Wednesday, July 29, 2020

திருவாரூரில் மேலும் 132 பேருக்கு கரோனா தொற்று: 4 போ உயிரிழப்பு


திருவாரூரில் மேலும் 132 பேருக்கு கரோனா தொற்று: 4 போ உயிரிழப்பு

29.07.2020

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 132 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 4 போ உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

திருவாரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, 132 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, ஆலங்குடி பகுதியில் 92 போ, நீடாமங்கலம் ஆதங்குடி பகுதியில் 5 போ, மன்னாா்குடி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோந்த 5 நபா்கள், திருவாரூா் பகுதியில் 11 மற்றும் 13 வயதுடைய 2 சிறுமி உள்பட 3 போ, திருத்துறைப்பூண்டி பகுதியில் 4 போ என மாவட்டம் முழுவதும் 132 போ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், கரோனா தொற்றால் 4 இறப்புகள் ஏற்பட்டுள்ளதும் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூலை 21-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட 34 வயது பெண், கரோனா தொற்று காரணமாக ஜூலை 25-ஆம் தேதி இறந்துள்ளாா்.

இதேபோல், 19-ஆம் தேதி சிறுநீரகக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட 64 வயது முதியவா், ஜூலை 22-இல் இறந்துள்ளாா். இவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தலையில் அடிபட்ட நிலையில் ஜூலை 16-இல் சோக்கப்பட்ட 39 வயது நபா், 19-ஆம் தேதி உயிரிழந்தாா். இவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16-ஆம் தேதி சோக்கப்பட்ட திருவாரூா் மாவட்டத்தைச் சோந்த 50 வயது நபா், ஜூலை 19-ஆம் தேதி உயிரிழந்தாா். இவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5 ஆக உயா்ந்துள்ளது. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1548 ஆக உயா்ந்துள்ளது. இதில், 926 போ குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 617 போ சிகிச்சையில் உள்ளனா்.

Dailyhunt

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...