Tuesday, February 18, 2020

தேவை திருத்தம், நிறுத்தம் அல்ல! | தொழில்நுட்பக் கல்வி எதிர்கொள்ளும் இடர்கள் குறித்த தலையங்கம்
By ஆசிரியர் | Published on : 18th February 2020 02:34 AM |

இந்தியாவில் தொழில்நுட்பக் கல்வி மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல், அகில இந்திய அளவிலும்கூட பொறியியல் தொடர்பான தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.

தேர்ச்சி பெற்று வெளிவரும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பும் அரிதாகி வருகிறது. 

புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதை 2022 வரை நிறுத்திவைப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவித்திருக்கிறது. கவுன்சில் வழங்கியிருக்கும் புள்ளிவிவரப்படி, 2015 முதல் 2019 வரையிலான இடைவெளியில் 518 பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய அளவில் மூடப்பட்டிருக்கின்றன. 2019-20 மாணவர் சேர்க்கையின்போது பாதிக்குப் பாதி பொறியியல் கல்லூரிகள் நிரம்பாமல் இருந்ததையும் அந்தப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது.

பட்டயப் படிப்பு, முதுநிலைப் படிப்பு, இளநிலைப் படிப்பு அனைத்தையும் சேர்த்தால் இந்தியாவில் 27 லட்சம் பொறியியல் படிப்புக்கான இடங்கள் உள்ளன. அவற்றில் 13 லட்சம் இடங்கள் மட்டும்தான் 2019-20-இல் நிரப்பப்பட்டிருக்கின்றன. ஆண்டுதோறும் பொறியியல் படிப்புக்கான வரவேற்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது என்றும், இதேநிலை இன்னும் சில ஆண்டுகள் தொடரும் என்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தெரிவிக்கிறது.

கடந்த கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் படித்துத் தேறிய 14 லட்சம் மாணவர்களில் 6 லட்சம் பட்டதாரிகளுக்கு மட்டும்தான் வேலை கிடைத்திருக்கிறது என்கிற தகவலை கவுன்சில் தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பொறியியல் கல்லூரி இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்குமான விகிதம் 49.8% என்று இதுகுறித்து ஆய்வு செய்த ரெட்டி அறிக்கை கூறுகிறது.

தொழில்நுட்பக் கல்வி எதிர்கொள்ளும் இடருக்குப் பல்வேறு காரணங்களைப் பட்டியலிடலாம். வரைமுறையில்லாமல் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் வழங்கிய புதிய கல்லூரிகளுக்கான அனுமதி மிக முக்கியமான காரணம். குறைவான மதிப்பெண் பெற்றவர்கள்கூட சேர்க்கப்பட்டும், பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும்நிலை காணப்பட்டது. அப்போது மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மானியமாக வழங்கி, கல்லூரி நிர்வாகத்தை இழப்பிலிருந்து காப்பாற்ற சில மாநில அரசுகள் முனைந்தன. ஆர்வக் கோளாறால் அரசியல்வாதிகள் பலர் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கி தங்களைக் கல்வியாளர்களாக அறிவித்துக்கொள்ள முன்வந்ததும், மக்கள் வரிப்பணத்தில் அவர்களுக்கு உதவ மாநில அரசுகள் முற்பட்டதும் பொறியியல் கல்லூரிகளில் ஆர்வமும் தகுதியும் இல்லாத மாணவர்கள் இடம்பெறுவதற்குக் காரணமாகின.

போதாக்குறைக்கு தரம் குறைந்த கற்பித்தலும், போதுமான அளவில் தேர்ந்த ஆசிரியர்கள் இல்லாமையும், இந்தியப் பொறியியல் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மாணவர்களின் தரம் குறைந்து காணப்படுவதற்கு இன்னொரு காரணம். இந்திய பொறியியல் கல்வி, தொழில்துறையின் தேவைக்கேற்ப அமையாததும் பெரிய பலவீனம்.

மருத்துவப் படிப்புப் படித்து வெளிவரும் மாணவர்கள் பயிற்சி மருத்துவர்களாக இருந்தால் மட்டுமே பட்டம் வழங்கப்படுகிறது. ஆனால், பொறியியல் மாணவர்களுக்கு அதுபோலக் கட்டாயப் பயிற்சி எதுவும் இல்லாத நிலையில், அவர்கள் தொழில்துறையின் தேவைகளுக்கேற்ப இல்லாத நிலை காணப்படுகிறது.
தொழில் துறையில் இப்போதும்கூட நல்ல பொறியியல் பட்டதாரிகளுக்கான தேவை குறைந்துவிடவில்லை. தரமான பொறியியல் கல்லூரிகளிலிருந்து, தரமான மாணவர்களை அவர்கள் அடையாளம் கண்டு தொடர்ந்து பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

1996 முதல் 2006 வரை பொறியியல் பட்டதாரிகளுக்கு மிகப் பெரிய தேவை உலக அளவில் காணப்பட்டது. கல்லூரிகள் குறைவாக இருந்தன. பொறியியல் கல்வியில் நாட்டமும், தகுதியும் இருந்தவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். அதனால், பட்டம் பெற்று வெளியில் வரும் பொறியியல் பட்டதாரிகளில் பலரும் அமெரிக்காவிலும், இந்தியாவிலுள்ள தலைசிறந்த மென்பொருள் நிறுவனங்களிலும் உடனடியாக வேலைவாய்ப்புப் பெற்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையின் வீழ்ச்சியும், இந்தியர்களுக்கான அமெரிக்க நுழைவு இசைவுச் சீட்டு (விசா) கெடுபிடியும், பொருளாதாரத் தேக்கமும், சராசரிக்கும் கீழேயுள்ள பொறியியல் பட்டதாரிகளை வேலையில்லாப் பட்டதாரிகளாக்கி விட்டன.

புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதிப்பது மட்டுமே பிரச்னைக்குத் தீர்வாகிவிடாது. பொறியியல் கல்லூரிகள் வங்கிகளில் இருந்து பல கோடி ரூபாய் கடன் பெற்று தொடங்கப்படுகின்றன. மிகப் பெரிய மூலதனத்தை முடக்கிக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தொடங்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவது என்பது தேசிய இழப்பு என்பதை நாம் உணர வேண்டும்.

மூடப்படும் கல்லூரிகள் நன்றாக இயங்கும் கல்லூரிகளுடன் இணைக்கப்படுவது; பொறியியல் அல்லாத ஏனைய படிப்புகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்படுவது; தொழில் துறையினரின் தேவைக்கேற்ப படிப்புகளை நடத்தி, மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுதல் உள்ளிட்ட முயற்சிகளின் மூலம் கல்லூரிகள் தொடர்ந்து செயல்படுவதை உறுதிப்படுத்துவதுதான் புத்திசாலித்தனம். தொடங்கியது நின்றுவிடக் கூடாது, நடப்பது தரம் உயர்த்தப்பட வேண்டும், தேவைக்கேற்ற திறமைகளை உருவாக்குவதில்தான் பொறியியல் கல்லூரிகளின் வருங்காலம் அடங்கியிருக்கிறது.

மதுரை மாவட்ட பிளஸ் 2 தேர்வில் குளறுபடி கேள்வி: மாணவர்கள் தவிப்பு

Added : பிப் 17, 2020 23:31

திருநெல்வேலி : மதுரை மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 வரலாற்று தேர்வில், இந்திய தேர்தல் ஆணையர் யார் என்ற கேள்விக்கு தேர்வு செய்யப்பட வேண்டிய விடைகள் தவறாக தரப்பட்டன.

மதுரை மாவட்ட அளவில் பிளஸ் 2 மாணவர்களுக்கான வரலாறு பாட இரண்டாம் திருப்புதல் தேர்வு நேற்று நடந்தது.இதில் 20வது கேள்வியாக ‛இந்தியாவின் தற்போதைய தேர்தல் ஆணையர் யார்' என கேட்கப்பட்டிருந்தது. அதில் 4 விடைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். விடைகளாக 1.அமித்ஷா, 2.எடப்பாடி பழனிச்சாமி, 3.ராம்நாத்கோவிந்த், 4.சத்யா ராக சாகு என தரப்பட்டிருந்தன. அதில் ஒன்றை மாணவன் தேர்வு செய்யவேண்டும். ஆனால் நான்கு பதில்களும் தவறானவை. தற்போதைய இந்திய தேர்தல் ஆணையராக சுனில் அரோரா உள்ளார்.தவறான விடைகளால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு : தானாக அழியும் மை, பேனா தயாரித்தவர் கைது

Updated : பிப் 17, 2020 23:42 | Added : பிப் 17, 2020 23:02

சென்னை : அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய தேர்வுகளில் முறைகேடு செய்த, இடைத்தரகர் ஜெயகுமாருக்கு, தானாக அழியும் மையுடன் கூடிய, பேனா தயாரித்து கொடுத்தவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4; குரூப் - 2 ஏ' தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த முறைகேடுகளுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்த, சென்னை, முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த ஜெயகுமார், 38, என்பவர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.பின், அவர் உட்பட, 40 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே, குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் தேடப்பட்டு வந்த, திருச்சியை சேர்ந்த பிரபாகரன் மற்றும் ஆசிரியர் செல்வேந்திரன் ஆகியோர், எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்நிலையில், இந்த முறைகேடுகளை தலைமை ஏற்று நடத்திய ஜெயகுமாருக்கு, சில மணி நேரத்தில், தானாக அழியும் மையுடன் கூடிய, பேனாக்களை தயாரித்து கொடுத்த, சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்த, அசோக் என்பவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார், நேற்று கைது செய்தனர்.

அவர் அளித்த பேனா வாயிலாக தான், விடைத்தாள்களில் திருத்தம் செய்யப்பட்டு, முறைகேடுகள் நடந்துள்ளன.தானாக அழியும் மை தயாரிக்கும் தொழில்நுட்பம்; அதற்கான மூலப்பொருட்கள்; எவ்வளவு தொகை தரப்பட்டது என்பது குறித்து, அவரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், பிரபாகரன், செல்வேந்திரன் ஆகியோரை, காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.இந்த முறைகேடுகள் தொடர்பாக, மேலும் பலரை தேடி வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருப்போரை, விசாரணைக்கு நீதிமன்றம் அழைத்துச் செல்லும் பணிகளுக்காக, சிறப்பு காவல் படையில் இருந்து, 50 போலீசார் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

கடலுாரில்12 பேருக்கு 'சம்மன்'

'குரூப் - 2' தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு, கடலுார் மாவட்டத்தில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த, 12 பேருக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர். இந்த, 12 பேரும், வணிக வரித்துறை உள்ளிட்ட, அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.இவர்களில், மூன்று குடும்பங்களைச் சேர்ந்த, ஆறு சகோதரர்களும் உள்ளனர். இவர்கள், நாளை, கடலுார் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என, சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியருக்கு முன்ஜாமின் மறுப்பு

சென்னை தலைமை செயலகத்தில், நிதித்துறையில் உதவியாளராக பணிபுரியும் கவிதா என்பவர், முன்ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், 'ராமேஸ்வரத்தில், 'குரூப் - ௨ ஏ' தேர்வு எழுதினேன். என்னுடன் தேர்வு எழுதிய மூவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர். 'என்னையும் கைது செய்யக்கூடும். மகப்பேறு விடுப்பில் உள்ளேன். ௨௦௨௦ ஜனவரி, ௨௩ல், குழந்தை பெற்றேன். எனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அய்யப்பராஜ், '' மனுதாரர் உள்ளிட்ட, ௪௨ பேர், முறைகேடாக தேர்ச்சி பெற்று, அரசு பணி பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. ௨௨ பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; முன்ஜாமின் கூடாது,'' என்றார்.இதையடுத்து, முன்ஜாமின் மனுவை, நீதிபதி தண்டபாணி தள்ளுபடி செய்தார்.

சி.பி.ஐ., விசாரணைக்கு நீதிமன்றத்தில் முறையீடு

'குரூப் - 1' பணியிடங்களுக்கான தேர்வு, 2015ல் நடந்தது. அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய, இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகவும், தேர்வை ரத்து செய்யவும் கோரி, திருநங்கையான சுவப்ணா என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, பொங்கியப்பன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ''குரூப் - 1 தேர்வு முறைகேடு குறித்து, சி.பி.ஐ., விசாரணை கோரி, மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

''தேர்வாணையத்தில், உயர் பொறுப்பில் இருப்பவர்களின் தொடர்பு இல்லாமல், இந்த முறைகேடு நடந்திருக்காது. கடைநிலை அதிகாரிகளை தான் கைது செய்கின்றனர். அதனால், வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்,'' என்றார்.

குரூப் - ௧ தேர்வு முறைகேடு தொடர்பாக, செய்தி ஒளிபரப்பிய தனியார், 'டிவி' சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.பெருமாள், ''மூன்று விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்; முறைகேட்டில் தொடர்புடையவர்களை பாதுகாக்கும் வகையில், அரசு செயல்படுகிறது,'' என்றார்.இதையடுத்து, இவ்வழக்கில் தங்களை இணைத்து கொள்ள, மூத்த வழக்கறிஞர் வில்சன் கோரியதை, நீதிபதிகள் ஏற்றனர். விசாரணையை, வரும், ௨௮ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
மஹா சிவராத்திரி லட்சார்ச்சனை கட்டணம்

Added : பிப் 18, 2020 01:52

திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 21ம் தேதி, மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரியான, 21ம் தேதி காலை, 5:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, லட்சார்ச்சனை நடைபெறும்.இதில், பங்கு பெற விரும்பும் பக்தர்கள், ஒரு நபருக்கு, 200 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.அன்றிரவு, 7:30 மணிக்கு, முதல் கால பூஜை; இரவு, 11:30 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு, சுவாமி மூல கருவறையின் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும்.
India’s first Covid death suspected

DECCAN CHRONICLE. | R. VALAYAPATHY

PublishedFeb 18, 2020, 12:48 am IST

Sakthikumar again returned home on February 4 as his health deteriorated and was admitted to a private hospital at Madurai on Friday.

Public health department officials suspect that Sakthikumar’s ill health could have been aggravated possibly by the coronavirus attack and are investigating.

PUDUKKOTTAI: A 42-year-old man from Tamil Nadu who returned from China died of suspected coronavirus infection, at a private hospital at Madurai on Saturday. If confirmed, his could be the first death due to the novel coronavirus-2019 (Covid-19) infection in the country.

Official sources said on Monday that the victim Sakthikumar, who runs a small restaurant in China, recently returned home due to jaundice and underwent treatment in his village. However, due to manpower shortage to run his eatery there, he returned to China recently despite his illness.

Sakthikumar again retu-rned home on February 4 as his health deteriorated and was admitted to a private hospital at Madurai on Friday. He died on Saturday.

Public health department officials suspect that Sakthikumar’s ill health could have been aggravated possibly by the coronavirus attack and are investigating.

Sakthikumar had been missed by the elaborately set-up surveillance system at the airports. Unlike in the case of other China returnees, Sakthikumar had possibly eluded the airport scans, possibly because he said he was suffering from ‘jaundice’.

After his sudden death, public health department officials camped at his village, Kothaimangalam in Pudukkottai district to thoroughly investigate whether Shakthikumar’s death was caused by Covid-19 or was due to other medical factors, sources added.
Med admission scam: Pondy govt officials’ names cleared

The case was registered in September 2017 at the insistence of Lt Governor Kiran Bedi.

Published: 18th February 2020 05:38 AM 

By Express News Service

PUDUCHERRY: The Central Bureau of Investigation (CBI) has dropped charges against two IAS officers and four other senior officials of Puducherry government against whom cases had been registered in connection with Post Graduate medical admission scam in seven private medical colleges in the Union Territory. The case was registered in September 2017 at the insistence of Lt Governor Kiran Bedi.

In a communication on February 14, the CBI intimated that ‘no action is contemplated against the officials as there is no prima facie evidence against them’, Chief Minister V Narayanasamy told a press conference on Monday.
Cannot care for your mom? Return her property

The inquiry found that Thiyagarajan had transferred the property to his brother-in-law, and that Kaliammal was suffering without care.

Published: 18th February 2020 05:50 AM 



Pudukkottai Collector P Uma Maheshwari handing over documents to Kaliammal on Monday | Express

Express News Service

PUDUKKOTTAI: If you cannot care for your elderly parents, you have no right to their property. That was the decision of the district administration, which helped an octogenarian woman recover her property worth Rs 1.5 crore, from her son to whom she had transferred it.

Kaliammal (80) approached Collector P Uma Maheshwari on January 6, requesting help to recover her ancestral property. About three years ago, her son Thiyagarajan transferred the property to his name, allegedly by committing fraud. The issue now was that, he was not taking care of his mother anymore. The Collector ordered revenue department officials to inquire into the complaint.

The inquiry found that Thiyagarajan had transferred the property to his brother-in-law, and that Kaliammal was suffering without care.

The inquiry was completed in 42 days, and the report was handed over to the Collector. Subsequently, Uma Maheshwari directed officials to retrieve the property and hand it over to the woman. Action in the case was taken under the Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007.

‘Transfer had been done fraudulently’

Pudukkottai administration retrieved ancestral property worth Rs 1.5 crore from a man who did not take care of his aged mother and gave it back to her. Three years ago, the man had tansferred the property to his name, allegedly by committing fraud.

NEWS TODAY 25.05.2026