Friday, July 3, 2020

State awaits central funds for salaries of staffers


State awaits central funds for salaries of staffers

TIMES NEWS NETWORK

Pune: 03.07.2020

State relief and rehabilitation minister Vijay Wadettiwar on Thursday said the state government would not be able to pay salaries to its employees next month if the Centre did not release funds.

Wadettiwar, who was in the city for a review meeting, said the state government had to divert its funds towards the treatment of the Covid-19 patients on a priority and reduce budget of almost all its departments by 50-60%. “The situation is such that the state government will be forced to take loans to pay its employees’ salaries. The state has not received the Centre’s funds for Covid-19 relief,” he told a media conference.

He said though the Opposition has been claiming that central funds have reached the state, it was not the reality. Earlier, Maharashtra finance minister and deputy chief minister Ajit Pawar had also said central funds were expected and there was a delay in the amounts reaching the state.

Wadettiwar said the government would ensure that there was no cash crunch to tide over the Covid-19 situation. “The salaries of the Covid-19 fighters will not be affected,” he said.

AIQ PG Medical Seats Vacant After Round 2 Reverted To States: MCC


AIQ PG Medical Seats Vacant After Round 2 Reverted To States: MCC 

By Medical Dialogues Bureau Published On 2 July 2020 12:59 PM 

New Delhi: Through a recent notification on its website, the Medical Counselling Committee (MCC) has informed that the Round-2 of All India Counselling got completed on 30th June 2020 and the seats of All India Quota remaining vacant after Round-2 have been reverted to States for further Rounds of Counselling. Earlier, the counselling body had clarified about the resignation process of Round 2 counselling allotted seats as well as the subsequent eligibility for participating in the Mop-up round. 

The clarification comes after the MCC received many emails regarding eligibility for participation in Mop Up Round of Deemed and Central Universities. Notifying about the same, the authority explained, The rule position as per the Counselling Scheme is clarified as under: 

The Candidates who are allotted seats in Round-2 and do not join the allotted seat can 'Exit with Forfeiture' i.e the Refundable Security Deposit of candidates will be forfeited. However, such candidates can participate in Mop-Up Round by registering again for Mop Up Round by paying the requisite Fee. 

The notice further added that the Candidates who join the allotted seats in Round-2, cannot resign from their seats as per directions of Hon'ble Supreme Court of India in W.P(C) No. 267 of 2017 Dar- Us- Slam Educational Trust & Ors. Vs. Medical Council of India & Ors. and will not be eligible to participate in any other counselling. The relevant part of the court order is reproduced as under: 

"After the second round of counselling for All India Quota seats, the students who take admission in All India Quota seats should not be allowed/ permitted to vacate the seats. This would ensure that very few seats are reverted to the State Quota and also All India Quota seats are filed by students from the all India merit list only. The students who take admission and secure admission in Deemed Universities pursuant to the second round of counselling conducted by the DGHS shall not be eligible to participate in any other counselling."

இதனால் சகலமானவருக்கும்.... 1 கிலோ வெட்டுக்கிளிகளை பிடித்து வந்தால் ரூ300 சன்மானம்- நேபாள விசித்திரம்


இதனால் சகலமானவருக்கும்.... 1 கிலோ வெட்டுக்கிளிகளை பிடித்து வந்தால் ரூ300 சன்மானம்- நேபாள விசித்திரம்

காத்மாண்டு: படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகளை பிடித்து வந்தால் சன்மானம் வழங்கப்படும் என்று நேபாள நாட்டில் நகராட்சிகள் நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது. தெற்காசிய நாடுகளில் கொரோனாவுடன் வெட்டுக் கிளிகள் கைகோர்த்திருக்கின்றன.

பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் நாடுகளில் வெட்டுக் கிளிகள் படையெடுப்பால் வேளாண் தொழிலே நிர்மூலமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெட்டுக் கிளிகளை நிரந்தமராக அழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது நேபாளத்தில் வெட்டுக்கிளிகள் உக்கிரமாக சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் நேபாளத்தில் Adhikhola என்ற நகராட்சியானது ஒரு நூதன அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதாவது வெட்டுக் கிளிகளை உயிருடனோ அல்லது அழித்தோ பிடித்து வந்தல் 1 கிலோவுக்கு ரூ300 சன்மானம் அளிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஏற்கனவே Kaligandaki என்ற நகராட்சியானது 1 கிலோ வெட்டுக் கிளிகளுக்கு ரூ100 வழங்கப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

source: oneindia.com
Dailyhunt

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு விமானக் கட்டணத்தில் 25% சலுகை: இண்டிகோ அறிவிப்பு


மருத்துவர்கள், செவிலியர்களுக்கு விமானக் கட்டணத்தில் 25% சலுகை: இண்டிகோ அறிவிப்பு

கரோனா தடுப்புப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்களுக்கு விமானக் கட்டணத்தில் 25% சலுகை வழங்குவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, 2020ம் ஆண்டு இறுதி வரை மருத்துவர்கள், செவிலியர்கள் இண்டிகோ விமானத்தில் 25% கட்டணச் சலுகையில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதற்காக அவர்கள் தங்கள் அடையாள அட்டையை சான்றாக பயன்படுத்திக்கொள்ளலாம். ஜூலை 01, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை இந்த சலுகை இருக்கும்.

தற்போது சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட மத்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலமாக மத்திய அரசின் அனுமதி பெற்ற சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.
Dailyhunt

கூத்தாநல்லூர்: தூய்மைப் பணியாளரை தனது வாகனத்தில் அனுப்பி கௌரவித்த நகராட்சி ஆணையர்


கூத்தாநல்லூர்: தூய்மைப் பணியாளரை தனது வாகனத்தில் அனுப்பி கௌரவித்த நகராட்சி ஆணையர்


திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் பணி ஓய்வு பெற்ற நகராட்சி துப்புரவுப் பணியாளரை, தனது வாகனத்தில், வீட்டிற்கு நகராட்சி ஆணையர் ஆர்.லதா அனுப்பி வைத்தார்.

அந்தக் காலத்தில் தெருவில், தண்டோரா போட்டு, அரசு வேலைக்கு அழைப்பார்களாம். காப் பணம் சம்பாதித்தாலும், கவுர்மெண்ட் சம்பளமா இருக்க வேண்டும் எனச் சொல்லுவார்கள். ஆனால், இப்போது, பள்ளிக்கூடத்தில் சேரவே பணத்தை அள்ளிக் கொடுக்க வேண்டிய நிலை. அரசாங்க வேலை என்றால், என்ன படித்து இருந்தாலும் சரி, எத்தனை இலட்சம் தருகிறார்கள் என்று தான் பார்க்க வேண்டிய கட்டாய நிலை ஆகிவிட்டது. அப்படிப்பட்ட இந்தக் காலத்தில், எந்த ஒரு அரசாங்க வேலையாக இருந்தாலும், நல்ல முறையில், எந்தவிதக் கெட்டப்பெயரும் இல்லாமல் பணி ஓய்வு பெறுவது என்பது எல்லாவற்றையும் விடப் பெரும்பாடாக இருக்கிறது.

அப்படிப்பட்ட நிலையில் தான், இந்த கொடூரமான கரோனாக் காலத்தில் கூத்தாநல்லூர் நகராட்சியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மைப் பணியாளராக பணியாற்றி இருவர் பணி ஓய்வு பெற்றனர். அவர்களைப் பாராட்ட, கௌரவப்படுத்த நகராட்சி ஆணையர் ஆர்.லதா நினைத்தார். அதன்படி, துப்புரவு மேற்பார்வையாளர் வாசுதேவன் மற்றும் ஊழியர்களின் ஏற்பாட்டில், பிரிவுபசார விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டன.

கூத்தாநல்லூர் நகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் பணி நிறைவு பிரிவுபசார விழா நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, ஆணையர் ஆர்.லதா தலைமை வகித்தார். மேலாளர் எஸ்.லதா முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கி. அருண்குமார் வரவேற்றார். விழாவில், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நா.பாலசுப்ரமணியன், மாவட்டச் செயலாளர் கே.முனியாண்டி உள்ளிட்ட பலர் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். பாராட்டின் நிறைவாக, பணி ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளர்கள் இரண்டு பேரையும், தனது வாகனத்தில், ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்து நகராட்சி ஆணையர் ஆர்.லதா மகிழ்ந்தார். இச்சம்பவம், அங்கிருந்த அத்தனை பேரையும் கண் கலங்க வைத்தது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஆர். லதா கூறியது..

வாழ்நாளில் முக்கால் வாசி ஆண்டுகளை, நம்முடன், நம்மூர் மக்களுக்காக 40 ஆண்டுகள் தூய்மைப் பணி செய்து, நகரத்தைச் சுத்தப்படுத்திய அந்த பெரும் மனிதரை, இந்த பணி ஓய்வு பெறும் நாளிலாவது வாகனத்தில் கொண்டு விடலாம் என்றுதான் அப்படிச் செய்தேன் என்றார் பெருமையாக ஆணையர் லதா.

இது குறித்து, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நா.பாலசுப்ரமணியன் கூறியது.

கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையருக்குப் பெருந்தன்மையான மனது. ஆமாம், பெண்ணின் குணம் இரக்கமுடையது என்பதை நிரூபித்து விட்டார். இந்த கரோனாக் காலத்தில், எப்படி வேண்டுமானாலும், எதையாவது சொல்லி விழாவை ரத்து செய்தோ, தட்டிக் கழித்தோ இருக்கலாம். ஆனால், விழாவை சிறப்பாக நடத்தியதுடன், தனது காரிலேயே வீட்டில் கொண்டு போய் விடச் சொன்னதும், பாராட்டுதலுக்குரியதாகும்.

இதற்கு முன்பு, கரூரில் அந்த மாவட்ட ஆட்சியராக இருந்த அன்பழகன் என்பவர், மாவட்ட ஆட்சியரகத்தில் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்ற, ஊழியரை, தனது காரிலேயே ஏற்றி அமர வைத்து, வீட்டில் கொண்டு போய் தானே விட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
Dailyhunt

'ஜே.இ.இ., - நீட்' தேர்வுகளும் ஒத்திவைப்பு?


'ஜே.இ.இ., - நீட்' தேர்வுகளும் ஒத்திவைப்பு?

Updated : ஜூலை 02, 2020 23:20 | Added : ஜூலை 02, 2020 23:11 |


புதுடில்லி: ''நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது தள்ளி  வைப்பதா என்பது குறித்து, கல்வித் துறை நிபுணர்கள் குழு, நாளை அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில், தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்,'' என, மத்திய  மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்தார்.

ஐ.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் போன்ற தொழில் கல்வி படிப்பதற்கான, ஜே.இ.இ., முதன்மை நுழைவுத் தேர்வை, ஜூலை, 18 - 23ம் தேதிகளில் நடத்தப்படும் என, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

இதேபோல், மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, ஜூலை, 26ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தேர்வு தேதிகளை ஒத்தி வைக்க வேண்டும் என, மாணவர்களும், அவர்களது பெற்றோரும் வலியுறுத்தி வருகின்றனர்.

முடிவு

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்கிரியால் நேற்று கூறியதாவது:கொரோனா பரவல் குறையாத நிலையில், நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என, பல தரப்பிலிருந்தும் கோரிக்கை வந்துள்ளது. இதையடுத்து, தேர்வுகளை நடத்துவதற்கான நிலைமையை ஆய்வு செய்ய, என்.டி.ஏ.,வைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் கல்வித் துறை நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தக் குழு, நிலைமையை ஆய்வு செய்து, தேர்வுகளை நடத்துவது தொடர்பான பரிந்துரைகளை, நாளை சமர்ப்பிக்கும். அதன் பின், தேர்வுகளை திட்டமிட்டப்படி நடத்துவதா அல்லது தள்ளி வைப்பதா என, முடிவு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

சி.ஏ., தேர்வு நடக்குமா? 10ம் தேதி தெரியும்!

சி.ஏ., எனப்படும், பட்டய கணக்காளர் தேர்வுகளை நடத்துவது குறித்து, 10ம் தேதிக்குள் இறுதி முடிவை அறிவிப்பதாக, இந்திய சார்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் மையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.வழக்கமாக, சி.ஏ., தேர்வுகள், மே மாதத்தில் நடத்தப்படும். கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கால், இந்தாண்டுக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, ஜூலை, 29 முதல் ஆக., 16 வரை வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை, 'ஆப்ட் அவுட்' எனப்படும், தேர்வு எழுத முடியாதவர்கள், தேர்வில் இருந்து விலகிக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:சி.ஏ., தேர்வை, 4.67 லட்சம் பேர் எழுதுகின்றனர். ஆனால், நாட்டில், 259 இடங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டின், 70 சதவீத மாவட்டங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதியில் உள்ளவர்கள், தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆப்ட் அவுட் முறையால், இந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. அதிக இடங்களில் தேர்வு மையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா அமர்வு விசாரித்து வருகிறது.

'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், நேற்று நடந்த விசாரணை யின்போது, இந்திய சார்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் மையத்தின் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் ராம்ஜி ஸ்ரீனிவாசன் வாதிட்டதாவது:

பல மாநிலங்களில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், தேர்வுகளை நடத்துவது சாத்தியமா என்பது தெரியவில்லை.

இது தொடர்பாக, மையத்தின் மாநிலப் பிரிவுகளை கலந்தாலோசித்து, தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். அதையடுத்து, வரும், 10ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, அமர்வு உத்தரவிட்டுள்ளது.

'இ - பாஸ்' கேட்டு இதுவரை 37 லட்சம் பேர் விண்ணப்பம்

'இ - பாஸ்' கேட்டு இதுவரை 37 லட்சம் பேர் விண்ணப்பம்

Added : ஜூலை 02, 2020 22:49

ஊரடங்கின் போது, 'இ - பாஸ்' கேட்டு, இதுவரை, 37 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்; அதில், 13 லட்சம் விண்ணப்பங்களுக்கு மட்டுமே, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மார்ச், 25 முதல், தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில், கல்யாணம், இறப்பு, தொழில் சம்பந்தமாக, வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு செல்ல, தமிழக அரசு சார்பில், 'ஆன்லைன்' வாயிலாக, இ - பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து, தமிழகத்திற்கு வரவும், இ - பாஸ் பெறுவது அவசியம்.

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது முதல், வெளியூர் பயணங்கள் செல்ல, தமிழகத்திற்கு வர என, பல லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளன.இது குறித்து, அரசு அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா ஊரடங்கு காலத்தில், பல்வேறு காரணங்களுக்காக வெளியூர் செல்லவும், தமிழகத்திற்குள் வருவதற்கும், இதுவரை, 37.35 லட்சம் பேர் விண்ணப்பங்கள் பதிவு செய்துள்ளனர். அதில், மாவட்டங்களுக்குள் செல்ல, 52 ஆயிரத்து, 282 விண்ணப்பங்கள்; மாவட்டங்களுக்கு வெளியே செல்ல, 29.05 லட்சம்; தமிழகத்திற்கு வெளியே செல்ல, 3.01 லட்சம்; தமிழகத்திற்கு உள்ளே வர, 2.66 லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளன.

இவற்றில், இதுவரை, 13 லட்சம் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில், வெளி மாநிலங்களில் இருந்து வருவதற்கான விண்ணப்பங்களில், 57 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வெளியே இருந்து பதிவான விண்ணப்பங்களில் பெரும்பாலானவை, போலி ஆவணங்கள் வாயிலாக, விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

-- நமது நிருபர்- -

Can MBBS student be given one grace mark? HC to medical univ chancellor

Can MBBS student be given one grace mark? HC to medical univ chancellor 14.09.2026 Bhopal/Jabalpur: MP high court has asked the chancellor o...