Sunday, November 18, 2018

Supplementary exams now only in June/July in Tamil Nadu

The Directorate of Government Examinations has announced that the September/October supplementary exam for Standards X, XI and XII will not be conducted from 2019.

Published: 18th November 2018 06:49 AM 


 

By Sushmitha Ramakrishnan
Express News Service

CHENNAI: The Directorate of Government Examinations has announced that the September/October supplementary exam for Standards X, XI and XII will not be conducted from 2019. The statement cited a government order No 164 dated August 6, 2018 issued by the School Education Department.

This means that all students who do not clear their public exams in March- April should reattempt it in June/July. Currently, students who do not appear or fail in their public exams apply for instant re-exam in June/July. If they fail that as well, they re-attempt it in September/October supplementary exam.

Now, the September/ October supplementary exam has been clubbed with the instant re-exam. If students fail in their papers in June/July, they can write again only in March/April in the following year.


The decision was taken owing to shortage of teachers, said D Vasundradevi, Director of Government Examinations. Teachers are deployed on exam duty in March/ April followed by valuation of answer sheets. Then they invigilate and correct the papers in the examinations in June/July followed by the same routine for the supplementary exams in September/October.


“When teachers are always on exam duty, it disrupts regular classes,” she said adding that the June/July instant re-exam was introduced so that students do not waste an academic year. “But conducting an exam in September would be meaningless, as they cannot join next year anyway,” she said. “However, students who fail in more than one exam will be allowed to take all their supplementary exams in June/July itself,” another official from the Directorate of Government Examinations clarified.

“Teachers have to take care of term exams between all the different exams. Teachers from the science streams are also involved in taking NEET coaching classes. There is a shortage of manpower,” said a senior member of Government School Headmasters Association.

Cancelling these exams may affect marginalised students significantly, said educationalist Prince Gajendrababu. “The instant exams in June/July will only help good students who couldn’t pass or attend an exam due to last minute emergency. Students who want to pursue ITI and diploma, will sign-up for the course and then clear their papers in September/October supplementary exam,” he said.

Students who fail the June/July instant re-exam, will have to wait a year and take the exam again in March/April next year, when ITI entrance will coincide, he added. “This means they have to wait another year to take their ITI exams. Marginalised students cannot afford to not study and not work for such a long time, as their families expect them to earn soon,” he said. He added that such children will be thrown out of the education system into working.

UGC

Revised UGC rules may raise bar for deemed university tag

According to the proposal, to get the deemed university status, an existing institution should have completed at least 15 years.

Under the new norms, it has also been decided that only the best among the new deemed varsities would be allowed off-shore centres after due process

Updated: Nov 13, 2018 10:29 IST

By Amandeep Shukla, Hindustan Times, New Delhi

The human resource development (HRD) ministry is considering redrawing norms for ‘deemed to be universities’ which would raise the bar for institutions to get the status and would focus more on quality of education, officials aware of the development said.

There is proposal to make entry norms for such varsities to be made more stringent and bring greater focus on monitoring quality. However, a final decision in this regard may be taken by the University Grants Commission (UGC), a senior official said.

According to the proposal, to get the deemed university status, an existing institution should have completed at least 15 years.

It is also expected that the institution would be accredited by National Assessment and Accreditation Council with a high score. In case of an institution teaching technical courses, two third of its courses are to be accredited by the National Board of Accreditation (NBA).According to a source, the new proposal also specifies that the institution is either in the top 100 of the National Institutional Ranking Framework (NIRF) or in the top 50 in any specified category at the time of the application and also in the previous two years. Another condition for the granting of the deemed university status for an institute is that it should have multi-disciplinary courses and have a high research output.

According to the proposal, the teacher student ratio also should not be less than 1:20.

“The norms suggested in the fresh proposal are much tighter than the existing norms and are expected to raise the bar for such institutes,” said another senior official.

It holds that the UGC would monitor performance and academic outcomes of all deemed to be universities on an annual basis.Among the performance criteria, it has been suggested that graduate outcomes should be such that at least 50% of them secure access to employment , self-employment or engage in higher education, it is learnt.

Another important condition is that teacher vacancy should not exceed 10%of the sanctioned strength. It is also expected that a substantial number of students passing out of these varsities would appear and clear examinations like GATE, UGC-NET, according to the proposal.

“It is expected that the new norms, if approved, would set up a higher entry bar. However, there are also provisions which would allow more freedom to the selected institutions in terms of pedagogy and curriculum,” the official said.

Under the new norms, it has also been decided that only the best among the new deemed varsities would be allowed off-shore centres after due process, a senior official said. Under, the ‘de novo’ category new institutions offering niche courses may get the status, according to the proposed norms, a source said.

Furqan Qamar, secretary general, Association of Indian Universities, said: “Over a period of time, deemed university regulations have undergone several changes. Any step to improve their quality is welcome. However, it has to be seen that autonomy is encouraged...”

First Published: Nov 10, 2018 23:37 IST


அற்ப ஆசை ஆபத்து!

By எஸ். ஸ்ரீதுரை | Published on : 16th November 2018 02:35 AM 

அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கும்போது, உணர்ச்சி வேகத்தில் ஏதாவது சொல்லிவிட்டுப் பின்னர் அதனை மறுப்பதைப் பார்க்கின்றோம். நிலைமை முற்றினால் வேறு வழியின்றி வருத்தமோ மன்னிப்போ தெரிவித்துவிட்டு, பிரச்னையிலிருந்து தங்களை அவர்கள் விடுவித்துக் கொள்ளவும் செய்கிறார்கள்.
ஆனால், எப்போதாவது தங்கள் மீது விழும் ஊடக வெளிச்சத்திற்காக ஏங்கும் சாதாரண மக்களில் ஒரு சிலர் எக்குத் தப்பாக எதையாவது செய்துவிட்டுப் பிறகு மீள முடியாமல் தவிக்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், காவிரிப் பிரச்னை தொடர்பான போராட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது இவ்வருடத்திய ஐ.பி.எல். கிரிக்கெட் பந்தயங்கள் தொடங்கின. காவிரிப் பிரச்னையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். பந்தயத்தைத் தடைசெய்யக் கோரி பெரும் போராட்டம் நடந்தது.
அப்போது, தொழில்முறை குத்துச் சண்டை வீரரைப் போல் தோற்றமளித்த ஓர் இளைஞர், காவலர் ஒருவரை திடீரென்று சரமாரியாகத் தாக்கிய காணொளி ஊடகங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.
தாக்குதலில் காயமடைந்த அக்காவலர் நிலைகுலைந்து விழுந்தவுடன், சட்டென்று அவ்விளைஞர் கூட்டத்தில் புகுந்து மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டார். காவல் துறையினரால் தீவிரமாகத் தேடப்பட்ட அந்த இளைஞர் சில வாரங்கள் தலைமறைவாக இருந்துவிட்டுப் பின்னர் பிடிபட்டார்.

இன்னொரு காட்சி: சமீபத்தில் வெளிவந்து சர்ச்சைக்குள்ளான திரைப்படத்தின் விளம்பரப் பதாகைகள், அப்படத்தை எதிர்த்த அரசியல் கட்சியினரால் ஆங்காங்கே கிழிக்கப் பட்டன. சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பளர்களும், அதனை எதிர்த்த கட்சியினரும் அரசியலில் எதிரெதிர் முகாம்களைச் சேர்ந்தவர்கள்தாம். ஆனாலும், இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்குவதாக உடன்படிக்கையும் ஏற்பட்டுவிட்டது.

ஆனால், அத்திரைப்படத்தில் நடித்த கதாநாயகனின் ரசிகர்கள் என்று கூறிக்கொள்ளும் இளைஞர்கள் இருவர், தங்கள் அபிமான நடிகர் நடித்த படத்தின் பதாகைகளைக் கிழித்தவர்களை எச்சரிக்கும் விதமாகக் கையில் கத்தியை வைத்துக்கொண்டு எச்சரிக்கும் காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து ஒரு பரபரப்பு உண்டானது. தற்போது அந்த இளைஞர்கள் தேடப்படும் குற்றவாளிகளாகி விட்டனர்.
வேறொரு காட்சி: தென்மாவட்டம் ஒன்றைச் சேர்ந்த ஒருவர், கடந்த செப்டம்பர் மாதத்தில், தன்னுடைய அண்ணனுக்குச் சிறையில் நேர்ந்த அனுபவங்களால் ஆத்திரமடைந்து, சிறைக் கண்காணிப்பாளருக்கும், காவல் ஆய்வாளர் ஒருவருக்கும் (இருவரும் பெண்கள்) மிரட்டல் விடும் குரல் பதிவைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். 

காவல் துறைக்கே சவால்விடும் அளவுக்குப் பெரிய ஆள் போலிருக்கிறது என்று அவரைப் பற்றிப் பலரும் நினைத்துக் கொண்டிருக்க, மிரட்டல் விடுத்த ஓரிரு நாளிலேயே பிடிபட்டார் அந்த நபர்.

மேற்கண்ட நிகழ்வுகளுக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் சென்னை மாநகரில், ரயில் மற்றும் பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் சிலர் பட்டாக் கத்திகளுடன் அவ்வப்போது உலா வந்து பொதுமக்களைக் கலவரப்படுத்துவது வழக்கமாகியுள்ளது.

தங்களின் வீரசாகசத்தைக் கைப்படமாகவும் (செல்ஃபி), காணொளியாகவும் எடுத்துப் பதிவு செய்து அவர்கள் மகிழவும் செய்கிறார்கள்; காவல் துறையினரிடம் பிடிபடவும் செய்கிறார்கள். 

மேற்படி சாகசங்களைச் செய்வதன் மூலம் ஊடக வெளிச்சம் தங்கள் மேல் விழுவதை ரசிக்கின்ற மனோபாவமே இவர்களை இப்படிச் செய்யத் தூண்டுகின்றது.

ஆனால், அந்த ஊடக வெளிச்சம் இவர்கள் மேல் விழுவது சிறிது நேரமே என்பதையும், அந்த வெளிச்சத்தினால் சமூக விரோதிகள் என்ற எதிர்மறைப் பெயர்தான் இவர்களுக்குக் கிடைக்கும் என்பதையும் இவர்கள் மறந்து விடுகிறார்கள். 

இவை மட்டுமா? ஊடகத்துறையினர் முன்பு, எதையாவது ஆட்சேபகரமாகப் பேசிவிட்டுத் தப்பித்துக் கொள்ளும் அரசியல் கட்சியினர் போல் தங்களால் தப்பித்துவிட முடியாது என்பதையும் இவர்கள் புரிந்து கொள்வதில்லை.
ஐ.பி.எல். பந்தயத்தின்போது காவலரைத் தாக்கிய இளைஞர் எந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்று கூறப்பட்டதோ, அந்தக் கட்சித் தலைமையே, அவர் தங்கள் கட்சிக்காரர் இல்லை என்று கூறிவிட்டது. 

அந்த இளைஞர் மட்டுமன்றி, தங்களின் அபிமான நடிகருக்காகக் கத்தியைத் தூக்கிய ரசிகர்கள், காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்த நபர் மற்றும் பேருந்து, ரயில் பயணத்தின்போது பட்டாக் கத்தியைச் சுழற்றிய மாணவர்கள் அனைவருக்குமே அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை எதிர்கொள்ளவே இனி நேரம் போதாது. அவர்களது குடும்பத்தினர் மட்டுமன்றி, உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் எல்லாருமே அவர்களைச் சமூக விரோதிகளாகவே பார்ப்பார்கள்.
ஏதோ பெரிய சாதனை புரிவதாக நினைத்துக்கொண்டு, ஊடக வெளியில் அசட்டுத் துணிச்சலுடன் சில சாகசங்களைச் செய்யத் துணிந்த இவர்கள் அனைவரும் தங்கள் செயலை எண்ணிக் காலமெல்லாம் வருந்த வேண்டியிருக்கும்.

சமுதாய முன்னேற்றத்திற்கும், தேசத்தின் வளர்ச்சிக்கும் துணை புரியும் சாதனையாளர்களின் மீது புகழ் வெளிச்சம் தானாகவே பரவும். இதுவன்றி, ஊடக வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டுச் செய்யப்படும் செயல்கள் எதிர்மறைப் பயனையே கொடுக்கும் என்பதை இன்றைய இளைய சமுதாயத்தினர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

முறியக்கூடாத உறவுகள்


By ம. அஹமது நவ்ரோஸ் பேகம் | Published on : 17th November 2018 01:40 AM

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். இன்று மின்னணு காலத்தில் திருமணம் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்து, அதே வேகத்தில் முறிந்தும் விடுகிறது. ஆணாகட்டும், பெண்ணாகட்டும் பொறுமை என்பது மருந்துக்கும் கிடையாது. திருமணம் நடந்த வீடுகளுக்கென்றே உரித்தான மலர்கள் மற்றும் சாப்பாடு வகைகளின் மணம் மறைவதற்குள், சில திருமண உறவுகள் தடயம் இன்றி அழிந்து விடுகின்றன.
திருமணங்கள் முறிக்கப்படுவதற்குப் பெரிதான காரணங்கள் என்னென்ன என்று பார்த்தால், ஓரிரண்டு தம்பதிகளைத் தவிர மற்றவர்களுக்கு உருப்படியாக ஒரு காரணமும் இருப்பதில்லை. நான், இது போன்ற காரணங்களுக்குத் தீர்வுகாண முற்படும் சமயங்களில், சேர்ந்து வாழ்வதே நல்லது என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட பெண்களுடன் பேசும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுண்டு.

இரண்டு, மூன்று சந்திப்புகள், ஆலோசனைகளுக்குப் பிறகு அவர்கள் முடிவில் சிறிது தளர்வு இருப்பது போல் தோன்றினாலும், அவர்களுடைய பெற்றோர் பிடிவாதமாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். 

இரு தரப்பிலும் சிறு, சிறு குறைகள் இருக்கும். ஒருவர் கொஞ்சம் விட்டுக்கொடுத்தாலே பிரிவு வரை போவதற்கு அவசியம் இருக்காது. குறைகளைக் காரணமாகக் கூறி பிரிவு கோரும் தம்பதிகள், ஒருவருக்கொருவர் இருக்கும் நிறைகளை எண்ணிப்பார்ப்பதில்லை. யாரிடம்தான் குறைகள் இல்லை. மனிதர்கள் குறைகளும், நிறைகளும் கலந்த கலப்பினம்தான். 

வெளிப்பார்வைக்குப் பெண்களுக்குதான் ஏதோ அநீதி இழைக்கப்படுவதாகத் தோன்றினாலும், பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதைப் பார்க்க நேரிடுகிறது.
அதே நேரத்தில் திருமண வாழ்க்கைக்குத் தகுதியில்லாத ஆண்களை, தெரியாமல் மணந்துகொண்டு, அதனால், மிகக் குறுகிய காலத்தில் கணவனைப் பிரிந்து வாழும் தங்கள் மகள்களின், மறுமணத்திற்காக விண்ணப்பம் அளிக்க வரும் பெற்றோரின்எண்ணிக்கை அதிகரித்து வருவதாக திருமணத் தகவல் மையத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறினார்.
அப்படிப்பட்ட ஆண்கள் அல்லது மகனின் குறை பற்றித் தெரியும் பெற்றோர், பெண்களின் வாழ்க்கையை வீணடித்து விடக்கூடாது என்பது பெண்களைப் பெற்றவர்களின் ஆதங்கமாக இருக்கிறது. 

பொதுவாகக் கணவன் குடித்தாலும், அடித்தாலும் பொறுத்துக் கொள்ளும் பெண்களுக்குத் தவறான தொடர்பில் இருக்கும் கணவனை சகித்துக் கொள்வது மட்டும் முடியாத காரியம். அத்துடன் தங்கள் பிள்ளைகளும் கெட்டுப் போகலாம் என்று கூறி மணவிலக்கு கோரும் பெண்களும் உண்டு.
இதே காரணத்தைக் கூறும் ஆண்களும் உண்டு. குடும்பம், பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் சட்டத்திற்குப் பயந்தாவது தவறான தொடர்பினைப் பற்றி சிந்திக்காமல் இருந்தார்கள். சட்டமே இப்போது அனுமதி அளித்துவிட்டதால் கணவனோ, மனைவியோ சட்டத்தைக் காட்டி ஒருவரையொருவர் மிரட்ட முடியாத சூழல் இன்று ஏற்பட்டுவிட்டது.
என்ன காரணத்திற்காகப் பிரிந்தாலும் குடும்ப அமைப்பே சிதைந்து போய் விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. குழந்தை(களைப்) பெற்றவர்கள், கணவருடன்/ மனைவியுடன் இல்லை; பிரிந்து விட்டோம் என்று சொல்வது அவர்களுக்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால், தாயுடனோ அல்லது தந்தையுடனோ மட்டும் வாழும் குழந்தைகள் அதனை வெளியுலகில் சொல்வதற்கு மிகவும் வேதனைப்படுவார்கள்.
தங்கள் வயதையொத்த குழந்தைகள் தாய் - தந்தையருடன் வசிப்பதைப் பார்க்கும்போது அவர்களின் கண்கள் ஏக்கத்தை வெளிப்படுத்துவதை அவர்களின் ஆசிரியர்கள் புரிந்து கொள்கிறார்கள். உடன் படிக்கும் மாணவர்கள் சிலர் உனக்கு ஏன் அப்பா / அம்மா மட்டும் இருக்கிறார்கள்? என்ற கேள்வியை அவர்களைக் காயப்படுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.

இதனால் நொந்து போகும் பிஞ்சுகளின் மனதை, பிரிந்து வாழும் தாயாலோ, தந்தையாலோ புரிந்துகொள்ள முடியாது. சட்ட ரீதியாக மணவிலக்கு பெறாதவர்கள் தங்களின் வறட்டுப் பிடிவாதத்தால், தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அவர்களுக்குத் தர மறுக்கிறார்கள்.

ஒரு சில தம்பதிகள் சட்டப்படி பிரிந்த பின், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் தடுமாறி, தாங்கள் எடுத்த முடிவு தவறானதோ என்று கூட வருத்தப்படுகின்றனர். 

பிரிவது என்று முடிவெடுக்கும் தம்பதிகள் ஏதோ அவர்களுக்கு மட்டும்தான் பிரச்னைகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இணைந்து வாழும் ஒவ்வொரு வரும் சண்டை, சச்சரவுகள், மனஸ்தாபங்களைப் பொறுமையுடன் இருந்து கடந்து வந்ததால்தான் இன்று பெயரன், பெயர்த்திகள் எடுத்து நிறைவான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

பொறுமையும் சகிப்புத்தன்மையும் இல்லாததால்தான் இன்றைய காலத்தில் கால்களில் சக்கரங்கள் இல்லாமல் ஓடும் இயந்திரங்கள் போல் ஆகிவிட்ட மனிதர்களுக்கு எல்லாப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன.
பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை, எந்தச் சிரமமும் கொடுக்காமல் வளர்ப்பதால், புகுந்த வீட்டிலும் தங்கள் பிள்ளைகள் சொகுசாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் தங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். 

எத்தனை காலம் அப்படி அவர்களைப் பராமரிக்க முடியும் என்பதையும், தங்கள் மறைவிற்குப் பிறகு அவர்களின் கதி என்னவாகும் என்பதைப் பற்றியும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

எனவே, திருமண ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி, அதன் மூலம் திருமணத்திற்கு முன், பெண்பிள்ளைகளுக்கு மட்டுமின்றி, அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆலோசனைகள் வழங்குவதால் திருமண முறிவுகளைக் குறைக்க முடியும்.
விழாமல் காக்கும் விழாக்கள்

By உதயை மு.வீரையன் | Published on : 17th November 2018 01:43 AM |

தீபாவளி என்றாலே புத்தாடையும், பட்டாசும்தான் நினைவுக்கு வரும். இந்நிலையில், தீபாவளி நாளில் காற்று மாசு அதிகரிப்பதால் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தீபாவளியன்று நாடு முழுவதும் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது.

தமிழ் நாட்டைப் பொருத்தவரை காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என்று மாநில அரசு அறிவித்தது. அதே நேரம் சப்தம் எழுப்பும் வெடிகளுக்குத்தான் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது என்றும், மத்தாப்பு போன்ற சப்தம் எழுப்பாத பட்டாசுகளுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது எனவும் தீயணைப்புத் துறை விளக்கம் கூறியது.

தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 188-ஆவது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சட்டப்படி 6 மாதம் வரை சிறைத் தண்டனையோ, ரூ.1000 வரை அபராதமோ விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.

இதன்படி உச்சநீதிமன்றம் விதித்த நேரக் கட்டுப்பாட்டை மீறி, பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விழா நாளில் மகிழ்ச்சி மிகுதியால் குழந்தைகள் வெடித்ததற்கு பெற்றோர் மீது வழக்குப் போடுவது சரியா? இந்த வழக்குகளை விலக்கிக் கொள்வது சமூகப் பொறுப்புள்ள அரசுக்கு அழகாகும்.

பல காலமாகவே பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதைப் பற்றி சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த ஆண்டு நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்த போதிலும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.
ஆனால், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையினால் குறைந்த அளவிலேயே மாசு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சென்னையில் காற்று மாசுபாடு 65 குறியீடு பதிவாகியிருப்பதாகவும், தில்லியில் சராசரி காற்று மாசு 349 குறியீடு எனவும் தெரிவித்துள்ளது.

தில்லியில் காற்று மாசு மிகவும் அபாயகரமான அளவில் இருப்பதாகவும், வடமாநிலங்களைவிட சென்னையில் மிகவும் குறைந்த அளவில் காற்றின் மாசு பதிவாகியிருப்பதாகவும் அதன் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு தீபாவளியன்று ஏற்பட்ட மாசைவிட இந்த ஆண்டு மிகவும் குறைந்துள்ளது.

சென்னையில் சில இடங்களில் அளவிடப்பட்டதன் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தலைநகர் தில்லி, மக்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற நகரமாக மாறிக் கொண்டிருக்கிறது. தில்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டு அங்கு வசிக்கும் மக்கள் சுவாசப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகியுள்ளனர். காற்றை வடிகட்டும் முகக்கவசத்தை அணிந்து கொண்டுதான் வெளியில் செல்ல வேண்டியுள்ளது. இதனால், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு தில்லியில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதித்துள்ளது.

தமிழ் நாட்டில் அண்மைக் காலமாக தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகை, வாகனப் புகை, சாலைகளை முறையாகப் பராமரிக்காததால் பறக்கும் தூசு என காற்று கடுமையாக மாசடைந்து வருகிறது. அத்துடன் சென்னை போன்ற பெரு நகரங்களில் பட்டாசு வெடிப்பது அதிகரித்திருப்பதால் தீபாவளி நேரத்தில் காற்று மாசு மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதித்ததால் சென்னை, மதுரை, கோவை, திருச்சி முதலிய பெருநகரங்களின் பட்டாசு விற்பனையில் 40 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் வணிகர்கள் பெரும் இழப்புக்கு உள்ளாகி யுள்ளனர்.

தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி, பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்கக் கூடுதல் நேரம் கேட்டுப் பெற வேண்டும் எனவும், அப்போதுதான் பட்டாசுத் தொழில் நிலைத்து நிற்கும் எனவும், தமிழகத்திற்கே உரிய பட்டாசுத் தயாரிப்புத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் எனவும் வணிகர்கள் அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி பட்டாசு வெடித்ததில் தமிழகத்தில் 232 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிடப் பல மடங்கு அதிகமாகும். இதனைத் தீயணைப்புத் துறை உறுதி செய்துள்ளது.
பட்டாசு விபத்து பற்றிய தகவல்களை ஒருங்கிணைக்கும் வகையில் காவல்துறை, சுகாதாரத் துறை ஆகியவற்றுடன் தீயணைப்புத் துறையினர் இணைந்து செயல்பட்டனர். இதனால் பெரிய அளவுக்குப் பட்டாசு விபத்துகள் ஏற்படவில்லை. ஆனால் விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.

பல்வேறு காரணங்களால் தொடர்ந்து பட்டாசுத் தொழிற்சாலைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகப் பட்டாசு தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். உச்சநீதிமன்றத்தில் பட்டாசு தொடர்பான வழக்கு காரணமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 40 விழுக்காடு குறைந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் நேரக் கட்டுப்பாட்டால் நிகழாண்டு பட்டாசு விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்போது பட்டாசு உற்பத்திக்கு முக்கிய மூலப் பொருளான பேரியம் நைட்ரேட் பயன்படுத்த நீதிமன்றம் தடைவிதித்துள்ளதால் தீபாவளிக்குப் பின்னர் மீண்டும் பட்டாசு ஆலைகளைத் திறப்பது கடினம் என்று கூறுகின்றனர். இதனால், பட்டாசுத் தொழில் பாதிப்படைவதுடன் சுமார் எட்டு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்கின்றனர்.

இந்த மூலப் பொருளைக் கொண்டுதான் கம்பி மத்தாப்பு, பென்சில், சக்கரம், பூச்சட்டி செய்ய முடியும். நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், இதுபோன்ற பட்டாசுகளை உற்பத்தி செய்வதில் 60 விழுக்காடு பாதிப்பு ஏற்படும். இதனால், தீபாவளி முடிந்து பட்டாசுத் தொழிற்சாலைகளை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றே பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
தீபாவளிப் பண்டிகையின்போது நான்கு நாள்கள் தொடர் விடுமுறையினால் டாஸ்மாக் கடையின் மதுமான விற்பனை ரூ.600 கோடியைத் தாண்டியுள்ளது. இதில் முதல் இரண்டு நாள்களில் ரூ.330 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளன. இதனைச் சாதனை என்பதா? வேதனை என்பதா?
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏழாயிரமாக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை இப்போது நான்காயிரமாகக் குறைந்து விட்டது. அதே நேரம், மதுபானத்தின் விலை கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டதால் கடைகள் குறைந்தாலும் வருவாய் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் ரூ.22 ஆயிரம் கோடிக்கும் மேல் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் குதூகலிக்கும் மக்கள் அதனால் ஏற்படும் குப்பைகளைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. தெருவும், பொது இடங்களும் சுகாதாரக் கேடாக மாறுவதால் பொது அமைதிக்குக் கேடாய் முடிகிறது. இதுபற்றி ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்க வேண்டும்.
தீபாவளியை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் பட்டாசுக் குப்பைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதில் 19 ஆயிரம் மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளிலிருந்து 65 டன் பட்டாசுக் குப்பைகள் அகற்றப்பட்டன. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி இதில் 9.04 டன் பட்டாசுக் குப்பைகள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் தொழிற்சாலை வளாகத்திலுள்ள தொழிற்சாலைக் கழிவுகள் மேலாண்மைக் கூட்டமைப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இவ்வாறு விழாக்கள் முடிந்த பிறகும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் பல நாள்களுக்கு இருந்துகொண்டே இருக்கும். பல நாள்களாக ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு விழா சில நாள்களாவது தொடராமல் போகுமா? ஆனால், எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா?

எல்லா மக்களும் விழாக்கள் கொண்டாடும் நிலையில் இப்போது இல்லை. காரணம், விலைவாசி விண்ணைத் தொடுகிறது. மானியங்களை எதிர்பார்த்தே மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு விழாக்கள் கொண்டாட நேரமும் இல்லை. ஆனால், விழாக்கள் இவர்களைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கின்றன.

பெரிய வணிகர்கள் விளம்பரங்களால் வாழ்கின்றனர். சிறிய வணிகர்கள் விளம்பரம் இல்லாமலே வாழ்வதற்கு விழாக்கள் வழி வகுக்கின்றன. எளிய மனிதர்களாலும் இந்த விழாவைப் பயன்படுத்திக் கொண்டு வாழ முடிகிறது. ஆம், விழாக்கள் அவர்களை விழாமல் காக்கின்றன.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்
கஜா’வை துல்லியமாக கணித்த பள்ளி ஆசிரியர்- பல்வேறு தரப்பினரிடம் இருந்து குவியும் பாராட்டுகள்

Published : 18 Nov 2018 09:38 IST




ந.செல்வகுமார்

கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடக்கும் என்று 15 நாட்களுக்கு முன்பே அரசுப் பள்ளி ஆசிரியர் ந.செல்வகுமார் துல்லியமாக கணித்து கூறிவந்தார். அதேபோல் புயல் பயணிக்கும் பாதை மற்றும் அதனால் ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்தும் கடந்த 4 நாட்களாக அவர் எச்சரித்து வந்தார். அவரது கணிப்புகள் பெருமளவில் இப் போது உண்மையாகி உள்ளன. அதனால் அவருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மன்னார்குடியை சேர்ந்தவர் ந.செல்வகுமார். அரசுப் பள்ளி ஆசிரியரான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னார்வ அடிப்படையில் வானி லையை கணித்து கூறி வருகிறார். இவர் 15 நாட்களுக்கு முன்பே இந்த புயலை கணித்ததுடன், அது வேதாரண்யம் அருகே கரையை கடக்கும் என்பதை உறுதிபட தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம், தொடக்கத்தில் கடலூர் ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும் என்று தெரிவித்திருந்தது. மேலும், புயல் வலு குறைந்து கரையை கடக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

இது தீவிர புயலாகவே கரையை கடக்கும் என்பதில் செல்வகுமார் உறுதியாக இருந் தார். அவர் கணித்ததுபோலவே தற்போது நடந்திருப்பதால், அவ ருக்கு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதுதொடர்பாக வானிலை ஆர்வலர் ந.செல்வகுமார் கூறியது:

மாணவப் பருவத்திலிருந்தே, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியிடப்படும் வானிலை தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படத்தை பார்ப்பது என் வழக்கம். அதன் பின்னர் விசா கப்பட்டினம் துறைமுகம் அருகே இறால் முட்டை பொறிப்பகத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.

அப்போது வானிலை தொடர் பான அறிவை வளர்த்துக் கொண்டு, அங்குள்ள மீனவர் களுக்கு வானிலை தொடர்பான தகவல்களை தெரிவித்து வந்தேன். 1996-ம் ஆண்டு நான் கணித்தபடியே மோசமான புயல் தாக்கி கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீனவர் கள் என்னிடம் வானிலை நிலவரங் களை கேட்கத் தொடங்கினர்.

2000-ம் ஆண்டில் ஆசிரியர் வேலை கிடைத்து வலங்கைமான் பகுதிக்கு வந்தேன். அப்போது செல்போன் பிரபலமடைந்த நிலையில், அங்கு வானிலையை கணித்து எஸ்எம்எஸ் மூலமாக தெரிவித்து வந்தேன். எனது கணிப்பு சரியாக இருந்ததால், என் தகவலை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய கட்டுப்பாடுகளால், ஒரு சிம் கார்டில் இருந்து நாளொன்றுக்கு 100 பேருக்கு மேல் எஸ்எம்எஸ் அனுப்ப முடியவில்லை.

அதனால் 30 சிம் கார்டுகளை வாங்கி, தலா 100 பேருக்கு வானிலை தொடர்பாக எஸ்எம்எஸ் அனுப்பி வந்தேன். பின்னர் அதற்கும் தடை வந்தது. தொடர்ந்து, 150 வாட்ஸ்ஆப் குழுக் களை உருவாக்கி வானிலை நில வரத்தை அறிவித்து வந்தேன். அத் தனை குழுக்களையும் நிர்வகிக்க முடியாமல் கைபேசி முடங்கியது. அதனால் தற்போது ‘நம்ம உழவன்’ என்ற செயலி மூலம் தெரிவித்து வருகிறேன்.

இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள விவரங்கள் அடிப்படையில்தான் நான் கணித்து வருகிறேன். இந்த முறை ஓமன் மற்றும் மேற்கு வங்கம் அருகே நிலவிய எதிர் புயல்களின் செயல்பாடுகளுடன் கஜா புயலை ஒப்பிட்டு பார்த்து, வேதாரண்யம் அருகேதான் புயல் கரையை கடக் கும் என்று உறுதியாக கூறினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
மாற்றம்!  18.11.2018

21 ஆண்டுக்கு பின், எம்.பி.பி.எஸ்., பாடத்திட்டம்...; 
அகில இந்திய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை


புதுடில்லி:  மருத்துவ படிப்புக்கான பாடத் திட்டத்தை, 21 ஆண்டுகளுக்குப் பின் மாற்றி அமைத்து, எம்.சி.ஐ., எனப்படும், அகில இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. நோயாளி களின் உடலில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கம் மட்டுமின்றி, அவர்களின் மன நிலையையும் அறிந்து, டாக்டர்கள் சிகிச்சை அளிக்கும் வகையில், புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளதாக, எம்.சி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




நாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது, அதன் செயல்பாட்டை கவனித்து, வழி நடத்துவது உள்ளிட்ட பணி களை, எம்.சி.ஐ., எனப்படும், அகில இந்திய மருத்துவ கவுன்சில் மேற்கொள்கிறது. மருத் துவ மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை வரையறுப்பதும், எம்.சி.ஐ.,யின் பிரதான பணிகளில் ஒன்றாக உள்ளது. இந் நிலையில், மருத்துவ இளநிலை பட்டப்படிப் பான, எம்.பி. பி.எஸ்.,பாடதிட்டம், கடைசியாக, 1997ல் மாற்றி அமைக்கப்பட்டது.

அப்போது, புதிய நோய்கள் மற்றும் அதை கண்டறியும் முறைகள், அதற்கான மருத்துவம் குறித்த அம்சங்கள், பாடத்திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டன.தற்போது, 21 ஆண்டுகளுக்குப் பின், எம்.பி.பி.எஸ்., பாடத்திட்டத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, மருத்துவம் படிக்கும் மாணவர்கள், வெறும் நோய் மற்றும் அதற்கான மருத்துவம் பற்றி மட்டும் படிக்காமல், நோயாளிகளை புரிந்து,

அவர்களின் மன நிலை அறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், புதிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.அதே போல், நோயாளிகளிடம் எளிதாக கலந்துரையாடும் வகையில், மருத்துவ மாணவர்களுக்கு, 'சாப்ட் ஸ்கில்' எனப்படும் மென்திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் பேசி, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வுஏற்படுத்தவும், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.இது குறித்து, எம்.சி.ஐ., ஆட்சிமன்ற குழு தலைவர், வி.கே.பவுல், டில்லியில், செய்தி யாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு ஆரோக்கியம் அவசியம். ஆரோக்கியமான சமுதா யத்திற்கு, டாக்டர்களின் பங்களிப்பு முக்கியம். அந்த வகையில், காலத்திற்கு ஏற்ப, எம்.பி.பி.எஸ்., பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

அந்த வகையில், கடைசியாக, 1997ல் பாடத்திட்ட மாற்றம் அமல்படுத்தப்பட்டது. 21 ஆண்டுகளாக, அதே பாடத்திட்டம் தான் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், அடுத்த கல்வி ஆண்டு முதல், புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாக்டர்கள், நோயை குணப்படுத்துவோராக மட்டு மின்றி, நோயாளி களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோராகவும் செயல்பட வேண்டும். டாக்டர்கள் தொழில் தர்மத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

இதற்காக, எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு மாணவர் களுக்கு நெறிமுறைகள் குறித்த பாடம் கற்பிக்கப் படும். நோயாளிகளுடன் இனிமையாக பழகுதல், அவர்களுடையபிரச்னைகளை கேட்டறிதல், அவர்களின் மன நிலை அறிந்து சிகிச்சை அளித்தல் குறித்தும், மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும் .டாக்டர்கள் நோயை குணப் படுத்துவதுடன், நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குபவராகவும் இருக்க வேண்டும். அதற்காக, மாணவர்களுக்கு மனநல சிகிச்சை குறித்தும் பாடம் நடத்தப்படும். எம்.பி.பி.எஸ்., முடித்து டாக்டர்களாக பணியாற்றும் போது, நோயாளிகளுடனும், அவர்களின்

உறவினர்களுடனும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சியும், இந்த பாடத் திட்டத்தில் உள்ளது.

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தி, அதை, நோயாளி கள் மற்றும் அவர்களின் உறவினர்களிடமும் ஏற்படுத்தும் வகையில், புதிய பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முக்கிய அமைப்பு!எம்.சி.ஐ., எனப்படும், அகில இந்திய மருத்துவ கவுன்சில், 1934ல் துவங்கப் பட்டது. நாடு முழுவதும், ஒரே தரத்திலான மருத்துவ கல்வியை வழங்கவும், அதை கண் காணிக்கவும், இந்த அமைப்பு துவங்கப்பட்டது.

மருத்துவ படிப்புகள் மற்றும் கல்லுாரிகளுக் கான அங்கீகாரம் வழங்குதல், அவற்றின் செயல்பாட்டை கண்காணித்தல் போன்ற பணிகளை, எம்.சி.ஐ., மேற்கொள்கிறது.இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1933ன் கீழ் இந்த அமைப்பு செயல்பட துவங்கியது. அதன் பின், 1956,1964 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில், இந்த சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. நாட் டில், மருத்துவ படிப்புகள் மற்றும் மருத்துவக் கல்லுாரிகளின் செயல்பாட்டை கண்காணிப் பதில், எம்.சி.ஐ., முக்கிய பங்காற்றுகிறது.

NEWS TODAY 14.07.2026