Friday, August 28, 2020
[Breaking] NEET-JEE : Cabinet Ministers From 6 States File Review In SC Against Dismissal Of Pleas To Postpone Exams
[Breaking] NEET-JEE : Cabinet Ministers From 6 States File Review In SC Against Dismissal Of Pleas To Postpone Exams: 'The advice of 'Life Must Go On' may have very sound philosophical underpinnings but cannot be a substitute for valid legal reasoning and logical analysis of the various aspects involved in the...
வீட்டு கடன் வாங்கியவர் வங்கி முன் தீக்குளிப்பு
வீட்டு கடன் வாங்கியவர் வங்கி முன் தீக்குளிப்பு
Added : ஆக 27, 2020 23:24
தஞ்சாவூர்: வீட்டுக் கடன் வாங்கியவர், வங்கி முன் தீக்குளித்தார்.தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தைச் சேர்ந்தவர், ஆனந்த், 40; வெல்டர். வல்லம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் வங்கியில், 2015ம் ஆண்டு, வீடு கட்டுவதற்காக, 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
அதில், வட்டியுடன் சேர்த்து, கடன் தொகை, 13 லட்சம் ரூபாயை திருப்பிச் செலுத்தியுள்ளார். இந்நிலையில், கடன் தொகையில், 6 லட்சம் ரூபாய் நிலுவை இருப்பதாக, வங்கி நிர்வாகம், ஆனந்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.நேற்று மதியம், வங்கிக்கு சென்ற ஆனந்த், ''ஏற்கனவே, 13 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளேன்.
மேலும், 6 லட்சம் ரூபாய் நிலுவை இருப்பதாக கூறுவதால், அவகாசம் வேண்டும்,'' என வங்கிப் பணியாளர்களிடம் கேட்டுள்ளார். வங்கி பணியாளர்கள், அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால், வேதனையடைந்த ஆனந்த், வங்கி முன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.வல்லம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சான்றிதழ்களை மறுபதிவு செய்யச் சொல்வது எதற்கு? டாக்டர்கள் கொந்தளிப்பு
சான்றிதழ்களை மறுபதிவு செய்யச் சொல்வது எதற்கு? டாக்டர்கள் கொந்தளிப்பு
Updated : ஆக 28, 2020 01:32 | Added : ஆக 28, 2020 01:16

தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபாரை சேர்ந்த டாக்டர்கள், ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும், மீண்டும் வரும், 31ம் தேதிக்குள் சான்றிதழ்களை மறுபதிவு செய்ய வேண்டும் என, தமிழக மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. இதற்காக, மீண்டும் கட்டணம் வசூலிக்கும் அடாவடியில் கவுன்சில் ஈடுபட்டுள்ளதால், மாநிலம் முழுதும் டாக்டர்கள் கொந்தளித்துள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் மருத்துவ படிப்பை முடிந்தோர், முறைப்படி தமிழ்நாடு மருந்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால் மட்டுமே, மருத்துவ சேவை செய்ய முடியும். இந்த மருத்துவ கவுன்சில், 1914 முதல் செயல்பட்டு வருகிறது. இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 1.25 லட்சம் பேர், மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மருத்துவ சேவையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவ சேவையை அங்கீகரிப்பதோடு, விதிகளை மீறி செயல்படும் டாக்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும், மருத்துவ கவுன்சிலிடம் உள்ளது.அதிரடி சுற்றறிக்கை கடந்த மே மாதம், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் இந்தாண்டு ஜன., 5 வரை பதிவு செய்து, மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள் அனைவரும், தங்கள் எம்.பி.பி.எஸ்., சான்றிதழ், ஆதார் எண், மேற்படிப்புச் சான்றிதழ்கள், புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை, ஆன்லைனில் சமர்ப்பித்து, மின்னணு சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும். மின்னணு சான்றிதழ், மின்னணு அடையாள அட்டை, மின்னணு பெயர் பலகை பெற, 500 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும்.
மின்னணு சான்றிதழ் வழங்கும் நடைமுறை, படிப்படியாக மேற்கொள்ளப்படும். முதற்கட்டமாக, பதிவு எண், 15 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை உள்ளவர்கள், ஆகஸ்ட் 31, 2020க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது சரிதானா?
இந்தச் சுற்றறிக்கை, டாக்டர்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, மூத்த டாக்டர்கள் கூறியதாவது: மறு பதிவு என்பது அவசியம் இல்லாதது. கவுன்சில் குறிப்பிட்டுள்ள பதிவு எண்களைப் பெற்றவர்கள், பெரும்பாலும் மூத்த மருத்துவர்கள். அரசுத் துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்றிருப்பர். இவர்கள், படித்து முடித்த காலத்திலேயே, நிரந்தரப் பதிவு எண் பெற்றவர்கள். அவர்களை மீண்டும் பதிவு செய்ய சொல்வது எந்த வகையில் நியாயம்?
மருத்துவ கவுன்சிலில் உள்ள டாக்டர்களின் பதிவேட்டை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம் என்றால் தவறில்லை. இதற்கு, டாக்டர்கள் சமீபத்தில் உயர்கல்வி பெற்றிருந்தால் அதற்கான சான்றிதழ், இதர அங்கீகாரங்களுக்கான சான்றிதழ்களின் விவரங்கள்; தொடர்ந்து மருத்துவ சேவையில் உள்ளனரா என்பதை தெரிவித்து, ஒரு மின்னஞ்சல் கொடுத்தாலே போதும்; அதை வைத்தே, அவர்களுடைய பதிவேட்டை மேம்படுத்த முடியும். ஆனால் அப்படி நடக்கவில்லை.
அதோடு, தற்போதைய மறுபதிவு நடைமுறையும் மிகவும் சிக்கலாக இருக்கிறது. சான்றிதழ்களை எல்லாவற்றையும், 'ஸ்கேன்' செய்து, அதற்கு உரிய இடத்தில், 'அப்லோடு' செய்ய வேண்டும். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தச் சான்றிதழ்கள் ஏற்கெனவே, மருத்துவக் கவுன்சிலிடம் உள்ளது என்பதுதான். எதற்கு அவற்றை மறுமுறை அப்லோடு செய்ய வேண்டும்? பதிவு செய்த டாக்டர்கள் உயிரோடு உள்ளனரா, இல்லையா என்பதைத் தவிர, இந்தப் பதிவு நடைமுறையால் வேறொரு பயனும் இல்லை.
போலி டாக்டர்கள், மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப் போவதில்லை; செய்யவும் முடியாது. மேலும், இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரம் பெறாத பட்ட மேற்படிப்பைப் படித்துள்ளனரா என்று கண்டுபிடிக்க, இது சரியான வழி அல்ல. பதிவு செய்யும் போது கட்டணம் செலுத்தச் சொல்வதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், மறுபதிவுக்கு கட்டணம் கோரப்படுவது, அடாவடித்தனம் போல உள்ளது.
ஐந்தாண்டுதான்!
மருத்துவ கவுன்சிலின் கோரிக்கையை ஏற்று, ஒருசில மூத்த டாக்டர்கள், தங்கள் விவரங்களைக் கொடுத்து, மறுமுறை பதிவு செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு மின்னணு சான்றிதழ் கிடைத்தபோது ஆச்சரியப்பட்டனர். நிரந்தர பதிவு எண்ணை ஏற்கெனவே பெற்ற டாக்டர்களுக்கு, தற்போது வழங்கப்படும் மின்னணு சான்றிதழ், ஐந்து ஆண்டுகள் வரை மட்டுமே, மருத்துவ சேவை செய்ய அனுமதி அளிக்கிறது. இத்தகைய நடவடிக்கையின் நோக்கம் என்ன?
'டாக்டர்களை ஏதோ ஒருவகையில் கட்டுப்படுத்த வேண்டும்; தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை அண்டியிருக்க வைக்க வேண்டும்' என்பதுதான் நோக்கமா என்று தெரியவில்லை. மக்களுக்கு சேவை என்ற நோக்குடன், பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் மூத்த டாக்டர்களுக்கு, மருத்துவக் கவுன்சிலின் இந்த நடவடிக்கை, அவமானம் அளிக்கும் வகையில் உள்ளது. இதுபோன்ற செயலை மருத்துவ கவுன்சில், மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
'அப்டேட் தான்!'
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர், டாக்டர் செந்தில் கூறியதாவது: தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில், 1.25 லட்சம் டாக்டர்கள் பதிவு செய்துள்ளனர். தற்போது, டாக்டர்கள் தங்களின் தற்போதைய முகவரி; சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை, கிளினிக் முகவரி; புதிதாக படித்த பட்ட மேற்படிப்பு போன்ற விபரங்களை சேர்த்து, 'அப்டேட்' செய்து கொள்ளலாம்.
இதன் வாயிலாக, டாக்டர்களும், பொதுமக்களும் பயன்பெறுவர். இது போன்று, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவ கவுன்சிலில், டாக்டர்கள் புதுப்பித்தல் பணி நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர்-
முழு ஊரடங்கு ரத்தாகுமா? முதல்வர் நாளை முடிவு!
முழு ஊரடங்கு ரத்தாகுமா? முதல்வர் நாளை முடிவு!
Updated : ஆக 28, 2020 02:24 | Added : ஆக 27, 2020 23:32
Updated : ஆக 28, 2020 02:24 | Added : ஆக 27, 2020 23:32
சென்னை; தமிழகத்தில், முழு ஊரடங்கு ரத்தாகுமா; பஸ் போக்குவரத்து துவக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, நாளை(ஆக.,29), முதல்வர் அறிவிப்பு வெளியிட உள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, மாநிலம் முழுவதும் இம்மாதம், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும், மக்களின் வாழ்வாதாரம் கருதி சில தளர்வுகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், பொது போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.
மக்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, 'இ- - பாஸ்' நடைமுறை அமலில் உள்ளது. அதேபோல், ஞாயிறுதோறும், தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பஸ், ரயில் போக்குவரத்து இல்லாததால், மக்கள் இன்னமும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் உள்ளனர். ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். எனவே, ஊரடங்கு எப்போது முடியும் என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மத்திய அரசு, 'இ- - பாஸ்' நடைமுறையை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. அதை ஏற்று, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள், 'இ- - பாஸ்' நடைமுறைக்கு, விடை கொடுத்துள்ளன. அதேபோல் தமிழகத்தில், ஊரடங்கு மற்றும் இ -- பாஸ் நடைமுறை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து முடிவு செய்வதற்காக நாளை, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பின், அரசின் முடிவை முதல்வர் வெளியிடுவார் என தெரிகிறது.
நீலகிரிக்கு 'இ - பாஸ்' எளிதில் கிடைக்காது
நீலகிரிக்கு 'இ - பாஸ்' எளிதில் கிடைக்காது
Added : ஆக 27, 2020 23:11
ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு, சுற்றுலா பயணியர் அதிகம் வருவதால், 'இ -- பாஸ்' விண்ணப்ப பரிசீலனை கடுமையாக்கப்பட்டுள்ளது.தற்போது உள்ள ஊரடங்கு தளர்வின் அடிப்படையில், விண்ணப்பித்த அனைவருக்கும், அரசு இ -- பாஸ் வழங்குகிறது.
இதனால், நீலகிரி மாவட்டத்துக்கு, ஒரு வாரத்தில் மட்டும், 5,000க்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளனர். காட்டேஜ், சொகுசு விடுதிகளில் பலர் தங்கியுள்ளனர்.இங்குள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டாலும், சீதோஷ்ண நிலையை அனுபவிக்க, இ- - பாஸ் தளர்வை சாதகமாக்கி, ஏராளமானோர் நுழைய வாய்ப்புள்ளது
. இரண்டு வாரங்களாக, மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வருவதால், இ -- பாஸ் நடைமுறையை கடுமையாக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''காரணமின்றி மக்கள் வருவதை தடுக்கும் வகையில், உண்மை தன்மையை ஆராய்ந்தபின் தான், இ - பாஸ் அனுமதி வழங்கப்படும். சுற்றுலா பயணிரை தங்க வைக்கும், காட்டேஜ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
15k ‘ghost beneficiaries’ of PM-KISAN scheme in UP
PROBE LAUNCHED
15k ‘ghost beneficiaries’ of PM-KISAN scheme in UP
Deepak.Lavania@timesgroup.com
Agra: 28.08.2020
The district administration in UP’s Firozabad has launched a probe after a survey done by the agriculture and revenue departments couldn’t find at least 15,000 farmers who have been availing benefits under the Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) scheme. The Centre’s ambitious scheme provides farmers a financial assistance of ₹6,000 per year in three equal installments. All those farmers whose total cultivable holding is up to two hectares are eligible. Recently, the Centre had decided to extend the benefit of this scheme to all 14.5 crore farmers, irrespective of the size of their landholding.
During a routine checking of accounts of the beneficiaries, some government officials in Firozabad grew suspicious as a lot of the “farmers” hadn’t given their Aadhaar card details. A probe followed and hundreds of employees of the agriculture and revenue departments hit the streets to meet these beneficiaries at the addresses given in the records. To their shock, the officials could not find 15,000 beneficiaries at their given addresses. And every one of them had already availed the three installments of ₹2,000 each. According to agriculture department officials, there were 2 lakh beneficiaries of the PM Kisan scheme in Firozabad by the end of March 2020.
To get the money, farmers were required to first make an online application. They also had to submit copies of land records, passbook and Aadhaar card. Farmers not having Aadhaar card were also allowed to apply for the scheme.
District agriculture officer Ravikant said, “Around 15,000 beneficiaries of the PM Kisan scheme were found missing during the physical verification process. They have been blacklisted. Bank details of all these people are being investigated. Legal action will be taken against those found involved in malpractices.”
Subscribe to:
Comments (Atom)
SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies
SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies Manash.Go...
-
NBEMS launches official WhatsApp channel for real-time updates The platform will offer timely updates on examinations, accreditation, and tr...
-
முடியும் என்றால் முடியும்! சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும்...


