Friday, September 21, 2018
பஸ்சில், 'ஏசி' கோளாறு ரூ.10 ஆயிரம் இழப்பீடு
Added : செப் 21, 2018 02:02
சென்னை:ஆம்னி பஸ்சில் ஏற்பட்ட, 'ஏசி' கோளாறால், பயணிக்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், அண்ணா நகரைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தாக்கல் செய்த மனு:சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்செந்துாருக்கு, ஆம்னி பேருந்தில், 7,920 செலுத்தி, குடும்பத்தினர் ஒன்பது பேருடன் பயணம் செய்தேன். பேருந்தில் ஏற்பட்ட, 'ஏசி' கோளாறாலும், ஜன்னல் கண்ணாடி திறக்க முடியாததாலும், மூச்சு திணறலால் அவதியடைந்தோம். ஆம்னி பஸ் நிறுவனம், உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.வழக்கு விசாரணையில், 'ஏசி' கோளாறு உடனே சரி செய்யப்பட்டது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, ஆம்னி பஸ் நிறுவனம் தெரிவித்தது.இந்த வழக்கில் நீதிபதி மோனி, நீதித்துறை உறுப்பினர் அமலா பிறப்பித்த உத்தரவு:ஆம்னி பஸ் நிறுவன சேவையில் குறைபாடு உள்ளது. மனுதாரருக்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், 5,000 ரூபாய் வழக்குச் செலவும் வழங்க வேண்டும், இவ்வாறு உத்தரவிடப்பட்டது.
Added : செப் 21, 2018 02:02
சென்னை:ஆம்னி பஸ்சில் ஏற்பட்ட, 'ஏசி' கோளாறால், பயணிக்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், அண்ணா நகரைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தாக்கல் செய்த மனு:சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்செந்துாருக்கு, ஆம்னி பேருந்தில், 7,920 செலுத்தி, குடும்பத்தினர் ஒன்பது பேருடன் பயணம் செய்தேன். பேருந்தில் ஏற்பட்ட, 'ஏசி' கோளாறாலும், ஜன்னல் கண்ணாடி திறக்க முடியாததாலும், மூச்சு திணறலால் அவதியடைந்தோம். ஆம்னி பஸ் நிறுவனம், உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.வழக்கு விசாரணையில், 'ஏசி' கோளாறு உடனே சரி செய்யப்பட்டது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, ஆம்னி பஸ் நிறுவனம் தெரிவித்தது.இந்த வழக்கில் நீதிபதி மோனி, நீதித்துறை உறுப்பினர் அமலா பிறப்பித்த உத்தரவு:ஆம்னி பஸ் நிறுவன சேவையில் குறைபாடு உள்ளது. மனுதாரருக்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், 5,000 ரூபாய் வழக்குச் செலவும் வழங்க வேண்டும், இவ்வாறு உத்தரவிடப்பட்டது.
அரசு பெண் அதிகாரியை செருப்பால் அடித்தவர் கைது
Added : செப் 20, 2018 23:32
சேலம், பொதுப்பணித் துறை பெண் செயற்பொறியாளரை, செருப்பால் அடித்தவரை, போலீசார் கைது செய்தனர்.சேலம், சூரமங்கலத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 45; இவருக்கு சொந்தமான வீட்டில், வாடகைக்கு குடியிருப்பவர், ரவிகிருஷ்ணன் மனைவி ஜமுனாதேவி, 56; இவர், தர்மபுரி மாவட்டம், அரூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், செயற்பொறியாளராக பணிபுரிகிறார்.வீட்டை காலி செய்யுமாறு, சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஜமுனாதேவி, அவகாசம் கேட்டுள்ளார். இதனால், அவர்களிடையே விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம், ஜமுனாதேவியின் வீட்டு முன் நின்று, சீனிவாசன் சத்தம் போட்டுள்ளார்.இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சீனிவாசன், செருப்பால், ஜமுனாதேவி, அவரது மகன் ஹரிபிரசாத், 20, ஆகியோரை தாக்கியுள்ளார். ஜமுனாதேவி புகார்படி, சூரமங்கலம் போலீசார், சீனிவாசனை கைது செய்தனர்.
Added : செப் 20, 2018 23:32
சேலம், பொதுப்பணித் துறை பெண் செயற்பொறியாளரை, செருப்பால் அடித்தவரை, போலீசார் கைது செய்தனர்.சேலம், சூரமங்கலத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 45; இவருக்கு சொந்தமான வீட்டில், வாடகைக்கு குடியிருப்பவர், ரவிகிருஷ்ணன் மனைவி ஜமுனாதேவி, 56; இவர், தர்மபுரி மாவட்டம், அரூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், செயற்பொறியாளராக பணிபுரிகிறார்.வீட்டை காலி செய்யுமாறு, சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஜமுனாதேவி, அவகாசம் கேட்டுள்ளார். இதனால், அவர்களிடையே விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம், ஜமுனாதேவியின் வீட்டு முன் நின்று, சீனிவாசன் சத்தம் போட்டுள்ளார்.இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சீனிவாசன், செருப்பால், ஜமுனாதேவி, அவரது மகன் ஹரிபிரசாத், 20, ஆகியோரை தாக்கியுள்ளார். ஜமுனாதேவி புகார்படி, சூரமங்கலம் போலீசார், சீனிவாசனை கைது செய்தனர்.
14 நாட்கள், 'கரன்ட் கட்' நெல்லை மக்கள், 'ஷாக்'
Added : செப் 21, 2018 01:39
-திருநெல்வேலி, கூடங்குளம் அணு மின் உற்பத்தியும், துாத்துக்குடி அனல் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. 'இதனால் திருநெல்வேலியில், 14 நாட்களுக்கு, பகலில் மின்சாரம் இருக்காது' என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் தலா, 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணு உலைகள் உள்ளன. முதலாவது உலையில், நீண்ட நாட்களாக உற்பத்தி இல்லை. இரண்டாவது உலையில், செப்., 13ல் உற்பத்தி துவங்கியது. நேற்று மாலை, மீண்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டது.துாத்துக்குடியில் தலா, 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அலகுகள் உள்ளன. இதில், இரண்டாவது, அணு உலை சில தினங்களாக மூடப்பட்டு உள்ளன.'நிலக்கரி தட்டுப்பாட்டால் உற்பத்தி நடக்கவில்லை' என, புகார் எழுந்தது. தற்போது, காற்று குறைந்து வருவதால், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட காற்றாலைகளில் கிடைத்த மின்சாரம் குறைந்து விட்டது.இதனால், தென்மாவட்டங்கள் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளன. திருநெல்வேலி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர், கிருஷ்ணராஜ் அறிவிப்பில், 'செப்., 24 முதல், அக்., 7 வரை காலை, 8:00 முதல் மாலை, 5:00 வரை பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், நகர் பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.
Added : செப் 21, 2018 01:39
-திருநெல்வேலி, கூடங்குளம் அணு மின் உற்பத்தியும், துாத்துக்குடி அனல் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. 'இதனால் திருநெல்வேலியில், 14 நாட்களுக்கு, பகலில் மின்சாரம் இருக்காது' என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் தலா, 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணு உலைகள் உள்ளன. முதலாவது உலையில், நீண்ட நாட்களாக உற்பத்தி இல்லை. இரண்டாவது உலையில், செப்., 13ல் உற்பத்தி துவங்கியது. நேற்று மாலை, மீண்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டது.துாத்துக்குடியில் தலா, 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அலகுகள் உள்ளன. இதில், இரண்டாவது, அணு உலை சில தினங்களாக மூடப்பட்டு உள்ளன.'நிலக்கரி தட்டுப்பாட்டால் உற்பத்தி நடக்கவில்லை' என, புகார் எழுந்தது. தற்போது, காற்று குறைந்து வருவதால், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட காற்றாலைகளில் கிடைத்த மின்சாரம் குறைந்து விட்டது.இதனால், தென்மாவட்டங்கள் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளன. திருநெல்வேலி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர், கிருஷ்ணராஜ் அறிவிப்பில், 'செப்., 24 முதல், அக்., 7 வரை காலை, 8:00 முதல் மாலை, 5:00 வரை பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், நகர் பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.
கோவை கல்லூரி அதிபர், 'செக்ஸ் டார்ச்சர்' பரவும் ரகசிய வீடியோ: புகார் கூறிய பெண் மாயம்
Added : செப் 20, 2018 21:42
கோவை, கோவை, தனியார் கல்லுாரி தாளாளர் மீது பாலியல் புகார் அளித்த பெண் ஊழியர், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து திடீரென மாயமானார். தாளாளரின் பாலியல் சீண்டல், 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கோவை, சரவணம்பட்டி அருகேயுள்ள தனியார் கல்லுாரியின் தாளாளர், தன் கல்லுாரியில் பணியாற்றும் பெண் ஊழியரை முத்தமிடும் வீடியோ காட்சிகள், நேற்று முன்தினம், சமூக வலைதளங்களில் பரவியது.அதில், தாளாளர், தன் அலுவலக அறையில் ஒருவித பரபரப்புடன் நடமாடுகிறார். அடுத்த சில விநாடிகளில், கல்லுாரி ஊழியரான இளம்பெண் ஒருவர் உள்ளே நுழைகிறார். கைநீட்டி அருகில் அழைக்கும் தாளாளர், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சுவற்றோரம் தள்ளி, கட்டிஅணைத்து, கன்னத்தில் முத்தமிட்டு, சில்மிஷத்தில் ஈடுபடுகிறார். சற்று போராடியது போல, மறுப்பு தெரிவித்த அந்த பெண், அவரை விலக்கி விட்டு, வெளியேறுகிறார்.
இதேபோன்ற மற்றொரு காட்சி, மற்றொரு நாளில் நடந்தது போன்று, வெவ்வேறு உடைகளில் அந்த பெண் வந்து போகிறார். இவ்வாறு, மூன்று வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகின.இதற்கிடையே, பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த இளம்பெண், நேற்று முன்தினம், துடியலுார் பெண் போலீசில் புகார் அளித்தார்.அவரிடம் போலீசார், ஒரு மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், வீட்டிற்குச் செல்ல நேரமாகி விட்டதாகக் கூறி அப்பெண், அங்கிருந்து மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.துடியலுார், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை கூறியதாவது:புகார் அளிக்க வந்த பெண்ணிடம் விசாரித்தோம். பாலியல் ரீதியிலான புகார் என்பதால், நேரடியாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய முடிவு செய்தோம்.ஆனால், அந்த பெண், தன் பெற்றோரிடம் கலந்தாலோசித்து வருவதாக சொல்லி, புகார் மனுவை திரும்ப பெற்று சென்றுவிட்டார்.இவ்வாறு, அவர் கூறினார்.புகாரில் சிக்கியுள்ள கல்லுாரி தாளாளரின் மகன் கூறியதாவது:எங்கள் நிறுவனத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக, சிலர் செயல்படுகின்றனர். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவிற்கும், எங்கள் கல்லுாரிக்கும், எந்த தொடர்பும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
Added : செப் 20, 2018 21:37
விழுப்புரம், லஞ்சம் வாங்கி, கைதாகி உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர், மனைவியின் வங்கி லாக்கர்கள் வரும், 25ல், அரசு நகை மதிப்பீட்டாளர் மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது..விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றியவர், பாபு, 55. இவர், 11ம் தேதி சுற்றுலா வேனிற்கு தகுதி சான்று வழங்க, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஆய்வு
கடலுாரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார், 32.50 லட்சம் ரூபாய் ரொக்கம், வங்கி பாஸ் புக், தங்கம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். இதையடுத்து அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இந்நிலையில், கடலுார் மஞ்சக்குப்பம் ஸ்டேட் வங்கியில் நேற்று முன்தினம் ஆய்வு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாபுவின் மனைவி மங்கையர்கரசி பெயரில் இருந்த மூன்று லாக்கர்களுக்கு, 'சீல்' வைத்தனர்
.
ஜாமின் மனு
ஜாமின் மனு
இது குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு மனைவியின் வங்கி லாக்கர்களில் நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் உள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளது.அந்த லாக்கர்களை அரசு நகை மதிப்பீட்டாளர் மூலம் திறந்து, மதிப்பீடு செய்ய முடியும். வரும், 25ல் லாக்கர்கள் திறந்து ஆய்வு செய்யப்பட உள்ளன. அப்போது தான் பாபுவிடம் இருந்து கைப்பற்றப்படும் நகை, வெள்ளி மற்றும் சொத்து ஆவணங்கள் குறித்த முழு விபரங்கள் தெரியவரும்.இவ்வாறு, அவர் கூறினார்.
சிறையில் உள்ள பாபு, புரோக்கர் செந்தில்குமார் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனு வரும், 24ல் விசாரணைக்கு வருகிறது.மேலும், ஆத்துார் கூட்டுறவு நகர வங்கியில் உள்ள செந்தில்குமாரின், வங்கி லாக்கரை ஆய்வு செய்ய, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில், போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Added : செப் 20, 2018 23:32
சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், பி.எஸ்சி., அவசர கால சிகிச்சை, ரேடியாலஜி போன்ற, மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு, 390 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கவுன்சிலிங், பல்கலை வளாகத்தில், நேற்று துவங்கியது. இதில், 134 இடங்கள் நிரம்பின. முதல், 10 இடங்கள் பெற்ற, மாணவர்களுக்கு, பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
Subscribe to:
Posts (Atom)
Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!
Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...
-
Madras varsity panel against budget cuts Ragu.Raman@timesofindia.com 22.04.2025 Chennai : The state govt's move to cut the budget for t...
-
Yercaud getting ready for flower show Staff Reporter Salem, April 29, 2019 00:00 IST About 15,000 saplings of flower varieties...