Thursday, April 2, 2020

ஏப். 15-க்குப் பிறகு ரயில் பயணம்: இணைய வழியில் முன்பதிவு தொடக்கம்

By DIN | Published on : 02nd April 2020 05:13 AM | 

ஊரடங்கு உத்தரவு முடிவடைந்த பிறகு ரயில் பயணம் மேற்கொள்ள இணையவழியில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரதமா் மோடி, 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். இதனையடுத்து அத்தியாவசியப் பணி வாகனங்களைத் தவிா்த்து மற்ற போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஏப்.14-ஆம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. இதையடுத்து இந்திய ரயில்வே, வரும் 15-ஆம் தேதி முதல் ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைத்துப் பயணிகள் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டன. சரக்கு ரயில்கள் மட்டும் தற்போது இயங்கி வருகின்றன. ரத்து செய்யப்பட்ட ரயில்களில் ஏற்கெனவே முன்பதிவு செய்தோருக்கு கட்டணம் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வரும் 15-ஆம் தேதிக்குப் பிறகு ரயில் பயணத்துக்கு ஐஆா்சிடிசி செயலி மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் கவுன்ட்டா்களில் ஏப்.15-ஆம் தேதி காலை முதல் முன்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அதற்கேற்ப திட்டம் மாற்றியமைக்கப்படும் என்றாா் அவா்.

மூன்றாம் நிலைக்கு மாறுமோ..? அபாய கட்டத்தை நோக்கி தமிழகம்

Updated : ஏப் 02, 2020 01:50 | Added : ஏப் 02, 2020 01:26 |

சென்னை: நேற்று ஒரே நாளில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு, 110 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பின் மூன்றாம் கட்டத்திற்கு தமிழகம் மாறுமோ என்ற, அச்சம் எழுந்துள்ளது. அபாய கட்டத்தை நோக்கி, தமிழகம் நகரும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டது முதல், தமிழக விமான நிலையங்களில், வெளிநாட்டினர் கண்காணிக்கும் பணி துவங்கியது. அதன்படி, ஜன., முதல் மார்ச், 22ம் தேதி வரை, 2.9 லட்சம் பேர், வெளிநாடுகளில் இருந்து, தமிழகத்திற்கு வந்துள்ளனர். வெளிநாட்டு பயணியர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சி:


இந்நிலையில், தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா நாட்டில் இருந்து வந்த சிலர், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். ஈரோடு பகுதி சுற்றுப் பயணத்தின் போது, தாய்லாந்து நாட்டினருக்கு, கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல், இந்தோனேஷியா நாட்டினர், சேலத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது, அவர்களுக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த குழுவினர், டில்லியில் நடந்த, மத ரீதியான மாநாட்டில் பங்கேற்றது தெரிய வந்தது. அந்த மாநாட்டில், தமிழகத்தில் இருந்து, 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற, அதிர்ச்சி தகவல் வெளியானது. மேலும், அவர்கள், ரயிலில் பயணம் மேற்கொண்டதும் தெரிய வந்தது.

அந்த மாநாட்டில் பங்கேற்றவர்களை, போலீசார் உதவியுடன், சுகாதாரத் துறையினர் தேடி கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி, சிகிச்சை அளித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் வரை, மாநாட்டில் பங்கேற்ற, 80 பேர் உட்பட, 124 பேர், இந்நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதற்கிடையே, இந்த மாநாட்டில் பங்கேற்ற அனைவரும், தாமாகவே முன்வந்து, தகவல் அளிக்க வேண்டும் என, சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்திருந்தது. அந்த வேண்டுகோளை ஏற்று, 500க்கும் மேற்பட்டோர், தாமாக சிகிச்சைக்கு முன்வந்துள்ளனர்.

இதுகுறித்து, சுகாதாரத் துறை செயலர், பீலா ராஜேஷ் கூறியதாவது: அரசின் கோரிக்கையை ஏற்று, தாமாக சிகிச்சைக்கு முன்வந்தவர்களுக்கு நன்றி. இந்த மாநாட்டில் பங்கேற்ற, 1,103 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர். அவர்களில், 658 பேரிடம், பரிசோதனை செய்யப்பட்டுள்ளது; மற்றவர்களிடம், பரிசோதனை செய்யப்பட உள்ளது.

பாதிப்பு:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 74 ஆயிரத்து, 330 பேர், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 81 பேர், அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 4,070 பேர், தொடர் கண்காணிப்பு முடிந்து, இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். அரசு மருத்துவமனைகளில், 995 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை, 2,726 பேருக்கு, நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், டில்லி மாநாட்டில் பங்கேற்ற, 110 பேருக்கு, நேற்று கொரோனா வைரஸ் இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 234 ஆக உயர்ந்துள்ளது.

மாநாட்டில் பங்கேற்றவர்களில், இதுவரை, 190 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்ற, மற்றவர்களும் தாமாக முன்வந்தால், அவர்களுக்கும், அவரது வீட்டில் உள்ளவர்களுக்கும், சமூகத்திற்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிலையில், டில்லி மாநாட்டில் பங்கேற்ற, 500க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் வரை, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், பொது மக்களுடன் சமுதாய தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள், தற்போது தான் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில், இரண்டாம் கட்டத்தில் உள்ள, தொற்று பரவல், மூன்றாம் கட்டமான, சமுதாய தொற்றாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, வட மாநிலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் நடு ரோட்டில் நின்றபடி மூச்சு விட முடியாமல் தவிப்பதைக் கண்டு, டாக்டர்கள், நர்சுகள், ஸ்ட்ரெச்சர் எடுத்து வர மருத்துவமனைக்கு ஓடும்படியான, வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மருத்துவமனை ஒன்றில், நோயாளி இருக்கையில் கூட அமர முடியாமல், தரையில் விழுந்து, சுவாசிக்க முடியாமல் திணறும் காட்சி; மூச்சுத்திணறல் ஏற்பட்டு நடக்க முடியாமல், சாலையோரம் முடங்கிக் கிடந்தவரை, '108' ஆம்புலன்சில் ஊழியர்கள் ஏற்றிச் செல்லும் காட்சி; கடும் இருமல் மற்றும் மூச்சுத் திணறலால் தவித்தவரை, பொதுமக்கள் ஆட்டோவில் ஏற்றி, சிகிச்சைக்கு அனுப்பி வைக்கும் காட்சிகள் என, பதைபதைக்கும் வகையில், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற காட்சிகளால், இந்நிலை, தமிழகத்திற்கு வந்து விடுமோ என்ற அச்சம், பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மாவட்டங்கள் / பாதிப்பு எண்ணிக்கை


சென்னை - 29
திருநெல்வேலி - 29
ஈரோடு - 21
நாமக்கல் - 18
சேலம் - 6
மதுரை - 15
கன்னியாகுமரி - 5
கோவை - 33
விழுப்புரம் - 3
வேலுார் - 1
ராணிப்பேட்டை - 1
விருதுநகர் - 1
திருவண்ணாமலை - 2
திருப்பூர் - 1
திருச்சி -1
துாத்துக்குடி - 3
தஞ்சாவூர் - 1
கரூர் - 2
காஞ்சிபுரம் - 3
செங்கல்பட்டு - 8
தேனி - 20
திண்டுக்கல் - 17
திருப்பத்துார் - 7
சிவகங்கை - 5
திருவாரூர் - 2

மொத்தம் - 234
இன்று முதல், 'கொரோனா' நிவாரணம் ரேஷனில் 15ம் தேதி வரை கிடைக்கும்

Added : ஏப் 02, 2020 00:38

சென்னை : ரேஷன் கடைகளில், 'கொரோனா' நிவாரண தொகை, இன்று முதல் வழங்கப்பட உள்ளதால், எந்த புகாரும் ஏற்படாதபடி, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட கலெக்டர்களுக்கு, கூட்டுறவு மற்றும் உணவு துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மார்ச், 25 முதல், இம்மாதம், 14ம் தேதி வரை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்களும், வேலைக்கு செல்லாமல், வீடுகளில் முடங்கியுள்ளனர்.அவர்களுக்கு உதவும் வகையில், கொரோனா வைரஸ் தடுப்பு கால நிவாரணமாக, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் ரொக்கத்துடன், ஏப்., மாதத்திற்கு உரிய அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை, இலவசமாக வழங்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்தது.

அவை, ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், இன்று முதல், ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட உள்ளன. ஒரு கடையில், 1,300 -- 1,500 கார்டுதாரர்கள் உள்ளன. நிவாரணம் வழங்கும்போது, கடைகளில், கூட்டம் சேரக் கூடாது என்பதற்காக, எந்த தேதி, நேரம் வர வேண்டும் என்ற, 'டோக்கன்'களை, கார்டுதாரர்களின் வீடுகளுக்கு, ரேஷன் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் வழங்கியுள்ளனர்.ஒவ்வொரு கடையிலும், தினமும், தலா, 100 கார்டுதாரர்கள் என, வரும், 15ம் தேதி வரை, 35 ஆயிரத்து, 244 கடைகள் வாயிலாக, 2.01 கோடி கார்டுதாரர்களுக்கு, கொரோனா நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

கொரோனா தொற்றை தடுக்க, ரேஷன் கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், குறிப்பிட்ட துாரத்திற்குள், கார்டுதாரர்களை நிற்க வைப்பதற்காக, அடையாள குறியீடுகளும் வரையப்பட்டுள்ளன.கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், கோவிந்தராஜ், மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ரேஷன் கடைகளில், பெரும் அளவில், ரொக்கம் பட்டுவாடா மேற்கொள்ளப்பட உள்ளதால், புகார் ஏதும் ஏற்படாமல், கண்காணிப்பது அவசியம். எனவே, நகரங்களில், 20 கடைகளுக்கும்; கிராமங்களில், 10 கடைகளுக்கும், ஒரு அலுவலரை நியமித்து, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
ரூ.1,000 நிவாரணம் வேண்டாமா?

Added : ஏப் 01, 2020 23:39

ரூ.1,000 நிவாரணம் வேண்டாமா? தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுகளை வைத்திருக்கும் பலர், ரேஷன் பொருட்களை வாங்குவதில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரணமாக, தமிழக அரசு, அரிசி கார்டுகளுக்கு, ரேஷனில், இன்று முதல், 1,000 ரூபாய் மற்றும் பொருட்களை இலவசமாக வழங்க உள்ளது. இவற்றை வாங்க விரும்பாதவர்கள், அரசுக்கு விட்டுக் கொடுக்கும் வசதி துவக்கப்பட்டுள்ளது.

அதன்படி, www.tnpds.gov.in என்ற, இணையதளத்திற்கு சென்று, '1,000 ரூபாய் விட்டுக் கொடுக்க' என்று, ஒளிரும் பகுதியை, 'கிளிக்' செய்ய வேண்டும். அதில், மொபைல் போன் எண்ணை பதிவிட்டதும், எஸ்.எம்.எஸ்., தகவ-லில் வரும், ஒரு முறை ரகசிய எண்ணை குறிப்பிட வேண்டும். பின், கார்டுதாரரின் விபரங்கள் அடங்கிய பகுதி திறக்கும்.அதில், 'உரிமம் விட்டுக் கொடுத்தல்' தலைப்பை கிளிக் செய்து, 'புதிய கோரிக்கை' என்ற தலைப்பை கிளிக் செய்ய வேண்டும்.

பின், உணவு தானியங்கள், 1,000 ரூபாய் அருகில் உள்ள கட்டங்களில் கிளிக் செய்து, இறுதியாக, 'சமர்ப்பிக்க' என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.இதேபோல், ‛tnepds' என்ற, மொபைல் போன் செயலி வாயிலாகவும், அவற்றில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி, கொரோனா நிவாரணத்தை வாங்க விரும்பாதவர்கள், அரசுக்கு விட்டுக் கொடுக்கலாம்.
அனைவரும் வீட்டிலேயே இருங்கள்: முதல்வர் வேண்டுகோள்!

Updated : ஏப் 02, 2020 00:26 | Added : ஏப் 01, 2020 23:28




'கொரோனா நோயை கட்டுப்படுத்த, அனைவரும் வீட்டிலேயே இருங்கள்' என, முதல்வர், இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள, 'ஆடியோ'வில், அவர் கூறியிருப்பதாவது: உங்கள் முதல்வர் பழனிசாமி பேசுகிறேன்... உலகெங்கும் தீவிரமாக பரவி வரும், கொரோனா வைரசை கட்டுப்படுத்த, ஜெ., அரசு, அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.

உங்கள் ஒவ்வொருவரின் நலனும், எங்களுக்கு முக்கியம். உங்கள் நலன் கருதி, அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், முழு ஒத்துழைப்பு நல்க, அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்நோயை கட்டுப்படுத்த, விழித்திருங்கள்; விலகி இருங்கள்; வீட்டிலேயே இருங்கள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

ஊரடங்கு பிசுபிசுப்பால் சுகாதார துறை கலக்கம்

Updated : ஏப் 02, 2020 00:34 | Added : ஏப் 01, 2020 22:54




சென்னை : ஊரடங்கு அமலாகி, ஒரு வாரம் மட்டுமே கடந்த நிலையில், பிசுபிசுக்கும் நிலைக்கு வந்துள்ளது. சாலைகளில் மக்கள் நடமாட்டம், வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சுகாதார துறையினர் கவலை அடைந்து உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும், 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அறிவித்த, மார்ச், 24 முதல், அனைத்து மாநிலங்களிலும், அத்தியாவசிய பணிகள் தவிர, மற்ற பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வெளியே வராமல், வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

முதல் நாளில், பெரும்பாலானவர்கள் வீட்டில் இருக்காமல், வெளியே சுற்றினர். போலீசாரின் கெடுபிடி அதிகரித்ததும், வீட்டில் முடங்கினர். இந்நிலையில், அவசர தேவைகளுக்கு வெளியூர் செல்வோர், அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் மட்டும், அனுமதி சீட்டு பெறலாம் என, அரசு அறிவித்தது.

இதை தொடர்ந்து, சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. கடை வீதிகளில், மக்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தவிர, அரசின் நிவாரண உதவி பெறுவதற்கு, 'டோக்கன்' வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. இந்த டோக்கனை பெறவும், கூட்டம் கூடத் துவங்கியது.

சமூக இடைவெளி இல்லாமல், பொது மக்கள் நெரிசலில் நிற்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக, ஊரடங்கு பிசுபிசுத்து விடும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், மக்கள் நடமாட்டம் அதிகரித்தால், கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக, சுகாதாரத் துறையினர் அச்சம் அடைந்துஉள்ளனர்.

இதே நிலை நீடித்தால், உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர, மற்ற அனைத்து கடைகளையும் அடைத்து, ஊரடங்கை முழுமையாக அமல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள, பேரிடர் மேலாண்மைத் துறை ஆலோசித்து வருவதாக தெரிகிறது.










Wednesday, April 1, 2020

Will pay some employees in two parts: SpiceJet after announcing salary cuts

According to a senior official in SpiceJet, there were some employees who had got just a few thousand rupees in their bank accounts from the company as salary till now.

Published: 01st April 2020 12:26 AM 


For representational purposes. (File Photo | PTI)

By PTI

NEW DELHI: SpiceJet said on Tuesday some staff, who are entitled to a flying or performance allowance, would be getting their salaries in two parts, hours after announcing a pay cut in March due to drastic fall in revenues amid the coronavirus pandemic.

According to a senior official in SpiceJet, there were some employees who had got just a few thousand rupees in their bank accounts from the company as salary till now.

"A decision had been taken to credit the salaries of some employees, those who are entitled to a flying or performance allowance, in two parts," a SpiceJet spokesperson stated.

"The first part of the salaries was credited today and the second part will be credited on April 2, 2020."

Earlier in the day, SpiceJet said it had implemented a pay cut of up to 30 per cent for employees for March.

The airline's chairman and managing director, Ajay Singh, is taking the highest pay cut of 30 per cent.

The low-cost carrier said it was going to treat its employees as on "leave without pay" from March 25 to March 31 as the country is under a lockdown to combat the deadly COVID-19 (coronavirus disease).

"We have also ensured that our colleagues in the lowest pay grades remain unaffected by this decision. So, they won't be facing any pay cuts at all," the SpiceJet spokesperson said.

India has imposed a 21-day lockdown to contain the spread of the COVID-19.

Domestic and international commercial passenger flights have been suspended for this period.

Many other countries have taken similar measures.

In India, cargo flights, offshore helicopter operations, medical evacuation flights and flights that have gotten special approval from aviation regulator DGCA are permitted to operate during the flight ban.

In India, cargo flights, offshore helicopter operations, medical evacuation flights and flights, which have got special approval from aviation regulator Director General of Civil Aviation, are permitted to operate during the flight ban.

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...