதமான, தீவிரமான ஆட்சிகளை நாம் பார்த்து வருகிறோம். இதமான ஒரு ஆட்சி என்றால் அது வாஜ்பாய் ஆட்சிதான்.

சின்ன வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தாலும் ஒரு கம்யூனிஸவாதியாக அவரது சிந்தனைகள் விளங்கின. காந்திய சோஷலிசத்தில் நம்பிக்கை கொண்டவர். நேர்மையே பாடம் கற்றுக்கொள்ளவேண்டிய மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் 77-79களில் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலையின்போது இரண்டாண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். அதன் பிறகு காங்கிரஸுக்கு மாற்று தேவை என்பதை உணர்ந்தார். அதன் பின்னர் அவரே 80களில் பாஜகவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஒருவகையில் பாஜகவின் தந்தை அவர். இத்தகைய பிதாமகனிடம்தான் 96களில் இந்தியா ஒப்படைக்கப்படுகிறது.

அவரது ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்திலிருந்து திடீரென்று நேரு படம் அகற்றப்பட்டது. நேரு போன்ற சோஷலிஸ சிற்பிகளின் படங்களினால் நாடாளுமன்றத்திற்குத்தான் பெருமை... அதை அங்கேயே வையுங்கள் என்று உத்தரவிட்டார்.

மாற்று சிந்தனையாளர்கள் என்றாலும் அவரது கோரிக்கைகள் நியாயம் இருப்பின் அதை நிறைவேற்றுவதில் எந்த சுணக்கமும் அவரிடம் பார்க்க முடியாது.

ஒருமுறை டெல்லியில் பெரியார் மையம் இடிக்கப்பட்டபோது, கி.வீரமணி போன்றவர்கள் அவரிடம் முறையிட்டனர். உடனே பெரியார் இடத்திற்கு அதைவிட பெரிய இடத்தை ஒதுக்கித்தர உத்தரவிட்டார் வாஜ்பாய்.

ஒரு வற்றாத ஜீவநதியின் ஊற்றைப்போல ஒரு சிறந்த மனிதனின் வாழ்க்கையில், அற்புதமான செய்திகள் வந்துகொண்டேயிருக்கும். நெருக்கடி நிலை காலத்திலிருந்து இந்திரா காந்தியின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்த வாஜ்பாய் சஞ்சய் காந்தி மரணத்தின்போது அமைதி காத்தார். ஒரு தாயின் வலி எத்தகையது என்பது அவருக்குத் தெரியும். அதை மதிக்கவேண்டும் என்ற உணர்வில் இந்திராவை விமர்சிப்பதை கொஞ்ச காலம் தள்ளிப்போட்டார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது வாஜ்பாய் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலம், சிறுநீரக பிரச்சினையில் அவதிப்பட்டு வந்த வாஜ்பாயை ராஜீவ் காந்தி அழைத்தார். நான் ஐநா சபையில் உரையாற்றச் செல்கிறேன். நீங்களும் வாருங்கள், அமெரிக்காவில் நல்ல சிகிச்சையை எடுத்துக்கொண்டு தாங்கள் உடல்நலம் பெற வேண்டும் என்று அழைக்க இவரும் அவருடன் செல்கிறார். ஐநா சபை கூட்டத்தை முடித்துக்கொண்ட ராஜீவ் வாஜ்பாயிடம், சிகிச்சை முழுமையாக முடிந்தபிறகே நீங்கள் இந்தியா திரும்பவேண்டும் அதற்கான ஏற்பாடுகளைப் பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம் என்று கூறிவிட்டு வந்ததை நன்றியோடு ஒரு நேர்காணலில் நினைவுகூர்கிறார் வாஜ்பாய்.

எளிமை, தன்னடக்கம், நன்றியுணர்வு, யாரையும் மதித்தல் என்பதில் அவரது குணங்கள் ஒவ்வொன்றும் அனுபவங்களாகவே வெளிப்பட்டுள்ளன.

பிரதமராவதற்கு முன்பு மதுரை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேச வந்தார். அப்போது வாஜ்பாய் வந்த கார் ரிப்பேர் ஆகிவிடுகிறது. சாலையில் ஒரு டவுன்பஸ் தென்பட நான் இதிலேயே மதுரை போகிறேன் என்று சொல்லிவிட்டு அதில் ஒரு ஏறி அமர்ந்து எளிய மனிதனாகப் பயணம் செய்து மதுரைக் கூட்டத்தில் பேசினார்.

அப்போதெல்லாம் டெல்லியின் நடைபாதைகளில் இவர் அடிக்கடி நடந்து செல்வதை சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும் என்கிறார்கள் டெல்லி வாசிகள்.

கிராமப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த சுயஉதவிக்குழுக்களை தொடங்கி சாதித்துக் காட்டிய சின்னப்பிள்ளைக்கு ஸ்த்ரீ சக்தி புரஷ்கார் விருது வழங்கியபோது அந்தப் பெண்மணியின் காலைத் தொட்டு வணங்கியதை நாம் எளிதில் மறந்துவிடமுடியாது.

தேசியத் தலைவர்களில் தமிழகத்தை நேசித்ததில் பலரையும் விட வாஜ்பாய் ஒருபடி மேலே நிற்பவராகத்தான் இருக்கிறார். அண்ணா எம்.பி.யாக டெல்லி வந்த நாட்களில் அவருடன் இனிமையாகப் பழகிய நாட்களை அடிக்கடி நினைவுகூர்கிறார் வாஜ்பாய். அதுமட்டுமின்றி இவரது கவிதைத் தொகுப்பு தமிழில் வெளியானபோது அதில் எனது அருமை நண்பர் அண்ணாவுக்கு சமர்ப்பணம் என்று முதல் பக்கத்தில் எழுதியிருந்தார்.

அப்துல் கலாமை வைத்து அணுகுண்டு சோதனைகள் நிகழ்த்தியதோடு அவரையே நாட்டின் ஜனாதிபதி ஆக்கி அழகு பார்த்தார்.

2001-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் வாஜ்பாய் கலந்துகொண்டபோது அதில் கருணாநிதி பேசுகையில், நாங்கள் ஒன்றாக போராடிய அவசர நிலை காலத்தை மறக்கமுடியாது என்று பேசினார்.

உண்மையான தேசப்பற்றுமிக்க முன்னுதாரண பாஜக ஆட்சியைத் தந்த பிதாமகனை இழந்ததில் இந்தியா மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.

ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும்போது லட்டு வாங்கி வருகிறேன், ஜிலேபி வாங்கி வருகிறேன் என்று அழும் குழந்தைகளுக்கு ஆசைகாட்டி புறப்பட்டுச் செல்லும் தந்தையைப் போல கடைசிவரைக்குமே வாயால் வடைசுடும் தலைவர்கள் நிறைந்த நமது நாட்டில் நிச்சயம் வாஜ்பாய் தனித்துவமானவர்.

வழக்கமாக மூவர்ணக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டுவிட்டு அடுத்தநாளே வேலைமுடிந்தது என்று மறந்துபோய்விடக்கூடிய சம்பிரதாயத்துக்குள் வாஜ்பாய் அடங்கப் போவதில்லை.


SC: Second marriage valid even if plea-against-divorce is pending 

26 Aug 2018 | 


By Shiladitya Ray

While interpreting the Hindu Marriage Act, the Supreme Court clarified that a person's second marriage will be considered valid even if a plea against a divorce is pending.

In making the ruling, the Supreme Court overturned an earlier judgement by the Delhi High Court which saw a man's second marriage being declared void because of a pending plea against divorce.

Here are the details.

In context: SC makes new ruling on re-marrying

26 Aug 2018SC: Second marriage valid even if plea-against-divorce is pending

HC judgementWhat the Delhi High Court had ruled earlier

The Delhi High Court, while hearing a case, had earlier ruled that a marriage solemnized during the pendency of an appeal against divorce would be considered void, as it would be in contravention to Section 5(i) of the Hindu Marriage Act that places a restriction on marriage if a marrying party has a spouse alive.

However, the Supreme Court overturned this judgement.


Legal positionThe Supreme Court's interpretation of the Hindu Marriage Act

The Supreme Court observed that the post-divorce "incapacity to marriage" under the Hindu Marriage Act did not translate to treating a former marriage as subsisting, and therefore a marriage contracted during this period would not be treated as void.

It added that restrictions on remarriage would also not be applicable for cases which parties have settled or decided not to pursue.

The ethos behind the legal position 


"The Hindu Marriage Act is a social welfare legislation and a beneficent legislation and it has to be interpreted in a manner which advances the object of the legislation," explained a bench of justice S A Bobde and L Nageswara Rao.

Pressinformation New medical Colleges last three years

Press Information Bureau
Government of India
Ministry of Health and Family Welfare
07-August-2018 16:51 IST
New Medical Colleges

During the last three years the Central Government has permitted to start 86 new Medical Colleges. The details are given below:

Number of Medical College established during last three years State/UT wise
SL.
State/UT
2016-17
2017-18
2018-19
1
Andhra Pradesh
4
0
0
2
Arunachal Pradesh
0
0
1
3
Assam
0
0
0
4
Bihar
0
0
0
5
Chhattisgarh
3
0
0
6
Delhi
1
0
0
7
Gujarat
1
2
2
8
Himachal Pradesh
1
2
1
9
Haryana
2
2
0
10
J & K
0
0
0
11
Jharkhand
0
0
0
12
Karnataka
6
1
0
13
Kerala
3
1
0
14
Madhya Pradesh
5
0
4
15
Maharashtra
2
1
1
16
Mizoram
0
0
1
17
Orissa
0
2
2
18
Punjab
0
0
0
19
Rajasthan
3
0
5
20
Tamil Nadu
3
1
0
21
Uttar Pradesh
9
2
1
22
Uttarakhand
2
0
0
23
West Bengal
1
0
1
24
Sikkim
0
0
0
25
Meghalya
0
0
0
26
Nagaland
0
0
0
27
Tripura
0
0
0
28
Puducherry
0
0
0
29
Telangana
5
0
2
30
A & C Nicobar
0
0
0

Total
51
14
21

The Minister of State (Health and Family Welfare), Shri Ashwini Kumar Choubey stated this in a written reply in the Rajya Sabha here today.

*****
MV/LK

Sunday, August 26, 2018

Medical Admissions

1,550 MBBS seats may be added to TN govt, pvt colleges next yr

Pushpa.Narayan@timesgroup.com

Chennai

: Tamil Nadu may be able to add more than 1,500 MBBS seats to its kitty if the state government and managements of self-financing colleges have their way. Most of these colleges have applied to the Medical Council of India (MCI), the apex body that regulates medical education, in this regard.

On Friday, officials said the government had issued “no-objection certificates” to Madurai-based CSI Medical College and Research and Kovai Medical Centre in Coimbatore, both self-financing institutions, for 150 seats each, and the directorate of medical education recommended the names of Panimalar Medical College and St Peters’ Medical College – also for 150 seats each.

Besides, three colleges that were debarred by the MCI for two years from 2017 can begin admitting 150 students each in 2019, officials said.

State plans to set up new med college in Karur with 150 seats

In 2017, the MCI had barred Annai Medical College in Kancheepuram, Annapoorna Medical College in Salem and Madha Medical College in Chennai from admitting students, after they were found to have a shortage of faculty and infrastructure and had included the names of doctors who were not working in the institute as faculty members.

Ponniah Ramajayam Medical College, which had been denied permission last year, has reapplied for permission. If these self-financing colleges get approval, they will account for 1,200 additional seats. “As long as they have prescribed faculty and standard infrastructure, permission is given to new colleges. Inspection will be conducted in all the colleges before they are given permission. If we continue to have seat-sharing process, there will be a substantial increase of government quota seats next year,” said MCI vice-chairman C V Bhirmanandam.

In addition, the state government is planning to set up a new medical college in Karur with 150 seats. “Earlier, we always applied for 100 seats then increased seats step by step. After setting up a medical college in Pudukottai it was decided that all new colleges should have at least 150 seats,” said director of medical education Dr A Edwin Joe.

At present, the state has 22 government medical colleges offering 2,750 MBBS seats, 13 self-financing medical colleges and close to 10 deemed universities. This year, the state will apply for an increase of 100 seats each in Tirunelveli and Madurai medical colleges to 250 seats. “As a policy we have decided that we will add one new college every year. Whether or not that happens we will increase the number of seats in all government medical colleges to 250,” he said.

Flight info

Snag forces AI flight to return to Singapore

Murali N. Krishnaswamy

CHENNAI, AUGUST 26, 2018 00:00 IST

It was en route to Chennai

Air India’s operations on the Mumbai-Singapore-Chennai-Singapore-Mumbai sectors were affected on Friday after the aircraft experienced a snag. The airline operates the route with a single aircraft using flight numbers AI 342/347/346/343, respectively. On August 24, after completing the first leg of Mumbai-Singapore (AI 342), the flight left Changi airport for Chennai (AI 347) and was to arrive at 10.30 a.m.

After being airborne for about 40 minutes near Malaysian airspace, the crew experienced a significant “technical problem” and decided to return to Singapore. An Air India spokesperson said the aircraft, a 256-seater Boeing 787-8 (VT-ANS), had to be grounded. The airline made alternative arrangements to fly the passengers to Chennai. The airline scheduled Saturday’s flight (August 25) with another Boeing 787-8.

NEWS TODAY 30.06.2026