Friday, September 21, 2018

அரசு பெண் அதிகாரியை செருப்பால் அடித்தவர் கைது

Added : செப் 20, 2018 23:32


சேலம், பொதுப்பணித் துறை பெண் செயற்பொறியாளரை, செருப்பால் அடித்தவரை, போலீசார் கைது செய்தனர்.சேலம், சூரமங்கலத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 45; இவருக்கு சொந்தமான வீட்டில், வாடகைக்கு குடியிருப்பவர், ரவிகிருஷ்ணன் மனைவி ஜமுனாதேவி, 56; இவர், தர்மபுரி மாவட்டம், அரூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், செயற்பொறியாளராக பணிபுரிகிறார்.வீட்டை காலி செய்யுமாறு, சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஜமுனாதேவி, அவகாசம் கேட்டுள்ளார். இதனால், அவர்களிடையே விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம், ஜமுனாதேவியின் வீட்டு முன் நின்று, சீனிவாசன் சத்தம் போட்டுள்ளார்.இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சீனிவாசன், செருப்பால், ஜமுனாதேவி, அவரது மகன் ஹரிபிரசாத், 20, ஆகியோரை தாக்கியுள்ளார். ஜமுனாதேவி புகார்படி, சூரமங்கலம் போலீசார், சீனிவாசனை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...