Wednesday, September 7, 2016

50 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்தால் சில்வர் அண்டா ஃப்ரீ..!- இது புது கலாட்டா!



அழகுக்கு அழகு சேர்க்கும் தங்க நகைகளை அணிவதை விட நடுத்தரவர்க்கத்தினர் அடகு வைக்க அதிகம் பயன்படுத்துகின்றனர். சமீபகாலமாக தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் தங்க நகைகளுக்கு வழங்கப்படும் கடன் மதிப்பும் அதிகரித்துள்ளது. தங்க நகைகளை உரசிப்பார்த்து உடனடியாக வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது. இதில் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தங்க நகைகளுக்கு கடன் வழங்க கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்து தனியார் வங்கிகள் தங்க நகைகளுக்கு கடனை அள்ளி கொடுக்கின்றன. சில வங்கிகள் ஞாயிற்று கிழமைகளில் கூட தங்க நகைகளுக்கு கடன் வழங்குகின்றன.

இந்த போட்டி காரணமாக தனியார் நிதி நிறுவனங்கள், அடகு கடைகள் (பான்புரோக்கர்ஸ்) பிசினஸ் இல்லாமல் தள்ளாட ஆரம்பித்து விட்டன. காரணம் வங்கிகளை விட இங்கு கூடுதல் வட்டி. வங்கிகளில் ஆயிரத்தெட்டு நடைமுறைகளுக்குப் பிறகே தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்படும். ஆனால், நிதிநிறுவனங்கள், அடகு கடைகளில் நடைமுறைகள் பெயரளவுக்குத் தான் இருக்கும்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் போட்டி போட்டு தங்க நகைகளுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதால் அடகு கடைகளில் பிசினஸ் டல்லாகி விட்டதாக அதன் உரிமையாளர்கள் சொல்கிறார்கள். இதனால் அடகு கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை கவர புதிய யுக்தியை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளனர். வழக்கமாக ஜவுளி கடைகள் தான் பரிசு திட்டத்தை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பார்கள். அதே நடைமுறையை செய்யாறு அடகு கடைக்காரர்கள் கடைப்பிடித்துள்ளனர். இதற்காக ஸ்கூட்டி முதல் டிபன் பாக்ஸ் வரை பரிசுகளை அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்யாறு பகுதியில் பிட் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளன. அதில் எங்களிடம் 50 ஆயிரம் ரூபாய்க்கு நகைகளை அடகு வைத்தால் பெரிய சில்வர் அண்டா இலவசமாக வழங்கப்படும். 30 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்தால் சில்வர் பானை இலவசம். 10 ஆயிரத்துக்கு அடகு வைத்தால் எவர்சில்வர் பேஷன் இலவசம், 5 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்தால் டிபன் பாக்ஸ் இலவசம் என்று அதிரடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்படும் நகைகளுக்கு ஒரு கூப்பன் வழங்கப்படும். 1.11.2016ல் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.மகேஷ்

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...