Friday, September 16, 2016

காவிரி பிரச்சினையில் முழு அடைப்பு: தமிழகம், புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; முக்கியத் தலைவர்கள் கைது

Return to frontpage

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது.

சென்னையில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன. தனியார் பள்ளிகள் ஒருசில இயங்குகின்றன. கடைகள் பரவலாக அடைக்கப்பட்டுள்ளது. தனியார் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளன. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர், கொருக்குப்பேட்டை, பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் ரயில் மறியல் நடைபெற்றதால் மின்சார ரயில்கள் தாமதமாகின.



சென்னை கொருக்குப்பேட்டையில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் | படம்: ரகு.

பொதுப் போக்குவரத்து பாதிக்காத வண்ணம் பாதுகாக்க மாநிலம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ரயில் மறியல், பேருந்து மறியலில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யும் வகையில் போலீஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பரவலாகக் கடைகள் மூடப்பட்டிருக்கிறன.

கர்நாடக அரசுக்கு சொந்தமான பள்ளிகள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவித்து சென்னை கோயம்பேட்டில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தனியார் பேருந்துகள் | படம்: ம.பிரபு.



கோயம்பேடு மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது | படம்:ம.பிரபு.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைது:

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். காவேரி விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவேரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.



சென்னை அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்ட கனிமொழி | படம்:எல்.சீனிவாசன்.

இதேபோல் சென்னை அண்ணாசாலையில் கனிமொழி தலைமையில் திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கனிமொழி கைது செய்யப்பட்டார்.

திருமாவளவன் கைது:

சென்னை பேசின்பிர்ட்ஜ் அருகே ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டார். நவஜீவன் ரயிலை மறிக்க முயன்றபோது திருமாவளவனும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.





திருச்சியில் கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ | படம்: எம்.மூர்த்தி

புதுச்சேரியில் இயல்பு நிலை பாதிப்பு:

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் பந்த் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அங்கு அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. அரசுப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. தனியார் பேருந்துகளும் இயங்கவில்லை. ஆட்டோக்கள் பெரும்பாலும் ஓடவில்லை. பெட்ரோல் பங்குகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.



வெறிச்சோடி கிடக்கும் புதுச்சேரி | படம்: செ.ஞானப்பிரகாஷ்

புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக, பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடந்தது. அப்போது கர்நாடக மாநிலத்தில் அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்தும் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தட்டாஞ்சாவடி வழுதாவூர் சாலையில் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் கண்னாடி உடைக்கப்பட்டது.

கோவை நிலவரம்:

கோவை மாவட்டத்தில் பரவலாக பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் சில திறக்கப்படவில்லை. சில பள்ளிகளில் மாணவர்கள் வந்த பிறகு விடுமுறை என அறிவிக்கப்பட்டது. இதனால் பெற்றோர் சிரமத்துக்குள்ளாகினர். அரசுப் பள்ளிகளில் மாணவர் வருகைப் பதிவு மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆட்டோ ஓட்டுநர்க சங்கம் ஆதரவு தெரிவித்திருப்பதால் ஆட்டோக்கள் இயங்கவில்லை. காலை 11 மணி அளவில் கோவை ரயில்வே சந்திப்பில் ரயில் மறியல் நடத்த திட்டமிட்டுள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் காலை 10.30 மணிக்கு கோவை தெற்கு வட்டார ஆட்சியர் முன்னதாக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மதுரை:

மதுரையில் அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கினாலும் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. ஆட்டோக்கள் ஓடவில்லை. தனியார் பள்ளிகளும் ஒரு சில பள்ளிகள் மட்டுமே இயங்குகின்றன. கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருக்கிறது.

தேமுதிகவினர் உண்ணாவிரதம்:

தேமுதிக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பிரேமலதா தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.



சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரேமலதா, தேமுதிகவினர் | படம்:ம.பிரபு.

90 ஆயிரம் போலீஸார்:

மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டம், ரயில், சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதால், தமிழகம் முழுவதும் சுமார் 90 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முக்கிய இடங்களில் அதிரடிப் படையினரும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

படப்பிடிப்பு, காட்சிகள் ரத்து

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தென்னிந்திய நடிகர் சங்கம், பெப்சி, திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு திரைத்துறை அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள், பாடல் பதிவு, டப்பிங், எடிட்டிங் உட்பட அனைத்து பணிகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளில் காலை, மதியக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எதற்காக பந்த்?

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் வன்முறை வெடித்தது. பெங்களூரு உட்பட பல இடங்களிலும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நூற்றுக் கணக்கான வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. தமிழர்களின் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. தமிழர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர்.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் 16-ம் தேதி (இன்று) முழு அடைப்பு, சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அழைப்பு விடுத்தனர். இப்போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, மதிமுக, பாமக, தமாகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமக, விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

பெங்களூரு ஏன் எரிகிறது?



காவிரி வெறும் நீர்ப் பிரச்சினை மட்டும் இல்லை; ஒரு சமூகவியல் பிரச்சினையும்கூட

அவர்கள் படையாய்க் கிளம்பினார்கள். உடல் மண்ணுக்கு, உயிர் காவிரிக்கு என்ற கோஷம் இல்லை அது. எமக்கு மிஞ்சித்தான் தான தர்மம் என்கிற கோஷமாக கன்னட அமைப்புகள், விவசாயிகள் எழுப்பிய கோபக் குரலாகத்தான் ஆரம்பித்தது அது. எங்களுக்கே குடிக்க நீர் இல்லை, விவசாயத்துக்கு இல்லை எனும்போது தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் காவிரி நீரை 15 நாட்களுக்கு (செப். 5-லிருந்து செப்.20 வரை) விநாடிக்கு 15,000 கன அடி நீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எப்படிச் சொன்னது என்கிற அதிர்ச்சியும் கோபமும் கலந்த எதிர்ப்பாகத்தான் முதலில் இருந்தது. காவிரி நதி நீர்ப் பங்கீடு தீர்பாணையத்தின் வாதமே கர்நாடகத்துக்குப் பாதகமானது, தமிழ்நாட்டுக்குப் பட்சமானது என்கிற அவர்களது/ மற்றும் கர்நாடக அரசுகளின் நிலைப்பாட்டில் 40 வருஷங்களுக்கு மேலாக மாறுதல் இல்லை.

நீர் என்பது உணர்வுபூர்வமான விஷயம். வெறுப்பைக் கக்கும் அபாயம் அதனுடன் பிணைந்திருப்பது. ‘தமிழனுக்கு ஒரு சொட்டு நீர் கிடையாது’ என்கிற வட்டாள் நாகராஜின் வாக்கியம் வெறியேற்றுவது. ஆனால், கன்னட அமைப்புகளே திகைக்கும் வகையில் பிரச்சினை சென்ற வாரம் கைமாறி, தீயாய்ப் பரவி, மாநிலத்தை, அதன் கௌரவத்தைப் பொசுக்கிற்று. ஊரடங்குச் சட்டம் போடும் அளவுக்குத் தகவல் தொழில்நுட்பத் தலை நகரமான பெங்களூரு ரணகளமாகிப் பற்றி எரிந்தது. தொலைக்காட்சிப் பதிவுகளைப் பார்க்கும்போது காட்சிகள் காஷ்மீர் பள்ளத் தாக்கில் நடக்கும் கலவரத்தைவிட மோச மானதாக வயிற்றைக் கலக்கிற்று. 40 வாக னங்களுக்கு மேல் தீக்கு இரையாகிப்போனது நம்ப முடியாத அராஜகமாகத் தோன்றிற்று. அவர்களை அடக்க நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் மரணமடைந்தார்கள். அவர்கள் அப்பாவிகள் என்று செய்தித்தாள் சொல்கிறது.

மீள முடியாத துக்கம்

கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு அதிர்ச்சியிலிருந்தும் துக்கத்திலிருந்தும் மீள முடியவில்லை. இப்படிப்பட்ட அராஜகங்களும் குண்டாயிசமும் நான் வளர்ந்த காலத்தில் நடந்ததில்லை. தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையே இருக்கும் காவிரிப் பிரச்சினை நூறு ஆண்டுகள் பழசு. மழை பொய்க்காத காலங்களில் கபினியில் கரைபுரண்டு வழிந்தோடும் உபரி நீரை கர்நாடகம் தாராளமாகத் தமிழ்நாட்டுக்கு அனுப்பும். மேட்டூர் அணை நிரம்பும். விவசாயிகள் மனம் குளிர்வார்கள். மழை பொய்த்துப் போனால், திரும்ப முளைக்கும் இரு மாநிலங்களுக்குமான தகராறு. ஆனால், இப்போது நாம் காண நேர்ந்தது வெட்கக்கேடான அராஜகம், அட்டூழியம்.

அதை ஊதிப் பெரிதாக்குவது அரசியல் மட்டுமல்ல, பெங்களூருவின் பொருளாதார வரை படத்தை அலைக்கழிக்கும் சமூகவியல் காரணங்களும்தான். வன்முறை என்பது கடந்த 30 ஆண்டுகளாகத்தான். ஒரு சிறு பொறியைக் காரணம் காட்டி வெடிக்க ஆரம்பிப்பது. தமிழ்நாட்டுப் பேருந்துகளை சுட்டுப் பொசுக்கியவர்களுக்கும் காவிரிப் பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை என்பதுதான் இதில் இருக்கும் நகை முரண். தலைக்குத் தலை அம்பலமாக சட்டத்தைக் கைக்குள் எடுத்து ராட்சச வெறியுடன் அலைந்தவர்கள் எல்லாம் கன்னட இளைஞர்கள். விவசாயம் பொய்த்துப்போன கிராமப் பகுதிகளிலிருந்து வேலை தேடித் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமான பெங்களூருவுக்கு வந்தவர்கள். ஆட்டோ ஓட்டிகள், பெட்ரோல் பங்கில் வேலை செய்பவர்கள், வேலை கிடைக்காமல் அலைபவர்கள். 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த பெங்களூரு இல்லை இப்போது. எங்கள் குடும்பம் ஐந்து தலைமுறைகளாக கர்நாடகத்தில் வசிக்கிறது. என்னுடைய தாயும் அவருடன் பிறந்தவர்களும் கன்னடம்தான் படித்தார்கள். என்னுடைய பாட்டி பிசிபேளா ஹுளிஅன்னாவையும் ஒப்பட்டுவையும் செய்து, யுகாதியை, கன்னட வருடப் பிறப்பைக் கொண்டாடுவார். தமிழரும் கன்னடியரும் வெகு இணக்கமாக இருந்த காலம். தமிழர்கள் கன்னட சமூகத்துடன் ஒன்றியிருந்த காலம்.

முகம் மாறிய கன்னடம்

இப்போது இருக்கும் பெங்களூரு தகவல் தொழில்நுடபத் தலைமுறைக்கும் கன்னடி யருக்குமே ஒட்டு உறவு இல்லை. தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி கன்னட முகத்தையே மாற்றிவிட்டது. பூங்காவிலும் மால்களிலும் திரையரங்குகளிலும் கன்னட மொழி காதில் படுவதில்லை. அவர்களுக்கு விளங்காத ஆங்கிலமும் இந்தியும்தான் ஒலிக்கிறது. வறண்ட கிராமங்களிலிருந்து வேலை தேடி பெங்களூரு வந்து வேலை கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்கள் எல்லா வேலைவாய்ப்புகளையும் வெளி மாநிலத்தவர் அபகரித்துவிட்டதாகக் கருத ஆரம்பித்துவிட்டார்கள். தங்கள் வயதொத்த வாலிபர்கள், யுவதிகள் மாதத்துக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் சம்பளம் வாங்குவதாகக் கேள்விப்படுகிறார்கள். பெங்களூருவின் நிலத்தையெல்லாம் வெளியூர் ஆட்கள் வாங்கி, அடுக்குமாடி கட்டுகிறார்கள். தகவல் தொழில்நுடப இளைஞர்கள் வேலைக்குச் சேர்ந்த ஓர் ஆண்டுக்குள் ஃப்ளாட் வாங்கு கிறார்கள். கப்பல் போல வாகனம் வைத்துக் கொள்கிறார்கள். அவர்களது வருகையால் அடுக்குமாடிகள் பெருகிவிட்டன. நிலம், நீர் வறண்டுவிட்டது. குடிசைப் பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்கும்போது, பணம் உள்ளவர்களுக்கு டாங்கரில் நீர் செல்கிறது.

கோபத்தின் வடிகாலா அராஜகம்?

பெங்களூருவின் ஒரு பகுதி அக்னிகுண்ட மாக மாறிவருவதைச் சமூகவியலாளர்கள் கவலையுடன் கவனித்துவருகிறார்கள். கன்னட நடிகர் ராஜ்குமார் இறந்த அன்றும் மறுநாளும் இப்படித்தான் ஒரு வெறியாட்டம் நடந்தது. துக்கம் கோபமாக, வெறியாக உருப்பெற்றது. பன்னாட்டு நிறுவனங்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. தமிழ்நாட்டு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. நான் அப்போதுதான் சென்னையிலிருந்து அங்கு குடிபெயர்ந்திருந்தேன். தமிழ்நாட்டு பதிவுஎண் உடைய என்னுடைய காரை காரேஜில் மூடி வைக்க வேண்டியிருந்தது.

இந்த வெறியர்களுக்கு எந்த உணர்வு பூர்வமான விஷயமும், அவர்களது உள்ளார்ந்த கோபத்துக்கு வடிகாலாகிவிடுவதுதான் சோகம். இது வெறும் நீர்ப் பிரச்சினை இல்லை. ஒரு சமூகவியல் பிரச்சினை. அதன் தீவிரத்தை உணராமல் கன்னட அமைப்பு களும் அரசுகளும் அரசியல் செய்தால் கர்நாடகத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கே ஆபத்து. ஜனநாயகப் பண்புகளுக்கு ஆபத்து!

- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்,
குப்பைகளைத் தொட்டியில் போடுவதற்காக காரில் கொண்டு செல்கிறார் தாயுமானசாமி. | படங்கள்; எஸ்.கிருஷ்ணமூர்த்தி.



காரில் சென்று குப்பை அகற்றும் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி: 81 வயதிலும் சோர்வடையாமல் சேவை- மனநிறைவு கிடைப்பதாக பெருமிதம்

குப்பைக்கூளம் இல்லாத சுத்தமான சுற்றுப்புறத்தில் வாழ்வது இன்று அரிதாகிவிட்டது. பொருளாதா ரத்தை அடிப்படையாகக் கொண்ட இன்றைய இயந்திர வாழ்க்கையில் நிற்க நேரமில்லாமல் ஓடும் மனிதர்கள், சுற்றுப்புறத்தையும், குப்பையையும் கண்டுகொள்வது இல்லை. அக்கறை காட்டுவதும் இல்லை. குப்பை அள்ளுவது நமக்கான வேலை இல்லை என கடந்து செல்கின்றனர். சுத்தம் என்பது, ஒருவர் அணியும் ஆடையில் இல்லை. அவரின் வீடு, சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வதிலேயே இருக் கிறது என்கிறார் மதுரை எல்லீஸ் நகர் வசந்தம் குடியிருப்பைச் சேர்ந்த 81 வயது ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி தாயுமானசாமி.

எல்லோரையும்போல் இவர் சுற்றுப்புறத்தில் கிடக்கும் குப்பை யைக் கண்டு ஒதுங்கிச் செல்ல வில்லை. தினமும் காலையில் துப் புரவுத் தொழிலாளராக மாறிவிடு கிறார். கையில் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு அவர் வசிக்கும் வசந்தம் குடியிருப்பில் துப்புரவுத் தொழிலாளர் போல் குப்பையை அகற்றுகிறார். அடைப்பு ஏற்பட்ட சாக்கடைக் கால்வாய்களில் கையை விட்டுச் சரி செய்கிறார். பாதாளச் சாக்கடையில் குச்சிகளை விட்டு, தடையின்றிக் கழிவு நீர் செல்ல வைக்கிறார். அன்றாடம் இந்த வேலைகள் முடிந்ததும் சேகரித்த குப்பையை, ஒரு வாளியில் கொட்டி காரில் எடுத்துக்கொண்டு குடியிருப்பின் மூலையில் இருக்கும், குப்பைத் தொட்டியில் கொட்டுகிறார்.

இப்பணியை ஏதோ ஒருநாள், இரண்டு நாள் இவர் செய்ய வில்லை. ஓய்வு பெற்ற 1994-ம் ஆண்டு முதல் செய்து வருகிறார். கடந்த சில வாரங்களாக அவரால் சரியாக நடக்க முடியவில்லை என்றாலும், வீட்டில் முடங்கிவிடாமல் வாக்கர் வைத்துக்கொண்டு வழக்கம் போல் குப்பையை அப்புறப்படுத்தி அவர் வசிக்கும் வசந்தம் குடியிருப்பை வசந்தமாக வைத்து வருகிறார்.

இதுகுறித்து தாயுமானசாமி கூறியதாவது: “எனது தாயார் ஆசிரியராக இருந்தவர். இருந் தாலும் விடுமுறை நாட்களில் வயலில் போய் களை எடுப்பார், நாற்று நடுவார். அவரே குப்பையைக் கொண்டு போய் குப்பைக் கிடங்கில் கொட்டுவார். அவரிடம் கற்றுக்கொண்டதுதான் இந்தப் பழக்கம். எங்கள் குடியிருப்புப் பகுதியில் மொத்தம் 107 வீடுகள் இருக்கின்றன. துப்புரவுத் தொழிலாளர்கள் ஒழுங்காக வராததால் தெருக் களில் குப்பை தேங்கும். மாநக ராட்சியில் புகார் செய்தேன். குப்பையை அகற்ற யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல் நானே குப்பையை அகற்றத் தொடங்கினேன். இதில் ஒரு மனநிறைவு கிடைத்ததால் தொடர்ந்து செய்கிறேன். இதற்காக மற்றவர்களின் நன்றியை, பாராட்டை எதிர்பார்ப்பதில்லை.

நான் குப்பையை அகற்றி, காரில் கொண்டுபோய் கொட்டுவதைப் பார்த்து சிலர், இவருக்கு ஏன் இந்த தேவையில்லா வேலை என சொல்வார்கள். எதிரே வரு பவர்களில் சிலர் வெட்கப்பட்டு ஒதுங்கிப் போவார்கள். சிலர், மனம் திருந்தி குப்பையைக் கீழே கொட்டத் தயங்கி அவர்களும் என்னைப் போல் குப்பைத் தொட்டியில் போடத் தொடங்கிவிட்டார்கள். இந்த மனமாற்றம்தான் தேவை. உடனடியாக இது நடக்காது. மெதுவாகவே நடக்கும். அவரவர் வேலைகளைச் சரியாக செய்தாலே சுற்றுப்புறம் தானாகவே சுத்தமாகிவிடும். குப்பையைத் தினமும் அகற்றுவதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. என்னுடைய வயது, முதுமைதான் தடுக்கிறது'' என்றார்.
Admission supervisory committee cancelled the admissions in three medical colleges in Kerala

TIMES OF INDIA

THIRUVANATHAPURAM: Admission supervisory committee for professional colleges in Kerala headed by Justice J M James has cancelled the MBBS admissions in three self-financing medical colleges for lack of transparency in selection of candidates.

The colleges that suffered the heat of the committee areKannur medical college, Karuna medical College and Mount Zion medical college. According to an order issued by the committee here on Thursday, the MBBS admissions carried out by these colleges for 2016-17 academic year stand cancelled for flouting all transparency norms. The colleges have failed to provide flawless online facility for admission and did not furnish full details of the candidates they have admitted to the colleges. However, these colleges can admit students, if they activate their online admission facility and complete the admission procedures transparently by September 19.

The committee had earlier set September 13 as the dead line for colleges to publish the list of candidates applied and selected for the MBBS admission to each of the colleges. Upon inspecting the website of the colleges, the committee has come to the conclusion that the above said three medical colleges have flouted all transparency norms, while three other colleges did not furnish their admission details fully.

Following this, principals of Travancore medical college, P K Das medical college and Sree Gokulam Medical collegs have been asked to furnish all the admission details on today itself ie, September 15, for avoiding further action by the commission.

MBBS admissions to 3 private SFMCs cancelled



The New Indian Express


THIRUVANANTHAPURAM: The Admission Supervisory Committee for Professional Colleges in Kerala headed by Justice J M James on Thursday cancelled the admission to MBBS seats in three private self- financing medical colleges (SFMCs).

Karuna Medical College, Kannur Medical College and Mount Zion Medical College are the three colleges which face action for lack of transparency in candidate selection.

The James Committee also found that three more colleges-- Travancore Medical College, P K DAS Medical College and Sree Gokulam Medical colleges-- had not furnished the admission details fully. These colleges have been asked to furnish the details on September 15 itself.

According to the order of the Committee, the MBBS admissions carried out by Karuna, Kannur and Mount Zion Medical colleges stand cancelled for flouting all norms and compromising the entire admission procedure.

The medical colleges have been directed to call only online applications, the last date being September 19. The Committee stated that the medical colleges have compromised the entire admission procedure by not complying with the directives issued.


Besides, the colleges also flouted various judgments of the High Court and the Supreme Court.

These are constitutional violations and outright rejection of statutory provisions as well, it said. In the case of Sree Gokulam, PK DAS and Travancore Medical Colleges, the committee said that all the required information was not available.

The principals of these colleges have been directed to ensure that all information were made available on their websites, failing which actions as per provisions of Act XIX of 2006 will be resorted to.

The Committee has asked the respective colleges to furnish details of the total individual online applications received by them for admissions to MBBS for 2016-17 fiscal, total list of eligible applicants, complete list of rejected candidates from online applications with reasons for rejection, list of eligible candidates for admission under management and NRI quota prepared strictly based on NEET rank list.

Tuesday, September 13, 2016

உடலைக் காக்கும் உணவு விதிகள்

பரபரப்பான வாழ்க்கையில் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும் செல்கள் வளர்ச்சியடைவதற்கும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாகிறது. அந்த உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனம்கொள்ள வேண்டியது அவசியம். ஆரோக்கியமான இயற்கை உணவுகளைத் தேர்வுசெய்தல், உடலில் சேர்ந்துள்ள அதீத கொழுப்பைக் குறைக்கும் வழிகள், சாப்பிட்ட பிறகு செய்யக் கூடாத விஷயங்கள் உள்ளிட்ட பொதுவான உணவு விதிகள் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள்

இயற்கை வைத்தியத்தில் தாதுஉப்புகள் அதிகம் உள்ள இளங்கீரைகள், புதிதாய்ப் பறித்த இளங்காய்கறிகள், பழங்கள் போன்றவை முதல் தரமான உணவுகளாகும்.


புரதப் பொருட்கள், மாவுப் பொருட்கள், சர்க்கரைப் பொருட்கள், கொழுப்புப் பொருட்கள் உள்ள தானியங்கள், பயிறுகள், கிழங்குகள், பருப்புகள் ஆகியவை இரண்டாம் தரமான உணவுகள். இந்த இரண்டையுமே நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.







சத்தான உணவைவிட ஜீரணிக்கும் உணவே உன்னத உணவு. நோயை உண்டாக்காமல் ஜீரணிக்கக்கூடிய உணவையே உட்கொள்ள வேண்டும்.

உங்கள் உடலைப் பற்றிய புரிதல் அவசியம்.வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்கள் பற்றி தெரிந்துவைத்திருத்தல் அவசியம்.நோய் இருப்பின், அதன் தீவிரம், நோயின் வகை, தவிர்க்க வேண்டிய உணவுகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பழங்கள், காய்கறிகள், கீரைகள், தேங்காய், முளைகட்டிய தானியங்கள், முளைகட்டிய பயறுகள் ஆகியவை உடலுக்கு ஏற்ற உணவுகள்.



தினமும் காலை உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளுக்குத் தேவையான முழு சக்தியையும் காலை உணவே அளிக்கிறது. எந்தக் காரணம்கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

இரவு மிகக்குறைந்த அளவே சாப்பிட வேண்டும். இரவு முடிந்தவரை அரிசி சாப்பாடைத் தவிர்த்து, கோதுமை, ரவை, ராகி, சிறுதானியங்கள் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. இதனால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.





சாப்பாட்டுக்கு இடையே தண்ணீர் குடிக்கக் கூடாது. இதனால், வயிற்றில் சுரக்கும் ஜீரண அமிலத்தின் செயல்திறன் குறையும். செரிமானம் தாமதப்படும்.

அதிகமான அல்லது குறைவான கலோரிகள் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். நமது அன்றாட வாழ்வில் நாம் செய்யும் வேலைகளைப் பொறுத்து நமது உடலுக்குத் தேவையான கலோரிகள் பயன்படுத்தப்படும். பாலினம், வயது, உடல் எடை, பரம்பரை, செரிமானமாகும் நேரம், தினசரி செய்யும் வேலை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட கலோரிகள் தேவைப்படும்.






கொழுப்பைக் கரைக்க சில வழிமுறைகள்

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்தாலே. உடல் எடை வெகுவாகக் குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு, சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் ஆகியவை உதவுகின்றன. இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். இதனால், விரைவிலேயே உடலில் உள்ள கொழுப்புக் குறைந்து, உடல் அழகான வடிவம்பெறும். சுரைக்காய் வயிற்றுச்சதையைக் குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால், சுரைக்காயை வாரத்துக்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வாழைத்தண்டு சாறு பருகலாம். அரும்கம்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.

காலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும்.

உணவருந்திய பிறகு செய்யக் கூடாத செயல்கள்

சாப்பிட்டதும், ரத்த ஓட்டம் நமது வயிற்றுப் பகுதிக்குத் தான் செல்ல வேண்டும். சாப்பிட்டவுடன் வெந்நீரில் குளிப்பதால் சூடான, உடலைக் குளிரிச்சியாக்க, ரத்த ஓட்டம் கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால், வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உணவு சரியாகச் செரிக்க முடியாமல் போய்விடும். எனவே, குளித்து அரை மணி நேரம் கழித்துச் சாப்பிடலாம் அல்லது சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிநேரம் கழித்துக் குளிக்கலாம்.

சாப்பிடும்போதோ சாப்பிடும் முன்போ பழங்கள் சாப்பிடக் கூடாது. வயிற்றில் வாயுவை உருவாக்கும். சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களைச் சாப்பிடுவது நல்லது.

சாப்பிட்டதும் தேநீர் குடிக்கக் கூடாது. தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது, உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து, உணவு செரிப்பதைச் சிக்கலாக்கிவிடும்.

சாப்பிட்டதும் புகை பிடிக்கக் கூடாது. 'உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்குச் சமமான விளைவை ஏற்படுத்தும்' என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

சாப்பிட்டதும் இடுப்பு பெல்ட்டைத் தளர்த்தக் கூடாது. தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்ட பிறகு இடுப்பில் உள்ள பெல்ட்டை தளர்த்திவிடுவார்கள். இதனால், சாப்பிட்ட உணவு உடனடியாகக் குடலுக்கு சென்று விழுவதால், சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.

சாப்பிட்டதும் நடக்கக் கூடாது. சாப்பிட்ட உடனே நடந்தால், உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால், உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால், சாப்பிட்டும், சத்துகள் நம் உடலில் சேராது.

சாப்பிட்டதும் தூங்கக் கூடாது. சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் உருவாக வழிவகுக்கும்.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

Dailyhunt

வெற்றி வேண்டுமா? இந்த 5 மந்திரங்களை மறக்கவேண்டாம்! #MorningMotivation


தன்னம்பிக்கை, சுய முயற்சி, முறையான பயிற்சி, பணியில் ஒழுக்கம் இந்த நான்கும் இருந்தால் நிச்சயம் எந்தவொரு விஷயமும் சாத்தியமானதே. நம் வாழ்க்கைக்கான ரோல் மாடல்களை இணையத்தில் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை, நம் ஊரில், நம் அருகில் எவ்வளவோ பேர் உதாரண புருஷனாக வாழ்ந்துகாட்டியிருக்கிறார்கள். ஆனால் நாம் மட்டும் தான் சின்ன சின்ன தோல்விகளை கூட சந்திக்க திராணியில்லாமல் முடங்கிப்போய் விடுகிறோம். சோர்வை விட்டொழித்து மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, நீங்கள் விரும்பிய விஷயத்தை அடைய ஐந்து மந்திரங்களை மனதில் பதிய வையுங்கள்.


1. இடர்பாடுகள் தான் வாய்ப்புகள் : -

எதைச் செய்தால் வெற்றி கிடைக்கும் என கண்டுபிடிப்பதை விட, எதைச் செய்தால் வெற்றி கிடைக்காது என அறிவது புத்திசாலித்தனம். மின்சாரம் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த எடிசன் கிட்டத்தட்ட பத்தாயிரம் முறை தோல்விகளை சந்தித்தாராம். அவரது நண்பர் ஒரு நாள் அவரைச் சந்தித்தார். ஏனப்பா ? இவ்வளவு முயற்சி எதற்கு? எல்லாமே வீண் தானே, அதற்கு உருப்படியாக வேறு எதாவது செய்யலாமே என அட்வைஸ் செய்ய, " என்ன செய்தால் மின்சாரம் வரும் என்பதை மட்டும் தான் இன்னும் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் இந்த பத்தாயிரம் மாதிரிகளில் நிச்சயம் மின்சாரம் வராது என கண்டுபிடித்திருக்கிறேன். ஆக நான் பத்தாயிரம் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறேன்" என்றாராம் எடிசன். அது தான் ஆட்டிடியூட். தோல்வி என்பதன் அர்த்தத்தை வெற்றிக்கு தவறான வழியை கண்டறிந்துள்ளோம் என புரிந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான்.


2. என் இலக்கை நானே தீர்மானிப்பேன் :-

உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு உயரத்தை எட்ட வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வெற்றியோ, தோல்வியோ எல்லாத்துக்கும் நீங்கள் தான் பொறுப்பு. சாக்கு போக்கு சொல்வதை விட்டுவிட்டு உங்கள் இலக்கை தீர்மானித்து அதற்கான கதை, திரைக்கதை எல்லாம் பக்காவாக தயார் செய்து உங்களை நேர்மையாக இயக்குங்கள்; உங்கள் வாழ்க்கை நிச்சயம் வெற்றி அடையும்.


3. நல்ல எண்ணங்களே நனவாகும் ; -

எண்ணம் போல்தான் வாழ்வு என்பதை முன்னோர்களை பல விதங்களில் சொல்லியிருக்கிறார்கள். அது நிஜம். பாசிட்டிவ் மைண்ட்செட் தான் 'ஸ்பீடு' ஊக்க மருந்து. பல சமயங்களில் பாசிட்டிவ் மைண்ட்செட்டில் எக்கச்சக்க சாதனைகளை பலர் புரிந்திருக்கிறார்கள். எனவே உங்களை தயவு செய்து நம்புங்கள். நீங்கள் வெற்றி தேவதையின் கைகளில் தவழத் தகுதியானவர் என்பதை நினைவில் வையுங்கள்.

4. நேரமே வரம் : -

'நன்றே செய் அதை இன்றே செய்' இதையும் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்றது தான். நல்ல விஷயங்களை செய்ய எப்போதும் நேரம், காலம் பார்க்காதீர்கள். எந்தவொரு முடிவையும் விரைவாக எடுத்துச் செயல்படுங்கள். ஒரு விஷயத்தை புதிதாக முயற்சித்து தோல்வியடைந்தால் கூட பரவாயில்லை, முயற்சிக்காமல் வெறுமனே தரையை தேய்க்க வேண்டாம். இந்த உலகத்தில் எதையும் யார் வேண்டுமானாலும் வாங்கி விட முடியம், ஆனால் நேரம் மட்டும் தான் சாதி, மதம், பணக்காரன், ஏழை என பாகுபாடு இல்லாமல் எல்லாருக்கும் சமமாக இருக்கிறது.நேரத்தை சரியாக பயன்படுத்துபவனே வெற்றியாளன் ஆகிறான்.


5. எதையும் கவனமாக தேர்ந்தெடுங்கள் :-

எந்தவொரு விஷயத்தையும் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் தேவை. நம்மால் தான் எதுவும் சாத்தியமே என நடுக்கடலில் குதிப்பதோ, பத்தாவது பெயிலாகி விட்டு மருத்துவ கல்லூரி வாசலில் நிற்பது போன்ற அபத்தங்களை செய்துவிடக் கூடாது. நீங்கள் எதுவாக விரும்பினாலும், அதன் பின் உள்ள சாதக பாதக அம்சங்களை ஆராய வேண்டும். வெற்றிக்கான வழியை பக்காவாக ஸ்க்ரிப்ட் செய்ய வேண்டும். அதன் பின் தான் களத்தில் இறங்க வேண்டும். இப்போது, இந்த ஐந்து விஷயங்களை ஒன்ஸ்மோர் படியுங்கள்.

- பு.விவேக் ஆனந்த்

Monday, September 12, 2016

Posted Date : 22:29 (09/09/2016)


#iphone7

: ஆப்பிள் எடுத்த முடிவு சரிதானா?


ஆப்பிளின் புதிய ஐபோன்களோடு, சில சர்ச்சைகளும், சிக்கல்களும் சேர்ந்தே வெளியாகியிருக்கின்றன. அதாவது ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன்களில் “ஹெட்போன் ஜாக்” எனப்படும் பாடல் கேட்பதற்கான வொயரை சொருகும் 3.5 மிமீ போர்ட்டை நீக்கியுள்ளது. இதற்குப் பதிலாக, வயர்லெஸ் தொழில்நுட்பத்தை முன்னிறுத்தும் வகையில் “ஏர்பாட்ஸ்” என்னும் வயர்லெஸ் ஹெட்போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு பக்கம் எதிர்ப்பும், மறுபக்கம் ஆதரவும் இருக்கின்றன. ஆப்பிள் செய்தது சரிதானா?
இதற்கு ஆப்பிள் சொல்லும் காரணம் என்ன?

ஐபோன்களிலிருந்து ஹெட்போன் ஜாக் நீக்கப்படும் தகவலை அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பில் சில்லேர் கடந்த வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அறிவித்தார். அப்போது “கடைசியாக இருப்பது ஒரே வார்த்தைதான்: நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் மூலம் முன்னேறி, நம்மை முன்னேற்றிடும் புதிய விஷயங்களை செய்வதே அது” என்றார். நூறு வருடங்களுக்கும் மேலான, ஆடியோ ஜாக் எல்லாம் பழசு. இனி எல்லாம் வயர்லஸ்தான். அதற்கு இதுவே முதல்படி எனக் கூறியிருக்கிறது ஆப்பிள். அதற்காக ஆப்பிள் சொல்லும் காரணங்கள் இவைதான்.
1. "ஒவ்வொரு வருடமும் மக்கள் புதுப்புது சிறப்பம்சங்களை எங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். எனவே தான் ஐபோன்களின் வடிவமைப்பு, வாட்டர் ப்ரூப், சிறந்த பேட்டரி போன்றவற்றை பூர்த்தி செய்வதற்காக ஹெட்போன் ஜாக்கை நீக்கியுள்ளோம்"
2. மேலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும்போது இதுபோன்ற கருத்துக்கள் சகஜம்தான் எனக்கூறும் ஆப்பிள், இன்னும் சில வருடங்களில் மக்களிடையே நாம் ஏன் இத்தனை வருடமாக வயர்லெஸ் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுமென்றும் சவால்விடுகிறது.



இனி பழைய “ஹெட் போன்களை” ஐபோனில் பயன்படுத்த வழியே இல்லையா?

உங்களின் பழைய ஹெட்போன்களையும் புதிய ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ்சில் பயன்படுத்தலாம். ஆனால் அதை நேரடியாக இல்லாமல் அதற்குரிய “அடாப்டர்” மூலம் லைட்னிங் போர்ட் எனப்படும் நாம் மொபைலை சார்ஜ் ஏற்றும் பகுதியில் இணைத்து பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் அந்த அடாப்டர், ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் வாங்கும்போது இலவசமாக வழங்கப்படும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஆடியோ ஜாக்கை நீக்கியதால் ஏற்படும் பிரச்சனைகள்:



நமது பழைய ஹெட் போன்களை பயன்படுத்தி பாடல் கேட்க வேண்டுமென்றால் நம்மிடம் எப்போதும் அந்த அடாப்டர் இருக்க வேண்டியது அவசியம். நம்மில் பலபேர் மொபைலை சார்ஜ் ஏற்றிக்கொண்டே பாடல் கேட்பது வழக்கம். ஆனால் அது இனி சாத்தியமில்லை. ஏனெனில் அந்த அடாப்டர் இணைக்கப்பட்டிருப்பது நாம் மொபைலை சார்ஜ் ஏற்றும் “லைட்னிங் போர்ட்” ஆகும். எனவே ஒரே சமயத்தில் பாடல் கேட்டுக்கொண்டே மொபைலை சார்ஜ் ஏற்றுவது சாத்தியமில்லை. ஆடியோ ஜாக்கை நீக்கியதற்காக ஆப்பிள் நிறுவனம் சொல்லும் காரணங்களை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆடியோ ஜாக்கோடும், ஐபோனை விட சிறந்த பேட்டரி திறனும், வாட்டர் ப்ரூப் உள்ள மொபைல்களை மற்ற நிறுவனங்கள் ஏற்கெனவே அறிமுகப்படுத்திவிட்ட நிலையில் இந்த விளக்கம் போதுமானதாக இல்லை.


மேலும் நாம் பயன்படுத்தும் மொபைல், டேப்லட், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற மின்னணு பொருட்களில் அத்தியாவசமான தேவை என்று நாம் நினைக்கும் வசதிகளை ஆப்பிள் நீக்குவது இது முதல் முறையல்ல. அவ்வாறு ஆப்பிள் நீக்கியவற்றில் முக்கியமான விஷயங்களை கீழே காணலாம்.



பிளாப்பி டிஸ்க்:

1976 முதல் 1998 வரை பிளாப்பி டிஸ்க் என்னும் கணினிகளுக்குக்கிடையே தகவல் பரிமாற உதவும் முக்கியமான வழி. அப்போது பயன்பாடு உச்சத்தில் இருந்தது. அதில் அதிகபட்சம் 1.4 எம்பி தகவல்களை மட்டுமே சேமிக்க முடியும் என்பது வேறு கதை. ஆனால் 1998-ம் ஆண்டு ஆப்பிளின் ஐமேக் ஜி-3 என்னும் கணினி அறிமுகப்படுத்தப்பட்டபோது, பிளாப்பி டிஸ்க் நீக்கப்பட்டு நாம் தற்போது பயன்படுத்தும் யூஎஸ்பி சேர்க்கப்பட்டது. அப்போது பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் இப்போது நாம் பயன்படுத்தும் யூஎஸ்பிக்கு அதுவே தொடக்கம்.

டிவிடி டிரைவ் :

இன்றுவரை நாம் பயன்படுத்தி வரும் டிவிடிக்களை கிட்டத்தட்ட ஆப்பிளின் ஐமேக் கம்ப்யூட்டர்கள் மற்றும் மேக்புக் லேப்டாப்களிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னரே நீக்கிவிட்டனர். குறைந்து வரும் டிவிடி பயன்பாடு, அதிகரித்து வரும் கிளவுட் கம்ப்யூட்டிங் பயன்பாடு மற்றும் கணினியின் வடிவமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்களுக்காக டிவிடி டிரைவ் நீக்கப்பட்டதாக அப்போது, கூறப்பட்டது.


இப்போதும் கூட, "ஆப்பிள் எடுக்கும் இதுபோன்ற அதிரடி முடிவுகளால்தான் இன்னும் முன்னணியில் இருக்கிறது. இதுதான் ஆப்பிளின் ஸ்டைலே!" என்கிறது ஒரு க்ரூப். "அப்படி இயர்போன் போர்ட்டை நீக்கும் அளவுக்கு, அப்படி என்ன அதில் குறை இருந்தது?" என்கிறது ஒரு க்ரூப். இது ஆப்பிளின் துணிச்சலா? சறுக்கலா? வழக்கம் போலவே, காலத்தின் கையில்தான் விடை இருக்கிறது!

- ஜெ.சாய்ராம்,
(மாணவப் பத்திரிகையாளர்)
நாங்கள் 'பாரதி' ஆனது இப்படித்தான்!

பாரதி’ என்ற பெயர் சொல்லும் போதே மீசை முளைக்கும் உணர்வு உண்டாகிறதல்லவா? மகாகவி பாரதியாரின் 95-வது நினைவுதினம் இன்று . 'பாரதி' என்று இயற்பெயர் வைக்கப்பட்டவர்கள் ஒருபுறம் என்றால் தன் பெயரையே பாரதி என்று மாற்றி வைத்துக் கொண்டோ அல்லது பாரதி என்கிற பெயரை தன்னோடு இணைத்துக் கொண்டவர்களையும் பார்க்க முடிகிறது. இந்த வீரக்கவிஞனின் பெயரை சேர்த்துக் கொண்ட பிரபலங்கள் தங்கள் பெயர்க்கதையை சொல்கிறார்கள் இங்கே!



இயக்குநர் பாரதிராஜா:
எனது சகோதரி பாரதியின் பெயரையும், சகோதரர் ஜெயராஜ் பெயரில் இருந்து ராஜாவையும் சேர்த்து 'பாரதிராஜா' என பெயரை வைத்துக்கொண்டேன். பாரதியாரின் கவிதைகளும் போராட்ட குணங்களும் எனக்கும் ரொம்பவே பிடிக்கும்.



கவிஞர் பழநிபாரதி:
என்னுடைய அப்பா கவிஞர் சாமி பழனியப்பன், கவிஞர் பாராதிதாசனின் மாணவராகவும், உதவியாளராகவும் இருந்தார். பாரதியார் மீதும் அதிக பற்றுக்கொண்டிருந்தார். அதனாலேயே எனக்கு 'பாரதி' என பெயர் வைத்தார். தவிர எங்கள் வீட்டில் எல்லோருக்குமே தமிழ் பெயர்தான். பள்ளி பருவத்திலேயே அப்பாவின் பெயரின் சுருக்கமாக 'பழபாரதி' என பெயரை மாற்றிக்கொண்டேன். ஒருமுறை கவிஞர் அறிவுமதிதான், 'பழனிபாரதி' என உன் பெயரை மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்குமே என சொல்ல, பின்னர் நானும் 8-ம் வகுப்பு படிக்கும்போது 'பழனிபாரதி' என பெயரை மாற்றிக்கொண்டேன்.

என்னுடைய சிறுவயதில் ஒருநாள் அப்பாவுடன் வெளியே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, 'கவிதை எப்படி எழுதணும்'னு அப்பாவிடம் கேட்டேன். சொல்கிறேன் எனச் சொன்னவர், வீட்டுக்கு வந்ததும் பாரதியார், பாரதிதாசன் இருவரின் கவிதை நூல்களை எனக்குக் கொடுத்தார். படித்துப்பார்...புரியாதவைகளை மட்டும் கேள் எனச் சொன்னதோடு, இருவரின் வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகச் சொன்னார். அப்படி சிறுவயதிலேயே எனக்கும் பாரதியார், பாரதிதாசன் இருவரின் மீது மிகுந்த பற்று ஏற்பட்டது. அதனுடன் அவர்களைப்போல தவறான பாதையில் செல்லாமல், மனநிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.



பாரதி பாஸ்கர்:
மலைமகளைக் குறிக்கும் வகையில் 'ஹேமா' என பெரிய அக்காவிற்கும், அலைமகளைக் குறிக்கும் வகையில் 'மஹாலட்சுமி' என சின்ன அக்காவிற்கு, கலைமகளை குறிக்கும் வகையில் 'பாரதி' என எனக்கும் பெற்றோர் பெயர் வைத்தார்கள். பாரதியார் மீது அதிக பற்றுக்கொண்டிருந்தார், என் அம்மா. அதனாலேயோ அல்லது 'பாரதி' என பெயர் வைத்து மறைமுகமாக கல்வி, கலைகளில் நான் திறமைமிக்கவளாக வளர வேண்டும் என நினைத்தும், மறைமுக கட்டையாகவும் அன்போடும், நம்பிக்கையோடும் பெற்றோர் எனக்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.

வாழ்வின் மிக கொடிய துயரங்களையும், மிகத்தூய்மையான வறுமையையும், சந்தோஷங்களையும் சந்தித்துள்ளார், பாரதியார். ஆனால், எந்த சூழலிலும் அறமற்ற செயல்களுக்கு தன்னை சமரசம் செய்துகொள்ளாமல், அஞ்சாமல், நேர்மையான வழியில், போராளியாகவே வாழ்ந்துள்ளார். குறிப்பாக சகோதரி நிவேதிதாவை சந்தித்த தருணத்தில், 'உங்களில் பெரும்பாலானோர் மனைவிகளை அடிமைகளாக வைத்துக்கொண்டு, நீங்கள் சுதந்திரத்திற்காக போராடினால் என்ன பயன் கிடைக்கப்போகிறது' என அவர் கூறிய வார்த்தைகள்தான் பாரதியின் வாழ்க்கையையே மாற்றிப்போட்டது. அதன் பின்னர்தான் முழுமூச்சாக பெண்களுக்காக நேரடியாகவும், தன் படைப்புகளின் வாயிலாகவும் போராடியதுடன், தன் மனைவி செல்லம்மாவை தலை நிமிர்ந்து நடக்கவும், தைரியமாக வாழவும் ஊக்கம் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் நான் எழுந்ததும் முதலில்,
'இனி என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதுங் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!' என்ற பாரதியின் பாடலை வாசித்துவிட்டுதான் அடுத்த செயல்பாட்டைத் தொடங்குவேன்.



பாரதி கிருஷ்ணகுமார்:
பாரதிதான் என் வாழ்வின் ஆதர்ஷம்; ஆசான். என்னுடைய இத்தனை வருட மேடைப் பேச்சுகளில் ஒன்றில்கூட பாரதியின் வரியை, பாரதியின் வாழ்வைக் குறிப்பிடாமல் அந்தப் பேச்சினை முடித்தது இல்லை. இந்த இயலாமையை நான் மகிழ்ச்சியோடு ஏற்கிறேன். 1989 அல்லது 90 என்று நினைக்கிறேன். பாரதி விழாவில் குன்றக்குடி அடிகளார் முன்னிலையில் பாரதியைப் பற்றி பேசினேன். பாரதியின் கவிதை வரிகளுக்கு நான் கூறிய விளக்கங்களைக் கேட்ட அடிகளார், 'இனி பாரதி கிருஷ்ணகுமார் என்றே அழைக்கலாமே' என்றார். என் பேச்சுக்கான அங்கீகாரமாக நான் உணர்ந்தாலும், மிகப் பெரிய ஆளுமையை என் பெயரோடு சேர்த்துக்கொள்வதற்கு தயங்கினேன். ஆனால் எழுத்தாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோவில் பட்டி, சாத்தூர் நண்பர்கள், கலை இரவுக்கு பேச அழைக்கும்போது பாரதி கிருஷ்ணகுமார் என்றே அழைப்பிதழில் குறிப்பிட்டனர். அப்போதும் எனக்குள் தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. பிறகு சினிமாவில் பணிபுரியும்போது, ஏற்கனவே கிருஷ்ணகுமார் எனும் பெயரில் இயக்குநர் இருந்ததால் டைட்டிலில், ஏதேனும் புனைப்பெயர் வைக்க, ஆலோசனை தந்தார்கள். ஆனால் பெற்றோர்கள் வைத்த என் பெயரை மாற்ற விருப்பம் இல்லாததால் பாரதி கிருஷ்ணகுமார் என்று வர சம்மதித்தேன். அப்போதும் தயக்கம் விடைபெறவில்லை. கிட்டத்தட்ட ஆறாண்டுக்கால உழைப்பில் பாரதியார் பற்றி 'அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி' என்ற நூலை எழுதிய பிறகே தயக்கம் நீங்கி பெருமிதம் கொண்டேன்.
இதிலுமா போலி?

போலி சான்று, போலி ஆசிரியர், போலி டாக்டர், போலி பல்கலைக்கழகம் வரிசையில் இப்போது போலி வங்கி நடத்தியதாக தர்மபுரியில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே கும்பல், நாமக்கல்லிலும் போலி வங்கி நடத்தி ரூ.50 லட்சத்துக்கு மேல் சுருட்டியுள்ளனர்.நல்லவேளை 6 மாதத்திற்குள் பிடிபட்டதால் ஏமாந்தவர்கள் எண்ணிக்கை குறைவு. பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பின்னர் பல பெயர்களில் பன்னாட்டு வங்கிகள் வருகை அதிகரித்தது. தற்போது பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் கிளைகள் 50 ஆயிரத்துக்கு மேல் நாடு முழுவதும் செயல்படுகிறது. தடுக்கி விழுந்தால் ஒரு வங்கி என்ற நிலை உருவாகி விட்டது. போதாக்குறைக்கு கடன் கொடுப்பதாக கூறி, வீட்டு வாசலிலேயே வங்கி ஊழியர்கள் தவம் கிடக்கும் நிலையில் சாதாரண மக்களுக்கு போலி, நிஜத்தை கண்டறிவதில் குழப்பம் இருப்பது இயற்கை. ஆனால் போலி வங்கி நடத்திய விவகாரம் அரசு துறையின் அதிகாரிகளுக்கே தெரியாமல் போனது தான் அதிர்ச்சியளிக்கிறது.

பொதுவாக ஒரு முன்னணி வங்கி நிறுவனம் கூடுதலாக ஒரு கிளையை ஏதாவது ஒரு கிராமத்தில் தொடங்குவதாக இருந்தாலும் அதை முறைப்படி ரிசர்வ் வங்கிக்கு தெரியப்படுத்தி அனுமதி பெறவேண்டும். அதோடு உள்ளூரில் மாவட்ட நிர்வாகம், பஞ்சாயத்து அனுமதி போன்றவையும் கட்டாயம். ஆனால் தர்மபுரியில் கலெக்டர் அலுவலகத்தின் அருகிலேயே 6 மாதங்களாக போலி வங்கி செயல்பட்டது. உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் முதல் அருகிலேயே செயல்பட்ட போட்டி வங்கி நிர்வாகத்தை கூட ஏறெடுத்து பார்க்காதது தான் விந்தையிலும் விந்தை. எல்லா சட்டமும் தெரிந்தவர்களுக்கே போலி வங்கி நடத்தப்பட்ட விவகாரம் தெரியாதபோது, அப்பாவி மக்களை நொந்து கொள்வதில் எந்த பலனும் இருக்கப்போவதில்லை.

போலிகள் விஷயத்தில் பொதுமக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது. மோசடியில் ஈடுபடும் கும்பல் எந்த ரூபத்திலும் வரக்கூடும். சமீபகாலங்களில் அடுத்தவர் வங்கி கணக்குகளில் இருந்து இணையங்களை பயன்படுத்தியும், போலி ஏடிஎம் கார்டை பயன்படுத்தியும் திருடும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. அதன் மற்றொரு ரூபம் தான் போலி வங்கி கலாச்சாரம். புற்றீசல் போல் பெருகி வரும் தனியார் வங்கிகள் குறித்த விழிப்புணர்வு அப்பாவி மக்களுக்கு குறைவு என்பது தான் மோசடி கும்பலுக்கு சாதகமான அம்சம். மேலும் அதன் பின்னணி குறித்த விஷயங்களை அறிந்து கொண்டு பணத்தை முதலீடு செய்வது அவசியம். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுவோரும் இருக்கவே செய்வர். ஏமாறாமல் இருப்பது நமக்கு உத்தமம்.
விபரீத காதல்

தமிழகத்தில் ஒருதலைக் காதலால் இளம் பெண்கள் வெட்டிக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. நுங்கம்பாக்கம் இன்ஜினியர் சுவாதி பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் நிலையத்திலே வெட்டிசாய்க்கப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவம் மக்கள் மனதைவிட்டு அகலாத நிலையில் ஒருதலைக் காதலுக்காக விழுப்புரம் நவீனா, கரூர் சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா, தற்போது விருத்தாசலம் புஷ்பலதா என கடந்த 3 மாதத்தில் மட்டும் 4 பெண்கள் விலை மதிக்க முடியாத தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.
தான் விரும்பிய பெண் தனக்கு கிடைக்காவிட்டால் ஆசிட் வீசி அவளது முக அழகை கெடுக்கும் கொடூர செயல்களில்தான் கடந்த காலங்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது ஒரு படி மேலே போய் தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் வெட்டி சாய்க்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அரிவாளால் கழுத்தை அறுத்தும், தீவைத்து எரித்தும், கட்டையால் அடித்தும் கொலை செய்யும் கலாசாரம் இளைஞர்களிடையே அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

காதலுக்காக தாடி வைப்பதும் தற்கொலை செய்துகொண்டதும் பழங்கதையாகிவிட்டது. தற்போது பழி உணர்வுதான் மேலோங்கி வருகிறது. இளைஞர்களின் இந்த கொடூர போக்கிற்கு சினிமா மற்றும் சமூக ஊடகங்களும் ஒரு காரணமாகிவிட்டது. தங்களது காதலை பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இளைஞர்கள் இருக்கின்றனர். பெண்களுடைய ஆசாபாசங்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. ஒருதலைக் காதலில் ஈடுபடும் இளைஞர்கள் கண்டிப்பாக மாற வேண்டும். அதுதான் தமிழ் சமூகத்துக்கு பெருமையை தேடித்தரும். இதுவரை நடந்த நான்கு பலி சம்பவங்கள் மூலம் தாழ்ந்து போய்க்ெகாண்டிருக்கும் தமிழ்நாட்டின் பாரம்பரிய பெருமையை மீண்டும் நிலைநிறுத்துவது இளைஞர்களின் கையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தளம் புதிது: அல்ஜீப்ரா விதிகள்


கணித மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையிலான இணையதளங்கள் வரிசையில் வருகிறது ‘அல்ஜீப்ரா ரூல்ஸ்' இணையதளம். அல்ஜீப்ரா பாடத்தில் பயிற்சி பெறுவதற்கு உதவுவதற்கு என்றே பிரத்யேகமாகப் பல‌ தளங்களும் இருக்கின்றன என்றாலும், இந்தத் தளம் மிகவும் விஷேசமானது.

அல்ஜீப்ரா பாடத்துக்குத் தேவையான அடிப்படையான விதிகளை மட்டும் இந்தத் தளம் பட்டியலிடுகிறது. அடிப்படை விதிகள் அவற்றுக்கான உதாரணத்துடன் விளக்கப்பட்டிருப்பதுடன், எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் அவற்றின் தன்மைக்கேற்ப அழகாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு விதியாக சங்கிலித் தொடர் போல எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

அல்ஜீப்ராவில் படிப்ப‌வர்களுக்கு மட்டுமல்ல அல்ஜீப்ரா என்றால் எட்டிக்காயாக நினைப்பவர்களுக்கும்கூட இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி:http://algebrarules.com/index.php

சிங்குர் தரும் படிப்பினைகள்...


THE HINDU

கடந்த 10 ஆண்டுகளாக இந்த பெயரை அறியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு பல படிப்பினைகளை உணர்த்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்குர் பகுதியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆலை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. ரத்தன் டாடாவின் கனவு திட்டமான நானோ கார் (ரூ. 1 லட்சம் விலை) ஆலை அமைக்க மாநில அரசு காட்டிய 6 இடங்களில் டாடா மோட்டார்ஸ் தேர்வு செய்தது சிங்குரைத்தான். அப்போது மேற்கு வங்க முதல்வராயிருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான அரசு டாடா மோட்டார்ஸுக்கு 997 ஏக்கர் நிலத்தை வழங்கியது.

விவசாய நிலமாக இருந்ததை தொழிற்சாலை கட்டுவதற்காக ஒதுக்கியதை அப்போது எதிர்க்கட்சியாய் இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது.

ஆலைக்கு நிலம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து 26 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார் மம்தா பானர்ஜி.

2008-ம் ஆண்டு சிங்குர் ஆலையிலிருந்து நானோ கார்கள் சந்தைக்கு வரும் என டாடா நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆலைப் பணிகள் ஏறக்குறைய 70 சதவீதம் முடிவடைந்துவிட்ட நிலையிலும் போராட்டத்தின் தீவிரம் குறையவேயில்லை. இதையடுத்து 2008-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி சிங்குர் ஆலைத் திட்டத்தைக் கைவிடுவதாக ரத்தன் டாடா அறிவித்தார். அத்துடன் இந்த ஆலை குஜராத் மாநிலம் சனந்த் நகருக்கு இடமாற்றம் செய்வதாக அக்டோபர் 7-ம் தேதி அறிவித்தார்.

சிங்குரிலிருந்து டாடா நிறுவனம் வெளியேறியபோதிலும் நிலம் டாடா மோட்டார்ஸ் வசமே இருந்தது. நிலத்தை திரும்ப அளிக்க வேண் டும் என மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால் அந்த நிலம் தங்களுக்குத் தேவை என டாடா மோட்டார்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இழுபறியாக நீடித்து வந்த இந்த வழக்கு கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. நிலத்தை திரும்ப அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நிலத்தை 10 வாரங்களுக்குள் அளவிட்டு உரிய விவசாயிகளிடம் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

நிலத்தை அளவிடும் பணியை மாநில அரசு தொடங்கிவிட்டது. தனது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி இது என்றும், மன நிம்மதியோடு இறப்பேன் என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் இந்த ஆலைக்கென டாடா நிறுவனம் ரூ. 1,400 கோடி வரை முதலீடு செய்துள்ளது. டாடா நானோ உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் 13 நிறுவனங்கள் முழுமையாக தங்களது ஆலையை இங்கு அமைத்திருந்தன. 17 நிறுவனங்களின் ஆலைகள் பல்வேறு கட்ட நிலையில் இருந்தன. அவை அனைத்தும் குஜராத்துக்கு இடம்பெயர்ந்தன. உதிரிபாக தயாரிப்பாளர்கள் மட்டும் ரூ.338 கோடி முதலீடு செய்திருந்தனர். அவை அனைத்தும் அப்படியே பாதியில் முடங்கியது.

நிலத்தை திரும்ப ஒப்படைப்பதால் டாடா நிறுவனத்துக்கு நிலத்துக்கு அளித்த தொகை திரும்பக் கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால் அந்தத் தொகை நிறுவனம் மேற்கொண்ட முதலீட்டுக்கு நிவாரணமாக அமையாது.

இந்தியாவில் பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. சில பல பகுதிகளில் ஆலைகள் அமைக்கவும் நிலங்கள் வாங்கப்பட்டு அவற்றில் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த அளவுக்கு எங்குமே பிரச்சினை ஏற்பட்டது கிடையாது. இது போன்ற எதிர்ப்பும் உருவானது கிடையாது.

விவசாய நிலங்களை அரசு கட்டாயப்படுத்தி வாங்கினால் அதன் விளைவு இப்படித்தான் இருக்கும் என்பதற்கு சிங்குர் வழக்கு ஒரு சிறந்த உதாரணம். அதே சமயத்தில் இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் என வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த தீர்ப்பு அவர்களுக்கு தவறான சமிக்ஞையை தோற்றுவிக்கவும் வாய்ப்புள்ளது.

சிங்குர் வழக்கு அரசியல்வாதி யான மம்தாவுக்கு பெரும் வெற்றியாக இருக்கலாம், தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பின்னடைவாக இருக்க லாம். ஆனால் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் அரசிடம் தெளி வில்லை என்பதையே இது காட்டு கிறது. அதே நேரத்தில் விவசாயத்தை அழித்து தொழிற்சாலை உருவாவதை ஏற்க முடியாது என்பதையும் தீர்ப்பு உணர்த்தியுள்ளது.

Sunday, September 11, 2016


விமானத்தில் தனியே உலகம் சுற்றிய இளைஞர்

உலகிலேயே மிகக் குறைந்த வயதில் 15 நாடுகளுக்குத் தனியாக விமானத்தை ஓட்டிச் சென்றவர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் படைத்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த அந்த 18 வயது இளைஞரின் பெயர், லக்லான் ஸ்மார்ட். இவர், தனியாக விமானத்தை ஓட்டிக்கொண்டு உலகின் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என விரும்பினார்.

அதன்படி, ஆஸ்திரேலியாவின் மருச்சிடோர் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜூலை 24–ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கினார் ஸ்மார்ட்.

15 நாடுகளைச் சேர்ந்த 24 இடங்களுக்கு தனது சிறிய விமானத்தில் பறந்து சென்ற அவர், சமீபத்தில் தனது தாய்நாடு திரும்பினார். அப்போது ஸ்மார்ட்டுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்மார்ட், 18 வயது, 7 மாதம், 21 நாட்களில் விமானத்தைத் தனியாக ஓட்டி இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த மாத் குத் மில்லர், உலகின் குறைந்த வயதில் தனியாக அதிக நாடுகளுக்கு விமானத்தில் பறந்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரராக இருந்தார். அவரை ஸ்மார்ட் முந்திவிட்டார்.

இவர், 45 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 2 மாதங்களில் கடந்து இச்சாதனையைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி லக்லான் ஸ்மார்ட், தான் சாதனை படைப்பதற்கு உறுதுணையாக இருந்த தமது பெற்றோர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். மேலும், இந்தத் தருணம் தமது வாழ்வில் மிகவும் மறக்க முடியாதது ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பறந்தபோது தனது ‘திரில்லிங்’ அனுபவம் பற்றி ஸ்மார்ட் கூறும்போது, இந்தோனேசியா அருகே சென்று கொண்டிருந்தபோது தொலைத்தொடர்பு தகவல் சரியாகக் கிடைக்காததால் விமானம் மலை மீது மோதவிருந்தது, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன் என்றார்.

சோதனைகளைக் கடந்துதானே சாதனை படைக்கணும்!
ஆக்கிரமிப்புகளுக்கு அதிகாரிகள்தான் பொறுப்பு

DAILY THANTHI

ஆதிகாலத்திலிருந்து தமிழ்நாட்டை மன்னர்கள் ஆண்டபோதும், ஆங்காங்கு ஜமீன்தாரர்கள் நிர்வாகத்திலும் சரி, தொடர்ந்து ஆங்கிலேயர் ஆட்சியிலும், பாசனவசதிக்காகவும், குடிநீர்வசதிக்காகவும், ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊருணிகள் அமைக்கப்பட்டன. நதிவளம் அதிகமில்லாத தமிழ்நாட்டில் பெய்கிற மழைநீரை இத்தகைய நீர்நிலைகளில் சேமித்துவைத்ததால்தான் பேருதவியாக இருந்தது. அந்தகாலத்திலேயே இவ்வளவு நீர்நிலைகள் இருந்தபோது, பெருகிவரும் ஜனத்தொகைக்கேற்ப இந்தகாலத்தில், புதிதுபுதிதாக நீர்நிலைகளை உருவாக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆனால், அவ்வாறு புதிய நீர்நிலைகள் உருவாக்கப்படாமல், தற்போது இருக்கும் நீர்நிலைகளிலேயே ஏராளமான ஆக்கிரமிப்புகள் உருவாகிவிட்டன. நீர்நிலைகளின் ஓரங்களில் முதலில் கட்டிடக்கழிவுகள், குப்பைகளைக்கொட்டி தரையாக்கிவிட்டு, அடுத்தமாதங்களுக்குள்ளேயே பட்டா போட்டுவிற்கும் கொடிய செயல்கள் எல்லா இடங்களிலும் அரங்கேறுகிறது. அவ்வப்போது நீதிமன்ற தீர்ப்புகள், பத்திரிகைகளில் படம்போட்டு காட்டும் காட்சிகள் வழங்கப்பட்டாலும், ஆக்கிரமிப்புகள் மட்டும் குறைந்தபாடில்லை. இந்த நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளில் மட்டும் சாதி, மத வேறுபாடின்றி, அதிலும் மிகவும் முக்கியமாக அரசியல்கட்சிகள் வேறுபாடில்லாமல் ஒற்றுமையாக இருப்பதை பார்க்க முடிகிறது.

சென்னையில், சேலையூரிலுள்ள ராஜகீழ்ப்பாக்கம் ஏரி பாதியாக சுருங்கி, 3 புதிய வார்டுகள், நகராட்சியில் உருவாகும் வகையில் வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. இந்த வீடுகளுக்கெல்லாம் சாலைவசதி, குடிநீர்வசதி, மின்சாரவசதி, ரேஷன் கார்டு என எல்லாவசதிகளையும் அதிகாரிகள் வேகமாக செய்துதந்துவிட்டனர். ‘‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’’ என மாநிலம் முழுவதிலும் இவ்வாறு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டாபோட்டு கொடுப்பதும், அனைத்து அடிப்படைவசதிகளை செய்வதும் ஏன்?, அனைத்திற்கும் பின்னணியாக ஊழல்தான் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. சென்ற ஆண்டு சென்னையில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட வந்த மத்தியகுழு அதிகாரிகள், சென்னையிலுள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளைக்கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஆர்.மகாதேவன், சேலம் மாவட்டத்திலுள்ள 105 நீர்நிலைகளில் இவ்வாறு ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டாபோட்டு கொடுத்த அதிகாரிகளை எவ்வாறு பதில் சொல்லவைக்கலாம்? என்ற பொறுப்புகடமையை அவர்கள்மீது சுமத்தவேண்டியது குறித்து தமிழக அரசின் வருவாய்த்துறை தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த நீர்நிலைகளில் எல்லாம் புதிதுபுதிதாக வீடுகள் தோன்றுவதற்கு ஆக்கிரமிப்பு வசதிகளுக்கு அதிகாரிகள் பட்டாபோட்டு கொடுத்திருப்பது நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தவுடன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், சென்னை வெள்ளம் தொடர்பாகவும், சென்னை நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்பதற்காகவும் தொடரப்பட்ட வழக்கில், அடையாறு கரைகளில் 28 குடிசைப்பகுதிகள் ஆக்கிரமிப்பால் தோன்றியதுதான், சென்னை நகருக்குள் பாய்ந்த வெள்ளத்துக்கு காரணம் என்றும், நீர்போக்குவரத்து வழியாக தேசிய நீர்வழி சட்டத்தின்கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டதையும் பட்டவர்த்தனமாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் இறுதித்தீர்ப்பை வழங்கும்போது, சென்னை, சேலம் மாவட்டத்தோடு நிறுத்திவிடாமல், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்று சமுதாயம் எதிர்பார்க்கிறது. தமிழக அரசும் இதுதொடர்பாக உடனடியாக தீவிரநடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாட்டிலுள்ள கால்வாய்கள், ஏரிகள், வாய்க்கால்கள், குளங்கள், குட்டைகள் எல்லாவற்றையும் சர்வே எடுத்து, எங்கெங்கு ஆக்கிரமிப்பு இருக்கிறதோ?, அங்கு உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்கவேண்டும். இதில் அரசின் கடமை மட்டுமல்ல, அடுத்தமாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள், அதாவது கிராமப்பஞ்சாயத்து, நகரப்பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து அமைப்புகளிலும் இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதே தங்களின் முதல்கடமையாக எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும். முதல்கட்டமாக தமிழ்நாட்டிலுள்ள 39 ஆயிரத்து 202 ஏரிகளும், அதன் முழுப்பரப்பில் இருக்கிறதா? என்பதை சர்வேசெய்து, எவ்வளவு ஆக்கிரமிப்பு இருக்கிறது? என்பதை தமிழக அரசின் பொதுப்பணித்துறையும் கணக்கிடவேண்டும். மாநிலத்தின் சராசரியான ஆண்டு மழை 911.60 மி.மீ. தண்ணீரை முழுமையாக சேகரித்துவைக்க வேண்டுமெனில், அனைத்து நீர்நிலைகளும் முழுகொள்ளளவும் இருக்கும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும்.

இப்போ நல்லா இருக்கீங்களா?- 108-ன் அக்கறை


ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டதால் மனைவியின் சடலத்தை இறுதிச் சடங்குக்கு 10 கி.மீ., தூரத்துக்குத் தோளில் சுமந்து சென்றார் கணவர். சிகிச்சைக்காக மகனைத் தோளில் சுமந்து சென்றார் தந்தை.

- இந்த இரண்டு சம்பவங்களும் ஆந்திரத்தைத் தாண்டியுள்ள ஒடிசாவில் நடைபெற்றவைதான்.

இதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்த போது, “ஹலோ நாங்க 108-ல இருந்து பேசுறோம். எங்களோட ஆம்புலன்ஸ் சேவையை நீங்க பயன்படுத்தியிருந்தீங்க. இப்போ உங்க உடம்பு நல்லாயிருக்கா” என அக்கறையுடன் கேட்டது அந்தக் குரல். திடீர் அழைப்பு தந்த ஆச்சரியத்துடன், “நான் நலமா இருக்கேன், நன்றி” என்று சொன்னேன். 108 ஆம்புலன்ஸ் அமைப்பிடம் இருந்து எனக்கு வந்த அழைப்பு அது.

நாட்டின் ஒரு பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்படுகிறது. இன்னொரு பகுதியில் இப்படி விசாரிப்புகள். இதுதான் இந்தியா.

ஒரு பெரிய ஹால். நூற்றுக்கும் மேற்பட் டோர் தொலைபேசி அழைப்பு களுக்குப் பதில் தந்தபடி பரபரப்பாக இருக்கிறது அந்த இடம். இவர்கள் ஒவ்வொருவரும் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் அலுவலர்கள் (இ.ஆர்.ஓ.). தமிழகம் முழுவதும் இருந்து ஒரு நாளுக் குச் சராசரியாக இவர்களுக்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை 25,000.

பதற்றமும் நெகிழ்ச்சியும்

“ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகளை அட்டெண்ட் பண்ணுவோம். எதிர்முனையில் பேசும் நபர் பெரும்பாலும் அழுகையும் பதற்றமுமாகவே பேசுவார். அவர்களைப் புரிந்துகொண்டு, ஆசுவாசப்படுத்தித்தான் தகவல்களைப் பெற வேண்டும். பிறகு அருகில் இருக்கும் ஆம்புலன்ஸை அனுப்பி வைப்போம். இங்கு வேலைக்குச் சேர்ந்து ஐந்தரை ஆண்டுகள் ஆகின்றன. ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்திக்கொண்ட பலரும் தங்கள் உறவினரைக் காப்பாற்ற, உரிய நேரத்தில் வாகனம் அனுப்பியதற்காகத் திரும்ப அழைத்து நன்றி சொல்லும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையில்லை” என்கிறார் ஒரு இ.ஆர்.ஓ.

பலன்பெறும் கர்ப்பிணிகள்

தமிழகத்தில் அரசு - தனியார் பங்களிப்பில் 108 சேவை ஆரம்பித்து இந்த 15-ம் தேதியுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை, சுகாதாரத் துறையின் ஆதரவுடன் இந்தச் சேவை இயங்கிவருகிறது. தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற நிலை இருக்கிறது. இதுவரை 5 கோடியே 30 லட்சத்துக்கும் மேலான அழைப்புகள் இந்தச் சேவைக்கு வந்திருக்கின்றன.

108 சேவையால் அதிகம் பயனடைந்தவர்கள் யாரென்று பார்த்தால், கர்ப்பிணிகளே முதலிடம் பெறுகிறார்கள். 108 சேவைப் பயனாளிகளில் 26 % கர்ப்பிணி பெண்கள், 22 % சாலை விபத்தில் சிக்கியவர்கள், 6 % இதயப் பாதிப்பு ஏற்பட்டவர்கள். இதுதவிர நீரிழிவு நோய், விஷம் அருந்தியவர்கள், தற்கொலைக்கு முயற்சித்தவர்கள், பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களும் காக்கப்பட்டுள்ளன.

“குறுகலான பாதையில் ஆம்புலன்ஸ் செல்ல வசதி இல்லாததால், உடனடி முதலுதவி வழங்குவதற்காகப் பைக் ஆம்புலன்ஸ் சேவையைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. சென்னையில் சில இடங்களில் மிகக் குறுகலான தெருக்கள் இருக்கின்றன. இப்பகுதிகளுக்குப் பைக் ஆம்புலன்ஸ் சேவை பெரிதும் பயன்படுகிறது” என்கிறார் 108 விழிப்புணர்வு சேவைத் துறை மேலாளர் பிரபுதாஸ்.



பிரபுதாஸ்

அத்துடன் 48 மணி நேர ‘ஃபாலோ-அப்’ என்ற சேவையும் இருக்கிறது. நோயாளியின் தற்போதைய நிலையை அறிந்துகொள்வதே இந்தச் சேவையின் நோக்கம். இது மக்களுடன் அணுக்கமான உறவை ஏற்படுத்துகிறது.

104 சேவை எதற்காக?

உயிர் காக்கும் சேவை 108 என்றால், முழுக்க முழுக்க மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்காகவும், புகார்கள் தெரிவிப்பதற்காகவும் 104 என்ற இலவச எண் ஒதுக்கப்பட்டுள்ளது.

“மக்களின் நம்பிக்கையை உறுதிசெய்வதற்கான முயற்சி இது. இரவு நேரத்தில் திடீரென ஓர் உபாதை ஏற்படலாம். அது எத்தகைய உபாதை எனத் தெரிந்துகொள்வது அவசியம். உதாரணத்துக்கு, ஸ்ட்ரோக் ஏற்பட்ட 60 நிமிடங்களுக்குள் மருத்துவமனைக்கு நோயாளியைக் கொண்டு சென்றுவிட்டால் நிரந்தர உடல் ஊனத்திலிருந்து நோயாளியைக் காப்பாற்ற முடியும். 104 சேவையை ஒருவர் தொடர்புகொண்டு எங்கள் மையத்தில் இருக்கும் மருத்துவர் களிடம் தகவல்களை அளிக்கும்போது, நோயின் அறிகுறிகளைப் பற்றி புரிந்துகொண்டு அதற்கு அவசரசிகிச்சை தேவையென நினைத்தால் மருத்துவர்களே அழைப்பை 108-க்கு மாற்றிவிடுவார்கள்.

பரீட்சை நேரங்களில் நிறைய மாணவர்கள் 104 சேவையைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறுகிறார்கள். மனநல ஆலோசனையும் வழங்கப்படுகிறது. ஆனால் ஒருபோதும் மருந்துகளைச் சிபாரிசு செய்வதில்லை.

ஏதேனும் ஒரு பகுதியில் பலருக்கும் திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இந்த எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவித்தால் போதும். அரசு நிர்வாகத்துடன் இணைந்து மருத்துவ முகாம் அமைக்கவும் ஏற்பாடு செய்வோம்.

அவசர நிலையில் 108-ஐ அழைக்க வேண்டும் என்பது மக்கள் மனதில் ஆணித்தரமாகப் பதிந்துவிட்டது. அதேபோல் மருத்துவ ஆலோசனைகளுக்கு 104-யைத் தொடர்புகொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இப்போதைக்கு நாள் ஒன்றுக்கு 3000 அழைப்புகள் வருகின்றன” என்கிறார் 108 சேவையின் செயல்பாடுகள் பிரிவு மாநிலத் தலைவர் ரவீந்திரா.



ரவீந்திரா

விபத்துப் பகுதிகளில் போலீஸ் எப்.ஐ.ஆர்., நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 1,200 இடங்கள் விபத்து அதிகமாக நடைபெறும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே பிளாக் ஸ்பாட் அல்லது ஹாட் ஸ்பாட்களைக் கண்டறிந்து அப்பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை விபத்துகளில் உயிர் சேதம் அதிகமாக இருக்கும் என்பதால், அப்பகுதிகளில் அதிகமானோர் இறப்பதைத் தவிர்க்க 108 துணையாக இருக்கிறது.

தயக்கம் இல்லாமல் உதவுங்கள்

108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் கூறும்போது, “உயிர் காக்க நல்ல சமாரியர்கள் தேவை. அப்படிப்பட்ட நல்ல சமாரியர்கள் இன்றும் இருக்கின்றனர். விபத்துகள் குறித்தும் கொலைவெறி தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் தகவல் அளிப்பவர்களின் விவரங்களை, நாங்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறோம். சட்டச் சிக்கல்கள், போலீஸ் வழக்குகள் என அச்சப்படாமல், தயங்காமல் உதவுங்கள். நல்ல சமாரியர்களை அங்கீகரித்து அவ்வப்போதுச் சான்றிதழ்களும் வழங்குகிறோம்” என்று முடிக்கிறார் பிரபுதாஸ்.

தேவை ஏர் ஆம்புலன்ஸ் சேவை

சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் 108 சேவை குறித்துத் தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்:

108 ஆம்புலன்ஸ் சேவை வரவேற்கத்தக்கது. இதன் மூலம் மக்கள் நிச்சயமாகப் பயன்பெறுகின்றனர். அதேவேளையில் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் 108 ஆம்புலன்ஸ் சேவை, பல நேரங்களில் கிடைப்பதில்லை. தனியார் நிறுவனங்களுடன் டை-அப் வைத்துக்கொண்டு நோயாளிகளைத் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பதும் நடக்கிறது. அரசு - தனியார் பங்களிப்பில் 108 சேவை இயங்கினாலும், இந்தச் சேவைக்கான 95% நிதி ஆதாரம் அரசாலேயே வழங்கப்படுகிறது. நிலைமை இப்படி இருக்கும்போது இச்சேவையை அவுட் சோர்சிங் முறையில் செயல்படுத்தாமல், அரசே முழுமையாக ஏற்று நடத்துவது சிறப்பானதாக அமையும்.

அதேபோல் 108 மையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. பணிப் பாதுகாப்பும் இல்லை. உயிர் காக்கும் சேவையில் இருக்கும் இத்தொழிலாளர்களுக்கு அரசு உரிய ஊதியத்தையும் சலுகையையும் வழங்க வேண்டும். அதேபோல் ஆம்புலன்ஸில் இருக்கும் ஊழியர்கள் இன்னமும் சிறப்பான மருத்துவப் பயிற்சி பெற்றவர்களாக இருப்பது அவசியம். பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்களால், உயிர் சேதங்களைக் கூடுதலாகத் தவிர்க்க முடியும்.

இவற்றைத் தவிரத் தமிழகத்தில் ‘ஏர் ஆம்புலன்ஸ் சேவை‘ மிகவும் அவசியம். குறிப்பாகச் சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களிலும் இச்சேவை மிக மிக அவசியம். உதாரணத்துக்குச் சென்னை தாம்பரத்தில் ஒரு சாலை விபத்து நடந்தால், ஆம்புலன்ஸில் உரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன் உயிர் பிரிந்துவிடுகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் ‘ஏர் ஆம்புலன்ஸ் சேவை’ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதைப் பைலட் சேவையாகத் தமிழக அரசு அறிமுகப்படுத்த வேண்டும்” என்றார்.



ஜி.ஆர். ரவீந்திரநாத்

புகார்களுக்கு என்ன பதில்?

108-ல் அழைத்துச் செல்லப்படும் நோயாளிகளைத் தனியார் மருத்துவமனையில் சேர்க்க ஓட்டுநர்கள் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், துணைக்கு ஆள் இல்லை என்றால் ஆம்புலன்ஸில் நோயாளியை அழைத்துச் செல்லத் தயங்குவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

“நோய் பாதிப்பின் அளவை பொறுத்து அருகில் இருக்கும், உரிய சிகிச்சை வழங்கும் வசதிகள் கொண்ட மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் என்பதே ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பொதுவான அறிவுரை. நோயாளியின் உறவினர்களின் விருப்பத்துக்கு ஏற்பவே ஊழியர்கள் செயல்படுகிறார்கள். சிலர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கச் சொல்கிறார்கள், பிறகு கட்டணம் கட்டும்போது 108 மீது புகார் தெரிவிப்பதும் நடக்கிறது.

அதேபோல், அட்டெண்டர் (ஆள் துணை) இல்லை என்றால் நோயாளியை ஆம்புலன்ஸில் ஏற்க மறுக்கக் கூடாது. அட்டெண்டர் இருந்தால் நோயாளிக்கு மனதளவில் துணையாக இருக்கும் என்பதாலேயே அட்டெண்டர் தேவை என்று வலியுறுத்துகிறோம். மற்றபடி இது கட்டாயமில்லை” என்கிறார் பிரபுதாஸ்.

தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியோ அல்லது அட்டெண்டர் இல்லாததால் வாகனத்தில் ஏற்ற மறுத்தாலோ 104 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். இதுதவிர அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வரவில்லை, சிகிச்சைக்கு லஞ்சம் கேட்கப்படுகிறது, ஆம்புலன்ஸ் ஓட்டுநரோ அல்லது உள்ளே இருக்கும் மருத்துவ உதவியாளரோ பெண் நோயாளியிடம் கண்ணியமாக நடந்துகொள்ளாவிட்டாலும் மேற்கண்ட எண்ணில் புகார் செய்யலாம்.



கர்ப்பிணிகளுக்கு 102

108, 104 சேவைகளைத் தொடர்ந்து விரைவில் 102 சேவையும் நடைமுறைக்கு வரவுள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கான சேவை. ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பதிவுசெய்யும் கர்ப்பிணிப் பெண்களுக்குக் கர்ப்பக் காலம் முழுவதும் இதன் கீழ் ஆலோசனை வழங்கப்படும். தாய்மார்களுக்கான பிரசவம் முதல் பிரசவம் முடிந்து வீடு திரும்புவதுவரை இலவசச் சேவை இதன் கீழ் கிடைக்கும்.

இப்போதைக்கு அந்தந்த மண்டல, பிராந்திய அலுவலர் அறிவுறுத்தலின் பேரில் இந்தச் சேவை இயங்கிவருகிறது. விரைவில் 102 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு நேரடியாக இச்சேவையைப் பெற முடியும். ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்களுக்குத் தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளும் இச்சேவையின் கீழ் வழங்கப்படும்.

இந்தியச் செஞ்சிலுவை சங்கத்துடன் தமிழ்நாடு சுகாதாரத் துறை இயக்குநரகம் ஏற்படுத்தியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 155377 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு இலவச அமரர் ஊர்தி சேவையைப் பெறலாம். அரசு மருத்துவமனைகளில் இருந்து சடலத்தை எடுத்துச் செல்லவும், பிணவறையில் இருந்து சடலத்தை எடுத்துச் செல்லவும் இச்சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அந்தக் குரல்கள் நம் காதுகளை எப்போது எட்டும்? - உலகத் தற்கொலைத் தடுப்பு நாள்: செப். 10


கம்பளிப் பூச்சியொன்று தன்னுடைய நண்பனிடம் பல கேள்விகளைப் பரபரப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தது. மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த புழுக்கூட்டைப் பார்த்து, அது என்னவென்று கேட்டது. ‘நீ நிதானமாகச் சில காலம் அதனுள்ளே கண்ணை மூடி தூங்கினால், பிறகு அந்தக் கூட்டை உடைத்துக்கொண்டு சிறகு முளைத்து, அதோ விண்ணில் பறக்கும் வண்ணத்துப்பூச்சியாக மாறுவாய்' என்றது நண்பன் கம்பளிப் பூச்சி.

ஆனால், ‘நான் ஏன் புழுக்கூடு எனும் சிறையில் காலத்தை வீணடிக்கவேண்டும்? என்னால் இப்பொழுதே பறக்கமுடியுமே' என்று தன் மேலிருக்கும் மெல்லிய ரோமங்களைச் சிலிர்த்துக்கொண்டு, சிறகுகள் முளைத்துவிட்ட மயக்கத்தில் மரக்கிளையிலிருந்து கீழே குதித்தது அந்தக் கம்பளிப்பூச்சி.

அது கீழே விழும் முன்னே சட்டென்று பறந்து வந்த ஒரு ஊர்க்குருவி, கம்பளிப்பூச்சியைக் கொத்திக்கொண்டு சென்றுவிட்டது.

சுவரொட்டியில் உறையும் பதின்பருவம்

பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகில் எதையும் செய்துவிடமுடியும், எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்ற அசட்டுத் தைரியம், நினைத்தவுடன் எல்லாம் நடக்கவேண்டும் என்கிற துடிப்பு, கிடைக்கவில்லை என்றால் உடனே உடைந்துபோய்விடுவது போன்றவை இந்தக் காலப் பதின்பருவத்தினரின் இயல்பாக இருக்கிறது.

சிறகுகள் முளைக்கும் முன்னரே, முதிர்ச்சியடையாத இறக்கைகளால் பறந்துவிட முடியும் என்ற அசட்டு நம்பிக்கையோடு முட்டிமோதிப் பறக்க நினைத்து நொறுங்கி விழும் பதின்பருவத்தினரின் திடீர் முடிவுகளில் ஒன்றான தற்கொலை முயற்சி, திடீர் மரணத்தில் முடிகிறது. வாழ்வை வண்ணங்களால் அலங்கரிக்க வேண்டிய வயதில், கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் மதில்களில் நிறைந்து காணப்படுவதைப் பார்ப்பது வேதனைதான்.

தனிமையின் வலி

உலகத் தற்கொலை புள்ளிவிவரங்களின்படி 70 வயதுக்கு மேலிருப்பவர்கள் இறப்பதற்கான முதன்மைக் காரணம் தற்கொலை. குடும்பம் சிதைவது, முதியவர்கள் புறக்கணிக்கப்படுவது, பொருளாதாரச் சுமையாய் முதியவர்கள் பாவிக்கப்படுவது, தனிமை, நோயின் தாக்கம், வலி, புலன் குறைபாடு போன்றவையெல்லாம் வெவ்வேறு தளத்தில் நெருக்கடியை ஏற்படுத்தி வயது முதிர்ந்தவர்களை மனஉளைச்சலுக்குத் தள்ளி, தற்கொலைக்குத் தூண்டுகின்றன. அவர்கள் தற்கொலைக்கு மனக்கவலை நோய் முக்கியக் காரணம்.

அதேபோல, சமீபகாலமாகக் குழந்தைகளோடு பெண்கள் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொள்வதும் அதிகமாகியுள்ளது. கணவரின் குடி, உடல், உளவியல் வன்முறை, பண நெருக்கடி என்று பல்வேறு புறக்காரணிகள் நெருக்கடி ஏற்படுத்துவதால் அணுஅணுவாய் சாவது போதும் என்று முடிவெடுத்து, நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் முகமாகத் தற்கொலை நிகழ்கிறது. தன்னுடைய குழந்தை (பல நேரங்களில் பெண் குழந்தை) தனியே தவிக்க வேண்டாம் என்று நினைத்து, சேர்ந்தே தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். வாழ்வதற்கான அடிப்படை ஆதாரங்கள் புறக்கணிக்கப்படுவதை இந்தத் தற்கொலைகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

தனிநபர் பிரச்சினையா?

கல்லூரி நிர்வாகம் கொடுக்கும் அழுத்தம், தேர்வில் தோற்பது, வாழ்க்கையே முடிந்துவிட்டதாகத் தீர்க்கமான முடிவு, உறவு சிக்கல், கல்விக் கடன் வசூலிக்க வருபவர் தரும் நெருக்கடி போன்றவை மாணவர் தற்கொலைக்கான காரணிகள்.

இப்படித் தற்கொலைகளின் காரணிகளை ஆய்வு செய்யும்போது, தனிநபரின் உளவியல் நெருக்கடிக்குக் காரணமாக அமையும் சமூகப் பொருளாதார, அரசியல், சூழலியல், கலாச்சார, உடல், உளவியல் காரணிகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே தற்கொலைக்கு இட்டுச் செல்கின்றன. அதற்கு நேர்மாறாக, தனிநபர் காரணிகளை முன்னிறுத்தித் தற்கொலைகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது, தெளிவில்லா பிம்பத்தையே கொடுக்கும்.

இருட்டறையில் புலப்படாத வெளிச்சம்

ஒருவர் தற்கொலை செய்து இறப்பதற்கு முன்னால், சராசரியாக 20 முறையாவது தற்கொலைக்கு முயற்சி செய்வார் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. சட்டென்று முடிவெடுத்துத் தற்கொலைக்கு முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை குறைவே. தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் நெருக்கடிகளை உணரும்போது 'வாழ்வா, சாவா' என்ற இருமன ஊடாட்டம் மேலோங்கி இருக்கும். அவர்களுடைய சிந்தனை முழுக்கப் பிரச்சினைகள் மட்டுமே ஆட்கொண்டு இருக்கும் சூழலில், அதனால் மனதில் ஏற்படும் வலி, தன் மீதே ஏற்படும் கோபமும் வெறுப்பும், இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று யத்தனிக்கும் மனநிலையும் - தற்கொலைதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது போல நினைக்கத் தூண்டிவிடும்.

கதவுகள் மூடப்பட்ட இருட்டறையில் வெளிவர விழியில்லாதது போல் தோற்றமளித்தாலும், வெளிச்சத்தைத் தேட முயலாமல் தோற்றுப்போய், வெளியே வர வழி தெரியாமல் தனிமையில் உதவி தேடி அழும் அவர்களுடைய குரல்கள் பலரின் காதுகளை எட்டுவதில்லை. பல நேரம் ஒருவரது மரணத்துக்குப் பிறகுதான் அவர்களின் வேதனையையும் வலியின் போராட்டத்தையும் நம்மால் உணரமுடிகிறது.

தற்கொலைக்கு முயல்பவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவது உண்டு. ஏன் விடிகிறதென்றே தெரியவில்லை, தான் எதற்கும் பிரயோஜனம் இல்லை, என்ன செய்வதென்று வழியே தெரியலை என்று சிலர் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்கள். பல நேரம் தனிமையிலேயே மூழ்கிவிடுவது, யாருடனும் பேச விருப்பமில்லாமல் இருப்பது, தன்னுடைய எல்லாவிதமான சட்டப்பூர்வக் கடமைகள், பொறுப்புகளை வேகமாய் முடித்துவிடுவது (உயில் எழுதிவைப்பது, வங்கிக் கணக்கை யார் தீர்மானிக்க வேண்டும் என முடிவு செய்வது) போன்ற செயல்கள், தற்கொலை எண்ணம் மேலோங்கியிருப்பவர் மறைமுகமாய் வெளிப்படுத்தும் செயல்கள்தான்.

தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் உதவி நாடி மற்றவரிடம் செல்லாமல் தன் பிரச்சினைகளைத் தானே கையாளுதல், சமூகத் தொடர்பை அதிகப்படுத்திக்கொள்ளாமல் தனிமையில் இருப்பது, பிரச்சினைகளை உணர்வுபூர்வமாகப் பார்த்து, உடனே தீர்வு வேண்டும் அதுவும் தாம் எதிர்பார்க்கும் தீர்வே வேண்டும் என்ற மனநிலையில் இருப்பார்கள்.

தடுக்க முடியாதா?

மாணவர் பருவத்திலிருந்தே பிரச்சினைகளை எப்படிப் புரிந்துகொள்வது, எதைப் பிரச்சினைகளாய்ப் பார்ப்பது என்பதை முதலில் தெளிவுபடுத்தவேண்டும்.

தனிநபராகவே செயல்பட்டு ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் வலிந்து அதிகரிக்கப்பட்டிருக்கும் சூழலில், கூட்டுச் செயல்பாட்டை அதிகப்படுத்த வேண்டும்.

தற்கொலைக்கு முயற்சிப்பவரைப் பொதுவாக இந்தச் சமூகம் கோழைகளாகவும், திறனற்றவர்களாகவும் சித்தரிக்கிறது. அந்த எண்ணத்தைத் தகர்க்க வேண்டும்.

தோழமை உணர்வுடன் பிரச்சினைகளை அவர்களுடைய கோணத்தில் புரிந்துகொள்ளும் அதே வேளையில், தற்கொலைக்கு உந்தித்தள்ளும் அந்தக் கணத்தை எப்படித் தள்ளிப்போட வேண்டும் என்றும், பிரச்சினையை மிகைப்படுத்திப் பார்க்கும் சிந்தனை முறையை மாற்றுவது எப்படி என்ற வழிமுறையையும் கற்றுத்தருவது அவசியமாகிறது.

சமூகச் செயல்பாட்டை அதிகரித்து, சமூகத் தொடர்பை அதிகரிக்கும்போது, தனிநபர் பிரச்சினைகள் பொதுவாக மாறுகின்றன. மக்களும் பொறுப்போடும் அக்கறையோடும் செயல்பட வேண்டிய காலம் இது. இந்தப் பிரச்சினையும் கடந்து போகும், மாற்றம் இயல்பானது என்ற அடிப்படைப் பார்வையைக் கற்றுத்தர வேண்டும்.

கட்டுரையாளர், அரசு மனநல மருத்துவர்
தொடர்புக்கு: spartacus1475@gmail.com

தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த வெள்ளை மாளிகை


அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்று மொழியாக ஏற்றது மிகுந்த மனவலியை தருகிறது என மாணவி வாசித்த கவிதை அனைவரையும் வெகுவா கக் கவர்ந்தது.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தேசிய மாணவர்களுக்கான கவிதைப் போட்டி நேற்று நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மாணவ, மாணவிகள் உட் பட 4 பேரின் கவிதை களைப் பாராட்டி ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா கவுரவித்தார்.

‘‘தலைமுடியைப் போல எனது பூர்வீகமும் உதிரத் தொடங்கி விட்டது. அம்மா! எங்கே எனக்கு வழுக்கை விழுந்துவிடப் போகிறதோ என அஞ்சுகிறேன்’’ என தமிழகத்தைச் சேர்ந்த மாயா ஈஸ்வரன் கவிதை வாசித்ததும், பார்வையாளர்கள் மத்தியில் ஒருவித பிரமிப்பு ஏற்பட்டது. கடைசியில், ‘‘அம்மா! நான் தமிழ் பேசி 3 ஆண்டுகள் உருண்டோடி விட்டது’’ என கனத்தக் குரலுடன் அவர் முடித்ததும், பார்வையாளர்களிடம் இருந்து எழுந்த கரவொலி அடங்க வெகுநேரமானது.

மிஷேல் ஒபாமாவும், மேடை யில் இருந்தபடியே மாயாவின் கவிதையைப் பாராட்டும் விதமாக உரத்தக் குரல் எழுப்பினார். பின்னர் அவர், ‘‘மாயா, எங்கே மாயா? சிறந்த கவிதை வாசித்துள்ளாய். மேடையில் உள்ள அத்தனைப் பேரையும் கவர்ந்து விட்டாய்’’ எனப் புகழாரம் சூட்டினார்.

நிகழ்ச்சிக்குப்பின் மாயா தனது பேட்டியில், ‘‘நான் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆனால் பிறந்தது அமெரிக்காவில். எனது கலாச்சாரம், தொன்மை, பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு எண்ணற்ற கவிதை களை எழுதியிருக்கிறேன். எனது தாய்மொழியை எப்படி இழந்தேன் என்ற அனுபவத்தைத் தான் வெள்ளை மாளிகையில் கவிதையாக மொழிபெயர்த்துக் கூறினேன். தாய்மொழியை மறந்து விட்டு, பிறமொழியை மாற்றாக ஏற்றுக் கொள்வது என்பது மிகுந்த வலி நிறைந்தது’’ என்றார்.

இதேபோல் சென்னையைச் சேர்ந்த தந்தைக்கும், கேரளா வைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்த கோபால் ராமன் என்ற இந்திய வம்சாவளி மாணவரின் கவிதையும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இமெயிலை மேம்படுத்திக்கொள்ள ஐந்து வழிகள்!


ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர் என வந்துவிட்டாலும், இமெயிலின் முக்கியத்துவம் இன்னமும் குறைந்துவிடவில்லை. தனிப்பட்ட பயன்பாட்டிற்கும், அலுவலகத் தொடர்புக்கும் பெரும்பாலானோர் இமெயிலைப் பயன்படுத்துவது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. நல்ல வேளையாக இமெயில்களைச் சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும் சேவைகளும் அநேகம் இருக்கின்றன. அந்த வகையில், இமெயில் பயன்பாட்டை மேம்படுத்திக்கொள்ள உதவும் அருமையான சேவைகள் சில:

உடனடி மெயில் வாசகங்கள்

இமெயிலில் அதிக நேரம் செலவிடுபவர்கள் ‘கேன்ட் இமெயில்ஸ்’ (http://www.cannedemails.com/#) இணையதளத்தைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் இமெயிலுக்காகத் தேவையில்லாமல் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்கலாம். எப்படி? எப்போதெல்லாம் வழக்கமான பதில்களை இமெயிலில் அனுப்ப நேருகிறதோ அப்போது இந்தத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது, இதில் உள்ள வாசகங்களை அப்படியே நகலெடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இமெயில்களை அனுப்பும்போது மெயிலின் உள்ளடக்கம் சரியாக இருக்க வேண்டும். அதை வெளிப்படுத்தும் வகையில் வார்த்தைகள் கச்சிதமாக அமைந்திருக்க வேண்டும். எனவே இதற்காக நேரம் ஒதுக்கித் தனிக் கவனம் செலுத்தியாக வேண்டும். ஆனால் எல்லா நேரங்களிலும் இப்படிச் செய்ய வேண்டும் என்றில்லை. சில நேரங்களில் மிகவும் சம்பிரதாயமான பதிலை அனுப்பினால் போதும். இன்னும் சில நேரங்களில் வழக்கமான வாசகங்களை டைப் செய்தால் போதும். இதுபோன்ற நேரங்களில் ஒரே விதமான மெயிலை மீண்டும் டைப் செய்வது நேரத்தை வீணாக்கும் என்பதோடு, அலுப்பாகவும் அமையும்.

இந்தப் பிரச்சினைக்கான அழகான தீர்வாகத்தான் ‘கேன்ட் மெயில்' அமைகிறது. வழக்கமாக எதிர்கொள்ளக்கூடிய தருணங்களுக்கான மெயில் வாசகங்கள் இந்தத் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு பிரச்சினைக்காக மன்னிப்பு கோருவது, சேவையை ரத்து செய்து பணம் திரும்பக் கோருவது, முந்தைய மெயிலுக்கு நினைவூட்டல் அனுப்புவது, மன்னிக்கவும், விருப்பமில்லை எனச் சொல்வது என வரிசையாகப் பல தருணங்களுக்கான ரெடிமேட் மெயில் வாசகங்களை இந்தத் தளத்தில் பார்க்கலாம். எது தேவை எனத் தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படியே பயன்படுத்திக்கொள்ளலாம், அல்லது ஒரு சில வார்த்தைகளை மட்டும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் அமைந்திருப்பது மட்டுமே இதன் குறை!

இமெயில் வடிவங்கள்

கேன்ட் மெயில் தளம் போலவே, ‘கான்டாக்சுவலி டெம்பிளேட்ஸ்’ தளமும் (http://templates.contactually.com/) பொருத்தமான இமெயில் உள்ளடக்கத்தைத் தேர்வு செய்வதற்கான தளம். என்றாலும் அதைவிட மேம்பட்ட சேவை இது. சூழ்நிலைக்கு ஏற்ற மெயில்களை இதில் நாமாக உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கென சிறிய விண்ணப்பப் படிவம் முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், இமெயில் அனுப்புவது யாருக்கு, அதன் நோக்கம் என்ன எனும் கேள்விகளுக்கான பதில்களைத் தேர்வு செய்தால் போதும். அதற்கேற்ற பொருத்தமான மெயில் மாதிரியை உருவாக்கித்தருகிறது.

இணையதளமாகும் இமெயில்

உங்கள் இமெயிலை ஒரு இணையதளப் பக்கமாக மாற்றிக்கொள்ள வழி செய்கிறது ‘திஸ் இமெயில்' (http://www.thisemail.xyz/) இணையதளம். உங்களுக்கு வரும் இமெயில்களில் சிலவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றும்போது, இந்தச் சேவை கைகொடுக்கும்.

‘மெயிலைப் பகிர்ந்துகொள்ள எளிய வழி அதை அப்படியே ஃபார்வேர்ட் செய்வதுதானே' என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் இமெயில் முகவரியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். மேலும் பலருக்கு அனுப்ப விரும்பினால் சிக்கல்தான். இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் பகிர விரும்பும் மெயிலை இந்தத் தளத்துக்கு ஃபார்வேர்ட் செய்தால், அந்த மெயிலை ஒரு இணையப் பக்கமாக மாற்றி, அதற்கென ஒரு இணைய முகவரியையும் உருவாக்கித்தருகிறது. இந்த இணைய முகவரியை மட்டும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டால் போதும். உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ளாமலேயே எளிதாகப் பயன்படுத்தக்கூடிய சேவை இது!

இமெயில் பாதுகாப்பு

ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளச் சேவைகளில் இமெயில் முகவரியைப் பகிர்ந்துகொள்ளும் தேவை ஏற்படும்போது நேரடியாக முகவரியை டைப் செய்யாமல் ‘ஸ்கிரிம்' (http://scr.im/) தளம் வழியே அதைச் செய்வது நல்லது. ஏனெனில் இணையத்தில் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளுப்படும் இமெயில் முகவரிகளை அறுவடை செய்வதற்கு என்றே விளம்பர நிறுவனங்கள் ‘பாட்'களை உருவாக்கி வைத்திருக்கின்றன.

சமூக ஊடகங்களில் மெயில் முகவரிகளை வெளியிடும்போது இந்த பாட்கள் அவற்றை ஸ்கேன் செய்து சேகரிக்கின்றன. இதனால் ‘ஸ்பேம்' மெயில் தொல்லை அதிகமாகலாம். இதிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஸ்கிரிம், இமெயில் முகவரியை பாட்கள் ஸ்கேன் செய்ய முடியாத வகையில் பாதுகாப்பாக மாற்றித்தருகிறது.

இமெயில் சுருக்கம்

‘ஃபைவ் சென்டன்சஸ்' (http://five.sentenc.es/) தளம் இமெயில் பயன்பாட்டில் நேரடியாக உதவக்கூடிய சேவை இல்லை. ஆனால் இமெயில் பயன்பாட்டில் நினைவுகொள்ள வேண்டிய முக்கியமான அறிவுரையை இந்தத் தளம் வழங்குகிறது. இமெயிலுக்கு என அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்கும் வகையில், ஐந்து வரிகளில் எல்லா மெயில்களையும் முடித்துக்கொள்ள‌வும் என்பதுதான் அந்த ஆலோசனை.

இமெயிலை அனுப்பவும், பதில் அளிக்கவும் அதிக நேரம் செலவிட வேண்டியிருப்பது பிரச்சினை எனக் குறிப்பிடும் இந்தத் தளம் இதற்கான தீர்வு, குறுஞ்செய்திகள் போல இமெயில் பதில்களுக்கும் ஒரு வரம்பு தேவை என வலியுறுத்துகிறது. இதற்காக, எல்லா மெயில்களுக்கும் ஐந்து வரிகள் அல்லது அதற்குக் குறைவாகப் பதில் அளிக்க வேண்டும் எனும் கொள்கையைக் கடைப்பிடிக்கவும் வலியுறுத்துகிறது. இமெயில் பயன்பாடு பற்றி யோசிக்க வைக்கக் கூடிய சுவாரசியமான இணையதளம்.

உங்கள் விரல்களே உங்கள் மருத்துவர்!

By -சலன் 
இன்று மருத்துவத்துறை வணிகமயமாகிவிட்டது என்று எல்லாரும் சொல்கிறார்கள். நீங்கள் மருத்துவமனை சென்றாலும் செலவைப் பற்றி கவலைப்படாமல் இருக்க காப்பீட்டுத்துறையும் உங்களை கவனிக்கத் தொடங்கி விட்டது. ஆனால் இது எதுவுமே தேவை இல்லை. நீங்களே உங்கள் விரல்களின் மூலம் உங்கள் நோயைச் சரி செய்து கொள்ளலாம் என்று தைரியமாகக் கூறுகிறார், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர் பட்டம் பெற்ற பாசு கண்ணா. அவர் முத்திரைகளின் மூலம் நமது நோயை நாமே தீர்த்துக்கொள்ளும் முறை பற்றி கூறுகிறார்:

 
 ""உடம்பைப் பொருத்தவரை இரண்டே இரண்டு தான் நமக்கு மிக முக்கியம். ஒன்று நோய் வந்தால் சரி செய்து கொள்வது எப்படி? மற்றது நோய்வரும் முன் காப்பது எப்படி? இந்த இரண்டும் நமக்குத் தெரிந்தால் நமக்கு நாமே சிறந்த மருத்துவர்.

எனக்குச் சிறுவயது முதலே ஆராய்ச்சி என்றால் பிடிக்கும். என் மனைவி ஒரு சித்த மருத்துவர். ஒரு முறை நான் ஆராய்ச்சி செய்வதைப் பார்த்த அவர், இது நல்ல விஷயம், தொடருங்கள் என்று ஊக்கப் படுத்தினர். நமது விரல்களே நமக்கு மருத்துவம் பார்க்க முடியும் என்றால்

நம்மில் பலரும் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் அது உண்மை. ஆரம்பத்தில் நான் ஆராய்ச்சி மாணவனாக இருந்த போது முத்திரைகளைப் படிக்கப் படிக்க என் மனமும் அறிவும் விசாலமடைந்தது மட்டுமல்லாமல், உடம்பில் வித்தியாசமான ஓர் உணர்வும் ஏற்பட்டது. இதை டாக்டர் என்ற முறையில் எனது மனைவியிடம் பகிர்ந்து கொள்ள, அவர் மேலும் என்னை உற்சாகப்படுத்தினார். அன்றிலிருந்து இன்று வரை நான் முத்திரைகளைச் செய்து எனக்குத் தெரிந்த பலரையும் குணப்படுத்தி உள்ளேன்.

சுமார் 3000 முத்திரைகள் உள்ளன. ஒரு மனிதனுக்கு என்ன நோய்கள் வருமோ அதை சரி செய்ய தேவைப் படும் என்று பார்த்துப் பார்த்து முத்திரைகளை தொகுக்க ஆரம்பித்தேன். ஒரு முத்திரை ஆராய்ச்சி என்றால் அதற்கு கிட்டத்தட்ட 90,000 ரூபாய் செலவு ஆகும். ஆராய்ச்சி என்றால் மற்றவர்களை இதைச் செய்யச் சொல்லி அவர்களின் ரத்தம், மலம், சிறுநீர் பரிசோதனை மற்றும் அவர்களின் உடல் நிலையைக் கண்காணிக்க மட்டும் அல்லாமல், மற்ற செலவுகளையும் சேர்த்து ஆகும் செலவு இது. ஒரே வேளையில் என்னால் ஒரு முத்திரையை மட்டுமே ஆராய்ச்சி செய்ய முடிந்தது. இதற்குக் காரணம் பொருளாதாரம் மட்டும் அல்லாமல்,வேறு பல பிரச்னைகளும் ஏற்பட்டன. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நான் இப்படி ஆராய்ச்சி செய்ததன் பயனாக 226 முத்திரைகளைத் தேடித் தேடி கண்டுபிடித்து அதன் பயன்கள் எவை என்றும் எழுதி வைத்தேன்.

 இந்த முத்திரைகள் எல்லாமே நம் சரீரத்தில் ஏற்படும் நோய்கள் அனைத்திற்கும் மருந்தாக அமையும். நான் அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் பல்வேறு வகையான சிகிச்சை முறைகளையும் என்னுடைய ஆராய்ச்சியில் இணைத்து, அந்த அந்த முறைகளை விட நம் கை விரல்களே நமக்கு எவ்வளவு முக்கியமானது, உபயோககரமானது, சிறந்தது என்று நிரூபிக்கும் வகையில் செய்ததால், இதை பலரும் பின்பற்றுகிறார்கள். இந்த முத்திரைகளைச் செய்ய ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது. வலி உள்ளவர்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் கிடையாது. வரும்முன் காப்போம் என்று நான் முன்பே சொன்னேன் அல்லவா? அது போல நோய் இல்லாதவர்களும், நோய் வரும் என்று நினைப்பவர்களும், ""உதாரணமாக சார் எனக்கு ஜுரம் வரும் போல இருக்கு... தொண்டை கரகரனு இருக்கு சார், இருமல்ல கொண்டு போய் விட்டுடுமோ?'' என்றெல்லாம் கேட்பவர்களுக்கு இந்த முத்திரைகள் மிக மிக உபயோகமாக இருக்கும். குறிப்பாக ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த வேண்டும்.

முத்திரைகளால் 21 நாட்களில் ரத்த குழாய் அடைப்பைச் சரி செய்ய முடிந்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல், வேலை செய்யாத சிறுநீரகத்தை இந்த முத்திரைகள் வேலை செய்ய வைத்திருக்கின்றன. இப்படி பல உதாரணங்களை என்னால் சொல்லிக் கொண்டே போக முடியும்.

முத்திரைகளை நாம் உட்காரும்போது மட்டுமே செய்ய வேண்டும். நடக்கும் போதோ அல்லது படுக்கும் நிலையிலோ செய்வது சரி அல்ல. ஒரு முத்திரையை சுமார் 20 மற்றும் 30 நிமிடங்களுக்கு செய்தால் நலம். உணவு உண்ட பின் சுமார் அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்குப்பின் செய்தால் பலன் அதிகமாகும்.

என் மகள் அம்ருதவானி பிட்ஸ் பிலானியில் படித்துக் கொண்டு இருக்கிறாள். ஒரு நாள் அவளுக்குத் தலைவலி. அவளது அறை தோழி ஒரு சில முத்திரைகளைச் சொல்லி இதை செய்தால் உனக்கு குணமாகிவிடும் என்றாள். எங்கிருந்து இந்த முத்திரைகளைக் கற்றாள் என்று என் மகள் அவளிடம் கேட்டாள். ""நான் டிவியில் பார்த்தேன். யூடியூபில்லும் இருக்கிறது. நீ தைரியமாகப் பண்ணலாம். உன் தலை வலி பறந்து விடும்'' என்று சொல்ல என் மகள் உடனே எனக்கு தொலைபேசியில் அழைத்து, ""டாடி உங்கள் முயற்சி வீண் போகவில்லை'' என்று பெருமையுடன் கூறினாள். நான் செலவு செய்தாலும் எல்லாரும் இன்புற்றிருப்பதே என் நோக்கம் என்று ஒரு கால கட்டத்திலிருந்து யார் கேட்டாலும் இலவசமாக முத்திரைகளைச் சொல்லித் தருகிறேன். அது மட்டுமல்லாமல், 108 முத்திரைகளை அதன் படங்களுடன், பலன்களையும் சேர்த்து ஒரு புத்தகமாகத் தயாரித்து வெளியிட்டு விட்டேன். யார் வேண்டுமானாலும் பார்த்து, செய்து பயன் பெறலாம். முத்திரை பலவும் கற்று கொள்வோம் முதுமையில் கூட நோயில்லா வாழ்வை பெற்று மகிழ்வோம்'' என்கிறார் டாக்டர். பாசு கண்ணா.
-சலன்

நீதிபதிகள் நியமனம் ராணுவ வியூகமல்ல!

By நீதிபதி கே.டி. தாமஸ் 


நீதித்துறை சில அதிகாரங்களைத் தன்னிடமே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் நிலையில் அந்தத் துறைக்கும் அரசுக்கும் இடையே பெரிய மோதல் நடக்கிறது என்ற பொதுவான எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. நீதிபதிகள் நியமனம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி ஜெ.செலமேஸ்வர், தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் பற்றி உடனடியாக, தீவிரமாக ஆலோசித்தாக வேண்டும்.
உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமன முறையானது, "கொலீஜியம்' எனப்படுகிற, நான்கைந்து நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறு குழுவுக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியமாக இருந்துவிடக் கூடாது.
நீதியை நிலைநாட்டுவதற்காகவும், பல சந்தர்ப்பங்களில் மக்களையும் தேசத்தையும் பாதிக்கும் பிரச்னைகள், விவகாரங்கள் குறித்து முடிவெடுப்பதற்காகவும் நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். பொதுநலன் விவகாரங்களில் பொறுப்புடன் செயல்படுதல் கட்டாயம் என்பதால், நீதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள், மிகச் சிறந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.
வெளிப்படைத்தன்மைதான் பொறுப்புடன் செயல்படுவதற்கான வழி. முடிவுகளை எடுக்கும் வழிமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால், பொறுப்புடைமை என்பது இல்லாதாகிவிடும்.
நீதிபதிகள் நியமனத்துக்காக "கொலீஜியம்' முறை உருவானபோதும், நீதிபதிகள் நியமனம் தொடர்பான "3-ஆவது வழக்குக்குப்' பிறகு அது விரிவடைந்தபோதும், வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக நான் கேள்விப்பட்டேன்.வெளிப்படைத்தன்மை என்றால், ஒவ்வொரு கட்டத்திலும் எடுக்கப்படும் முடிவை வெளிப்படுத்த வேண்டும் என்பது அர்த்தமல்ல. சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப வெளிப்படைத்தன்மை மாறுதல் பெறும்.
பிறர் ஒதுக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட நபர் ஏன் நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அல்லது சில தகுதிகள் இருந்தும் ஒரு நபர் நீதிபதிப் பதவிக்கு ஏன் கருத்தில் கொள்ளப்படவில்லை- ஏன் நிராகரிக்கப்பட்டார் என்ற காரணங்கள் முக்கியமானவை.
உன்னத நிலையில் உள்ள சிறு குழுவில் இடம்பெறும் சில நபர்களின் மனதில் மட்டுமே அந்தக் காரணங்கள் தங்கிவிடக் கூடாது. எதிர்காலத்தில் அந்த விவரங்களை எடுத்துப் பார்க்கும் வண்ணம், கருத்துகள் பதிவு செய்யப்பட வேண்டும்.நீதிபதி நியமனம் குறித்த அனைத்து விவரங்களையும் காரணங்களையும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அரசியல் சாசனத்தின் கீழ், நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அல்லது மத்திய அமைச்சரவைதான் ஆலோசனை வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.எனவே, நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் தொடக்கத்திலிருந்து இறுதித் தேர்வு வரை நடக்கும் அனைத்து விஷயங்களையும் அதற்கான காரணங்களையும் இந்திய அரசு அறிந்திருக்க வேண்டும்.பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கும் உண்மையான அதிகாரம் பெற்றிருப்பதால், அனைத்து விஷயங்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேசிய நீதிபதிகள் நியமனக் குழுச் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்வதாகத் தீர்ப்பளித்தபோது, நாட்டு மக்களும், அரசும் இந்த விவகாரத்தில் எந்தப் பங்களிப்பையும் தர இயலாத நிலைக்குப் புறந்தள்ளப்பட்டனர்.
எதிர்காலத்தில் அரசு, நீதித்துறை அல்லது அரசியல் சாசன அமைப்பு என எந்த அமைப்புமே அறிந்து கொள்ள முடியாதபடி, நீதிபதிகள் நியமன நடவடிக்கைகளைப் பரம ரகசியமாக வைத்திருக்க முடியாது. நாளை ஒரு தேவை ஏற்படும்போது, அந்தப் பதிவுகள் இல்லையென்றால், நீதிபதிகள் நியமன விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புடைமை என்பதும் இல்லாமல் போய்விடும்.
ரகசியத் தன்மை ராணுவ வியூகங்களிலும் அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் தேவைதான். ஆனால் நீதிபதிகள் நியமனத்தில் தேவை இல்லை. இதன் பொருள் நியமனம் குறித்த காரணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதல்ல பொருள். வெளிப்படைத்தன்மையற்று இருப்பது, ஜனநாயகத்துக்கும் சட்ட மாட்சிமைக்கும் விரோதமானது.
"கொலீஜியம்' முறையை எப்படி வலுப்படுத்த முடியும் என்பது குறித்து அரசும் உச்சநீதிமன்றமும் கலந்தாலோசிக்க வேண்டிய நேரம் இது. உச்சநீதிமன்ற நீதிபதி தேர்வு என்பது, நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் இடையிலிருந்து மட்டும் தேர்ந்தெடுக்கும் முறையாகத் தற்போது உள்ளது.தகுதி அடிப்படை இல்லாமல், உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்பட இயலும் நிலை உள்ளது. அந்த உயர்நீதிமன்றத்துக்கு முதல் முதலில் எப்போது நியமிக்கப்பட்டார் என்பதுதான், ஒருவர் மிக மூத்த நீதிபதியாவதற்கும் தலைமை நீதிபதியாவதற்கும் அடிப்படையாக உள்ளது.
உயர்நீதிமன்றத்துக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு நபர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது மட்டுமே அவர் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கும், பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெறுவதற்கும் தகுதியாகிவிட முடியாது. இந்தக் காரணத்தாலேயே, தகுதி வாய்ந்த மூத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர் உச்சநீதிமன்றத்துக்குப் பதவி உயர்வு பெற முடியாமல் போய்விடுகிறது.
எனவே, சிறந்த நீதிபதிகள் என்று கருதப்படும் ஐந்து மூத்த நீதிபதிகளிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியைத் தேர்ந்தெடுப்பது குறித்து "கொலீஜியம்' ஆலோசிக்கலாம். பணி மூப்பு அடிப்படையில் அல்லாமல், ஐந்து பேரிலிருந்து சிறந்த நபரைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியான வழியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த முறையிலும், நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான "கொலீஜியம்' குழுவில் இடம்பெற்றவன் என்ற முறையிலும், நாட்டு நலன், நீதி பரிபாலனம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் நீதிபதிகளுக்கு உள்ள முக்கியத்துவத்தை நான் அறிவேன்.
எனவேதான், எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு, சிறப்பான தகுதிகள் உள்ளவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை மட்டும் கருத்தில் கொண்டால் போதாது.
மற்றொரு விஷயம்: நீதித் துறையின் நடவடிக்கைகள் மூலமாகப் பிறந்ததுதான் "கொலீஜியம்' முறை. அரசியல் சாசனம் இயற்றுவதற்கான விவாதங்களின்போது "கொலீஜியம்' என்ற வார்த்தையைக்கூட யாரும் குறிப்பிடவில்லை. அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட பிறகு, வெகு காலம் கழித்து, நமக்குக் கிடைத்த பெரும் அனுபவங்களின் அடிப்படையில்தான் "கொலீஜியம்' என்ற சொல் உருவானது.
நீதிபதி நியமனம் குறித்த "2-ஆவது நீதிபதிகள் வழக்கு'க்குப் பிறகு "கொலீஜியம்' முறை உருவாக்கப்பட்டது. "மூன்றாவது வழக்குக்கு' பிறகு, 1998-இல் சில விதிமுறைகளுடன் "கொலீஜியம்' முறை விரிவடைந்தது. அதன் பிறகு நீண்ட காலம் கடந்துவிட்டது. "கொலீஜியம்' முறையின் சாதக - பாதகங்களைப் பற்றி நாம் தெரிந்து கொண்டுள்ளோம்.
உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் கேட்ட விளக்கத்தின் அடிப்படையில் "மூன்றாவது நீதிபதிகள் வழக்கு' உருவானது. முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் நடைபெற்று வந்த நீதிபதிகள் நியமனத்தில் ஏதேனும் குறைகள் உள்ளனவா, அவற்றை எந்த வகையில் களையலாம் அல்லது சரி செய்யலாம் என்று அறிய ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உருவாக்கினார்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கூடுதல் நீதிபதிகளுடன் பெரிய அமர்வை ஏற்படுத்துவது குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கடைசியாக விசாரித்த அமர்வில் ஒன்பது நீதிபதிகள் இருந்தனர். புதிய விசாரணையை 11 அல்லது 13 நீதிபதிகள் கொண்ட அமர்வுவிசாரிக்கலாம்.
"அரசியல் சாசனப் பிரிவை ரத்து செய்ய வேண்டுமானால், அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கூறு பற்றி விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு போதாது' என்று கேசவானந்த பாரதி வழக்கின் மீதான தீர்ப்பு கூறுகிறது.
இப்போது அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கூறு என்ற முறையில், அரசியல் சாசனத்தையே பரிசீலிக்கும் நிலை தோன்றியுள்ளது. எனவே, அரசியல் சாசனப் பிரிவைக் கேள்விக்கு உள்ளாக்கும் வழக்கை விசாரிக்க, குறைந்தபட்சம் கேசவானந்த பாரதி வழக்கை எத்தனை நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்ததோ, அதே எண்ணிக்கையைக் கொண்ட அமர்வு தேவை.
நீதிபதிகள் எண்ணிக்கையை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீர்மானிக்கலாம். இது தொடர்பாக, உச்சநீதிமன்ற விதிமுறையில் திருத்தம் கொண்டு வரலாம்.
தேசிய நீதிபதிகள் நியமனக் குழுச் சட்டம் தொடர்பான தீர்ப்பு தவறானது என்று உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள் பலரும், முன்னாள் நீதிபதிகள் பலரும் கருதுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
நாட்டு நலன் கருதி, அரசியல் சாசனத்தின் செயல்பாடு கருதி, அந்தத் தீர்ப்பு தொடர்பாக மறுபரிசீலனை தேவையா, உயர் நிலையில் நீதிபதிகளை நியமிக்கப் புதிய நியமன முறை தேவையா என்பதெல்லாம் குறித்து உச்சநீதிமன்றம் ஆலோசிக்க மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்.
Posted Date : 16:40 (09/09/2016)


ரூ.5.72 கோடி கொள்ளையில் ரயில்வேயை திணறடித்த ஆர்.டி.ஐ கேள்விகள்!



சேலத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரசில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி ரூ.5.72 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்தாலும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. வடமாநிலங்களில் முகாமிட்டுள்ள தனிப்படை அதிகாரிகள் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். இந்தநிலையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆர்.டி.ஐ போராளியும், வழக்கறிஞருமான பிரம்மா, ஆர்.டி.ஐ. மூலம் கேள்வி கணையை ரயில்வே நிர்வாகத்திடம் தொடுத்துள்ளார். வழக்கம் போல வழக்கு விசாரணையில் இருப்பதாகச் சொல்லி பதிலை இன்று அனுப்பி இருக்கிறது ரயில்வே நிர்வாகம். ஆர்.டி.ஐ.யில் பிரம்மா கேட்ட கேள்விகள் இதுதான்.

* சேலம் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு எந்த ரயிலில் பணம் கொண்டு வரப்பட்டது. வண்டி எண், ஓட்டுநர் பெயர், உள்ளிட்ட விவரம் தர வேண்டும்.

* ரயிலில் வங்கிக்குரிய பணத்தை சேலம் ரயில் நிலையத்தில் பார்சல் அனுப்பிய அலுவலர்களின் பெயர், பணி பொறுப்பு விவரம் வேண்டும்.

* சேலம் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட பணத்தின் பார்சல் பிரிவு புக்கிங் செய்த போது கொடுக்கப்பட்ட ரசீது நகல் வேண்டும்.

* அனுப்பப்பட்ட பணத்தின் மதிப்பு எவ்வளவு குறிப்பிடப்பட்டுள்ளது என்ற விவரம் வேண்டும்.

* அதற்கு கொடுக்கப்பட்ட பார்சல் எண் விவரம் வேண்டும். பார்சல் அலுவலகத்திலிருந்து ரயிலில் பணப்பெட்டிகள் ஏற்றப்பட்ட போது பதிவான கேமராவின் குறுந்தகடு தர வேண்டும்.

* ரயில் நிலையத்திலிருந்து பணம் எந்த தேதி, எத்தனை மணிக்கு புக்கிங் செய்யப்பட்டது என்ற விவரம் வேண்டும்.

* பணம் ஏற்றப்பட்ட பெட்டி சீல் வைக்கப்பட்டதை உறுதி செய்து கையொப்பமிட்ட அலுவலர்களின் ஆவண நகல் தர வேண்டும்.

* சேலத்திலிருந்து புறப்பட்ட ரயில் சென்னை வருவதற்கு முன்பு எந்தெந்த ரயில் நிலையங்களில் எத்தனை நிமிடங்கள் நிறுத்தப்பட்டது என்ற விவரம் தர வேண்டும்.

* அவ்வாறு ரயில் நிலையங்களில் நின்ற போது அதை ஆய்வு செய்த ரிப்போர்ட்டின் நகல் தர வேண்டும்.

* ரயிலில் பண பெட்டிகளை ஏற்ற எத்தனை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்களின் பெயர் தர வேண்டும்.

* பணம் ஏற்றப்பட்ட ரயில் சென்னையில் எவ்வளவு நேரம் தனியாக நிறுத்தப்பட்டு இருந்தது என்ற விவரம் தர வேண்டும்.

* திருட்டு சம்பவத்தை முதலில் தகவல் கொடுத்த நபரின் பெயர், முகவரி, பணி பொறுப்பு தர வேண்டும். அவர் கொடுத்த புகார் மனு தர வேண்டும்.

* ரயிலில் பணம் கொண்டு வந்த போது பாதுகாப்பு பணியில் எத்தனை காவலர்கள் ஈடுபட்டு இருந்தார்கள். அவர்களின் பெயர், பணி பொறுப்பு, அவர்கள் பயணம் செய்த பெட்டி, மற்றும் இருக்கை எண் விவரம் தர வேண்டும்.

* பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு டிக்கெட் எந்த தேதியில் வழங்கப்பட்டது. டிக்கெட் நகல் தர வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடுத்த உத்தரவின் நகல் தர வேண்டும்.

* பாதுகாப்பு பணியில் நியமனம் செய்ய வேண்டும் என சேலம் வங்கி கொடுத்த கோரிக்கை மனுவில் நகல் வேண்டும். பணியில் இருந்த காவலர்கள் இதற்கு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்களா என்ற விவரம் தர வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் பணியின் போது யாருடன் செல்போனில் பேசினார்கள் என்ற விவரம் வேண்டும்.

* பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களில் எத்தனை பேருக்கு குடிப்பழக்கம் உள்ளது என்ற விவரம் வேண்டும். அன்றைய தினம் குடிபழக்கம் இல்லை என்று மருத்துவர் கொடுத்த சான்றிதழின் நகல் வேண்டும். கொள்ளை போன ரயிலின் மேற்கூரையில் எந்த இடத்தில், எவ்வளவு அளவில் துளை போடப்பட்டுள்ளது என்ற விவரம் வேண்டும்.

இந்த கேள்விகளுக்கு திருச்சி ரயில்வே கோட்ட ஆபரேசன்ஸ் மேலாளர் இன்று பதில் அனுப்பி உள்ளார். அதில் வழக்கு விசாரணையில் இருப்பதால் பதில் அளிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கறிஞர் பிரம்மா, உடனடியாக மேல்முறையீடு செய்துள்ளார்.

மாலை நேரத்திற்கு பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை


வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலோர், மாலை நேரத்துக்குப் பிறகு பாதுகாப்பு இல்லை என உணர்வதாக தொழில்துறை அமைப்பான அசோசெம் 

ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் தகவல் தொழில் நுட்பம், ஹோட்டல் வரவேற்பு, விமான போக்குவரத்து மற்றும் செவிலியர் துறைகளில் பணியாற்றுபவர்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. என்.சி.ஆர்.,(NCR) எனப்படும் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளைக் கொண்ட தேசிய தலைநகர் மண்டலம், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் 5 ஆயிரம் பெண்கள் ஆய்வில் பங்கேற்றனர்.

பணியிடங்களில் பெண்களுக்கு பொதுவாகவே பாதுகாப்பு குறைவு என்று அவர்களில் பலர் தெரிவித்தனர். எனினும், மாலை 6 மணிக்கு மேல் பாதுகாப்பில்லை என உணர்வதாக 92 சதவீதம் பேர் தெரிவித்தனர். பெண்கள் பாலியல் தொல்லைகளை சந்திக்கும் இடங்கள் குறித்த கேள்விக்கு, பொதுப்போக்குவரத்தான பஸ், ஆட்டோ, டாக்சி போன்றவற்றை பெரும்பாலோர் தெரிவித்தனர். பஸ் நிறுத்தங்கள், கூட்டம் நிறைந்த சந்தைகள் ஆகியவற்றிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகம் என்றும் ஆய்வில் பலர் கூறினர். 

டெல்லியில் இந்த பிரச்னை அதிகம் என்று கூறியுள்ள அசோசெம், ஒவ்வொரு 40 நிமிடத்துக்கும் ஒரு பெண் வன்முறைக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளது. நகரச் சாலைகளில் 25 நிமிடத்துக்கு ஒரு பெண் பணியாளர் ஈவ்டீசிங் செய்யப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்கு புதிய விதிமுறைகளை அரசு உடனடியாக கொண்டு வர அசோசெம் ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் வேலையில், பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஒரு சூப்பரான ஐடியாவை மகாராஷ்டிரா காவல்துறை ஆணைய‌ர் கொடு‌த்துள்ளா‌ர்.

டெல்லியில் மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமை இனி வேறு எந்த பெண்ணிற்கும் நடைபெறக் கூடாது என்பதற்காக, பெண்கள் வெளியே செல்லும் போது ஒரு பாக்கெட் மிளகாய் பொடியை உடன் எடுத்து செல்ல மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள தானே நகரில் காவல்துறை ஆணையர் ரகு வன்ஷி அறிவுறுத்தியுள்ளார். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை எதிர்த்து போராட வேண்டும் என வலியுறுத்திய அவர்,பெண்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். சுதந்திரம் பெற்று 64 ஆ‌‌ண்டுகள் முடிந்த பிறகும், நமது தாய் திருநாட்டில் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள மிளகாய் பொடியை எங்கு சென்றாலும் உடன் எடுத்து செல்ல வேண்டும் என்னும் நிலைமை துரதிஷ்டவசமானது. 

How twins evaded arrest for long time

How twins evaded arrest for long time TIMES OF INDIA NEW DELHI   25.09.2024  On Sept 21, a woman was purchasing fruits at Burari Chowk when ...