Wednesday, July 29, 2020

பொண்டாட்டி இல்ல; நல்ல சோறு கிடைக்குது!’ - குசும்பு வீடியோ வெளியிட்ட கொரோனா நோயாளிகள்


பொண்டாட்டி இல்ல; நல்ல சோறு கிடைக்குது!’ - குசும்பு வீடியோ வெளியிட்ட கொரோனா நோயாளிகள்

வீடியோவில் பேசிய நபர்

``பொண்டாட்டி தொல்லைக்கு இந்தக் கொரோனாவே மேல். மூணு வேளை நல்ல சாப்பாடு கிடைக்குது. சீரியல் கொடூரம் இல்லை’’ என்று நகைச்சுவை வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள் கொரோனா நோயாளிகள்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா மகளிர் கலைக் கல்லூரியில், கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கல்லூரியின் மொட்டை மாடியில் இருந்தபடி கொரோனாவைக் கிண்டல் செய்து புதியதாகத் தொற்றுக்குள்ளானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் பேசும் நோயாளிகள், ``கொரோனா வந்தவங்களை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டுப் போகும்போது சொந்தக்காரங்க யாரும் அழுது புலம்பாதீங்க. எல்லோரும் அண்ணன், தங்கச்சி, அண்ணி உறவு முறையில் இங்க சொந்தம் பந்தமா பழகுறோம்.

கொரோனா நோயாளிகள்

கொரோனாவை கண்டுபிடிச்ச நபருக்கும், தமிழ்நாடு அரசுக்கும், எங்க பனப்பாக்கம் பேரூராட்சிக்கும், எங்களை இங்கு அனுமதிக்க காரணமாக இருந்தவர்களுக்கும் முதல்ல நன்றியை தெரிவிச்சிக்கிறோம். வீட்ல இருந்தா பொண்டாட்டி தொல்லை தாங்க முடியாது. `கருவேப்பிலை இல்ல... கொத்தமல்லி இல்ல... அது இல்ல... இது இல்லைனு கொடுமைப்படுத்துவா.' நைட் 8 மணிக்கு வீட்டுக்குப் போனாகூடச் சாப்பாடு போடாம சீரியல் பார்த்துக்கிட்டு இருப்பா. ஆனா, இங்க டைமுக்கு சோறு கிடைக்குது. முக்கியமா பொண்டாட்டி தொல்லை இல்ல. அதனால ஜாலியா இருக்கோம்.

கொரோனா டெஸ்ட் கொடுத்துட்டோமே... என்ன ஆகுமோனு நினைக்காதீங்க. டெஸ்ட்டுல பாசிட்டிவ் வந்தாலும் பிரச்னை இல்ல. இங்க வாங்க ஜாலியா இருங்க. நோய் குணமான பிறகு சந்தோஷமா வீட்டுக்குப் போங்க. புதுசா வந்த நோயாளி ஒருவர் ரெண்டு நாளா அழுதுகிட்டே இருந்தாரு. அவர்கிட்ட நாங்க பேசுன பிறகு நோய் குணமானாலும் போக மறுத்துட்டாரு. `இன்னும் ரெண்டு நாள் எக்ஸ்டன்ட் பண்ணிக் கொடுங்க’னு வடிவேலு மாதிரி காமெடி பண்ணாரு. கொரோனாவுக்கு ஊசியும் இல்ல; மாத்திரையும் கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி குறையிதுனு சொல்றாங்க. எதிர்ப்பு சக்திக்காக மாத்திரையும் இதுவரைக்கும் கொடுக்கல.

கொரோனா நோயாளிகள்

ஆனாலும், காலையில எழுந்த உடனே டீ, பிஸ்கட் அப்புறம் பொங்கல், கபசுர கசாயம் கொடுக்கிறாங்க. பிற்பகல் 11 மணி ஆன உடனே சுண்டல் தர்றாங்க. வீட்டுல பொண்டாட்டிகிட்ட சுண்டல் அவுச்சி கொடுடினு கேட்டா, `போங்க வேற பொழப்பு இல்லையா’னு சொல்லுவா. இங்க அருமையா சுண்டல் தர்றாங்க. ஒரு குறையும் இல்ல. மதியம் 1 மணிக்கெல்லாம் சாப்பாடு, சாம்பார், ரசம், மெயினா முட்டை தர்றாங்க. முனியாண்டி விலாஸ்ல கூட முட்டை 10 ரூபாய். ஆனா, இங்க சும்மா கிடைக்குது. யாரெல்லாம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்படுறீங்களோ, அவங்க எல்லாருமே இங்க வந்து தங்கி நல்லா சாப்பிடுங்க. இந்த நல்ல ஆஃபர் திட்டத்தைப் பயன்படுத்திக்கோங்க. சேர்ந்து பழகுங்க. நன்றி வணக்கம்’’ என்கிறார்கள் கரகோஷமாக.

`உங்களை நீங்களே கலாய்ச்சிகிட்டா... அப்புறம் நாங்க எதுக்கு இருக்கிறோம். தாங்க முடியல குருநாதா’ என்று கதறுகிறார்கள் மீம் கிரியேட்டர்கள்.

திருவாரூரில் மேலும் 132 பேருக்கு கரோனா தொற்று: 4 போ உயிரிழப்பு


திருவாரூரில் மேலும் 132 பேருக்கு கரோனா தொற்று: 4 போ உயிரிழப்பு

29.07.2020

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 132 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 4 போ உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

திருவாரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, 132 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, ஆலங்குடி பகுதியில் 92 போ, நீடாமங்கலம் ஆதங்குடி பகுதியில் 5 போ, மன்னாா்குடி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோந்த 5 நபா்கள், திருவாரூா் பகுதியில் 11 மற்றும் 13 வயதுடைய 2 சிறுமி உள்பட 3 போ, திருத்துறைப்பூண்டி பகுதியில் 4 போ என மாவட்டம் முழுவதும் 132 போ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், கரோனா தொற்றால் 4 இறப்புகள் ஏற்பட்டுள்ளதும் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூலை 21-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட 34 வயது பெண், கரோனா தொற்று காரணமாக ஜூலை 25-ஆம் தேதி இறந்துள்ளாா்.

இதேபோல், 19-ஆம் தேதி சிறுநீரகக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட 64 வயது முதியவா், ஜூலை 22-இல் இறந்துள்ளாா். இவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தலையில் அடிபட்ட நிலையில் ஜூலை 16-இல் சோக்கப்பட்ட 39 வயது நபா், 19-ஆம் தேதி உயிரிழந்தாா். இவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16-ஆம் தேதி சோக்கப்பட்ட திருவாரூா் மாவட்டத்தைச் சோந்த 50 வயது நபா், ஜூலை 19-ஆம் தேதி உயிரிழந்தாா். இவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5 ஆக உயா்ந்துள்ளது. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1548 ஆக உயா்ந்துள்ளது. இதில், 926 போ குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 617 போ சிகிச்சையில் உள்ளனா்.

Dailyhunt

ஆஸ்திரேலிய குடியுரிமைப் பெறுவதில் இந்தியர்கள் முன்னிலை


ஆஸ்திரேலிய குடியுரிமைப் பெறுவதில் இந்தியர்கள் முன்னிலை

29.07.2020

ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் இந்தியர்கள் கடந்த 2019-2020 ஆண்டில் மட்டும் 38,000 பேர் குடியுரிமைப் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 60 சதவிதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் 2,00,000 பேர் குடியுரிமைப் பெற்றுள்ளனர். அதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 38,000 பேர் ஆகும். மற்ற நாட்டினரைக் காட்டிலும் இந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிகளவில் குடியுரிமைப் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அமைச்சர் ஆலன் டட்ஜ் கூறுகையில், "சமூகத்தில் ஒருங்கிணைந்த, பன்முக கலாச்சார நாடாக மாற முக்கியமான ஒன்று மற்ற நாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதாகும். அதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

ஒருவர் ஆஸ்திரேலிய குடிமகனாக மாறுவது என்பது இங்கு வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும் மேலானது. ஆஸ்திரேலியாவின் உரிமைகள், சுதந்திரங்கள், சட்டங்கள் மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்த அவர்கள் உறுதிமொழி ஏற்கிறார்கள். இது எங்கள் நாட்டின் பன்முக கலாச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாகும்" என்று டட்ஜ் கூறினார்.

Dailyhunt

தான், தன் குடும்பம், உறவு, நட்பு என அரசு ஊழியர்கள் இருக்கக் கூடாது: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை


தான், தன் குடும்பம், உறவு, நட்பு என அரசு ஊழியர்கள் இருக்கக் கூடாது: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

29.07.2020

மதுரை: தான், தன் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என்று மட்டும் நினைக்கக் கூடாது, சமூக நலன் குறித்தும் அரசு ஊரியர்கள் சிந்திக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், பேரிடர் காலத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும், அனைத்திலும் முன்களப் பணியாளர்களாக உழைக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்களுககு உயர் நீதிமன்ற கிளை அறிவுறுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ராதானூரைச் சேர்ந்த வாசு, ராதனூர் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் அருகே உள்ள ஓடைக்கல் கிராம உதவியாளராக அண்மையில் இடமாறுதல் செய்யப்பட்டார்.

இதை ரத்து செய்து தன்னை மீண்டும் ராதானூர் கிராம உதவியாளராக நியமிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வாசு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஓடைக்கல் கிராமத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் சாதியினர் தன்னை மிரட்டுவதாக மட்டும் தெரிவித்துள்ளார். இந்த காரணத்தை ஏற்றுக்கொண்டால் தமிழகத்தில் எந்த கிராமத்திலும் மாற்று சாதியினர் பணிபுரிய முடியாது.

அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊதியம் மற்றும் சலுகையில் கரோனா காலத்தில் ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை. ஆனால் தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் வருவாய் இழப்பை சந்தித்து வாழ்க்கை நடத்த போராடி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் அரசு ஊழியர்கள் அனைத்திலும் முன்களப்பணியாளராக இருந்து உழைக்க வேண்டும். அரசு ஊழியர்கள் தான், தன் குடும்பம் மற்றும் உறவினர்களின் நலனை பற்றி மட்டும் சிந்திக்காமல், சமூக நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும். எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Dailyhunt

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்து ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்க வாய்ப்பு?


தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்து ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்க வாய்ப்பு?

பதிவு: ஜூலை 29, 2020 08:10 IST


தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: 

மார்ச் 25-ந்தேதிக்குப்பின் ஜூன் மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்ததால் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூலை 31-ந்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. அதன்பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்திற்கு தளர்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

ஜூன் மாதத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது போல் பிரித்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஜூன்மாதம் பிரிக்கபட்ட மண்டலங்கள் விவரம் வருமாறு

மண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்


மண்டலம் 2 : தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி


மண்டலம் 3: .விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி


மண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை


மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்


மண்டலம் 6 : தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி


மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு


மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ஏன்?


தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ஏன்?


இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணமே முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என கருதுவதுதான்.

இதுதொடர்பாக உலக தங்க கவுன்சில் மேலாண் இயக்குநர் (இந்தியா) பிஆர்.சோமசுந்தரம் கூறியதாவது:

தங்கத்தின் விலை முதல் முறையாக ரூ.50 ஆயிரம் என்ற நிலையை எட்டியுள்ளது. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் முதலீடு செய்கின்றனர். அதேசமயம் தங்கம் வாங்குவோரின் போக்கு முதலீடு என்ற கோணத்தில் மட்டுமே உள்ளது. உள்நாட்டில் தங்கத்தின் விலை உயர்வுக்கு பல்வேறு சர்வதேச காரணிகள் காரணமாக அமைந்துள்ளன. முதலீட்டுக்கான வட்டி விகிதம் குறைந்தது, சர்வதேச வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது, அரசியல் ஸ்திரமற்ற சூழல் ஆகியன தங்கம் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளன.

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்து வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்குப் பிரதான காரணமாகும். கரோனா பாதிப்பு காரணமாக எழுந்துள்ள பாதுகாப்பற்ற சூழலும் விலை உயர்வுக்குக் காரணமாகும். கரோனா ஊரடங்கு காரணமாக எழுந்துள்ள ஸ்திரமற்ற சூழல் ஆகியவையும் தங்கத்தின் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.


தொடர்ந்து உயருமா?

அடுத்த 12 மாதங்களுக்கு தங்கத்தின் விலை ஏறுமுகத்தில்தான் இருக்கும். அமெரிக்க அதிபர் தேர்தல், கோவிட்-19 பிரச்சினையால் எழுந்துள்ள அசாதாரண சூழல், சர்வதேச அரசியல் பதற்ற நிலை ஆகியவை காரணங்களாக அமைந்துள்ளதாக பிஎன் காட்கில் நிர்வாக இயக்குநர் சவ்ரவ் காட்கில் தெரிவித்துள்ளார்.

அடுத்த 12 மாதங்களில் உள்நாட்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.65 ஆயிரத்தைத் தொடும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் (28.34 கிராம்) தங்கத்தின் விலை 2,500 டாலர் வரை உயரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான முதலீடு


இந்தியாவில் திருமணம் சார்ந்த சடங்குகளில் தங்கம் பிரதானமானதாகக் கருதப்படுகிறது. பணவீக்கம் அதிகரிக்கும் ஸ்திரமற்ற சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கும் என்று பலரும் கருதுகின்றனர்.

பணவீக்கத்தை ஈடுகட்டும் வகையிலான முதலீடாக தங்கம் கருதப்படுகிறது. சர்வதேச பொருளாதாரமும் வளர்ச்சி பாதையை நோக்கி நகரும்போது பணவீக்கம் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையும் போது அல்லது அதற்கான தடுப்பூசி விற்பனைக்கு வரும் சூழலில்தான் தங்கத்தின் விலை உயர்வு கட்டுக்குள் வரும் என்று மில்உட் கேன் இன்டர்நேஷனல் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான நிஷ் பட் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பான தேர்வாக முதலிடம் பிடிப்பது தங்கம்தான் என்று ஐஷ்பிரா ஜெம்ஸ் அண்ட் ஜுவல்ஸ்நிறுவன இயக்குநர் விபவ் சரவ் தெரிவித்துள்ளார். நாடுகளின் எல்லைகளிடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல், வர்த்தக போர், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஆகியன தங்கத்தின் மீதான தேவையை அதிகரிக்கச் செய்துள்ளன. குறுகிய காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த சூழலுக்கேற்ப தங்கத்தின் சப்ளை இல்லாததால் அதன் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை ஸ்திரமடைந்த பிறகு மக்கள் அதை ஏற்று வாங்கத் தொடங்குவர். அதன் பிறகு மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.

ஆபரண தங்கம்

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆபரணத் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை குறையும் என்று தங்க நகை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே பொருளாதார தேக்கநிலை காரணமாக வழக்கமான வர்த்தகத்தை விட 20 முதல் 25 சதவீத அளவுக்கே வர்த்தகம் நடைபெற்றது. வேலையிழப்பு, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டியது, ஊரடங்கு உள்ளிட்டவை காரணமாக வர்த்தகம் சரிந்துள்ளது. இந்நிலையில் தங்கத்தின் விலை அதிகரிப்பதால் தங்கம் வாங்குவோரது எண்ணிக்கை மேலும் குறையும் என்று அகில இந்திய ஜெம் அண்ட் ஜூவல்லரி உள்நாட்டு கவுன்சில் தலைவர் அனந்த பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

வரலக்ஷ்மி விரதம் ஸ்பெஷல் : அருளும் பொருளும் தருவாள்; வீட்டுக்கே வருவாள்!


வரலக்ஷ்மி விரதம் ஸ்பெஷல் : அருளும் பொருளும் தருவாள்; வீட்டுக்கே வருவாள்! 

varalakshmi-pooja

அம்பாளைக் கொண்டாடக் கூடிய மாதம், ஆடி. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று மகாவிஷ்ணு அருளினார். அதேபோல், ’மாதங்களில் நான் ஆடி’ என்கிறாள் மகாசக்தி. அப்பேர்ப்பட்ட ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான பண்டிகை... வரலட்சுமி விரதம்.

ஆடி மாத அமாவாசை முடிந்ததும் வளர்பிறை தொடங்கும். இந்த வளர்பிறை நாளில், பெளர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையில் வருவதுதான் வரலட்சுமி விரதம்.

எந்த வீட்டிலெல்லாம் வரலட்சுமி விரத பூஜைகள் செய்யப்படுகிறதோ... அந்த வீட்டுக்கு மகாலட்சுமி வருவாள். வருவதுடன் வீட்டிலேயே இருந்து வாசம் செய்வாள். நம் இல்லத்தில் வாசம் செய்யும் மகாலக்ஷ்மி, சும்மா இருந்துவிடுவாளா? நம்மையும் நம் கஷ்டங்களையும் பார்த்துக் கொண்டு விட்டுவிடுவாளா? இதுவரை இருந்த துக்கங்களையும் கஷ்டங்களையும் போக்கியருள்வாள் தேவி என்கிறது புராணம்.

ஐஸ்வர்ய யோகங்களை அள்ளித் தரும் வரலட்சுமி விரதம், இந்த முறை, வருகிற 31.7.2020 வெள்ளிக்கிழமை வருகிறது. இந்தநாளில், மறக்காமல், இந்த பூஜையைச் செய்யுங்கள். தாலி பாக்கியத்தை நிலைக்கச் செய்து, தாலி வரத்தைத் தந்து மங்கல வாழ்வு தரும் மகத்தான பண்டிகையை மறக்காமல் செய்யுங்கள்.


முதல்நாளான வியாழக்கிழமையன்று, வீட்டைச் சுத்தப்படுத்துங்கள். பூஜையறையைச் சுத்தம் செய்யுங்கள். சுவாமி படங்களை துடைத்து, சந்தனம் குங்குமமிட்டு தயார் செய்து கொள்ளுங்கள். பூஜையறையில் ஏற்றப்படும் விளக்குகளையும், தாம்பாளங்களையும் நன்றாகத் தேய்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

சரி... வரலட்சுமி பூஜை செய்வது எப்படி?

எந்த பூஜை செய்வதாக இருந்தாலும் முதல் வணக்கமும் முதல் வழிபாடும் முதல்வன் விநாயகப் பெருமானுக்குத்தானே! எனவே, பிள்ளையாரை முதலில் வணங்கவேண்டும். ’அப்பா, பிள்ளையாரப்பா. இந்த வரலட்சுமி பூஜையை உன்னை வணங்கிவிட்டுத்தான் ஆரம்பிக்கிறேன். நீதான் பூஜை நல்லபடியா நடக்க துணை இருக்கணும்’ என்று வேண்டிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான். பூஜைக்கு அரணாக இருந்து அருளுவார் பிள்ளையாரப்பன்.

அலம்பி வைத்த தாம்பாளத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பூஜையறையில் கோலமிடுங்கள். இன்னொரு கோலமிட்டு, அதன் மேல் தாம்பாளத்தை வைத்துக்கொள்ளுங்கள். அதில், பச்சரிசியைப் பரப்பிவைத்துக்கொள்ளுங்கள். அரிசியின் மீது கலசத்தை வைக்கவும்.


பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் முதலான மங்கலப் பொருட்களை வைக்கவேண்டும். மாதுளை, ஆரஞ்சு, விளாம்பழம், திராட்சை, மாம்பழம் முதலான பழங்களையும் லட்டு அல்லது வேறு ஏதேனும் இனிப்பு, தயிர், தேன், நெய், கற்கண்டு, கொழுக்கட்டை, பசும்பால் முதலானவற்றை நைவேத்தியத்துக்கு வைத்துக் கொள்ளவேண்டும்.

இப்போது, பூஜைக்குத் தேவையானவை தயாராக இருக்கிறதுதானே.

வீட்டு வாசலில், அதாவது வீட்டு நிலைவாசலில் நின்றுகொண்டு, வெளிப்பகுதியைப் பார்த்து, கற்பூர ஆராதனை காட்டவேண்டும். ‘மகாக்ஷ்மியே. எங்கள் குலவிளக்கே. எங்கள் வம்ச விருட்சமே. கருணை கொண்டவளே... எங்கள் வீட்டுக்கு வா தாயே’ என்று அவளை, தேவியை, லட்சுமியை, மகாலக்ஷ்மியை அழையுங்கள்.

அழைத்தால் வராமலா இருப்பாள் அன்னை? வந்துவிட்டாள். இப்போது பூஜையறைக்குச் சென்று, கலசத்துக்கு எதிரே அமர்ந்துகொண்டு, ஆவாஹனம் செய்து மகாலக்ஷ்மியை மனதார வேண்டுங்கள். கலசத்துக்கு பூக்களாலும் குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யுங்கள். குளிரக்குளிர பூஜைகள் செய்யுங்கள். ஸ்தோத்திரம் சொல்லுங்கள். லலிதா சகஸ்ர நாமம் பாராயணம் செய்யுங்கள்.


இதையடுத்து, நோன்புக்கயிறை கும்பத்தின் மீது அதாவது கலசத்தின் மீது சாற்றுங்கள். லட்சுமி அஷ்டோத்திரம் சொல்வது விசேஷம். தனம், தானியம் முதலான ஐஸ்வரியங்களை பெருக்கும். சுபிட்சத்தைத் தந்தருளும். 108 போற்றிகளைச் சொல்லி, மகாலட்சுமித் தாயாரை ஆராதனை செய்யுங்கள். ‘தாயே, எங்கள் வீட்டில் எல்லா செல்வங்களையும் தந்து, எங்களை இன்னல்களில் இருந்து காத்தருளம்மா’ என்று மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள்.

அடுத்து, பூஜையை நிறைவு செய்யும் தருணம்.

உங்கள் வீட்டில் உள்ள மூத்த சுமங்கலிகள் வீட்டில் இருந்தால், அவர்களுக்கு பிரசாதங்களை வழங்குங்கள். பிரசாதம் கொடுத்துவிட்டு, அவர்களை நமஸ்கரியுங்கள். பிறகு, நோன்புச்சரடை கையில் கட்டிக் கொள்ளுங்கள்.

வரலட்சுமி பூஜையின் போது, மகாலட்சுமியின் பேரருளைப் பெறுவதற்கு ஏராளமான மந்திரங்களும் ஸ்தோத்திரங்களும் ஸ்லோகங்களும் இருக்கின்றன. முக்கியமாக, லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி சகஸ்ரநாமம் சொல்வது மிக மிக நல்லது. வாழ்வில் நல்லதையெல்லாம் தந்தருளும்.

வரம் தரும் வரலக்ஷ்மி விரதத்தை ஆத்மார்த்தமாகச் செய்யுங்கள். அருளும் பொருளும் அள்ளித்தருவாள் அன்னை மகாலக்ஷ்மி!

NEWS TODAY 10.07.2026