Wednesday, September 7, 2016

ரயில் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி : தாய் காலும் துண்டானது; சித்தப்பிரமையான நபர்

சென்னை: மாம்பலம் ரயில் நிலையத்தில், தஞ்சையில் இருந்து சென்னை வந்த மன்னை விரைவு ரயிலில், கணவன் கண் முன்னே, மனைவி தவறவிட்ட ஒன்றரை வயது குழந்தை

பலியானது; தாய்க்கும் கால் துண்டானது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவடிவேல், 40; பேராசிரியர். சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி லட்சுமி, 32. கே.கே.நகர் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு, ஒன்றரை வயதில் ஏகஸ்ரீ என்ற மகள் இருந்தாள். கடந்த வாரம், சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு, குடும்பத்துடன் சுந்தரவடிவேலு, விழா முடிந்து, நேற்று முன்தினம் இரவு, 9:15 மணிக்கு, தஞ்சையிலிருந்து சென்னைக்கு வரும் மன்னை விரைவு ரயிலில், மனைவி மற்றும் குழந்தையுடன், முன்பதிவு செய்யப்பட்ட, இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணித்தார்.




கோர சம்பவம் : சென்னை, மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி, கே.கே.நகர் செல்வது எளிது என்பதால், அந்த ரயில் நிலையத்தில் இறங்குவது என, முடிவு செய்துள்ளனர். ரயில், நேற்று காலை, 5:10 மணிக்கு, மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது, துாக்கத்தில் இருந்த சுந்தரவடிவேலும் அவரது மனைவியும், ரயில் புறப்பட தயாராக இருந்த சமயத்தில், கண் விழித்து பார்த்துள்ளனர். தாங்கள் இறங்க வேண்டி ரயில் நிலையம் வந்துவிட்டதால், சொந்த

ஊரிலிருந்து எடுத்து வந்த அரிசி, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை துாக்கிக் கொண்டு சுந்தரவடிவேல் முதலில் இறங்கி உள்ளார்.அவரை தொடர்ந்து, கையில் குழந்தையை துாக்கியபடி லட்சு மியும் இறங்கி உள்ளார். அப்போது, ரயில் வேகமெடுக்கத் துவங்கியதாக தெரிகிறது. இறங்கிவிடலாம் என நினைத்து, நடைமேடையில் கால் வைக்க முயன்ற லட்சுமி, நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். இதில், லட்சுமி வைத்திருந்த குழந்தை, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே இருந்த துவாரத்தில் விழுந்தது.இதனால், ''என்னங்க... குழந்தைய காப்பாத்துங்க,'' என பதறியபடி, அந்த துவாரம் வழியாக லட்சுமி இறங்கினார். இதனால், அவரது காலும் மாட்டிக்

கொண்டது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர நிகழ்வில், குழந்தையும் மனைவியும்

உயிருக்கு போராடுவதை கண்ட சுந்தரவடிவேல் கதறி அழுத காட்சி, கல் நெஞ்சத்தையும் கரைப்பதாக இருந்தது.




மீட்கும் முயற்சி : இந்த கோர விபத்தை கண்டு, ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் கூச்சல் போட்டனர். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, குழந்தை மற்றும் லட்சுமியை மீட்கும் முயற்சியில்

ஈடுபட்டனர்.ஆனால் அந்த பச்ச மண், ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்து கிடந்தது. இடது கால் துண்டாகிக் கிடந்த லட்சுமி, மகளின் பேரை உச்சரித்தவாறு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். தகவலறிந்து வந்த, எழும்பூர் ரயில்வே போலீசார், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையின் உடல், பிரேத பரிசோதனைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. கண் எதிரே குழந்தை இறந்து விட, மனைவியும் உயிருக்கு போராடு வருவதை கண்ட சுந்தரவடிவேல், பித்துப்பிடித்தவர் போல் காணப்படுகிறார்; அவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுந்தரவடிவேலின் சொந்த ஊரிலிருந்து, அவரது உறவினர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர். நேற்று காலை நடந்த இந்த கோர விபத்தால், மாம்பலம் ரயில் நிலையம் சோகமயமாக காட்சி அளித்தது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...