Wednesday, September 28, 2016

மணமான பெண் வீட்டுக்கு பெற்றோர் போகலாமா?

புதுடில்லி: திருமணமான பெண் குடியிருக்கும் கணவரின் வீட்டுக்கு, அந்தப் பெண்ணின் பெற்றோர் செல்ல முடியுமா என்பது குறித்து, டில்லி கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், டில்லி செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, விகாஸ் தல் அளித்த தீர்ப்பு: கணவன் மற்றும் அவருடைய குடும்பத்தாருடன் இந்தப் பெண்ணுக்கு பிரச்னை உள்ளது; அதே நேரத்தில், அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். 'பெண்ணின் பெற்றோர், எங்கள் வீட்டுக்கு வரக் கூடாது' என, கணவர் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக விசாரித்த கீழ் கோர்ட், 'திருமணமான பெண்ணின் பெற்றோர், கணவர் வீட்டிற்கு வர உரிமை இல்லை' என, கூறியுள்ளது. இந்த தீர்ப்பை ஏற்க முடியாது. மனிதன் ஒரு சமூக விலங்கு; உறவுகளோடு சேர்ந்து, இணக்கமாக வாழ வேண்டும். திருமணமான பெண் தங்கியிருக்கும் வீட்டுக்கு, அவளது பெற்றோர் செல்வதற்கு தடை விதிக்க முடியாது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...