Tuesday, June 9, 2020

தலைமைச் செயலகத்தில் 70 பேருக்கு கொரோனா?


தலைமைச் செயலகத்தில் 70 பேருக்கு கொரோனா?

Updated : ஜூன் 09, 2020 00:19 | Added : ஜூன் 09, 2020 00:16 |

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில், அனைத்து துறை அரசு செயலர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணிபுரிவோரில், கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, அதிகரித்தபடி உள்ளது.

முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்த, செய்தித்துறை இணை இயக்குனர் உட்பட, 70க்கும் மேற்பட்டோருக்கு, நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலருக்கும், நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஊழியர்கள் அச்சத்துடனே, அலுவலகம் வந்து செல்கின்றனர்.

இதற்கிடையில், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் அனுப்பியுள்ள மனு: தலைமை செயலக பணியாளர்கள், 50 சதவீதம் பேர், தினமும் பணிக்கு வருகின்றனர். கடந்த வாரங்களில், தலைமை செயலகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றும், 40க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது.அவர்களுடன் பழகிய மற்ற பணியாளர்கள், நோய் தொற்றை, தங்கள் குடும்பத்தினருக்கும், உடன் பணி செய்வோர் மற்றும் பயணம் செய்யும் பிறருக்கும், பரப்பும் அபாயம் உள்ளது.

நோய் தொற்று சமூக பரவலாக பரவாமலிருக்க, ஊரடங்கு முடியும் வரை, 50 சதவீத பணியாளர்களுக்கு பதிலாக, 33 சதவீத பணியாளர்களை மட்டும், பணிக்கு வர அனுமதிக்க வேண்டும்.மேலும், அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, கொரோனா நோய் தொற்றுள்ள பணியாளர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு


மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

Updated : ஜூன் 09, 2020 12:11 | Added : ஜூன் 09, 2020 12:05

புதுடில்லி: கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மத்திய அரசு ஊழியர்கள், அலுவலகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சிலர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். எனவே பணியில் உள்ள ஒவ்வொரு ஊழியரும் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்வதுடன், மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவும், மத்திய அரசு அலுவலகங்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய பணியாளர் நலன் துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்:

1. கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும். லேசான அறிகுறி அல்லது இருமல் அல்லது காய்ச்சல் உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

2. கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் வசிக்கும் அதிகாரிகள்/ ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர கூடாது. கட்டுப்படுத்தப்பட்ட மண்டலம் மாறும் வரை வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்.

3. ஒரு நாளில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர கூடாது. பட்டியல் அதற்கேற்ப மாற்றியமைக்கப்படும். மற்ற ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும்.

4. ஒரே அறையில் பகிர்ந்து கொள்ளும் செயலர் மற்றும் துணை செயலர்கள், மாற்று நாட்களில் வருவதுடன், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

5. ஒரு பிரிவில் ஒரே நேரத்தில் 2 ஊழியருக்கு மேல் இருக்க கூடாது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகத்தில் 20 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மேல் இருக்க கூடாது. காற்றோட்டம் இருக்கும் வகையில் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும்.

6. அலுவலகத்தில் உள்ளேயும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அலுவலக வளாகத்திற்குள் முகக்கவசம் அணியாமல் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

7. பயன்படுத்தபட்ட முகக்கவசம் மற்றும் கையுறைகளை கவனமாக மஞ்சள் நிற பயோ கழிவுகள் தொட்டியில் மட்டுமே போட வேண்டும். பயன்படுத்தப்பட்ட முகக்கவசத்தை திறந்தவெளியிலோ, மற்ற குப்பைகளோடு வீசியெறிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மை பணியாளர்களிடம் மருத்துவ கழிவுகளை கையாள்வது குறித்து பொது பிரிவு அறிவுறுத்த வேண்டும்.

8. நேரடி சந்திப்பு, கூட்டம் மற்றும் ஆலோசனைகளை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். அதிகாரிகள், ஊழியர்கள், ஆலோசனைகள் நடத்த போன், இண்டர்காம், வீடியோகால் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

9. அதிகாரிகள் தங்கள் அறைகளில் இருந்து வீடியோ கால் செய்யலாம். வழக்கமாக கூடும் இடத்தில் இருந்து வீடியோ கால் செய்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தேவையான சாதனங்களை பொது பிரிவில் இருந்து பெற்று கொள்ளலாம். தங்களது கணினி மூலம் வீடியோ கான்பரன்சில் இணைந்து கொள்ளலாம்.

10. அரை மணி நேரத்திற்கு ஒருமுறை கைகளை கழுவுவது நோய் தொற்று பரவுவதை தடுக்க உதவும். எனவே அலுவலகத்தின் முக்கியமான இடங்களில் கைகளை கழுவ சானிடைசர்களை வைத்திருக்க வேண்டும்.

11. அடிக்கடி தொடக்கூடிய எலெக்ட்ரிக் சுவிட்சு, கதவு கைப்பிடி, லிப்ட் பட்டன்கள், கழிப்பறை சாதனங்கள் உள்ளிட்டவற்றை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை 1% சோடியம் ஹைபோகுளோரைடு பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். ஊழியர்கள் கீபோர்டு, மவுஸ், போன்கள், ஏசி ரிமோட் உள்ளிட்டவற்றையும் எத்தனால் சார்ந்த கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

12. நடக்கும் போதும், அமரும் போதும் 1 மீட்டர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். பார்வையாளர்களுக்கு போடப்பட்டுள்ள நாற்காலிகள் உரிய சமூக இடைவெளி நடைமுறைகளுடன் போடப்பட்டிருக்க வேண்டும்.

13. அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் இந்த வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து கண்டறியும் வரை பள்ளி திறப்பு இல்லை: பிலிப்பைன்ஸ் அதிரடி


தடுப்பு மருந்து கண்டறியும் வரை பள்ளி திறப்பு இல்லை: பிலிப்பைன்ஸ் அதிரடி

Updated : ஜூன் 09, 2020 14:19 | Added : ஜூன் 09, 2020 14:18 

மணிலா: கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறப்பு இல்லை என்று பிலிப்பைன்ஸ் நாடு அறிவித்துள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. ஊரடங்கு பிறப்பித்து பல நாடுகள், பல நாட்களாக நீட்டித்து வருகின்றன. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக உலகம் முழுவதும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. இதற்கிடையே கொரோனா வைரசிற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க கடந்த 6 மாதத்திற்கும் மேலாக பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வந்தாலும், இதுவரையில் அதிகாரப்பூர்வமாக எந்த நாடும் தடுப்பூசியை கண்டுபிடிக்கவில்லை.

இந்நிலையில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அமலுக்கு வரும் வரையில் பள்ளிகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் கல்வித்துறை செயலர் லியோனர் பிரியோனஸ் கூறுகையில், ‛கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறப்பு இருக்காது. தனிமனித இடைவெளியுடன் குழந்தைகளைப் பள்ளியில் உட்கார வைக்க உடன்பாடு இல்லை. குழந்தைகள் தங்கள் நண்பர்களை நெருங்கும் போது நிச்சயமாக தொற்று பரவும்.

ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வழிக்கற்பித்தல் வகுப்புகள் தொடங்கும். ஆனாலும், வறுமையான மற்றும் இணைய இணைப்பு இல்லாத தொலைதூர சமூகத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்வி குறித்துக் கவலை எழுகிறது. இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து யோசித்து வருகிறோம்,' என்றார்.

Tamil Nadu follows Telangana to cancel Class 10 board exams; students promoted


Tamil Nadu follows Telangana to cancel Class 10 board exams; students promoted

PTI

PublishedJun 9, 2020, 2:44 pm IST

The exams for certain class 11 subjects, which could not be held earlier were also cancelled.

Chennai: The class 10 board examination in Tamil Nadu are cancelled and students are promoted, Chief Minister K Palaniswami announced here on Tuesday in view of the COVID-19 pandemic.

The exams for certain class 11 subjects, which could not be held earlier were also cancelled. Coronavirus cases were on the rise continuously in Chennai and some districts, Palaniswami said adding epidemiologists have opined that there was no scope for reduction in the spread of the pathogen in a short period of time.

Hence, considering the representation of parents and the present trend of virus spread, the board examinations scheduled to be held from June 15 for class 10 and for subjects that could not be conducted for class 11 are fully cancelled and students are declared promoted, he said

Tirumala temple reopens, darshan for 6,000 staff, kin


Tirumala temple reopens, darshan for 6,000 staff, kin

Trial Run Will Continue For Two More Days

Sandeep.Raghavan@timesgroup.com

Tirupati:09.06.2020

It was a ‘darshan’ with a difference for the 6,000-odd devotees when the doors of the Lord Venkateswara temple in Tirumala reopened on Monday, after staying closed for 80 days due to the Covid-19 pandemic.

Elaborate preventive measures were put in place by the authorities of Tirumala Tirupati Devasthanams (TTD) to ensure all Covid-19 norms are in place. There was no pushing or shoving, social distancing and hygiene were paramount.

The trial run will continue for two more days. On the first two days, entry would be allowed only to TTD staff and their family members, while Tirumala locals can have darshan on June 10. The temple opens for devotees from across the state and outside from June 11.

“Perhaps for the first time in many years I had such a smooth experience. There was no pushing or shoving inside the sanctum sanctorum, everyone was wearing masks. It felt a bit surreal. There is no differentiation between common devotees and VIPs at Tirumala temple now. The quality of darshan is the same for all,” said a TTD staff.

While nearly 4,500 to 6,000 devotees used to have darshan per hour in the pre-Covid days, now only 500 devotees would be allowed entry per hour. TTD chairman Y V Subba Reddy, who is personally monitoring the resumption of pilgrim services at the temple, said their main focus would be on ensuring that devotees are not inconvenienced despite the strict norms in place.

“For the first three days we decided to allow only our own employees, their families and Tirumala locals for darshan so that any shortcomings in the arrangements can be spotted and improved upon to ensure that the best of amenities and safety measures are in place when pilgrim services resume from June 11,” he told TOI.

He said not more than 6,000 devotees will be allowed in a day for darshan till the end of June. “TTD will actively monitor the situation and if time and other constraints permit, we will try our best to facilitate darshan for more number of devotees in the weeks to come. But resumption of arjitha sevas for devotees will remain cancelled till lockdown is completely lifted,” Subba Reddy added.

TTD has also resumed laddu distribution, tonsure services and annadanam services in strict adherence with Covid-19 safety protocols.

Meanwhile, other TTD temples across the country except for those in the containment zones also reopened for pilgrim worship on Monday.


Preventive measures such as social distancing and sanitisation of the sanctorum were followed on the first day of the trial reopening of temple

Forum asks governor to intervene, seeks prosecution of corrupt officials


Forum asks governor to intervene, seeks prosecution of corrupt officials

U.Sudhakarreddy@timesgroup.com

Hyderabad:09.06.2020

Is the Telangana government watering down corruption cases booked against officials? Are cases against top officials involved in corruption diluted, kept in cold storage and finally settled with a mere departmental enquiry?

To these queries, the Forum for Good Governance (FGG) says the answer is yes. FGG said a majority of the corruption cases in revenue, irrigation and municipal administration departments, where officials had amassed disproportionate assets beyond their means are ending up in a departmental action.

FGG representatives wrote to governor Tamilisai Soundararajan on Monday, seeking her immediate intervention to prosecute the corrupt officials.

M Padmanabha Reddy of FGG said in cases of lesser-paid employees who cannot influence prosecution, permissions are given immediately. “Whereas, in cases where top babus are involved, files are kept in cold storage for several years and finally settled with a departmental enquiry or transfer to commissioner of inquiries or action is dropped.”

Citing an instance, he said ACB had conducted searches on M Sarat Babu, motor vehicle inspector, in 2009 over corruption charges. “For the last 11 years, the case has been pending. The government did not agree with ACB’s contention and directed it to defer the prosecution. It has directed ACB to furnish a draft article of the charges. But, no action has been taken till now,” he explained.

In another case with the tribal welfare department, assistant tribal welfare officer of Mahabubabad Ch Rama Murthy was found in possession of Rs 70 lakh disproportionate assets. “For the last six years, the report has been lying with the government,” Reddy said.

He also recalled that a vigilance and enforcement report into irregularities in the irrigation department in 2015 and a CID report into the case have been kept aside and no action has been taken against the tainted officials. Reddy said no action was taken against then-Shamirpet tehsildar EB Nagaraj though he was trapped in an illegal assets case.

Can’t test all the dead in state, will move SC: CM


Can’t test all the dead in state, will move SC: CM

Koride.Mahesh@timesgroup.com

Hyderabad:09.06.2020

The state government has decided to move the Supreme Court against the Telangana high court order to conduct tests for coronavirus on dead people. A few days ago, the high court had directed the state government to conduct tests on all dead. But chief minister K Chandrasekhar Rao said that it was not possible to conduct tests on all the dead.

“Every day, about 900 to 1,000 people die in the state due various reasons. It is not possible to conduct tests on every dead person. If the health department goes on conducting tests on dead, all other services will be affected, including treatment in positive cases. World Health Organization, central government and even ICMR did not ask the state to conduct tests on every dead person,” the CM said. The chief minister held a review meeting with health officials on Covid 19 cases on Monday, and said there was a conspiracy going on against the government on Coronavirus cases.

He said some people are approaching the courts and filing public interest litigation (PIL) on coronavirus cases and tests in the state. “It appears the PILs being filed in the courts were intentional, and as a result of this, health department officials were compelled to attend the court and they are losing their precious time. With this, it has become difficult for them to attend courts and monitor Covid-19 cases too,” the CM said.

On the Covid-19 deaths, the CM said 95% coronavirus victims were suffering from various ailments like kidney, heart diseases, diabetes and high blood pressure. When they get tested positive for Covid-19, and died due to organ failure, those deaths were being branded as corona deaths, which is unscientific,” he said.

The CM suspected there was a smear campaign going on against the government on Covid-19 cases, which is creating panic among the people. Though the state government has enough PPE kits, masks and equipment and infrastructure, some people spreading false news that Gandhi hospital is full. “It is a conspiracy against the government. While the Gandhi hospital has a capacity of treating, 2,150 patients, only 247 are being treated in Gandhi. But some people are spreading rumours that Gandhi hospital is full of Covid 19 patients,” KCR said. He said many patients were treated and recovered for the infection and discharged.

Now also asymptomatic persons are being treated at home as per the guidelines of ICMR, the CM said.

He said there was a deliberate attempt to demoralise doctors and health workers. “According to ICMR, about 10,000 health workers exposed to the infection. In Telangana, 153 medical workers tested positive for the Covid-19, and none of them are in serious condition,” the CM said. On the availability of equipment, he said 9.61 lakh PPE Kits, 14 lakh N 95 maks and 3,600 beds with oxygen facility, testing kits and tablets are available with the government.

NEWS TODAY 25.08.2026