Saturday, September 29, 2018

Hike cutoff for doing foreign med courses, HC tells MCI

TIMES NEWS NETWORK

Chennai:29.09.2018

Justice N Kirubakaran of the Madras high court on Friday ordered the Medical Council of India and the Centre to increase the qualifying marks for the screening exam for enrolling in medical courses in foreign countries from 50% to 80%.

In the past 10 years, just 15% to 25% of doctors with foreign degrees have managed to clear the mandatory Foreign Medical Graduate Examination, conducted by the National Board of Examination to practise in India, the court said. When students with more than 95% marks are unable to get a medical college seat in India, how can candidates with 50% marks in the qualifying exam be allowed to get admission in a foreign college, the court asked.

‘Only meritorious should get med seats’

“The above details would only make one to understand that the minimum marks of 50% prescribed by MCI has to be revised and higher marks have to be prescribed as minimum marks as the percentage of candidates passing FMGE is very less. Therefore, for this year, the minimum marks to be prescribed should be raised from 50% to at least 80%,” the judge said.

Justice Kirubakaran made the observations on a plea moved by Thamarai Selvan, a foreign medical degree holder seeking direction to the MCI to issue certificate of provisional registration to enable him to undergo the Compulsory Rotatory Residential Internship (CRRI) in an approved medical college-hospital in the state and subsequently issue permanent registration certificate on successful completion of CRRI.

During the hearing, counsel for MCI submitted that before introduction of NEET, the MCI had prescribed 50% as minimum marks in physics, chemistry and biology together for getting eligibility certificate and the same would continue this year. “One-time exemption was given for academic year 2018-19 since qualification in NEET was made mandatory by notification dated March 1, 2018 and the last date for registration was March 9. The candidates did not have sufficient time to prepare for the examination,” counsel said.

Recording the submission, the court said, “Health is very important for any human being and it is the duty of the governments to provide quality medical service to its subjects. Only those candidates with merits, which is usually determined based on academic excellence, have to be admitted in medical institutions.”
Another male bastion falls as SC opens Sabarimala to all women
Justice Malhotra, Lone Woman On Bench, Dissents


AmitAnand.Choudhary@timesgroup.com

New Delhi:29.09.2018

In a path-breaking verdict to ensure gender equality at religious places, the Supreme Court on Friday opened the doors of the Sabarimala Temple in Kerala to all women devotees, ending the age-old custom that barred women in the menstruating age group of 10-50 from entering the temple to worship Lord Ayyappa.

A five-judge Constitution bench by a 4:1 majority held that devotees of Lord Ayyappa were “exclusively Hindus” and did not constitute a separate religious denomination, and that the practice of exclusion of some women could not be regarded as an essential part of the religion.

Chief Justice of India Dipak Misra and Justices R F Nariman, A M Khanwilkar and D Y Chandrachud were unanimous in their view that the practice of barring women devotees in the 10-50 years’ age group was illegal, unconstitutional and arbitrary.

However, Justice Indu Malhotra, the lone woman judge on the bench, penned a dissenting verdict, holding that worshippers of Lord Ayyappa did belong to a separate religious denomination and the ban on entry of some women in the temple was an essential part of their religion.

Referring to restrictions on women, the apex court said any subversion and repression of women under the garb of biological or physiological factors (like menstruation) could not be given the seal of legitimacy and any discrimination against women because of their biological characteristics was not only “unfounded, indefensible and implausible but can also never pass the muster of constitutionality”.

“Patriarchy in religion cannot be permitted to trump the element of pure devotion borne out of faith and the freedom to practise and profess one’s religion,” said Chief Justice of India Dipak Mishra, who wrote the judgement on behalf of himself and Justice Khanwilkar.

The verdict, another boost for gender equality, came a day after the apex court delivered its verdict decriminalising adultery.

“Any relationship with the Creator is a transcendental one crossing all socially created artificial barriers and not a negotiated relationship bound by terms and conditions. Such a relationship and expression of devotion cannot be circumscribed by dogmatic notions of biological or physiological factors arising out of rigid socio-cultural attitudes which do not meet the constitutionally prescribed tests,” the CJI observed.

CJI Misra said there is no place for discrimination in the matter of faith and religion but religious practices are sometimes seen as perpetuating patriarchy, thereby negating the basic tenets of faith and of gender equality, which must be discouraged. He said the notions of public order, morality and health cannot be used as “colourable device” to restrict the freedom to freely practise religion and discriminate against women by denying them their legal right to enter and offer prayers and that public morality must yield to constitutional morality.


CJI: No proof to show exclusion is part of the Hindu religion

The CJI said, “The dualism that persists in religion by glorifying and venerating women as goddesses on one hand and by imposing rigorous sanctions on the other hand in matters of devotion has to be abandoned. Such a dualistic approach and an entrenched mindset results in indignity to women and degradation of their status. Society has to undergo a perceptual shift from being the propagator of hegemonic patriarchal notions of demanding more exacting standards of purity and chastity solely from women to be the cultivator of equality where the woman is in no way considered frailer, lesser or inferior to man.”

“In no scenario, it can be said that exclusion of women of any age group could be regarded as an essential practice of Hindu religion and on the contrary, it is an essential part of the Hindu religion to allow Hindu women to enter into a temple as devotees and followers of Hindu religion and offer their prayers to the deity. In the absence of any scriptural or textual evidence, we cannot accord to the exclusionary practice followed at the Sabarimala Temple the status of an essential practice of Hindu religion,” he said. “In the theatre of life, it seems, man has put the autograph and there is no space for a woman even to put her signature,” the CJI added.

Agreeing with the CJI, Justices Nariman and Chandrachud held that superstitious beliefs which are extraneous, unnecessary accretions to religion cannot be considered essential parts of religion to be given constitutional protection. And, religion cannot become a cover to exclude and to deny women the basic right to find fulfilment in worship.

“The heart of the matter lies in the ability of the Constitution to assert that the exclusion of women from worship is incompatible with dignity, destructive of liberty and a denial of the equality of all human beings. These constitutional values stand above everything else as a principle which brooks no exceptions, even when confronted with a claim of religious belief. To exclude women is derogatory to an equal citizenship,” Justice Chandrachud said. Justice Malhotra, however, proposed judicial restraint while examining the legality of a religious practice. “Judicial review of religious practices ought not to be undertaken, as the court cannot impose its morality or rationality with respect to the form of worship of a deity. Doing so would negate the freedom to practice one’s religion according to one’s faith and beliefs. It would amount to rationalizing religion, faith and beliefs, which is outside the ken of courts,” she said.

FULL COVERAGE: P 10

› Chandrachud: Morality of mob cannot overrule individual dignity, P 10 › Exclusion on the basis of menstrual status has to go, says SC, P 10

வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு சான்றிதழ் வழங்க ஐகோர்ட் நிபந்தனை


Added : செப் 29, 2018 01:15


'தகுதி தேர்வில், ௮௦ சதவீத மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்றவர்களுக்கு, வெளிநாடுகளில் மருத்துவ படிப்பில் சேர, தகுதி சான்றிதழ் வழங்க கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டில் மருத்துவ படிப்பு முடித்த, தாமரை செல்வன் என்பவர், தமிழகத்தில் மருத்துவ பயிற்சி பெற, பதிவு சான்றிதழ் வழங்கும்படி, இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பித்தார். இதையடுத்து, உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்.விண்ணப்பத்தின் மீது, இரண்டு வாரங்களில் முடிவெடுக்கும்படி, மருத்துவ கவுன்சிலுக்கு, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். மேலும், நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:தரமான மருத்துவ சேவை வழங்கும் தகுதியை, டாக்டர்கள் பெற்றிருக்க வேண்டும். தகுதியான, திறமையான டாக்டர்கள் கிடைக்க வேண்டும் என்றால், மருத்துவ கல்லுாரிகளில், தகுதியானவர்கள் சேர்க்கப்பட வேண்டும். குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சேர்த்தால், நாட்டின் ஆரோக்கியத்துக்கே ஆபத்து ஏற்பட்டு விடும். இதனால், தகுதி மட்டுமே, மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கு, அடிப்படையாக இருக்க வேண்டும்.'நீட்' தேர்வு வருவதற்கு முன், தகுதி தேர்வில், ௯௫ சதவீத மதிப்பெண்ணுக்கும் கூடுதலாக பெற்றவர்களுக்கும், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை.

நீட் தேர்வு வந்த பின், ௯௦ சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கும், இடம் கிடைக்கவில்லை.அப்படி இருக்கும் போது, வெளிநாட்டு மருத்துவ கல்லுாரிகளில் சேர, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக, ௫௦ சதவீதத்தை, மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் நிர்ணயித்துள்ளன. இதை, மாற்றி அமைக்க வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண்ணாக, ௮௦ சதவீதம் நிர்ணயிக்க வேண்டும். இந்த விஷயத்தில், மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே, தகுதி தேர்வில், ௮௦ சதவீத மதிப்பெண்ணுக்கும் குறைவாக எடுத்தவர்களுக்கு, வெளிநாட்டு மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கான, தகுதி சான்றிதழை வழங்க, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், மத்திய அரசுக்கும் தடை விதிக்கப்படுகிறது. விசாரணை, நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்
குழந்தைகளை கொன்ற குன்றத்தூர் அபிராமி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்

Added : செப் 28, 2018 22:17






ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துாரில், தன் இரண்டு குழந்தைகளை கொன்ற கொடூர தாய், அபிராமி, கள்ளக்காதலன் சுந்தரத்துடன், ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார், மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர், விஜய், 30; தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி அபி ராமி, 25. இவர்களுக்கு அஜய், 7, மற்றும் கார்னிகா, 4, என்ற ஆண், பெண் குழந்தைகள் இருந்தன.குன்றத்துார் பிரியாணி கடையில் பணியாற்றிய ஊழியர், சுந்தரம், 27, என்பவனுடன் அபிராமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. சுந்தரத்துடன் சேர்ந்து வாழ்வதற்காக, கடந்த மாதம், 31ல், குழந்தைகள் இருவருக்கும் பாலில் துாக்க மாத்திரை கலந்து கொடுத்தும், கழுத்தை நெரித்தும் அபிராமி கொலை செய்தாள்.கள்ளக்காதலன், சுந்தரத்தை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அபிராமியை, நாகர்கோவிலில் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு விசாரணைக்காக, புழல் சிறையில் இருந்து, அபிராமியையும், கள்ளக்காதலன் சுந்தரத்தையும், ஒரே வாகனத்தில் நேற்று அழைத்து வந்த போலீசார், ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட், சிவசுப்பிரமணியம் முன் ஆஜர்படுத்தினர்.

விசாரணைக்கு பின், இருவரின் நீதிமன்ற காவலை, அக்.,12 வரை நீட்டித்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, கள்ளக்காதலர்கள் அபிராமியும், சுந்தரமும் மீண்டும் புழல் சிறைக்கு, பலத்த பாதுகாப்புடன், ஒரே வேனில் அழைத்து செல்லப்பட்டனர்.ஒரே வேனில் வந்த போதிலும், இருவரும் தனித்தனியாக, சுற்றிலும் ஏராளமான போலீசாருடன் அமர வைக்கப்பட்டிருந்தனர். வேனில் இருந்து இறங்கி, நீதிமன்றத்திற்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும், அபிராமி தன் முகத்தை கருப்பு துப்பட்டாவால் மூடியிருந்தாள்.வழக்கு முடிந்து, புழல் சிறைக்கு செல்வதற்காக, வேனில் அபிராமி அமர்ந்து இருந்த போது, கண் கலங்கிய படி, சோர்வாக இருந்தாள். சுந்தரத்தை பார்ப்பதற்காக, அவனின் காதல் மனைவியும், நீதிமன்றம் வந்திருந்தார். அவர் மிகவும் சோகமாக இருந்தார்.
சரணமய்யப்பா!, சபரிமலைக்கு, அனைத்து, வயது ,பெண்களும் செல்ல, அனுமதி
 dinamalar 29.09.2018

புதுடில்லி:'கேரளாவில் உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்லலாம்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கை விசாரித்த, ஐந்து நீதிபதிகளில் நால்வர், 'மாதவிடாய் காலத்தை காரணம் காட்டி, 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள், சபரிமலைக்கு செல்ல தடை விதிக்கும் தேவஸ்வம் போர்டின் செயல், அரசியல் சாசனத்திற்கு எதிரானது' என தீர்ப்பளித்துள்ளதால், ஆண்கள் மட்டுமே செல்லலாம் என்ற நடைமுறை தகர்க்கப்பட்டுள்ளது.

'தீர்ப்பு விபரங்களை முழுவதும் படித்த பின், மேல்முறையீடு செய்வது அல்லது தீர்ப்பை அமல்படுத்துவது போன்ற அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்' என, கோவிலை நிர்வகிக்கும் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில், வனம், மலைப் பகுதியில், சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வகிக்கிறது.

அடர்ந்த காட்டுப் பகுதியை கடந்து, மலைப் பாதையில் சென்றால் தான், கோவிலை அடைய முடியும் என்பதாலும், காட்டுப் பகுதியில் புலிகள், யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் காரணத்தாலும், சபரிமலை கோவிலில், ஆண்டின், நான்கு மாதங்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

வழக்கம்

தவிர, ஒவ்வொரு மாதமும், தமிழ் மாதப் பிறப்பு நாளை ஒட்டி நடக்கும் சிறப்பு பூஜையில், குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்வதும் வழக்கம்.இந்த கோவிலின் வழிபாட்டு தெய்வமான அய்யப்பன், திருமணம் ஆகாத பிரம்மச்சாரியாக கருதப்படுவதால், 10 - 50 வயதுக்குட்பட்ட பெண்கள், கோவிலுக்கு வர, தேவஸ்வம் போர்டு சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

பல நுாறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்படும் இந்த நடைமுறையை எதிர்த்து, ஒரு சில அமைப்பின் சார்பிபல், உச்ச நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட், ஏ.எம்.கன்வில்கர் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகிய, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில், பெண் நீதிபதியான, இந்து மல்ஹோத்ரா தவிர, மற்ற நான்கு நீதிபதிகளும் ஒரே மாதிரியான



தீர்ப்பு வழங்கினர்.

அதன் விபரம்:

சபரிமலையில், பெண்களுக்கு தடை விதிக்கும் நடைமுறையை ஏற்க முடியாது. குறிப்பிட்ட வயதில், பெண்களுக்கே உரிய, உடல் ரீதியான மாற்றங்களை காரணம் காட்டி, சபரிமலை கோவிலில் நுழைய அவர்களுக்கு தடை விதிப்பது, பெண்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல்.

இழுக்கு

மத ரீதியிலான வழிபாட்டு நடைமுறைகள் என்ற பெயரில், பெண்களுக்கான வழிபாட்டு உரிமைகளை மறுப்பது, அவர்களின் அடிப்படை உரிமையை தட்டிப் பறிப்பதோடு, பெண்களின் கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவது போன்றது.வழிபாட்டு நடைமுறைகளில், ஆணும், பெண்ணும் சமம் என்பதை உறுதி செய்யும் வகையில், சபரிமலையில், அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.

வழிபாட்டு நடைமுறை, உடலியல் ரீதியான மாற்றங்கள் போன்றவற்றை காரணம் காட்டி, சபரிமலையில் பெண்களுக்கு தடை விதிப்பது, அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. அய்யப்ப பக்தர்கள் சங்கத்தினர், தங்களுக்கென தனியான வழிபாட்டு நடைமுறை விதிகளை அமல்படுத்த முடியாது.இவ்வாறு, நான்கு நீதிபதிகளும் தீர்ப்பு வழங்கினர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி, இந்து மல்ஹோத்ரா, இவர்களின் தீர்ப்பிலிருந்து மாறுபட்டார்.இந்து மல்ஹோத்ரா, தீர்ப்பில் கூறியதாவது:நம் நாட்டில் பல்வேறு மதங்களை சேர்ந்தோர் வசிக்கின்றனர். பல வகை வழிபாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஆழமான மத நம்பிக்கை அடிப்படையிலான விஷயங்களை, மதசார்பற்ற நிலைப்பாட்டுடன் தொடர்பு படுத்த முயற்சிக் கூடாது. அய்யப்ப பக்தர்கள், அவர்களின் வழிபாட்டு நடைமுறையை பின்பற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.இவ்வாறுஅவர் கூறியுள்ளார்.

ஐவரில், நான்கு நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியதை அடுத்து, 'சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் அமர்வு தீர்ப்பு வழங்கியது.உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அய்யப்ப தர்ம சேனா அமைப்பின் சார்பில், மேல்முறையீடு செய்யப்படும் என, அந்த அமைப்பின் தலைவர், ராகுல் ஈஸ்வரா தெரிவித்துள்ளார். இவர், சபரிமலை கோவிலின் முன்னாள் தந்திரி கண்டாரு மகேஸ்வரருவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சிறப்பு மிக்கது!

கேரள மாநில தேவஸ்வம் அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:வழிபாட்டு முறையில் பெண்களுக்கான சம உரிமையை பெறுவதற்காக நடந்த சட்டப்போராட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்றம், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. சபரிமலையில் மட்டுமின்றி, வழிபாடு நடக்கும் அனைத்து இடங்களிலும், பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வரவேற்பு!

சபரிமலை கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம், பெண்களின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. இது, ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என நம்புகிறேன்.
மேனகா, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், பா.ஜ.,

சிரமம் உள்ளது!

சபரிமலை விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. எனினும், நீதிமன்றதீர்ப்பை மதிக்கிறேன். தற்போதைய சூழ்நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் செய்வதில் சிரமம் உள்ளது. இது குறித்து, தேவஸ்வம் போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்டரரு ராஜீவரு, சபரிமலை தலைமை தந்திரி

தேவஸ்வம் போர்டு அதிருப்தி

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாக, தேவஸ்வம் போர்டு தலைவர், பத்மகுமார் தெரிவித்துள்ளார்.இது

குறித்து, பத்மகுமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது. தீர்ப்பு நகல் கிடைத்ததும், தீர்ப்பின் முழு விபரங்களையும் படித்து பார்த்து, சட்ட
வல்லுனர்கள், மதத் தலைவர்களுடன் ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.மேல்முறையீடு செய்வதா அல்லது தீர்ப்பை அமல்படுத்துவதா என, உடனடியாக முடிவு செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கு கடந்து வந்த பாதை...

1991

சபரிமலையில் வழிபட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2006

ஜோதிடர் உன்னி கிருஷ்ண பணிக்கர், சபரிமலையில் நான்கு நாள் பூஜை நடத்தினார். கோயிலுக்குள் வயதுக்கு வந்த பெண் ஒருவர் வந்த அறிகுறி தென்படுவதாக கூறினார்.

2006

கன்னட நடிகை ஜெயமாலா, சபரிமலை கோயிலுக்குள் 1987ல் 28 வயதில் சென்றதாக கூறினார். இது குறித்து போலீசார் விசாரிக்க கேரள அரசு உத்தரவு. சில மாதங்களில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பின் சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கேரளாவை சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

2008

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு சென்றது. ஏழு ஆண்டுகள் விசாரிக்கப்பட வில்லை.

2016

ஜனவரி 11ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

2017

5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டது. விசாரணையில், கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என மாநில அரசு தெரிவித்தது. கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது.

2018

செப். 28ல் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதிஅளித்து உச்சநீதி
மன்றம் உத்தரவு.
செத்தவருக்கு 3 நாள் சிகிச்சை ரமணா பட பாணியில், 'பகீர்'

Added : செப் 28, 2018 22:19






தஞ்சாவூர், தஞ்சையில், மூன்று நாட்களுக்கு முன், இறந்தவருக்கு சிகிச்சை அளித்து, ரமணா பட பாணியில் பணம் பறித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.நாகை, கீழைஈசனுார் கிராமத்தைச் சேர்ந்தவர்,சேகர், 55. இவரது மகன் மற்றும் உறவினர்கள், நேற்று மாலை, தஞ்சை தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்:

நாகை அரசு போக்குவரத்து கழகத்தில், சேகர் கண்டக்டராக பணியாற்றினார். சில மாதங்களாக குடல் இறக்க நோயால் அவதிப்பட்டு, நாகையில் உள்ள தனியார் மருத்துவனையில், செப்., 7ல், சேர்க்கப்பட்டார். அங்கு ஆப்பரேஷன் செய்யப்பட்டது.அதன்பின்னும், ரத்தக்கசிவு இருந்தது. டாக்டர்கள் பரிந்துரைப்படி, தஞ்சையில் உள்ள, கே.ஜி., தனியார் மருத்துவமனையில், 8ம் தேதி அனுமதித்தோம். முதல் தவணையாக, 2.50 லட்சம் ரூபாய் கட்டினோம்.தொடர்ந்து சிகிச்சை அளித்தும், நேற்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை. 'சேகரை, தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம்' என கூறினோம். அப்போது, 5 லட்சம் ரூபாயை கட்டும்படி கூறினர்.நாங்கள், 50 ஆயிரம் ரூபாய் கட்டி, 'மீதி தொகையை, இன்னும் சில தினங்களில் கட்டி விடுகிறோம்' என எழுதி கொடுத்து, சேகரை தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்.அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், 'சேகர் இறந்து, மூன்று நாட்கள் ஆகிவிட்டது' என்றனர்.

இதுவரை, சேகர் சிகிச்சைக்காக, 8 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். தவறுதலாக சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர் உடலை வைத்து, சிகிச்சை அளிப்பதாக கூறி, பணம் கேட்டு மிரட்டிய மருத்துவமனை நிர்வாகம் மற்றும் டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது புகார் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த சேகர், திருத்துறைப்பூண்டி இந்திய, கம்யூ., முன்னாள், எம்.எல்.ஏ., பழனிசாமியின் நெருங்கிய உறவினர்.
காய்ச்சலுக்கு சிகிச்சைபெற முகவரி பதிவு கட்டாயம்

Added : செப் 28, 2018 23:02

சென்னை, 'காய்ச்சலுக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வருவோரின், முகவரி மற்றும் மொபைல் போன் எண்களை, கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 2017ல் டெங்கு காய்ச்சலில், 22 ஆயிரம் பாதிக்கப்பட்டனர்; 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பன்றி காய்ச்சலில், 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதற்கு தமிழக அரசின் மெத்தனப் போக்கு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணமாகக் கூறப்பட்டது.இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, தமிழக சுகாதாரத்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், 'காய்ச்சல் பாதிப்பிற்காக சிகிச்சை பெற வருவோரின் முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்ட, முழு தகவலையும் பெற்று, கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, நோயாளியின் முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வருவோருக்கு, உடனடியாக ரத்த பரிசோதனை செய்யப்படும்.டெங்கு, மலேரியா, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் உறுதி செய்யப்பட்டால், அவர்கள் வசிக்கும் பகுதியில் இருப்பவர்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றாத மருத்துவமனைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...