Wednesday, September 21, 2016


அரிப்பு ஏற்படுவது ஏன்?

அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நம்மை ‘எச்சரிக்கை மணி’ அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிற ஓர் எதிர்வினை இது.

இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும். உடலியல்ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’.

எதிர்ப்புப் புரதம்

அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை ‘இம்யூனோகுளோபுலின் – ஈ’ (IgE) என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.

மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.

பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். சொறியச் சொறிய அரிப்பு கொஞ்சம் குறைந்தும்விடுகிறது. எப்படி? ‘லேன்ட்-லைன்’ போன் வேலை செய்யும் மெக்கானிஸம் போன்றது இது. லேன்ட் லைன் போனில், எதிரெதிர் முனைகளில் உள்ளவர்களை இணைப்பது ஒரே ஒரு கம்பிதான். எனவே, ஒரே நேரத்தில் ஒரே எண்ணில் இரண்டு பேர்தான் பேச முடியும்.

இதுபோல், அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளைக்கு எடுத்துச் செல்வதும், மூளையிலிருந்து சொறிய வேண்டும் என்ற கட்டளையை விரல்களுக்கு எடுத்து வருவதும் ஒரே ‘நரம்பு கேபிள்’தான். நாம் சொறிய ஆரம்பித்ததும், சொறிகிற உணர்வையும் இந்த நரம்புதான் மூளைக்கு எடுத்துச் செல்கிறது. ஒரு நேரத்தில் ஒரு தகவலை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்லும் என்பதால், அரிப்பு உணர்வை மூளைக்கு எடுத்துச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு, சொறியும் உணர்வை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்கிறது. இதனால் அரிப்பு குறைகிறது.

என்ன காரணம்?

அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.

வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும்.

குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, ‘நிக்கல்’ வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது.

அப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப்போகிறது. இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் ‘கரப்பான் நோய்’ (Eczema) என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழு வதும் அரிப்பை ஏற்படுத்தும்.

குளிரும் ஆகாது!

சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.

தொடை இடுக்கு அரிப்பு

காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும். அரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த இடத்தில் அகலமாகப் படை போலத் தோன்றும். கால் விரல் இடுக்குகளில் வருகிற சேற்றுப் புண்ணும் அரிப்பை ஏற்படுத்துகிற ஒரு காரணிதான். தண்ணீரில் அதிகம் புழங்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இந்தத் தொல்லை இருக்கும்.

அடுத்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி... இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு தொல்லை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்துகொண்டால், ‘தோல் மடிப்பு நோய்’ (Intertrigo) தோன்றும். இதுவும் அரிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு நோய்தான். இவை தவிர பேன், பொடுகு, தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத்தும். எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்துபோவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

வயதானால் வரும் அரிப்பு

முதுமையில் வருகிற அரிப்புக்கு வேறு காரணம் இருக்கிறது. வயதானவர்களுக்குத் தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைவதால், தோலில் வறட்சி ஏற்பட்டு அரிப்பை ஏற்படுத்துகிறது. சிலருக்கு அருவியில் குளித்து முடித்ததும் அரிப்பு ஏற்படும்.

எச்சரிக்கும் நோய்கள்

உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு ‘நூல் புழு’ காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்’எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

உணவும் மருந்தும்

நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்ல லாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.

மனப் பிரச்சினைகள்

அரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. ‘ஹிஸ்டீரியா’ என்ற மனநோய் உள்ளவர்கள் உடலில் பூச்சி ஊறுவதைப்போல் கற்பனை செய்துகொள்வார்கள். இதனால் எந்நேரமும் உடலைச் சொறிந்துகொண்டே இருப்பார்கள். இவர்களது மனநோய் குணமானால்தான் அரிப்பும் சரியாகும்.

‘உடம்பு அரித்தால் ஒரு ‘அவில்’ போட்டுக்கோ’ என்று சாதாரணமாக வீடுகளில் சொல்வார்கள். அதேவேளையில் எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெற்றால்தான், அரிப்பு முற்றிலுமாகக் கட்டுப்படும். நாமாக மருந்து சாப்பிடுவது, ஆபத்துக்கு அழைப்பு விடுப்பதைப் போல.



-கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

பூச்சிகள் உலகம்: உலகின் ஆபத்தான ங்கொய்ய்... ங்கொய்ய்...


உலகிலேயே அதிக எண்ணிக்கையில் மனிதர்கள் இறப்புக்குக் காரணமாகும் உயிரினம் எது தெரியுமா? சிங்கம் புலி போன்ற விலங்குகளோ, சுறா, திமிங்கலம் போன்ற கடல் வாழ் உயிரிகளோ, பாம்பு போன்ற விஷ ஜந்துக்களோ கிடையாது. அளவில் மிகவும் சிறிய கொசுதான் அந்த ஆபத்தான உயிரினம்!

மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு எனப் பல்வேறு காய்ச்சல்களைப் பரப்பும் கொசுவிடமிருந்து நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதுவும் மழைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆபத்தான உயிரினம் மட்டுமல்ல, அறிந்துகொள்ள பல்வேறு சுவாரசியங்களைக் கொண்டிருப்பவை இந்தக் கொசுக்கள். அவற்றைத் தெரிந்து கொள்வோமா?

டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலிருந்து பூமியில் இருக்கும் பழமையான உயிரினங்களில் ஒன்று கொசு.

# சுமார் 3,000-க்கும் மேற்பட்ட கொசு இனங்கள் உலகம் முழுக்க வாழ்கின்றன. இவற்றில் குறிப்பிட்ட இனக் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைப் பாதிக்கின்றன.

# பெண் கொசு மட்டுமே மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளிடமிருந்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன. கொசுக்கள் நீர்ப்பரப்பில் முட்டையிட்டு தனது இனத்தைப் பெருக்கும். அதனாலேயே நமது வசிப்பிடத்தைச் சுற்றி நீர் தேங்காது கவனித்துக்கொள்கிறோம்.

# பெண் கொசு தனது முட்டைகளை உருவாக்கத் தேவையான புரதச் சத்துக்காக மனித ரத்தத்தை உறிஞ்சுகின்றன.

# ஆண் கொசுக்கள் பெரிய தொந்தரவு செய்வதில்லை. தமக்குத் தேவையான உணவைத் தாவரங்களிடமிருந்து ஆண் கொசுக்கள் பெறுகின்றன.

# ஆணைவிடப் பெண் கொசுவுக்குப் பல மடங்கு ஆயுள் அதிகம். பெண் கொசு ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் இடும். இதுவே கொசுக்களின் எண்ணிக்கை வேகமாகப் பெருகக் காரணம்.

# கொசு நம் தோலுக்குள் துளையிட்டு ரத்தம் உறிஞ்சுவதையே கொசு கடிப்பதாக சொல்கிறோம். உண்மையில் கொசுவுக்குப் பல் போன்ற உறுப்புகள் இல்லை. ஊசி போன்ற குழல் ஒன்றைச் செலுத்தி ரத்தத்தை உறிஞ்சுகிறது.

# அப்படி உறிஞ்சும்போது உமிழ்நீரை நம் உடலில் கொசு செலுத்துகிறது. இதுவே நமக்கு அந்த இடத்தில் அரிப்புக்கும் தடிப்புக்கும் காரணமாகிறது.

# மனிதர்களிடமிருந்து வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் உடல் வெப்பத்தைத் தனது உணர்நீட்சி மூலம் பல அடி தொலைவிலிருந்தும் கொசுக்களால் அடையாளம் காண முடியும்.

# கொசு நம்மைச் சுற்றிப் பறக்கும்போது ‘ங்கொய்ய்’ என்று எரிச்சலூட்டுமே, அந்த ஒலி கொசுவின் இறக்கைகளிலிருந்து வருகிறது. விநாடிக்குப் பல நூறு தடவைகள் என அப்போதைய வேகத்தைப் பொறுத்துத் தனது இறக்கைகளைக் கொசு விசிறிப் பறக்கும். கொசுக்கள் முன் பின்னாகவும், பக்கவாட்டிலும், மேல் கீழ் என பல திசைகளில் பறக்கக் கூடியவை.

# சராசரியாக 2.5 மில்லி கிராம் எடையே உள்ள கொசு, தனது எடையைப்போல 2 மடங்குக்கும் அதிகமான ரத்தத்தை மனிதரிடமிருந்து உறிஞ்சும்.

மிகக் குறைவான எடை காரணமாக, வேகமான காற்று கொசுவுக்கு இடைஞ்சலாகும். இதனாலேயே கொசு விரட்டிகளைவிட மின் விசிறி, நம்மைக் கொசுக்களிடமிருந்து பாதுகாக்கிறது.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது கடினம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்

Return to frontpage

தமிழகத்துக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவது மிகவும் கடினமானது. இந்த விவகாரத்தில் கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில‌ முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவது குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையில் காவிரி மேற்பார்வை குழு வரும் 30-ம் தேதி வரை நாள்தோறும் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறக்க உத்தரவிட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் 27- ம் தேதி வரை 6 ஆயிரம் கன அடி நீரை திறந்து விடுமாறு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்த உத்தரவை அமல்படுத்துவது கடினமானது.

கர்நாடக அரசின் வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், மூத்த அதிகாரிகள் ஆகியோர் எடுத்துக்கூறியும் உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் 4 வாரம் கெடு விதித்திருக்கிறது. இது தொடர்பாக விவாதிப்பதற்காக புதன்கிழமை அமைச்சரவை கூட்டத்தையும், எம்எல்ஏ., எம்.பி.க்கள் கூட்டத்தையும், அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்டியுள்ளேன். இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

எனவே கர்நாடக மக்களும், கன்னட அமைப்பினரும், விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும். கர்நாடக மக்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே கர்நாடக அரசுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்

எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

கர்நாடகாவில் போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இது தொடர்பாக முன்னாள் முதல்வரும், கர்நாடக பாஜக தலைவருமான எடியூரப்பா கூறும்போது, ''கர்நாடகாவில் குடிப்பதற்கு குடிநீர் நீர் இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது எனக்கூறி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் சித்தராமையா ஆட்சியை இழந்து சிறைக்கு சென்றால் நாங்களும் அவருடன் சிறைக்கு செல்வோம். எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரை கூட தரக்கூடாது''என்றார்.
Admission based on varsity rank list may defeat NEET's purpose
Sep 21 2016 : The Times of India (Chennai)

Adarsh Jain

The national eligibility cum entrance test (NEET) was expected to introduce transparency into MBBS admission in deemed universities.But CBSE, which conducts the exam, hasn't released a rank list that would have helped to ensure merit in the admission process. On top of that, a recent UGC order that allows deemed universities to create their own merit list from the pool of applications provides room for unscrupulous managements to favour capitation fee paying studen over others, say par ents.

V Ramasubbu, private bank employ ee, has applied a three private institu tions for his son “Without a merit lis framed by the stat government or th CBSE, it is tough t believe the admis sion process that pri vate universities wil follow,“ he says. “How will I know if my so is being given admis sion in the order of the score secured by candidates in NEET?“ he asks.

On September 15, the UGC asked 123 deemed universities to come out with an intra-merit list to carry out the admissions. “If for any reason common counselling is not being held by the state government or the deemed universities are not covered under the state government's common counselling, the latter should employ a transparent system of admission under which no meritorious student is denied admission in their campus. The admission should be purely done based on inter-se-merit applicants based on marks obtained in NEET,“ says deputy secretary of UGC Sunita Siwach.

It's not like the CBSE does not or has not followed the system of releasing a rank list to keep the admission process transparent. The joint entrance examination (JEE) that is the gateway for admission into the IITs, NITs, IITs and ISM Dhanbad, has a rank list that is available in the public domain after the results are published. The state's engineering admission system coordinated by Anna University, Chennai too follows a transparent admission system where the rank list is published in the public domain after scrutinising the applications. The health department too follows a similar system for admission in medical and dental courses.

CBSE officials however say that they do not have the orders to release a rank list like in the case of JEE.There is also the argument on the system that is followed in the graduate aptitude test for engineering (GATE) where again a rank list is not published in the public domain.

Private medical institutions have started issuing applications. Some are following the system of online application, while some are calling for applications through newspaper advertisements. “I do not know how many candidates have applied for admission. And, in the absence of the rank list, I also do not know if my son stands a chance to get admission in any of the universities we have applied to,“ said Ramasubbu.

The UGC, in its circular has asked deemed universities to submit a report after completing the admission process. “All admissions in MBBS BDS courses shall be in compliance with the rules mentioned in the September 15 circular. And a compliance report shall be submitted to the UGC after the completion of the admission process,“ said Siwach.Siwach.

Email your feedback with name and address to southpole.

toi@timesgroup.com

விவாதக் களங்கள்


மனித வாழ்க்கையில் விவாதங்கள் முதன்மையானவை. தனிமனிதன் தன்மனத்தோடும், ஒரு மனிதன் பிற மனிதனோடும், ஒரு குழு இன்னொரு குழுவோடும் நேரிய விவாதங்களை மேற்கொள்ளல் இயற்கையானது மட்டுமில்லை இன்றியமையாததும்கூட.
ஊரிலிருந்து வந்த உறவினர் ஒருவரிடம் "ஓய்வெடுத்துக் கொண்டிருங்கள் வங்கி வரை போய்வருகிறேன்' என்றேன். அவர் தனக்கும் அங்கு வேலையிருப்பதாகக்கூறி என்னுடன் வந்தார். வங்கிக்குள் நுழைந்தோம். இணைய இணைப்பின்மை காரணமாகப் (Non-connectivity of Net) பணம் செலுத்தவும் பணம் பெறவுமான அமைப்பிடங்கள் மூடப்பட்டிருந்தன.
என்னுடன் வந்தவர் உள்ளே இருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தார். சொந்தஊர், இவ்வூருக்கு வரும் முன் வேலைபார்த்த இடம், படிப்பு என ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வந்தார். கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தபடி விடை சொல்லிக் கொண்டே வந்தவர் தான் வேளாண்மையியல் பட்டதாரி (Agricultural degree holder) என்றார்.
என் உறவினர் வங்கிப்பணி முடிந்து இல்லம் திரும்பியதும் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
"வேளாண்மை படித்தவர் வயலுக்கு வேலைக்குப் போகாமல் வங்கிப் பணிக்கு வரலாமா' என்பது அவரின் முதல் வினாக்கணை. "வங்கிக்கு ஆளெடுக்கும்போது விண்ணப்பதாரர் ஒரு பட்டதாரியாக இருக்க வேண்டும் என்பதுதான் விதியே தவிரக் குறிப்பிட்ட பட்டம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பியுங்கள் எனக் கேட்க முடியாதே' என்பது என் விடை.
அவர் அடுத்த எய்த அம்பு கூர்மையானது. அது "இவர் வேளாண்மைப் படிப்பைத் தேர்வு செய்யாதிருந்தால் ஒரு விவசாயக் குடும்பத்து இளைஞன் அந்தப் படிப்பைப் பெற்றிருக்க முடியும். அதன்வழி படித்த படிப்பையொட்டி விளைச்சல் செயல்பாடுகளில் ஈடுபடவும் வழி பிறந்திருக்குமே' என்பதாம்.
சிறிது சிந்தித்துவிட்டு அவரிடம் "அப்படிப் பார்க்க வேண்டுமென்பதில்லை. மருத்துவர் ஒருவரோ பொறியாளர் ஒருவரோ இந்திய ஆட்சிப் பணித் (IAS) தேர்வெழுதி ஆட்சியராக வருவதில் என்ன தவறு' என்றேன்.
"வாதத்திற்கு அப்படியே வைத்துக் கொள்வோம். நல்ல ஆட்சியர் ஒருவர் கிடைக்கும்போது ஒரு நல்ல மருத்துவரை இந்தச் சமூகம் இழக்கிறதே மருத்துவர்களில் சிலர் ஆட்சிப்பணி செய்ய முடியும் ஆட்சியர்கள் ஒரு நாளும் மருத்துவராக முடியாதே' என்ற அவரின் வினாவால் சற்றே தடுமாறத்தான் இயன்றது.
அரைமணி நேரத்துக்கும் மேலாக வாதாடியபின் நிறைவில் "உங்களது கருத்தைச் சொல்லுங்கள்' என்று கூறி அமர்ந்தேன். அவரின் சொல்லாடல்கள் வருமாறு: "வேளாண்மைப் படிப்பு அவருக்கு மரியாதையான வேலை வாங்கித் தந்துள்ளது. ஆனால், படித்த படிப்புக்கு அவர் என்ன மரியாதை செய்துள்ளார்?
இரண்டாவதாக, வங்கி நுட்பப் படிப்பு (Banking Technology Course) படித்த ஒருவரின் வேலையைத் தட்டிப் பறிப்பதாகத்தானே வேளாண்மைப் படிப்பாளியின் வங்கிப் பணி அமையும்!' ஒருவர் வழக்கறிஞர் தொழிலுக்குப் படிக்கும்போது அவர் எந்தத் துறைப் பட்டதாரி என்று பார்ப்பதில்லை. பார்க்க வேண்டியதுமில்லை. ஆனால் எல்லா இடத்துக்கும் இது பொருந்துமா என்பதையும் கணக்கிலெடுக்க வேண்டும்.
இக்கருத்துகளை எடைபோட்டுப் பார்த்தால் அவருடைய கருத்தில் அழுத்தம் சற்று அடர்த்தியாகவே தென்பட்டது. ஆனாலும், பிற துறைப் பட்டதாரிகள் வங்கிப் பணிக்கு உரியவரில்லை எனவும் கூறஇயலாது. மேலை நாடுகளில் அடுத்த ஐந்தாண்டுகளில் எவ்வளவு பொறியாளர்கள் தேவைப்படுவர் எனக் கணக்கிட்டு அத்தனை இடங்களை மட்டும் கல்லூரிகளில் அனுமதித்துக் கற்க வைப்பார்களாம்.
ஆனால் நம் நாட்டில் புற்றீசல்கள் போல எல்லாப் படிப்புகளுக்குமான கல்லூரிகள். இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் ஒருபுறம். எந்த வேலையானானலும் பரவாயில்லை என்னும் மனநிலை மறுபுறம்.
அதனால்தான் கடைநிலை ஊழியருக்கான பதவிக்கு முதுகலை படித்தவர்களும் விண்ணப்பம் போடும் துயரச்சூழல். இவை போன்றவற்றால் "படிப்பும் வேலையும்' என்ற தலைப்பில் விவாதிக்க வேண்டிய சூழல் இயல்பாகவே இவண் கருக்கொள்கிறது.
வடமாநிலத்திற்குச் சுற்றுலா. குழுவாகப் பயணித்தோம். சென்னையிலிருந்து தொடர்வண்டிப் பயணம். எங்களுடன் பயணித்த ஒரு குடும்பம் எல்லோருக்குமாக இட்லி, துவையல், மிளகாய்ப்பொடி போன்றவற்றை எடுத்து வந்தது. இரவு உணவுக்கான நேரம் வந்தது.
ஒவ்வொருவர் கையிலும் காகித அட்டையிலான தட்டுகள். இட்லி வைத்திருந்த பெரிய பாத்திரத்திலிருந்து எல்லோருடைய தட்டுகளிலும் மூன்றுமூன்று இட்லிகள் வைக்கப்பெற்றன. துவையல் வைக்கப்பட்டது. சிலர் மட்டும் எண்ணெய் கலந்த மிளகாய்ப்பொடியையும் உடன் சேர்த்துக் கொண்டனர்.
மூன்று இட்லிகளையும் உண்ட ஒரு சிறுவனுக்கு அடுத்தாற்போல இட்லி தேவைப்பட்டது. பெரிய கலத்தில் உள்ள இட்லியை எடுக்கப் போனபோது அவனுடைய அம்மா அவனைத் தடுத்தார். இருங்க இதோ வந்துடறேன் என்றபடி அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த இட்லித்தட்டை இருக்கையில் வைத்துவிட்டார். விடுவிடென்று அந்தப் பெட்டியின் இறுதிப் பகுதியையும் கடந்தார். வெளிப்பகுதியிலிருந்த குழாயில் கையைக் கழுவிவிட்டுத் திரும்பினார்.
தான் கொண்டுவந்திருந்த பெட்டி ஒன்றைக் குடைந்து, பொருட்களைத் துழாவி, அடிப்பகுதியிலிருந்து ஒரு மர இடுக்கி ஒன்றை எடுத்தார். அதனையும் குழாய் நீரில் கழுவிக் கொணர்ந்தார். அந்த இடுக்கியின் மூலம் பெரிய கலத்திலிருந்து இட்லியை எடுத்துப் பையனின் தட்டில் வைத்தார்.
இந்தப் பணிகளை அவர் மேற்கொள்வதற்குள் பலரின் தட்டுகளில் இட்லிகள் தீர்ந்துவிட்டன. அந்தப் பையன் கேட்டான் இட்லியைக் கையாலெடுத்துக் கொண்டால் என்னவாம்? ஓர் இனந்தெரியாத சினம் இச்சொற்களில் இழைந்தது.
"அப்படியில்லே தம்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிற எச்சில் கையினாலே இட்லியை எடுத்தா மத்தவங்களுக்கு ஒரு மாதிரியா இருக்கும். சிலர் அருவருப்பாகக் கூட நெனப்பாங்க அதுனாலதான் கரண்டி, இல்லாட்டா இடுக்கி வச்சு எடுத்துக்கறோம்' என்றார்.
அந்தப் பையனைவிட இரண்டு மூன்று வயது மூத்த ஒரு சிறுமி சட்டென்று "எச்சில் கையினாலே எடுக்க வேண்டாம் இடது கையினாலே எடுத்துக்கலாமே' என்றார். பொதுவாக அப்படிச் செய்வதில்லை. இடது கையால் உணவினை நேரடியாகத் தொட்டு எடுப்பதில் பலருக்கு இசைவில்லை.
இதைப் பெரியவர்கள் புரியவைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பையன் உதிர்த்த சொற்களில் இன்னமும் விவாதம் உறங்கிக் கொண்டுள்ளது அவன் கூறியவை வருமாறு:
"எல்லாம் சரிதான். நான் என் எச்சில் கையால் இட்டலிப் பாத்திரத்தில் கை வைக்கக்கூடாது என்கிறீர்களே, நான் தொட்ட இட்லியைத்தான் வெளியே எடுத்துக் கொள்கின்றேனே மற்ற இட்லிகள் எல்லாம் புனிதம் கெடவில்லையே, எல்லா உணவுகளிலும் என் எச்சிற்கை படவில்லையே, அப்புறம் என்ன தவறு?
ரெண்டாவதா நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கையாலே எடுத்து மத்தவங்களுக்குக் கொடுத்தாத்தானே தப்பு? நான் எனக்குத்தானே எடுத்துக்கறேன்'. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்களைப் போன்றவர்க்கு உடனடியாகப் பதில் கூறத் தெரியவில்லை. உண்டு பல நாட்களாகிவிட்டன. அந்த விவாதத்தை மட்டும் இன்னமும் அசைபோட்டுக் கொண்டே இருக்கிறோம்.
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஒரு மேடையில் பேசும்போது பின்வரும் செய்தியை முன்வைத்தார். "மக்களை ஏழை என்றும் பணக்காரன் என்றும் இறைவன் படைத்தான் என்று பலரும் நினைக்கிறோம். அது பொய். இறைவனைத்தான் நாம் அப்படி வேறுபடுத்தி வைக்கிறோம்.
பிள்ளையார்பட்டி என்னும் திருத்தலத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளியிருக்கிறார். அவரை வணங்குகிறோம் அருள் பெறுகிறோம். கோவிலின் வருவாயும் கணிசமானது. அவ்வூரின் மையச் சாலையிலிருந்து உள்ளே வரும்போது ஒரு மரத்தடியில் ஒரு விநாயகர் இருக்கிறார். நித்தியபூசை என்பதாகக்கூட வழிபாடு அந்த விநாயகருக்குக் கிடையாது. ஒரு சின்னக் கர்ப்பூரம் கூட ஏற்றப்படுவதில்லை. மலர் வழிபாடு, அருச்சனை என எதுவுமே மரத்தடி விநாயகருக்கு இல்லை.
ஒரே ஊரில் இரண்டு விநாயகர்கள்மேல் இரண்டுவிதப் பார்வைகள். இப்போது சொல்லுங்கள் கடவுள் மனிதனை ஏழை, செல்வந்தர் எனப் படைத்தாரென்பது மெய்யா அல்லது மனிதர்கள் கடவுளை ஏழை, பணக்காரர் எனப் பிரித்து வைத்துள்ளனர் என்பது மெய்யா?'
ஆன்மிகத்துக்கு எதிரானதன்று இக்கேள்வி. அதிகார வர்க்கம் - அடிமை வர்க்கம் எனப்பேசும் போக்கினதாகவும் இக்கூற்று இல்லை. இவ்வாறு அமைந்தமைக்கான காரணங்கள் இருக்கக்கூடும். இக்கேள்விக்குச் சட்டென்று பதில் தர இயலாது. ஆனாலும், விவாதத்திற்குரியது.
புதுவையிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊரின் நடுவே பெரிய கோவில் இருக்கும். அதற்குப் பெயர் ஏழை மாரியம்மன் கோவில். அதே ஊரில் அக்கோவிலைவிடச் சிறிய ஆலயங்கள் உண்டு. அங்கு எழுந்தருளியுள்ள அம்மனை ஏழையம்மன் என்று அழைப்பதில்லை.
ஏராளமான செல்வங்களைக் கொட்டி வெகு நேர்த்தியான ஆலயம் ஒன்றை அரசன் எழுப்பிட, இறையன்பர் ஒருவர் தம் மனத்துக்குள்ளே ஆலயம் கட்டியபோது ஆண்டவன் மனக்கோவிலில் எழுந்தருளினானே தவிர, மன்னன் கோவிலுக்கு வரவில்லை என்ற புராணம் இந்த மண்ணில்தான் நிகழ்ந்தது.
கூர்ந்து நோக்கினால், புகழ்பெற்ற சிலருடைய வருகைக்குப் பிறகு சில ஆலயங்கள் பத்தர்களை ஈர்த்தன என்பது தெரியவரும். சில நம்பிக்கைகளும் இச்செயல்பாடுகளின் பின்னணியில் அமைந்திருக்கலாம்.
கற்பக விநாயகருக்கு உரிய முறையில் வழிபாடு இயற்றுவோர் பத்தில் ஒரு பங்காவது பக்கத்து விநாயகருக்கும் தங்களின் பங்களிப்பை செய்யலாமே செய்ய வேண்டுமென்பதுதான் இவ்விவாதத்தின் மையமாகிறது. இறையன்பர்களுக்கு இப்படிப் பாடம் நடத்த முடியாதுதான். ஆனால் கேள்வியின் பின்னால் உள்ள கனமான சிக்கலினை அழித்துவிடவும் முடியாதே.
வாழ்க்கைப் பாதையில் இப்படி விவாதங்கள் பல தோன்றும். சரியான விடைகளை நோக்கி அவை நகர்ந்தால் நலம் கூடும்; வளம் சேரும்.
விவாதங்களுக்கான களங்களும் மிகுதி. விவாதங்களும் நிறைய. சில களங்கள் மட்டும் ஓரளவே பொருத்தமான விடைகளைத் தந்திருக்கின்றன. எஞ்சியுள்ள தொடர் சிக்கல்களையும் விரிவாக விவாதிக்க முன்வரலாமே?


மீனம்பாக்கம் டூ சின்னமலை..! தொடங்கியது மெட்ரோ ரயில் சேவை


மீனம்பாக்கம் டூ சின்னமலை மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்..! கட்டணம் எவ்வளவு?

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கி.மீட்டர் தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கணிசமான ரயில் தடம் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாககோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் மேம்பாலம் பணிகள் முடிந்த நிலையில், கடந்தாண்டு முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து சின்னமலை - விமான நிலையம் மற்றும் செனாய் நகர் - கோயம்பேடு இடையிலான சுரங்கப் பாதைகளை நிறைவு செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதில் சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் பாதை பணி கடந்த ஜூலையில் முடிவடைந்த நிலையில், அந்த பாதையில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து விமான நிலையம்- சின்னமலை இடையே மெட்ரோ ரயில்களை இயக்கலாம் என்று கடந்த மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் ஒப்புதல் வழங்கினார். 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பாதுகாப்பு அறிக்கையை ஆய்வு செய்து அவர் இந்த ஒப்புதலை வழங்கினார்.



இந்த நிலையில், விமான நிலையம்- சின்னமலை இடையே முதல் மெட்ரோ ரயில் சேவையை தலைமைச் செயலகத்தில் இருந்த படியே காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். அதோடு விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலையில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். இருமார்க்கத்தில் தொடங்கப்பட்ட ரயிலை அம்சவேணி மற்றும் நளினி ஆகியோர் இயக்கினர்.

நாளை முதல் மெட்ரோ ரெயில் சேவை விமான நிலையம் வரை நீட்டிக்கப்படுவதால் இனி கோயம்பேட்டில் இருந்து சென்னை விமான நிலையம் வரை பயணிகள் மிக குறைந்த நேரத்தில் பயணம் செய்ய முடியும். தற்போது கோயம்பேடு - ஆலந்தூர் இடையே தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இனி பயணிகள் எண்ணிக்கை தினமும் 15 ஆயிரமாக உய ரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் சேவை தொடங்கும் சின்னமலை - விமான நிலையம் இடையிலான மொத்த தூரம் 8.6 கிலோ மீட்டராகும். இதில் 6 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயிலுக்கான கட்டணம் முதல் 2 கி.மீ்ட்டருக்கு ரூ. 10, 2 முதல் 4 கி.மீட்டருக்கு ரூ.20, 4 முதல் 6 கி.மீட்டருக்கு ரூ.30, 6 முதல் 8 கி.மீட்டருக்கு ரூ.40, 8 முதல் 10 கி.மீட்டருக்கு ரூ.50, 10 முதல் 15 கி.மீட்டருக்கு ரூ.60 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி விமான நிலையத்தில் சின்னமலை வரை ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும். விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வரை ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் அதிக மாக இருப்பதாகவும், அதை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கட்டணக் குறைப்பு பற்றி இதுவரையில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மெட்ரோ ரெயில் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்ட்ரல், எழும்பூரில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் போது கட்டணம் குறைக்கப்படலாம் என்று தெரிகிறது.
சேகர் மற்றும் மனைவி கலாவதி


சேகரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது! - பட்டாக்கத்தி கொள்ளையருடன் போராடி இளம்பெண்ணை காப்பாற்றிய வீரர்


டெல்லியில் நேற்று ஆள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் இளம் பெண் ஒருவர் சுமார் 30 முறை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலையானபோது யாரும் உதவிக்கு வராதது போலவே டெல்லி சம்பவத்திலும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துவிட்டு சாதாரணமாக கலைந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னையில் இளம் பெண்ணை கொடூரமான முறையில் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 4 கொள்ளையர்களிடம் தன்னந்தனி ஆளாக போராடி அந்தப் பெண்ணை காப்பாற்றியிருக்கிறார் சேகர்(42).

சென்னை துரைப்பாக்கம் அருகில் குமரன்குடில் பகுதியில் மளிகைக் கடை வைத்திருப்பவர் சேகர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு தனது கடையில் அமர்ந்திருந்தார். அப்போது சற்று தூரத்தில் இளம் பெண்ணின் அபயக்குரல் கேட்டது. அதிர்ச்சியடைந்து வெளியே வந்து பார்த்தபோது சற்று தொலையில் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் பெண்ணின் கைப்பையை பறிக்க முயன்றுகொண்டிருந்தனர். அவரோ பையை விடாமல் இறுக்கமாக பிடித்துக் கொண்டு போராடிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவை ஓட்டியதால் கீழே விழுந்த அவர் நடுரோட்டில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். ஆங்காங்கே பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் யாரும் உதவிக்கு வரவில்லை.

ஆனால், சேகர் ஓடோடிச் சென்று காயமடைந்திருந்த அந்தப் பெண்ணை தூக்கி மீட்டார். இதற்குள் அந்தப் பெண் மயக்கமடைந்துவிட்டார். ஆட்டோ வுக்குள் ஓட்டுநருடன் மொத்தம் 4 பேர் இருந்தனர். பின்னால் அமர்ந்தி ருந்தவர்கள் இருவரின் கையில் பெரிய பட்டாக் கத்திகள் இருந்தன. அதைக் காட்டி மிரட்டிக் கொண்டே அவர்கள் ஆட்டோவுடன் வேகமாக தப்பிச் செல்ல முயன்றனர்.

ஆனாலும் சேகர் வேகமாக ஓடி ஆட்டோவுக்குள் கையை விட்டு ஒருவரின் சட்டைக் காலரை பிடித்து சாலையில் தூக்கி வீசினார். அவரை மடக்கிப் பிடித்து தனது காலால் அழுத்திய நிலையில் ஆட்டோவிலிருந்து குதித்த இன்னொருவர் சேகரின் முதுகில் பட்டாக் கத்தியால் வெட்டினார். அப்போதும் விடாமல் திரும்பியவர் கத்தியை கையால் பிடித்து சமாளித்தார். அப்போது இன்னொருவர் சேகரின் கழுத்தை நோக்கி வேகமாக கத்தியை வீசினார். நொடிப் பொழுதில் சேகர் விலகிக்கொண்டபோதும் கத்தி பட்டு காது அறுந்தது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் 4 பேரும் ஆட் டோவில் ஏறி தப்பிவிட்டனர். சுமார் 10 நிமிடங்கள் நடந்த இந்தப் போராட் டத்தை அக்கம்பக்கத்தினர் 20-க்கும் மேற்பட்டோர் கூடி நின்று வேடிக்கைப் பார்த்துள்ளனர். பின்னர் படுகாய மடைந்த அந்தப் பெண் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சேகருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காது ஒட்டப்பட்டுள்ளது.



இந்த நிலையில்தான் ‘தி இந்து’-வுக்காக சேகரைச் சந்தித்தோம். “எனக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கிராமம். என் கண் முன்னே ஏதாவது அநியாயம் நடந்தால் என்னால் பார்த்துக்கிட்டிருக்க முடியாது. என்ன ஆனாலும் சரி என்னால் முடிந்த வரை தட்டிக் கேட்பேன். நேற்று முன்தினம் (திங்கள்) அதைத்தான் செய்தேன். அதே சமயம் இங்கே கூடி நின்று வேடிக்கைப் பார்த்தவங்களையும் நான் குறை சொல்ல மாட்டேன். எல்லோரும் என்னைப் போலவே இருக்கணும்னு எதிர்பார்க்கிறது முட்டாள் தனம். அவர்கள் உயிர் அவர்களுக்கு முக்கியம் இல்லையா. அவர்கள் சார் பாகத்தான் நான் போராடு வதாக நினைத்துக்கொள் கிறேன்.

அதேசமயம் இது ஒன்றும் எனக்கு புதிது அல்ல. ஒரு வருடம் முன்பு இரவு 11.30 மணிக்கு பக்கத்தில் இருக்கும் எம்.சி.என். நகரிலிருந்து எனக்கு போன் வந்தது. அங்கே பெண் ஒருவரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு எங்கள் பகுதியை நோக்கி ஒருவர் ஓடி வந்ததாக தகவல் சொன்னார்கள். நான் உடனே சென்று தெருவில் நின்று நோட்டமிட்டேன். தூரத்தில் வேகமாக ஒருவர் சட்டையை மாற்றிக்கொண்டு பின்பு நிதான மாக நடந்து வந்தார். மெதுவாகப் பதுங்கி அவர் பின்னால் சென்று அப்படியே மடக்கிப் பிடித்தேன்.

உடனே அவர் சிறு கத்தியால் என்னைக் குத்தினார். ஆனாலும் விடாமல் அவரை பிடித்துவிட்டேன். அதற்குள் பொதுமக்கள் உதவிக்கு வந்து விட்டார்கள். தங்கச் சங்கிலி மீட்கப் பட்டது. அதற்கு முன்பாக எங்கள் பகுதியில் பூட்டப்பட்ட ஒரு வீட்டுக்கு வெளியே ஒருவர் சந்தேகமான முறையில் நின்றுகொண்டிருந்தார். உன்னிப்பாக கேட்டபோது அந்த வீட்டுக்குள் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. உடனே நான் அந்த வீட்டு உரிமையாளரிடம் போனில் தகவல் கொடுத்துவிட்டு பதுங்கிச் சென்று வெளியே நின்றிருந்தவரை மடக்கிப் பிடித்து சத்தம் போட்டேன். மக்களும் வந்துவிட்டார்கள். மொத்தம் 4 பேரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தோம். அவர்களில் வி.ஐ.பி. ஒருவரின் மகனும் அடக்கம்” என்றார்.

அவரிடம், “இப்படி செய்யும்போது உங்களுக்கு பயமாக இல்லையா? நேற்றைய சம்பவத்தில் உங்கள் உயிரே பறிபோயிருக்கலாம் இல்லையா?” என்று கேட்டோம். “நான் காந்தி ஜெயந்தி அன்னைக்கு பிறந்தவன். காமராஜரின் நினைவுநாள் அது. நான் பிறந்து 5 வயதிலேயே என் அப்பா தவறிட்டார். என்னுடன் பிறந்தவர்கள் 5 பெண்கள், ஒரு பையன். நான்தான் வீட்டில் மூத்த மகன். என்னால் பள்ளிக்குச் சென்று படிக்க முடியவில்லை. சிறுவனாக இருந்தபோதே கிடைத்த வேலைக்குச் சென்று எனது குடும்பத்தை பராமரித் தேன். நானாகவே எழுத்துக் கூட்டி படிக்கக் கற்றுக் கொண்டேன். ஓய்வு நேரத்தில் கிடைக்கும் செய் தித்தாள்களை புத்தகங் களை எல்லாம் படிப்பேன். பகவத் கீதை, பைபிள் மற்றும் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எல்லாம் படித்தேன். அவற்றிலிருந்து நான் கற்றுக்கொண்டது எவை என்றால் - உண்மையாக இருப்பது; நேர்மையாக இருப்பது; தவறுகளுக்கு எதிராக போராடுவது. இதைத்தான் நான் செய்து வருகிறேன்.

சென்னைக்கு 20 வருடங்களுக்கு முன்பு வந்தேன். திருவான்மியூரில் சிமென்ட் கிடங்கில் மூட்டை தூக்கிப் பிழைத்தேன். அதில் ஓரளவு திருப்தியான வருமானம் கிடைத்தது. எனது 4 தங்கைகளுக்கும் தம்பிக்கும் திருமணம் செய்து வைத்தேன். ஒரு தங்கை உயிரோடு இல்லை. மற்ற அனைவரும் நன்றாக இருக்கிறார்கள். நானும் திருமணம் செய்துகொண்டு இந்தப் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கடையை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறேன். 2 ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன். ஆண்டவன் கருணையால் நிம்மதியாக இருக்கிறது வாழ்க்கை” என்கிறார்.

இவரது மனைவி கலாவதி, கண் கலங் கிய நிலையில் நம்மை கையெடுத்து கும்பிட்டு, “இவரு போராட்டம் போராட் டம்ன்னு சொல்றாருங்க. எனக்கு பயமாக இருக்குது. எங்களோட பாது காப்புக்கு ஏற்பாடு செய்யுங்க. எங்க ளுக்கும் ரெண்டு குழந்தை இருக்கு இல்லையா” என்கிறார். அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. தமிழக அரசு சேகரை கவுரவிப்பதுடன் அவருக்கு பாதுகாப்பு அளிக்கவும் முன் வர வேண்டும். அப்போதுதான் பொது இடங்களில் இளம் பெண்கள் தாக்கப்படுவது போன்ற சம்பவங்களில் உதவிக்கு வருவதற்கு மக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள்.
தங்கை இறந்த சோகத்திலும் சேவை

சேகரின் ஒரு தங்கை இறந்துவிட்டார் என்று கூறியிருந்தார் இல்லையா? அது பெரும் சோகச் சம்பவம். அவரது பெயர் தனலட்சுமி. அவரை மும்பையில் திருமணம் செய்து கொடுத்திருந்தார். 1992-ம் ஆண்டு மும்பைக் கலவரம் வெடித்தது. அந்தக் கலவரத்தில் இவரது தங்கையின் குடும்பத்தில் ஒருவர் விடாமல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். 7 மாதம் கர்ப்பமாக இருந்த இவரது தங்கையை மத வெறியர்கள் நடு ரோட்டில் நிற்க வைத்து பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக்கொன்றார்கள்.

பதறி அடித்துக்கொண்டு மும்பைக்கு ஓடிய சேகருக்கு தனது தங்கையின் எரிந்த சடலம்தான் கிடைத்தது. அப்போதும் கலவரம் ஓயவில்லை. ஆனாலும், மனதை திடமாக்கிக்கொண்டு கலவரப் பகுதியில் 10 நாட்கள் சமூக சேவை செய்தார் சேகர். காயம்பட்ட சுமார் 100 பேரை மருத்துவமனையில் சேர்த்தார். ஏராளமான சிறுவர்களை மீட்டு காவல் நிலையங்களில் ஒப்படைத்தார்.

இது தவிர தனி நபராக நுகர்வோர் விழிப்புணர்வு விஷயங்களிலும் சட்டப் போராட்டங்களை நடத்துகிறார் சேகர். சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஆறே நாட்களில் சிகப்பழகு பெறுவீர்கள்’ என்று விளம்பரம் செய்த ஒரு கீரீம் நிறுவனத்துக்கு எதிராக ஒரு பெண்ணை வைத்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பிரபல டிவி தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். பொதுவெளியில் எது நடந்தாலும் சலனப்படாத பெருநகர சுயநல சமூகம் சேகரைப் பார்த்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.


திரைக்கு பின்னால்: பின்னணிக் குரலுக்கும் விருதுகள் வேண்டும்!


ஷாலினி, தேவயானி, சுவலட்சுமி, ரம்பா, கெளசல்யா உள்ளிட்ட பல நாயகிகளுக்கு பின்னணிக் குரல் கொடுத்து பிரபலமானவர் ஸ்ரீஜா ரவி. அவருடைய மகள் ரவீணா தற்போதுள்ள முன்னணி நாயகிகளுக்கு பின்னணிக் குரல் கொடுத்து வருகிறார். ‘ப்ரேமம்' தெலுங்கு ரீமேக்கில் மடோனாவுக்குப் பின்னணிக் குரல் கொடுத்துவிட்டுச் சென்னை திரும்பியவரிடம் பேசிய போது...

பின்னணிக் குரல் துறைக்குள் எப்படி நுழைந்தீர்கள்?

எனது பாட்டி, அம்மா இருவருமே பின்னணிக் குரல் கலைஞர்கள் தான். இந்த துறைக்குள் வர வேண்டும் என நினைக்கவில்லை. வாய்ப்பு வந்தது ஏற்றுக்கொண்டேன்.

முதல் படமான ‘சாட்டை' வாய்ப்பு எப்படி அமைந்தது?

கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது, அப்படத்துக்காக குரல் தேர்வு நடைபெற்றுவந்தது. யாருடைய குரலுமே நினைத்த மாதிரி வரவில்லை. எனது குடும்ப நண்பர் ஒருவர் ஒலிநுட்பப் பொறியாளராக (சவுண்ட் என்ஜினியர்) பணிபுரிந்தார். ஜா அக்காவின் மகள் இருக்கிறாள்; அவளுடைய குரல் இப்படத்துக்கு சரியாக இருக்கும் என்று அவர்தான் என்னை சிபாரிசு செய்தார். கல்லூரி முடிந்தவுடன் குரல் தேர்வுக்குச் சென்றேன். குரல் தேர்வு முடிந்தவுடன், “நாளை மாலை வந்து பேசிடுமா” என்று சொல்லிவிட்டார்கள். இதுதான் குரல் தேர்வு முறை என்பது எனக்கு அப்போது தான் தெரியும்.

அதற்குப் பிறகு ‘கத்தி', ‘அனேகன்', ‘ஐ', ‘தெறி' என உங்களுடைய பயணம் பற்றிச் சொல்லுங்கள்...

ஒவ்வொரு படத்துக்கும் குரல் தேர்வு இருக்கும். இயக்குநர் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு யாருடைய குரல் பொருத்தமாக இருக்கும் எனப் பார்ப்பார். கதாபாத்திரத்தின் வயதுக்கு ஏற்றவாறு யார் பேசுகிறார்கள் என முடிவு செய்து தேர்வு செய்வார்கள். கடவுளின் ஆசியாலும் அம்மாவின் அன்பினாலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்தன.

உங்களுடைய பின்னணிக் குரல் பயணத்தில் அம்மாவின் ஆலோசனை என்ன?

மலையாளப் படங்களுக்கு பின்னணிக் குரல் கொடுக்கச் செல்லும்போது என்னுடன் வருவார்கள். சென்னையில் படித்து வளர்ந்ததால், தமிழ் எளிதாகப் பேசிவிடுவேன். வீட்டில் மட்டும்தான் மலையாளம் பேசுவேன். மலபார் வட்டார மலையாளம்தான் எனக்கு வரும். ஆனால், பின்னணிக் குரல் கொடுக்கும்போது அப்படிப் பேசக் கூடாது என்று அம்மா சொல்வார்.

மலையாள இயக்குநர்கள் பின்னணிக் குரலில் ரொம்பத் தெளிவாகப் பார்ப்பார்கள். மலையாளத்தில் இப்படி பேசக் கூடாது, இந்தக் காட்சிக்கு இப்படிப் பேச வேண்டும் என்று உடன் உட்கார்ந்து அம்மா சொல்லிக் கொடுப்பார். தமிழில் நான் டப்பிங் பேசும்போது அம்மா பார்த்ததில்லை. நானும் நீங்கள் வராதீர்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிடுவேன்.

தமிழ்ப் படங்களைப் பார்த்துவிட்டு, இதற்கு நீ இப்படிப் பேசியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொல்வார். அதையெல்லாம் கேட்டு அடுத்த படத்துக்குப் பேசப் போகும் போது சரி செய்துகொள்வேன்.

உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு?

ஒவ்வொரு படத்துக்கும் அம்மாவின் பாராட்டுக்காகக் காத்திருப்பேன். எனக்கு அதுதான் ரொம்ப முக்கியம். பின்னணிக் குரலுக்காக 5 முறை மாநில விருதுகள் வென்றிருக்கிறார்கள் எனும்போது அவர்கள்என்ன சொல்கிறார்கள் என்பதை ரொம்ப முக்கியமாகப் பார்ப்பேன்.

‘ஐ' இந்தி இசை வெளியீட்டு விழாவின் போது மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் சாரை சந்தித்தேன். ஏமி ஜாக்சனுக்கு நான்தான் பேசினேன். அப்போது “நீங்கதான் பேசியிருக்கிறீர்களா? ஸ்ரீ மேடத்தின் பெண்ணா நீங்க? பின்னணி இசை பண்ணும்போது கேட்டேன். ரொம்ப நல்லா இருந்தது. Keep your good job” என்றார். ரஹ்மான் சாரின் அவ்வளவு பெரிய பாராட்டு கிடைத்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

குரலை எப்படிப் பராமரிக்கிறீர்கள்?

நான் எதுவும் பண்றதில்லை. உண்மையில் ஐஸ்கிரீம் எல்லாம் நிறையச் சாப்பிடுவேன். டப்பிங் பேசப் போகும்போது மட்டும் இடையே சுடு தண்ணீர் எடுத்துக்கொள்வேன்.

காட்சியமைப்புகளுக்குத் தகுந்தவாறு எப்படிக் குரலை மாற்றிப் பேசுவீர்கள்?

குரல் தேர்வில் நான் தேர்வானவுடன், நான் டப்பிங் பண்ணப் போகும் கதாபாத்திரத்தின் தன்மையை இயக்குநர் அல்லது உதவி இயக்குநர்கள் விளக்குவார்கள். அவர்கள் சொல்வதை முழுக்க உள்வாங்கி அதனைக் குரலில் எடுத்துக்கொண்டு வர வேண்டும். நம்முடைய காட்சிகளை மட்டும்தான் போட்டுக் காட்டி டப்பிங் பேசச் சொல்வார்கள். முழுப் படத்தை எல்லாம் காட்ட மாட்டார்கள்.

நீங்கள் அதிகமாகக் கஷ்டப்பட்டு பின்னணிக் குரல் கொடுத்த படம் எது?

மலையாளத்தில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்' படத்துக்காக நயன்தாரா மேடத்துக்குப் பேசியதைத்தான் சொல்வேன். ஏனென்றால் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நயன்தாரா நடித்திருந்தார். அவ்வளவு வயது முதிர்ந்த கதாபாத்திரத்துக்கு அதற்கு முன்பு பேசியதில்லை. அம்மாதான் நயன்தாராவுக்கு மலையாளத்தில் எப்போதுமே பின்னணிக் குரல் கொடுப்பார். சில நாட்கள் கழித்து மலையாளத்தில் நயன்தாரா நடிப்பதால் அம்மா என்னை சிபாரிசு செய்தார். என்னுடைய டப்பிங்கை நயன்தாரா பார்த்துவிட்டு, அடுத்த படத்துக்கும் சிபாரிசு செய்தார்.

அப்படத்தின் பின்னணிக் குரல் பணியின்போது, கண்ணை மூடி ஒரு குழந்தைக்கு அம்மாவாக நினைத்துக்கொண்டு பேசு என்று அம்மா கூறினார். ஒவ்வொரு காட்சிக்கும் என்னைத் தயார் பண்ணிக்கொண்டு பேச வேண்டியதிருந்ததால் ரொம்ப முக்கியமான படமாக அதைப் பார்க்கிறேன்.

படங்களின் விமர்சனத்தில் நமது பணி குறித்து எதுவும் இடம் பெறுவதில்லையே என்ற வருத்தம் இருக்கிறதா?

கண்டிப்பாக இருக்கிறது. என்னுடைய காலத்தை விட அம்மாவின் காலத்தில் விமர்சனத்தில் பின்னணிக் குரல் எப்படியிருந்தது எனச் சொல்லவே மாட்டார்கள். மாநில விருதுகள் கிடைத்தவுடன்தான் அனைவருக்கும் தெரிந்தது. இப்போதுதான் ஒரு சில விமர்சனங்களில் டப்பிங்கையும் சேர்த்து எழுதுகிறார்கள். ‘கத்தி', ‘ஐ', ‘அனேகன்' ஆகிய விமர்சனங்களில் என்னுடைய பெயர் வந்ததில் ரொம்ப சந்தோஷம். நிறைய விருதுகள் வழங்கும் விழாவில் டப்பிங் என்ற பிரிவே கிடையாது. அதிலும் சேர்த்தால் இன்னும் நிறைய மக்களுக்குத் தெரியவரும்.

நாயகியாகிவிட்டீர்களாமே? தொடர்ந்து பின்னணிக் குரல் கொடுப்பீர்களா?

என்னுடைய புகைப்படத்தைப் பார்த்துவிட்டு நாயகி தேர்வுக்கு அழைத்திருந்தார்கள். சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த்துடன் ‘ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் நாயகியாக அறிமுகமாகிறேன். படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகிவருகிறது. பின்னணிக் குரல் கொடுப்பதை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட மாட்டேன். அதுவே என் முதல் பணி.

ஆர்-காம், ஏர்செல் இணைப்பு: உருவாகிறது புதிய நிறுவனம்

THE HINDU 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் (ஆர்காம்) ஏர்செல் நிறுவனமும் கடந்த வருட இறுதியில் இருந்து இணைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தன. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ ஏற்படுத்திய அதிர்வலை காரணமாக இந்த இணைப்பு உறுதியாகி உள்ளது. இணைப்பு என்பது ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை வாங்குவதாகவே இருக்கும். ஆனால் இந்த இணைப்பு கொஞ்சம் வித்தியாசமானது.

இரு நிறுவனங்களும் சரி சமமாக இணைந்து புதிய நிறுவனத்தை உருவாக்கப்போகின்றன. புதிய நிறுவனத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. புதிய நிறுவனத்தில் இரு நிறுவனங்களுக்கும் 50 சதவீத பங்குகள் இருக்கும். இயக்குநர் குழுவை இரு நிறுவனங்களும் சமமாக பிரித்துக்கொள்ளும். இரு நிறுவனங்களும் சேர்த்து புதிய தலைமைச் செயல் அதிகாரியை நியமனம் செய்யும். தவிர புதிய நிறுவனத்தில் அனில் அம்பானி மற்றும் மேக்ஸிஸ் குழும நிறுவனர் ஆனந்த கிருஷ்ணன் இருக்கமாட்டார்கள் என்றும் தெரிகிறது. ஒழுங்குமுறை ஆணையங்கள், பங்குதாரர்கள் மற்றும் நீதிமன்றத்தின் அனுமதிக்கு பிறகு 2017-ம் ஆண்டில் இந்த இணைப்பு முழுமையடையும். புதிய நிறுவனத்தின் சொத்துகள் ரூ.65,000 கோடியாகவும், அதன் சந்தை மதிப்பு ரூ.35,000 கோடியாகவும் இருக்கும். இந்த இணைப்பு காரணமாக சில சாதகங்களும் உள்ளன. அதே சமயத்தில் சில சவால்களும் இருக்கின்றன.

கடன் குறையும்

தற்போது ஆர்காம் கடன் ரூ.40,000 கோடியாக இருக்கிறது. புதிய நிறுவனம் அமைப்பதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் கடன் குறையும். ஏர்செல் நிறுவனம் ரூ.14,000 கோடியும் ஆர்காம் ரூ.20,000 கோடி கடனையும் புதிய நிறுவனத்துக்கு மாற்றுகிறது. இந்த நிறுவனங்களுக்கும் கடன் குறைந்தாலும் புதிய நிறுவனத்தின் கடன் ரூ,34,000 கோடிக்கு மேல் இருக்கும். தவிர இரு நிறுவனங்களும் விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.7,600 முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளன.

இரு நிறுவனங்களும் இணைவதில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வைத்திருக்கும் இரண்டாவது பெரிய நிறுவனமாக புதிய நிறுவனம் இருக்கும். 448 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை உள்ளது. இவை 2033-35-ம் ஆண்டு வரை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சந்தை நிலை

தற்போது ஆர்காம் நான்காவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவன மாகும். 11 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஏர்செல் நிறுவனத்துக்கு 8.4 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த இரு நிறுவனங்களும் இணைவதால் வாடிக்கையாளர் அடிப்படையிலான சந்தை மதிப்பு 18 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. இதன் மூலம் ஐடியா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தில் புதிய நிறுவனம் இருக்கும். முதல் இடத்தில் 25 கோடி வாடிக்கையாளர்களுடன் ஏர்டெல் நிறுவனமும், 19.8 வாடிக் கையாளர்களுடன் இரண்டாமிடத்தில் வோடபோன் நிறுவனமும் இருக் கின்றன.

சவால்கள்

இதுபோல சில சாதகமான விஷயங்கள் இருந்தாலும் சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஏர்செல் மற்றும் ஆர்காம் நிறுவனத்தின் முக்கியமான வருமானமே குரல் வழி அழைப்புகள்தான். ஆனால் ரிலையன்ஸ் ஜியோ குரல் வழி சேவைகளை இலவசமாகக் கொடுக்கும் போது, புதிய நிறுவனம் டேட்டாவை நோக்கி செல்ல வேண்டும் என்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சய் கபூர் கூறியிருக்கிறார்.

இரு நிறுவனங்களும் இணைந்தது சரியான நடவடிக்கையாக இருந்தாலும், புதிய நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எல்லை இருக்கிறது என ஐடிஎப்சி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் இணைப்பு

இந்த இரு நிறுவனங்களும் இணைந்தாலும் இதுவே இந்த துறையின் இறுதியான இணைப்பு அல்ல என வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். டெலிகாம் நிறுவனங்களின் செயல்பாட்டு கட்டணத்தில் 30-40 சதவீதம் வரை ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கு போய்விடும். சிறிய நிறுவனங்களில் இந்த சதவீதம் இன்னும் அதிகம். அதனால் சிறிய நிறுவனங்கள் சந்தையில் தாக்குப் பிடிக்க முடியாது. ஏற்கெனவே இருந்த எம்டிஎஸ், ஸ்வான், ஸ்பைஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் வெளியேறி விட்டன. இன்னும் சில வருடங்களில் இந்தியாவில் அதிகபட்சம் 6 நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் என பிட்ச் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பேங்க் ஆப் அமெரிக்காவும் இதே கருத்தை கூறியிருக்கிறது.

மற்ற நிறுவனங்கள் என்ன செய்யும், எவை சந்தையில் நீடிக்கும் என்பது வரும் மாதங்களில் தெரியவரும்.

ஏமாற்றம் அளிக்கிறது சௌம்யா வழக்கின் தீர்ப்பு!

Return to frontpage

கேரள மாநிலத்தில் இளம்பெண் சௌம்யா (23) ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொல்லப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது.

எர்ணாகுளம் - ஷோரனூர் பயணிகள் ரயிலில் 2011 பிப்ரவரி 1 அன்று பெண்களுக்கான பெட்டியில் தனியாகச் சென்றிருக்கிறார் சௌம்யா. அந்தப் பெட்டி யில் ஏறிய கோவிந்தசாமி, சௌம்யா வைத்திருந்த கைப்பையைப் பறிக்க முயன்றிருக்கிறார். அவர் தடுக்க முற்பட்டபோது அவரைத் தாக்கியிருக்கிறார்.

பிறகு, ரயிலிலிருந்து தள்ளப்பட்ட நிலையில், சுயநினை வற்றுப்போன சௌம்யாவைப் பாலியல் வல்லுறவுக்கும் ஆட்படுத்தியிருக்கிறார் கோவிந்தசாமி. காணாமல்போன சௌம்யாவைப் பல இடங்களிலும் தேடிய போலீஸார், பிப்ரவரி 6 அன்று தண்டவாளத்தின் அருகே கிடந்த அவரை மீட்டு திருச்சூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கை விசாரித்த திருச்சூர் விரைவு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. கேரள மக்களைக் கொந்தளிக்க வைத்த இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தது அரசு. பிரேதப் பரிசோதனை மருத்துவர், ‘சௌம்யா ரயிலிலிருந்து குதிக்கவில்லை, தள்ளப்பட்டிருக்கிறார்’ என்று காயங்களின் அடிப்படையில் அறிக்கை அளித்திருக்கிறார். ஆனால், இந்த வழக்கில் சாட்சிகளாக இருந்த வேறு சிலர் அளித்த முரண்பட்ட வாக்குமூலங்கள் காரணமாக, கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மரண தண்ட னையாக மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தனிப்பட்ட நபர்கள் அளிக்கும் வாக்குமூலங்களைவிட, தடய அறிவியல்பூர்வமாகத் தரப்படும் ஆதாரங்கள் நம்பகத்தன்மை உள்ளவை. ஆனால், நீதிமன்றம் அதை ஏற்காமல்போனது துரதிர்ஷ்டம். விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர். கோவிந்தசாமி தரப்பில், அனுபவம் உள்ள பெரிய வழக்கறிஞர் வாதாடியிருக்கிறார். அவர் இந்த வழக்கில் காவல் துறையினர் விட்ட ஓட்டைகளை நன்கு பயன்படுத்தியிருக்கிறார்.

கேரள அரசோ, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் வாதாட புதிய வழக்கறிஞரை அமர்த்தியிருக்கிறது. அவருக்கு இந்த வழக்கின் முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள நேரம் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.

தீர்ப்பு சௌம்யா குடும்பத்தவருக்கு மட்டுமல்ல; நாட்டின் பெரும்பாலானோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி யிருக்கிறது. அரிதினும் அரிதான இந்த வழக்கில் சந்தேகத்தின் பலனைப் பெறும் அளவுக்குத் தகுதி யானவர் அல்ல குற்றம்சாட்டப்பட்டவர் என்பதே பெரும் பாலானவர்களின் கருத்து. பெண்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படும் இந்நாட்களில் இம்மாதிரியான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுப்பதாகத் தீர்ப்புகள் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் காவல் துறை, நீதித் துறை இரண்டும் ஒருங்கிணைந்து, விரைவாகச் செயல்பட வேண்டும்.

Sunday, September 18, 2016

Swathi murder accused Ramkumar commits suicide, says police


The New Indian Express

CHENNAI: P Ramkumar, the accused in the murder of Infosys techie Swathi, allegedly committed suicide in the Puzhal prison on Sunday, police sources said. He was rushed to the Royapettah government hospital, where he was declared dead.

Prison sources said Ramkumar climbed up and managed to touch the live wire in the high security prison cell at around 4.30 pm. None were present in the cell when the alleged suicide took place. Security guards later rushed and tried to rescue him after disconnecting the power supply. But it is said he succumbed on the spot and doctors at the Royapettah Government hospital declared him dead on arrival.

An official from the hospital said, "Ramkumar was brought here at around 5.40 pm and we found that he had already succumbed." He also added that the autopsy would be conducted only tomorrow.

Media personnel wait outside Royapettah Government Hospital's mortuary when Ramkumar's body was brought there. (EPS)

As per law, the prison officials will now have to file a complaint in the local police station on the death and the case will be referred to a judicial magistrate. The autopsy will be conducted in the presence of the judicial magistrate and is expected to take place on Monday. Parents and close relatives of the deceased will be allowed to see the body only the presence of the magistrate, police sources said.



Police protection as seen out Royapettah Government Hospital's mortuary where Ramkumar's body is currently kept. (EPS)

Ramkumar, the youth hailing from a village in the southern district of Tirunelveli, was arrested after the major manhunt in recent years in the state.

According to police, Ramkumar slayed Swathi to death on morning of June 24 at Nungambakkam railway station as she was waiting to board train for her office. Even when he was arrested on July 1 night from the village he allegedly attempted suicide by slitting throat.

'There was no sign of suicidal tendencies'

As the news of Ramkumar's death spread, Advocate Ramraj, the defense counsel of Ramkumar, expressed his shock and was quoted saying to a news channel that, "I spoke to him for an hour even yesterday. He did not show signs of suicidal tendencies and was in a healthy state of mind. The prison officials are responsible for his death."

Incidentally, Ramkumar was to be produced before a judicial magistrate court on Monday as his judicial custody comes to an end. As per routine, the custody would be extended for 15 more days, unless he is given bail.

An assistant of advocate Ramraj confirmed that on Saturday Ramraj visited Ramkumar in the prison and spoke to him for an hour from 11.30 am to 12.30 pm.

Thol Thirumavalavan, President of Viduthalai Chiruthaigal Katchi (VCK), said that he had met the Ramkumar's family who had claimed that Ramkumar was not involved in the murder. "There is suspicion in his death. Earlier, when his parents and lawyer met him, he said that he was not involved in this murder. The Tamil Nadu Government has to take the responsibility and should clarify the suspicion behind Ramkumar's death."

Suspect in Swathi murder case commits suicide


Return to frontpage

Updated: September 18, 2016 19:21 IST 


Ramkumar bit a live wire and fainted, prison warders rushed him to the jail hospital where his pulse started dropping fast.

P. Ramkumar, the lone suspect in the Swathi murder case, allegedly committed suicide by getting hold of a live wire at the Puzhal central prison complex here on Sunday evening.

Preliminary reports said the suspect bit a live electric cable that was concealed in a switch board. At the time of his arrest, Ramkumar had attempted to kill himself by slitting his throat but was saved.

Ramkumar is alleged to be the assailant of techie Swathi who was hacked to death in the Numgambakkam railway station when she was waiting to board a suburban train on June 24 this year.

Based on CCTV footage and other circumstantial and material evidence, the Chennai Police arrested Ramkumar, an engineering college dropout, from his native village near Tenkasi in Tirunelveli district.

“Since Ramkumar had attempted to commit suicide at the time of his arrest, we arranged counselling at the Puzhal prison where he was remanded in judicial custody. We kept a close watch on his activities. He did not show any signs of depression or suicidal tendencies,” a prison official told The Hindu.

On information that he had bit a live wire and fainted, prison warders rushed him to the jail hospital where his pulse started dropping fast.


Ramkumar was taken to the Government Royapettah Hospital where he was pronounced dead on arrival, police sources said.

The sensational murder of Swathi, an Infosys employee, triggered instant public outrage and condemnation from the civil society.

Though investigators claimed that CCTV footage showed the suspect escaping from the scene of crime and further investigation led to recovery of his blood stained clothes and the mobile phone of the victim (Swathi) from his possession, Ramkumar's family and some human rights activists alleged that he was not involved in the murder and there was more to the case than meets the eye.

Ramkumar, who was staying in a mansion at Choolaimedu and looking for a job, reportedly stalked Swathi. Eyewitnesses in the case recalled having seen him follow the victim to Paranur railway station close to her work place.

Family members of Ramkumar suspected foul play in his death. It was not clear immediately whether any other prisoner was witness to Ramkumar snatching the electric wire out of the switch board to biting it.

Additional Director-General of Police (Prisons) Vijay Kumar said jail authorities arranged first aid shifted him to the Government Royapettah Hospital when his condition deteriorated. “We are investigating the circumstances that led to the prisoner taking the extreme step,” he said.

Saturday, September 17, 2016

Deemed universities offering MBBS told to use Neet



The University Grants Commission (UGC) directed all deemed universities offering MBBS and BDS programmes on Friday to admit students based on the all-India merit list of the National Eligibility Entrance Test (Neet).

The educational institutions have also been asked to participate in the common counselling, for admission to medical courses, conducted either by the respective state governments or the Central government after the declaration of the Neet results.

In a notification to all deemed universities, the UGC said that if the state government is unable to hold the common counselling, or the deemed universities offering MBBS or BDS were not covered in the counselling, they would have to put up a common system of admission.

“In the case of medical colleges, the Medical Council of India is the appropriate statutory authority. As such, all the admissions in the medical institutes of institutions deemed to be universities have to be made through Neet, which is prescribed by the Medical Council of India for such institutions,” UGC deputy secretary Sunita Siwach said in the notice. The notice also said, “In case the appropriate statutory authority has specified the process of selection for admission to any course or programme of study in any institution which includes conducting competitive admission test for ascertaining the competence of any person to pursue such course, in that case, no person shall be admitted to such programme in such institution, except through an admission test conducted by a recognised body or such institution or a group of institutions which has been authorised by the Central government or a state government or any statutory authority.” The UGC made it clear that all admissions were subject to the aforesaid stipulations and compliance.

Physiotherapist' who prescribes drugs held

Chennai: As the crackdown on quacks continued in Tiruvallur, more skeletons came tumbling out after officials caught a 'physiotherapist' prescribing drugs and a doctor-couple using an illegal machine to conduct ultrasound in the district on Thursday.

For the past three weeks, public health officials had been conducting inspections at clinics across Tiruvallur in the wake of an outbreak of a mix of viral and bacterial infections in some pockets.

On Thursday, officials nabbed a 35-year-old man, who claimed to be a physiotherapist, for prescribing drugs and administering injections, fromMadharapakkam in Gummidipoondi. The man, identified as Nasser, had been practising for close to a month.

"When we questioned him, he said he was hired by a qualified doctor," said D Mohanan, joint health director of health, Tiruvallur.

In the same village, officials caught a doctor-couple with an unregistered scanning machine under the Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques (PCPNDT) Act, which bans prenatal sex determination. The couple will be called in for questioning on Friday.

Since the beginning of August, around 21 quacks were caught by public health officials in the district, most of whom are now out on bail.

71-year-old man faints on train, ignored for 16 hours


TIMES OF INDIA

Chennai: Call it the weariness of the urban commuters or a callous overlook a 71-year-old man travelling on Kovai Express on Wednesday is battling for life after lying unattended for more than 16 hours in the rake's passageway in front of a toilet.

Due to get down at Erode after boarding from Chennai, MVenkatachalam lay on the floor of the train even as it made its return journey to Chennai from Coimbatore the same day.

Neither railway staff nor co-passenger came to his rescue. Lying between the two toilets in D9 coach, Venkatachalam came to the notice of a travelling ticket examiner, Nihal Singh near Tirupur, when he found Venkatachalam's phone ringing repeatedly but going unattended. The calls were being made by his sons fromMogappair in Chennai when the train was on its return leg.

Around 10:30pm at Chennai Central, Venkatachalam's family was shocked to find him lying in front of the toilets with a bleeding nose and rushed him to the Apollo emergency medical care. He was later shifted to Billroth hospital where he is in the ICU.

What has shocked Venkatachalam's sons is that no railway staff or TTE or cleaning staff or co-passenger came to his aid while he was lying right outside toilet all the time. "He must have been mistaken for a beggar or a drunkard. People actually stomped on him while going to the toilet. My father was dressed in a sparkling white shirt and veshti, but it seems to have been used for people to clear their footwear after coming out of the toilets," said his son V Umaanath, a media executive.

Umaanath had packed breakfast for Venkatachalam and it was lying intact even after 16 hours. He had informed his wife that he would come home for lunch. But Tuesday night's dinner was the last meal he had for more than 24 hours.

A Southern Railway spokesperson said Kovai Express is checked by maintenance staff at Coimbatore station before it begins return journey. Railway Protection Force officers said finding unconscious people in toilet at Egmore station or yard is a regular affair for them . "It is a sorry state of affairs. Any attentive TTE or cleaning staff could have spotted my father and he could have been admitted to a hospital at least 8-9 hours earlier. There is a separate marking for senior citizens on the reservation chart and the railway staff could have given some special attention," Umaanath said.

Venkatachalam had the usual age-related ailments like low blood pressure but staying without food for more than 24 hours might have put him under immense stress, Umaanath said.

பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்!

VIKATAN

எம்.ஆர். ராதா நாடக மேடைகளில் வாழ்ந்தவர். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒருபோதும் நடித்திராதவர். நாடகக்காரர், பகுத்தறிவுவாதி, சினிமா நடிகர், பெரியாரின் தொண்டர், அதிரடிப் பேச்சாளார், குடும்பத் தலைவர், சிறைச்சாலைக் கைதி என்று அவருடைய வாழ்க்கையில் ஏகப்பட்ட பாத்திரங்கள். ஆனால் எதிலுமே அவர் அரிதாரம் பூசியதில்லை. ராதா, ராதாவாகவே வாழ்ந்தார்.

தமிழ் நாடகத் துறைக்கு அவர் செய்திருக்கும் பங்களிப்பு மிகப்பெரியது. தமிழகத்தில் நாடகங்களின் பொற்காலத்தில் ‘நாடக உலக சூப்பர் ஸ்டாராக’ வலம் வந்தவர் எம்.ஆர். ராதாவே. அவரது நாடக உலக வாழ்க்கையிலிருந்து சில பகுதிகள் இங்கே.

'பதிபக்தி' என்ற நாடகத்தில் எம்.ஆர். ராதாவுக்கு சி.ஐ.டி வேடம். ஒரு மோட்டார் சைக்கிளிலேயே மேடைக்கு வருவார் ராதா. மக்கள் மேல் பாய்ந்துவிடுவதுபோல மேடையின் ஓரம்வரை வேகமாக ஓட்டிக்கொண்டு வந்து, லாகவமாக பிரேக் பிடித்து அரை வட்டமடித்து நிற்பார். கைதட்டல், விசில்கள் பறக்கும். இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களால் ராதா பிரபலமடையத் தொடங்கினார். ராதா மேடையேறினாலே மக்களின் ஆரவாரம் அடங்க வெகு நேரம் பிடித்தது.

நாடகத்தில் போலீஸ் வருவதுபோல காட்சி இருக்கும். அப்போது ராதா உடன் நடிப்பவர் பயப்படுவதுபோல நடிப்பார். உடனே ராதா வசனம் பேசுவார். 'ஏன்டா பயப்படுறே? போலீஸ்னா என்ன பெரிய கொம்பா? (ரசிகர்களைப் பார்த்து கைநீட்டி) எல்லாம் ஓசி டிக்கெட்ல முன்னாடி உட்கார்ந்திருக்கான் பாரு. காசு கொடுத்தவன்லாம் பின்னாடி உட்கார்ந்திருக்கான்.' ராதாவின் இந்த நக்கல் தாங்காமல், ஓசி டிக்கெட்டில் வந்தவர்கள் எழுந்து செல்வதும் உண்டு.

சேலத்தில் ஓரியண்டல் தியேட்டர்ஸ் நடத்திய ‘இழந்த காதல்' நாடகப் போஸ்டர்களில் 'எம்.ஆர். ராதாவின் சவுக்கடி ஸீனைக் காணத் தவறாதீர்கள்' என்று விளம்பரப்படுத்தப்பட்டது. அந்தக் காட்சி அவ்வளவு பிரபலம். காரணம், நாடகம் என்றாலே நடிகர்கள் மேடையிலே நின்றபடி ரசிகர்களைப் பார்த்துத்தான் பேச வேண்டும். முதுகைக் காட்டியபடி ஒரு வசனம்கூட பேசக்கூடாதென்பதே நாடக இலக்கணம். ஆனால் 'இழந்த காதல்' இறுதிக் காட்சியில் ராதா, கதாநாயகியைப் பிடித்து நாற்காலியில் தள்ளுவார். தன் இரண்டு கைகளையும் நாற்காலியில் ஊன்றியபடி கதாநாயகியிடம் பேச ஆரம்பிப்பார். பதினைந்து நிமிட வசனம். பதினைந்து நிமிடங்களும் ரசிகர்கள் அவரது முதுகைத்தான் பார்க்க முடியும். முகபாவனைகளை, கைகளின் அசைவினைக் காண முடியாது. இருந்தாலும் ரசிகர்கள் அதனை ஆரவாரமாக ரசித்தார்கள். சுருண்டு கிடக்கும் அவரது தலைமுடிகூட அங்கே நடித்துக் கொண்டிருந்தது.

நாடகம் தொடங்குவதற்கு முன்பு பூஜை செய்வது என்பது பொதுவான பழக்கம். ஆனால் ராதா, தமிழ்த்தாய் வாழ்த்துபாடி தொடங்குவார். ராதா நாடகத்துறைக்குள் நுழைந்த காலத்தில் மைக் எல்லாம் கிடையாது. கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கும் ரசிகனுக்கும் வசனம் கேட்கும் வகையில் தொண்டை கிழிய கத்தித்தான் பேச வேண்டியதிருந்தது. எனவே ஒவ்வொரு இரவும் நாடகம் முடிந்தபிறகும் ராதா, மேக்கப் அறைக்குள் வருவார்.

ஒரு பெரிய குண்டா அவருக்காகக் காத்திருக்கும். வாயை மட்டும் நீரால் துடைத்துவிட்டு உட்காருவார். குண்டாவில் பாதி அளவுக்குப் பழைய சோறு, மீதி அளவுக்குச் சிறு வெங்காயம் நிரம்பியிருக்கும். அவ்வளவையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார். மற்றவர்கள் என்றால் நள்ளிரவில் பழையதும் சின்ன வெங்காயமும் சாப்பிட்டால் ஜன்னி வந்துவிடும். ஆனால் மேடையில் தன் சக்தியை எல்லாம் பிரயோகித்து நடித்துவிட்டு வந்த பின் அந்த உணவு ராதாவுக்குத் தேவையானதாகவே இருந்தது. அவரது குழுவிலிருந்த சிறுவர்களுக்கு, ராதாவுக்காக வெங்காயம் உரிப்பதுவும் முக்கியமான வேலையாக இருந்தது.

நாடகத்துக்கான வசனங்களை ராதா உள்வாங்கிக் கொள்ளும் விதமே அலாதியானது. ‘அறிவு, ஆரம்பிக்கலாமா?' கேட்டுவிட்டு நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடி உட்கார்ந்து கொள்ளுவார் ராதா. அவரது குழுவிலிருந்த அறிவானந்தம் என்ற சிறுவன் வசனங்களை வாசிக்க ஆரம்பிப்பான். ராதாவிடமிருந்து பதிலோ, அசைவோ இருக்காது. அவர் தூங்கி விட்டாரோ என்று நினைத்து அறிவு நிறுத்துவான்.

‘ம்..' என்று குரல் கொடுப்பார் ராதா. இப்படி வசனங்களை தொடர்ந்து மூன்று நாள்கள் வாசித்தால் போதும். அதற்குப் பின் ராதாவுக்குப் பாடம் தேவையில்லை. அவரது ஞாபக சக்தி அந்த அளவுக்கு அபாரமானது.

ராதா அரங்கேற்றியதில் அதிக சர்ச்சைகளை உண்டாக்கிய நாடகம் ராமாயணம். ராதாவுக்காக நாடகத் தடை மசோதாவை சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றுமளவு பிரச்னை வலுத்தது. அதை மீறியும் ராமாயணத்தை பலமுறை வெற்றிகரமாக அரங்கேற்றினார் ராதா. மதுரையில் அன்று மாலை ராமாயணம் நாடகம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாடகத்தை எப்படி நடத்துகிறாய் என்று பார்க்கிறேன் என்று பகிரங்க மிரட்டல் விடுத்தார் அணுகுண்டு அய்யாவு என்பவர்.

நாடகம் ஆரம்பமானது. அரங்கத்தினுள் சில ரவுடிகளுடன் புகுந்து கலகம் செய்ய ஆரம்பித்தார் அய்யாவு. ராதா, தன் குழுவிலுள்ள பெண்களையும் சிறுவர்களையும் மட்டும் பத்திரமாக வண்டியேற்றி அங்கிருந்து அனுப்பினார். பின்னர் கோதாவில் குதித்தார்.

‘டேய் அந்த ரிவால்வரை எடுடா. குண்டு ஃபுல்லா இருக்கா? ஆறு குண்டு ஆறு பேரு. சுட்டுத் தள்ளிடறேன்' - அரங்கம் அதிரக் கத்தினார். யாருக்கும் ரிவால்வர் இருக்கிறதா என்று கூடத் தெரியாது. ஆனால் அய்யாவு கும்பல் பயந்து சிதறி ஓடியது.

அன்றைய வசூல் தொகை மூவாயிரம் ரூபாய்.

தனது நாடகக் குழுவினருக்கு வாரத்தில் மூன்று நாள்களாவது அசைவம் போட வேண்டுமென்பது ராதாவின் கட்டளை. நேரம் கிடைக்கும்போதேல்லாம் குழுவினருக்கு மட்டன் சமைப்பதில் ஆர்வம் காட்டுவார் ராதா. அவர் சமையலில் எம்டன். தன் குழுவினருக்கு தானே உணவு பரிமாறுவதிலும் ஆர்வம் காட்டுவார். அவரது குழுவில் சுத்த சைவ பார்ட்டிகளும் இருந்தார்கள். அவர்களுக்குத் தனிப்பந்தி நடைபெறும். அப்போது ராதா அடிக்கும் கமெண்ட், ‘அவங்க எல்லாம் தீண்டத்தகாதவங்க. தனியா உட்கார்ந்து சாப்பிடட்டும்.'

தன்னுடைய எம்.ஆர். ராதா நாடக மன்றத்திலிருந்து யாராவது விலகிச் செல்லும்போது, அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத பெருந்தொகையை கொடுத்து வாழ்த்தி வழியனுப்புவது ராதாவின் பழக்கமாக இருந்தது.

காளிமார்க் சோடா கம்பெனி நடத்தி வந்த பரமசிவம், ‘எம்.ஆர். ராதா சோடா' என்று ஒரு தனி பிராண்ட் போட்டு விற்குமளவுக்கு தமிழ்நாடெங்கும் நாடகங்கள் மூலம் ராதாவின் புகழ் பரவியது. குறிப்பாக ரத்தக் கண்ணீர். தன் வாழ்நாளில் மட்டும் ராதா, புதிய புதிய காட்சிகளுடன், புத்தம் புதிய வசனங்களுடன் கிட்டத்தட்ட ஐயாயிரம் முறைக்கும் மேல் 'ரத்தக் கண்ணீர்' நாடகத்தை மேடையேற்றியிருக்கிறார்.

அந்தக் காலத்தில் நவாப் ராஜமாணிக்கம் கம்பெனி நாடக செட்டுகளுக்காகவே மக்கள் பார்க்க வருவார்கள். பெரிய பாம்பு, பிளக்கும் கடல், சிருங்கார அரண்மனை, பிரம்மாண்ட தேவலோகம் என்று அசர வைத்தார்கள் மக்களை. ஆனால் ராதா அதற்கு நேர் எதிர். நீலநிறப் படுதா, அதில் காடு என்றிருக்கும். காட்சி மாறும். சிவப்பு நிற படுதா, அதில் வீடு என்று இருக்கும். அடுத்து பச்சை நிறப் படுதா. அதில் பொது இடம் என்றிருக்கும். மற்றபடி எந்த செட்டிங்கும் கிடையாது. மக்கள் படுதாவைப் பார்த்து எங்கு காட்சி நடக்கிறது என்று புரிந்துகொண்டு ரசிப்பார்கள்.

‘மக்கள் என் நடிப்பைத்தான் பார்க்க வர்றாங்களே தவிர செட்டிங்கை இல்லே' என்பார் ராதா.

1979, செப்டெம்பர் 17-ல் திராவிடர் கழகத்தினர் பெரியாரின் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் மஞ்சள் காமாலை முற்றி உயிரை இழந்தார் எம்.ஆர். ராதா.

திரையுலகத்தினர், அரசியல் பிரமுகர்கள், நாடகக் கலைஞர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் இறுதி மரியாதை செலுத்தினார்கள். சங்கிலியாண்டபுரம் வீட்டிலிருந்து ராதாவின் இறுதி ஊர்வலம் காவேரிக்கரை ஓயாமாரி இடுகாடு நோக்கிக் கிளம்பியது. வழிநெடுக சுவர்களில் அன்று நடைபெறவிருந்த 'ரத்தக்கண்ணீர்' நாடகத்துக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

Friday, September 16, 2016



பாஸ்வேர்டை இப்படியும் உருவாக்கலாம்!

இணையச் சேவைகளை இயக்க உருவாக்குவதற்கான பாஸ்வேர்டு வலுவானதாக இருந்தால்தான் பாதுகாப்பானதாக இருக்கும். ஆனால் பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்கக் கடினமாக முயற்சி செய்தால், அதை நினைவில் வைத்துக்கொள்வதும் கடினமாகலாம். அதற்காக வழக்கமாக எல்லோரும் பயன்படுத்தும் பாஸ்வேர்டு உத்தியையே பயன்படுத்தக் கூடாது. அதைவிட ஆபத்தானது வேறில்லை.

மிகவும் வலுவான ஆனால் எளிதாக நினைவில் கொள்ளக்கூடிய பாஸ்வேர்டை உருவாக்கும் எளிய வழியை ‘ரெட்டிட்' தளத்தின் பயனாளி ஒருவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

எந்தச் சேவைக்காக பாஸ்வேர்ட் தேவையோ அந்தத் தளத்தின் பெயரைத் தலைகீழாக எழுத வேண்டும். இப்போது அந்த எழுத்துக்களுக்கு நடுவே உங்கள் பிறந்த நாள் எண்களை வரிசையாக இடம்பெறச் செய்ய வேண்டும். முதல் எழுத்தைப் பெரிய எழுத்தாக மாற்றுங்கள். அவ்வளவுதான். வலுவான பாஸ்வேர்டு தயார். இதை உருவாக்கிய வழிமுறையை நினைவில் வைத்துக்கொண்டால்போதும் பாஸ்வேர்டை எளிதாக டைப் செய்துவிடலாம். ஒவ்வொரு தளத்துக்கும் இதே முறையில் பாஸ்வேர்டை அமைத்துக்கொள்ளலாம்.

ஆனால், இந்த முறையை ஒரு வழிகாட்டியாக வைத்துக்கொண்டு உங்களுக்கான பிரத்யேக மாற்றத்துடன் இதைப் பயன்படுத்துவது இன்னும் கூட நல்லது!


தி.மலை கிராமத்தில் தொடக்கப் பள்ளிக்காக ரூ.30 லட்சம் மதிப்பு நிலத்தை கொடுத்த தலைமை ஆசிரியர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட துளுவ புஷ்பகிரி கிராமத்தில் அரசு நிதி உதவிபெறும் தொடக்கப் பள்ளி உள்ளது.

35 ஆண்டுகளுக்கு முன்பு, அரசிடம் இந்தப் பள்ளியை ஒப்படைத்தது நிர்வாகம். அதன் பிறகு, பள்ளிக் கல்வித் துறையின் நேரடி கண்காணிப்பில் இயங்குகி றது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 48 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்களை வழி நடத்தும் பணியில் 2 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, இடவசதி தடையாக இருந்தது. அங்குள்ள தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை பள்ளிக்கு எழுதிக் கொடுத்தார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி. சந்தை மதிப்பில் தற்போது அந்த இடம் ரூ.30 லட்சமாகும்.

சில தடைகளைத் தாண்டி, பள்ளிக் கட்டிடம் எழுந்துள்ளது. கொடிக் கம்பம் அருகே திருவள்ளுவர் சிலை நிறுவப்படுகிறது. மாநில நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு சுற்றுச் சுவரை கட்டிக் கொடுத்துள் ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட் சித் துறை. பள்ளிக் கட்டிடம் கட்டும் பணியை கட்டிடக் குழு மேற் பார்வை செய்து வருகிறது.

இது குறித்து கட்டிடக் குழுவில் உள்ளவர்கள் கூறும்போது, “கல்வி ஆர்வலர்களின் நிதி உதவியால் சுமார் ரூ.12 லட்சம் வரை செலவிடப் பட்டு பணி நடைபெற்றது. மேலும், ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. அந்த நிதிக்காக காத்திருக்கிறோம். நவீன கணினி வழிக் கல்வி, யோகாசனம் மற்றும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செயதுள்ளோம். எங்கள் இலக்கு நிறைவேற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி கூறும்போது, “அந்தப் பள்ளியில் படித்தவன் நான். ஆரம்பக் கல்வியை தொடங்கி, ஆசிரியராக உயர்ந்து நிற்கிறேன். அதற்கு அடித்தளமிட்டது, நான் படித்த இந்தப் பள்ளியாகும். அந்த பள்ளிக்கு இடம் தேவைப்படுகிறது என்பதை அறிந்தேன். சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயிலவேண்டும் என்ற நோக்கத்தில், எனது 20 சென்ட் நிலத்தை எழுதித் கொடுத்துள்ளேன் ” என்றார்.

வருவாய் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கும் இந்த காலத்தில், ஏழை மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளிக்காக 30 லட்சம் மதிப்புள்ள தனது நிலத்தை தானமாக கொடுத்த தலைமை ஆசிரியர் கோவிந்தசாமியின் நடவடிக்கையை அனைத்துத் தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

சேலத்தில் அலங்கோலமாய் சுற்றிய மனநலம் பாதித்த பெண்: மனிதநேயத்தை கட்டிக்காத்த போலீஸார்


சேலம், புதிய பேருந்து நிலையம் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த பெண், நேற்று காலையில் இருந்து மாலை வரை அலங்கோல ஆடையுடன் சுற்றித் திரிந்து வந்தார். அவர் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் வரை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மசூதி வாயிலில் பிச்சை எடுத்து வந்தார்.

திடீரென அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பகுதிக்கு வருவதில்லை. இந்நிலையில் நேற்று காலை அலங்கோலமான ஆடையுடன் அந்த பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். தள்ளுவண்டி கடைக்காரர்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் அப்பெண்ணுக்கு ஆடை கொடுத்தனர். ஆனால், அவர் ஆடைகளை வாங்கி ரோட்டில் வீசியுள்ளார்.இதுகுறித்து அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்தும், அவர்கள் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அந்த பெண்ணை அழைத்து செல்ல வரவில்லை. எனவே, அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேறு வழியின்றி அலங்கோலமாய் சாலையில் அலைந்த பெண்ணை பலரும் வேடிக்கை பொருளாய் பார்த்து சென்றதை சகிக்க முடியாமல், தள்ளுவண்டி கீழே மறைவிடத்தில் அமர வைத்தனர். மதியம் முதல் தள்ளுவண்டியின் கீழே முடங்கியிருந்த அப்பெண் குறித்து, பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அவர் இரண்டு போலீஸாரை சம்பவ இடத்துக்கு ஆடை, பழங்களுடன் அனுப்பி வைத்தார். போலீஸார் ஆடை அணிய அந்த பெண்ணை வற்புறுத்தியும், அவர் அதை முதலில் வீசி எரிந்தார்.

பின்னர் வேறுவழியின்றி மனிதநேயத்தை கட்டிக்காக்கும் பொறுப்பை உணர்ந்து போலீஸார் அப்பெண்ணுக்கு ஆடை அணிவித்து, பெண்கள் பாதுகாப்பு மையத்துக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், அவர் வர மறுத்த நிலையில், அங்கிருந்தவர்களிடம் போலீஸார் அவரை பார்த்துக் கொள்ளும்படியும், உரிய முறையில் அவரை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றனர்.

சேலம், பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் வின்சென்ட் மற்றும் போலீஸாரின் இந்த நடவடிக்கையை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

காற்றினிலே வரும் கீதம்... - எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு!


இசையைச் சுவாசித்தவர். இசையில் தியானித்தவர். இசையொடு இரண்டற இணைந்தவர். தன் இசையைக் கேட்கும் ஒவ்வொருவரையும் புனிதப் பயணம் அழைத்துச்சென்று ஆலயங்களைத் தரிசிக்கவைத்தவர். காஞ்சி காமாட்சியையும், மதுரை மீனாட்சியையும் கண்முன் கொண்டுவரும் திறன், எம்.எஸ். அவர்களின் பாடல்களுக்கு உள்ளது. இத்தகைய பெருமைமிக்க இசை அரசி எம்.எஸ்.அம்மாவிற்கு, இன்றோடு(செப்.16) 100 வயது ஆகிறது. இந்த ஆண்டு, எம்.எஸ்.ஸின் நூற்றாண்டு ஆகும். இந்த இசை அரசியை பற்றி சில செய்திகள் இங்கே……..

17 வயதில் இருந்தே:

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மதுரையில் சங்கீத உலகின் அதிசயங்களில் ஒருவராகப் பிறந்தார். செம்மங்குடி சீனிவாச ஐயரிடம் கர்நாடக இசையையும், பண்டிதர் நாராயண ராவ் வியாஸிடம் இந்துஸ்தானியையும் கற்றுக்கொண்ட இவர், தனது 17வது வயதிலேயே இசைத் துறையில் இனிய குரலைப் பதிய வைத்தார்.

தரணி ஆண்ட எம்.எஸ்.:

கல்யாணக் கச்சேரி என்றால் ஒரு மாதிரி, கோயில் கச்சேரி என்றால் ஒரு மாதிரி, சபா கச்சேரி என்றால் வேறு மாதிரி என்ற பாகுபடுகளை தன் வாழ்நாளில் என்றுமே வைத்துக் கொண்டதில்லை எம்.எஸ்.அவர்கள். ‘பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’ என்று சொல்வார்கள். அவ்வகையில், பரணியில் பிறந்த இந்த இசையரசி தரணியை ஆளத்தான் செய்தார். சங்கீத உலகின் முடிசூடா மகாராணியாக திகழ்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும், திரைப்படத்துக்குமான உறவு இன்றைய இளைய சமுதாயம் அதிகம் அறிந்திராத ஒன்று. திரைப்படங்களில் ஆயிரம் பேர் பாடியிருக்கலாம். ஆனால் திரையில் ஒலித்த தெய்வீகக் குரல் எம்.எஸ்.சுப்புலட்சுமியினுடையது. சங்கீத சாம்ராஜ்யத்துக்கு திரையுலகம் விட்டுக் கொடுத்த பொக்கிஷம் எம்.எஸ்.சுப்புலட்சுமி. திரையுலகில் அவரது பங்கு மிக குறைவானதாக இருக்கலாம். ஆனால் நிறைவானது. இன்று வரை எம்.எஸ்.சின் உயரம் யாராலும் தொட முடியாத உயரமாகவே உள்ளது.





உறுதுணையாக இருந்த கணவர்:

ஒருமுறை மும்பைக்கு கச்சேரி செய்ய சென்றபோது ரெயிலில் அறிமுகமானார் இளைஞர் சதாசிவம். எம்.எஸ்.ஸின் தீவிர ரசிகர். அவரின் திறமைகளை மேலும் வெளிக்கொண்டுவர வேண்டும், அவ்வாறு செய்து அவரது புகழை உச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினார். பின்னாளில் இசை அரசியை திருமணம் செய்துகொண்டார். சங்கீதத்திலும், சமூகத்திலும் தன் மனைவி சிறப்பு எய்த வேண்டும் என்ற ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர். தனது இசை பயணத்தை மேலும் செப்பனிட தன் கணவரும் வரப்போகிறார் என்பதை எண்ணிப் பூரித்துவிட்டார் எம்.எஸ். அதன் பின் அவர் பாடாத பாட்டும் இல்லை, செல்லாத நாடும் இல்லை, வாங்காத விருதும் இல்லை எனுமளவு புகழ்க்கொடி நாட்டினார். தான் பாடிச் சம்பாதித்த பணத்தின் பெரும் பகுதியை சமூக காரியங்களுக்கு அள்ளிக் கொடுத்தார். தெய்வீக பணிகளுக்கு வாரிக் கொடுத்தார்.

மீரா ஏற்படுத்திய அழகிய தாக்கம்:

திரு.கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், கிருஷ்ணனை நினைத்து நினைத்து உருகும் பக்த மீராவின் கதையை எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கத்தில் உருவாக்கினார். இசை அரசியை திரையுலகம் வியந்து போற்றியது. எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையில் எம்.எஸ். பாடிய பாடல்களோடு மீராவாக எம்.எஸ்.அம்மாவை பார்க்கும் போது இது படமா அல்லது மீராவே உயிர்த்தெழுந்து வந்தாரா என நினைக்கும் அளவுக்கு இருக்கும். எம்.எஸ். அவர்களின் வாழ்வில், இந்த பக்த மீரா ஒரு மைல்கல்லாக இருந்துள்ளாள். சரோஜினி நாயுடு அவர்கள் படத்தை பார்த்து விட்டு, ‘இந்தியாவின் இசைக்குயில்’ என்ற பட்டத்தை வழங்கினார். அன்றைய பிரதமர் நேரு அவர்கள் கூறும் போது, “இந்த இசை அரசிக்கு முன்னால் நான் சாதாரண பிரதம மந்திரியே” என்றார்.

இசை சமூகத்துக்கு ரொம்பவே அவசியம்:

இன்றைய இளைஞர் சமுதாயம் நல்ல சங்கீதத்தால் மேன்மை அடைய வேண்டும் என்று எண்ணிய அம்மா அவர்கள், “தாய்மார்கள் அடுத்த தலைமுறையினருக்கு நல்ல ரசனை உணர்வை ஊட்டினால், நாட்டில் சங்கீதம் பெருகும், அதாவது பக்தி பெருகும், நாட்டு மக்களுக்கும் நல்வாழ்வு கிடைக்கும்” என்றார். இசை பெருகுவதன் மூலம் மக்களின் நலமும் நாட்டின் நலமும் பெருகும் என்பதை உளமார நம்பியவர். சுமார் 40வருடங்களுக்கு முன்னர் எம்.எஸ். அவர்கள் கூறிய கருத்துக்கள் யாவும் இன்றளவும் ஏற்புடையதாகவே இருக்கின்றது.

‘இது நூற்றாண்டல்ல, இசை ஆண்டு’ :

இசையும், இறை பணியும், வள்ளல் குணமுமாய், இந்திய பெண்களின் அடையாளமாய் வாழ்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004ம் ஆண்டு டிசம்பர் 12ந் தேதி மறைந்தார். உலகையே தன் இசையால் வென்ற இவரின் இன்று தொடங்கும் அவரது நூற்றாண்டை இசை ஆண்டாக தமிழகம் கொண்டாடட்டும்.
Posted Date : 10:10 (16/09/2016)
Last updated : 10:10 (16/09/2016)




ரூ.500-க்கு 600 GB - ரிலையன்ஸ் ஜியோவின் இரண்டாவது அதிரடி?!


vikatan.com

கடந்த செப்டம்பர் 01, 2016 அன்று தான், ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி ஆஃபர்கள்ளை அறிவித்து, மற்ற நிறுவனங்கள் தொழில் இருக்கலாமா வேண்டாமா என்கிற ரேஞ்சில்நடுங்க வைத்தது.

இந்த ஒரு அறிவிப்பால சுமார் 20,000 கோடி ரூபாய் வரை மற்ற டெலிகம்யூனிகேஷன் நிறுவன பங்குகள் விலை சரிந்தன. இப்போது வரை அந்த அதிர்ச்சியில் இருந்து மற்ற நிறுவனங்கள் மீண்டதா என்று தெரியவில்லை. அதற்குள் ஜப்பான் மீது இரண்டாவது அணு குண்டை வீசியது போல, அடுத்த ஆஃபர் குண்டுகளை பொழியத் தொடங்கி இருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ.


பயன்படுத்தும் இணையத்தின் வேகம், பயன்படுத்தும் அளவு, விலை ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு பல திட்டங்களை அறிவித்து அலறவிட்டிருக்கிறது. இந்த அணு குண்டை 3 வகையாக பிரிக்கலாம்.


1. விலையை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் திட்டங்கள் :
உதாரணமாக 500 ரூபாய் செலுத்தினால், 600 ஜிபி நெட்டை, 15 எம்.பி.பி.எஸ் வேகத்தில், அடுத்த 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இது போல மற்ற திட்டங்களை கீழே பாருங்களேன்.
இப்படி 500 ரூபாயில் தொடங்கும் திட்டம் அதிகபட்சமாக 1000 ரூபாய் வரை இருக்கிறது.




2. Mbps அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் :
இந்த திட்டத்தில் 50 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்றால், 2000 ஜிபி இணையத்தை, 1500 ரூபாய் செலுத்தி, அடுத்த 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வகையான திட்டங்களில் எம்பிபிஎஸ் வேகம் அதிகரிக்க அதிகரிக்க இணைய டேட்டா அளவு குறையும், விலையும் அதிகரிக்கும். ஆனால் வேலிடிட்டி நாட்கள் குறையாது.




3. வால்யூம்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் :
இதில் நாள் ஒன்றுக்கு பயன்படுத்தும் டேட்டாக்களை ஜிபியில் கணக்கிட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கிறன. நாள் ஒன்றுக்கு 5 ஜிபி தொடங்கி 60 ஜிபி வரை திட்டங்கள் இருக்கின்றன. இதில் ஒரு குறை என்ன என்றால் எவ்வளவு வேகத்தில் இணையம் கிடைக்கும் என்பதை சொல்லவில்லை. அதே போல் விலையும் சற்று புரியாத வகையிலேயே இருக்கிறது.



மிக முக்கியமான விஷயம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் எந்த அதிகாரிகளாலும் இதுவரை இந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட வில்லை. ஆனால் இந்த அளவுக்கு இணையத்தில் புதிய அணு குண்டுகளை கட்டாயமாக வீசும் என்பதை மட்டும் அனலிஸ்டுகளும், டெலிகம்யூனிகேஷன் வல்லுநர்களும் கணித்திருக்கிறார்கள்.

அப்புறம் என்ன, சும்மாவே யூடிப்ல படம் பாப்போம், இனிமே ஒன்லி ஹெச்டி தானே. வாங் போய் படம் பாப்போம் பாஸ்.

கலந்து பேசுங்கள்


காவிரி விவகாரம் உருவாக்கிய பதற்றம் குறைய ஆரம்பித்திருப்பது ஆறுதல் அளித்தாலும், இப்பிரச்சினையின் அதிர்வுகள் அடங்குவதற்கு இன்னும் காலம் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. கன்னட அமைப்புகள் அரங்கேற்றிய வன்முறையின் அதிர்வலைகள் இம்முறை அமெரிக்கா வரை எதிரொலித்திருக்கின்றன. தன்னுடைய குடிமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. இதற்கு முன்பு எப்படியோ அப்படியே மீண்டும் தமிழர்கள் இயல்பான சூழலுக்குத் திரும்புவார்கள்; கன்னடர் - தமிழர் உறவு மீண்டும் இயல்பான நிலைக்குத் திரும்பும் என்றெல்லாம் பெங்களூருவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தாலும், நடந்த நிகழ்வுகளை யோசிக்கையில், சில விஷயங்களை நாம் பேச வேண்டும் என்று தோன்றுகிறது.

பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, கொள்ளேகால், ஷிமோகா, பத்ராவதி என்று கர்நாடக மாநிலம் முழுவதும் சுமார் ஒரு கோடித் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கர்நாடகத்தில் குடியேறியவர்கள். மைசூரு மகாராஜாக்கள் காலத்திலேயே, திவான்களாகத் திகழ்ந்த தமிழர்களும் உண்டு. கர்நாடகத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் உறுதுணையாகத் தமிழர்கள் நின்ற வரலாறு உண்டு. கல்வி, வணிகம், திரைத் துறை என்று சகல துறைகளிலும் தமிழர்களுக்குப் பங்கிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், அங்கு வெறியுணர்வு தூண்டப்பட்டு பதற்றச் சூழல் ஏற்படும்போது தமிழகத்தில் நடக்கும் சிறு சிறு சம்பவங்களும் இன்னொரு முனையில் சக தமிழர்களின் வாழ்வுக்கே துன்பத்தை விளைவிக்கும்.

கர்நாடகம் அளவுக்குத் தமிழகத்தில் வன்முறைகள் இல்லை. இயல்பாகவே நம் மக்கள் அமைதி காத்தார்கள் என்பதோடு, தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததும் இதற்கு முக்கியமான காரணம். அதேபோல, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. ஆனால், இப்படியான விஷயங்கள் மாற்றுத்தரப்பின் காதுகளை எட்டுவது முக்கியம். தமிழக முதல்வர் இந்தத் தருணத்தில் பேசியிருக்க வேண்டும். கர்நாடகத் தரப்பை நோக்கி அல்ல; தமிழக மக்களை நோக்கியே அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு, அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்திருக்கலாம். அது பதற்றங்களைக் குறைக்கவும் நல்லெண்ணங்களை விதைக்கவும் வழிவகுக்கும். மேலும், பிரச்சினை இவ்வளவு தூரம் சென்ற பிறகும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கூட்டாதது சரியான போக்கல்ல.

ஒருபக்கம் காவிரியில் நம்முடைய உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியிலும் அரசியல்ரீதியிலுமான நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம். மறுபக்கம் இனிவரும் காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறையை நம்மளவில் எதிர்கொள்ள என்ன மாதிரியான தீர்வுகளை நோக்கி நாம் நகரப்போகிறோம் என்று விவாதிப்பதும் முக்கியம். ஊர் கூடித் தேர் இழுக்கும் வேலை இது. முதல்வர்தான் ஊரைக் கூட்ட வேண்டும்!

போதும் "பாரா'முகம்!


DINAMANI

ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் தமிழகத்தைச் சேர்ந்த தங்கவேலுமாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று பதக்கப் பட்டியலைத் தொடங்கி வைக்க, தொடர்ந்து தற்போது ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்கம் வென்றுள்ளார்.

இவர்களுடன் இந்திய வீரர்கள் தீபா மாலிக் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், வருண் சிங் பதி உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளனர்.
பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதமர், அமைச்சர்கள் என்று பலரும் வாழ்த்துகள் தெரிவித்தாலும்கூட, ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற சிந்துவுக்கும், வெண்கலம் வென்ற சாக்ஷிமாலிக்குக்கும் கிடைத்த பரிசு மழை போன்று பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்குக் குவியவில்லை. வாழ்த்துகளும்கூடக் குறைவுதான். நல்லவேளையாக, தங்கவேலு மாரியப்பன் தங்கம் வென்றவுடனேயே தமிழக முதல்வர் ரூ.2 கோடியைபரிசாக அறிவித்து இந்தக் குறையை ஈடு செய்தார்.
பதக்கம் வென்ற ஒலிம்பிக் வீரர்களுக்குக் கிடைக்கும் பரிசும் பாராட்டும் பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு இந்தியாவில் கிடைக்கவில்லை என்றால் அதற்குக் காரணம், ஒலிம்பிக் போட்டியுடன் நாம்விளையாட்டு மனநிலையிலிருந்து விலகி விடுவதும், பாரா ஒலிம்பிக் என்பது ஏதோ சிலரின் மனத்திருப்திக்காக நடத்தப்படும் விளையாட்டு என்று கருதுவதும்தான். இந்த எண்ணம் மாற வேண்டும்.

தாங்கள் உடல் ஊனமுற்றவர்கள் அல்ல, மாற்றுத்திறனாளிகள் என்பதை இதுபோன்று அவர்கள் பலமுறை நிரூபித்த பிறகும்கூட நமது மனநிலையில் மாற்றம் ஏற்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
தங்கவேலு மாரியப்பன் தனது ஐந்தாவது வயதில் பேருந்து விபத்தில் வலது முழங்காலை இழந்தவர். தீபா மாலிக், தனது தண்டுவடத்தில் வந்த கட்டியால் இடுப்புக்கு கீழ் பகுதிசெயல்பட முடியாதநிலைக்குத் தள்ளப்பட்டவர். தேவேந்திர ஜஜாரியா ஒரு விபத்தில் சிறுவயதிலேயே கைகளை அகற்ற வேண்டிய நிலைக்கு ஆளானவர். வருண் சிங் பதி போலியோ நோயால் ஒரு காலின் செயல்
குன்றிப் போனவர். ஆனால் இவர்கள் அனைவருமே மனம் தள
ராமல் தங்களை ஏதாவது ஒருவகையில் சாதனையாளராக நிலை
நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற வெறியுடன் போராடியவர்கள்.
இவர்களுக்குக் கிடைத்துள்ள வெற்றி வெறும் விளையாட்டுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல. தளராத மன உறுதிக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றி. இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்குமுன்மாதிரிகள். ஒலிம்பிக் வீரர்களுக்கு இணையாக இவர்களுக்கும் பாராட்டும் பரிசு மழையும் குவிய வேண்டும்.
இரண்டாம் உலகப்போரில் ஊனமடைந்தவர்களுக்கு வாழ்க்கையில் புது நம்பிக்கையை ஏற்படுத்த, 1948-இல் மிகச் சிறு அளவில் தொடங்கப்பட்டதுதான் பாரா ஒலிம்பிக். லுட்விக் கட்மேன் என்கிறநரம்பியல் மருத்துவர், தனது ஸ்டோக் மேண்டாவில்லே மருத்துவ
மனையில், இரண்டாம் உலகப்போரில் முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்ட 16 நோயாளிகளுக்காக, விளையாட்டுப் போட்டி ஒன்றை நடத்தினார். ஒலிம்பிக் பந்தயம் நடைபெறும் அதே நேரத்தில்இந்தப் பந்தயமும் நடத்தப்பட்டது. அப்படித் தொடங்கியதுதான் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் பந்தயம்.
அன்றைய தேதியில் பாரா ஒலிம்பிக் என்கிற பெயர் சூட்டப்படவில்லை. 1964-இல்தான் இந்தப் பெயர் அதிகாரபூர்வமாக பயன்
படுத்தப்பட்டது. 1988 "சியோல்' ஒலிம்பிக் பந்தயத்தின்போது, அதேபோல பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடத்தும் வழக்கம் தொடங்கியது. ஒலிம்பிக் பந்தயம் போலவே இதிலும் தொடக்க, நிறைவுவிழாக்கள் நடத்தும் வழக்கமும் ஆரம்பித்தது.
1989-இல் சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. 1992-இல் நடந்த "பார்சிலோனா' ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து இந்த கமிட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் இணைந்து செயல்படத் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடே பாரா ஒலிம்பிக் போட்டியையும் நடத்த வேண்டும் என்ற புதிய

நடைமுறை 2008-க்கு பிறகே தீர்மானிக்கப்பட்டு, ஒலிம்பிக் போட்டி நடைபெறும் அதே வளாகத்தில், ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
ரியோ டி ஜெனீரோவில், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற அப்துல் லத்தீப் பாகா, ஒலிம்பிக்கில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற மாத்யூ சென்ட்ரோவிட்ஸ் எடுத்துக்கொண்டநேரத்தைக் காட்டிலும் 1.7 விநாடி குறைவாக, அதாவது 3 நிமிடம் 48.29 விநாடியில் ஓடி சாதனை நிகழ்த்தியிருப்பதைப் பார்க்கும்போது, இவர்களது சாதனையின் வீரியம் அளவிட முடியாதது என்பதை உணரமுடிகிறது.
ஒலிம்பிக் போட்டிக்கு 118 வீரர்களை அனுப்பி வைத்த நாம், பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வெறும் 19 வீரர்களை மட்டுமே அனுப்பினோம். அவர்கள் இரண்டு தங்கப் பதக்கங்களையும்,வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
பாரா ஒலிம்பிக் போட்டியிலும் அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகளை அனுப்பும் நிலை அடுத்த ஒலிம்பிக் போட்டியின்போது உருவாக வேண்டும். ஒவ்வொரு மாநிலமும்மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகளில் தனிப்பயிற்சி அளித்து, அகில இந்திய அளவில் போட்டியிடும் திறன் இருப்பின், அவர்களை ஊக்கப்படுத்தி, அந்த விளையாட்டில் அவர்கள் தனிக்கவனம்

செலுத்த அவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவினால், இந்தியாவுக்கு பாரா ஒலிம்பிக் போட்டிகளில் மேலும் அதிகமான பதக்கங்கள் கிடைக்கக் கூடும்.

Soumya's rapist, 'beggar' Govindachamy had an expensive lawyer who charged lakhs

The lawyer told TNM that he has earned more than 15 lakhs in the case.

Dhanya Rajendran | Thursday, September 15, 2016 - 14:31

When 30-year -old Govindachamy alias Charly was first arrested on charges of raping and murdering 23-year-old Soumya, he was described as a mentally unbalanced beggar, and then a petty thief. However, the case soon took a surprising turn, when high-profile criminal lawyer, BA Aloor, appeared along with two other lawyers to defend Govindachamy. Aloor also represented Govindachamy in the Supreme Court, part of a team of four lawyers that got his sentence commuted from a death sentence to seven years’ imprisonment.

While Govindachamy or any other accused is free to hire any lawyer of their choice, what is apparent is that the case took a turn in the Supreme Court that most people had not expected. The prosecution was not able to prove the murder charge.

Twenty-three-year-old Soumya who worked as a salesgirl, was returning home by Ernakulam-Shoranur passenger train on February 1, 2011. Govindachami went to the ladies’ compartment where she was, robbed and attacked her. Soumya’s body was found in the forests near Vallathol railway station.

Read: Soumya case: Why the SC was unconvinced that Govindachamy murdered her

Originally convicted of rape and murder and awarded the death sentence by a Thrissur Fast Track Court, Govindachamy appealed the case in the Kerala High Court and the Supreme Court. While the HC upheld the sentence, the SC commuted the death term for murder charge to seven years’ imprisonment. The court on Thursday upheld life sentence in the rape case and said it was not convinced that Govindachamy had murdered Soumya.

Aloor, originally named Biju Antony, is a criminal lawyer based in Mumbai, and has appeared in a string of high-profile cases during his career. How could Govindachamy, a petty thief and a ‘beggar’ afford a lawyer like Aloor?

“How is that anyone’s concern? I charge Rs 5 lakh per criminal case and my duty is only to represent my client. Since I have represented him in three courts, the charges have exceeded Rs 15 lakhs, but that is not of anyone's concern,” Aloor told The News Minute after the SC judgment came.

When asked who approached him to represent Govindachamy, he was elusive. “There are certain people who wanted to help him. People who have been accused along with him in other cases who had approached me. The ‘mafia connection’ is a media creation,” he says.

When asked why the media should not be concerned that a petty criminal could afford a good lawyer and crush a case, Aloor retorted, “When crores were spent for Achutanandan in the Supreme Court, did the media question that? Why question this now?”

Aloor says the verdict clearly shows the prosecution had manufactured the case against his client. “This was a pre-decided case. People in Kerala were angry and wanted a scapegoat. The forensic evidence was completely fabricated in the case and that is why the prosecution could not prove the case,” he said.

Among the clients he has represented are Devinder Singh alias Bunty Chor, reported to have committed 500 burglaries across the country. He is currently representing the men arrested for murdering rationalist and thinker Narendra Dabholkar.

At the time he was representing Govindachamy in the Kerala High Court, Aloor was also fighting another high profile rape and murder,representing one of the men accused in the death of Nayana Poojari, a software engineer, in Pune.

Most recently, Aloor caused a minor stir when it was reported that the lawyer will reportedly represent Ameerul Islam in the Jisha rape and murder case. Previously, Aloor had also claimed that he would represent Ajmal Kasab, convicted and hanged for the 2008 terror attacks in Mumbai.

When Aloor’s appearance on behalf of Govindachamy gained media attention, the lawyer reportedly created more controversy when he revealed that he had appeared in the case after being engaged by “a network of criminals from Tamil Nadu with links to the Mumbai underground activities.”

Govindachamy was arrested in February 2011, and as per the apex court verdict, he will have to serve only 16 more months in prison for the Soumya case. He will be release in 2022 as he is simultaneously serving sentences in cases of robbery and assaulting a jail convict. Though the man had almost eight cases against him in Tamil Nadu, he was known as Charley Thomas in TN police records.

How twins evaded arrest for long time

How twins evaded arrest for long time TIMES OF INDIA NEW DELHI   25.09.2024  On Sept 21, a woman was purchasing fruits at Burari Chowk when ...