Wednesday, August 26, 2020

சிங்கப்பூரில் 'மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்' 26.08.2020

சிங்கப்பூரில் 'மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்'  26.08.2020 


ஆப்பிள் நிறுவனம் சிங்கப்பூரில் தனது மூன்றாவது புதிய ஸ்டோரை திறக்க உள்ளது. மெரினா பே சாண்ட்ஸில் உலகின் முதல் மிதக்கும் சில்லறை விற்பனை ஸ்டோராக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் இணையதளமான டுடேயின் அறிக்கையின்படி, புதிய ஆப்பிள் ஸ்டோர் மெரினா பே சாண்ட்ஸில் மிதக்கும் கோள வடிவில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள் மெரினா பே சாண்ட்ஸ் சிறந்த படைப்பாற்றலாக இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆர்வத்தையும், கவனத்தையும் ஈர்ப்பதற்காக ஒரு புது முயற்சியாக வித்தியாசமான இந்த ஸ்டோரை உருவாக்கியுள்ளோம் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் சிங்கப்பூரில் தனது முதல் ஸ்டோரை ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள நைட்ஸ்பிரிட்ஜ் கட்டிடத்தில் கடந்த 2017-இல் திறந்தது. ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் அமைந்துள்ள அதன் இரண்டாவது ஸ்டோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திறக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் திறக்கப்பட்ட முதல் ஆப்பிள் ஸ்டோர் 'ஆப்பிள் ஆர்ச்சர்ட் சாலை' என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...