Friday, August 28, 2020

நீலகிரிக்கு 'இ - பாஸ்' எளிதில் கிடைக்காது

நீலகிரிக்கு 'இ - பாஸ்' எளிதில் கிடைக்காது

Added : ஆக 27, 2020 23:11

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு, சுற்றுலா பயணியர் அதிகம் வருவதால், 'இ -- பாஸ்' விண்ணப்ப பரிசீலனை கடுமையாக்கப்பட்டுள்ளது.தற்போது உள்ள ஊரடங்கு தளர்வின் அடிப்படையில், விண்ணப்பித்த அனைவருக்கும், அரசு இ -- பாஸ் வழங்குகிறது.

இதனால், நீலகிரி மாவட்டத்துக்கு, ஒரு வாரத்தில் மட்டும், 5,000க்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளனர். காட்டேஜ், சொகுசு விடுதிகளில் பலர் தங்கியுள்ளனர்.இங்குள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டாலும், சீதோஷ்ண நிலையை அனுபவிக்க, இ- - பாஸ் தளர்வை சாதகமாக்கி, ஏராளமானோர் நுழைய வாய்ப்புள்ளது

. இரண்டு வாரங்களாக, மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வருவதால், இ -- பாஸ் நடைமுறையை கடுமையாக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''காரணமின்றி மக்கள் வருவதை தடுக்கும் வகையில், உண்மை தன்மையை ஆராய்ந்தபின் தான், இ - பாஸ் அனுமதி வழங்கப்படும். சுற்றுலா பயணிரை தங்க வைக்கும், காட்டேஜ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...