Sunday, September 11, 2016

மாலை நேரத்திற்கு பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை


வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலோர், மாலை நேரத்துக்குப் பிறகு பாதுகாப்பு இல்லை என உணர்வதாக தொழில்துறை அமைப்பான அசோசெம் 

ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் தகவல் தொழில் நுட்பம், ஹோட்டல் வரவேற்பு, விமான போக்குவரத்து மற்றும் செவிலியர் துறைகளில் பணியாற்றுபவர்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. என்.சி.ஆர்.,(NCR) எனப்படும் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளைக் கொண்ட தேசிய தலைநகர் மண்டலம், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் 5 ஆயிரம் பெண்கள் ஆய்வில் பங்கேற்றனர்.

பணியிடங்களில் பெண்களுக்கு பொதுவாகவே பாதுகாப்பு குறைவு என்று அவர்களில் பலர் தெரிவித்தனர். எனினும், மாலை 6 மணிக்கு மேல் பாதுகாப்பில்லை என உணர்வதாக 92 சதவீதம் பேர் தெரிவித்தனர். பெண்கள் பாலியல் தொல்லைகளை சந்திக்கும் இடங்கள் குறித்த கேள்விக்கு, பொதுப்போக்குவரத்தான பஸ், ஆட்டோ, டாக்சி போன்றவற்றை பெரும்பாலோர் தெரிவித்தனர். பஸ் நிறுத்தங்கள், கூட்டம் நிறைந்த சந்தைகள் ஆகியவற்றிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகம் என்றும் ஆய்வில் பலர் கூறினர். 

டெல்லியில் இந்த பிரச்னை அதிகம் என்று கூறியுள்ள அசோசெம், ஒவ்வொரு 40 நிமிடத்துக்கும் ஒரு பெண் வன்முறைக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளது. நகரச் சாலைகளில் 25 நிமிடத்துக்கு ஒரு பெண் பணியாளர் ஈவ்டீசிங் செய்யப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்கு புதிய விதிமுறைகளை அரசு உடனடியாக கொண்டு வர அசோசெம் ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் வேலையில், பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஒரு சூப்பரான ஐடியாவை மகாராஷ்டிரா காவல்துறை ஆணைய‌ர் கொடு‌த்துள்ளா‌ர்.

டெல்லியில் மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமை இனி வேறு எந்த பெண்ணிற்கும் நடைபெறக் கூடாது என்பதற்காக, பெண்கள் வெளியே செல்லும் போது ஒரு பாக்கெட் மிளகாய் பொடியை உடன் எடுத்து செல்ல மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள தானே நகரில் காவல்துறை ஆணையர் ரகு வன்ஷி அறிவுறுத்தியுள்ளார். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை எதிர்த்து போராட வேண்டும் என வலியுறுத்திய அவர்,பெண்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். சுதந்திரம் பெற்று 64 ஆ‌‌ண்டுகள் முடிந்த பிறகும், நமது தாய் திருநாட்டில் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள மிளகாய் பொடியை எங்கு சென்றாலும் உடன் எடுத்து செல்ல வேண்டும் என்னும் நிலைமை துரதிஷ்டவசமானது. 

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...