Monday, June 22, 2020

Anna University to turn into 2,000-bed Covid care centre


Anna University to turn into 2,000-bed Covid care centre

Students Likely To Be Allowed To Take Belongings From Hostel Rooms

TIMES NEWS NETWORK

Chennai:22.06.2020

With the number of Covid-19 cases rapidly increasing in Chennai, the Greater Chennai Corporation plans to turn Anna University into a 2000-bed Covid care centre.

The four hostels in College of Engineering, Guindy, (CEG) campus and an auditorium may be converted into Covid care centres after allowing the students to take their belongings from hostel rooms, sources added.

Greater Chennai Corporation sent a notice to Anna University asking the university administration to hand over hostel facilities by June 20.

But the university authorities, citing the concerns raised by students, told the officials that the university cannot break open the rooms where students have kept their academic projects like thesis work and valuables like laptops.

During the talk, the university authorities agreed to give the hostel rooms if the corporation let the students take their belongings from hostel rooms.

The university has provided space for a 650-bed quarantine facility at Knowledge Park and the postgraduate hostel on the campus.

In a response to students' anxious queries, E Natarjan, dean of the college, sent a communication on Sunday to all hostel students that the corporation will arrange travel for students to collect their belongings.

“In case your room is demanded for the purpose, we will share contact details of the hosteliers to the officials of corporation. You will hear from the Corporation of Chennai about the arrangements made by them for you to travel to collect the baggage. Either you can come in person or depute a guardian or authorize anyone, through whom you can send the room keys,” the dean stated in the letter.

“As a show of solidarity, the vice-chancellor appeals to all students to join our government in providing much needed accommodation by vacating their rooms temporarily in the time of this great crisis,” he further said in the letter.

There are more than 4000 students staying in more than 15 hostels. Each room houses four students and they left in a hurry when the college was closed in March.

Sunday, June 21, 2020

கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு 'பேவிபிரவிர்' மாத்திரை; மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி: ஒரு மாத்திரை விலை ரூ.103-க்கு நிர்ணயிக்கப்பட்டு அறிமுகம்


கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு 'பேவிபிரவிர்' மாத்திரை; மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி: ஒரு மாத்திரை விலை ரூ.103-க்கு நிர்ணயிக்கப்பட்டு அறிமுகம்

hindu tamil



கரோனா வைரஸ் தொற்று ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களுக்கு பலன் தரும் 'பேவிபிரவிர்' மாத்திரையை கிளென்மார்க் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ)ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு மாத்திரை ரூ.103-க்கு விற்கப்பட உள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் 'பேபிபுளூ' எனப்படும்வைரஸ் காய்ச்சலுக்கான 'பேவிபிரவிர்' என்றமாத்திரையை தயாரிக்கிறது. இந்த மாத்திரையை கரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு அளித்ததில் பலன் தெரிந்துள்ளது. குறிப்பாக ஆரம்ப நிலை மற்றும் அதற்கு அடுத்த கட்டநிலையில் உள்ளானவர்களுக்கு பேவிபிரவிர் மாத்திரை மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த மாத்திரையை கரோனா பாதித்தவர்களுக்கு பரிந்துரைக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் (டிசிஜிஐ) கிளென்மார்க் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

கரோனா வைரஸ் பாதிப்புக்கு மாத்திரைகள் இதுவரை மருத்துவரீதியாக தீர்மானிக்கப்பட்டு பரிந்துரைக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் பேபிபுளூ காய்ச்சலுக்கு பலன் தரும் பேவிபிரவிர் மாத்திரைக்கு தற்போது டிசிஜிஐ அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸ் தாக்குதல் எண்ணிக்கைநாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும்சூழலில் இந்த மாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக நிறுவனத்தின் தலைவரும்நிர்வாக இயக்குநருமான கிளென் சல்தானா தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழலில் இந்த மருந்து, பாதிக்கப்பட்டோர்எண்ணிக்கையைக் குறைக்க மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர்குறிப்பிட்டார். மருத்துவரீதியாக இந்த மாத்திரை சோதித்து பார்க்கப்பட்டு சிறந்த பலனைஅளித்துள்ளது என்றும் இது மாத்திரை வடிவில் இருப்பது அவர்களுக்கு சாதகமான விஷயம் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது கரோனா வைரஸ் பாதிப்புக்குஉள்ளானவர்களுக்கு மருந்துகள் அனைத்தும் ஊசி மூலம் செலுத்தப்படுகின்றன. சிலமருந்து நரம்புகளில் செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும் இந்த மாத்திரை கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சல்தானா குறிப்பிட்டார். மருத்துவரின்பரிந்துரை அடிப்படையில் இந்த மாத்திரை வழங்கப்படும்.

ஒரு மாத்திரை விலை ரூ.103 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நாளன்று 1,800 எம்ஜி திறன் கொண்ட மாத்திரைகள் 2 வேளை சாப்பிட வேண்டும். அதன்பின், 2-ம் நாளில் இருந்து 800 எம்ஜி மாத்திரைகளை தினசரி 2 வீதம் 14 நாட்களுக்கு சாப்பிட வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதயபாதிப்பு நோயாளிகள் ஆகியோரில் கரோனாவால் ஓரளவு பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த மாத்திரை பலன் தந்துள்ளது. நான்கே நாளில் வைரஸ் தீவிரம் குறைந்துள்ளது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக கிளென்மார்க் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dailyhunt

ஐஐடி, ஜிப்மர் நுழைவு தேர்வில் கலந்து கொள்வோருக்கு இ பாஸ் தனியாக தேவையில்லை: மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு

2020-06-21@ 11:17:55

சென்னை: ஐஐடி, ஜிப்மர் நுழைவு தேர்வில் கலந்து கொள்வோருக்கு இ பாஸ் தனியாக தேவையில்லை. ஹால்டிக்கெட்டை காட்டினாலே அவர்களை அனுமதிக்கலாம் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், நாடு முழுவதும் ஐஐடி ஹைதாராபாத் நுழைவுத்தேர்வு ஜூன் 24ம் தேதி நடைபெறுகிறது. இந்த நுழைவுத் தேர்வுக்கு வரும் மாணவர்களிடம் தேர்வுக்கான அனுமதி சீட்டு இருந்தால் அவர்களை அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதே போன்று சுகாதாரத்துறை செயலாளர் கலெக்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘ஜிப்மர் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இதற்கு இ-பாஸ் தேவையில்லை. ஹால்டிக்கெட் காட்டினால் போதும்’ என கூறியுள்ளார்.

பிரபல மருத்துவமனை இயக்குனர் உயிரிழப்பு


பிரபல மருத்துவமனை இயக்குனர் உயிரிழப்பு

Added : ஜூன் 20, 2020 23:44 |

சென்னை; விஜயா மருத்துவமனையின் இயக்குனர் சரத் ரெட்டி, 43; சுந்தரம் பாஸ்டனர்ஸ் நிறுவன தலைவர் பாலகிருஷ்ணன், 55, ஆகியோர், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்.

சென்னை, வடபழநியில் உள்ள, விஜயா மருத்துவமனையின் இயக்குனர் சரத் ரெட்டி. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், அதே மருத்துவமனையில், சில தினங்களுக்கு முன், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில், தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பிரபல மருத்துவமனை இயக்குனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.சு

ந்தரம் நிறுவனம்சென்னை, 'சுந்தரம் பாஸ்டனர்ஸ்' நிறுவனத்தின் தலைவர் நாராயணசாமி பாலகிருஷ்ணன், 55. இவர், இரண்டு நாட்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆழ்வார்பேட்டையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர், நேற்று உயிரிழந்தார்.

தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு கிராம், 4,608 ரூபாய்க்கு விற்பனை

Added : ஜூன் 20, 2020 23:47

சென்னை; தமிழகத்தில், முதல் முறையாக, கிராம் ஆபரண தங்கம், 4,600 ரூபாயை தாண்டிய நிலையில், சவரன், 37 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது.

உலகின் பல நாடுகளில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, தொழில் துறை பாதித்துள்ளதால், பலரும், தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், அதன் விலை உயர்ந்து வருகிறது.ஏற்ற, இறக்கம்தமிழகத்தில், மே 18ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 4,578 ரூபாய்க்கும்; சவரன், 36 ஆயிரத்து, 624 ரூபாய்க்கும் விற்பனையாகின. இதுவே, இதுவரை, தங்கம் விலையில் உச்ச அளவாக உள்ளது.

பின், அதன் விலை குறைந்தது.இருப்பினும், அதிக ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. நேற்று முன்தினம், கிராம் தங்கம், 4,553 ரூபாய்க்கும்; சவரன், 36 ஆயிரத்து, 424 ரூபாய்க்கும் விற்பனையாகின. கிராம் வெள்ளி, 53.10 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முதல் முறையாக, எப்போதும் இல்லாத வகையில், தங்கம் கிராமுக்கு, 55 ரூபாய் உயர்ந்து, 4,608 ரூபாய் என்ற, புதிய உச்சத்தை எட்டியது. சவரனுக்கு, 440 ரூபாய் அதிகரித்து, 36 ஆயிரத்து, 864 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 30 காசுகள் உயர்ந்து, 53.40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அதிக வரிகளை விதித்து வருவதுடன், அந்நாட்டின் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கவும், அமெரிக்கா முடிவு செய்துள்ளது. நம் நாட்டின் எல்லையிலும், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, நம் ராணுவ வீரர்களை தாக்கியதால், மத்திய அரசும், அதே முடிவை எடுப்பதற்கான முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது.சந்தைகளில் சரிவுவைரஸ் பரவலால், பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால், உலக பொருளாதாரத்தில் வலுவாக உள்ள நாடுகளின் பங்கு சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில், அதிகளவில் முதலீடு செய்து வருவதால், உலக அளவிலும், உள்நாட்டிலும், அதன் விலை உயர்ந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

பேப்பர் போடும் தம்பிகளுக்கு எதற்கு, 'இ - பாஸ்?'


பேப்பர் போடும் தம்பிகளுக்கு எதற்கு, 'இ - பாஸ்?'

Added : ஜூன் 20, 2020 23:29

சென்னை; சென்னை மாநகர போலீசாருக்கு, 'இ - பாஸ்' குறித்த அடிப்படை புரிதல் கூட இல்லாததால், நாளிதழ்களை வீடுகளுக்கு எடுத்து செல்ல விடாமல் தடுத்து, அரசின் உத்தரவுக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு, மருத்துவம், இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக செல்ல, tnepass.tnega.org என்ற, இணையதளம் வாயிலாக, அரசு, இ - பாஸ் வழங்கி வருகிறது.புரிதலே இல்லை'மருத்துவம், வங்கி ஊழியர்கள், நாளிதழ்களில் பணிபுரிவோர் மற்றும் வினியோகம் செய்வோர் என, அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்கு, இ - பாஸ் தேவையில்லை. அவர்களுக்கு அடையாள அட்டைகள் இருந்தால் போதுமானது' என, ஏற்கனவே, அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.

சென்னையில் வரும், 30ம் தேதி வரை, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், போலீசார், வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு, இ - பாஸ் குறித்த அடிப்படை புரிதல் கூட இல்லை. சோதனையின்போது, ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு எண் சான்றிதழ்கள் இருக்கிறதா என கேட்பதை விட, இ - பாஸ் உள்ளதா என, கேள்விகளால் துளைத்தெடுத்து, வாகன ஓட்டிகளை கொலை குற்றவாளிகள் போல நடத்துகின்றனர்.அவர்களின் நோக்கம், வழக்குப்பதிவு செய்வது; அபராதம் வசூலிப்பது; வாகனங்களை பறிமுதல் செய்வதிலேயே உள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி, வெட்டியாய் ஊர் சுற்றுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார், அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோரை இம்சித்து வருகின்றனர்.நாளிதழ்களின் முகவர்கள், அலுவலக அடையாள அட்டை வைத்துள்ளனர். அதுபோல, நாளிதழ்களை வீடுகளுக்கு கொண்டு செல்லும், வினியோக தம்பிகளுக்கு, சம்பந்தப்பட்ட நாளிதழ்களின் அலுவலகத்தில் இருந்து, அனுமதி கடிதம் வழங்கப்பட்டு உள்ளது.வழக்கும் பதிவுஆனால், சென்னை மாநகர போலீசார், 'இ - பாஸ் இருந்தால் தான், நாளிதழ்களை எடுத்துச் செல்ல அனுமதிப்போம்' என, அவர்களை இம்சிக்கின்றனர்.

அரசின் உத்தரவு, இவர்களுக்குத் தெரியாமல் போனது ஏன் எனத் தெரியவில்லை.'வாகனம் ஓட்டும் அனைவரும், இ - பாஸ் வைத்திருக்க வேண்டும்' என நினைக்கின்றனர்.சென்னையில், கோடம்பாக்கம், மாம்பலம், போரூர், குன்றத்துார், தண்டையார்பேட்டை, அம்பத்துார், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில், போலீசார், நாளிதழ்களின் முகவர்கள், பேப்பர் தம்பிகள் மற்றும் வாகனங்களை நேற்று சிறைபிடித்து, பொது மக்களுக்கு, நாளிதழ்களை கொண்டு செல்ல முடியாமல் தடுத்து விட்டனர்.மாம்பலம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், வினியோக தம்பியிடம், உரிய ஆவணங்கள் இருந்தும் வழக்குப்பதிவு செய்து, வாகனத்தை பறிமுதல் செய்துள்ளார்.

கோரிக்கை
இப்படி, போலீசார் புரிதல் இல்லாமல் இருந்தால், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் விழிப்புணர்வு குறித்த தகவல்கள், பொது மக்களுக்கு எப்படி சேரும்?வாகன சோதனையில் ஈடுபடும், போக்குவரத்து மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசாருக்கு, இ - பாஸ் என்றால் என்ன; வாகன ஓட்டிகளிடம் இருக்க வேண்டிய ஆவணங்கள் என்ன; அவர்களிடம் எப்படி சோதனை செய்ய வேண்டும் என்பது பற்றி தெரியவில்லை.நாளிதழ்களை வினியோகிக்கும் முகவர்கள், பேப்பர் தம்பிகளுக்கு, இ - பாஸ் அவசியமா என்பது குறித்து, கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் தெளிவாக விளக்கி, சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என, பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வங்கி ஊழியருக்கும்அதே கதி தான்!

வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பணிக்கு செல்லும்போது, போலீசார் தடுத்து நிறுத்தி, வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர் மற்றும் அதிகாரியை, வடபழனி, அண்ணாநகர் போலீசார் தடுத்து நிறுத்தி, வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். அடையாள அட்டையை காண்பித்தும், அவர்களை விடவில்லை என, மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.***

JIPMER Extends Residency Period For All Final Year PG Medicos



JIPMER Extends Residency Period For All Final Year PG Medicos 

By Medical Dialogues Bureau 

Published On 21 Jun 2020 10:00 AM | Updated On 21 Jun 2020 10:00 AM 

Through a recent notice, the premier Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER) has informed about the extension in the residency period of all final year PG and super speciality medicos who are going to appear in July 2020 exit examinations. 

The institute, has, however, clarified that it is going to continue to pay the all final year (2017 July batch) Junior Residents (MD/MS) & Senior Residents (DM/MCh) their stipends as per the norms during this extension period. 

The notice informing about the said effect clearly states the following: 

This is to bring to the notice of all final year (2017 July batch) Junior Residents (MD/MS) & Senior Residents (DM/MCh), those who are appearing July 2020 Exit Examination their residency period has been extended upto the following period. 

1. For MD/MS courses extended till 31-July-2020 2. 

2. For PDF courses extended till 31-July-2020 

3. For DM/MCh Courses extended till 30-September-2020 

4. However, JIPMER will continue to provide payment of stipend to all such residents as per rules during this extended period, the institute clarified adding that residents who had joined under sponsored category will be relived as per the study leave order which was submitted at the time of admission form their sponsoring authority. This is issued with the approval of the competent authority. 

NEWS TODAY 04.09.2026