Thursday, February 18, 2021

10 நிமிடத்தில், 'பாஸ்டேக்' அட்டைகள் வழங்க ஏற்பாடு

DINAMALAR

10 நிமிடத்தில், 'பாஸ்டேக்' அட்டைகள் வழங்க ஏற்பாடு

Added : பிப் 18, 2021 01:51

சென்னை:சுங்கச்சாவடிகளின் இரு புறங்களிலும், வாகன உரிமையாளர்களுக்கு, 10 நிமிடங்களில், 'பாஸ்டேக்' அட்டைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

.நாடு முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளில், ரொக்க கட்டணத்திற்கு மாற்றாக, மின்னணு முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கும், 'பாஸ்டேக்' நடைமுறை, இம்மாதம், 16ம் தேதி அமலுக்கு வந்தது.இவற்றை, 80 சதவீத வாகன உரிமையாளர்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். எஞ்சியுள்ள, 20 சதவீத வாகன உரிமையாளர்கள், 'பாஸ்டேக்' அட்டை வாங்க ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

இவ்வாறு, 'பாஸ்டேக்' இல்லாமல், சுங்கச் சாவடிகளை கடப்பவர்களிடம், இரண்டு மடங்கு அபராத கட்டணம்வசூல் செய்யப்பட்டு வருகிறது.இதனால், வாகன உரிமையாளர்கள், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கடும் வாக்கு வாதம் செய்து வருகின்றனர். எனவே,சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இரண்டு மடங்கு கட்டணம் வசூலிப்பதை தவிர்ப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பரிந்துரைப்படி, பல்வேறு தனியார் வங்கிகள், பண வங்கிகள், தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் வாயிலாக 'பாஸ்டேக்' அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சுங்கச்சாவடிகளின் இரண்டு புறங்களிலும், குடைகளை விரித்து அமர்ந்து, காலை, 7:00 முதல் இரவு, 8:00 மணி வரை, 'பாஸ்டேக்' அட்டைகளை வழங்க துவங்கி உள்ளனர்.இதற்கென, 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இங்கு, 10 நிமிடங்களில் வாகன உரிமையாளர்களுக்கு, 'பாஸ்டேக்' அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால், 'பாஸ்டேக்' அட்டைகளை வாங்க, வாகன உரிமையாளர்கள் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர்.

மே 3 முதல் 21 வரை பிளஸ் 2 தேர்வு


தமிழ்நாடு

மே 3 முதல் 21 வரை பிளஸ் 2 தேர்வு

Added : பிப் 18, 2021 01:41

சென்னை:தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 3ல் துவங்கி 21ல் நிறைவு பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கும். அந்த மாதத்தின் இறுதி வாரம் வரை நடத்தப்படும்.

இந்த முறை கொரோனா பிரச்னையால் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் பாடங்கள் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மாதம் தாமதமாக பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.'ரிசல்ட்' எப்போதுசில ஆண்டுகளாக தேர்வு கால அட்டவணையுடன் தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை. சட்டசபை தேர்தல் காரணமாக 'ரிசல்ட்' தேதியை முன்கூட்டியே நிர்ணயிக்க முடியவில்லை என பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது


இந்தியா

பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது

Updated : பிப் 18, 2021 04:07

பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்., ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதன்படி நேற்று, பெட்ரோல், டீசல் விலை, லிட்டருக்கு, 25 காசு உயர்த்தப்பட்டது. இதையடுத்து, ராஜஸ்தானில், முதன் முறையாக, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 100.13 ரூபாயாக உயர்ந்தது. நாட்டிலேயே, ராஜஸ்தானில் தான், பெட்ரோலியப் பொருட்களுக்கு மதிப்பு கூட்டு வரி மிக அதிகமாக உள்ளது. அதன் காரணமாகவே, இங்கு பெட்ரோல், டீசல் விலையும் அதிகமாக உள்ளது.

ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், அதிக, 'மைலேஜ்' தரக்கூடிய உயர் வகை பெட்ரோல் விலை, ஏற்கனவே, 100 ரூபாயை தாண்டி விட்டது. எனினும், ராஜஸ்தானில் தான், சாதாரண வகை பெட்ரோல் விலை, முதன் முறையாக, 100 ரூபாயை தாண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகள், ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில், 60 சதவீதத்தை வரிகள் வாயிலாக வசூலிக்கின்றன;

இது, டீசலுக்கு, 54 சதவீதமாக உள்ளது.மத்திய அரசு, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 32.90 ரூபாய், டீசலுக்கு, 31.80 ரூபாய் கலால் வரி வசூலிக்கிறது. இதனுடன், மாநில அரசுகள் விதிக்கும் வரி காரணமாக, பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது.

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு எப்போது?


தமிழ்நாடு

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு எப்போது?

Updated : பிப் 18, 2021 06:29

சென்னை:ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக, பள்ளிகளை முழுமையாக திறந்து, இரண்டு மாதங்கள் பாடங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. கல்லுாரிகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.மாணவர்களுக்கு நடத்தப்பட்ட, கொரோனா சோதனைகளில், புதிய தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், இந்த கல்வியாண்டு, இன்னும் மூன்று மாதங்களில் முடிய உள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், இந்த ஆண்டு ஒரு நாள் கூட, பள்ளிக்கு வராததால், அவர்களுக்கு குறைந்தபட்சம், இரண்டு மாதங்களாவது, நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் என, பெற்றோரும், பள்ளி நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடப்பு கல்வியாண்டில், தங்கள் வகுப்பையும், ஆசிரியர்களையும், நேரில் பார்க்க முடியாத நிலை உள்ளதால், உளவியல் ரீதியாக, மாணவர்கள் உற்சாகமின்றி உள்ளனர். அவர்களை நேரடி வகுப்பில் ஈடுபடுத்துவதால் மட்டுமே, கற்றலில் உற்சாகத்தை ஏற்படுத்த முடியும் என, பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஏப்ரல் அல்லது மே மாதத்துக்கு பின், கோடை விடுமுறை வருவதால், அதற்கு முன், மாணவர்களை, பள்ளிகளுக்கு வரவழைத்து விட வேண்டும் என, ஆசிரியர்களும் விரும்புகின்றனர்.

இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை தரப்பில், கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தினால் மட்டுமே, அனைத்து மாணவர்களையும், பள்ளிகளில் அமர வைக்க முடியும்:இல்லையென்றால், வகுப்பறைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்பதால், சுகாதாரத் துறையின் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. அதன்பின், முதல்வரின் அனுமதியுடன், பள்ளிகள் திறப்பு அறிவிப்பு வெளியாகும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு எப்போது?

'பத்து மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, ஜூனில் பொதுத் தேர்வு நடத்தப்படலாம்' என, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மே 3 முதல், 21 வரை, பிளஸ் 2 தேர்வு நடக்கிறது. அதனால், 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு எப்போது நடத்தப்படும் என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பிளஸ் 2வை பொறுத்தவரை பலர், 'நீட்' மற்றும் ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுத உள்ளதால், அவர்களுக்கு, மே மாதத்துக்குள் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.அதேநேரம், பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, ஜூனில் தேர்வு நடத்தப்படலாம் என, தெரிகிறது. இந்த ஆண்டு தாமதமாக பாடங்கள் நடத்தியுள்ளதால், கல்வி ஆண்டை, ஜூன் வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, பிளஸ் 1 பொதுத் தேர்வு ஜூனில் நடத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி முடிவாகி விட்டால், மே இறுதி வாரத்தில் தேர்வு துவங்கப்பட்டு, ஜூன் இரண்டாம் வாரத்தில் முடிக்கப்படலாம்.

Panel shortlists names for V-C posts

Panel shortlists names for V-C posts

The State government received a total of 973 applications for the post of V-Cs in 10 State universities

City Bureau

Hyderabad  18.02.2021

The search committees for the selection of Vice-Chancellors in 10 State Universities, which were appointed by the State government, have concluded their meetings. On Wednesday, the search committee meetings of Palamuru University, Potti Sreeramulu Telugu University and Jawaharlal Nehru Architecture and Fine Arts University (JNA&FAU) was held to shortlist three names each for appointment as VCs to the universities.

Earlier, committee meetings of Osmania University, Kakatiya University, Telangana University, Satavahana University, Mahatma Gandhi University, JNTU-H, and Dr. BR Ambedkar Open University were also held.

The State government received a total of 973 applications from interested individuals for appointment of V-Cs in the 10 universities.

According to the process, the search committee for each university, after scrutinizing applications, will propose three names to the State government, which, in turn, will send the three names to the Governor, who is also the Chancellor of the State universities. From these three names, the Governor approves one for the appointment to the V-C.

“With completion of search committee meetings, major process has been completed. The appointment of the V-Cs is expected shortly,” an official said.

Tamilisai to be sworn in today

Tamilisai to be sworn in today

18.02.2021

Puducherry: Telangana Governor Tamilisai Soundararajan, who has been given additional charge of Puducherry, will be sworn-in at a function in Raj Nivas here on Thursday. A communication from the government said that she will be sworn in at 9 am. She has been posted as Lt Governor incharge after former IPS officer Kiran Bedi was removed from office. pti

Houses of two medical college owners searched

Houses of two medical college owners searched

Bengaluru:18.02.2021

Income tax officials on Wednesday carried out searches at two private medical colleges and their staff in three cities.

They said the searches were conducted at the houses of medical college owners and employees and that of a minister’s driver in Bengaluru, Mangaluru and Davanagere. The raided colleges were located in Rajajinagar and Chikkabanavara.

Officials said the raids happened in the backdrop of complaints that the colleges were illegally demanding exorbitant money for admission. More educational institutions will be searched, they said. TNN

NEWS TODAY 02.08.2026