Sunday, September 11, 2016

ரயில் பெட்டியை தாழிட்டு இளம்பெண்ணிடம் பலாத்காரம்: ரயில்வே ஊழியர் அதிரடி கைது


திருச்சி: திருச்சி ஜங்ஷன் எடமலைப்பட்டிபுதூர் யார்டில் ரயில்வே பெட்டிகளை பராமரிப்பு பணி நடப்பது வழக்கம். இங்கு புதுக்கோட்ைட ஆலங்குடியை சேர்ந்த மரியச்செல்வம் (40) என்பவர் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் ஊழியராக கடந்த 10 ஆண்டாக பணியில் உள்ளார். 3 மாதங்களுக்கு முன் துப்புரவு பணிக்காக 23 வயது இளம்பெண் புதிதாக பணியில் சேர்ந்தார். இவருக்கு ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணி வழங்கப்பட்டது. கடந்த 5ம் தேதி ரயில் பெட்டிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அந்த பெட்டியில் ஏறிய மரியசெல்வம், ரயில் பெட்டியின் கதவை தாழிட்டு, அந்தப் பெண்ணை கட்டிப்பிடித்து பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கத்தி கூச்சல் போட்ட இளம்பெண், மரியசெல்வத்திடமிருந்து தப்பி ரயில் பெட்டி கதவை திறந்து வெளியே ஓடிவந்தார். யார்டில் பணியில் இருந்த சூப்பர்வைசரிடம் புகார் அளித்தார். பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இளம்பெண்ணின் புகாரை பெற்றும் சூப்பர்வைசர் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாக கூறப்படுகிறது. பெண்ணின் பெற்றோர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று திருச்சி ஜங்ஷன் வந்து ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.

இதையடுத்து அத்துமீறி கதவை தாழிட்டல்(342), அடித்து காயப்படுத்துதல்(322) மற்றும் பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குபதிந்தனர். தலைமறைவாக இருந்த மரியசெல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். ரயில் பெட்டியில் சகபெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் ரயில்வே ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...