Tuesday, October 10, 2017

29 passengers caught with gold stuffed up their bums at Madurai Airport


By Online Desk  |   Published: 09th October 2017 11:01 PM  |  

Image used for representational purpose only.
The Department of Revenue Intelligence busted a gold smuggling ring in which 29 passengers who arrived at Madurai International airport on various flights were found to have concealed several grams of the precious metal in their rectums.
In total, 10.937 kilograms of gold worth nearly Rs 3 crore (Rs 2,97,93,859 to be precise) was recovered from 46 passengers who arrived from Colombo, Kuala Lumpur, Singapore, Bangkok and Dubai. Not all of it was concealed in the courier’s rectums, some were found in hand baggage and checked-in luggage.
Acting on a tip-off from the Chennai zonal unit, DRI officials from Chennai and Thoothukudi launched a crackdown and first intercepted 91 passengers arriving in Madurai from Sri Lanka on Spicejet and Air Lanka flights on October 8. On examining them, the officials learned of the modus operandi that the gold couriers were employing.
It was discovered that smugglers were using frequent flyers to conceal gold ranging from 30 to 600 grams in their rectums or cleverly hidden in their hand baggage or check-in baggage. The passengers would then use the green channel at the airport to walk out of the airport without declaring anything at customs.
The DRI deployed a special team of officers to keep an eye on suspects of various smuggling gangs, said a statement released by the department.  Based on the information collected, the officials examined several passengers of which 29 were found to have been carrying gold in their rectums, another eight passengers were found concealing the precious metal in their stroller bags and the remaining nine passengers abandoned the gold on seeing the DRI officials.
Madurai airport was opened to international flights a few years ago to facilitate ease of travel for the large number of labourers who work in West Asian and South East Asian countries. But DRI and customs officials have been increasingly finding that the airport has been used a conduit by smugglers to ferry couriers back and forth as frequent fliers.
India is the second-largest consumer of gold in the world and its imports rose 95 per cent in July to $2.1 billion. As recently as August, the government put the precious metal in the restricted list of imports, meaning importers would need prior permission from the government. The restriction was introduced after $1 billion worth of gold was imported between July1 and August 21 from South Korea, a country with which India has a free-trade agreement (FTA), according to a report in the Economic Times. 
Outside the conditions of the FTA, gold imports attract as much as 10 per cent customs duty.

Chennai Medical students unlikely to be altruistic doctors: Study

TNN | Oct 9, 2017, 06:58 IST

Representative ImageRepresentative Image
CHENNAI: Medical colleges may churn out deft doctors but erode empathy in them, a study tracking the altruistic behaviour among MBBSstudents in the city says.

A cross-sectional study conducted in 224 students pursuing their undergraduation in a city-based medical college revealed that less than half of them engage in simple acts of altruism such as donating to charity. Only 31% claimed to have gone out of their way to help someone such as donating blood or pushing a stranger's broken down vehicle. A little more than a quarter of them were christened as "limited altruists", confining themselves to basic humanitarian acts like offering their seat in a bus to another passenger.



The study, published recently in the Indian Journal of Medical Ethics, also found that as the students progressed through medical college, their altruistic behaviour became less frequent.



Lead author Sanjai S, a final year student at ESIC Medical College and PGIMSR, KK Nagar, attributed the decline in empathy to various factors, including increase in workload, inability to deal with demands, and the influence of teachers who are pressed by "market forces".



The students, in the 17-23 years age group with more than half of them being women, were given questionnaires with a set of 20 situations that assessed their tendency to help others. Professors say the change in attitude when a student enters and leaves a medical college is stark. Altruism, empathy, generosity of spirit, love of learning, high ethical standards are eroded at the end of the medical training. Dr Vijayaprasad Gopichandran, assistant professor, department of community medicine at the ESIC college, said humanistic tendencies are often sidelined because of the high emphasis on the curriculum.



Retired government doctor J Amalorpavanathan found the study result surprising. "Students may not be as exposed to the community as they were before but they still exposed to the uncertainty of life early on. They see death, deprivation, penury and suffering on a daily basis. It should make them more empathetic," he said, adding if there is a decline it could be because of a lack of proper mentorship in medical education.



Researchers found that among the few who showed higher altruistic tendencies, 86% attributed the behaviour to their parents' teaching and about 35% of them had role models in college, most of them teachers. Surprisingly, no other demographic factor, such as native place, type of school attended or religion, had a significant influence on the respondents' nature of altruism.


But, according to clinical psychologist Keerthi Pai, this personality trait can be taught. "Studies have shown that altruism and empathy can be instilled just like a habit," she said. She didn't find the study results surprising. "When people are less strained they express more altruism," she said, adding the decline was evident in the general population too.


Why are bankers spared in Sekhar Reddy case: Madras high court to CBI

TNN | Updated: Oct 10, 2017, 06:04 IST

Madras high courtMadras high court
CHENNAI: Why CBI has not been able to hold inquiry with any bank official though its case is that a vast quantity of demonetised currencies was changed with the help of bank officials, and why no further arrests have happened, were some of the uneasy questions posed by the Madras high court to the central agency while hearing a plea filed by sand mining baron Sekhar Reddy and three others seeking to quash cases registered against them.

Moving the petition to quash the FIR, the accused including Reddy contended that though 10 months had lapsed since the case was filed by the CBI, no people other than the accused had been inquired or arrested by the agency. Also, citing the cases registered by CBI and Enforcement Directorate (ED), they argued that the Supreme Court had categorically said multiple cases could not be filed for same offences committed by the accused.



Recording the submissions, Justice G Jayachandran directed the agency to file a status report explaining the details of inquiries and arrests made since the registration of the case by October 25, and posted the plea to November 6 for further hearing.



In December 2016, income tax unearthed Rs 99 crore in demonetised currencies and another Rs 34 crore in new currencies, besides 127kg gold bars from the properties of Reddy and his associates.



On December 21, 2016 CBI arrested Reddy on charges of cheating, criminal breach of trust and criminal conspiracy. The agency filed a first information report against him, and his associates K Srinivasulu and Premkumar under charges of criminal conspiracy (IPC section 120b), criminal breach of trust (409) and cheating (420) and corruption under the Prevention of Corruption Act, 1988.

LATEST COMMENT

Apart from the main accused like Sekar Reddy the fraud conversions during DM window period the fraud could not have happened without the collusion of Bank officials. Some body i in high in government... Read MoreGopalarathnam Krishna Prasad

The accused were also booked under Prevention of Money Laundering Act (PMLA) by the Enforcement Directorate based on the FIR filed by the CBI. After allowing custodial interrogation by both the agencies, the court recently granted conditional bail to all the accused since the CBI could not file charge-sheet within the mandatory 90 days.



This apart, on May 5, the ED attached assets worth Rs 33.74 crore that income tax officers seized from Reddy under PMLA on the basis that the properties were proceeds of criminal activities. The directorate also established a link between Kolkata businessman Paras Mal Lodha and Reddy in the illegal conversion of demonetised notes.

Are birds bothering pilots at Chennai airport?

TNN | Updated: Oct 10, 2017, 06:08 IST

Representative imageRepresentative image
CHENNAI: Instances of pilots complaining about suspected bird strikes near Chennai are going up. These are not actual bird hits but suspicions of strikes recorded after pilots spot birds as they take off or come into land.

Statistics show that suspected bird hits have shot up from 38 in 2015-16 to 58 in 2016-17. These figures are based on reports filed by pilots who suspected that a bird must have hit the aircraft. However, investigation found that there were no actual strikes.



Pilots report to the air traffic control and the ground crew when they spot birds. If the pilot reports a suspected hit, ground engineers inspect the wings, engines, fuselage and nose of the flight after landing to confirm damages while the airport staff inspect the runway. If a pilot reports a suspected hit while take-off but readings inside show nothing amiss, the aircraft continues towards its destination where it is checked upon landing. If readings show otherwise, the flight makes an immediate landing. Other pilots are also informed about the bird sighting, or hit, so that they can take precaution. Aircraft manufacturers have provided a long check list detailing what action should be taken following a strike.

"Bird strikes have not been reported but the number of suspected strikes are up. This is also not good but checks are done. All these instances have been reported outside the airport campus," a senior Airports Authority of India official said.



As per rule, areas within a 10km radius of an airport should not have garbage dumps or crowded markets that will attract birds, especially kites. Though environmental committee meetings are held with the state government, there is no efficient garbage disposal near the airport. "The approach path to the main and second runways has densely-populated areas. We insist on garbage disposal," the official said.



A pilot blamed the populated neighbourhoods for the presence of birds. He said people flash laser beams on aeroplanes. "If there is no evidence of a bird strike, the aircraft will be released for operations. Otherwise it will be grounded for inspection and repairs," the pilot said.



Pilots take a few steps to prevent or minimise bird strikes like keeping the aircraft's speed at 250 knots below 10,000ft, and executing a fast and sharp climb to reduce exposure to birds. If there is a bird hit and the engines get affected, pilots plan an additional length of landing distance so that the aircraft will get the adequate distance on the runway to slow down after touchdown without using thrust reversers.



An airport official said steps have been taken to keep birds off the airport. "An ultrasonic equipment that emits an irritating noise audible only to birds and reflectors were tried, but bursting crackers is the primary means of scaring away birds when they are spotted in the airport's operational area," he said.

Now, take a free bicycle ride in namma chennai

Oct 10, 2017, 01:00 IST

For engineer Athirupcycling has been a passion since his school days. Though he had set up his own consulting firm, his love for bicycle didn't take a backseat. He got talking to some like-minded individuals and soon, started a cycling club — Athi's Bicycle Club — through which he has been giving out cycles for free to enthusiasts. After establishing free-to-ride bicycles concept in Trivandrum and Kochi, he initiated a similar system in Chennai. "After seeing my work in Kerala (he has 400 bicycles running in Trivandraum, Kochi, Infopark and Technopark), Chennai Metro Rail Limited officials met me two months ago. They have given me an opportunity to start the bicycle club in three metro stations — Nehru Park, Shenoy Nagar and Vadapalani," says Athirup, adding, "We offer 100 hours of free rides to users and there's no fee or registration charges. The only condition is that the cycle has to be returned in 24 hours."


Ask him about the mechanism and he explains, "Each of the above stations has 10 bicycles and people are free to use them for a day. All they have to do is send us an SMS and we'll share with them a number, which they can use to open the bicycle. These cycles are locked using a number locking system and this is entirely a software-based process."


Interestingly, this is said to be the first time that a bicycle sharing model has been operating at railway stations in the country. "Though we have clubs in Kerala, they are not attached to railway stations. So, Chennai is the first city to have a bicycle club operating from railway stations." he says and adds, "If the cycles develop a snag during the ride, our ground staff will attend to it. We have a good network of mechanics and you can just leave the bicycle at the spot. Our staff will reach the spot and fix the issue. Currently, we keep five bicycles in each station with five as buffer. Whenever the racks at the stations are low in supply, the software will send alerts and the ground staff will do the top-up."


Interestingly, Athirup doesn't have any tracking/security system attached to the bicycles. "It makes no sense to spend about `2000 to safeguard a bicycle worth `3000," he muses. So, is he not worried that his cycles might get stolen? "I don't think I have a huge risk there. If something like that happens, we will be able to manage it," he says with confidence.


Ask him how he plans to cater to a big city like Chennai, and he answers, "This is a pilot project and if we succeed, we will be able to take this facility across the city. There are no restrictions when it comes to users; people who are not rail commuters can also avail this facility. From my experience, I would say that a combination of local trains and bicycles is the best way to commute in cities."

Athirup attributes the success of his club to the bicycle dealers, sponsors and passionate riders. "I get bicycles at a rate lesser than the market price. The business model is based on the sponsor branding on the bicycle and it's with the sponsorship revenue that I am able to provide free rides to people," he points out.

Athirup has travelled extensively in the country on his bicycle. "My cycling expedition to the Himalayas and the northeast has taught me a lot," he says, "I cycle to different places in the city and have never been late for appointments till date. I think cycle is the safest mode of transport," he asserts.

Ask him how lucrative the free bicycle sharing format is, and he says, "It's not very lucrative, but I've been able to manage. More than money, it's my passion that drives me. I want to promote bicycling as a sustainable mode of transportation by establishing a cross-city bicycling club and introducing a linear, integrated and flexible mode of bicycling."

தோழியுடன் அதிவேக கார் பயணம்; சாலை தடுப்பில் மோதி விபத்து
Published : 09 Oct 2017 15:09 IST

சென்னை

சென்னை, ஆர்.கே.சாலையில் நேற்றிரவு (ஞாயிற்றுக் கிழமை) போதையில் தோழியுடன் வந்த வாலிபரின் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
மது அருந்திவிட்டு சொகுசு காரில் பயணித்து விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து விதிகளை மதிக்காமல் இரவில் போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துபவர்கள் எண்ணிக்கை அண்மைக்காலமாக கூடியுள்ளது. போலீஸார் வசதி படைத்தவர்களின் கார்களை சரிவர சோதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களால் வைக்கப்படுகிறது.
கடந்த வாரம் நடிகர் ஜெய் மது அருந்திவிட்டு பாலத்தின் மீது காரை மோதி விபத்தில் சிக்கினார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்றிரவு குடித்துவிட்டு தனது தோழியுடன் காரை ஓட்டிக்கொண்டு வந்த வாலிபர் ஒருவர் கடற்கரையிலிருந்து ஆர்.கே. சாலை வழியாக மைலாப்பூர் நோக்கி செல்லும் வழியில் விபத்தில் சிக்கியதில் கார் எதிர்புறச்சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது.
சென்னை மயிலாப்பூர் ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் கார்த்திக் நாராயணன்(20). அரும்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவரது தோழி சிருஷ்டி(22) டெல்லியை சேர்ந்தவர், சென்னையில் பாஷன் டெக்னாலஜி படிக்கிறார். நேற்றிரவு இருவரும் வெளியே சென்று மது அருந்திவிட்டு நள்ளிரவில் ஆர்.கே.சாலை வழியாக வந்துள்ளனர்.
கார் அதிவேகமாக வந்ததில் சாலைத்தடுப்பில் மோதி எதிர் புறச்சாலையில் கவிழ்ந்தது. காருக்குள் இருவரும் சிக்கிக்கொண்டனர். எதிரே எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. லேசான காயங்களுடன் இருந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் போக்குவரத்து புலானாய்வு போலீஸார் விபத்தில் சிக்கிய கார்த்திக் நாராயணன், சிருஷ்டி இருவரையும் மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். கார்த்திக் நாராயணனுக்கு இடது காலில் காயம் ஏற்பட்டிருந்தது. இருவரும் மது போதையில் இருந்தது உறுதியானது.
இதையடுத்து கார்த்திக் நாராயணன் மீது பிரிவு 279, மோட்டார் வாகனச்சட்டம் 185-ன் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது. காரும் அப்புறப்படுத்தப்பட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கார்த்திக் நாராயணன் ஓட்டுநர் உரிமத்தை 6 மாதம் ரத்து செய்ய போலீஸார் பரிந்துரைத்துள்ளனர்.
மது போதையில் சொகுசு கார் ஓட்டி விபத்தில் சிக்கும் பிரபலங்கள்: அச்சத்தில் பொதுமக்கள்

Published : 09 Oct 2017 16:56 IST

மு. அப்துல் முத்தலீஃப்சென்னை




மது போதையில் கார் ஓட்டி விபத்தில் சிக்கும் விஐபிக்கள், வசதி படைத்தவர்களால் சென்னை பொதுமக்கள் அச்சத்தில் சாலையில் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

சென்னையில் சமீபகாலமாக அதிக சிசி திறன் கொண்ட சொகுசு கார்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. இதனால் நள்ளிரவில் பொதுமக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. போலீஸார் வாகன சோதனையை மேலும் கடுமையாக்கினால் மட்டுமே இதற்கு தீர்வு என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

சென்னை இந்தியாவின் மூன்றாவது பெரிய நகரமாக உள்ளது. தமிழகத்தின் தலைநகர் என்ற முறையில் சென்னையில் பிரபலங்கள், விஐபிக்கள், வசதி படைத்தவர்கள் அதிகம் உள்ளனர். ஒரு காலத்தில் ஆங்கிலப் படங்களில் மட்டுமே நாம் பார்த்த கார்கள் உலகமயமாக்கலுக்குப் பின்னர் சென்னை வீதிகளில் சாதாரணமாக பார்க்க முடிகிறது.

கோடிக்கணக்கான ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான குதிரைத் திறனுள்ள ரோல்ஸ் ராய்ஸ், லம்போகினி,ஜாகுவார்,புகாட்டி,ஹென்னெஸ்சே, வால்வோ, வோல்க்ஸ் வேகன், பி.எம்.டபிள்யூ, பென்ஸ், ஆடி, போன்ற கார்கள் இந்திய சந்தைக்குள் வந்துவிட்டன. சென்னையிலும் இந்த கார்கள் ஓட ஆரம்பித்து விட்டது.

இதே போன்று உலகின் மிகச்சிறந்த மோட்டார்சைக்கிள் கம்பெனிகளின் இரு சக்கர வாகனங்களும் இந்திய சந்தைக்குள் வந்துவிட்டன. சென்னையிலும் விற்பனைக்கு வந்துவிட்டது. 200 சிசிக்கு மேள் என்ஜின் சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள்களும் அதிக எண்ணிக்கையில் சென்னையில் ஓடுகிறது.

சென்னையின் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையின் மக்கள் தொகைக்கு இணையாக வாகன பெருக்கமும் பெருகி வருகிறது. சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை, 50 லட்சத்தை நெருங்கி விட்டது. தமிழகத்தில் விற்பனையாகும் மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில், 22 - 25 சதவீதம் சென்னையில் பதிவாவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

2015-ல் சென்னையில், மொத்த வாகனங்களின் எண்ணிக்கை, 44 லட்சம். அதில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் 34.5 லட்சம். 2016-ல் நிலவரப்படி, சென்னையில் மேலும் 3 லட்சம் புதிய வாகனங்கள் விற்பனையாகி, மொத்த வாகனங்களின் பதிவு, 47 இந்த ஆண்டு முடியும் போது இது 50 லட்சத்தை தாண்டும் என தெரிகிறது.

ஆனால் சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து வாகன எண்ணிக்கைக்கு ஏற்ற அளவிற்கு போக்குவரத்து காவலர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. சென்னையில் இன்றும் போக்குவரத்து காவல் துறைக்கு 2000-க்கும் மேற்பட்ட போலீஸார் பற்றாக்குறை உள்ளது. இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.

மறுபுறம் சென்னையில் அதிகரித்துள்ள பப்கள் எனப்படும் இரவு நேர மதுவிருந்து பார்ட்டிகள் போக்குவரத்து போலீஸாருக்கு பெரிய தலைவலியையும், வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும் கொடுக்கிறது. இது போன்ற பார்ட்டிகளில் கலந்துகொண்டு தங்களது அதிவேக சொகுசு காரில் போதை தரும் தைரியத்தில் வாகனம் ஓட்டும் இளைஞர்கள், பெரிய மனிதர்கள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.

இவ்வாறு நடந்த பல விபத்துகளை உதாரணமாக சொல்லலாம். மிகப்பெரும் செல்வந்தர் மகன் ஷாஜி என்பவர் தனது சொகுசு காரில் தறிகெட்டு வந்து மோதியதில் எழும்பூர் அருகே தன் பாட்டியுடன் உறங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுவன் உயிரிழந்தான். ஆடி காரில் தோழிகளுடன் நள்ளிரவு மதுவிருந்து முடிந்து வேகமாக சென்ற ஐஸ்வர்யாவின் கார் மோதி முனுசாமி என்பவர் உயிரிழந்தார். தப்பி ஓடிய ஐஸ்வர்யா மடக்கி பிடிக்கப்பட்டார்.

பிரபல நடிகரின் மகள் நள்ளிரவு விருந்து முடிந்து வீடு திரும்பும் போது ஆட்டோ மீது மோதியதில் சமரசம் மூலம் வழக்கை முடித்தனர். கார் பந்தய வீரர் விக்னேஷ் மதுவிருந்து முடிந்து ஆர் கே சாலையில் வேகமாக வந்து மோதியதில் 6 ஆட்டோக்கள் சேதமடைந்தன. ஆறுமுகம் என்ற ஆட்டோ டிரைவர் பலியானார்.

அஷ்வின் என்ற கார் பந்தய வீரரின் அதிவேக கார் கிரீன்வேஸ் சாலையில் மரத்தில் மோதியதில் மனைவியுடன் உயிரிழந்தார். அவர் போதையில் இல்லாவிட்டாலும் வேகம் உயிரைப் பறித்தது. நடிகர் அருண் விஜய் மது போதையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் போலீஸ் வாகனத்தின் மீதே மோதினார். கடந்த வாரம் நடிகர் ஜெய் மது போதையில் அடையாறு பாலத்தில் மோதினார்.

இது தவிர மோட்டார் சைக்கிள் ரேஸ் விட்டு விபத்தில் சிக்கிய இளைஞர்கள் ஏராளம். இவர்களை கண்காணிக்க மடக்கி பிடித்து சோதனை செய்து நடவடிக்கை எடுக்க காவலர் எண்ணிக்கையும் துணிவும் உள்ளதா என்பதே கேள்விக்குறி என்கிறார் ஜெமினி அருகே ஆட்டோ ஓட்டி வரும் தாஜுத்தீன் என்ற ஓட்டுநர்.

அவரது அனுபவத்தை கேட்டபோது ”இரவு நேரத்திலும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நேரத்திலும் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸார் இணைந்து வாகன சோதனை நடத்துகின்றனர். இது எந்த அளவுக்கு இது போன்ற விபத்துகளை தடுக்க உதவுகிறது.

சாதாரண இளைஞர்களை பணி முடித்து வீடு திரும்பும் நபர்களிடம், ஆட்டோ ஓட்டுநர்களிடம் சோதனை கடுமையாக இருக்கிறது. ஜெமினி பாலம் அருகே வாருங்கள் அங்கு இரண்டு நட்சத்திர ஓட்டல்களில் நள்ளிரவு பார்ட்டி முடிந்து வேகமாக பறக்கும் எத்தனை வாகனங்கள் சோதனைக்குள்ளாக்கப்படுகிறது பாருங்கள் என்றார். இவ்வாறு சோதனை நடந்தால் அப்புறம் ஏன் சொகுசு கார்கள் விபத்து சென்னையில் அதிகரிக்காது” என்று கேட்டார்.

இது பற்றி காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: ”

நீங்கள் சொல்லும் விஷயங்கள் இருந்தன. ஆனால் புதிய மோட்டார் வாகன சட்டம் வந்த பிறகு கடுமையாக நடவடிக்கை எடுக்கிறோம். முன்பெல்லாம் மது அருந்தி வாகனம் ஓட்டுபவரை மருத்துவமனைக்கு அனுப்பி சோதனை நடத்துவோம். அவர்கள் இடையில் தங்கள் செல்வாக்கை காட்டி தப்பிப்பார்கள்.

தற்போது கையடக்க சோதனை கருவி வந்துவிட்டது. ஓட்டுநர் ஊதியவுடன் மது அளவு அவருடைய அனைத்து விபரங்களையும் பதிவு செய்து அது ஆன்லைனில் பதிவாகிவிடும். பின்னர் நாங்களே நினைத்தாலும் மாற்ற முடியாது. சென்னையில் கடந்த ஆண்டு மது அருந்தி வாகனம் ஓட்டி சிக்கியவர்கள் எண்ணிக்கை பத்தாயிரக்கணக்கில் வரும். தற்போது விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. விரைவில் எல்லாம் சரியாகும்” என்று தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களில் இருப்பது போன்று இதுபோன்ற வேகமாக வரும் வாகனங்களை கண்காணிக்கும் போலீஸ் கேமராக்கள் சென்னையில் இல்லாததும் இது போன்ற நபர்களுக்கு வசதியாகி விடுகிறது.

சென்னையில் முறையாக கண்காணிப்பு கேமராக்களை நிறுவி அவைகளை இணைக்கும் நெட்வொர்க் உருவாக்கப்பட வேண்டும் அப்போது தான் சாலை விபத்தை ஏற்படுத்தி தப்பிக்கும் வாகனங்களையும் மதுபோதையில் அதிவேகத்தில் வாகனத்தை இயக்கும் நபர்களையும் பிடிக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


விஷக்குளவிகள் கடித்து முதியவர் உயிரிழப்பு, 4 பேர் காயம்
By பா.சுஜித்குமார் | Published on : 09th October 2017 08:59 PM


புதுச்சேரி: புதுச்சேரி அருகே விஷக்குளவிகள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 4 பேர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

புதுவை அடுத்த பாகூர் மணப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் வயலில் வேலைக்காக சென்றனர். அப்போது டிராக்டரில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு வந்தனர். அருகே இருந்த பனை மரத்தில் இருந்து வந்த விஷக்குளவிகள் திடீரென வந்து அவர்களை கடித்தன. இதில் ராமசாமி (70) என்ற விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த மீதமுள்ள 4 úர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விஷக் குளவிகள் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளிக்கு நகை வாங்கப் போகிறீர்களா?!

By ஹரிணி | Published on : 09th October 2017 04:34 PM | அ+அ அ- |




தீபாவளி வந்து விட்டது...

அட்சய திருதியைக்கு மட்டுமல்ல, இப்போதெல்லாம் எல்லா விதமான விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் போதும் கூட மக்கள் நகைகள் வாங்க விரும்புகின்றனர். தங்கம், வெள்ளி, வைரம், வெள்ளைத்தங்கம், பிளாட்டினம் என சில உலோகங்கள் மட்டும் தான் எப்போதுமே இந்தியர்களான நமது ஏகதேச விருப்பங்களாக இருக்கின்றன. இந்த வகைகளிலும் கூட வைரம் என்பது கோடீஸ்வரர்கள் மற்றும் லட்சாதிபதிகளுக்கானவை என்றும் தங்க மட்டுமே சகலருக்குமானது என்றும் மக்களே தங்களுக்குள் தரம் பிரித்துக் கொண்டு விட்டார்கள். அதனால் தான் தங்கத்தின் விலை மட்டும் குறைவேனா என்கிறது. அதனால் தான் தங்கம் வாங்க தக்க தருணம் என்ற ஒன்றை இனம் பிரித்துப் பார்க்கவே முடியாமல் எல்லா நாளுமே திருநாட்களைப் போல தங்க நகைக்கடைகளில் கூட்டம் கும்மி நெரிகிறது. சரி இந்தத் தீபாவளிக்கு நீங்களும் கூட அந்தக் கூட்டத்தில் ஒருவராக இருக்க நேரலாம்... யாருக்குத் தெரியும்?! யார் எப்போது தங்கம் வாங்கப் போகிறார்கள் என?! முன்னைப்போல இல்லை, இப்போது நினைத்துக் கொண்டால் மக்கள் தங்கம் வாங்கக் கிளம்பி விடுகின்றனர்.

காரணம் தங்கம் எப்போதுமே மிகச் சிறந்த முதலீடு என மக்கள் நினைப்பதால்!

சரி... இந்த தீபாவளிக்கு நகை வாங்கப் போகிறீர்களா? ஆமாம் என்றால்... என்ன டிசைனில் வாங்கப் போகிறீர்கள்? அட அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாதா? அடடா என்ன சார் நீங்கள்? அதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டாமா என்ன?

இதோ பார்த்தீர்களா? நகை வடிவமைப்பில் இந்த டிசைனின் பெயர் ஃபிலிகிரீ நகை டிசைன்...



அதாவது குட்டிக் குட்டியாக தங்க உருண்டைகளை, அல்லது தங்கக் கம்பிகளை நெருக்கமாக இணைத்து நமது விருப்பத்துக்குத் தகுந்த மாதிரியான டிசைன்களை உருவாக்குவதை ஃபிலிகிரீ டிசைன் என்கிறார்கள். இம்மாதிரியான நகை டிசைன்களை உருவாக்குவதற்கு மிகுந்த பொறுமையும், கவனமும் தேவை. வரலாற்றில் இம்மாதிரியான டிசைன்களை விரும்புகிறவர்கள் என எகிப்தியர்கள், இத்தாலியர்கள், மற்றும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். இந்தியாவிலும் வரலாற்றுக் காலத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் ஃபிலிகிரி வேலைப்பாடுகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன.

சாம்பிளுக்குச் சில ஃபிலிகிரீ நகை டிசைன்களைப் பாருங்கள்...

இது ஃபிலிகிரீ நெக்லஸ்...



இது ஃபிலிகிரீ காது தொங்கல் (தொங்கட்டான்)



நகை வாங்கச் செல்பவர்களில் எத்தனை பேருக்குத் தாம் வாங்கப் போகும் நகைகள் இன்னின்ன விதமான டிசைன்களில் எல்லாம் கிடைக்கும் என்ற பொது அறிவு இருக்குமெனத் தெரியவில்லை. இதெல்லாமும் கூட ஒரு விதமான ஆர்வம் தானே?!. இந்த ஆர்வம் இருந்தால் தானே, நாம் வாங்கும் நகைகளுக்காக நாம் செலவிடக்கூடிய தொகை சரியானதா? இல்லையா? என்ற தெளிவு கிடைக்கக் கூடும்.

இந்தியாவில் கிடைக்கக் கூடிய பொதுவான சில ஆபரண டிசைன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்;

ஆராய்ந்து கொள்வதே நட்பு

By இரா. இராஜாராம் | Published on : 09th October 2017 03:00 AM


நட்பு என்பது நாடு, இனம், மொழி, மதம், வசதி, வாய்ப்புகள் என எல்லாம் கடந்த ஓர் உன்னத உறவாகும். சிறுவயதிலேயே நண்பர்களாய் ஆனவர் இறுதிக்காலம் வரை நண்பர்களாய்த் தொடர்வதும் உண்டு, பள்ளிப்பருவத்தோடு முடிந்து விடும் நட்பும் உண்டு. பணிபுரிகின்ற இடத்தில் ஏற்படுகின்ற நட்பு வாழ் நாளெல்லாம் விரிவதும் உண்டு. 

நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்போர் அந்தக் காலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகின்றனர். எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, மனம்விட்டுப் பேசி நல்ல ஆலோசனைகளை வழங்கி, உற்சாகப்படுத்தி, தக்கசமயத்தில் உதவிகள் புரிந்து வளரும் நட்பானது ஆழ்ந்த நட்பாகப் பரிணமிக்கின்றது. 

கிருஷ்ணரும், குசேலரும் பால்ய நண்பர்கள். பின்னாளில் கிருஷ்ணர் செல்வச் செழிப்பிலும், குசேலர் வறுமையிலும் இருக்கின்ற நிலையில் கிருஷ்ணரைக் காணக் குசேலர், வீட்டிலிருந்த அவலை எடுத்துக்கொண்டு கிருஷ்ணரின் அரண்மனை வாயிலில் தயக்கத்தோடு வந்து நிற்கிறார்.

அவரது வருகையை அறிந்த கிருஷ்ணர் ஓடோடி வந்து குசேலரை வரவேற்று ஆரத்தழுவி அன்பைப் பரிமாறிக் கொண்டதும், பின்பு குசேலர் தான் கொண்டு சென்ற அவலைத் தயங்கிய படியே கிருஷ்ணருக்கு வழங்கியதும் அவர் அதை ருசித்துச் சாப்பிட்டதும் பின்னர் குசேலரின் வறுமைநிலை அகன்றதும் நாம் அனைவரும் அறிந்த நிகழ்ச்சியாகும். 

அதே போல் இராமாயணத்தில் ராமன் அனுமனுடன் கொண்ட நட்பு மிக உன்னதமானதாகும்.

எத்தனையோ நூல்களில் நட்பைப்பற்றி ஆங்காங்கு குறிப்பிடப்பட்டிருந்தாலும் திருக்குறளே நட்புக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து நட்பு, நட்பாராய்தல், கூடாநட்பு, தீ நட்பு என்று விரிவாக நட்பின் தன்மையை அதன் உயர்வை எத்தகைய நட்பு வேண்டும், எந்த நட்பு கூடாது என ஆய்ந்தறிந்து உணர்த்தியுள்ளது. 

நட்பைப்போல ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை என்று குறள் காட்டுகின்றது.

நல்ல நட்பின் மூலம் தங்கள் நிலையில் உயர்ந்தோரும், தீ நட்பின் மூலம் தங்கள் நிலையில் தாழ்ந்தோரும் பலர் உண்டு. சிறுவயதிலேயே கூடா நட்பின் காரணமாக எத்தனையோ தவறான பழக்கங்களுக்கு ஆளாகிப் பின்னாளில் வருந்தியவர் பலர் உண்டு. 

போலி நண்பர்களால் ஏமாற்றமடைந்தவர்களும் உண்டு. நல்லவர்களோடு கொண்ட நட்பானது வளர்பிறை போல நாளுக்கு நாள் வளரக்கூடியது. "உன் நண்பனைச் சொல் நீ எப்படிப்பட்டவன் என்று சொல்கிறேன்' என்பர் அறிஞர்.
இளம் வயதில் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நட்பு ஏற்பட பெற்றோர் துணை புரிய வேண்டும். வெளியூரில் விடுதியில் தங்கிப்படிக்கும் பிள்ளைகள், பணியாற்றும் பிள்ளைகள் எத்தகைய நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதை அறிந்து, நல்லோர் நட்பெனின் தொடரவும், தீயோர் நட்பெனின் அதனைத் தவிர்க்கவும் அறிவுறுத்த வேண்டியது பெற்றோரின் கடமையாகும். இளம் பருவத்தில் தோன்றும் ஆண் பெண் நட்பென்பது காதலாகித் திருமணத்தில் முடிவதும் உண்டு. கண்ணீரில் கரைவதும் உண்டு.
நட்பும், காதலும் மனம் சார்ந்தது. அதுவே ஆண் பெண் நட்பில் இனக்கவர்ச்சியால் உடல்பற்றாகி விடுகிறது. 

இனக்கவர்ச்சியால் ஒருவர் மற்றவரின் விருப்பமின்றி வைத்திடும் உடல் பற்றே ஒருதலைக் காதல் என்று தற்போது சொல்லப்படுகிறது. விருப்பமின்மையை உணர்ந்த பின்பும் விரும்பாதவரை அடைய நினைப்பது அரக்கத்தனமான செயலாகவே கருதப்படும்.

நட்பென்பது ஏதோசிரித்துப்பேசி, கேளிக்கையில் ஈடுபடுவதன்று. நண்பன் தவறு செய்யும்போது அதனைச் சுட்டிக்காட்டித் தவிர்த்திடச் செய்பவனே சிறந்த நண்பனாவான். 

நான் ஆசிரியராகப் பணியாற்றிய ஊரில் எனக்கு நண்பரான ஒருவர் அன்பானவர், பண்பானவர். இஸ்லாமிய ஆச்சாரங்களைச் சரியாகக் கடைப்பிடிக்கக் கூடியவர். அவருடன் எனக்கு ஆத்மார்த்தமான நட்பு ஏற்பட்டது.
தினமும் அவரைச் சந்தித்துப் பேசாமல் என்னால் இருக்க முடியாது. அவராலும் இருக்க முடியாது. குடும்பச் சூழ்நிலை காரணமாக நான் மாறுதல் பெற்று வேறு ஊருக்குச் செல்ல நேரிட்டது. 

தொலைத்தொடர்பு வசதி அவ்வளவாக இல்லாத அந்தக் காலகட்டத்தில் வாரம் ஒரு கடிதமாவது ஒருவருக்கொருவர் அனுப்பிக் கொண்டே இருப்போம். 

அவ்வப்போது நேரில் சந்தித்தும் நட்பைப் பகிர்ந்து கொள்வோம். எங்கள் நட்பில் ஜாதி, மதம், எந்தத் தருணத்திலும் குறுக்கிட்டதே இல்லை.
ஒருவருக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதைவிட பண்பில் சிறந்த நண்பன் ஒருவன் உள்ளான் என்பதே பெருமைப்படத்தக்கதாகும்.
நட்பில் ஒருவர் தன் நண்பனைவிடத் தான் உயர்ந்தவன் என்று மனத்தில் நினைத்தாலே அங்கு நட்பு போய் விடும். நல்ல நண்பன் கிட்டவில்லை எனில் தனித்திருப்பது மேல் என்கிறார் புத்தர். 

நம்மால் செய்து முடிக்கக்கூடிய கடமைகளையும், செயல்களையும் செய்ய விடாமல் வீண் பொழுது போக்க வைப்போரது நட்பை நீக்கி விடவேண்டும் என்று கூறுகின்ற வள்ளுவர் பல வகையாலும் ஒருவரைப் பற்றி ஆராய்ந்து தெளிந்தபின் கொள்ளாத நட்பானது இறுதியில் தான் சாவதற்குக் காரணமான பெருந்துயரத்தைத் தந்துவிடும் என்கிறார். 

நாம் அணியும் உடைக்கு எவ்வளவோ முக்கியத்துவம் கொடுத்துத் தேர்ந்தெடுத்து அணிந்து அழகு பார்க்கிறோம். நாம் கட்டும் வீட்டை நம்மால் இயன்ற அளவு அழகுற திட்டமிட்டு அமைக்கிறோம். 

சாதாரணமானது என நினைக்கும் தலை முடியைக்கூட அழுகுபடுத்தப் படாதபாடு படுகிறோம். இன்னும் எத்தனையோ சாதாரண விஷயங்களுக்குக்கூட எவ்வளவோ முக்கியத்துவம் தரும் நாம் நம் நண்பனைத் தெரிவு செய்வதில் அவசரமோ, அலட்சியமோ காட்டிடலாமா?
நல்ல பண்புடையவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்வதே அறிவார்ந்த
செயலாகும்.

மனப்பக்குவம் தேவை
By வாதூலன் | Published on : 10th October 2017 01:08 AM

இன்றைய வேகமான கணினிமயமான உலகில் விவாகரத்துகள் அதிகமாக நிகழ்வது கண்கூடு. வலைதளம் மூலம் பெண்ணையோ, பிள்ளையையோ பார்த்து, செல்லிடப்பேசி வழியாகத் தொடர்பு கொண்டு திருமணம் செய்து வைக்கிறார்கள். 

பின் திருமணமானவர்கள் ஓரிரு வருடத்துக்குள்ளேயே பிரிந்து விடுகிறார்கள். சகிப்புத் தன்மை இல்லாததும் தீவிர தன்முனைப்பும்தான் இதற்கான காரணங்கள் என்று மன மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், இளம் தம்பதியாக இல்லாமல் பல வருடங்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, குடித்தனம் நடத்திவிட்டு, பிறகு ஓய்வுக் காலத்தில் வாழும், தம்பதிகளுக்கிடையேயும் இதுபோன்ற மனக்கசப்பு எழுகிறதே, ஏன்? இயலாமையையும் ஒருவித தன்னிரக்க உணர்வையுமே முதலாவதாகச் சொல்லலாம். 

ஆபீஸ், வேலை, இடமாற்றம், பதவி உயர்வு எனப் பல வகைகளில், ஆண் இயங்குகிறான் என்றால், சமையல் வேலை, குழந்தைகளின் கல்வி போன்ற பல பிரிவுகளில் அக்கறை காண்பித்துப் பெண் சுறுசுறுப்பாக இருக்கிறாள்.
இதனால் ஓய்வு பெற்றதும் கணவன் - மனைவி இருவருக்குமே ஒருவித சூன்ய உணர்வு தோன்றுகிறது.

இன்னொன்று, அறுபது வயதுக்கு மேல் முதுமை சார்ந்த நோய்கள், சர்க்கரைக் கட்டியை எறும்புகள் சூழ்வதுபோல, இயல்பாகத் தாக்குகின்றன. எலும்புத் தேய்மானம், அஜீரணக் கோளாறு, காது கேளாத தன்மை, தள்ளாடும் நடை போன்றவை ஆண் - பெண் இருபாலரையுமே தாக்குகின்றன. அத்தகைய சமயங்களில் இயல்பான சில விமரிசனங்கள்கூட பூதாகரமாய் படுகின்றன.
'அவள் எப்போதுமே ரொம்ப ஸ்லோ' என்ற கணவரின் கருத்து. 'அவருக்கு ஆபீஸைத் தவிர வேறெதுவுமே தெரியாது' என்ற மனைவியின் கூற்று - இவைகூடக் குத்தலாகப் படுகின்றன. சில தருணங்களில் சுய பச்சாதாபத்தின் எல்லையில் கொண்டு தள்ளுகின்றன.

ஓர் அசலான நிகழ்வு, சில மாதங்களுக்கு முன் ஒரு நண்பரின் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அவர்களுக்கு ஒரே பெண். திருமணமாகி வடக்கே இருக்கிறாள். கலகலப்பான குடும்பம். நாங்கள் போனபோது நண்பர் புன்னகையுடன் வரவேற்கவில்லை. 

அவர் மனைவியுடன் பேச முற்பட்டபோதுகூட இயல்பான பிரதிபலிப்பு இல்லை. இயந்திரம் போல் கொண்டு வரப்பட்ட குளிர்பானத்தை அருந்திவிட்டுக் கிளம்பினோம்.

பின்னர்தான் காரணம் தெரிந்தது. நண்பர் மாதாந்திரக் கணக்கைப் பார்த்து யதார்த்தமாக 'போன மாதம் மெடிகல் பில் அதிகமாகிவிட்டது' என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இது மனைவியை மிகவும் உறுத்திவிட்டது (ஏனெனில், அப்போது அவளுக்காகச் செய்த மருத்துவச் சோதனைகள் பல).
இத்தனைக்கும் நண்பருக்கு ஓய்வூதியம் வருகிறது. குறிப்பிட்ட வரம்பு வரைக் காப்பீடு செய்திருக்கிறார். பின்னர் சில நாட்களில் பெண்ணிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததும், சகஜமான நிலை திரும்பி விட்டதாம்.
இங்கே ஓர் அம்சத்தை அவசியம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இது ஒரு வார ஏட்டில் வெளியான செய்தி. மாதம் ரூ.30,000 ஓய்வூதியம் பெறுகிற ஒரு முதியவர் தன் எதிர்கால நிதித் திட்டமிடலுக்கு யோசனை கேட்டிருக்கிறார்.
காதல் கல்யாணம் செய்து வெளிநாட்டில் இருக்கிற பெண்களிடம் உதவி எதையும் அவர் எதிர்பார்ப்பதில்லையாம். 

நிதி மேலாளர் பணம் எதிர்பார்க்காவிட்டாலும், சீரான உறவு இருப்பதே பெரும் நிம்மதி என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

இது முற்றிலும் உண்மை. தன்னுடைய பெண் வேற்று மதத்தினரைக் காதல் திருமணம் செய்துவிட்டதால், பெற்றோரிடையே மன விரிசல் வந்தது. பேரன் பிறந்ததும் தந்தை பெண்ணிடம் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்ததால் அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. 

ஒரு கட்டத்தில் இது முற்றிப்போய், மனைவியின் இகழ்ச்சியைப் பொறுக்க முடியாது, 65 வயது கணவர் தற்கொலையே செய்து கொண்டுவிட்டார். சில வருடங்கள் முன் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இன்றைய நாளில் வாரிசுகள் திருமணத்தில் சாதி வேறுபாடுகள், பெரும் அந்தஸ்து வித்தியாசம் - எது வேண்டுமானாலும் நிகழ நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. 

அதுபோல் வாழ்வில் ஏதாவது நேர்ந்து விட்டால் நாம் மனம் ஒடிந்து போகாமலிருக்க வேண்டும். அந்தஸ்துள்ள பெண்ணைக் கல்யானம் செய்து கொண்டதாலேயே தாயாரை ஓய்வு இல்லத்தில் தள்ளிவிட்ட ஒரு பிள்ளையை எனக்குத் தெரியும்.

பழைய காலத்தில் இதுபோன்று நடந்ததில்லையே என்ற நியாயமான கேள்வி எழுகிறது. அந்த நாளில் சராசரி வயதே ஐம்பதுதான். மேலும் எதிர்பாராத அசம்பாவிதம் எது நேர்ந்தாலும் இறைவன் செயல் என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது இருந்தது. 

இன்று ஊடகத் தகவல்கள், ஒப்பீடு மனப்பான்மை, செவி வழிச் செய்தி - எல்லாமாகச் சேர்ந்து முதியோரைக் கலக்கத்தில் ஆழ்த்துகின்றன.
அறுபதில் மணமுறிவு ஏற்படுவது மனம் பக்குவம் இல்லாமையாலேயே என்று உணர்ந்து கொள்ள வேண்டும். விரும்புகிறோமோ இல்லையோ - மருத்துவ முன்னேற்றத்தால் வாழ்வு நீடித்துக் கொண்டே போகிறது.
வயதானவர்கள் இலவச சேவை, இசை, கோயில் என்று ஏதாவதொன்றில் தங்களை வலிய ஈடுபடுத்திக்கொண்டு, மன அமைதி பெறுதலே தங்களை.
துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் 11 கிலோ தங்கத்தை விழுங்கி கடத்திய 46 பேர் சிக்கினர்
2017-10-10@ 00:55:05




அவனியாபுரம்: துபாயிலிருந்து நேற்று முன்தினம் இரவு 91 பயணிகள் தனியார் விமானத்தில் மதுரை வந்தனர். இதில் 46 பேர் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானத்தில் வந்திறங்கிய அனைத்து பயணிகளும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஸ்கேன் சோதனையில் 29 பேர் தங்கக்கட்டிகளை விழுங்கி, வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. தங்கத்தை சிறு பாலித்தீன் கவரில் பேக்கிங்குகளாக போட்டு விழுங்கியது தெரிந்தது. மற்ற 17 பேரும் தங்கத்தை தகடாக்கி, அதனை பெட்டி, கைப்பையில் யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நூதனமாக மறைத்து வைத்துக்கொண்டு வந்திருந்தனர். விழுங்கி கடத்தி வந்த 29 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் எனிமா தரப்பட்டு தங்கம் வெளியேற்றப்பட்டது.

கடத்தி வந்தவர்களிடம் நேற்று மாலை வரை விசாரணை நடந்தது. அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இதுவரை தங்கக்கட்டிகளை விழுங்கி கடத்திய ஒரு சிலரே சிக்கினர். ஆனால், ஒரே விமானத்தில் 46 பேர், 11 கிலோ தங்கத்தை கடத்தி வந்திருப்பது இதுவே முதல்முறை. இதன் மதிப்பு ₹3 கோடி. கடத்தலில் பெண்களும் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சிக்கியவர்களில் பலர் அடிக்கடி விமான பயணம் மேற்கண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. தங்கம் சிக்கினால் அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். இந்த 46 பேரிடமும், கடத்தலுக்காக இந்த தங்கத்தை கொடுத்தது யார்? யாருக்காக கடத்தப்பட்டது என்பது உள்ளிட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்,’’ என்றார்.
புறநகர் ரயிலில் ஆயுத பூஜை கொண்டாட்டம் வீச்சரிவாளுடன் பட்டாசு வெடித்து கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்: பயணிகள் அலறியடித்து ஓட்டம்; சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

2017-10-10@ 01:10:06




சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து அக்.7ம் தேதி பகல் 2.20 மணிக்கு திருத்தணி நோக்கிச் சென்ற புறநகர் மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் ஆயுதபூஜை கொண்டாடி உள்ளனர். அப்போது உருட்டுக்கட்டை, கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களுடன் மாணவர்கள் பயணித்துள்ளனர். பெட்டியில் இருந்த பயணிகளை விலகி நிற்கச் சொல்லி மிரட்டியுள்ளனர். மேலும், படியில் வரிசையாக நின்று கொண்டு வழியில் உள்ள ரயில்நிலையங்களில் ரயிலுக்காக நிற்கும் பயணிகளை மிரட்டும் வகையில் ஆயுதங்களை பிளாட்பாரத்தில் தேயித்தப்படியும், அவர்களை ஆபாசமாகவும் திட்டி கொண்டும் சென்றனர். அதனால் பயந்து போன பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். நெமிலிச்சேரி ரயில்நிலையத்தில் அந்த ரயில் வந்துநின்ற போது, 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணிகளை வீச்சரிவாள் காட்டி மிரட்டி விரட்டியதுடன், பிளாட்பாரத்தில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். பொதுவாக எல்லா ரயிலில் நிலையத்திலும் ரயில் 40 நொடிகள் வரை நின்று பயணிகளை இறங்கி விட்டு செல்வார்கள். ஆனால், மாணவர்களின் கொண்டாட்டத்துக்காக இந்த மின்சார ரயில் மட்டும் 2 நிமிடங்களுக்கு மேல் நின்று சென்று உள்ளது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கலைக்கல்லூரி மாணவர்கள் இப்படி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்சிகள் அடங்கிய வீடியோ நேற்று வாட்ஸ் ஆப், முகநூல் ஆகியவற்றில் வைரலாக பரவியது. மாணவர்களின் வெறியாட்ட காட்சிகளை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ரயில்வே காவல்துறையினருக்கும் நேற்று முன்தினம் சில பயணிகள் புகார் அனுப்பியுள்ளனர். ேநற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால் நேற்று காலை ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். மேலும், சென்னை சென்ட்ரல், இந்துக்கல்லூரி, ஆவடி, திருநின்றவூர், நெமிலிச்சேரி ரயில் நிலையங்களில் நேற்று மாலை வரை ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகப்படும் 10 மாணவர்களை பிடித்து விசாரித்தனர். இதில், திருநின்றவூர் பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (19), திருவள்ளூரை சேர்ந்த விக்னேஷ் மற்றும் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் மாநில கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்துக்கல்லூரி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தபோது, பிடிப்பட்ட சிலர் இன்றும் கத்தியுடன் வந்திருந்தனர். அவர்களிடம் இருந்து கத்திகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அவர்கள் தங்களுக்கு சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியதுடன் சம்பவத்தில் எந்தக் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டார்கள் என்ற விவரங்களையும் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து பிடிப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து விசாரித்து வருகின்றனர். மேலும், ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் ரயில்நிலையங்களில், ரயில்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து திருச்சி ரயில்வே காவல் மண்டல எஸ்பியும், சென்னை ரயில்வே காவல் மண்டல தற்காலிக பொறுப்பு எஸ்பியுமான ஆனி விஜயா கூறுகையில், ‘இந்தச் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்.

மேலும் சம்பவம் மின்சார ரயில்களில் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினர் தலா 4 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சம்பவம் நடைபெற்ற சென்ட்ரலில் இருந்து பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு திருத்தணிக்கு செல்லும் ரயிலிலும், திருத்தணியில் இருந்து புறப்பட்டு சென்ட்ரலுக்கு காலை 8.10 மணிக்கு வரும் ரயிலிலும் அதிகளவில் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். அதனால் அந்த ரயிலில் கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். சந்தேகத்தின் பேரில் சில மாணவர்களை பிடித்து விசாரித்து வருகிறோம். சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம்’ என்றார்.

கல்லூரி மாணவர்கள் மோதல் 

பஸ் கண்ணாடி உடைப்பு: ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி 27 எச் மாநகர பேருந்து நேற்று காலை 11 மணியளவில் புறப்பட்டது. பஸ் நுங்கம்பாக்கம் வழியாக அண்ணாநகருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அண்ணாநகர் பஸ் டிப்போவில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சுமார் 25க்கும் மேற்பட்டோர் ஏறினர். அதேபோல மற்றொரு பஸ் நிறுத்ததில் லயோலா கல்லூரி மாணவர்களும் ஏறினர். பேருந்து நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே வரும் போது ஒரு தரப்பு மாணவர்கள் பேருந்தில் பாட்டு பாடி ஆட்டம் போட்டுக் கொண்டு வந்தனர். இதனால் மற்றொரு தரப்பு மாணவர்கள் இதை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து லயோலா கல்லூரி சுரங்கபாதை அருகே வந்தபோது இரு தரப்பு மாணவர்களும் பேருந்திலேயே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்து கொண்டனர். இதை பஸ் கண்டக்டர் இரு தரப்பை சேர்ந்த மாணவர்களையும் கண்டித்தார். மேலும் பயணிகளின் அலறால் சத்தத்தால் பேருந்து ஓட்டுனர் சாலையிலேயே பேருந்தை நிறுத்தினார். உடனே பேருந்தில் இருந்து இறங்கிய மாணவர்கள் திடீரென சாலையில் இருந்த கற்களை எடுத்து பேருந்தின் பின்புற கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதில் கண்ணாடி உடைத்து பயணிகள் மீது சிதறியது. இதனால், அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடினர். இதையடுத்து மாநகர பேருந்து நடத்துனர் பாலசுப்பிரமணியன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...