Thursday, November 7, 2019

Over 18,000 BSNL staff opt for VRS

07/11/2019, YUTHIKA BHARGAVA,NEW DELHI

Within days of the state-run telecom operator BSNL opening its voluntary retirement scheme (VRS), 18,400 employees have opted for it. The loss-making PSU had rolled out the scheme for its employees, following the Union Cabinet nod to a nearly ₹70,000-crore revival package for BSNL and MTNL last month. This included ₹30,000 crore for VRS for the two firms.

For BSNL employees, the VRS option will remain open till December 4. The scheme was opened on November 3. “Till 7 p.m., over 18,400 BSNL employees, of the over 1 lakh eligible staff, have opted for VRS,” a source told The Hindu. BSNL has a staff strength of about 1.5 lakh people.

The company expects 70,000-80,000 people to opt for the scheme.
Drop that phone! Now, a device for the net-addicted

Jakarta:7.11.2019

From browsing social media to watching videos and chatting with friends, Indonesian university student Tyas Sisianindita spends about eight hours a day on her phone. “I realise that I am addicted,” the university student admitted, saying she checks her phone continuously from the time she wakes up, even when she is in classes. “At night, when I can’t sleep, I can use my phone for up to five hours.”

A group of fellow students at the University of Indonesia, led by inventor Irfan Budi Satria, has spent three months developing a wearable device that can help internet users like Sisianindita cut down on the time they spend flicking at their phones.

Called “Nettox”, from “internet detox”, the device is worn on the wrist and contains a pulse oximeter sensor that measures hemoglobin oxygen levels and heart rate variability (HRV). Studies have found that prolonged mobile phone usage has a specific lowering effect on HRV levels. The Nettox device emits a sound when HRV and blood oxygen levels fall within this range, which reminds the wearer to stop using their phone.

For people aged between 18 and 25, the HRV should ideally stay above 60, according to the American Psychological Association, Satria said. At a recent trial, Sisianindita’s HRV reading was 44.

Internet addiction is a growing social issue in Indonesia. In October, two teenagers were treated for their addiction to internet gaming, media reported.

“Children must be taught to be more active and take part in extracurricular activities,” said psychologist Kasandra Putranto. Satria’s team is working on personalising Nettox and improving its accuracy as HRV readings can vary depending on a person’s body shape, gender and health conditions. They aim to apply for a patent for their invention with the university by next year. Satria says, though, that Nettox is targeted at those already invested in changing their behaviour. REUTERS


‘Nettox’ device is worn on the wrist and contains a sensor that measures hemoglobin oxygen levels and heart rate variability (HRV). Studies have found that prolonged mobile phone usage has a lowering effect on HRV levels. The device emits a sound when HRV and blood oxygen levels fall within this range
Ensure WhatsApp msg is traceable: Govt

Rajeev.Deshpande@timesgroup.com

New Delhi:7.11.2019

The government is determined on insisting that social messaging platform WhatsApp must provide for ‘traceability’ of messages in order to assist a criminal investigation that seeks to track crimes ranging from incitement of violence to terrorism and child sexual abuse.

The recent breach of WhatsApp users, through the use of Pegasus spyware developed by an Israeli firm, has only served to deepen the conviction in government that the likely manipulation or misuse of end-to-end encryption platforms needs to be checked and, if necessary, investigated for origin sources.

The response of the messaging platform, owned by social media giant Facebook, to the government’s queries on the breach that came to light in late October, repeated WhatsApp’s previous submissions in May and September. No names of the 120-odd Indians understood to have been affected were provided.

There is concern in the government over what are seen as “selective” revelations about persons affected by the breach, which it is felt created the impression of anti-government voices being targeted. The focus on likely motives saw the government face accusations of snooping and seemed a bid to strengthen the case against traceability, officials said.

The issue of security and privacy relating to social media and messaging platforms is in the Supreme Court and the government has been asked to provide guidelines to address misuse of these ‘intermediaries’ as the current law terms them. Traceability will be an important aspect of the recommendations.

WhatsApp has not been keen to consider such tracking of users on the ground that it is not possible with its service being encrypted from end to end. Yet, officials said, the platform has proved vulnerable to being manipulated and underlined the need to ensure movement of messages that constitute a criminal act is traced.

For full report, www.toi.in

Govt will bring data protection bill in Parliament: Prasad

Picture
New Delhi:

Law and information technology minister Ravi Shankar Prasad said on Wednesday that the government will bring a data protection bill in the forthcoming session of Parliament while emphasizing that India will not accept any attempt to create monopoly on data by few companies and countries.

“Data imperialism will not be acceptable,” the minister said, speaking at the Commonwealth law ministers conference in Colombo. He said data sovereignty of countries – big or small – must be respected. The minister’s comments assume significance in the backdrop of recent reports of surveillance by an Israeli company compromising WhatsApp video calls of some activists, politicians and journalists in India.

“In India we view privacy seriously, and informational privacy is also integral to that. It means a person must have control over his data and its commercial usage,” he said. The minister said while a large amount of data is being generated in developing and under-developed countries but the claim for processing is being emphasized only by big countries. India’s stand on equity in data management found support from other Commonwealth nations, including Singapore and Cameroon. Prasad said data economy both in terms of commercial use and employment will play a crucial role. TNN
Students who don’t clear Class XII exams not eligible to get free laptops

Ram.Sundaram@timesgroup.com

Chennai:7.11.2019

At least 70,000 students are unlikely to get the TamilNadu government’s freelaptops this year, as the state has decided not to distribute laptops to those who have failed to clear Class XII board examinations. An order to this effect was issued by the state government on November 1.

The disqualification, however, has an exemption clause. If students who failed to clear Class XII have enrolled themselvesin a polytechnic course,they would be eligible to get the free laptops.

According to Tamil Nadu Directorate of Government Examinations (TNDGE), more than 1.2 lakh students had failed Class XII in the past two batches alone. But there is no data available on how many among them have enrolled in polytechnic colleges. “Close to 70,000 might be affected,” said a source from the education department.

The scheme to distribute cost-free laptops to students from government and aided schools, colleges and polytechnic institutes was launched in 2011by former chief minister M Karunanidhi.

Every year, morethan 8lakh students have been benefiting from the scheme as the government was sanctioning more than ₹1,000 crore for the scheme depending on the number ofstudents on roll that year. However, asthesubsidy wasburning a hole in the exchequer’s pocket, fund allocation has seen a gradual decline in the past three years. From ₹1,100 crore in 2015-16, allocation dropped to₹511crorethe next year.

The 2019-20 batch of Class XII and XI students are given top preference for free laptops, while those from 2018-19 and 2017-18 batches stand third and fourth in priority.

The order to disqualify Class XII fail students was issued following a suggestion from the state school education departmentthatthe very purpose of providing laptops was for students to use it to further their studies. The ineligible names will now be removed and a fresh indent will be submitted to Electronics Corporation of India (ELCOT), the state agency which procures these laptops.

Monday, November 4, 2019


'பிகில்' காட்சி ரத்து: தேவி திரையரங்க நிர்வாகம் விளக்கம் 






'பிகில்' காட்சி ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தேவி திரையரங்க நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பிகில்'. 180 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரித்தது ஏஜிஎஸ் நிர்வாகம். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் படம் வெளியான ஒரே வாரத்தில் தமிழகத்தில் 100 கோடி வசூலைத் தாண்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

உலகளவில் 2019-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற மாபெரும் இலக்கையும் அடைந்துள்ளது. இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு. இதனிடையே தேவி பாரடைஸ் திரையரங்கில் கூட்டம் குறைவாக இருந்ததால் காட்சி ரத்து செய்யப்பட்டது. இந்த செய்தி வைரலாக பரவியது. மேலும், இந்தத் தகவல் விஜய் - அஜித் ரசிகர்களுக்கு இடையே சண்டையாகவும் உருவெடுத்தது.

இந்தச் சர்ச்சைத் தொடர்பாகத் தேவி திரையரங்கம், "இது உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான செய்தி. நாங்கள் 'பிகில்' படத்தைத் தேவி மற்றும் தேவி பாரடைஸ் என்ற இரண்டு பெரிய திரைகளில் திரையிடுகிறோம். தேவி 900 இருக்கைகளும், தேவி பாரடைஸ் 1100 இருக்கைகளும் கொண்டவை.

பொதுவாக ஒரு மல்டிப்ளெக்ஸில் 200 முதல் 250 சீட்கள் வரை மட்டுமே இருக்கும். எங்களுடைய சீட் எண்ணிக்கையைக் கற்பனை செய்து பாருங்கள். ஒரு மல்டிப்ளெக்ஸின் ஒரு வாரத்துக்கான வசூல் எங்களுக்கு ஒரு நாளிலேயே கிடைத்து விடும். இப்படி தகவல்களை பரப்புபவர்களால் டிக்கெட் நியூ தளத்தை திறந்து தேவி மற்றும் தேவி பாரடைஸின் ரிசர்வேஷன்களை பார்க்க முடியாதா? டிக்கெட்டுகள் விற்றுக் கொண்டிருக்கின்றன.

இரண்டு பட தயாரிப்பாளர்களிடம் பேசி இரண்டாம் வாரத்தில் ’பிகில்’ படத்தைத் தேவியிலும் ’கைதி’ படத்தைத் தேவி பாரடைஸிலும் திரையிடுகிறோம். முதல் வாரத்தில் இரண்டு பெரிய திரைகளிலுமே ’பிகில்’ படத்தைத் திரையிட்டோம். இரண்டாம் வாரத்தில் ’கைதி’க்கு ஒரு பெரிய திரையை ஒதுக்கினோம். இரண்டாம் வாரத்தில் ’பிகில்’ திரைப்படம் தேவி மற்றும் தேவிகலாவில் திரையிடப்படும். மொத்தம் 8 காட்சிகள்” என்று தெரிவித்துள்ளது.

சிகிச்சை டைரி: அம்மா என்றால் துணிவு 


the hindu 




பிருந்தா சீனிவாசன்

அகந்தையும் ஆணவமும் மண்டிக்கிடக்கிறவர்களைச் சந்திக்க நேரிடும் போதெல்லாம் அவர்களை ஒரு நாளாவது புற்றுநோய் மருத்துவமனைக்கோ அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கோ அழைத்துச் சென்று அமரவைத்துவிடத் தோன்றும். வாழ்க்கையின் மகத்துவத்தை அந்த ஒரு நாள் அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடும். நாங்களும் அப்படித்தான் அதை உணர்ந்தோம். வாழ்தல் என்பது சுவாசிப்பது மட்டுமல்ல என்ற பாடத்தையும் பயின்றோம்.

ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய கோடை விடுமுறை. மகளுடன் அம்மா வீட்டுக்குச் சென்றிருந்தேன். கோடைக்காலத்தில் அம்மாவுக்கு ஒவ்வாமையால் உடலில் தடிப்பு ஏற்படும். அந்த ஆண்டு அரிப்பும் தடிப்பும் அதிகமாக இருந்ததாகச் சொன்னார். அப்போது நாங்கள் வீடு கட்டிக்கொண்டிருந்தோம். வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் அப்படி இருக்கும் என அவரே சமாதானம் சொல்லிக்கொண்டார்.

ஆனால், மார்பில் அரிப்புடன் வலியும் இருக்கிறது என அம்மா சொன்னபோது ஏதோ நெருடலாகப் பட்டது. மருத்துவரைப் பார்க்கலாம் என்று சொன்னபோது கூச்சத்தின் காரணமாக மறுத்துவிட்டார். அவரை வற்புறுத்தி மறுநாளே மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் என்பதால் மார்பைத் தொட்டதுமே கட்டி இருப்பதாகவும் அது புற்றுநோய்க் கட்டியாக இருக்கலாம் எனவும் சொல்லிவிட்டார். பயாப்ஸி எடுத்துவிட்டு வரச் சொன்னார்.

உறுதிசெய்த பரிசோதனை

மருத்துவர் பயாப்ஸி எடுக்கச் சொன்னதுமே காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்குச் சென்றுவிடலாம் என்று அம்மா சொன்னார். காரணம், எங்களுக்குத் தெரிந்த ஒருவர் மார்பகப் புற்றுநோய்க்கு அங்கேதான் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இரண்டு மார்பையும் நீக்கிவிட்டு நலமுடன் இருக்கிறார். அம்மாவும் மறுநாளே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகளை முடித்துக்கொண்டு வந்தார். அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதுவரை நாங்கள் பார்த்த அம்மாவுக்கும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்த பிறகு நாங்கள் பார்த்த அம்மாவுக்கும் அப்படியொரு வேறுபாடு.

கீமோவின் பாதிப்புகள்

அம்மாவின் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் நோயைவிடக் கவலையிலும் பயத்திலுமே உயிரை விட்டிருப்பார்கள். ஆனால், என் அம்மா உறுதியோடு இருந்தார்; எதையும் மோதிப் பார்த்துவிடும் திடத்துடன் இருந்தார். வரிசையாகப் போடப்பட்டிருந்த படுக்கைகளில் ஒரு படுக்கையின் மீது எங்கோ வெறித்துப் பார்த்தபடி அம்மா அமர்ந்துகொண்டிருந்த தோற்றம் உயிரை அறுப்பதாக இருந்தது.

கட்டி பெரிதாக இருப்பதால் முதலில் மூன்று முறை கீமோதெரபி கொடுத்துவிட்டுப் பிறகு அறுவைசிகிச்சை செய்யலாம் என மருத்துவர்கள் சொன்னார்கள். முதல் கீமோவுக்கே முடிகொட்டத் தொடங்கியது. தலைசுற்றலும் வாந்தியுமாக அவதிப்பட்டார். மூன்று கீமோவும் முடிந்த நிலையில் அம்மாவின் உடலிலிருந்த சக்தியெல்லாம் வெளியேறியதுபோல் இருந்தது. தலையில் கை வைத்தால் முடி கொத்து கொத்தாகக் கையோடு வந்தது. மொட்டையடித்துவிடும்படி அம்மா சொன்னார். தன்னுடன் சேர்த்து எங்கள் வீட்டின் மகிழ்ச்சி அனைத்தையும் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுவிட்டாரோ எனத் தோன்றியது. வீட்டில் ஒருவர் முகத்திலும் மலர்ச்சி இல்லை.

நம்பிக்கையளித்த அம்மா

ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய எங்கள் தீபாவளி மருத்துவமனையில்தான் கழிந்தது. அம்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்து இடப்பக்க மார்பை அகற்றினார்கள். நோயுற்றவரின் பொழுதுகள் எவ்வளவு நெடியவை என அதை அனுபவிப்பவருக்குத்தான் தெரியும். ஆனால், அனைத்தையும் எந்தவிதப் புகாரும் இல்லாமல் என் அம்மா எதிர்கொண்டார்.

அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பாடலும் கேட்க மாட்டார். மனத்தை மடை மாற்றும் எந்த வழியுமின்றி நாளெல்லாம் படுக்கையில் இருப்பது எவ்வளவு கொடுமை. ஆனால், அதை அம்மா வெளிக்காட்டிக்கொண்டதே இல்லை. தன்னைப் பார்க்க வரும் உறவினர்களை அவர்தான் ஆற்றுப்படுத்துவார். சுற்றியிருப்பவர்களிடம் பேசுவார்; அவர்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் சொல்வார்.

அம்மாவைப் பார்க்க வாரம் ஒரு முறை மருத்துவமனைக்குச் செல்வேன். ஒவ்வொரு வாரமும் அம்மாவைச் சுற்றி ஒரு படுக்கை காலியாக இருக்கும். அந்தப் படுக்கையிலிருந்தவர் இறந்திருப்பார். தன்னைச் சுற்றி ஒவ்வொருவராக மரணத்தைத் தழுவுவதைப் பார்த்த பிறகும் அம்மாவின் கண்களில் ஒளி குறையவில்லை.

வாழ்வா, சாவா எனப் போராடிக்கொண்டிருக்கும் நிலையிலும் வாழ்க்கை மீது பிடிப்புகொண்ட அம்மா எங்களுக்குப் பலவற்றை உணர்த்தினார். ‘காயமே இது பொய்யடா’ என அவர் புலம்பவில்லை; இருக்கும்வரை யாரையும் பகைத்துக்கொள்ளாமல் புகார் கூறாமல் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழக் கற்றுத்தந்தார். அம்மாவின் உறுதிதான் புற்றுநோயிலிருந்து அவரை மீட்டெடுத்தது. சிகிச்சை முடிந்து தற்போது ஏழாம் ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறார் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக.

மருத்துவரின் மனிதாபிமானம்

அந்த மருத்துவமனையில் நான் பார்த்த ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் வாழ்க்கையின் தரிசனத்தைத் துலக்கமாகக் காட்டின. பெண் மருத்துவர் ஒருவர் ஒட்ட வெட்டிய தலைமுடியுடன் இருப்பார். ஏன் அவர் அடிக்கடி மொட்டை அடித்துக்கொள்கிறார் என அம்மாவிடம் கேட்டேன். புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகள் அனைவரும் மொட்டைத்தலையுடன் இருக்கும்போது, தான் மட்டும் முடியுடன் இருப்பது நோயாளிகளுக்கு வேதனையாக இருக்கக்கூடும் என்பதால் அந்த மருத்துவர் எப்போதும் முடியைச் சிறியதாகக் கத்தரித்துக்கொள்வாராம்.

அம்மாவுக்காக எங்கள் வீட்டில் நாங்கள் யாருமே அப்படி யோசிக்கவில்லை. ஆனால், மருத்துவர் ஒருவர் தன் நோயாளிகளுக்காக மனிதநேயத்துடன் யோசித்தது ஆச்சரியப்படுத்தியது. அவருடைய கணவரும் அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர். இருவரும் ஒருவருடைய சம்பளப் பணத்தை மட்டும்தான் வீட்டுக்கு எடுத்துச் செல்வார்களாம். மற்றவருடைய சம்பளத்தை மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஏதாவது வாங்குவதற்குத் தந்துவிடுவார்களாம். அதைக் கேட்டதும் பேச்சற்று நின்றுவிட்டேன்.

வாழ்வின் நிதர்சனம்

அம்மாவுக்குக் கதிரியக்க சிகிச்சை என்பதால் அன்று நான் வெளியே காத்திருந்தேன். அப்போது அங்கே இருந்த தாத்தாவும் பாட்டியும் சண்டை போட்டபடி இருந்தனர். தாத்தா ஒன்று சொல்ல, பாட்டி இரண்டாகச் சொல்லச் சண்டை தொடர்ந்தபடி இருந்தது. பிறகு தாத்தா தந்த மஞ்சள் பையை உள்ளே வைத்துவிட்டு வருவதற்காகச் சென்றார் பாட்டி. அப்போது அங்கே அமர்ந்திருந்த பெண் ஒருவர், “ஏன் இப்படி அந்தம்மாவைத் திட்டுற. அதுவே ஆபரேசன் முடிஞ்சு கஷ்டப்பட்டுட்டு இருக்குதுதானே?” எனத் தாத்தாவிடம் கேட்டார்.

தாத்தாவோ, “அதை ஏம்மா கேக்கறே. இந்த அம்மா இல்லாம வூடு வூடாவே இல்லை. ஒரு வாய் தண்ணிகூடக் குடிக்கப் பிடிக்கல. பழம் கிழம்னு நல்லா சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்கிட்டு சீக்கிரம் வூட்டுக்கு வந்தாதானே. அதை வுட்டுட்டு காசு இல்லைன்னு எதையும் சாப்பிடாம இருக்குதும்மா” என்று சொல்லும்போதே குரல் உடைந்து அழுதுவிட்டார். அவ்வளவு நேரம் நடந்தது அன்புச் சண்டை! தாத்தாவைச் சாப்பிடச் சொல்லி பாட்டியும் பாட்டியைச் சாப்பிடச் சொல்லி தாத்தாவும் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர் போல.

இப்படி எத்தனையோ நிகழ்வுகளின் மூலம் அம்மாவும் அந்த மருத்துவமனையும் அது சார்ந்த மனிதர்களும் வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்தியிருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ எதையுமே ஓரளவுக்காவது தள்ளி நின்று அணுக முடிகிறது. வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒளிகூடித் தெரிகிறது.

கட்டுரையாளர், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

விவாதம்: இந்த மரணத்துக்கு யார் பொறுப்பு? 


 https://www.hindutamil.in/news/supplements/penn-indru/523212-debate.html




க்ருஷ்ணி

தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் இந்த ஆண்டின் தீபாவளி துயரம் நிறைந்ததாகக் கழிந்திருக்கும். ஆழ்துளைக் கிணற்றுக்குள் ஆதரவு வேண்டி மேல் நோக்கி நீண்டிருந்த கைகளும் அழுகையொலியுமாகவே பலரது நெஞ்சங்களில் நிலைகொண்டுவிட்டான் இரண்டு வயது மழலை சுஜித்.


திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப் பட்டியைச் சேர்ந்த சுஜித் வில்சன், கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றுக் குள் தவறி விழுந்ததும் அவனை மீட்பதற்காக நடந்த மீட்புப் பணிகளும் ஓர் உயிரின் மரணப் போராட்டத்தை நேரலையில் காட்சிப்படுத்திய ஊடகங்களும் அவற்றைத் தொடர்ந்த சமூக வலைத்தள பதிவுகளும் பலவற்றை உணர்த்தியிருக்கின்றன.

அன்றே சொல்ல நினைத்தோம்; ஆனால், அப்படியொரு சூழலில் அதைச் சொல்ல வேண்டுமா எனத் தவிர்த்தோம் என அந்தக் குழந்தையின் பெற்றோருடைய குழந்தை வளர்ப்பு குறித்து சிலர் மேட்டிமைத்தனத்தோடு கருத்துச் சொல்ல, இன்னும் சிலரோ அவர்களுக்குக் குழந்தை வளர்ப்பு வகுப்பெடுத்தனர். சுஜித்தின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது குறித்து சிலர் மோசமாகப் பதிவிட்டனர்.


‘புள்ளையே போச்சு. அந்தப் பணத்தை வாங்க உனக்கு எப்படி மனசு வந்தது?’ என்ற கருத்தை மையமாக வைத்து மிக நாகரிகமான வார்த்தைகளில் வசைமாரி பொழிந்தவர்களும் தமிழகத்தைச் சேர்ந்த நல்லிதயக்காரர்களே. இவை அனைத்துக்கும் மகுடம் சூட்டியதுபோல் அந்தக் குழந்தையின் மதத்தைச் சுட்டிக்காட்டி, தீபாவளிக் கொண்டாட்டங்களை மழுங்கடிக்கத் தான் இப்படியொரு நாடகம் என்ற பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய கருத்தை உதிர்த்தனர்் இந்து சொந்தங்கள் சிலர். இவ்வளவு கேவலங்களுக்கு நடுவே மகனைத் தொலைத்த அந்தத் தாயின் கதறல் யாருடைய செவியையும் எட்டவில்லை.

எது தவறு?

இதற்கிடையே சுஜித்தின் மீட்புப் பணிகளை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த தம்பதியரின் குழந்தை நீர்த்தொட்டிக்குள் விழுந்து மரணிக்க, இது போதாதா கருத்துச் சொல்பவர்களுக்குத் தூபம் போட. பிள்ளையைப் பெற்றால் மட்டும் போதுமா; அதைப் பொறுப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டாமா என மீண்டும் காவியம் பாடத் தொடங்கினர். எல்லாம் சரிதான்.

ஆனால், எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைப் புதைக்க தங்கள் தோட்டத்திலேயே கல்லறை சமைப்பதில்லை என்பதை அந்த மேட்டிமைவாதிகளுக்கு யார் சொல்வது? அனைவரும் அவரவர் சூழலுக்கும் பொருளாதார வலுவுக்கும் ஏற்ற வகையில் பிள்ளைகளை வளர்ப்பார்களே தவிர அவர்களைச் சாகக் கொடுப்பதற்கான வழிகளை உருவாக்கிவைக்க மாட்டார்கள்.


விபத்துக்கும் எதிர்பாராத விபரீதத்துக்கும் பொருள் தெரியாதவர்களே இப்படியெல்லாம் பிதற்றித் திரிவார்கள்.
சாதி, மதம், இனம், வர்க்கம், பொருளாதாரம் என அனைத்திலும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தியா போன்ற நாடுகளில் அனைத்தையும் ஒரே தராசில் வைத்துத் தீர்ப்பு வழங்குவதைவிடக் கேவலம் வேறில்லை. எதிர்பாராத விபரீதம் நிகழும்போது பெற்றோரைக் குற்றவாளியாக்குவது நியாயமா? கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறை மூடாதது அவர்களுடைய தவறுதான். அதற்காக அவர்களைக் கொலைகாரர்கள் போன்று சித்தரிப்பது அதைவிடத் தவறல்லவா?

அரசுக்குப் பொறுப்பு இல்லையா?

இந்தச் சமூகத்தில் குழந்தை என்பது ஒரு குடும்பத்தின் சொத்தல்ல. அதன் வளர்ச்சியில் சமூகத்துக்கும் அரசுக்கும் பங்கு இருக்கிறது. அந்த வகையில் சுஜித்தின் மரணத்துக்கு சமூகமும் அரசும் சேர்ந்து பொறுப்பேற்க வேண்டுமல்லவா? கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டியது தனி மனித பொறுப்பு என்றால், அவற்றைக் கணக்கெடுத்து கண்காணிப்பது அரசின் பொறுப்புக்குள் வராதா? மக்களிடம் தனி மனித பொறுப்பு இல்லை; அதனால் நாங்களும் எதுவும் செய்ய மாட்டோம் என்று சொன்னால், அது மக்கள் நல அரசாங்கமா?

சட்டப்படி பார்த்தால் அந்தப் பெற்றோரைக் கைது செய்திருக்க வேண்டும்; இதே போன்ற சம்பவம் வெளிநாட்டில் நடந்தால் முதலில் பெற்றோரைத் தண்டித்துவிட்டுத்தான் குழந்தையைக் காப்பாற்றியிருப்பார்கள் என்ற உலகத்தரம் வாய்ந்த கருத்துகளையும் சிலர் சிதறவிட்டிருந்தனர். அவர்கள் குறிப்பிடும் நாடுகளும் நடுகாட்டுப்பட்டியும் ஒன்றா? அந்த நாடுகளின் அரசு செயல்படும் விதமும் இந்திய – தமிழக அரசுகள் செயல்படும் விதமும் ஒன்றா என்பதைப் பகுத்தறிய தெரிந்தவர்கள் இப்படியான கருத்து முத்துகளை வீணடித்திருக்க மாட்டார்கள்.


உயிர்ப்பலி வேண்டுமா?

சுஜித்தின் பெற்றோரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றத் துடித்த பலருக்கும் அரசின் செயல்பாடு குறித்து எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. மிகப் பெரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை வைத்திருப்பதாக மார்தட்டிக்கொள்ளும் நம் நாட்டில், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தையை மீட்கக் கருவியொன்றை வடிவமைக்கும் அளவுக்கு யாருக்கும் திறமையில்லை என்பதை என்னவென்று சொல்வது? விழுகிற குழந்தைகள் எல்லாமே வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறவர்கள் என்பதால் அரசின் அவசரப் பட்டியலில் இப்படியான கருவிகள் எல்லாம் இடம்பெறாததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

மீட்புப் பணிகளுக்காக 11 கோடி ரூபாயைச் செலவிட்டதாகப் பட்டியல் வெளியிட்டிருக்கும் அரசு, மீட்புக் கருவியை வடிவமைப்பதற்கென அதில் சிறு தொகையையாவது ஒதுக்கியிருக் கிறதா? அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தானே குழந்தைகள் குழிக்குள் விழுகிறார்கள்; இறப்பு எண்ணிக்கை அதிகரித்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்; அதுவரை கயிற்றை வைத்தே மக்களைச் சமாளித்துவிடலாம் எனக் காத்திருக்கிறதா?

எதுவொன்றுமே இங்கே சட்டமாக்கப்படவோ, சட்டம் அமலாக்கப்படவோ, அது தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படவோ வேண்டுமென்றால் யாராவது ஒருவர் உயிரைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. சட்டங்கள் கடுமையாக்கப்பட ‘நீட்’ அனிதா, சேலம் ராஜலட்சுமி, ‘பேனர்’ சுபஸ்ரீ, ‘ஆழ்துளைக் கிணறு’ சுஜித் வரிசையில் இன்னும் எத்தனை உயிர்கள் தேவைப்படும் எனத் தெரியவில்லை.

நீங்க என்ன சொல்றீங்க?

பால் மணம் மாறாத மழலையின் மறைவுக்குப் பிறகு பேசுபவை எல்லாம் வெட்டிப் பேச்சுதான் என்று ஆகிவிடக் கூடாது என்பதுதான் இந்த விவாதத்தின் நோக்கம். குழந்தை சுஜித்தின் மரணத்துக்கு யார் பொறுப்பு? எப்படிச் செயல்பட்டிருந்தால் அந்தக் குழந்தையின் மரணத்தைத் தடுத்திருக்கலாம்? பரபரப்பு அரசியலுக்கு சுஜித்தின் மரணத்தைப் பயன்படுத்திக்கொண்டவர்களை என்ன செய்வது? இதில் உங்கள் கருத்து என்ன? எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்; விவாதிக்கலாம்.


https://www.hindutamil.in/news/supplements/penn-indru/523212-debate.html


NEWS TODAY 09.07.2026