Tuesday, July 28, 2020

HC wants Centre to fix OBC quota for its med seats


HC wants Centre to fix OBC quota for its med seats

Sureshkumar.K@timesgroup.com

28.07.2020

Chennai: The Madras high court has green-flagged OBC reservation under the all India quota (AIQ) medical seats in non-central institutions as well, and has given three months for the Centre to take a decision on the percentage.

While Tamil Nadu political parties demand 50% for OBCs, the central scheme allows only 27%. “…we find that in principle there is no legal or constitutional impediment for extending the benefit of reservation to OBC in the state-surrendered AIQ seats of the UG/PG medical courses in state-run medical colleges within Tamil Nadu, subject to any further directions or orders of the apex court,” ruled the first bench of Chief Justice A P Sahi and Justice Senthilkumar Ramamoorthy on Monday.

The issue relates to denial of MBBS and post-graduate medical seats in state government medical colleges under AIQ for OBC candidates. While SC/STs and economically weaker section candidates have access to AIQ through reservation, OBCs were not included in the quota net. All top parties in Tamil Nadu, except the BJP, jointly initiated the present legal proceedings.

On Monday, rejecting the contention of Medical Council of India (MCI) that permitting reservation in AIQ seats would compromise merit, the court said: “This argument gets diluted, as NEET examinations are now clearly designed to allow only such candidates to be admitted, who secure a minimum merit.” Thus, application of any reservation rule, be it at the instance of the state-specific law or as per any reservation policy framed by the central government for AIQ seats, will not affect merit, the court said.

The MCI said the state reservation would apply only to AIQ medical seats in central institutions, whereas the affidavit of the Centre before the SC and the HC said there was a proposal to provide OBC reservation in state government colleges, subject to the condition that the overall reservation would not exceed 50% of the total seats under AIQ.


‘Decision of panel on OBC quota not to apply this year’

These two factors, as also a letter from the Union health minister to DMK’s senior advocate P Wilson recognising the sanctity of state law, played a vital role for the bench in penning the verdict.

The bench, however, refrained from issuing an overt directive to the Centre saying, “A straight mandamus for extending the benefit of reservation from this court may not be possible unless a crystallized right takes a shape. The interference with a policy matter, if already taken, may be permissible through a judicial review to a limited extent but, on the other hand, it is debatable as to whether a policy framed in the shape of a proposal and not implemented can be enforced in the absence of a crystallized legal right.”

“We are issuing the direction which is not a policy declaration nor a mandamus to declare a policy,” the judges said, adding: “The proposal (to provide OBC reservation) as committed is already in place as professed by the central government and legally supportable by a state law. Since the seats are of AIQ, therefore, it requires a decision with the participation of the authorities keeping in view the fact that the control of coordinated standards of higher education is with the central government and the MCI in such matters, as held by the Constitution bench in Saurabh Chaudri’s case,” the court added.

To apply this on principle, the matter has to be resolved between the state and the Centre with the participation of the MCI and dental council, the bench said, and added: “Therefore, we find that it would be appropriate that the issue is referred to a committee for providing the terms of implementation of such reservation as claimed by the petitioners.”

The court also made it clear that any decision of the committee would apply only to future academic years and not this academic year.

The bench, however, refrained from issuing an overt directive to the Centre

ஓ.பி.சி., ஒதுக்கீட்டுக்கு இயற்றுங்கள் சட்டம்! மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


ஓ.பி.சி., ஒதுக்கீட்டுக்கு இயற்றுங்கள் சட்டம்! மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Updated : ஜூலை 28, 2020 00:06 | Added : ஜூலை 27, 2020 23:15 |




சென்னை: 'மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இடஒதுக்கீடு பெற, சட்டப்பூர்வ தடை ஏதும் இல்லை; எத்தனை சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது என்பதை, மூன்று மாதங்களில், மத்திய அரசு அறிவிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இடஒதுக்கீடு வழங்கும் முறையை முடிவு செய்ய, மத்திய, மாநில அரசு அதிகாரிகள், மருத்துவ கவுன்சில் செயலர்கள் அடங்கிய குழுவையும், உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, மருத்துவ பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளில், 15 சதவீத இடங்களும், முதுநிலை படிப்புகளில், 50 சதவீத இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்படுகின்றன.


50 சதவீத ஒதுக்கீடு:

இந்த இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 50 சதவீத ஒதுக்கீடு வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் தி.மு.க., - அ.தி.மு.க., - ம.தி.மு.க., - தி.க., உள்ளிட்ட கட்சிகளும்; 27 சதவீத ஒதுக்கீடு கோரி, பா.ம.க.,வும் மனுக்கள் தாக்கல் செய்தன.மனுக்கள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன.

தி.மு.க., சார்பில், மூத்த வழக்கறிஞர், பி.வில்சன், அ.தி.மு.க., சார்பில், மூத்த வழக்கறிஞர், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பா.ம.க., சார்பில், வழக்கறிஞர், கே.பாலு உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.தமிழக அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், சிறப்பு பிளீடர் மனோகரன், மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன், மருத்துவ கவுன்சில் சார்பில், வழக்கறிஞர், பி.ஆர்.ராமன் ஆஜராகினர்.

27 சதவீதம்:

இவ்வழக்கில், வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்த நிலையில், முதல் பெஞ்ச், நேற்று பிறப்பித்த உத்தரவு: மத்திய அரசு நிறுவனங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 27 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சரின் கடிதத்திலும், அது கூறப்பட்டுள்ளது. இத்தகைய ஒதுக்கீட்டுக்கு, மருத்துவ கவுன்சில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

எதிர்ப்பு:

இடஒதுக்கீடு தொடர்பாக, 1993ல் இயற்றப்பட்ட சட்டத்தை, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் அமல்படுத்தும்படி, தமிழக அரசு கோரியுள்ளது. இதற்கு, மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, குறிப்பிட்ட அளவில் ஒதுக்கீடு அமல்படுத்தும் வகையிலான திட்டத்தை வகுத்திருப்பதாக, பதில் மனுவில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இடஒதுக்கீடு, 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்ற நிபந்தனையுடன், இதில் உள்ளடங்கிய ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டிலும் இடையூறு இல்லாத வகையில், அமல்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளது. அதற்கேற்ப, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு கூறியுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இடஒதுக்கீடு கோரும் சட்டப்பூர்வ உரிமை இருப்பதாகவும், ஏற்கனவே இடஒதுக்கீட்டை, தமிழகத்தில் பின்பற்றி வருவதாகவும், மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் மருத்துவ கவுன்சில் வகுத்த விதிமுறைகளின்படி, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களின் விகிதத்தையும், அதில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருவதையும், கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தின் அடிப்படையிலும், மத்திய அரசு அளித்த திட்டத்தின் அடிப்படையிலும் பார்க்கும் போது, எத்தனை சதவீதம் ஒதுக்கீடு என்பதில், பிரச்னை இருப்பதாக தெரிகிறது. எனவே, இடஒதுக்கீட்டை நீட்டிப்பது தொடர்பான கொள்கை, தகுதி மதிப்பெண், மாணவர்கள் சேர்க்கை குறித்து, மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் ஆய்வு செய்ய வேண்டும். அதேநேரத்தில், மாநில அரசு ஒரு சட்டம் இயற்றி இருக்கும் போது, அதை, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அமல்படுத்த வேண்டும் என்பதையும், புறக்கணித்து விட முடியாது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் உரிமைகள் குறித்து, உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ள திட்டத்தை, தெளிவுப்படுத்த வேண்டும். மனுதாரர்கள் தரப்பில் கோரியுள்ளபடி, இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்த பிரச்னைக்கு தீர்வு காண, குழுவுக்கு அனுப்பப்படுகிறது. இதன் முடிவு, எதிர்காலத்தில் தான் அமல்படுத்தப்படும்; இந்த கல்வியாண்டுக்கு அல்ல.

எனவே, தமிழக அரசின் சுகாதார துறை செயலர், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் செயலர்கள் அடங்கிய கூட்டத்தை, மத்திய சுகாதார பணிகள் இயக்குனர் வாயிலாக, மத்திய அரசு கூட்ட வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு சலுகை வழங்கும் முறையை, இந்தக் கூட்டத்தில் இறுதி செய்ய வேண்டும்.

அதன்படி, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், எத்தனை சதவீதம் இடஒதுக்கீட்டை, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அமல்படுத்துவது என்பதை, மூன்று மாதங்களில், மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

தமிழகத்தில் ஒதுக்கீடு எப்படி?

* தமிழகத்தில் மொத்த மருத்துவ இடங்களில், 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு செல்கிறது. மீதமுள்ள, 85 சதவீத இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு கிடைக்கிறது.

* இந்த, 85 சதவீத இடங்களில், ஆதி திராவிடர்களுக்கு, 18 சதவீதம்; பழங்குடியினருக்கு; 1 சதவீதம்; மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 20 சதவீதம்; முஸ்லிம் உள்ளிட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு, 30 சதவீதம் என, பிரிவு வாரியாக, 69 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்கள், பொது பிரிவிற்கு ஒதுக்கப்படும். ஒவ்வொரு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத இடங்கள் தரப்படும்.

Monday, July 27, 2020

Lawyers Are Not Permitted To Earn A Livelihood By Any Other Means: Observes SC On Advocates Plight Due To Loss Of Income Amid Pandemic [Read Order]

Lawyers Are Not Permitted To Earn A Livelihood By Any Other Means: Observes SC On Advocates Plight Due To Loss Of Income Amid Pandemic [Read Order]: The Supreme Court on Wednesday reiterated that Advocates cannot practice any other profession and they are not permitted to earn a livelihood 'by any other means'. 'We are conscious of the fact...

Supreme Court Weekly Round Up

Supreme Court Weekly Round Up: Week Commencing July 19 to July 26, 2020

2 கோடி முக கவசம்


2 கோடி முக கவசம்

Added : ஜூலை 26, 2020 23:58

திருப்பூர் : ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக, இரண்டு கோடி முக கவசங்கள் தயாரிக்கும் 'ஆர்டர்' திருப்பூர் நிறுவனத்துக்கு கிடைத்து உள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு, இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்துகிறது. மொத்தம், 2.08 கோடி கார்டுதாரர்களுக்கு, 13.48 லட்சம் முக கவசங்கள் வழங்கப்பட உள்ளன.இதற்கான முதல் டெண்டரில், திருப்பூரைச் சேர்ந்த, ஒரு ஆடை உற்பத்தி நிறுவனம், இரண்டு கோடி முக கவசங்கள் தயாரிக்கும் வாய்ப்பை பெற்று உள்ளது. ஓவன் ரக துணியில், இளம் பச்சை, இளநீல நிறத்தில், பின்புறம் கட்டும் வகையில், இந்த முக கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன.இந்த ஆர்டர், திருப்பூர் பின்னலாடை துறையினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

ஆக., 1க்கு பின் அமலாகும் புதிய தளர்வுகள் என்ன? மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை


ஆக., 1க்கு பின் அமலாகும் புதிய தளர்வுகள் என்ன? மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

Updated : ஜூலை 27, 2020 00:25 | Added : ஜூலை 26, 2020 22:51 

புதுடில்லி : 'கொரோனா' வைரஸ் பாதிப்பு நீடித்து வரும் நிலையில், நடைமுறையில் உள்ள ஊரடங்கு, வரும், 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தற்போதைய நிலையில், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட உள்ளன. இது தொடர்பாக, மாநில அரசுகளுடன், மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் துவங்கியதும், மார்ச், 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அது நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், கடந்த இரண்டு மாதங்களாக, பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கு தளர்வின், இரண்டாம் கட்டம், 31ம் தேதியுடன் முடிய உள்ளது.

இழப்பு

பல்வேறு மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படுவது உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில், ஊரடங்கு தளர்வின் மூன்றாம் கட்டத்தில், மேலும் பல தளர்வுகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம் என்பது குறித்து, அமைச்சகங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன. மாநில அரசுகளுடனும், மத்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது.

தற்போதைய நிலையில், தியேட்டர்கள், 'ஜிம்' எனப்படும் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என்பது தெரிகிறது. நான்கு மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் மிகப் பெரிய பொருளாதார இழப்பை சந்தித்து வருவதால், தியேட்டர்களை திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

தியேட்டர்களில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதிப்பதாக, தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், '25 சதவீத இடங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கலாம்' என, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. அதேபோல், உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் ஜிம்களையும் திறக்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பள்ளிகள் திறப்பா?

அதே நேரத்தில், பள்ளி, கல்லுாரிகள் திறப்பு தற்போதைக்கு இருக்காது. பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து, மாநில அரசுகளின் கருத்தை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால் சஷாங்க் கேட்டுள்ளார். மாநில அரசுகளும், பெற்றோர்களின் கருத்தைக் கேட்டுள்ளன. அதனால், இந்த ஊரடங்கு தளர்வு மூன்றாம் கட்டத்தில், பள்ளி, கல்லுாரி உள்பட கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாது என்பது உறுதியாக உள்ளது.

மெட்ரோ ரயில் சேவையும் இருக்காது. ரயில், பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்படாது என, தெரிய வருகிறது. அதே நேரத்தில், முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது போன்ற நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்க, அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.

மோடி கூட்டத்தில் மம்தா

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களுடன் பல முறை பேசியுள்ளார். ஆனால், இந்தக் கூட்டங்களில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில், நொய்டா, கோல்கட்டா மற்றும் மும்பையில் புதிய பரிசோதனை மையங்கள் இன்று திறக்கப்பட உள்ளன. 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், இந்த மையங்களை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, சுகாதாரத் துறை அமைச்சர், ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.உத்தர பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத், மஹாராஷ்டிர முதல்வர், உத்தவ் தாக்கரே பங்கேற்கின்றனர். மம்தா பானர்ஜியும் பங்கேற்க உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூகுள் - ஜியோ கூட்டணியால் கவலையில் சீன நிறுவனங்கள்..!


கூகுள் - ஜியோ கூட்டணியால் கவலையில் சீன நிறுவனங்கள்..!

Updated : ஜூலை 26, 2020 23:39 | Added : ஜூலை 26, 2020 22:29

புதுடில்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ உடன் கூகுள் கூட்டணி அமைத்து இறங்குவதால், ஏற்கனவே இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன.


கடந்த வாரம் கூகுள், ரிலையன்ஸ் ஜியோவில் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்வதாக அறிவித்தது. இந்த முதலீட்டை ரிலையன்ஸ் , இந்திய சந்தைக்கேற்ற வகையில் மலிவு விலை ஸ்மார்ட்போன் தயாரிப்பிற்கு பயன்படுத்த உள்ளது. இதன்மூலம் இதுவரை ஸ்மார்ட்போனே பயன்படுத்தாத 50 கோடி பேரின், குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் இந்தியர்களை இலக்காக கொண்டுள்ளது.

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவின் பதிவான ஸ்மார்ட்போன் விற்பனையில் 75 சதவீதத்திற்கும் மேல் சீன தயாரிப்புகளே ஆகும். 3வது இடம்பிடித்துள்ள தென்கொரியாவின் சாம்சங் விற்பனை 17 சதவீதத்திற்கு கீழே உள்ளது. ஜியோ - கூகுள் கூட்டணியில் உருவாகும் மலிவு விலை ஸ்மார்ட்போன் , சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மோசமான செய்தியாக அமைந்துள்ளது.கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென பிரசாரம் வலுத்து வந்தது. இந்தியாவின் இறையாண்மைக்கும், தகவல் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருந்த டிக்டோக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்தியாவில் தற்போது சுமார் 45 கோடி பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் 50 கோடி பேரிடம் ஸ்மார்ட்போன் இல்லை. ஜியோ - கூகுள் கூட்டணி, இவர்களுக்கு மலிவு விலையில் ஸ்மார்ட்போனை அளிக்க திட்டமிட்டுள்ளது.டிஜிட்டல் மற்றும் தகவல் புரட்சியின் நன்மைகளை அவர்கள் இழக்கக்கூடாது என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும், ஆசிய பணக்காரரான முகேஷ் அம்பானி கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார். கூகுள் உடன் கூட்டணி அமைப்பதற்கான குறிக்கோள், தற்போதைய செலவிற்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களை தயாரிப்பது என கூறியிருந்தார்.

இந்தியாவின் கிராமப்புற வாடிக்கையாளர்களை குறிவைத்து ஜியோ களமிறங்குகிறது. தற்போது 2 ஜியின் பயன்படுத்தி வரும் மொபைல் போன்களுக்கு பதிலாக 4 ஜி அல்லது 5ஜி ஸ்மார்ட்போன்களை அளிப்பது இரண்டு நிறுவனங்களுக்கும் வெற்றியை தரும். ரிலையன்ஸ் ஜியோ இணையச்சேவை திட்டங்களை அளிக்கும். கூகுள் தனது தேடுபொறி, யூடியூப், மேப் மற்றும் இதர சேவைகளை அளிக்கும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்திய சந்தையில், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டாப் 5 நிறுவனங்களில் சாம்ஸங் தவிர மற்ற 4 நிறுவனங்களுக்கு சீன நிறுவனங்கள் ஆகும். இந்தியாவில் ஏற்கனவே 4 ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மலிவு விலையில் சேவையளிக்கும் ஜியோ சாதனத்தை, 20 சதவீதம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவின் குறைந்த விலை ஸ்மார்ட்போன் சந்தையை கைப்பற்ற, இரு நிறுவனங்களும் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் கூடிய 50 டாலருக்கு குறைவான விலை கொண்ட ஸ்மார்ட்போனை தயாரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர். இது மிகவும் கடினமான ஒன்று ஏனெனில், இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் விலை தற்போதைக்கு 70 முதல் 100 டாலர் வரை உள்ளது. இந்த பிரிவில் ஜியோமி நிறுவனம் 40 சதவீதமும், சாம்ஸங் 17 சதவீதமும், ரியல்மீ 11 சதவீதம் சந்தையை பிடித்துள்ளன. மெமரி, சிப், டிஸ்பிளே உள்ளிட்டவை 50 டாலருக்கு மேல் ஸ்மார்ட்போன் விலையை உயர்த்த கூடும்.

இருந்த போதும் 50 அமெரிக்க டாலர் என்பது பெரும்பாலான கிராமப்புற இந்தியர்களால் வாங்க கூடிய விலையாக கூறப்பட்டுள்ளது. அவர்களை கவர முடிந்தால், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை 900 மில்லியனாக இருக்குமெனவும், வருமான நிலை உயர்வால், ஸ்மார்ட்போன் விலையும் மலிவாக இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுடில்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ உடன் கூகுள் கூட்டணி அமைத்து இறங்குவதால், ஏற்கனவே இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன.

கடந்த வாரம் கூகுள், ரிலையன்ஸ் ஜியோவில் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்வதாக அறிவித்தது. இந்த முதலீட்டை ரிலையன்ஸ் , இந்திய சந்தைக்கேற்ற வகையில் மலிவு விலை ஸ்மார்ட்போன் தயாரிப்பிற்கு பயன்படுத்த உள்ளது. இதன்மூலம் இதுவரை ஸ்மார்ட்போனே பயன்படுத்தாத 50 கோடி பேரின், குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் இந்தியர்களை இலக்காக கொண்டுள்ளது.

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவின் பதிவான ஸ்மார்ட்போன் விற்பனையில் 75 சதவீதத்திற்கும் மேல் சீன தயாரிப்புகளே ஆகும். 3வது இடம்பிடித்துள்ள தென்கொரியாவின் சாம்சங் விற்பனை 17 சதவீதத்திற்கு கீழே உள்ளது. ஜியோ - கூகுள் கூட்டணியில் உருவாகும் மலிவு விலை ஸ்மார்ட்போன் , சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மோசமான செய்தியாக அமைந்துள்ளது.கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென பிரசாரம் வலுத்து வந்தது. இந்தியாவின் இறையாண்மைக்கும், தகவல் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருந்த டிக்டோக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்தியாவில் தற்போது சுமார் 45 கோடி பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் 50 கோடி பேரிடம் ஸ்மார்ட்போன் இல்லை. ஜியோ - கூகுள் கூட்டணி, இவர்களுக்கு மலிவு விலையில் ஸ்மார்ட்போனை அளிக்க திட்டமிட்டுள்ளது.டிஜிட்டல் மற்றும் தகவல் புரட்சியின் நன்மைகளை அவர்கள் இழக்கக்கூடாது என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும், ஆசிய பணக்காரரான முகேஷ் அம்பானி கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார். கூகுள் உடன் கூட்டணி அமைப்பதற்கான குறிக்கோள், தற்போதைய செலவிற்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களை தயாரிப்பது என கூறியிருந்தார்.

இந்தியாவின் கிராமப்புற வாடிக்கையாளர்களை குறிவைத்து ஜியோ களமிறங்குகிறது. தற்போது 2 ஜியின் பயன்படுத்தி வரும் மொபைல் போன்களுக்கு பதிலாக 4 ஜி அல்லது 5ஜி ஸ்மார்ட்போன்களை அளிப்பது இரண்டு நிறுவனங்களுக்கும் வெற்றியை தரும். ரிலையன்ஸ் ஜியோ இணையச்சேவை திட்டங்களை அளிக்கும். கூகுள் தனது தேடுபொறி, யூடியூப், மேப் மற்றும் இதர சேவைகளை அளிக்கும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்திய சந்தையில், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டாப் 5 நிறுவனங்களில் சாம்ஸங் தவிர மற்ற 4 நிறுவனங்களுக்கு சீன நிறுவனங்கள் ஆகும். இந்தியாவில் ஏற்கனவே 4 ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மலிவு விலையில் சேவையளிக்கும் ஜியோ சாதனத்தை, 20 சதவீதம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவின் குறைந்த விலை ஸ்மார்ட்போன் சந்தையை கைப்பற்ற, இரு நிறுவனங்களும் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் கூடிய 50 டாலருக்கு குறைவான விலை கொண்ட ஸ்மார்ட்போனை தயாரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர். இது மிகவும் கடினமான ஒன்று ஏனெனில், இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் விலை தற்போதைக்கு 70 முதல் 100 டாலர் வரை உள்ளது. இந்த பிரிவில் ஜியோமி நிறுவனம் 40 சதவீதமும், சாம்ஸங் 17 சதவீதமும், ரியல்மீ 11 சதவீதம் சந்தையை பிடித்துள்ளன. மெமரி, சிப், டிஸ்பிளே உள்ளிட்டவை 50 டாலருக்கு மேல் ஸ்மார்ட்போன் விலையை உயர்த்த கூடும்.

இருந்த போதும் 50 அமெரிக்க டாலர் என்பது பெரும்பாலான கிராமப்புற இந்தியர்களால் வாங்க கூடிய விலையாக கூறப்பட்டுள்ளது. அவர்களை கவர முடிந்தால், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை 900 மில்லியனாக இருக்குமெனவும், வருமான நிலை உயர்வால், ஸ்மார்ட்போன் விலையும் மலிவாக இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

NEWS TODAY 09.07.2026