Saturday, November 26, 2016


மின்னணு வாழ்வுச் சான்றிதழ் திட்டம் ஓய்வூதியர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்!

By ஆ.சமுத்திரராஜன் | Published on : 26th November 2016 05:03 AM

கருவூலகங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், அலைச்சலைக் குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட மின்னணு வாழ்வுச் சான்றிதழ் திட்டம் வரப்பிரசாதமாகவே இருக்கும் என்கின்றனர் ஓய்வூதியதாரர்கள்.

வேலூர் மாவட்டத்தில் மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 32,000 ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்டக் கருவூலகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள 10 சார்நிலைக் கருவூலகங்கள் மூலம் தங்களது மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுகின்றனர்.

ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிரோடு இருப்பதற்கான வாழ்வுச் சான்றை உரிய படிவத்துடன் பூர்த்தி செய்து அவர்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலக அதிகாரியிடம் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூலை மாதத்துக்குள் அளிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால் ஓய்வூதியதாரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
ஓய்வூதியதாரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நேரில் ஆஜராக முடியாத வகையில் வெளியூரில் வசித்தாலோ அல்லது உடல்நலமின்றி இருந்தாலோ மருத்துவர், அரசின் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றிதழ் பெற்று தபால் மூலம் அனுப்பி வைத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் மாநிலம் முழுவதிலும் இயங்கி வரும் 486 இணைய சேவை மையங்களில் ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாழ்வுச் சான்று பெறும் திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

இந்தத் திட்டத்தின்படி சான்றிதழ் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண்ணைத் தெரிவித்து, கைவிரல் ரேகையைப் பதிவு செய்வதுடன், ஓய்வூதியம் தொடர்பான தகவல்களுடன் வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் (பான் அட்டை) எடுத்துச் சென்று ரூ.10 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்வுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.
வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் மூலம் இயங்கி வரும் 13 இணைய சேவை மையங்களில் மின்னணு வாழ்வுச் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கருவூலகத்தில் கூட்டம் குறைவதோடு, ஓய்வூதியதாரர்களுக்கு தேவையற்ற அலைச்சல் வெகுவாக குறையும் என்பதில் சந்தேகமில்லை.
இதுகுறித்து ஓய்வூதியதாரர்களிடம் கேட்டதற்கு, இணைய சேவை மூலம் மின்னணு வாழ்வுச் சான்றிதழ் பெறும் திட்டத்தால் வெளியூர்களில் இருக்கும் ஓய்வூதியர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலகங்களுக்கு நேரில் செல்வதைத் தவிர்த்து, வசிக்கும் இடத்தின் அருகில் உள்ள இணைய சேவை மையத்தில் உரிய ஆவணங்களுடன் கைரேகையைப் பதிவு செய்தால் சம்பந்தப்பட்டவர் உயிருடன் உள்ளார் என்பது உறுதியாகி விடும். மாநில அரசின் இந்த நடவடிக்கையால் வரும் ஆண்டுகளில் ஓய்வூதியதாரர்களுக்கு அலைச்சல் குறைவதோடு, போக்குவரத்துச் செலவும் மிச்சப்படும் என்றனர்.

இதுகுறித்து மாவட்டக் கருவூலக அலுவலர் சாந்திமணி கூறியதாவது:
வயது முதிர்ந்த, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், வெளியூர்களில் வசிப்போருக்கு மாநில அரசின் இந்த அறிவிப்பு பயனுள்ளதாக இருக்கும். அதேபோல, ஓய்வூதியதாரர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கப்பட்டிருப்பதாலும் பயனடைந்து வருகின்றனர் என்றார்.

** வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் மூலம் இயங்கி வரும் 13 இணைய சேவை மையங்களில் மின்னணு வாழ்வுச் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கருவூலகத்தில் கூட்டம் குறைவதோடு, ஓய்வூதியதாரர்களுக்கு தேவையற்ற அலைச்சல் வெகுவாக குறையும் என்பதில் சந்தேகமில்லை.**

துன்பத்தில் இன்பம் காணலாமா?

By எஸ். ஸ்ரீதுரை  |   Published on : 26th November 2016 05:29 AM 

பத்திரிகையாயினும் சரி, தொலைக்காட்சி ஒளிபரப்பாயினும் சரி, இந்தச் செய்தியைப் படிக்கவும் பார்க்கவும் கோபத்தில் நமது மனம் கொந்தளிக்கின்றது.

என்ன ஆகி விட்டது இந்த இளைய தலைமுறைக்கு? பூமியில் நம்மோடு சக வாழ்வு வாழ்ந்து வரும் அப்பாவி மிருகங்களிடம் இவர்களுக்கு ஏன் இப்படிப்பட்டதொரு துவேஷம்?

வேலூரைச் சேர்ந்த சில மருத்துவ மாணவர்கள் அரங்கேற்றியிருக்கும் காட்டுமிராண்டித்தனத்தைத்தான் சொல்கிறேன்.
ஓர் அப்பாவிக் குரங்கைப் பிடித்த அந்த மருத்துவ மாணவர்கள், வார்த்தைகளால் விவரிக்க இயலாத சித்திரவதைகளுக்கு அதை ஆளாக்கிக் கடைசியில் அதைக் கொன்றுவிட்டிருக்கிறார்கள்.

கொடூர மனம் படைத்தவர்கள்கூடக் கற்பனை செய்ய முடியாத ஒரு செயலை இந்த இளம் மாணவர்கள் நிகழ்த்தியிருப்பது மனித இனத்துக்கே அவமானம்.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு, சென்னையில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு நாயைத் தாங்கள் வசிக்கும் அடுக்குமாடிக் கட்டடத்தின் மேல்தளத்திலிருந்து கீழே போட்டு, அது கீழே விழுந்து கொண்டிருப்பதையும், விழுந்த பின்பு வலியால் துடிப்பதையும் செல்லிடப்பேசி மூலம் படம் எடுத்து ரசித்ததன் மூலம் நம்மையெல்லாம் அதிர வைத்தார்கள்.

பிற ஜீவனின் துன்பத்தில் இன்பம் காண்கின்றவர்களை மனிதர்கள் என்று சொல்லவே நா கூசுகின்றது.
மனித உயிர்களை நோயினின்று காப்பாற்றி உயிர் பிழைக்கச் செய்கின்ற மகத்தான பணிதான் மருத்துவப் பணி.
அதனால்தான், மருத்துவத் தொழில் புரிபவர்களைக் கடவுளுக்குச் சமமாக அனைவரும் மதிக்கின்றனர்.

அப்படிப்பட்ட புனிதமான தொழிலில் ஈடுபடுவதற்காகப் படித்து வரும் மருத்துவ மாணவர்கள் சிலரது நெஞ்சம் இப்படிக் கொடுமை எண்ணங்கள் நிறைந்ததாக எப்படி இருக்க முடியும்?
இப்படிப்பட்டவர்கள் படித்து முடித்து எதிர்காலத்தில் மருத்துவப் பணியில் ஈடு பட்டால் அவர்கள், தங்களிடம் வரும் நோயாளிகளை எவ்வாறு கருணையுடன் கவனிப்பார்கள்?

இதேபோன்றுதான், சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட நாவரசு கொலை வழக்கிலும் நடந்தது.
மருத்துவக் கல்லூரி மாணவரான நாவரசு தன்னுடைய சீனியரான ஜான் டேவிட் என்பவரால் கொடுமைப்படுத்தப்பட்டுப் பல துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு கல்வி நிலையங்களில் நிகழ்த்தப்படும் ராகிங் கொடுமைகளை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
மனிதராயினும், விலங்குகளாயினும், மற்ற ஜீவராசிகளின் துன்பத்திலும் மரணத்திலும் இன்பம் காணக்கூடியவர்கள் இந்தச் சமூகத்தில் வாழவே தகுதியில்லாதவர்கள் அல்லவா?

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரும், ஜீவகாருண்யம் போற்றும் இன்னும் எத்தனையோ மகான்களும் அவதரித்து வாழ்ந்து வந்த இந்தப் புண்ணியத் தமிழ் பூமியில், இப்படிப்பட்ட கொடூரர்களும் பிறந்திருப்பதை என்னவென்று சொல்ல?
இத்தகைய சம்பவங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாகத்தானே நடைபெறுகின்றன என்றும் சிலர் கேட்கலாம்.
ஒரு குடம் பாலை பயனற்றதாக்குவதற்கு ஒரு துளி விஷமே போதுமானது.
அதேபோலத்தான் இத்தகைய சம்பவங்களும். இவை ஏற்படுத்துகின்ற எதிர்மறை அதிர்வுகளும், இந்நிகழ்வுகளைப் பார்க்க நேரிடும் இளைய தலைமுறையினர் மனதில் ஏற்படும் பாதிப்புகளும் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.

ஒரு சுவாதி கொலை வழக்கில் துப்பு துலக்கப்படுவதற்கு முன் தமிழகம் முழுவதும் எத்தனை ஒருதலைக் காதல் கொலைகள் அரங்கேறிவிட்டன....
தனது காதலை ஏற்காத பெண் உயிரோடு இருக்கவே தகுதி அற்றவள் என்று இன்றைய இளைஞர்கள் பலரும் நினைக்கத் துவங்கி இருப்பதையே நாள்தோறும் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏதோ ஓரிடத்தில் பச்சிளம் பாலகன் ஒருவனை கயவர்கள் சிலர் மதுவருந்த வைத்த செய்தி, இப்போது தொடர்கதையாகி இருக்கிறது.
இன்றைய சூழலில் நல்ல விஷயங்களை விட தீய விஷயங்களின் மீதே ஊடக வெளிச்சம் அதிகம் பாய்கிறது.

அத்தகைய வெளிச்ச விளம்பரமானது, இளைய சமுதாயத்தினர் சிந்தனைகளில் ஏற்படுத்தும் பாதிப்பு சொல்லி முடியாதது. தங்கள் மீதும் தாற்காலிகமாகவாவது சிறிது நேரம் ஊடக வெளிச்சம் பாயட்டும் என்ற அற்ப ஆசையில்கூட கொடுஞ்செயல்களைப் பலர் அரங்கேற்றும் வாய்ப்பு இருக்கிறது.

இத்தகைய சூழலில்தான், தங்களிடம் மாட்டிக்கொண்ட அப்பாவி மிருகங்களைச் சித்திரவதை செய்த இளைஞர்களின் செய்கைகளும் பல சங்கிலித் தொடர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவே கருத வேண்டியுள்ளது.

காட்டுமிராண்டித்தன செயலை நிறைவேற்றுவதோடு நிற்காமல், அதனை படம் பிடித்தும், முக நூல் உள்ளிட்டவற்றில் பதிவேற்றியும் சுகம் காணும் குரூர மனப்போக்கும் இங்கு வளர்ந்து வருகிறது.
இனி இத்தகைய நிகழ்வுகள், கலாசாரம், பண்பாடு நிறைந்த நமது தமிழ்மண்ணின் எந்த ஒரு மூலையில் நிகழ்ந்தாலும் அதை நம் அனைவருக்கும் அவமானம் தரும் நிகழ்வாகவே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

அரசாங்கம், சமூகச் செயற்பாட்டாளர்கள், ஆசிரியப் பெருமக்கள், மனநல நிபுணர்கள் ஆகிய பல துறையினரும் இணைந்து, இன்றைய இளைய தலைமுறையினரின் மனங்களில் வேரோடிப்போயிருக்கும் குரூர சிந்தனைகளையும், குறுகிய விளம்பரம் தேடும் முயற்சிகளையும் களைய வழிவகை செய்ய வேண்டியது மிக மிக அவசியம்; அவசரமும் கூட.

தடம்புரளும் ரயில்வே!

By ஆசிரியர்  |   Published on : 26th November 2016 05:28 AM  |   
கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்தூர் - பாட்னா விரைவு ரயில் கான்பூர் அருகே தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் ஏறத்தாழ 150 பேர் பலியானதுடன், நூற்றுக்கணக்கான பேர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய ரயில்வே 1990-களை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறதோ என்கிற அச்சம் மேலிடுகிறது. ரயில்வேயின் சரித்திரத்திலேயே மிக அதிகமான விபத்துகள் நிகழ்ந்தது தொண்ணூறுகளில்தான்.
ஆங்காங்கே சரக்கு ரயில் தடம் புரள்வதும், பயணிகள் ரயில் தடம் புரள்வதும் வழக்கமாகி விட்டிருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் மூன்று மிகப்பெரிய விபத்துகள் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த மாதம், பஞ்சாபிலுள்ள ஜலந்தர் மாவட்டத்தில் ஜீலம் விரைவு ரயில் நல்ல வேளையாக சட்லஜ் நதியைக் கடப்பதற்கு 50 மீட்டர் முன்னால் தடம் புரண்டது. அதுவே நதியின்மீது செல்லும்போது தடம் புரண்டிருந்தால் நூற்றுக்கணக்கான பயணிகள் பலியாகி இருப்பார்கள்.
இந்த ஆண்டில் மொத்தம் 80 ரயில் விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த ஆண்டைவிட 11 விபத்துகள் அதிகம். டிசம்பர் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை அதிகரிக்காமல் இருந்தால் அதிர்ஷ்டம். இந்த 80 விபத்துகளில் பாதிக்குமேல் ரயில் தடம் புரண்டதால் நிகழ்ந்த விபத்துகள்தான். ரயில் தடம் புரள்வதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, தண்டவாளத்தில் ஏற்படும் விரிசல் அல்லது முறையான பராமரிப்பு இன்மை. இரண்டு, ரயில் பெட்டிகள் பழையதாகி விட்டிருப்பது.
பாதுகாப்புக்கு சில அடிப்படைத் தேவைகள் இருந்தாக வேண்டும். தண்டவாளங்களின் பராமரிப்பு, சிக்னல்கள் சரியாக இயங்குவது, ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் என்று அனைத்துமே முறையாக இருந்தால்தான் பாதுகாப்பாக ரயில் இயங்க முடியும்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர்கள் நடத்திய துறை சார்ந்த விசாரணைகளில், மிகப்பெரிய ரயில் விபத்துகளில் 70% விபத்துகள் மனித கவனக்குறைவால்தான் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது. மனித கவனக்குறைவு என்றால், தண்டவாளங்களை சரியாக பராமரிக்காமல் இருப்பது, சிக்னல்களை சரியாக இயக்காமல் இருப்பது போன்றவை. இதற்குக் காரணம், ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படாமல் இருப்பதும், கண்டிப்பான செயல்பாட்டு ஒழுக்கம் கடைப்பிடிக்கப்படாமல் இருப்பதும்தான். இதற்கு, ரயில்வே தொழிலாளர்களின் யூனியன்களும் ஒரு காரணம்.
ரயில்வேயின் பாதுகாப்புக்காக அனில் ககோட்கர் குழுவும், ரயில்வே சீரமைப்புக்காக விவேக் தேவ்ராய் குழுவும் அமைக்கப்பட்டன. அவர்கள் பல பரிந்துரைகளை முன்வைத்தனர். ஆனால் அவை எதுவுமே செயல்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
2011-இல் அனில் ககோட்கர் குழு அமைக்கப்பட்டது. பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துதல், பழைய தண்டவாளங்களை மாற்றுதல், சிக்னல் முறைகளை நவீனப்படுத்துதல் போன்றவற்றிற்காக ஐந்தாண்டு காலகட்டத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யக் கேட்டுக்கொண்டது ககோட்கர் குழு. அதேபோல, கனமான ரயில் பெட்டிகளுக்கு பதிலாக, எடை குறைந்த நவீன ரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்தி, பழைய பெட்டிகளை மாற்றுவதற்கு ஐந்தாண்டு இடைவெளியில் ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யக் கோரியது. பரிந்துரை அளித்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும்கூட வெறும் 10% ரயில் பெட்டிகள்தான் மாற்றப்பட்டிருக்கின்றன.
பத்து ஆண்டுகளுக்கு முன்னால், தேய்மான ஒதுக்கீடு நிதி என்ற ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 2006 - 09இல் ரூ.6,000 கோடியாக இருந்த இந்த ஒதுக்கீடு 2015 - 17இல் ரூ.3,000 கோடியாக குறைக்கப்பட்டுவிட்டது. உண்மையான தேவை ரூ.15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரை. ஏறத்தாழ 2.3 கோடி பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை ரயில்வே நிர்வாகம் உணராததுதான் இதற்குக் காரணம்.
இந்திய பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குவது ரயில்கள்தான். 2.3 கோடி பயணிகளை மட்டுமல்ல, தினந்தோறும்
30 லட்சம் டன் சரக்குகளையும் கையாள்கிறது. ரயில்வேயின் வருவாயை அதிகரிப்பதில் குறியாக இருக்கும் நிர்வாகம், பொதுமக்களைக் கவர்வதற்காக புதிய ரயில்களை அறிவிப்பதும், அளவுக்கதிகமாக சரக்கு ரயில்களை இயக்குவதுமாக இருக்கிறது. அதிகரிக்கும் ரயில் இயக்கத்துக்குத் தகுந்தவாறு, தண்டவாளங்களை மேம்படுத்துவதிலும் சிக்னல்களை நவீனப்படுத்துவதிலும், ஊழியர்களின் தரத்தை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தாமல் இருப்பதுதான் ரயில் விபத்துகளுக்குக் காரணம்.
புதிய வழித்தடங்கள், புல்லட் ரயில், ரயில் நிலையங்களிலும், ரயிலிலும் வைஃபை இவையெல்லாம் அல்ல ரயில்வேத் துறையின் உடனடித் தேவைகள். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யாமல் இவையெல்லாம் இருந்து என்ன பயன்? ரயில்வே போர்டு ஒருபுறம், ரயில்வே அமைச்சகம் இன்னொருபுறம் என்று இரட்டை நிர்வாகக் கேந்திரங்கள் இருப்பதும்கூட ரயில்வே துறையின் செயலின்மைக்குக் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
இந்தூர் - பாட்னா ரயில் விபத்தைத் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படும். ஒருசில ஊழியர்களின் கவனக்குறைவு காரணம் என்று கண்டறிவார்கள். அந்த ஊழியர்கள் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். யூனியன்களின் தலையீட்டால் அவர்கள் மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ரயில்வேயின் நிரந்தரக் குறைகளுக்குக் காரணமான தலைமை எந்தவித பொறுப்பும் ஏற்காது; தண்டவாளங்களும், சிக்னல்களும், பழைய ரயில் பெட்டிகளும் இருப்பது போலவே தொடரும். இனி, அடுத்த ரயில் தடம் புரளும் வரை இதுகுறித்து யோசிக்கவும் மாட்டார்கள்!

இந்த 10 தவறுகளைச் செய்யாதீர்கள் இளைஞர்களே! #Alert


பொதுவாக நாற்பது வயதில் தான் ஒரு மனிதன் முழுமையாகிறான் எனச் சொல்வார்கள் ஆனால் இப்போது வேலைப்பளு, மனம் போன வாழ்வு, ஒழுக்கமின்மை என பல காரணங்களால், தவறுகளால் இப்போது நாற்பதிலியே மனிதன் முடமாகிறான். அறுபது - எழுபது வயதுகளில் வர வேண்டிய பல வகையான நோய்கள் தற்போது முப்பது - நாற்பது வயதுகளிலேயே வர ஆரம்பித்திருக்கிறது. உலகம் முழுவதும் இளம் வயது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தவாறே இருக்கிறது. . சர்க்கரை வியாதி, பிபி, கொலஸ்ட்ரால், கல்லீரல் பிரச்னை என அத்தனையும் நாற்பது வயதிலேயே வர ஆரம்பித்திருக்கிறது.

கார்த்திக்குக்கு 28 வயது தான் ஆகிறது, கடும் உழைப்பாளி, நல்ல சம்பளமும் வாங்கிக்கொண்டிருந்தான். பெற்றோர்கள் அவனுக்கு வரன் பார்த்திருந்தார்கள், ஆசை ஆசையாக ஊருக்குச் சென்றவன், அங்கே திடீரென மயங்கி விழுந்தான். முதன் முதலாக மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்ற கார்த்திக்கிடம், அவருக்கு சர்க்கரை நோய், பி.பி, இதய நோய் வந்துள்ளது என மருத்துவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்தான், மனமுடைந்தான். கொஞ்சம் நிதானித்து முன் கூட்டியே உடல்நலனை கவனித்திருந்தால் இந்த நோய்களை தடுத்திருக்கமுடியும் என மருத்துவர் சொன்னதை கேட்டு முற்றிலும் நொறுங்கிப்போனான். இன்று தமிழகம் முழுவதும் கார்த்திக்கை போன்ற பல நபர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு நூறு பேர் அய்யோ கொஞ்சம் யோசிச்சிருக்கலாமே என உச் கொட்டுகிறார்கள். இதற்கு யார் காரணம்? எது தீர்வு ?


உலகம் முழுவதும் மருத்துவ உலகில் தற்போது பிரபலாமாகி வரும் சொல் பிரிவென்டிவ் மெடிசின் என சொல்லப்படும் முன்காப்பு மருத்துவம். ஒரு நோய் வந்த பின்னர் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதை விடவும், அவ்வபோது உரிய பரிசோதனைகளைச் செய்து, கூடுமானவரை நோய்களை தடுப்பதையே நோக்கமாக கொண்டது தான் பிரிவென்டிவ் மெடிசின். நாம், இருபது வயதுகளில் செய்யும் தவறுகளின் வெளிப்பாடே நாற்பதில் வரும் பிரச்னைகள். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி, கல்லூரி பருவத்துக்கு பிறகு அடுத்த பத்தாண்டுகளில் எவ்வாறு தங்களது உடல்நலனில் அக்கறை கொள்கிறார்கள் என்பதை பொறுத்து தான் அவர்களது பிற்பாதி வாழ்க்கை அமைகிறது. இளம் வயதில் நாம் செய்யும் சின்ன சின்னத் தவறுகள் எல்லாவற்றுக்கும் வட்டியும் முதலுமாக பின்னாளில் வந்து சேர்வது தான் எக்கச்சக்க நோய்கள்.

சரி, நாம் செய்யும் தவறுகள் தான் என்ன? இது குறித்து மருத்துவர் சி. ராஜேந்திரன் விரிவாகச் சொல்கிறார்.


1. மோசமான நேர மேலாண்மை :-

சிறுவயதில் இருந்து கல்லூரி முடிக்கும் வரை பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் வளர்பவர்களுக்கு, அதன் பின்னர் அவர்களை பிரிந்து வெளியூரில் வேலைக்கு செல்லும் ஆரம்பகட்ட வருடங்களில் கட்டற்ற சுதந்திரம் கிடைக்கிறது. காலையில் எழுந்திருப்பது முதல் இரவு படுப்பது வரை அத்தனையிலும் மெத்தனம் மேலோங்குகிறது. உடலை பற்றியும், சுகாதாரம் பற்றியும் அறவே கவலைப்படாமல் இருப்பார்கள். கட்டற்ற சுதந்திரத்தை சோம்பேறித்தனத்தால் தவறாக பயன்படுத்துவார்கள். எந்த நேரத்தை எப்படி செலவழிப்பது எனத் தெரியாமல் திணறுவார்கள்.சிலர் பாதை மாறுவார்கள். நேரத்தை சரியாக கடைபிடிக்காமல் இருக்கும் தவறு தான் வாழ்வியல் முறை மாறுவதற்கான அடிப்படை காரணம்.

2. உணவில் அக்கறையின்மை!

சுமார் இருபது வருடங்கள் வரை பெரும்பாலும் வீட்டில் செய்த உணவையே சாப்பிட்டு வந்தவர்கள், வேலைக்கு சென்ற பின்னர் சொந்த சம்பாத்தியம் இருந்தாலும் வீட்டு சாப்பாடு கிடைக்காமல் தவிக்க நேரிடலாம். இந்த சமயங்களில் ஹோட்டல் உணவுகளையே நாடுவது, துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது , காலை உணவை தவிர்ப்பது, இரவு உணவை வெளுத்து கட்டுவது, சத்தான சமச்சீரான உணவுகளை தவிர்ப்பது என உணவு முறை முற்றிலும் மாறிவிடுகிறது.

இந்த தவறுகளால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை தவிர்ப்பதால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை சரியாக உடலுக்கு கிடைப்பதில்லை அதே சமயம் மோசமான உணவு பழக்க வழக்கத்தால் உடலில் தேவையற்ற கொழுப்பும் சேருகிறது, புற்றுநோயை உண்டாக்கும் உணவுப் பொருள்களை தொடர்ந்துச் சாப்பிடுவதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

3. நண்பர்கள் சேர்க்கை : -

பள்ளி, கல்லூரி நண்பர்களை தாண்டி புது இடம், புது நண்பர்கள் என இளம் வயதில் பலருக்கும் புது சேர்க்கை உருவாகும். நண்பர்கள் எப்போதுமே நல்ல விஷயம் தான், ஆனால் சில சமயங்களில் தவறான நண்பர்களுடன் சேர்ந்தால் வாழ்கை பாதை மாறிவிடவும் வாய்ப்புண்டு. கல்லூரி செல்லும் வரை பணத்துக்கு இன்னொருவரை எதிர்பார்க்க வேண்டிய நிலை இருக்கும் ஆனால் சம்பாதிக்க ஆரம்பித்தவர்களுக்கு தனது பணம் தானே தாரளமாக செலவு செய்யலாம் என்ற எண்ணம் பிறக்கும். மது, புகைப்பிடித்தல் போன்ற விஷயங்களில் இளம் வயதினர் பலர் சிக்கிக்கொள்வது தவறான சேர்க்கையால் தான்.



4. தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகுதல் : -

எதையும் முதலில் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும், பகிர வேண்டும் என்ற ஆவல் இளம் வயதினரிடையே மிகவும் அதிகம்.பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களை எந்த அளவுக்கு அணுக வேண்டும். எந்த புள்ளியில் நிறுத்திவிட வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. தொழில்நுட்பங்களை தெரிந்து வைத்திருப்பதிலும், தொழில்நுட்பங்களை சிறப்பாக கையாளுவதும், தொழில்நுட்ப அப்டேட்களை விரல் நுனியில் வைத்திருப்பதும் நல்ல விஷயம். ஆனால் அதே சமயம் டிஜிட்டல் சாதனங்களில் அடிமையாவது நல்லதல்ல. மனதையும், உடலையும் பாதிக்கும் காரணிகளில் மிகவும் முக்கியமானது மொபைலும், டிஜிட்டல் சாதனங்களும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

5. வேலைவாய்ப்பின்மை : -

வேலைவாய்ப்பின்மை ஒரு மிகப்பெரிய மன அழுத்தம் தரக்கூடிய பிரச்னை. தன்னம்பிக்கையை தளர வைக்கும் கடினமான கால கட்டம் இது. ஒரு சிலர் வெற்றிகரமாக மன உறுதியுதியுடன் இந்த காலத்தை கடந்தாலும், பலர் இந்நாட்களில் தளர்ந்து விடுகிறார்கள். ஒரு நாளை எப்படி கடத்துவது என தெரியாமல் பலர் வித விதமாக யோசிப்பார்கள். சிலர் எப்போதும் மனதுக்குள் புழுங்கி கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் சோகத்தை மறைப்பதற்காக போதை வஸ்துகளை நாடுகிறார்கள். இவை எல்லாமே உடலுக்கு கேடு விளைவிப்பதோடு மனதை பாதித்து புத்துணர்ச்சியை கெடுக்கின்றன.



6. வேலைபளு : -

முன்னெப்போதும் விட தற்போதைய தலைமுறை மிக அதிகமாக இளம் வயதிலேயே உழைக்க தொடங்குகிறார்கள், ஐ.டி உட்பட பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களும் அதிக லாபம் என்பதையே நோக்கமாக கொண்டு ஊழியர்களை பிழிய ஆரம்பித்திருகின்றன. உடல் உழைப்பு என்பதை விடவும் அறிவு உழைப்பு அதிகம் தேவைப்படும் நிறுவனங்களில் நித்தம் நித்தம் புதுப்புது ஐடியாக்களை யோசித்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தங்கள், சக்திக்கு மீறிய டார்கெட்டுகள் போன்றவை வைக்கப்படுவதால் வேலைபளு அதிகமாகிறது,

இதனால் பலர் வீக் எண்ட் என்றாலே மது, சிகரெட் போதையில் திளைத்து மன அழுத்தத்தை குறைக்க முயலுகின்றனர். மன அழுத்தத்தோடு, புகை, மது ஆகியவற்றின் பாதிப்புகளும் சேர்ந்து தாக்க ஆரம்பிக்கிறது.

அறிவு சரக்கு, கற்பனைத் திறன் போன்றவை ஒரு கட்டத்தில் தீர்ந்து விடுகிறது. இதனால் நாற்பது வயதாகும் போது, அப்போது நிறுவனத்துக்குள் நுழையும் இளைஞர்களுடன் போட்டி போட்டு பலரால் உழைக்க முடிவதில்லை. விளைவு நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். இது மீண்டும் மன அழுத்தத்தில் தள்ளுகிறது.



7. ரிலேஷன்ஷிப் சிக்கல்கள் :-

ஆண்கள், பெண்கள் இருதரப்பினரும் இளம் வயதில் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை ரிலேஷன் ஷிப் சிக்கல்கள் தான். முப்பது வயதுக்குள்ளாகவே திருமணம் முடிந்து விவாகரத்து கோருவோர்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது.

படிப்பு, வேலை என இயந்திரத்தனமாக வளர்ந்த மனிதர்களுக்கு, சக பார்ட்னரை எப்படி கையாளுவது என தெரிவதில்லை. கணவன் - மனைவி குடும்ப உறவில் பிரச்னை ஏற்படும் போது உச்சக்கட்ட மன அழுத்தத்துக்கு பலர் தள்ளப்படுகிறார்கள். இதனால் மீண்டும் பலர் போதை வஸ்துகளுக்கு அடிமையாகிறார்கள். ரிலேஷன்ஷிப் பிரச்னைகளால் அலுவலகத்தில் பலர் சரியாக பணி புரியாமால் போவதால் அங்கேயும் மரியாதை குறைவதால் இந்த பிரச்னைகள் எல்லாம் ஒரு சுழற்சியாக சுழன்று அடிக்கும்.

8.பாலியல் கோளாறுகள் :-

இந்தியாவில் பாலியல் கல்வி இல்லை, பாலியல் தொடர்பான விழிப்புணர்வும் கிடையாது. ஆண்களும் சரி, பெண்களும் சரி பாலியல் ரீதியாக பாதிக்கபடுவது இந்தக் காலகட்டத்தில் தான். பாலியல் பற்றிய சரியான புரிதல் இல்லாத அதே சமயம் பாலியல் குறித்த அத்தனை தவறான தகவல்களையும் புரிதல்களையும் இணையம், போலி டாக்டர்களின் நிகழ்ச்சிகள் போன்றவை வழியாக தெரிந்து கொள்கிறார்கள். இதனால் பலர் தவறான பாதைக்கு செல்கின்றனர். ஆண்கள், பெண்கள் இருவருக்குமே பாலியல் கோளாறுகளால் தீவிர மன அழுத்தம் ஏற்படுகின்றன.



9. உடற்பயிற்சியின்மை :-

கல்லூரி வரை செல்வதற்கு முன்னதாக பெரும்பாலும் பலர் ஏதாவதொரு வகையில் விளையாடி கொண்டிருப்பார்கள். இதனால் உடல் பருமன் போன்ற பிரச்னை இருக்காது. ஆனால் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பலர் தங்கியிருக்கும் இடத்துக்கும் வீடுக்கும் மட்டுமே பயணிப்பார்கள். அதுவும் இரு சக்கர வாகனம் அல்லது காரில் தான். உடல் உழைப்பு, உடற்பயிற்சி இரண்டும் இல்லாததால் உடலில் கொழுப்புகள் படிய ஆரம்பிக்கும். சரியான உணவையும் சாப்பிடாமல் தவிர்ப்பதால் உடல் பருமன் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம். உடற்பருமன் வரும்போது கூடவே வரிசையில் நான்கு நோய்கள் நிற்கும்.



10. தொலைந்து போன தூக்கம்!

தற்போதைய தலைமுறையில் இளம் வயதினர் அநேகம் பேர் தூக்கமின்மை பிரச்னையால் அவதிபடுகின்றனர். நைட் ஷிப்ட் ஒரு காரணம் என்றாலும் லேப்டாப்பில் இரவு இரண்டு படம் பார்ப்பது, நைட் ஷோ தியேட்டருக்கு செல்வது, நள்ளிரவை தாண்டியும் யாருக்காவது மெசேஜ் செய்து கொண்டிருப்பது, சமூக வலைதளங்களில் மூழ்குவது போன்றவற்றால் இரவு தூக்கம் தடைபடுகிறது.

இரவு தூக்கம் தாமதமாகும் சமயத்தில் வளர்சிதை மாற்றம் பாதிக்கபடுகிறது. இரவு தூக்கம் தாமதமாவதால், அதிகாலை எழுந்திருக்க முடிவதில்லை, அதிகாலையில் மட்டுமே கிடைக்கும் சுத்தமான ஓசோன் வாயுவை சுவாசிக்கும் வாய்ப்பும் பறிபோகிறது. காலையில் தாமதமாக எழுவதால் அவசர அவசரமாக வேலைக்கு செல்ல நேர்கிறது. இதனால் உடற்பயிற்சி, காலை உணவுக்கு போதிய நேரம் ஒதுக்க முடிவதில்லை . இதன் காரணமாக அன்றைய தினம் சுறுசுறுப்பாக செயல்பட முடிவதில்லை.

தவறான வாழ்வியல் முறை காரணாமாக என்னென்ன நோய்கள் வருகிறது ?



1.உடற்பருமன்

2. வைட்டமின் டி குறைபாடு

3. சர்க்கரை நோய்

4. உயர் ரத்த அழுத்தம்

5. தைராய்டு கோளாறுகள்

6.ஹார்மோன்கள் சமசீரின்மை

7. புற்றுநோய்

8. செரிமான கோளாறுகள்

9. மன அழுத்தம்

10. இதய நோய்கள்

11. நரம்பு மண்டல பாதிப்புகள்

12. முதுகு வலி, மூட்டு வலி

13. சரும கோளாறுகள்

14.பாலியல் தொந்தரவுகள்

15. சுவாச பிரச்னைகள் .



தீர்வு என்ன?

இளம் வயதில் சரியாக தன்னை பராமரிக்க வில்லை என்றால் பல பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அதற்காக வேலைக்கு செல்லுதல், பேச்சலர் வாழ்கை, திருமணம் போன்ற பல விஷங்களை எல்லோராலும் கடந்து வராமலும் இருக்க முடியாது.

தனி மனித ஒழுக்கம், தனி மனித சுகாதரம், மன நலம் மற்றும் உடல் நலனில் அக்கறை, தெளிவான பார்வை, திட்டமிடுதல், மன வலிமை, உடல் வலிமை ஆகியவற்றில் கவனம் செலுத்தி வாழ ஆரம்பித்தாலே பாதி பிரச்னைகள் சரியாகிவிடும், பல்வேறு நோய்கள் வருவதையும் தடுக்க முடியும் . நீண்ட காலம் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியுடன் வாழலாம்.

சிறுதானியங்கள், கீரைகள், பழங்கள், காய்கறிகள் என ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளை உட்கொள்ளவேண்டும். அதே சமயம் மோசமான குப்பை உணவுகளை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி போன்றவற்றுக்கு தினமும் அரை மணி நேரமாவது ஒதுக்க வேண்டும், உடலை தூய்மையாக வைத்து கொள்ளுதல், தன்னைச் சுற்றி சுகாதாரமாக வைத்துக் கொள்வது போன்ற, சில நல்ல பழக்க வழக்கங்களை வழக்கமாக்கி கொண்டால் அறுபதிலும் ஆரோக்கியம் உண்டு.



ஹெல்த் இன்சுரன்ஸ் அவசியம் :-

ஹெல்த் இன்சுரன்ஸ் பலருக்கும் ஆபத்தான கால கட்டத்தில் ஓரளவு கை கொடுக்கும் விஷயம். எதாவது நோய் வந்தபிறகு இன்சுரன்ஸ் எடுக்கலாம் என நினைத்தால் பிரீமியம் அதிகம் கட்ட நேரிடும். இளம் வயதிலேயே ஹெல்த் நன்றாக அலசி ஆராய்ந்து அவரவர்களுக்கு ஏற்ற பாலிசிகளை எடுத்துகொள்ளும் போது பிரீமியம் வெகுவாக குறையும். எதிர்பாராத காலகட்டத்தில் அவசர அவசியத்தேவைகள் ஏற்படும் சமயங்களில் இன்சுரன்ஸ் கைகொடுக்கும். இன்சூரன்ஸ் தொகை, நிறுவனம் ஆகியவற்றை பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு தேர்ந்தெடுப்பது நல்லது.

ஹெல்த் செக் அப் பண்ணுங்க :-

முப்பந்தைந்து வயதுக்கு மேல் தான் பலர் மருத்துவமனை வாசலுக்கே பலர் செல்லுகின்றனர். இது தவறு. மருத்துவமனை சென்றாலே பணம் செலவாகும், தனக்கு எதாவது நோய் இருக்கும் என சொல்லிவிடுவார்கள் என்ற பயம் பலருக்கும் இருக்கிறது. இதனால் எதாவது பெரிய நோய் வரும் வரை மருத்துவமனை பக்கமே பலர் தலைவைத்து படுப்பதில்லை.



'வரும் முன் காப்பது சிறந்தது' என்பது பலருக்கு புரிவதில்லை. ரத்த அழுத்தமோ, சர்க்கரை நோயோ, சுவாச நோயோ, உடல் பருமனோ, புற்றுநோயோ எதுவாக இருந்தாலும் ஆரம்பகட்டத்தில் பரிசோதனை மூலம் கண்டறிந்தால் இந்த நோய்கள் எல்லாவற்றையுமே தடுக்க முடியும். அதன் பாதிப்புகளை குறைக்க முடியும்.

ஆக, 25 வயதில் இருந்தே ஆண்கள், பெண்கள் இருவரும் வருடம் ஒரு முறை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குடும்பத்தில், பரம்பரையில் யாருக்காவது மேற்சொன்ன வாழ்வியல் நோய்கள் வந்திருந்தால் அந்த இளைஞர்கள் கண்டிப்பாக குடும்ப மருத்துவரை அனுக்கி அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை எடுத்துகொண்டு நோய்களை தடுக்க முயற்சிப்பதே புத்திசாலித்தனம். தனியார் மருத்துவமனைகளில் பல ஆயிரங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும் சூழ்நிலையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்போது சலுகை விலையில் பொதுமக்களுக்கு மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்யப்படுகிறது, ஆனால் இதை பலர் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை



இந்தியாவில் பரிசோதனைகள் குறித்த தெளிவின்மை மக்களுக்கு அதிகம், எனவே தான் பல நோய்கள் வருகின்றன, ஒரு சிலர் தனக்கு எதாவது நோய் இருக்குமோ என பயந்து பயந்தே தேவையற்ற பதற்றத்ததை உருவாக்கி கொள்கிறார்கள். ஒருவேளை நோய் வந்துவிட்டாலும் அதிக பதற்றமடைகிறார்கள். முன்காப்பு சிகிச்சை குறித்தது தெளிவு வரும்போது, எதாவது நோய் வந்தால் கூட ஆரம்பக்கட்டதிலேயே மாத்திரை, மருந்துகள் போன்ற சிகிச்சைகளே தேவைப்படாமல் வாழ்வியல் முறை மாற்றத்தால் மட்டுமே பல்வேறு நோய்களை தடுத்து விட முடியும் என்ற நிலை இருக்கும்போது தேவையற்ற பதற்றத்தை தவிர்போம். நலமாக, மகிழ்ச்சியுடன் வாழ்வோம்

What’s wrong with medical students in TN?

A few months after the shocking incident in which a dog was thrown off the rooftop of a building in Chennai by two medical students, a similar incident that took place at the Christian Medical College(CMC) in Vellore a few days ago, came as a shock to many animal lovers and activists. A monkey that had entered the CMC campus, was tortured, killed and buried by four students of the college. Is it just a coincidence that the two back-to-back incidents of animal cruelty involve medical students? Aren't attributes of compassion and love towards living beings expected from the future doctors of our nation? Experts reason it out...

It all boils down to their upbringing

Psychologist Mini Rao says that she can't think of anything else other than their upbringing at home as a reason that would have led the students to do something this terrible. "I think it is just a coincidence that both the incidents involve medical students. These individuals have no regard for other living creatures and have treated them cruelly. Definitely, it has to do with the kind of upbringing they have had. They wouldn't have been taught to respect and show kindness to other living creatures. Also, youngsters who were brought up by strict parents and had no freedom at home, tend to misuse the liberty that they are allowed in colleges. They try to show their power and control over lesser mortals. The same could have happened in this case also."

More incidents are being reported due to better awareness

According to Dawn Williams, general manager of Blue Cross, cruelty to animals has been happening for the longest time. "It is just that more incidents are being reported these days, because of better awareness. Thanks goes to media and social media for propagating animal rights awareness. In this case also, other students who witnessed the crime informed animal activists about it. The students who were involved in this must have thought that no one would talk about it after burying the monkey's body and that they could get away scot-free. Good that such a heinous crime was brought to light by other students. To tell you the truth, I am happy that more number of people are taking the imitative to fight for animal rights, today. And this particular case will be taken very seriously by the authorities as killing of a monkey comes under the Wildlife Protection Act, 1972," says Dawn. However, reiterating the fact that this was only a coincidence that both the incidents involved medicos, director of clinics at the Tamil Nadu Veterinary and Animal Sciences University, Dr R Jayaprakash, says, "In general, many aren't compassionate towards animals. See, what happened in Kerala. The news of culling of stray dogs in Kerala made headlines, recently. In fact, the alumni association of a prominent college even announced gifts to the civic authorities who would kill the maximum number of stray dogs. Life is precious — be it that of a man or of an animal."

What's with medicos and animals in both the incidents

Meanwhile, Shravan Krishnan, an animal rights activist explains the need of a background check of students applying for medical courses. "Shouldn't compassion be one of the attributes these people should have? Apart from their score in entrance exams, medical colleges should also check their background on their experience of interning in NGOs and their involvement in social welfare activities during school days. They aren't going to work with bricks and stones. For them to be good doctors, they should have compassion and respect for all living creatures.


 A student's educational proficiency and his/her parents' ability to pay high capitation fees don't really matter," states Shravan Krishnan. Agreeing with Shravan is Dr Shiranee Pereira, founder of Mahatma Gandhi-Doerenkamp Centre (MGDC) for Alternatives to Use of Animals in Life Science Education. Shiranee who is also a former member of the Committee for the Purpose of Control And Supervision of Experiments on Animals says, "After a long fight I along with others managed to put an end to dissection and take it out of Biology curriculum. But there are still animal houses in medical colleges and experiments are still conducted on animals. But my question is after doing so much experiments on animals for so many years, how much have these doctors been able to translate that into human health. And specifically, I think CMC ranks the highest in the country when it comes to high-distress, high-pain studies. 

The sad part is that many of these experiments are done by students just for their Ph.D or post-graduate thesis. Why don't they choose a non-animal method to fulfill the curricular need? In general, whatever a teacher says is considered holy by most students. So, it is only natural that when animals are considered in such inanimate ways for experiments, students end up doing such horrific things outside their classrooms also. We need to rethink our education system and ensure that no blood is shed in a classroom, in the name of experimentation."

Friday, November 25, 2016

கள்ளக்காதலைக் காரணம் காட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு போட முடியாது... சுப்ரீம் கோர்ட் அதிரடி!

டெல்லி: கணவரோ அல்லது மனைவியோ கள்ளக்காதல் வைத்துக் கொள்வதைக் காரணம் காட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம் சாட்ட முடியாது. அதேசமயம், இதைக் காரணம் காட்டி விவாகரத்து கோர உரிமை உண்டு என்று சுப்ரீம் கோர்ட்உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்காதலை மன ரீதியான கொடுமையாகவும் சித்தரிக்க முடியாது. அதைக் கொடுமையாகவும் கூற முடியாது. இதன் காரணமாக தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டவும் கூடாது. வேண்டுமென்றால் இதைக் காரணம் காட்டி விவாகரத்து கோரலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவு ஒன்றில் தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரின் கள்ளக்காதலால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக புகார் கூறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த நபருடன் இணைத்துப் பேசப்பட்ட பெண்ணும், அப்பெண்ணின் தாயார் மற்றும் சகோதரரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் கர்நாடக நீதிமன்றங்களில் அப்பீல் செய்தார். கர்நாடக உயர்நீதிமன்றம் இந்தத் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அவர் அப்பீல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தண்டனை விதிக்கப்பட்ட நபர் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தள்ளுபடி செய்து வழக்கிலிருந்தும் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்போது, குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது 306, 498ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது சட்டவிரோதமாகும். தவறானதாகும்.

கள்ளக்காதல் என்பதை 498ஏ பிரிவின் கீழ் 'ஹராஸ்மென்ட்' என்று சொல்ல முடியாது. அது தவறான நடவடிக்கைதான், செயல்தான் என்றாலும் கூட அதை சித்திரவதை என்ற பட்டியலில் கொண்டு வர முடியாது. குற்றச் செயலாக கருத முடியாது.

ஒரு கணவர் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார் என்பதற்காக அதைக் கொடுமையாக கருதி மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டார் என்று மனைவி கூற முடியாது. அதேபோலத்தான் மனைவிக்கும்.

மன ரீதியான கொடுமை, சித்திரவதை என்பதற்குரிய அம்சங்கள் கள்ளக்காதலுக்கு இல்லை. எனவே அதை அதில் சேர்க்க முடியாது. மாறாக இதைக் காரணம் காட்டி விவாகரத்து கோரலாம் என்று கூறியுள்ளனர்.

Source: tamil.oneindia.com
Dailyhunt

எம்.ஜி.ஆர் அறிவிப்பும் இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா சந்தித்த சர்ச்சையும்..!

 எஸ்.கிருபாகரன்

இன்றைக்கு சர்ச்சையானாலும் எந்த சலசலப்பானாலும் அது சினிமா சினிமா சினிமா...தமிழுலகின் சகல உணர்ச்சிகளும் சினிமாவாகவே மக்களுக்கு உள்ளது. பல பத்து ஆண்டுகளுக்கு முன் அந்த இடத்தை இசையுலகம் பற்றியிருந்தது. ஆம் இசையுலகில் ஆரோக்கியமான சர்ச்சைகளும் சலசலப்புகளும் எழுந்து இசையுலகத்துக்கு அது புது ரத்தம் பாய்ச்சிய நாட்கள் அவை. இந்த சர்ச்சை வளையத்துக்குள் சிக்காத இசைமேதைகள் கிடையாது. எரியும் நெருப்பில் சுப்புடு என்ற மனிதர் வேறு எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்தது தனிக்கதை.

70 களில் கர்நாடக இசையுலகில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துவந்த இளைஞரான மறைந்த பாலமுரளி கிருஷ்ணாவும் 70 களின் இறுதியில் அப்படி ஓர் சர்ச்சைக்குள் சிக்கினார். கிட்டதட்ட ஒரு வருடங்கள் அது இசையுலகில் கொழுந்துவிட்டு எரிந்தது அந்த விவகாரம். பரபரப்பான அந்த சர்ச்சைக்கு வித்திட்டது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் அறிவிப்பு



ஆம் 1978-ம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். 'பாரம்பரியம் குன்றாமல் புதிய தமிழ்ப்பாடல்கள் மற்றும் தமிழ்க் கலாசாரத்தின் ஜீவன் சிதையாமல் கர்த்தா மற்றும் ஜன்யத்தின் வழியில் புதிய ராகங்களை கண்டுபிடிப்பவர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசும் தமிழக அரசின் விருதும் வழங்கப்படும்' என்பதுதான் அந்த அறிவிப்பு. இதற்காக இசைக்கலைஞர் செம்மங்குடி சீனிவாசன் தலைமையில் ஓர் குழுவும் அமைக்கப்பட்டது.

அறிவிப்பு வெளியான சில மாதங்களுக்குப்பின் டிசம்பர் மாதம் 21 ந்தேதி மியூசிக் அகாடமியில் நடந்த ஒரு விழாவில் முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டார். விழாவில் தலைமை ஏற்றிருந்த பாரமுரளி கிருஷ்ணா பெரும் குற்றச்சாட்டை எம்.ஜி.ஆர் அமர்ந்திருந்த மேடையில் துணிச்சலாக முன்வைத்தார். அதாவது தான் பல புதிய ராகங்களை கண்டுபிடித்திருப்பதாகவும் ஆனால் தமிழக அரசின் விருதுக்குழு தன்னை புறக்கணித்துவிட்டதாகவும் முதல்வர் அதை பரிசீலிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுக்கு அவர் ஆதாரமாக மியூசிக் அகாடமி அந்த வருடம் வெளியிட்டிருந்த ஆண்டுமலரை குறிப்பிட்டார்.

மியூசிக் அகாடமி ஆண்டுதோறும் ஆண்டு மலர் வெளியிடுவது வழக்கம். அந்த வருடத்தில் அகாடமியினால் சங்கீத கலாநிதி விருதை வளர்ந்து வரும் இசைக்கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா பெற்றிருந்தார். இதனால் ஆண்டு மலரில் அவரைப்பற்றிய கட்டுரை இடம்பெற்றிருந்தது. அதில் 'மஹதி, சுமுகம், சர்வஸ்ரீ, ஓம்காரி போன்ற புதியராகங்களையும், ஹம்சவிநோதினி, ரேவதி, ரோஹினி, பிரதிமத்யமாவதி போன்ற சில ராகங்களையும் கண்டறிந்தவர் என பாலமுரளி பற்றிய அறிமுக குறிப்பு வெளியிட்டிருந்தது அகாடமி. இதை ஆதாரமாகக் கொண்டே பாலமுரளி எம்.ஜி.ஆர் முன் தைரியமாக பேசினார்



பாலமுரளியின் கோரிக்கையை எம்.ஜி.ஆர் விருதுக்குழுவுக்கு பரிசீலிக்கச் சொன்ன சில நாட்களில் பிரபல வீணை வித்வானும் 'அந்தநாள்' 'பொம்மை' போன்ற மறக்கமுடியாத படங்களை தமிழ்த்திரையுலகுக்குத் தந்தவருமான வீணை பாலசந்தரிடமிருந்து பலத்த கண்டனம் எழுந்தது. பாலமுரளி கிருஷ்ணா குறிப்பிட்டிருந்த ராகங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டவை என அவர் கொதித்தார். இதுகுறித்து மியூசிக் அகாடமிக்கு காட்டமான கடிதம் ஒன்றை எழுதிய பாலசந்தர் அதற்கான ஆதாரங்களையும் விரிவாக அதில் இணைத்திருந்தார். மியூசிக் அகாடமியின் பொறுப்பற்ற செயல் என இதனைக் கண்டித்திருந்தார்.இசையுலகில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தமிழக அரசு இதை ஒதுங்கி வேடிக்கை பார்க்க, இசையுலகம் பாலசந்தர் மற்றும் பாலமுரளிக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரண்டு அணிகளாக பிரிந்து நின்றன.

சினிமா உலகில் தனக்கென ஒரு பாணியைக் கொண்டு வெற்றிகரமானவராக இருந்த பாலசந்தர், சினிமாவை ஒரேநாள் இரவில் கைகழுவிட்டு இசையுலகுக்குத் திரும்பியவர். தன் மனதுக்கு படுவதை யாருக்காகவும் பயந்து ஒதுங்காமல் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்தார். நியாயம் என்றால் யாருக்காகவும் நெகிழாத சுபாவமுடையவர். இசையுலகில் ஓர் கலகக்காரர் என்ற பெயர் அவருக்குண்டு.

“ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள ராகங்களை தான் கண்டுபிடித்ததாக அகாடமியை ஏமாற்றியிருக்கிறார், அப்படி அகாடமி வெளியிட்ட மலரில் அது அச்சானதும் அதை ஆதாரமாக வைத்து அரசையும் ஏமாற்றி விருது பெறுவதுதான் அவரது நோக்கம்” என வரிந்துகட்டினார் பாலசந்தர்.



பாலமுரளியின் நட்பை இழக்க விரும்பாத பலர் 'ஏன் இவருக்கு இந்த வேலை என அறிவுரைகளை பாலசந்தருக்கு வழங்கினர். ஆனால் கொஞ்சமும் பின்வாங்கவில்லை பாலசந்தர். அப்போது வளர்ந்துவந்த கலைஞரான பாலமுரளிகிருஷ்ணாவுக்கு சில மூத்த கலைஞர்களின் ஆதரவு இருந்தது. சொற்போர் பத்திரிகைகள் வாயிலாக வெளிப்படையான யுத்தமானது. அவை பல தலைப்புகளில் இதை பரபரப்பாக எழுதி தீர்த்தன. பாலசந்தரின் குற்றச்சாட்டின் மீது கருத்து கேட்டு மியூசிக் அகாடமி பாலமுரளிக்கு கடிதம் எழுத. “இசை குறித்த முறையான ஞானம் இல்லாத பாலசந்தர் தப்பும் தவறுமாக இப்படி குற்றஞ்சாட்டுவது வெட்கக்கேடானது. ராகத்தும் ஆரோக அவரோகணத்துக்கும் வித்தியாசம் தெரியாத பாலசந்தர் தன்னை இசைக்கலைஞர் என்று கூறிக்கொள்வது வெட்கக்கேடானது” என கொதித்து அதற்கு பதில் எழுதினார் பாலமுரளி கிருஷ்ணா.

தன் தரப்பு விளக்கங்களையும் அவர் தேவைப்பட்ட இடங்களில் விவரித்ததோடு “என் புதிய ராக கண்டுபிடிப்புகள் பற்றி பாலசந்தர் முன் விவாதிப்பது என் நேர்மைக்கு குறைவானதாக நினைக்கிறேன். தேவைப்படும்போது என் ரசிகர்கள் முன் அதை விவரிப்பேன்” என கறார் முகம் காட்டியிருந்தார் கடிதத்தில். தனக்கு உண்டான ஆத்திரத்தில் பாலசந்தரை கடுமையான வார்த்தைகளாலும் அவர் அர்ச்சித்திருந்தார். இரண்டு மேதைகள் முட்டிக்கொண்டு நிற்பதை கண்டு இசையுலகம் கவலைப்பட்டது. பத்திரிகைகளுக்கு பரபரப்பு தீனியானது இந்த விவகாரம். ஒரு கட்டத்தில் தன் கருத்துகளை துண்டறிக்கையாக வெளியிடும் நிலைக்கு போனார் பாலசந்தர்.

பாலமுரளியின் வார்த்தைகளால் காயமடைந்த பாலசந்தர் முன்னைவிடவும் அதிகமாக சீற ஆரம்பித்தார். அந்நாட்களில் காலையில் துாங்கி எழுந்து பார்த்தால் பாலசந்தர் வீட்டு வாசலில் பத்திரிகையாளர்கள் அவரது அன்றைய பரபரப்பு பேட்டிக்காக காத்திருப்பார்கள். அப்படி ஓர் நிலை உண்டானது.

அமைதி காக்கச்சொல்லி இரு தரப்பிலும் நெருங்கிய நண்பர்கள் சொல்லியும் அவர்கள் காது கொடுக்கவில்லை நண்பர்களுக்கு. ஒரு கட்டத்தில் பாலசந்தர் இதுகுறித்து நிபுணத்துவம் பெற்ற குழுவினரால் விசாரணை செய்யப்படவேண்டும் என வலியுறுத்தினார். ஆச்சர்யமாக கடந்த பல ஆண்டுகளாக அவருடன் சண்டையிட்டுக்கொண்டிருந்த சுப்புடுவும் பாலசந்தருக்கு ஆதரவாக களத்தில் நிற்க இன்னும் பரபரப்பானது இசையுலகம். இன்னும் சில வேத விற்பன்னர்களும் பாலசந்தருக்கு ஆதரவாக நின்றார்கள். ஆனால் சரிபாதிபேர் பாலசந்தரின் கருத்துக்கு ஆதரவு தந்தாலும் அவர் அதை வெளிப்படுத்தும் விதத்தை கண்டித்தார்கள். இந்த விவகாரம் மியூசிக் அகாடமியின் உறுப்பினர்களிடையேயும் பிளவை ஏற்படுத்தியிருந்தது.

'நல்ல சாரீரமும் அதீத இசைமேதைமையும் கொண்டவர்தான் பாலமுரளி. என்றாலும் அதற்காக அவரது அத்துமீறலை அனுமதிக்கமுடியாது. இசை என்பது ஒருவருடைய தனிப்பட்ட கருத்துகளால் சிறைபிடிக்கப்பட்டுவிடக்கூடாது' என இசையுலகம் தொடர்பான இதழ் ஒன்று கட்டுரை வெளியிட்டிருந்தது. தொடர்ந்த இந்த சர்ச்சைகளுக்குப்பின் ஒரே தீர்வாக இந்த பிரச்னையை ஆய்வதற்கு குழு ஓன்று அமைக்கப்பட்டது.

“ஓர் இசைக்கலைஞர் ஓர் ராகத்தை கண்டுபிடிக்கிறார் என்று சொல்ல முடியாது. புதிய ராகத்தை அவர் கண்டறிகிறார் என்று சொல்லலாம். சாகித்தியக்கர்த்தாக்களின் உள்ளுக்குள் புதைந்திருக்கும் மனநிலையை அழகுபட வெளிப்படுத்துவது ராகம் என்று சொல்லலாம். அலங்காரம் செய்யப்பட்ட ஸ்வரங்கள் ஆரோகண - அவரோகணத்தில் அதிர்ந்து அசைந்து கமகங்கள் நுட்பமான சுருதிகள் சஞ்சாரங்கள் விசேஷ பிரயோகங்கள் முலமாகவும் ஸ்வரங்களின் அசைவுகள் மூலமாகவும் உயிர்பெறுகிறது. பாடலாசிரியரின் திறமையால் அது ராகமாகிறது. ஆகவே ராகத்தை படைப்பவர் அவர். அதன் ஆரோகண அவரோகணத்தை தான் படைக்கும் பாடல் மூலம் ராகமாக முன்வைக்கிறார். அந்த வகையில் குறிப்பிட்ட ஆரோகண அவரோகணத்தில் ஒரு பாடலை இயற்றும் முதல் நபராக அந்த பாடகர் ஆகிறார்” என தன் தரப்பு விளக்கத்தை இறுதியாக மியூசிக் அகாடமிக்கு தான் எழுதிய கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டார் பாலமுரளி. 7 மாதங்களுக்குப்பின் இந்த நீண்ட போர் முடிவுக்கு வந்தது



ஆம், 1979 ஏப்ரல் மாதத்தில் இறுதிவாரத்தில் மியூசிக் அகாடமியினால் நியமிக்கப்பட்ட 60 தேர்ந்த இசை மேதைகள் அடங்கிய நிபுணர்கள் குழு தன் தீர்ப்பை தந்தது. “ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள ஒரு ராகத்தை ஒரு பாடகர் புதிய வடிவம் கொடுத்தால் அதற்கு அபூர்வ ராகம் என்று சொல்லலாம். முன்பே அது படைக்கப்பட்டிருப்பதனால் அதை பிரபலப்படுத்தும் உரிமையை வேண்டுமானால் பாடகர் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் கண்டுபிடித்ததாக உரிமை கொண்டாட முடியாது” என பாலமுரளிக்கு எதிராக தீர்ப்பை எழுதியது நிபுணர்கள் குழு. இந்த தீர்ப்பை பக்கம் பக்கமாக பத்திரிகைகள் விமர்சனம் செய்திருந்தாலும், பாலமுரளியின் மேதமையை யாரும் குற்றம் குறை சொல்லவில்லை. பாலமுரளியின் திறமையை புகழ்ந்து எழுதின பத்திரிகைகள்.

இந்த சர்ச்சையினால் கசப்படைந்த பாலமுரளி தனக்கு எதிராக பேசிய, அவதுாறுகளை பரப்பியதாக செம்மங்குடி மீது வழக்குதொடர்ந்தார் என்பதும் தனிக்கதை. கிட்டதட்ட 4 வருடங்களுக்குப்பின் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. ஆனாலும் இசைமேதைகளுடனான அவரது பிணக்கு அப்படியே தொடர்ந்தது. இறுதிவரை பாலசந்தருடன் அவர் நட்பு பாராட்டவில்லை. ஆனால் செம்மங்குடியிடம் அவர் இணக்கம் காட்டினார். அவரது கச்சேரி ஒன்றில் வயலின் வாசித்து மீண்டும் இணக்கமானார்கள் இருவரும்.

இந்த சர்ச்சைகளினால் தன் இசைமேதைமையை கொஞ்சமும் இழக்காமல் இன்னும் அதிவேகமாக தன் இசைப்பயணத்தை தொடர்ந்தார் பாலமுரளி.
It’s time to pull the plug on Medical Council of India

KumKum Dasgupta, Hindustan Times

The winter session of Parliament is in progress and one of the key Bills that is scheduled to be presented for passage is the National Medical Commission Bill, 2016, which seeks to replace the Medical Council of India (MCI) with a national medical commission (NMC).

With demonetisation hogging the time and energy of MPs, one doesn’t know if this new Bill will be discussed during this session, but it’s time to scrap the corrupt and derelict Medical Council of India (MCI).

The MCI is a statutory body with the responsibility of establishing and maintaining “high standards of medical education and recognition of medical qualifications in India”.

Read: MCI moves SC against order on Lodha panel, wants modification

It registers doctors to practice in India, in order to protect and “promote the health and safety of the public” by ensuring “proper standards” in the practice of medicine.

While the MCI’s stated intentions are no doubt righteous, the reality is different: Four years after doctors removed the uteruses of 703 women in Bihar to siphon off surgery reimbursements under the Rashtriya Swasthya Bima Yojna, the central health insurance scheme for poor families, MCI has failed to take action against even one doctor.

Read: Parliamentary panel pulls up MCI over corruption

They managed to put off any action against the corrupt and unethical doctors even after the Bihar Human Rights Commission (BHRC) wrote to the MCI in April to punish the physicians involved in the “uterus scam”.

As directed by the BHRC, the Bihar government lodged FIRs against 33 empanelled hospitals and 13 doctors but the doctors continue to practice and the hospitals remain functional.

If approved, the NMC, which will replace MCI, will become the main regulatory body and take over all roles and responsibilities of the organisation.

The new body will have eminent doctors and experts from related fields to steer medical education in the country so as to ensure quality of education is at par with global standards.

The demand for revamping the MCI has been doing the rounds for some time: Earlier this year, a parliamentary panel had called for revamping the MCI, saying it has failed in its role as a regulator, which has led to a downfall in India’s medical education system.

The MCI president admitted to the committee that there is rampant corruption in the country’s apex medical education regulator. The report noted that the president admitted “corruption was there when there was sanctioning of medical colleges, or increasing or decreasing seats. The committee has also been informed that private medical colleges arrange ghost faculty and patients during inspections by MCI and no action is taken for the irregularity”.

In May, the Supreme Court appointed the Lodha panel to oversee the MCI because the regulator is often accused of indulging in corrupt practices.

The MCI, however, thinks that there is organised vendetta against it.

In an application to the SC in June, the MCI said the SC order is based on a perception that the organisation is corrupt.

Voicing its strong reservations against the reasons the top court cited to appoint the panel, the MCI said vested interests have orchestrated a well-designed propaganda against the council to render it weak and toothless.

The MCI has its reasons to defend itself, but how would it explain its lax attitude towards erring doctors in the Bihar case?
Will dissolving the Medical Council of India help medical education?

Gauri Kohli, Hindustan Times, New Delhi
 |  
Updated: Nov 22, 2016 19:45 IST

Hundreds of doctors across the country have been demanding reforms in medical education such as more seats at the undergraduate and postgraduate levels. (File photo)

Hundreds of doctors across the country are protesting against the proposed National Medical Commission Bill (NMC Bill), which seeks to dissolve the Medical Council of India (MCI), calling it “an undemocratic move.”

One of the primary responsibilities of the MCI is to regulate medical education in the country. The NITI Aayog suggested the creation of NMC in August 2016. The proposed bill has suggested forming an NMC, which will be a policy-making body for medical education. Scrapping MCI might not be the right move in the long term, experts have said.

The proposed NMC Bill 2016 suggests that the Central government will establish autonomous Boards for conducting undergraduate and postgraduate education, assessment and rating of medical institutions and registration of medical practitioners, among other things.

According to Dr KK Aggarwal, national president elect, Indian Medical Association, “Scrapping MCI will cripple the functioning of the medical profession by making it completely answerable to the bureaucracy and non-medical administrators. Instead, the government must consider introducing amendments to the existing MCI Act to make it transparent, accountable, robust and self-sufficient.”

Dr Aggarwal says the autonomy of the regulatory body has to be upheld. Experts also suggest that providing for an accreditation authority for medical education on the lines of the authority vested with the All-India Council for Technical Education in respect of technological institutions through National Accreditation Board can be a solution.

Vesting MCI with the authority to prescribe service conditions and payable scales for full-time teaching faculties in medical colleges on par with the UGC can be another solution.

The government had invited suggestions from stakeholders and public on the proposed NMC Bill. Dr Manish Prabhakar, president, Indian Medical Students’ Association, says an NMC, if formed, will be “undemocratic and highly detrimental to budding doctors, community and medical associations.”

The NMC also aims to prescribe norms for determination of fees for a proportion of seats, not exceeding 40%, in private medical educational institutions. The Commission will also be responsible for conducting the National Eligibility-cum Entrance Test and a National Licentiate Examination for admission into post-graduate courses in medical colleges.

The bill also seeks to establish Undergraduate and Postgraduate Medical Education Boards that will be responsible for determining and prescribing standards and overseeing all aspects of medical education at undergraduate and postgraduate levels, respectively. They will also be given the task to develop a competency-based dynamic curriculum (including assessment) at the two levels and prescribing guidelines for setting up medical institutions, besides developing curricula and conducting examinations.

But will dissolving MCI help achieve these goals? Dr Arun Aggarwal, former president Delhi Medical Council and professor of excellence, Maulana Azad Medical College, Delhi, says, “Replacing MCI with another regulatory body does not guarantee that the current issues in medical education will be resolved. How can we be sure that the new commission will function without any glitches and be corruption-free?”

The new commission also seeks to merge the existing National Board of Examination (NBE), which is responsible for regulating post-graduate medical education in the country, with the Postgraduate Medical Education Board.

“The Supreme Court in its judgment dated April 3, 2016, while placing an oversight committee for MCI, had mandated a period of one year for the government to undertake reforms in regulation of medical education and set up appropriate systems in place. The apex court will review the position in April 2017. The tenure of MCI will also be completed in a year’s time. Thus, achieving high growth in healthcare to meet the growing needs is an area of high priority. Reforms in medical education are necessitated and will have to be undertaken sooner than later. However, the needs of medical profession namely professional autonomy and identity have to be appropriately addressed while holding the professionals accountable,” says Dr Bipin Batra, executive director, NBE.

92% M.Sc nursing seats remain vacant in state

92% M.Sc nursing seats remain vacant in state

Balwant Garg

Tribune News Service

Faridkot, October 28

There are only 47 eligible candidates for 601 M.Sc nursing seats in 32 nursing colleges of the state. As October 31 is the last date of admission in nursing courses, the “distressed” institutes have asked the state medical education department to scrap many eligibility conditions so that seats could be filled.

In the entrance test conducted by the Baba Farid University of Health Sciences (BFUHS) on September 18, only 47 candidates could qualified.

A B.Sc-pass candidate should have secured minimum 40 per cent (35 per cent for SC/BC) in the entrance test to be eligible to get admission in the M.Sc course.

Eighteen out of these 32 nursing institutes could not get even a single candidate in the M.Sc course this time. The counseling to fill these seats was conducted by the BFUHS on October 24. While eight nursing colleges could fill only one of their seats each, 3 colleges got only 2 candidates each.

Even the highly prestigious State Institute of Nursing & Paramedical Sciences in Badal village could get only 15 candidates against its 25 seats. The second highest number of seats was filled in the DMC Nursing Institute in Ludhiana, which got nine students against its 25 seats.

The nursing colleges have reportedly approached the state government to scrap the eligibility conditions, including qualifying or appearing in the entrance test. As a candidate should have a minimum of 55 per cent aggregate marks in the B.Sc nursing course to be eligible to appear in the entrance test, the colleges want the state government to write off this condition too. Not only in M.Sc Nursing, in B.Sc nursing too, Punjab is facing the problem of filling the seats. While 109 nursing colleges in the state offer 4,405 B.Sc nursing and 2,785 B.Sc (Post-Basic) nursing course seats, 925 B.Sc nursing and 1,094 B.Sc (post basic) nursing seats are still lying vacant.

As the Department of Medical Education and Research has already relaxed the norms to fill the B.Sc Nursing course seats, many candidates who have scored zero or negative marks in the entrance test too have been allowed admission.

Thursday, November 24, 2016

HC seeks report on sending doctors on deputation


“Their names can’t be retained on paper in one hospital and made to work elsewhere”

The Madras High Court Bench here on Wednesday directed the Director of Public Health and Preventive Medicine to file a report by Monday explaining why he allowed several government doctors and nurses appointed against sanctioned vacancies in many hospitals to work on deputation in other districts.

A Division Bench of Justices S. Nagamuthu and M.V. Muralidaran passed the order on a batch of three public interest litigation petitions seeking better medical care in government hospitals.

Recording the submission of M.R. Vairamuthuraju, Dean of Government Rajaji Hospital (GRH) here that doctors from Thanjavur, Thoothukudi and Theni had been deputed to work in GRH and doctors from here had been deputed to work in the government medical college hospital in Sivaganga, the judges wanted the DPH’s report to indicate the number of doctors and nurses sent on deputation to districts other than the ones in which they were expected to serve.

“What is the necessity for deputing the doctors? If you want you should have transferred the doctors to other districts. You cannot retain their names on paper with respect to one hospital and make them work elsewhere. We want the Director to explain why such a large exodus of doctors in the guise of deputation is allowed. We need the details of nurses also since the Dean says that 75 nurses from other hospitals have been deputed to the GRH,” Mr. Justice Nagamuthu told a Special Government Pleader.

The judges recorded the submission of one of counsel for the petitioners that the GRH had only 305 staff nurses against the requirement of 1,195 nurses as per MCI norms. “Though 75 nurses have been deputed here from various hospitals, still the strength is nowhere near the required strength,” the judges said.

In so far as the submission that none of the government hospitals in the State, except the Rajiv Gandhi Government General Hospital in Chennai, had Ceramics Dental Laboratories, the Bench wondered why the State had not established such labs, though the Dean had told the court that it would cost only Rs.6.22 lakh for a lab.

Fiat to Health Secretary

The High Court directed the Health secretary to come up with a proposal by Monday on improving healthcare facilities in government hospitals by ensuring adequate number of doctors and nurses required, as per Medical Council of India norms, in every GH besides establishing infrastructural facilities.

HC quashes secretary’s order, reinstates MK Stalin’s PA

HC quashes secretary’s order, reinstates MK Stalin’s PA

CHENNAI: The Madras high court has quashed the order of the secretary of the legislative assembly to transfer and rescind the promotion of a deputy secretary detailed to the personal staff of leader of the opposition M K Stalin.

The court on Wednesday struck down the order saying that a person appointed on deputation to a 'tenure post' should had 'an indefeasible right' to be treated fairly and equally.

Earlier, Stalin had moved the court saying that he had upgraded M Athiseshan's post from that of personal assistant to special personal assistant on August 8, 2016. The secretary of the legislative assembly struck down the promotion and posted him back to his home department. Stalin's counsel P Wilson said the secretary could neither remove the officer unilaterally nor could the his terms of service be altered.

Justice R Subbaiah said as per Supreme Court precedence, a person appointed on deputation cannot go back to his original post before the end of the term. Similarly, the deputation cannot be cancelled without the consent of the 'individual' under whom the officer was serving. "If the deputation is not a simple transfer and if the appointment is a tenure posting, the same cannot be curtailed," the judge said.

"In view of these reasons, the order is liable to be quashed and therefore, the same is quashed and the writ petition is allowed," the judge said.

The court asked the authorities concerned to place Athiseshan 'on the terms of the original order dated June 8. He should be posted as special PA, at the earliest, the order said.

Stalin said the court had protected the dignity of the assembly by striking down the order. "The chair should uphold democratic principles and pave the way for healthy politics from now on. I urge the ruling party not to create a situation where Assembly ethos should be reclaimed by court's assistance," he said.

Gynaec cancer among 18 super-specialities to get medical council nod

CHENNAI: The Medical Council of India has cleared the decks for at least 18 new specialised courses which will equip doctors with the expertise needed to treat ailments that may be beyond their current realm of knowledge. Officials said most of these specialities are meant to treat diseases like gynaecological cancer that were rare some years ago, but are increasingly becoming common.

The general body of the MCI that met in New Delhi on Tuesday resolved to permit five post-graduate courses and 13 super-speciality courses that can be started in medical colleges by 2017. Insitutions offering these courses should have qualified faculty, necessary infrastructure and have to be approved by the Supreme Court-appointed oversight committee.

The academic committee proposed a post-graduate deg ree (MD) in marine medicine, similar to aviation medicine. Several years ago, aviation medicine was recognised as a medical speciality as it combines preventive, occupational, environmental and clinical medicine with the physiology and psychology of man in flight. Like in aviation, travel by sea can also contribute to outbreaks of communicable diseases. It is concerned with the health and safety of all those who fly . Our sea traffic has increased as well. Our naval fleets need similar care, said Bengaluru-based cardiac surgeon Dr Jawali Vivekanand Sidramappa, member of the academic committee. Like in aviation, travel by sea can also contribute to outbreaks of communicable diseases - as there are ships sailing to all corners of the world from India.

Similarly, the committee said MD degrees in laboratory medicine and palliative care were in great demand.Although diseases like cancer are increasingly curable, many continue to pose a challenge. Doctors trained in palliative medicine will be able to offer end-of-life care to patients. A year-long diploma in allergy and clinical medicine has also been agreed up on. Also, with an increase in the incidence of gynaecological cancers - breast, cervical, uterine and ovary - across the country , gynaecologists and oncologists have been demanding specialised courses. The estimated burden of gynecological cancer in 2015 was 160,000, which include 93,000 cases of cervical cancer and 134,000 breast cancer cases.

According to senior oncologist Dr V Shanta from the Cancer Institute, Chennai, cervix, breast and overy cancer cases comprise to 55% of the cases. Post-graduate students in gynaecology and oncology streams can do a specialised course MCh gynaecology oncology . The other super-speciality courses that have been approved by the MCI are DM in clinical immunology and rheumatology, critical care, virology, infectious diseases, neuroradiology , neuroanesthesia, paediatric neurology , paediatric hepatology and paediatric oncology , besides MCh in hepato-pancreato-biliary surgery , vascular surgery and reproductive medicine.

The academic committee has already prepared the requisites, including the qualification and number of staff and infrastructure required, to start these courses. The committee has also recommended that a department of family medicine be started in all medical colleges offering undergraduate courses.

"It is extremely important to bring back the family physicians. Most countries still have them and it is they who refer patients to specialists. When we establish departments and inculcate ideal practices, we may be able to revive them. Slowly , we may even offer post-graduate and super-speciality courses," he said.

MCI says corporates can run medical colleges

CHENAI: The Medical Council of India has permitted corporates and "for profit" institutions to start medical colleges in the country.
Nearly two months after the Niti Aayog committeerecommended privatisation of medical colleges, the general body of the council that met in New Delhi on Tuesday resolved to allow corporate companies to start medical colleges in the country. If the Supreme Court-appointed oversight committee and the ministry of health and fami ly welfare approve this, corporates can apply for starting new colleges, officials said.

Educational institutes in the country are now being run by government or registered not-for-profit society or charitable trust. Foreign direct investment rules also prohibit investments from foreign companies in these societies or trusts. Though a group of doctors in the general body raised concerns that allowing corporates will further commercialise education, a majority of them said allowing corporates will improve standards to the level of Harvard and Oxford universities.

"Many private institutions are anyway making profit through non-transparent and illegal means. If we legalise corporates they would charge a very high fee, but they will be forced to pay income tax," said Coimbatorebased laprascopic surgeon L P Thanagavelu, a member of the MCI, who was present at the meeting. "There were many recommendations from the members on how this could be done, but a majority thought it was a good idea. Some of them recommended that a portion of the seats in these institutions should go to students from economically weaker sections or to merit students entering private colleges through the state quota," he said.


Muslim Educational Society president P A Fazal Gafoor said it would be impossible for the council to have two systems of ownership."Already we have trusts and societies running 'not-forprofit' colleges. They were not paying income tax and accepting donations? What will happen to them? Should we allow them to be converted into profit-making companies? It is sad that such recommendations should come from the centre," he said.Until now, the MCI had permitted companies that make no profit to start medical colleges, but no companies came forward, he added.

A majority of the members said companies would be able to pump in money to establish better infrastructure and human resources.

பாலிடெக்னிக் கல்லூரி முறைகேடு: 524 மாணவர்கள் மீது நடவடிக்கை

கோவை: பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நடந்த பருவத்தேர்வின் போது, எழுந்த முறைகேடுகள் தொடர்பாக, 524 மாணவர்கள், இரண்டு முதல்வர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில், தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் என, 529 பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. தற்போது, நடந்து வரும் பருவத்தேர்வுகள், நவ., 26ல் நிறைவடைகிறது. இதில், நடந்த முறைகேடு குறித்து, சென்னையில் நேற்று நடந்த, தேர்வு முறைகேடு நடவடிக்கை குழு கூட்டத்தில் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், 56 கல்லுாரிகளில், 74 செய்முறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுகள், தீவிர கண்காணிப்புடன் மீண்டும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 200 பேருக்கு ஒரு தேர்விலும், 314 பேருக்கு அனைத்து பாடத்தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 10 மாணவர்களுக்கு இரண்டு பருவம் கல்லுாரிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.முறைகேடுகளுக்கு துணையாகயிருந்த இரண்டு கல்லுாரி முதல்வர்கள் மூன்று ஆண்டுகள் பணிபுரிய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 தொழில்நுட்ப தேர்வு முறைகேடு நடவடிக்கை குழு, மாநில அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு தேர்வு முடிவு சமயங்களிலும், தேர்வு முறைகேடு தடுப்பு குழுவால் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில், நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில், 56 கல்லுாரிகளில் நடந்த, 76 செய்முறை தேர்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டு மறு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும், 29 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 524 மாணவர்கள் மீது, மூன்று பிரிவுகளின் கீழும், இரண்டு கல்லுாரி முதல்வர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
பொறியியல் கல்லூரி மாணவர் ரேங்க் பட்டியல் வெளியீடு: மாநில அளவில் சாய்ராம் கல்லூரி முதலிடம்

பொறியியல் கல்லூரி மாணவர்களின் ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்டது. இதில், அதிக எண்ணிக்கையிலான ரேங்குகள் பெற்று (236 ரேங்குகள்) சென்னை  சாய்ராம் பொறியியல் கல்லூரி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்சிஏ படிப்புகளில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளின் ரேங்க் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த ரேங்க் பட்டியலை பாடப் பிரிவுகள் வாரியாக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu) பார்க்கலாம். இந்த பட்டியலில், வெவ்வேறு படிப்புகள் மற்றும் பாடப்பிரிவுகள் வாரியாக பல்கலைக்கழக அளவில் முதலிடம், 2-ம் இடம் 3-ம் இடம் என்ற வரிசையில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களின் பெயர், அவர்கள் படித்த கல்லூரியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதில், அதிக எண்ணிக்கையிலான ரேங்குகள் பெற்ற கல்லூரி என்ற முறையில் சென்னை  சாய்ராம் பொறியியல் கல்லூரி 236 ரேங்குகள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதுகுறித்து சாய்ராம் கல்வி குழுமங்களின் முதன்மைச் செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து கூறியதாவது:
பி.இ. இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கண்ட்ரோல், மெக்கானிக்கல், புரடக்சன் இன்ஜினியரிங் மற்றும் எம்இ எம்பெடெட் சிஸ்டம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றில் எங்கள் கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். ஒட்டுமொத்த ரேங்க் எண்ணிக்கையில் பிஇ படிப்பில் 172 ரேங்குகள், எம்இ படிப்பில் 64 ரேங்குகள் என மொத்தம் 236 ரேங்குகள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளோம்.
தொடர்ந்து 3 ஆண்டுகள்..
2014-ம் ஆண்டு 154 ரேங்குகள் பெற்றும், 2015-ல் 170 ரேங்குகள் பெற்றும் மாநில அளவில் முதலிடத் தைப் பிடித்தோம். தொடர்ந்து 3 ஆண்டு களாக மாநில அளவில் முதலிடம் பெற்று வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக உழைத்த பேரா சிரியர்களையும், சாதனை படைத்த மாணவர்களையும் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாய்ராம் கல்லூரிக்கு அடுத்தபடியாக ஒட்டுமொத்த ரேங்க் எண்ணிக்கையில் 137 ரேங்குகள் பெற்று சென்னை ஆர்எம்கே பொறியியல் கல்லூரி 2-ம் இடத்தையும், 136 ரேங்குகள் எடுத்து எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.
சான்றிதழில் யார் கையெழுத்து: சென்னை பல்கலையில் குழப்பம்

சென்னை பல்கலையில், நவ., 2ல் பட்டமளிப்பு விழா நடக்க உள்ள நிலையில், பட்ட சான்றிதழில் யார் கையெழுத்திடுவது என, குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
சென்னை பல்கலையின், 159வது பட்டமளிப்பு விழா, டிச., 2ல், பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நடக்கிறது. கவர்னர் வித்யாசாகர் ராவ், பட்டங்களை வழங்க உள்ளார். 

துணைவேந்தர் இல்லாமல், பட்டமளிப்பு விழா நடத்த பேராசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து, பேராசிரியர்கள், உயர் கல்வி அமைச்சரை சந்தித்து முறையிட்டு உள்ளனர். 

இது குறித்து, பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: பட்டமளிப்பு விழா நடத்த, இரு வாரங்களுக்கு முன், அறிவிப்பு வெளியிட வேண்டும். தேர்வுக்குப் பின், மாணவர்கள் எந்த நாட்டிலும் இருக்கலாம். அவர்கள், நேரில் பட்டம் பெற, விசா பெறுவது, டிக்கெட் எடுப்பது என, பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதற்காக, இது போன்ற அவகாசம் வழங்குவது நடைமுறை. தற்போது, ஒரு வார அவகாசத்தில் விழா நடத்தப்படுகிறது. பட்ட சான்றிதழில் துணைவேந்தரும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும், கையெழுத்திட வேண்டும். பட்டங்களை வழங்க, துணைவேந்தர் அதிகாரப்பூர்வ புத்தகத்தில் கையெழுத்திட்டு, உத்தரவு பிறப்பிப்பார். இவை பல்கலை மரபுகள்.

 பத்து மாதங்களாக, துணைவேந்தர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.தற்போது துணைவேந்தருக்கு பதில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் கையெழுத்தை, பட்ட சான்றிதழில் பதிவு செய்ய, உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இது மரபுகளுக்கு முரணானது. எனவே, துணைவேந்தரை நியமித்த பின், பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும். பல்கலை பட்டமளிப்பு விழா மரபுகளை, ஒரே நாளில் உடைக்க நினைப்பது சரியல்ல.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் புதிய ரூ.500 நோட்டு விநியோகம்: மக்கள் ஆறுதல்

தமிழகத்தில் புதிய ரூ.500 நோட்டு விநியோகம் தொடங்கியிருக்கிறது. சேலம் முதல் அக்ரஹாரம் கரூர் வைஸ்யா வங்கியில் இன்று (புதன்கிழமை) பிற்பகலில் ரூ.500 நோட்டு விநியோகிக்கப்பட்டது.

இருப்பினும், தமிழகம் முழுவதும் பரவலாக ரூ.500 விநியோகிக்கப்பட்டுள்ளதா என்ற தகவல் இன்னும் கிடைக்கவில்லை.

ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து நாடு முழுவதும் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய ரூ.2000 நோட்டு தரப்பட்டது. பழைய நோட்டுகளை மாற்றிவிட்டாலும் அதற்கு சில்லறை கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். பெரும்பாலான மக்கள் ரூ.2000-க்கு பதிலாக ரூ.500 நோட்டுகளை முதலில் புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்றனர்.



புதிய ரூ.500 நோட்டு. | படம்: எஸ்.குருபிரசாத்.

இந்நிலையில், ரூபாய் நோட்டு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையிம்போது, "பாதுகாப்பு காரணங்களால், தமிழகத்துக்கு புதிய 500 ரூபாய் நோட்டு எப்போது வரும் என்பதை நேரடியாக இப்போது தெரிவிக்க முடியாது. வேண்டுமென்றால் அதை ரகசிய அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்" என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் சில்லறை தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், சேலம் முதல் அக்ரஹாரம் கரூர் வைஸ்யா வங்கியில் ரூ.500 நோட்டு விநியோகிக்கப்பட்டது. புதிய ரூ.500 நோட்டை மக்கள் ஆறுதல் அடைந்து ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

அரியலூரும் அறுபது ஆண்டுகளும்! - 1956 நவம்பர் 23

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

1956ல் அரியலூர் மருதையாற்றுப் பாலத்தில் நடந்த ரயில் விபத்து. (கோப்புப்படம்)

அரியலூரில் இருந்து 3 கி.மீ. தள்ளி மருதையாற்றுப் பாலம். மழை வெள்ள நீர், பாலத்தை அடித்துச் செல்ல முயன்று கொண்டு இருந்தது. நிரம்பிய பயணிகளுடன், தூத்துக் குடி எக்ஸ்பிரஸ் பாலத்தின் மீது பயணித்தது. சில நொடிகள்தாம். பாலம் நொறுங்கி விழுந்தது. 13 பெட்டிகள் கொண்ட ரயிலின் இஞ்சின் மற்றும் 7 பெட்டிகள் ஆற்று நீரில் விழுந்தன.

விழுந்தும் விழாமலும் 8-வது பெட்டி. இடிபாடுகளில் சிக்கி 128 பேர் பலி. (‘தி இந்து' 25 நவ. 1956). இதுவும் அன்றி, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட பலர் ‘கடைசி வரை காணவில்லை'. இந்த மோசமான விபத்துக்கு 82 நாட் களுக்கு முன்புதான் அதாவது, 1956 செப்.2-ல் ஹைதராபாதில் இருந்து 100 கி.மீ. தொலைவில் மெஹபூப் நகர் - ஜட்சேரியா இடையே, பாலம் உடைந்து விழுந்ததில் 125 ரயில் பயணிகள் இறந்தனர்.

அப்போது மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, மெஹபூப் நகர் விபத் துக்கு தார்மீக பொறுப்பு ஏற்று பதவியை ராஜிநாமா செய்தார். ஆனால், பிரதமர் ஜவஹர்லால் நேரு அதனை நிராகரித்தார். அடுத்த 3 மாதங்களுக்குள் அரியலூர் விபத்து. நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட சாஸ்திரி, எல்லாப் பாலங்களையும் உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்த ரயில்வே வாரியத்தைப் பணித்தார்.

ஆனாலும் மனம் பொறுக்க வில்லை. நவ.26-ம் தேதி பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தார். இம்முறை சாஸ்திரி பிடிவாதமாக இருந்தார்.

இதனால், அவரது கடிதத்தை ஏற்று குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தார் நேரு. நாடாளு மன்றத்தில் இது குறித்துப் பேசினார். “துயரச் சம்பவங்களால் நாம் அனைவரும் வருந்துகிறோம். வேறு எவரையும் விட, ரயில்வே அமைச்சர் மிக அதிக வருத்தத்தில் உள்ளார்” என்றார்.

முன்னதாக நேரு கூறிய மற்றொரு செய்திதான் மிக முக்கியமானது. “விபத்து ஏற்பட்ட அதே இடத்தில் இது போன்ற சம்பவம் ஏற்கெனவே நடந்துள்ளது.” (‘தி இந்து' - 27 நவ.1956).

விபத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையைக் கொண்டுதான், ‘பயங்கர' விபத்து என்று தீர்மானிக்கி றோம் நாம். இப்போ தெல்லாம், ஓரிருவர் மரணம் என்றால் அதனை நாம் விபத்தாகவே ஏற்பதில்லை. இந்தியாவில் ரயில் விபத்து ஒன்றும் அபூர்வம் இல்லை. இயல்புதான் என்றாகி விட்டது.

சுதந்திர இந்தியாவில் நூற்றுக் கணக்கான ரயில் விபத்துகள், ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. கடந்த சுமார் எழுபது ஆண்டுகளில், விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகிய ரயில்வே அமைச்சர்கள், லால் பகதூர் சாஸ்திரி மற்றும் நிதீஷ் குமார்.

1999 ஆக.2-ம் தேதி. அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில், கைசல் என்ற இடத்தில் கோரமான ரயில் விபத்து. ‘அவாத் அசாம்' ரயிலும் பிரம்மபுத்ரா மெயிலும் ஒரே பாதையில் விடப்பட்டு, நேருக்கு நேர் மோதிக் கொண்டன. ‘சிக்னல்' இயக்குவதில் ஏற்பட்ட அசிரத்தை. மனிதத் தவறு. 300 பேருக்கு மேல் பலியாகினர். விபத்துக்குப் பொறுப்பேற்று பதவி விலகினார் அப்போதைய ரயில்வே அமைச்சர் நிதீஷ் குமார்.

இதன் பிறகு, 2000-ல் மம்தா பானர்ஜி ராஜிநாமா கடிதம் கொடுத் தார். ஆனால் அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அதை நிராகரித்தார். ஒரு நியாயமான கேள்வி எழுகிறது. இந்தியா போன்ற மிகப் பரவலான தேசத்தில், பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்துக்கு இருப்புப் பாதையும், நாள்தோறும் பல நூறு ரயில்களும், சுமார் 15 லட்சம் ஊழியர்களும் கொண்டுள்ள ரயில் வேயில், ஒரு விபத்துக்கு அமைச்சர் பொறுப்பாக முடியுமா...?

நேரடிப் பொறுப்பு அல்ல; ‘தார்மீக' பொறுப்பு என்பதே கூட நடைமுறையில் சாத்தியம்தானா? ஒருவரின் பதவி விலகலால் அத்தனையும் மாறி விடப் போகி றதா? இனியொரு விபத்து நடவாது என்பதற்கு, அது உத்தரவாதம் தருமா? நிச்சயமாக இல்லை. ஆனால், ஒரு சாமான்யனின் உணர் வுக்கும் உயிருக்கும் மதிப்பளிக்கும் அடிப்படை நாகரிகம் சார்ந்த ஜனநாயக நடைமுறைதான் இது.



ஓர் ஆச்சரியமான உண்மை. தார்மீகப் பொறுப்பு ஏற்று பதவி விலக முன்வந்த மூவருமே பிற் காலத்தில் உயரிய நிலையை எட்டி இருக்கிறார்கள். பிரதமராக சாஸ்திரி. மீண்டும் மத்திய அமைச்ச ராகவும், பிகார் முதல்வராகவும் நிதீஷ் குமார். மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி. இது முற்றிலும் தற்செயலானதாக இருக்கலாம்.

அதிலும், இந்த நாட்டின் பிரதமராகத் தான் வரப் போவதாக 1956-ல் சாஸ்திரி, கற்பனை கூட செய்து பார்த்து இருக்க முடியாது. நேரு என்ற ஆலமரம், மிக வலுவாக இருந்த காலம் அது. ஆனால் ஒன்று. நேருவுக்குப் பிறகு யார்? என்கிற கேள்வி எழுந்த போது, சாஸ்திரியின் தார்மீக நெறியே காமராஜரை அவர் பக்கம் திருப்பி இருக்கலாம்.

இரண்டு சொற்றொடர்கள் உண்டு. ‘தென்னை மரத்துல தேள் கொட்டினா, பனை மரத்துல நெறி கட்டுச்சாம்..', ‘கால்ல முள்ளு குத்துனாலும், கண்ணுல தண்ணி வரும்..' எங்கேயோ நடந்த ஒன்றுக்கு வேறு யாரோ பலி கடா ஆவதைச் சொல்கிறது முன்னது. எவருக்கோ பாதிப்பு என்றாலும், ‘பிணைப்பு' காரணமாக, அவருக் காக வேறொருவர் வருந்துவதைக் காட்டுகிறது பிந்தையது.

பொது வாழ்வில், குறிப்பாக அரசியலில் அரிதாகிப் போன பல நற்குணங்களில், இந்த ‘தார்மீகப் பொறுப்பு'தான் முதன்முதலில் காணாமல் போனது. எளிமை, தூய்மை, தன்னலமின்மை எல்லாம் பின் தொடர்ந்தன.

ஒரு தாயோ தந்தையோ ஆசிரி யராகப் பணி புரிந்தால், அவரது மகன், மகள் அவரின் கீழ் வராமல், வேறு பிரிவுக்கு அனுப்பப்பட வேண் டும் என்று எழுதப்படாத விதியைக் கடைப்பிடித்தவர்கள் வாழ்ந்த சமுதாயம் இது. தனது உறவினர் கூட அல்ல; நண்பர் அல்லது தெரிந்தவர் தொடர் பான வழக்கு என்றாலும் தாமாக அவ்வழக்கில் இருந்து விலகிக்கொண்ட வழக்கறிஞர்கள், நீதிபதிகள் வாழ்ந்த நாடு இது.

தனது தாயாக இருந்தாலும் பொதுக் குழாயில் சென்றுதான் தண்ணீர் பிடித்து வர வேண்டும் என்று சொன்ன, அதில் இருந்து சற்றும் வழுவாது கடைப்பிடித்த பெருந்தலைவர்கள் ஆண்ட பூமி இது. எதிர்பாராது நிகழ்வதுதான் விபத்து. அரியலூரிலும் அப் படித்தான் நடந்தது. அதில் உயிர் இழந்தவர்களைப் பற்றி, அவர்களின் உறவினர்களே கூட இன்று நினைக்காமல் போகலாம். நாம் ஆனால் கண்ணீருடன் அவர் களுக்கு அஞ்சலி செலுத்துவோம். கூடவே, தார்மீகப் பொறுப்பு குறித்தும் சற்றே அசை போடுவோம். ‘புண்ணியமாப் போகும்'.

PUBLIC NOTICE..DCI website

PUBLIC NOTICE

 It has consistently been observed by the DCI that numerous anonymous/pseudonymous complaints are being received either through emails or by post even without substantiating any allegations leveled therein by any documentary proof or otherwise and as such, it is not feasible for the Council to ascertain the veracity of the facts and credentials of the complainant. 

In order to cope with such situations, the Central Vigilance Commission vide its order dated 26.06.1999 has already taken a decision to not to take any action on such anonymous/pseudonymous petition/complaints in terms of the Resolution No. 371/20/99·AVD.1II dated 04.04.1999 issued by the Department of Personnel & Training.

 In view of the above, and in order to avoid unnecessary correspondences and uncalled for tension to the persons in respect of whom such anonymous/pseudonymous petitions/complaints are made, it is brought to the notice of the public at large that no such anonymous/pseudonymous petition/complaint shall be entertained and considered, nor any action shall be taken by the Dental Council of India on it.

 This issues with the approval of the Executive Committee of the DCI in its meeting (at Agenda No.13(1)) held on 15.10.2015 ~ (M.L. Meena) Secretary Ilc Dental Council of India

செயல்படாத அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது: சம்பளக் கமிஷன் பரிந்துரை ஏற்பு

பிடிஐ

திறம்பட செயல்படாத மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு தரவேண்டாம் என 7-வது சம்பளக் கமிஷன் அளித்த பரிந் துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி, மத்திய அரசுப் ஊழியர்களின் பணித் திறன் குறிப்பிட்ட அளவுகோலை எட்டா மல் போனால், அவர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்திவைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எச்சரித்துள்ளார்.

7-வது சம்பளக் கமிஷன் பரிந் துரைகள் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கடந்த ஜூலை மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில், சிறப்பாக செயல்படாத அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது குறித்தும் சம்பளக் கமிஷன் பரிந்துரை அளித்திருந்தது.

அதாவது, பணியில் சேர்ந்த 20 ஆண்டுகளில் ஓர் ஊழியர் குறிப்பிட்ட அளவுகோலை எட்ட வில்லை என்றால் வருங்காலத் தில் அவருக்கான வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்றவற்றை நிறுத்திவைக்கலாம் என சிபாரிசு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக, அரசுப் பணி யாளர்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

இதன் மூலம், செயல்படாத மத்திய அரசு ஊழியர்கள், வரு டாந்திர ஊதிய உயர்வு உள்ளிட்ட பலன்களைப் பெற முடியாது என, அமைச்சர் ஜிதேந்திர சிங் எச்சரித்துள்ளார்.

Tuesday, November 22, 2016

RAC passengers to get bed kit without making a request
By Venkatesan Parthasarathy  |  Express News Service  |   Published: 22nd November 2016 02:43 AM  |  

CHENNAI: It is often a grouse among passengers of Reservation Against Cancellation (RAC) tickets, travelling in AC classes that they are not given bedroll kit. Unless specifically requested, it is likely the coach attendant gives a cold shoulder to them. But by failing to provide the bed kit, it is conveniently forgotten that affected passengers have already paid for it and are rightly justified in demanding the service.

Recently, Saran Raj, 28, travelled on a 3-AC coach to Kolkata by the Coromandel Express from Chennai. He narrated his experience of requesting the bedroll on multiple occasions. “I repeatedly requested the coach attendant. I was told the reserved passengers will be catered to first and only then RAC passengers will get served,” Saran recalled.

Having recognised this deficiency in service delivery, the railway board has issued a circular to all zonal railways stating that the bedroll kit may be provided to every RAC passenger in AC classes (except AC chair car). Dated November 16, the circular states that the bedroll charges are included in the fare and charged from passengers. The circular also mentions that zonal railway authorities have been asked to ‘ensure compliance’ with this order.

An RAC ticket permits a passenger to travel on the train, but they are not guaranteed a berth. The Travelling Ticket Examiner (TTE) or train conductor allots such passengers a berth when reserved passengers don’t turn up for the journey or if vacancy arises due to any cancellation. Until that allocation, one berth (side lower) is shared by two RAC passengers. Normally, every 2-tier AC/3 tier AC coach has two berths for RAC passengers.

While denying receiving any complaint from passengers, Senior Southern Railway officials here state the recent circular has only reiterated a similar communication which was first given way back in 2009.
But the content of the recent circular seems not to have penetrated to the TTEs. A couple of TTEs said they haven’t got any official instruction about the provision of bedrolls to RAC passengers and that the provision can’t be ensured until then.

NEWS TODAY 27.09.2024