Wednesday, September 7, 2016

எஸ்.ஆர்.எம்., பல்கலையிடம் பணம் பறிக்க முயற்சி : சமூக விரோதிகள் மீது பதிவாளர் போலீசில் புகார்

DINAMALAR
சென்னை: எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி, சமூக விரோதிகள் பணம் பறிக்க முயற்சி செய்வதாக, பல்கலை பதிவாளர், போலீசில் புகார் செய்துள்ளார்.

எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளர் சேதுராமன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார் மனு: ஒன்பது ஆண்டுகளாக, எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளராக உள்ளேன். எங்கள் பல்கலை., பொறியியல், மருத்துவம், சட்டம் என, பல்வேறு பிரிவுகளில், உயர்தர கல்வியை அளித்து வருகிறது. துரதிஷ்டவசமாக, டாக்டர் ஜெயச்சந்திரன் உட்பட சிலர் அளித்த புகாரால், எங்கள் பல்கலை வேந்தரான, பச்சமுத்து, ஆக., 25ல், போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார்; அவரை ஜாமினில் எடுக்க முயன்று வருகிறோம்.

பச்சமுத்து நடத்தி வரும், இந்திய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலராக, மதன் என்பவர் இருந்தார். அவர், பச்சமுத்துவுடன் இருந்த பழக்கத்தை பயன்படுத்தி, எஸ்.ஆர்.எம்., பல்கலையில், மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக, பல கோடி ரூபாய் சுருட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார். அவர் மீது, பெற்றோர், மாணவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில், பச்சமுத்துவையும், மோசடி குற்றச்சாட்டில், மதன் சேர்த்து விட்டார். இதனால் ஏற்பட்டுள்ள களங்கத்தை, பச்சமுத்து, சட்டரீதியாக எதிர்கொண்டு, தான் நிரபராதி என்பதை நிரூபிப்பார்.

பெற்றோர் மற்றும் மாணவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை பச்சமுத்து மறுத்துள்ள போதிலும், ஜாமின் மனுவில், புகார் தாரர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், 69 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் கட்டி விடுவதாக கூறி உள்ளார்.இந்நிலையில், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி, தொழில் முறை எதிரிகள், சமூக விரோதிகள், புகார்தாரர்களில் ஒரு சிலர், எங்களுக்கு பல வடிவங்களில் மிரட்டல் கொடுத்து, பணம் பறிக்க முயன்று வருகின்றனர். நாங்கள் ஏற்கனவே, சட்ட ரீதியாக எதிர்கொண்டு, தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளிலும், சம்பந்தப்பட்டோர் பணம் பறிக்க முயன்று வருகின்றனர்; எங்கள் பல்கலையை முடக்க சதி நடக்கிறது. நீங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், சமூக விரோத கும்பல்கள், எங்களிடம் பணம் பறிப்பதுடன், உயிருக்கும் ஆபத்தும் ஏற்படுத்தி விடுவர். எங்கள் கல்வி நிறுவனங்களில் பயிலும், 52 ஆயிரம் மாணவ, மாணவியரின் எதிர்காலம் கருதி, எங்களிடம் பணம் பறிக்க முயலும் கும்பல் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...