Tuesday, November 13, 2018


"கஜா' புயல் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும்: 80-90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்

By DIN | Published on : 13th November 2018 02:57 AM | 




வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள "கஜா' புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், ஒருசில வேளைகளில் 100 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும். இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரியின் சில இடங்களில் பலத்த மழையும், ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலைஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் திங்கள்கிழமை கூறியது: மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் "கஜா' புயல் ஞாயிற்றுக்கிழமை காணப்பட்டது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு, தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை மையம் கொண்டது. இது சென்னைக்கு கிழக்கே 730 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 820 கி.மீ., தொலைவிலும் உள்ளது. இது மேற்கு மற்றும் தென் மேற்கு நோக்கி நகர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து இப்புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை (நவ.15) நண்பகலில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புயல் கரையைக் கடக்கும் வரையில், புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை நண்பகல் வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 100 கி.மீ. வேகத்திலும் வீசும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: கஜா புயல் காரணமாக, மீனவர்கள் வியாழக்கிழமை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் மிதமான மழை பெய்யும். இயல்பான காற்று வீசும்.

கடல் அலை: நாகப்பட்டினம், கடலூர், காரைக்காலில் இயல்பைவிட ஒரு மீட்டர் உயரம் வரை கடல் அலை எழும்பும். "ரெட் அலர்ட்' நிர்வாக தரப்புக்காக தரப்படும் விஷயம். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

கஜா புயலால் சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. புயல் நகர்வு காரணமாக கடலூர், நாகை, ராமநாதபுரம் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். கடலில் அலை சீற்றம் அதிகமாக காணப்படும் என்றார் பாலச்சந்திரன்.

பெயர் வைக்கும் முறை

இந்தியப் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் 2004-ஆம் ஆண்டில் தொடங்கியது. ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாகும்போது, ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கும் வகையில், வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் புயல்களுக்கு வரிசையாக தலா 8 பெயர்களை வைத்துள்ளன. தற்போது உருவாகியுள்ள புயலுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் இலங்கை அளித்த பெயராகும். இதற்கு அடுத்து உருவாகும் புயலுக்கு தாய்லாந்து அளித்துள்ள "பேத்தை' பெயர் வைக்கப்படவுள்ளது.




சர்ச்சைக்குரியவரா சர்தார்?

By சுதாங்கன் | Published on : 13th November 2018 02:36 AM |

உலகத்திலேயே உயர்ந்து நிற்கிறார் சர்தார் வல்லபபாய் படேல், சிலையாக நர்மதை நதிக்கரையில்!

சிலை செதுக்க ஆரம்பித்த நாளிலிருந்து, இன்றைய நாள் வரை தான் எத்தனை விதமான சர்ச்சைகள், விவாதங்கள், கேள்விகள்!
படேல் சிலையை வரவேற்பவர்களுக்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ். முத்திரையை குத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல தியாகங்கள். அதில் மிக முக்கியமானவர் சர்தார் வல்லபபாய் படேல்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு எழுதப்பட்டபோது, செய்யப்பட்ட பல வஞ்சனைகளின் விளைவுதான் இன்று படேலுக்கு மத முத்திரை குத்தப்படுவது. விமர்சிப்பவர்கள் அந்தச் சிலையில், பல தியாகங்களைச் செய்து, இந்த தேசத்தை ஒன்றாக்கிய சர்வ வல்லமையான படேலின் ஆளுமையை காணவில்லை. அவர்கள் மோடியின் முகத்தை மட்டுமே அங்கே காண்கிறார்கள். அங்கே தாமரை சின்னம்தான் அவர்களுக்குத் தெரிகிறது. அதுதான் பிரச்னை.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், நேரு தலைமையிலான மத்திய அரசு இந்திய சுதந்திர போராட்ட வரலாறு எழுத ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் தலைவர் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன். இந்திய சுதந்திரத்திற்கான முதல் போராட்டம் வடக்கே இருந்து தான் துவங்கியது என்பதை இந்தக் குழு ஏற்றுக் கொண்டது. எப்படி இந்த கருத்து உருவானது?

இதை உருவாக்கியவர் வீர சாவர்க்கர் இவர் தனது நூல் ஒன்றிலே 1857-இல் வடக்கே நடந்த சிப்பாய் புரட்சிதான் முதல் இந்திய சுதந்திர போராட்டம் என்கிறார். அதையே ராதாகிருஷ்ணன் குழு ஏற்றுக் கொண்டது. அந்த வீர சாவர்க்கர் தான் இன்றைய பாரதிய ஜனதாவின் ஞான குரு!
சிப்பாய்ப் புரட்சிதான் இந்திய விடுதலைப் போரின் தொடக்கம் என்பதை கேரள, கர்நாடக அரசுகள் ஏற்க மறுத்தன. ஆனால் அப்போது தமிழகத்தில் இருந்த காங்கிரஸ் அரசு, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஒரே ஒருவர் குரல் எழுப்பினார். அவர்தான் "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. "தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் நடத்திய பாஞ்சைப் புரட்சியிலிருந்துதான் விடுதலைப் போராட்ட வரலாறு எழுதப்பட வேண்டும்' என்று ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. அதற்கு கட்டபொம்மன் பற்றிய குறிப்பும் இடம் பெறும் என்று கழகத்திற்கு பதில் கிடைத்தது. கேரள, கர்நாடக அரசுகள் தங்கள் அரசு சார்பில் தங்கள் சுதந்திர போராட்ட வரலாற்றை தாங்களே எழுதி வெளியிட்டன.

1950-ஆம் வருடம் படேல் இறந்தார். இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் அவர். உள்துறை அவர் வசம் இருந்தது. பிரிட்டிஷ் இந்தியாவில் இன்றைய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, ஐ.சி.எஸ் என்றழைத்தார்கள். அதாவது இந்தியன் சிவில் சர்வீஸ். அதை இந்தியன் அட்மினிஸ்ட்ரேடிவ் சர்வீஸ் என்று மாற்றியவர் படேல். இந்த அதிகாரிகள் படேல் இறந்த போது சொன்னார்கள். "படேலின் இறந்த உடலை ஒரு நாற்காலியில் உட்கார வைத்தாலும், அது இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும்' என்று.

நேரு நாட்டை கவனித்துக் கொண்டார். ஆனால், அகில இந்திய காங்கிரûஸ கட்டுக்கோப்பாக வைத்திருந்த பெருமைக்குரியவர் படேல். அவர் முகத்தை கண்டாலே எல்லோருக்கும் ஒரு பணிவு வந்துவிடும். மன்னர்கள், அரசியல்வாதிகள், நிர்வாகிகள் அவரை ஒரு பவ்யத்தோடு தான் சந்தித்தார்கள்.

மக்களை துல்லியமாக எடை போடுவதில் வல்லவர் படேல். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் எல்லோருக்கும் அவர் சபையில் ஒரே நீதிதான். அதில் இரண்டு பேருக்கு மட்டுமே விதிவிலக்கு. ஒருவர் காந்தியடிகள். அவர் படேலின் குரு. அடுத்தவர் நேரு. அவருடைய பரிவான பிரதமர். நேருவின் அணுகுமுறை மீது படேலுக்கு ஒரு பெருமிதமே உண்டு.
சீடரில்லாமல் எந்த இறைத்தூதரின் புகழும் பரவியதில்லை. அப்படிதான் காந்திக்கு ஒரு படேல். இந்தியாவில் காந்தி நடத்திய அத்தனை சத்தியாக்கிரகப் போராட்டங்களுக்கும் கள வடிவமைப்பு செய்து கொடுத்தவர் படேல். அவர்தான், காந்தியின் முதல் தளபதி. படேல் காந்தியின் சீடரானது 1917-ஆம் வருடம். நேருவும், ராஜாஜியும் பின்னால் வந்தார்கள்.

இந்தியா சுதந்திரமடைந்தபோது 565 சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றை இந்தியாவோடு இணைத்த பெருமை படேலைச் சாரும் என்று இன்று பேசுகிறோம். ஆனால், இந்த சமஸ்தானக் கொடுமைகளையெல்லாம் சுதந்திரத்திற்கு முன்பே பேசிய முதல் இந்தியத் தலைவர் சர்தார் வல்லபபாய் படேல் தான்.

1960-களுக்குப் பிறகு தமிழகத்தில் "மாநில சுயாட்சி' கோஷம் திமுகவினரால் எழுப்பப்பட்டது. ஆனால் மாநிலங்களுக்கு சுயாட்சியும், சுதந்திரமும் வேண்டும் என்று படேல் பேசத்துவங்கிய வருடம் 1927. "இந்திய மாநிலங்கள் மக்கள் பிரநிதிகளைக் கொண்ட ஸ்தாபன அமைப்பாக இருக்க வேண்டும்' என்றார். இதே கருத்தைத்தான் 1947-ஆம் வருடம் இந்தியாவிற்கு சுதந்திரம் வந்தபோதும் தனது உறுதியான கொள்கையாக முன்வைத்தார் படேல்.
1929-ஆம் வருடம் ஐந்தாவது கத்தியவார் அரசியல் மாநாடு நடந்தது. இதில் பேசிய படேல், "சமஸ்தானங்களின் பாதுகாப்பு என்பது பிரிட்டிஷ் அரசு தரும் பாதுகாப்பல்ல, மக்களின் நேசத்தில்தான் இருக்கிறது. அதனால்தான், இந்தியா என்பது ஒரு தேசம். இந்த மன்னர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சினேகம் இருந்தால் போதும் என்று நினைத்தால் அது பரிதாபத்திற்குரியது' என்றார்.

நாடு சுதந்திரம் அடைந்தபின் படேலிடம் அதிகாரம் வந்தது. மன்னர்கள் படேலிடம் தோற்றுப்போய் சரணடைந்தார்கள். விழுந்த எதிரியைப் படேல் மிதித்ததே இல்லை. அரவணைத்துக் கொண்டார். இவர்களில் முக்கியமானவர்கள் சிலர். போபால் நவாப், ஜின்னாவின் தூண்டுதலால் இந்தியாவைத் துண்டாட நினைத்தார். ஹைதராபாத் நிஜாம், ஜின்னாவின் மறைமுக ஆதரவால் இந்தியா மீது போர் தொடுத்தார். அதே போல் சி.பி.ராமஸ்வாமி ஐயர், அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான். இவர்தான் முதன் முதலில் திருவிதாங்கூர் தனி நாடாக விளங்கும், எந்த அரசுக்கு கட்டுப்படாது என்றார்.

ஜாம்நகரின் நவாப், பிரிட்டிஷ் அரசின் சர்வ வல்லமை பொருந்திய சர் கொனார்ட் கார்பீல்டின் ஆசியுடன், இந்தியாவுக்கு வெளியே ஒரு தேசத்தை உருவாக்க நினைத்தார். எதிர்த்தவர்கள் எல்லோரும் படேலின் ஒரு பார்வையில் அடங்கிப் போனார்கள். ஹைதராபாத் விவகாரத்தில் மட்டும் படேல் ராணுவத்தை அனுப்பி அடக்க வேண்டியிருந்தது. அப்போது கூட நேரு இந்தியாவில் இல்லை. ஐரோப்பா சுற்றுப்பயணம் போயிருந்தார். பொறுப்புப் பிரதமராக இருந்த படேல், ராணுவத்தை அனுப்பி ஹைதராபாத்தை இந்தியாவோடு இணைத்தார்.

பெருந்தன்மையின் மறு உருவம் படேல். இந்த மன்னர்கள் விவகாரத்தில் நேருவுக்கும், படேலுக்கும் பார்வைகள் வேறுபட்டதாக இருந்தது.
ஜாம் நகர் நவாப் சாஹேப், 1949-இல் ஐ.நா.வுக்கு போன இந்தியக் குழுவின் உறுப்பினரானார். "நவாப் சாஹேப் போனால் எனக்குதான் அவமானம். அவரும் அவருடைய வைர சட்டைப் பொத்தான்களும்' என்று சீறினார் பிரதமர் நேரு. இதை அயலுறவுச் செயலர் கே.பி.எஸ். மேனன், படேலிடம் தெரிவித்தார். சில வினாடிகள் யோசித்துவிட்டு படேல் சொன்னார் "நான் முடிவெடுத்துவிட்டேன்'. நேரு மறுவார்த்தை பேசவில்லை.
இந்தியாவோடு சேரமாட்டேன் என்று முதலில் குரல் கொடுத்த சி.பி.ராமஸ்வாமி ஐயரை, இந்தியாவின் அமெரிக்கத் தூதராக படேல் தேர்வு செய்தார். அதை மறுபரிசீலனை செய்ய நேரு படேலிடம் கெஞ்ச வேண்டியதாயிற்று.

ஒவ்வொரு சமஸ்தானமும் தங்கள் மாநில கஜானாவைச் சுரண்டி, கேளிக்கைகளில் ஈடுபட்டு, பிறகு நிதிப் பற்றாக்குறைக்காக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பணிந்து கிடந்தது. அன்று அந்த சமஸ்தானங்களை இணைக்காமல் இருந்திருந்தால் இந்த தேசம் என்னவாகியிருக்கும்?
காந்திக்கு நினைவகம் பல ஊர்களில், பல ஏக்கர் நிலங்களில் உருவானபோது யாரும் குரல் எழுப்பவில்லை. நாடெங்கிலும் நேருவுக்கு நினைவகங்கள். அப்போதும் யாரும் பேசவில்லை. சமஸ்தானங்களின் உரிமைகளை மீட்டுக் கொடுத்து, இந்திய அரசின் வருவாயைப் பெருக்கி, மாநில உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் மரியாதை வாங்கிக் கொடுத்தவரை, சுதந்திரமடைந்த இந்த எழுபதாண்டுகளில் நாம் மறந்தே போனோம்.

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, ஜனவரி 30 காந்தி நினைவு தினம். நவம்பர் 14 குழந்தைகள் தினம், நேருவின் பிறந்தநாள். இவை நினைவிருக்கின்றன, கொண்டாடப்படுகின்றன. அக்டோபர் 31 படேல் பிறந்த தினம் என்பதை இந்த எழுபது ஆண்டுகளில் யாராவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?
இந்தியா என்பது ஒரு நாடா? என்று கேலி செய்தவர்கள் ஏராளம். அதை ஒருங்கிணைத்த சிற்பிக்குதான் இத்தனை பெரிய சரித்திர புகழ் பெற்ற சிலை. சிலையை வைத்தது யார் என்பது முக்கியமல்ல? யாருக்கு வைக்கப்பட்டது என்பதுதான் முக்கியம். அதற்குச் செலவு ரூ.3,000 கோடியா என்று கணக்குப் பார்ப்பதை விடக் கேவலமான நன்றிகெட்ட பார்வை இருக்க முடியாது!

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.

நாகை, கடலுாருக்கு புயல் அபாயம் தயார் நிலையில் மின் வாரியம்

Added : நவ 13, 2018 00:51

புயல் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படும், நாகை, கடலுாருக்கு, பிற மாவட்டங்களில் இருந்து, கூடுதல் ஊழியர்களை அனுப்பும் பணியில், மின் வாரியம் ஈடுபட்டுள்ளது.சென்னையில், சில இடங்களில், தரைக்கு அடியில் கேபிள்; மற்ற இடங்களில், மின் கம்பம் வாயிலாக, மின் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், கன மழை, புயலின் போது, மின் கம்பங்கள் சாய்ந்து விழுவது தொடர்கிறது.அக்டோபர் இறுதியில், வட கிழக்கு பருவ மழை சீசன் துவங்கினாலும், மின் தேவை அதிகம் உள்ள, சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில், போதிய மழை இல்லை. இதனால், தினசரி மின் தேவை குறையவில்லை.இந்நிலையில், அந்தமான் அருகே உருவான, 'கஜா' புயல், கடலுார்மற்றும் பாம்பன் இடையே, 15ல், கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மேற்கொள்ள வேண்டிய முன்ஏற்பாடுகள் தொடர்பாக, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், மின் பகிர்மான இயக்குனர் ஹெலன், நேற்று சென்னை மண்டல தலைமை மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன், ஆலோசனை நடத்தினார்.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:புயல் பாதிப்பில், மின் வாரியத்திற்கு தான், அதிக சேதம் ஏற்படுகிறது. கஜா புயலால், கடலுார், நாகை மாவட்டங்களில், அதிக பாதிப்பு ஏற்படும் என,தகவல் கிடைத்துள்ளது. இதனால், அங்கு சேதம் ஏற்பட்டால், விரைவாக சீரமைக்க, பிற மாவட்டங்களில் இருந்து, கூடுதல் ஊழியர்கள் 
அனுப்பப்படுகின்றனர்.உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகின்றன. சீரமைப்பு பணிகளை கண்காணிக்க, தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் அடங்கிய குழு ஏற்படுத்தி, கடலுார், நாகைக்கு அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
தலையங்கம்

மரபுகளை மீறக்கூடாது



இந்து சமயம் காலம்காலமாக நீண்ட பல மரபுகளை பின்பற்றுகிறது.

நவம்பர் 13 2018, 03:30

ஒவ்வொரு கோவிலுக்கென்றும் தனித்தனியாக தல புராணம், தல விருட்சம், வழிபாட்டு முறைகள் என இருக்கிறது. இது ஆதிகாலத்தில் இருந்தே இருக்கிறது. இன்றும் நாடு முழுவதும் உள்ள பல கோவில்களில் ஆண்கள் வழிபடசெல்லமுடியாது. பெண்கள் மட்டுமே வழிபடமுடியும். இதுபோல கேரளாவில் உள்ள சபரிமலையில் குடிகொண்டு இருக்கும் சுவாமி அய்யப்பனை தரிசிக்க ஆண்கள் செல்லலாம். ஆனால் பெண்களைப் பொறுத்தமட்டில், 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே செல்லலாமேதவிர, இதற்கு இடைப்பட்ட வயதுள்ள பெண்கள் அங்கு செல்லமுடியாது. இது சரித்திர காலம்தொட்டு நடக்கும் நடைமுறையாகும்.

இந்தநிலையில், சில மாதங்களுக்கு முன்பு சுப்ரீம்கோர்ட்டு அனைத்து வயதுபெண்களும் சபரிமலையில் வழிபட தடையில்லை என்று தீர்ப்பு வழங்கியது. அவ்வாறு வழிபடச்செல்லும் பெண்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது. அதன்பிறகு 2 முறை நடைதிறக்கப் பட்டது. குடும்ப பெண்கள் யாரும் விரதமிருந்து அங்கு வழிபடச்செல்லவில்லை. சமூக ஆர்வலர்களும், மாற்று மதங்களைச் சேர்ந்தவர்களும், பெண் பத்திரிகை யாளர்களும் என சிலர் மட்டுமே அங்கு சென்றனர். ஆனால் அங்கு போலீஸ் பாதுகாப்பையும் மீறி அய்யப்ப பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்களால் சன்னதிக்கு செல்லமுடியவில்லை. திரும்பி வந்துவிட்டனர். இந்தநிலையில், வருகிற 17-ந்தேதி 41 நாள் மண்டலம்- மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் நடைதிறக்க இருக்கிறது. இந்த நேரம் சபரிமலைக்கு வரவிரும்பு கிறவர்கள் இணையதளத்தில் பதிவுசெய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரையில் 3 லட்சத்து 20 ஆயிரம் ஆண்களும், 560 பெண்களும் பதிவு செய்துள்ளனர். பெண்கள் அனைவரும் 50 வயதுக்கு குறைவான வயதுடையவர்கள். இவர்கள் அய்யப்ப பக்தர்களின் எதிர்ப்பை சந்திக்கக்கூடும் என்பதால் அவர்களை திருவனந்தபுரம் அல்லது கொச்சியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்ல கேரள அரசாங்கம் பரிசீலித்துவருகிறது. இதற்காக ‘ஹெலிப்பேட்’ அமைக்க நிச்சயமாக வனத் துறையின் ஒப்புதல் தேவை. ஆனால் ஹெலிகாப்டர் இறங்கும் இடத்திலிருந்து அந்த பெண்களை சன்னிதானம் வரையில் அழைத்து செல்வதிலும் அய்யப்ப பக்தர்களின் எதிர்ப்புகளால் போலீசாருக்கு பெரிய சிரமம் ஏற்படும்.

சபரிமலைக்கு செல்வதற்கு பக்தர்கள் 48 நாட்கள் கடும் விரதம் இருக்கவேண்டும். காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும் குளிர்ந்த நீரில் குளித்து பூஜை செய்யவேண்டும். 48 நாட்கள் விரதத்துக்கு பிறகு, தலையில் இருமுடி சுமந்துகொண்டு பெரியபாதையில் செல்லவேண்டும் என்றால் 61 கி.மீ. தூரமும், சின்னப்பாதையில் செல்லவேண்டும் என்றால் 8 கி.மீ. தூரமும் நடந்துசெல்லவேண்டும். ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ என்ற அடிப்படையில் நடந்து செல்லவேண்டும். வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள் என்றால்கூட டோலியில் அந்த பாதைகள் வழியாகத்தான் செல்லவேண்டும். இதுதான் ஐதீகம், வழிவழியாக கடைப்பிடிக்கப்படும் மரபு. ஏற்கனவே பெண்கள் வழிபட தடை என்ற மரபு மீறப்படும் நிலையில், தலையில் இருமுடி சுமந்து கொண்டு பெரிய பாதை அல்லது சின்னப்பாதை வழியாக நடந்துதான் செல்லவேண்டும் என்ற மரபை மீறி, ஹெலிகாப்டரில் செல்வது என்பது நிச்சயமாக ஏற்புடையது அல்ல. எந்தநிலையிலும் வழிபாட்டு முறைகள் மீறப்படக்கூடாது. இது அய்யப்ப பக்தர்களின் மனதை மேலும் புண்படுத்துவதாகத்தான் அமையும்.
திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை



புயல் திசை மாறியதால் கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கிறது. விழுப்புரம், தஞ்சை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு பாதிப்பு இல்லை என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

பதிவு: நவம்பர் 13, 2018 05:45 AM
சென்னை,

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் சென்னைக்கு வட கிழக்கே 860 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்ட, இந்த புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது திசை மாறியுள்ள இந்த புயல் நாகப்பட்டினத்திற்கு வட கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலையில் நிலைகொண்டுள்ளது.


இந்த புயலானது மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும் அது தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயல் 15-ந்தேதி கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென் கிழக்கு வங்க கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்திற்கு வட கிழக்கே சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளது. இந்த புயல் 15-ந்தேதி முற்பகலில் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும். தற்போது நிலவரப்படி 14-ந்தேதி (நாளை) இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும். புயல் கடக்கும் நேரத்தில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சில சமயம் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும்.

புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். 16-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம். நாகப்பட்டினம், கடலூர், காரைக்காலில் இயல்பை விட ஒரு மீட்டர் அளவுக்கு கடல் நீர் மட்டம் உயரும். மிக கனமழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரையில் தஞ்சாவூர், காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிகவும் பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில், மழை பெய்யக்கூடும். புயல் பாதிப்பு இல்லை. இயல்பான அளவில் காற்று வீசக் கூடும். பொதுவாக கனமழைக் கான அறிவிப்பை ரெட் அலர்ட்டாக குறிப்பிட்டு இருக்கிறோம். இது நிர்வாக நடவடிக்கைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்களுக்கானது அல்ல. மக்கள் பீதி அடைய வேண்டியதில்லை. இது குறித்த விளக் கத்தை எங்களது இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறோம்.

20 செ.மீ. மழை பெய்யுமா? என்று கேட்கிறார்கள். புயல் கடக்கும் நேரத்தில் ஈரப்பதத்தை பொறுத்து மழை அளவு வேறுபடும். கரையை கடக்கும்போது தீவிர புயல் மீண்டும் புயலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது தீவிர புயலாக மாறிய ‘கஜா புயல்’ மேலும் தீவிரம் அடைந்து அதி தீவிர புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. புயல் கரையை நெருங்க, நெருங்கத்தான் அதன் வேகத்தை கணிக்க முடியும் என்றும் இப்போதைக்கு புயல் தாக்கும் அபாயம் நீடிப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15-ந்தேதி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

15-ந்தேதி அதிகாலையில் இருந்தே புயல் கரையை நெருங்க தொடங்கும். பகல் 12 மணி அளவில் கடலூர்-பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும். இந்த புயலின் தாக்கத்தால் சென்னைக்கு பெரிய ஆபத்து இல்லை என்றாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலை எதிர்கொள்ள தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

இது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் கூறும்போது, ‘மழை பாதிப்பு குறித்து விரைந்து அறிந்து கொள்ள டி.என்.ஸ்மார்ட் என்ற புதிய மொபைல் ஆப் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போதையை சூழ்நிலையில் 4,400 இடங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படலாம் என்று தெரியவந்துள்ளது. அந்த பகுதிகளில் எல்லாம் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

இதற்கிடையே, கஜா புயலை எதிர்கொள்வது குறித்தும், புயலால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பேரிடர் மேலாண்மை மீட்பு குழு அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கஜா புயலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு வழங்கினார். புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கும் மக்களை உடனடியாக மீட்பது, தற்காலிக தங்கும் இடங்களை உருவாக்குவது, தீயணைப்பு வாகனங்களை தகுந்த இடங்களில் நிறுத்துவது, முக்கியமான இடங்களில் மருத்துவ முகாம் அமைப்பது, பாதிப்பு மிகுந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினரை அதிகமாக நிறுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே, நேற்று மாலை தலைமை செயலகத்தில், மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கலந்துரையாடினார். அப்போது அவர் கஜா புயல் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
Tamil Nadu government seeks list of unfit teachers, non-teaching staff

If anyone should be asked to retire compulsorily, this too should be mentioned in the letter, the order said.

Published: 12th November 2018 02:07 AM |


Image used for representational purpose only.

By Express News Service

COIMBATORE: The Directorate of School Education has ordered chief educational officers (CEOs) of all districts to submit to it by Thursday (November 15) lists of ‘unfit’ teachers and non-teaching staff - i.e., those who do not do their work properly.

A list of teachers with sexual harassment complaints against them is also to be made.

“Some teachers do not come to school in time and do not take classes. A few of them do only trade union work,” said an Education Department official here.

“The Director has also asked us to create a list of teachers who have complaints of sexual harassment against them.”



Names of those who have taken long leave to live or work in foreign countries is also to be sent to the directorate.

“These problems are affecting education of students and development of schools. Though some such staff have been suspended for their actions, the government might be creating a list of names so that they might be might asked to retire compulsorily,” the official said.

The order said CEOs concerned should review the work of teachers and non-teaching staff through heads of schools.

The school heads should make a list of teachers who show carelessness in teaching or are otherwise unfit for the job.

Block educational officers (BEOs) should similarly create the list of non-teaching staff who are not fit for their work, Director of School Education V C Rameswara Murugan said in the order.

Heads of schools and BEOs, respectively, should also prepare lists of teachers and non-teaching staff who have been working for over 25 years and are more than 50 years of age.

They should review the work of these staff and sent the details, also by November 15, to the directorate. If anyone should be asked to retire compulsorily, this too should be mentioned in the letter, the order said.

‘Review of work’

The order said CEOs concerned should review the work of teachers and non-teaching staff through heads of schools.

The heads should make a list of teachers who show carelessness in teaching or are otherwise unfit for the job.

Block educational officers should similarly create the list of non-teaching staff who are not fit for their works
Not possible to use Aadhaar biometrics to identify the dead, UIDAI tells Delhi HC

The court was hearing a petition filed by social activist Amit Sahni seeking a direction to the Centre and UIDAI to utilise Aadhaar biometrics to identify the unidentified dead bodies.

Published: 12th November 2018 06:20 PM 



Image used for representational purpose only. (Photo | File/PTI)
By PTI

NEW DELHI: The Unique Identification Authority of India (UIDAI) told the Delhi High Court on Monday that it was technically not possible to match the fingerprints of an unidentified body with the biometrics of 120 crore people stored in its database.

UIDAI submitted before a bench of Chief Justice Rajendra Menon and Justice V K Rao that matching of biometrics, including fingerprints and iris, is done on 1:1 basis and Aadhaar number is required for it.

The court was hearing a petition filed by social activist Amit Sahni seeking a direction to the Centre and UIDAI to utilise Aadhaar biometrics to identify the unidentified dead bodies.

The bench asked the UIDAI to bring on record the details and file its response to the plea, explaining the system as to why it was not possible to match the fingerprints in such cases with the Aadhaar database.


It also sought the reply of National Crime Records Bureau (NCRB) on the plea and listed the matter for further hearing on February 5 next year.

The petition has sought a direction to the Centre, UIDAI, NCRB and all the states to scan biometrics of unidentified bodies and process them with Aadhaar portal to trace any pre-existing biometric details.

Noting the submissions of UIDAI's counsel Zoheb Hussain, the bench said if it was technically not possible, how can it direct authorities to do it.

Sahni, also an advocate, submitted before the bench that it was possible to use Aadhaar biometrics to identify the dead, and even missing persons were traced through Aadhaar.

The UIDAI counsel said that for matching biometrics, it required prints of all the fingers, iris scan and if they go by only one thumb print scanning, there are chances that it would match with multiple persons.

"It is not possible. There are 120 crore persons on Aadhaar. It is always done 1:1," he said.

He also referred to the October 12 order of an Aurangabad bench of Bombay High Court where the investigating officer had moved the court seeking permission to compare fingerprints of a dead woman in Aadhaar database to establish her identity.

The UIDAI had told the high court that it was not at all possible to compare the fingerprints with the information stored.

Noting this, the high court had dismissed the investigating officer's plea.

Sahni, in his plea, has sought directions to the Centre and UIDAI to share pre-existing Aadhaar details, if already there, without any delay, with the NCRB and states for identification of dead bodies.

In case the biometrics of the "dead body pre-exist on Aadhaar portal then directions be issued to share" them with the respondents immediately for handing over the body to the family or relatives "so that respectable and dignified exit could be ensured by performing last rites by affected persons (family)", the plea said.

He has sought directions to constitute special courts for speedy disposal of cases pertaining to unidentified dead bodies under Aadhaar Act on the same day or the next day, irrespective of holiday.

A similar plea was earlier filed by the petitioner before the Supreme Court which asked him to approach the Delhi High Court where he has already filed a petition for using Aadhaar biometrics for the purpose of tracing and re-uniting missing and mentally challenged persons with their families.

Thereafter, he withdrew the plea from the top court. The plea said despite registering biometrics and scanning more than 1. 22 billion citizens at the Aadhaar Portal, the database was not being utilised for the identifying bodies.

It added that thousands of unidentified bodies are recovered in the country every year.

The petition sought directions to the authorities, saying usage of Aadhaar information would not only reduce manpower, expenditure and burden on the state in disposing the unidentified bodies but could also be handed over to the families in a short span of time.

A five-judge Constitution bench of the apex court had on September 26 declared the Centre's flagship Aadhaar scheme as constitutionally valid but had struck down some of its provisions, including its linking with bank accounts, mobile phones and school admissions clause.

The bench had held that while Aadhaar would remain mandatory for filing of Income Tax returns and allotment of Permanent Account Number (PAN), it would not be compulsory to link Aadhaar to bank accounts and telecom service providers cannot seek its linking for mobile connections.

NEWS TODAY 13.07.2026