Sunday, October 15, 2017


கோபி சாந்தா டு ‘ஆச்சி’ மனோரமா... புகழும் அதன் பின்னிருக்கும் வேதனையும்! #AachiManorama

vikatan

கு.ஆனந்தராஜ்

Chennai:

தன் எதார்த்த நடிப்பால் தமிழ் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் 55 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்தவர் மனோரமா. நடிப்பையே உயிர்மூச்சாகக் கருதி, மரணம் அருகில் வரும் வரை தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தவர். காமெடி, குணசித்திரம் என ஐந்து தலைமுறையாக வெற்றிக்கொடி நாட்டிய இந்த ஆச்சியின் சொந்த வாழ்க்கை, சோகங்களும் வலிகளும் நிறைந்தவை. அதைக் கண்கூடப் பார்த்தவரும் ஆச்சியின் உடன்பிறவா அண்ணனுமாகிய வீரய்யா, தங்கையைப் பற்றிய நினைவுகளை மனம் திறந்து பகிர்கிறார்.



* 'கோபி சாந்தா' என்ற இயற்பெயரை, திருச்சி நாடகக் கம்பெனியில் ஆர்மோனியக் கலைஞராக இருந்த தியாகராஜர், 'மனோரமா' என மாற்றினார். அதுக்குப் பிறகு அவர் நிறைய புகழ்பெற்றாங்க.



* 1957-ம் வருஷம், கவிஞர் கண்ணதாசன் திருச்சிக்குப் போனபோது, மனோரமாவின் நாடகத்தைப் பார்த்தார். 'சிறப்பான வார்த்தை உச்சரிப்பும் நடிப்புத் திறமையும் உன்னிடம் இருக்கு. மெட்ராஸ் வந்தால் என்னை வந்து பாரு. சினிமாவில் வாய்ப்பு வாங்கித்தர்றேன்'னு சொன்னார். இந்நிலையில், தன் நாடக கம்பெனியில் மனோரமாவை நடிக்கவைக்க நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சென்னைக்கு அழைச்சுட்டு வந்தார். அப்புறம், 'மாலையிட்ட மங்கை' படத்துக்காக, தயாரிப்பாளர் கண்ணதாசன் நடிகையாக அறிமுகம் செய்தார். தொடர்ந்து சினிமா, நாடகம் என மாறி மாறி நடிச்சாங்க.



* 'மாலையிட்ட மங்கை' படத்தின் நாயகனாக டி.ஆர்.மகாலிங்கம், நாயகிகளாக பண்டரிபாய் மற்றும் மைனாவதி ஒப்பந்தம் செய்யப்பட்டாங்க. அதனால், 'உனக்கு நகைச்சுவை வேடம். உனக்கு ஜோடி, 'காக்கா' ராதாகிருஷ்ணன்' என கண்ணதாசன் சொன்னார். 'நகைச்சுவை வேடம் வேண்டாம். கதாநாயாகியாகவே நடிப்பேன்' என்றார் மனோரமா. அவங்களை சமாதனம் செய்தே அதில் நடிக்கவெச்சார் கண்ணதாசன். டி.ஆர்.மகாலிங்கத்துக்கு காபி கொடுத்து பேசுவதுதான் மனோரமாவின் முதல் காட்சி. நீளமான வசனம். பலமுறை சொல்லிக்கொடுத்தும் மனோரமாவால் சரியாகப் பேச முடியலை. இதனால், 'மனோரமாவைப் படத்திலிருந்து நீக்கிடலாம்'னு டைரக்டர் சொன்னார். 'பயிற்சி கொடுத்தா நல்லாப் பேசுவாங்க'னு நான் சொன்னேன். மனோரமாவின் வீட்டுக்கே போய் பயிற்சி கொடுத்தேன். மறுநாள் ஒரே டேக்ல சிறப்பா நடிச்சு கைத்தட்டல் வாங்கினாங்க.



* 'நான் ஆசைப்பட்ட மாதிரி கதாநாயகியா நடிச்சிருந்தால் பத்து வருஷத்தில் ஃபீல்ட் அவுட்டாகியிருப்பேன். காமெடி நடிகையா நடிச்சதால்தான் 1,500 படங்களுக்கும் மேலாக, அஞ்சு தலைமுறையா நடிச்சுட்டிருக்கேன். என் வளர்ச்சியில் உங்க பங்கு மகத்தானது' என என்னிடம் கண்ணீர்விட்டு பேசுவார். 'உன்னை மாதிரி பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியிருக்கேன். அதில் நீதான் பெரிய நட்சத்திரமா வந்த; அதுக்கு முழுக் காரணம், உன் உழைப்பும் திறமையும்தான்'னு நானும் சொல்வேன்.



* கால்ஷீட்டே கொடுக்க முடியாத அளவுக்கு சினிமாவில் பிஸியா நடிச்சுட்டிருந்தாலும் நாடகத்தில் நடிக்கிறதை வழக்கமா வெச்சிருந்தார். தினமும் அவங்க அம்மா காலைத் தொட்டு வணங்கிட்டுதான் ஷூட்டிங் கிளம்புவார். காலையில் ஏழு மணிக்குக் கிளம்பினால், ஷூட்டிங் முடிச்சுட்டு வீடு திரும்ப நடுராத்திரியாகிடும்.



* மன்னார்குடியில் பிறந்து, நான்கு வயசிலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க மனோரமா. மன்னார்குடி நாடக கம்பெனியில் நடிச்சுட்டிருக்கும்போது, சக நடிகரான ராமநாதனை காதலிச்சாங்க. அம்மாவின் எதிர்ப்பை மீறி அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. மகன் பூபதி பிறந்த கொஞ்ச நாளில் மனோரமாவைப் பிரிஞ்சு ராமநாதன் இன்னொரு கல்யாணம் செய்துக்கிட்டார். அம்மா, மகன் மட்டும்தான் மனோரமாவின் துணை. ராமநாதன் இறந்தச் சமயத்தில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு என்னை அனுப்பி, அவங்க குடும்பச் செலவுக்கு 25,000 ரூபாய் பணத்தைக் கொடுத்தார். 'உன்னைத் தவிக்கவிட்டுப்போனவரின் இறப்புக்குப் போகக் கூடாது'னு அவங்க அம்மா சொல்லியும், கணவரின் உடலுக்கு நேரில் போய் அஞ்சலி செலுத்தினாங்க மனோரமா.



* வறுமையோடு சென்னைக்கு வந்தாலும், தன் திறமையால் ஆயிரக்கணக்கான படங்களில் நடிச்சு கோடிக்கணக்கான சொத்துகளைச் சம்பாதிச்சாங்க. ஆனால், நல்லத் தூக்கம் இல்லாம, சரியா சாப்பிடாம, எந்த உறவுகளின் அரவணைப்பும் இல்லாம, நிறைய நம்பிக்கை துரோகங்களைச் சந்திச்சாங்க. புகழ் மற்றும் வசதிகளுக்கு இடையே ஆச்சி சந்திச்ச சவால்கள் ரொம்ப அதிகம். தன் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளால் அடிக்கடி என்னைச் சந்திச்சு மனம்விட்டுப் பேசி அழுவாங்க. மூட்டுவலியால் ரொம்பவே வேதனைப்பட்டாங்க. ஆனாலும், எதையுமே காட்டிக்காமல், சினிமாவில் நடிச்சு மக்களை மகிழ்விச்சாங்க.



* நடிகர் சிவாஜி கணேசனும் மனோரமாவும் அண்ணன் தங்கையாகவே வாழ்ந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தன் வீட்டிலிருந்து சாப்பாட்டைக் கொண்டுவந்து, ஷூட்டிங்கில் சிவாஜிக்கு தன் கைப்பட பரிமாறுவாங்க மனோரமா. சிவாஜி மறைந்த பிறகும் அவர் குடும்பத்தின் உறுப்பினராகவே இருந்துவந்தாங்க.



* ஒருநாளில் எத்தனை படங்களில் நடிச்சாலும், கொடுத்த கால்ஷீட்படி சரியா முடிச்சு கொடுத்துடுவாங்க. சினிமாவில் சில டேக் வாங்குவாங்க. ஆனா, மேடை நாடகங்களில் எத்தனை பக்க டயலாக்கா இருந்தாலும் சுலபமா நடிச்சுடுவாங்க.

* தமிழ் மட்டுமே தெரிஞ்சிருந்தாலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிப் படங்களிலும் நடிச்சுப் புகழ்பெற்றாங்க. 'சின்ன கவுண்டர்', 'சின்ன தம்பி' படங்கள் ஆச்சிக்கு ரொம்பப் பிடிக்கும்.



* ஒரு பிரச்னையின் காரணமாக நடிகர் நாகேஷ், தன் மனைவியுடன் சிறிது காலம் மனோரமாவின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, ஏற்பட்ட ஒரு பிரச்னை ஆச்சியை ரொம்பவே கஷ்டப்படுத்துச்சு. அந்த நிகழ்வுக்குப் பிறகு, 'நாகேஷ் அண்ணன் எங்கிட்ட பேசவே மாட்டேங்கிறார். எனக்கு நரக வேதனையா இருக்கு'னு சொல்லி பல வருஷங்களா புலம்பினாங்க.



* தன்னுடன் நடித்த நடிகர்களைப் பற்றி எங்கேயும் எந்தக் குறையும் சொல்ல மாட்டார் மனோரமா. கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக், 'கோவை' சரளா போன்ற சக நகைச்சுவை கலைஞர்களை எப்பவுமே உயர்வாகப் பேசி, பாராட்டிட்டே இருப்பாங்க. பிற்காலத்தில் ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித்குமார் என தன் மகன்களாக நடித்த எல்லா நடிகர்களிடமும் சொந்த அம்மா மாதிரி பாசம் காட்டிப் பழகினாங்க.



* 'சில வருஷங்களாகவே தொடர்ந்து பல மூத்த சினிமா கலைஞர்களும் இறந்துட்டிருக்காங்க. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு'னு அடிக்கடி சொல்லிட்டிருந்தாங்க. கே.பாலசந்தர் இறந்தபோது, என்னைப் பார்க்க வந்தாங்க. 'நம்ம ஆளுங்களில் சிலர் மட்டும்தான் அண்ணா உயிரோடு இருக்காங்க. எனக்கும் உடம்பு ரொம்பவே முடியலை. அடுத்து நானாகூட இருக்கலாம்'னு சொன்னாங்க. அதன்படியே சில மாசத்தில் மனோரமா இறந்துட்டாங்க.



* காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, ஒருமுறை மனோரமாவின் ஒரு திரைப்படத்தைப் பார்த்து, அவர் நடிப்பை ரொம்பவே பாராட்டினார். இது தெரிஞ்சதும், காமராஜரைச் சந்திக்க அனுமதி வாங்கச்சொன்னார். அதன்படி, தன் மகனுடன் என்னையும் அழைச்சுட்டுப்போய் காமராஜரைச் சந்திச்சார். 'உங்க நடிப்பு ரொம்பவே சிறப்பா இருக்கு. நீங்க பெரிய கலைஞரா உயர்ந்து, தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கணும்'னு காமராஜர் வாழ்த்தினதும் நெகிழ்ந்துபோயிட்டாங்க.



* கற்பகம் ஸ்டூடியோவில் ஒரு படத்துக்காக நடிச்சுட்டிருந்தாங்க. டிரஸ் மாற்றும் சமயத்தில் அவங்களை பாம்பு கடிச்சுடுச்சு. மயிலாப்பூரில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு மனோரமாவை என் மனைவி சுகுணா அழைச்சுட்டுப்போனாங்க. ரெண்டு நாள் மட்டுமே சிகிச்சை எடுத்துகிட்டு, மீண்டும் ஷூட்டிங்ல கலந்துகிட்டாங்க. இதுபோல, ஊட்டியில் நடந்த ஷூட்டிங்கில் குதிரையிலிருந்து கீழே விழுந்து மயங்கிட்டாங்க. ஒரு வாரம் சிகிச்சை பெற்றவங்க, முழுசா குணமாகும் முன்பே படப்பிடிப்பில் கலந்துகிட்டாங்க. தன் உடலுக்கு எவ்வளவு பிரச்னை இருந்தாலும், தன்னால் படப்பிடிப்பு பாதிக்கக் கூடாதுனு நினைக்கிறவங்க மனோரமா.



* அம்மா மற்றும் மகனுடன் மட்டுமே வாழ்ந்த காலத்தில், தன் வீட்டில் சில நாய்களைப் பாசமாக வளர்த்தாங்க. 'மனுஷங்க பலரும் நம்பவெச்சு ஏமாத்திட்டாங்க. ஆனால், இந்த ஜீவன்கள் நன்றி விசுவாசத்தோடு இருக்கு'னு அடிக்கடி சொல்வாங்க. அந்த நாய்களை பிள்ளைகள்போல அன்பு காட்டி வளர்த்தாங்க.



* அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, என்.டி.ராமாராவ், ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் நடித்திருந்தவர். அவங்களோடு நல்ல நட்பில் இருந்தார். அவங்க மாற்றுக் கட்சிகளாகவும், தங்களுக்குள் போட்டி உணர்வுடனும் இருந்தாலும், ஆச்சியிடம் ஒரே மாதிரியான நட்போடு இருந்தாங்க.



* ஆயிரக்கணக்கான சினிமா படங்களில் நடிச்சிருந்தாலும், மேடை நாடகங்களில் நடிக்கிறதையே பெருமையா நினைப்பாங்க. நாடக நடிகர்கள் பலரும் ஏழ்மையில் இருந்ததால், அவங்க பசங்களின் கல்யாணத்துக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து உதவி செய்வாங்க. இந்தப் பழக்கம் ஆரம்பத்திலிருந்து, ஆச்சியின் இறுதி காலம் வரைக்கும் தொடர்ந்துச்சு. இந்த விஷயம் சிலரைத் தவிர யாருக்கும் தெரியாது.

* வார்த்தைக்கு வார்த்தை என்னை அண்ணா எனவும், என் மனைவியை அண்ணி எனவும் கூப்பிடுவாங்க. எனக்குத் தெரியாமல் ஒரு வீடு வாங்கி, தக்கச் சமயத்தில் அதை எனக்குப் பரிசாகக் கொடுத்து உதவின என் உடன்பிறவா தங்கை ஆச்சி மனோரமா.
வேண்டும் வரமளிப்பார், வெள்வேல மர நிழலில் வீற்றிருக்கும் திருவேற்காடு வேதபுரீஸ்வரர்!
சிவராஜ்

திருவேற்காடு என்றவுடன் தேவி கருமாரி அம்மன் கோயில்தான் நினைவுக்குவரும். அதே திருவேற்காட்டில் பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.




63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த மண். இத்தல முருகப்பெருமான், அருணகிரிநாதரின் 'திருப்புகழ்' பாடல் பெற்றவர். தொண்டை மண்டலத் தேவாரத் திருக்கொயில்களில் 23 வது கோயிலாகத் திகழ்கிறது. 12 பாடல்களால் திருஞான சம்பந்தர் பாடித் துதித்த திருவிடம்; சேக்கிழார் போற்றிய திருத்தலம் எனப் பல சிறப்புகளைக்கொண்டது இந்த வேதபுரீஸ்வரர் கோயில்.

நான்கு வேதங்களும் வேல மரங்களாக மாறி நின்று ஈசனை வழிபட்டக் காரணத்தால், வேற்காடு (வேல் காடு) என்று பெயர் பெற்றது. தேவி கருமாரி அம்மன் கோயிலிலிருந்து தென்மேற்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி இருக்கும் கோயிலுக்கு முன்பாகப் புதுபிக்கப்பட்டிருக்கும் திருக்குளம்.

திருமணக் கோலத்தில் காட்சி

ஐந்து நிலை ராஜகோபுரத்தைத் தரிசித்து உள்ளே நுழைந்தால், உயர்ந்து விரிந்த கூரை ரம்மியத்தைக் கொடுக்கிறது. பீடத்துடன் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரம் கைகூப்பி வணங்கச் செய்கிறது. கருவறையை நோக்கி இருக்கும் நந்தி சிறிதாக- அழகாக அமைக்கப்பட்டுள்ளது. பிரதோஷத் தினத்தில் நந்தி அபிஷேகம் காண பக்தர்கள் பெருமளவில் கூடுவார்கள்.

சிவலிங்கத்தின் பின்னால் கிழக்கு நோக்கி ஈசனும் அம்பாளும் திருமணக்கோலத்தில் அகத்திய முனிவருக்குத் திருக்காட்சி கொடுக்கும் தரிசனம் காண கண் கோடி வேண்டும். பக்தர்கள் அனைவரும் கருவறை வாயில்வரை அர்த்த மண்டபத்தில் நின்று இறைவனைத் தரிசிப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.

இங்கு வந்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். சிவன் பார்வதியுடன் கணபதி எழுந்தருளிய சந்நிதி உள்ளது. மூலவரின் கருவறை விமானம் யானையின் பின்புறத் தோற்றம் (கஜபிருஷ்டம்) கொண்டது.



பைரவர் வழிபாடு

சந்திரர், சூரியர், தாமரை வடிவில் நவகிரகங்கள் உள்ளனர். பிராகாரத்தின் தென்புறத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிள்ளையாரைத் தனித் தனியாகத் தரிசிக்கலாம். சைவக் குரவர்கள் நால்வர், 63 நாயன்மார்கள் வரிசையாக எழுந்தருளியிருப்பது பரவசத்தைத் தருகிறது. மேற்குப் புறத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அநபாய சோழன், சேக்கிழார், வடக்கே சண்டிகேஸ்வரர், நின்ற கோலத்தில் பிரம்ம தேவன், துர்க்கை முதலிய தெய்வங்களும் எழுந்தருளி இருக்கின்றனர்.

கருவறையின் பின்புறத்தில் லிங்கோத்பவர் அருள்புரிகிறார். மாத சிவராத்திரி நாள்களில் மாலை வேளையில் அவருக்கு 5 நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்க்கை இனிதாகும். கல்வி, ஞானம், செல்வம், இறையருள் கிட்டும்.

பாலாம்பிகை தெற்கு நோக்கியபடி தனிச் சந்நிதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். அருகில் நடராஜர், சிவகாமி அம்பாள் உள்ளனர். அம்பிகை சந்நிதி அருகில் பைரவர் உள்ளார். இவரை சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டுவந்தால் அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, 'அர்த்தாஷ்டமச் சனி' பாதிப்புகள் விலகும்.

சனீஸ்வரருக்குத் தனிச் சந்நிதி பெரிதாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர், மூர்க்க நாயனாருக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

பரசுராமர் பூஜித்த ஈசன்

அக்கினி, எமன், நிருதி, வாயு, வருணன் மற்றும் குபேரன் ஆகியோரும், ராமலிங்க அடிகளாரும் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர். பாரதப் போரில் பங்கேற்க விரும்பாத பலராமர், தீர்த்த யாத்திரை சென்றபோது திருவேற்காட்டில் பூஜித்தார்.

அவர் பூஜித்த லிங்கம், 'பலராமேசர்' என்ற திருநாமத்துடன் திரிபுராந்தகேச லிங்கத்துக்கு தெற்கில் அமைந்துள்ளது. இதேபோல் பரசுராமரும் திருவேற்காட்டுக்கு வந்து இத்தல மந்தாகினி தீர்த்தத்தில் நீராடி, வேல மரத்தடியில் எழுந்தருளியுள்ள சிவலிங்கத்தை பூஜித்துள்ளார். பின்பு சிவலிங்கம் ஒன்றை அமைத்தும் வழிபட்டுள்ளார். அவர் பூஜித்த லிங்கத்தை பரசுராமேஸ்வரர்' என்று அழைக்கின்றனர்.

தசீசி என்ற சிவனடியாரின் சக்தியால் திருமாலின் சக்கரம் தனது வலிமையை இழந்தது. திருவேற்காட்டு வேதபுரீஸ்வரரை வழிபட்டு திருமால், தனது சக்கராயுதத்தின் வலிமையை மீண்டும் பெற்றார். திருமால் இத்தல ஈசனை வழிபட வந்தபோது, ஆதிசேஷன் எனும் பாம்பும் வந்து வழிபட்டது.

அப்போது, 'திருவேற்காடு மண்ணில் இருப்பவர்களைத் தீண்ட மாட்டேன்' எனக் கூறியதாம். எனவே, 'விஷம் தீண்டா பதி' என்றும் இந்தத் தலம் போற்றப்படுகிறது.



முருகர் வழிபட்ட பெருமான்

முருகப் பெருமான், சுப்பிரமணியராகக் காட்சியளிக்கிறார். சூரசம்ஹாரம் முடிந்த பின்னர், சூரபத்மனைக் கொன்ற பாவம் நீங்க வேலால் கிணறு உருவாக்கி (வேலாயுதத் தீர்த்தம்), இத்தலத்தில் உள்ள வேதபுரீஸ்வரரை வழிபட்டார். அந்த 'ஸ்கந்த லிங்கம்' முருகனுக்கு முன்பாகவே வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 9 ஞாயிற்றுக்கிழமைகள் அல்லது கார்த்திகை மாத ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நீராடி வேதபுரீஸ்வரரை வழிபட்டால் தோல் சம்பந்தமான நோய்கள் அகலும் என்பர்.

பிராகாரத் தூணில் ஐந்துதலை நாகம் குடைப்பிடிக்க, காலடியிலும் நாகத்துடன் தேவி கருமரியம்மன் வீற்றிருக்கும் சிற்பம் சிறப்பு வாய்ந்தது.

பூவுக்குப் பதில் கண்

ஈசனுக்குத் தன் கண்ணைக் கொடுத்த கண்ணப்பநாயனாரின் பக்தி பலருக்கும் தெரியும். திருமால் தன் கண்ணைத் தந்த கதை தெரியுமா?

திருமாலுக்கும் ததீசி எனும் சிவபக்தருக்கும் பகை ஏற்பட்டதாம், இருவருக்குமான சண்டையில், திருமாலின் அனைத்துப் பாணங்களும் வீணாகின. ததீசியை அவரது சிவபக்தி காத்தருளியது.

இறுதியாக, சக்கராயுதத்தைப் பிரயோகித்தார் திருமால். அதிலிருந்தும் ததீசி தப்பினார். பிறகு, திருமால் சிவபூஜையில் ஈடுபட்டார், தினமும் ஆயிரம் மலர்களால் வழிபட எண்ணினார்.

ஒருநாள்... பூ ஒன்று குறைந்துபோக, தன் கண்ணைப் பெயர்த்து ஆயிரமாவதுப் பூவாக சிவனாருக்குச் சமர்ப்பித்தார். அந்த நிமிடமே சிவனார் திருக்காட்சி தந்தார். இழந்த கண்ணையும் தந்து 'சுதர்சன கண்ணன்' என்றும் பெயர் சூட்டி அருள்புரிந்தார் என்கிறது தலபுராணம்.

இதைக் கண்டு மனமுருகிய ஆதிசேஷன், `எங்கள் திருமால் ரத்தம் சிந்திய இத்திருவிடத்தில், எவரையும் தீண்ட மாட்டோம்; எவருக்கும் தீங்கு செய்ய மாட்டோம்' என உறுதி ஏற்றதாம். திருமால் அப்போது சிவபூஜை செய்த திருவிடம்... திருவேற்காட்டின் ஒரு பகுதியான கண்ணப்பாளையம் ஆகும்.

தெய்வீக மரத்தின் மகிமை

வெளிப்பிராகாரத்தில், கம்பீரமாக நிற்கிறது வெள்வேலமரம். கும்ப ராசியிலும் சனிக்கிழமை மற்றும் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18 வரையிலான தினங்களில் பிறந்தவர்கள் போற்றிக் கொண்டாட வேண்டிய தெய்வீக ஸ்தல விருட்சம்.

இவர்கள் இந்த மரத்தைக் கட்டிப்பிடித்தாலோ இதன் நிழலில் அமர்ந்தாலோ மரம் சேமித்து வைத்திருக்கும் மின்காந்த அலைகள் அவர்களின் உடலில் மாபெரும் சக்தியை ஏற்படுத்தும் என்கின்றன வானவியல் - மூலிகை சாஸ்திரங்கள்.

எப்படிச் செல்வது?

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் கோவிலுக்குச் செல்லலாம். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேலப்பன்சாவடியிலிருந்து 2 கிலோமீட்டர் சென்றால் திருவேற்காடு வரும். அங்கு பஸ் நிலையத்தின் வடக்கே கருமாரி அம்மன் கோயிலும் மேற்கே வேதபுரீஸ்வரர் கோயிலும் உள்ளன.

மனோலம், தேன்குழல் முறுக்கு... பாஸ்போர்ட் எடுத்த செட்டிநாட்டு பலகாரங்கள்!

vikatan
பாலமுருகன். தெ
சாய் தர்மராஜ்.ச

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நாட்டரசன்கோட்டையில், செட்டிநாட்டுப் பலகாரம் என்றாலே தனி மவுசுதான். இதற்கென்றே தனி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். செட்டிநாடு, கட்டடக்கலைக்கு மட்டும் புகழ்பெற்றதல்ல; பலகார வகைகளுக்கும்தான். கடல் தாண்டி விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறது இதன் பெருமை. அந்த அளவுக்குப் புகழ்பெற்று விளங்கிக்கொண்டிருக்கிறது செட்டிநாட்டுப் பலகாரம். இதன் பட்டியலில் தேன் குழல், முறுக்கு, கைமுறுக்கு, சீப்புச்சீடை, பாசிப்பருப்பு உருண்டை, பொடிசீடை, மனோலம், அதிரசம், எள் அடை என ஸ்பெஷல் அயிட்டங்கள் பட்டியல் நீண்டுகொண்டேபோகிறது.

செட்டிநாட்டுப் பலகாரத் தோற்றம்:

அந்தக் காலத்தில் செட்டியார் வீடுகளில், பலகாரம் செய்வதற்கென்றே ஆள்கள் இருப்பார்கள். அந்த மாதிரியான ஆள்களுக்கு ஒவ்வொரு பலகாரம் செய்வதற்கான செய்முறைகளைக் கற்றுக்கொடுத்தார்கள். செட்டியார் வீடுகளில் கருப்பட்டிப் பணியாரம், குழிப்பணியாரம், வெள்ளை பணியாரம், மசாலா பணியாரம் எனத் தயார்செய்வது வழக்கமான ஒன்று. அப்போதைய ஃபேமஸ், கந்தரப்பம். அதாவது, அரிசி-பருப்பு வகையுடன் வெந்தயம் சேர்த்து செய்யப்படும் பலகாரம். இவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றவைதான் இன்றைக்குப் பல்வேறு வகையான செட்டியநாட்டுப் பலகாரங்கள்.



இங்கு தயாரிக்கக்கூடிய பலகாரங்கள் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். எனவேதான், வெளிநாடுகளுக்கு நம்பிக்கையோடு அனுப்பிவருகிறார்கள். அதற்கான ரகசியம் வேறொன்றுமில்லை. எல்லாமே பலகாரம் செய்யும் மாஸ்டர் கையில்தான் இருக்கிறது. சரியான கைப்பக்குவம். அவ்வளவே! அதே நேரத்தில் சுத்தமான ரீஃபைண்ட் ஆயில். ஒருமுறை பயன்படுத்தியதை மறுமுறை பயன்படுத்துவதில்லை. இதுவும் தரத்துக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.



பலகாரங்களின் அழகு மகிமை:

செட்டிநாடுகளில் தயாரிக்கப்படும் பலகாரங்கள், கலைநயத்துடன் காட்சியளிக்கும். கைசுத்து முறுக்கைப் பார்த்தாலே தெரியும், அதன் அழகும் கலையும். செட்டிநாடுகளில் தயாரிக்கும் முறுக்கும் அதிரசமும் மொறுமொறுப்பாகவும் மெதுவாகவும் இருக்கும். இங்கு தயாரிக்கப்படும் பலகாரங்கள், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் வகையில் இருக்கும். உடல்நலத்துக்குக் கெடுதல் தராது.

உலகம் சுற்றும் வாலிபன்:

செட்டிநாட்டுப் பலகாரங்கள், சென்னை, கோவை, மதுரை என தமிழகத்தில் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என தமிழர்கள் இருக்கும் எல்லா நாடுகளுக்கும் பயணமாகிக்கொண்டிருக்கின்றன. தீபாவளி நேரம் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் பலகாரங்கள் செய்யும் பணி, மும்முரமாக காரைக்குடி சுப்பிரமணிபுரத்தில் உள்ள வீட்டில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பெரும்பாலும் வீடுகளில்தான் இந்தப் பலகாரங்கள் பெரிய அளவில் தயாரிக்கப்படுகின்றன. அதன் உரிமையாளரான அலமேலுவைச் சந்தித்தோம்.



மனோலம்:

இந்தப் பலகாரம், நகரத்தார் வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும். திருமணத்துக்கான சீர்வரிசையில் மனோலம், கைசுத்து முறுக்கு இவை இரண்டும்தான் இடம்பெற்றிருக்கும். மனோலம் என்றதும், பலருக்கும் புரியாது. பருப்புவகைகள், பொரிகடலை, கொப்பரைத்தேங்காய், வெல்லம், நெய் இவையெல்லாம் சேர்த்து செய்யக்கூடியதுதான் `மனோலம்'.

தேன்குழல்:

முறுக்குவகைகளில் ஒன்று. குழல் போன்று இருக்கும். உளுந்தைப் பக்குவமாக வறுத்துக்கொள்ள வேண்டும். அரிசியைக் கழுவி ஊறல்கொடுக்காத வகையில் அரைத்து நெய் சேர்த்து செய்யக்கூடிய முறுக்கு இது. மற்ற முறுக்குகளைவிட மிருதுவாக இருக்கும்.

சீப் சீடை:

ரொம்பச் சுவையானது இது. உளுந்தைப் பச்சையாகவும் பொன்னிறமாகவும் மிதமான பக்குவத்தில் மாவாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, அரிசி மாவோடு தேங்காய்ப்பால் ஊற்றி தேவையான அளவுக்கு உப்புச் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.



பாசிப்பயறு மாவு உருண்டை:

பொரிகடலை மாவு உருண்டை, ரவா உருண்டை இந்த இரண்டும் எல்லா இடங்களிலும் கிடைக்கும். ஆனால், பாசிபயறு மாவு உருண்டை நாங்க செய்யுறது மாதிரி வேறு எங்கேயுமே கிடைக்காது. இந்த உருண்டைகளை, குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. உடல்நலத்துக்கும் ரொம்ப நல்லது.

சின்ன சீடை:

இது ஸ்பெஷலான பலகாரம். சீடை ரொம்பப் பொடிசு பொடிசாக இருக்கும். இந்தச் சீடையை ஒரு வயசு குழந்தைகள் முதல் 90 வயசு பல் இல்லாத கிழவன் வரைக்கும் சாப்பிடக்கூடியவகையில் தயாரிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு வாயில் போட்டவுடனேயே கரைந்துவிடும். இது ரொம்பச் சுவையாக இருப்பதால், எல்லோருமே விரும்பிச் சாப்பிடுவாங்க. கேட்டு வாங்கிட்டுப் போறாங்க.

இந்த வருஷம் வாடிக்கையாளர்கள், அனைத்து வகையான பலகாரங்களும் சேர்த்து கிஃப்ட் பாக்ஸ் போடச் சொல்லியிருக்கிறார்கள். அது பற்றியும் யோசித்துக்கொண்டிருக்கிறோம்'' என்கிறார் அலமேலு.

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக’ தீபாவளியை மிஸ் பண்றோம்ல! #DiwaliNostalgia

சக்தி தமிழ்ச்செல்வன்

Chennai:

சாதாரண நாள்களைப்போல இல்லாமல், பண்டிகை தினங்களுக்கு தனி மவுசு இருக்கத்தான்செய்கிறது. மற்ற எல்லா பண்டிகைகளைவிடவும் தீபாவளிப் பண்டிகை மக்கள் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்று. எண்ணெய்க் குளியல், இட்லி, கறிக்குழம்பு, அதிரசம், முறுக்கு, புதுத் துணி, பட்டாசு, சுவீட் பாக்ஸ் என ரகளையான கொண்டாட்டங்கள் அரங்கேறும். தீபாவளிக்கான ஷாப்பிங்குகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் வேளையில், சற்று ரிலாக்ஸாக சிறுவயதில் நாம் கொண்டாடிய தீபாவளியை ரீவைண்ட் செய்ய நம் மனதின் மத்தாப்புகளைப் பற்றவைப்போம்...



அது ஒரு `பொட்டுவெடி'களின் காலம். தீபாவளி சீஸன் ஆரம்பிப்பதன் அடையாளமே சிறு பெட்டிக்கடைகளின் முன் ஒரு ரேக்கில் துப்பாக்கி, சுருள் கேப் (பொட்டுவெடி), சீனிவெடி இவை அடங்கிய ஓர் அட்டை தொங்குவதுதான். அதைப் பார்த்துவிட்டு பள்ளிகளில் நம் `தோஸ்த்'களிடம் அதைப் பற்றி சிலாகித்துக் கூறுவோம். பிறகு `நாங்கனாப்புல யாராம்' என ஆளாளுக்கு, `டேய்... இந்த வெடி அதைவிட பயங்கரமா வெடிக்கும்டா' எனக் கொளுத்திப்போடுவார்கள். ஒருவழியாக அந்தப் பொதுக்கூட்டம் `எல்லாரும் சாயங்காலமே துப்பாக்கி வாங்குறோம்' என்ற தீர்மானத்துடன் முடிவடையும். அப்பாவிடம் அடம்பிடித்து துப்பாக்கியும் சுருள் கேப்பும் வாங்கி அன்றே வெடித்துத் தீர்ப்போம். துப்பாக்கி தொலைந்தோ, உடைந்தோ போகிறபோது, சுருள் கேப்பை கல் மேல் விரித்துவைத்து இன்னொரு கல்லால் உரசி வெடிக்கச்செய்வோம். அந்த நிமிடம்தான் நாம் நம்மை `ஹீரோவாக' உணருவோம்.



வெடிக்கு அடுத்தபடியாக நம்மை ஈர்ப்பது புத்தாடைகள். அதுவும் நம் நண்பர்கள் புதுத்துணி வாங்கிவிட்டால் நாமும் நம் அப்பாக்களை புதுத்துணி வாங்கித் தரச் சொல்லி நச்சரிக்கத் தொடங்கிவிடுவோம். ஒரு சுபயோக சுபதினத்தில் நமக்கு புதுத்துணி கிடைத்துவிட, தீபாவளி வரும் வரை அவ்வப்போது அதை நுகர்ந்துபார்த்து `புதுத்துணி வாசனை' சுகிப்போம். தீபாவளிக்கு முன்பாக அம்மாக்கள் முறுக்கு சுடும்போது மாவுகளை, முறுக்குகளை காகம் கொத்திச் செல்லாமல் பொறுப்பான பிள்ளையாக காகம் விரட்டுவோம். அப்பாவின் கைகளைப் பற்றிக்கொண்டு கடைவீதிகளில் வெடிமருந்து வாடை வீச வெடி வாங்கியிருப்போம். குறிப்பாக, இரவு நேரங்களுக்கு உகந்த கம்பி மத்தாப்பு, சங்குச்சக்கரம், புஸ்வாணம் எனப் பல வெடிகள் வாங்குவோம். கூடுதலாக நமது வீரபராக்கிரமத்தைக்காட்ட ஒரு சீனிவெடி அல்லது மிளகாய்வெடி வாங்கிக்கொள்வோம். தீபாவளி அன்று சட்டைக்காலரின் நுனியில் மஞ்சள் தடவிய புதுத்துணி மாட்டிக்கொண்டு அத்தை, மாமா வீடுகளுக்குச் சென்று `வசூல் வேட்டை' நடத்துவோம். பிறகு, சீனிவெடிகளை நீண்ட பத்திக்குச்சிகொண்டு ஓடுவதற்குத் தயாரான நிலையில் பற்றவைப்போம். இரவில் நம்முடைய வெடிகளை எல்லாம் வெடித்துத் தீர்த்துவிட்டு, நண்பர்களுடன் சேர்ந்து மொட்டைமாடியில் நின்று ராக்கெட்டுகள் மேலெழுந்து சிதறும்போது வரும் வண்ணங்களை ரசித்திருப்போம்.



`சரஸ்வதிவெடி'களின் காலம்: கொஞ்சம் வளர்ந்த பிறகு, அம்மா முறுக்கு சுடும்போது காகம் ஓட்டாமல் கிரிக்கெட் விளையாடச் சென்றுவிடுவோம். வெடிகளின் பட்டியலில் கம்பி மத்தாப்பு, சங்குச்சக்கரம், புஸ்வாணம் போன்ற இரவு நேர வெடிகளின் அளவு குறைந்திருக்கும். தெளசண்ட்வாலா, லட்சுமிவெடி, சரஸ்வதிவெடி போன்ற `லாஸ்ட் பெஞ்சு' வெடிகள் நிறைய வாங்கிக்கொள்வோம். நம் தெருவில் இருக்கும் நமக்குப் பிடித்த பெண் வெளியே வரும் நேரம் பார்த்து வெடிகளை கையில் பிடித்துத் தூக்கிப் போட்டு வெடிக்கச்செய்வோம் (வெடிகளை கையில் பிடித்தோ, தூக்கிப் போட்டோ வெடிப்பது அபாயமானது). அன்று மாலை 6 மணியளவில் `இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக' என்ற வார்த்தைகளோடு போன தீபாவளிக்கு முந்தய தீபாவளி அன்று வெளியான திரைப்படத்தை ஒளிபரப்ப, நாமும் அதை அசராமல் காண்போம்.

தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்லும் நாளில், தீபாவளி அன்று அணிந்திருந்த புதுத்துணியையே அணிந்து வரச் சொல்வார்கள். அந்தப் புதுத்துணியை அணிந்துகொண்டு பள்ளிக்குச் செல்லும்போது எல்லோருமே நம்மையும் நம் டிரஸையுமே பார்ப்பதுபோன்ற ஒரு தோரணையயில் வலம் வருவோம்.



`புதுப்படங்களின்' காலம்: கல்லூரி நாள்களில் அப்பாவிடம் பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு நண்பர்களுடன் சென்று நாமே புதுத்துணி எடுத்துக்கொள்வோம். வெளியூர்களில் படிக்கும் நண்பர்கள் அனைவரும் ஒன்றாகச் சந்திக்கும் வாய்ப்பு, தீபாவளி போன்ற நீண்ட விடுமுறையின்போது மட்டுமே ஏற்படும். அதைக் கொண்டாடும் பொருட்டு, நண்பர்கள் அனைவரும் சேர்ந்து தீபாவளி அன்று வெளியான புதுப்படத்தைப் பார்த்துவிட்டு வருவோம்.

அந்தச் சமயங்களில் யாராவது வெடி வெடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால், `இவன்களுக்கு வேற வேலையே இல்லைடா!' என்றபடி கடந்து செல்வோம். வெடி வாங்குவது, வெடிப்பது போன்றவை எல்லாம் சிந்தனையில்கூட வராது. வேலைக்குச் சென்ற பிறகு புதுத்துணி எடுப்பதைவிட தீபாவளித் தள்ளுபடியில் ஏதாவது புது மொபைலையோ அல்லது புது பைக்கையோ வாங்குவதில்தான் ஆர்வமிருக்கும்.

நம் அப்பாக்கள், தீபாவளிக்கு வீட்டில் உள்ள அனைவருக்கும் புதுத்துணிகள் வாங்கிக் கொடுத்துவிட்டு, அவருக்கு மட்டும் புதுத்துணிகள் வாங்காமல் `எனக்கு இருக்கிற துணி பத்தலையா... எதுக்கு புதுத்துணி?' என்பார். இன்று நம்மில் பலர் தீபாவளிக்கு ஊருக்குப் போகையில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மட்டும் புதுத்துணி எடுத்துவிட்டு நமக்கு எடுக்காமல் இருப்போம். அம்மாவோ, அப்பாவோ `ஏன்டா, உனக்கு எதுவும் துணி எடுக்கலையா?' எனக் கேட்கும்போது, `எனக்கு எதுக்கு புதுசு? இருக்கிறதை போட்டாலே போதும். வேணும்னா, அப்புறமா எடுத்துக்குறேன்' என்போம். இப்படித்தான் தலைமுறை தலைமுறையாகப் பரிணமிக்கிறது தீபாவளி!

சதம் அடிக்கும் காய்கறிகளின் விலை! - எப்போது குறையும்?

அஷ்வினி சிவலிங்கம்

Chennai:

தீபாவளி நெருங்கிவிட்டது. காய்கறிகளின் விலை சதம் அடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக சின்ன வெங்காயம், முருங்கைக் காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.




இனிவரும் நாள்களில் காய்கறிகளின் விலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து கோயம்பேடு மலர், காய், கனி, மலர் வியாபாரிகள் சங்கத்தின் துணைத்தலைவர் சுகுமார் பேசுகையில் ‘தக்காளி விலை உயரத் தொடங்கிவிட்டது. சின்ன வெங்காயத்தின் விலை கடந்த இரண்டு மாதங்களாகவே அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. கிலோ நூறு ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.

சின்ன வெங்காயம் 90% தமிழகத்தில் இருந்து தான் கோயம்பேடு சந்தைக்கு வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் கடும் வறட்சி நிலவியது. அதற்கு முந்தைய ஆண்டு தமிழகம் வெள்ளத்தில் மிதந்தது. இதுபோன்ற காலநிலை மாற்றத்தாலும், பருவ மழை பொய்த்துவிட்டதாலும் சின்ன வெங்காயம் உள்ளிட்டவற்றின் விளைச்சல் குறைந்துவிட்டது. தீபாவளி பண்டிகை முடிந்தபின்னரும் சின்ன வெங்காயத்தின் விலை குறைய வாய்பில்லை. தக்காளி, கத்திரிக்காய், வெண்டய்காய், பீன்ஸ், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்களின் விலை இன்னும் ஒரு மாதத்துக்கு ஏற்றத்துடன் தான் இருக்கும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் காய்கறிகளின் விலை குறையும்’ என்றார்.






No Politics In Educational Institutions: Kerala HC [Read Order] | Live Law

No Politics In Educational Institutions: Kerala HC [Read Order] | Live Law: A Division Bench of Kerala High Court on Friday observed that Educational Institutions are meant for imparting education and not politics. In an interim order, the bench of Chief Justice Navaniti Prasad Singh and Justice Raja Vijayaraghavan also held that political activities like Dharna, hunger strikes and other practices like Sathyagrah have no place in …

தீபாவளிக்கு பர்ச்சஸா? பேஸ்புக், டுவிட்டரில் செல்ஃபி எடுத்து போட்டுடாதீங்க... இன்டைரக்ட்டா பார்க்குமாம் இன்கம்டேக்ஸ்...





தீபாவளிப் பண்டிகைக்கு மிகப்பெரிய அளவில் செலவு செய்யபவர்கள், அந்த பொருட்களை புகைப்படம் எடுத்து பேஸ்புக், டுவிட்டரில் பதிவிடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனென்றால், நீங்கள் செய்யும் செலவும், உங்கள் வருவாயும் சரியாக இருக்கிறதா?, வருவாய்க்கு ஏற்றார்போல் செலவு இருக்கிறதா?, அல்லது நீங்கள் செலவழிப்பது கருப்பு பணமா? வரி ஏய்ப்பு செய்ய செலவு செய்கிறீர்களா? என்பதை வருமானவரித்துறை கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.

ஆதலால், தீபாவளிக்கு ஏதேனும் விலை உயர்ந்த பொருட்கள், கார், பைக் ஏதேனும் வங்கி அதை சமூக ஊடகங்களில் புகைப்படத்துடன் பதிவிட்டால், அதுகுறித்து வருமானவரித்துறையின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது இருக்கும்.

கருப்பு பணத்தையும், வரி ஏய்ப்பையும் கண்டுபிடிக்க ‘புராஜெக்ட் இன்சைட்’ எனும் திட்டத்தை வருமான வரித்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சமூக ஊடகங்களை தீவிரமாக கண்காணிக்கும் வருமானவரித்துறையினர் அதன் மூலம் தகவல்களைப் பெற்று கருப்பு பணம்பதுக்குவோர், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு ‘வலை விரிக்க’ உள்ளனர்.

இதற்காக கடந்த ஆண்டு ‘லார்சன் அன்ட் டூப்ரோ’ இன்போடெக் நிறுவனத்துடன் வருமானவரித்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. அவர்களின் உதவியுடன் இந்த மாதம் முதல் சமூக ஊடகங்களான பேஸ்புக், டுவிட்டர் தளங்களை வருமானவரித்துறை கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது, ‘புராஜெக்ட் இன்சைட்’ எனும் திட்டம் இந்த மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

இது குறித்து ‘லார்சன் அன்ட் டூப்ரோ’ இன்போடெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக மற்றும் மேலாண் இயக்குநர் சஞ்சய் ஜலோனா கூறுகையில், “ நாங்கள் ‘புராஜெக்ட் இன்சைட்’ எனும் திட்டத்துக்காக பிரத்தேயக தளத்தை உருவாக்கி இருக்கிறோம். இதில் டுவிட்டர், பேஸ்புக்கில் கணக்கு வைத்து இருக்கும் ஒருவர், புதிதாக ஏதாவது, கார், விலை உயர்ந்த பொருட்களின் புகைப்படங்களை பதவிட்டால் உடனுக்குடன் எங்களுக்கு தெரிந்துவிடும். இந்த தளத்தில் குறிப்பிட்ட நபருக்காகவும் தனித்தனி பிரிவுகள் செயல்படுகின்றன’’ என்றார்.

கடந்த மாதம் வருமானவரித்துறை அதிகாரிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “ வருமானவரித்துறையில் மனித உழைப்பை குறைத்து விட்டு, தொழில்நுட்பங்களை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். புள்ளிவிவரங்களை தீவிரமாக ஆய்வு செய்து, வரி ஏய்ப்பு, கருப்புபணத்தை கண்டுபிடிக்க வேண்டும்’’ என வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt

Won't admit Indians to Russian medium

NYOOOZ-main-logo
The Indian students have now decided to seek relief from the Medical Council of India and have written to them regarding their plight. MY Dyakov, Dean, faculty for foreign students at SSMU told DNA, "We plan to not admit Indian students in the Russian medium. The education consultancy has cheated Indian students and this incident has given a bad name to the university. Left stranded133 Indian students were left in the lurch after they were told that they were enrolled for the course in the Russian medium and not English. They have also requested the council to allow them to continue their second year in another Russsian university.
The Indian students have now decided to seek relief from the Medical Council of India and have written to them regarding their plight After 133 students from across India were forced to abandon their MBBS course at Smolensk State Medical University (SSMU) in Russia for being taught in the Russian medium from their second year onwards, the university, as a precautionary measure, has now altered its policy and decided to not admit any Indian students in the Russian medium's MBBS course, but only in the English medium. The Indian students have now decided to seek relief from the Medical Council of India and have written to them regarding their plight. They have also requested the council to allow them to continue their second year in another Russsian university. MY Dyakov, Dean, faculty for foreign students at SSMU told DNA, "We plan to not admit Indian students in the Russian medium. The education consultancy has cheated Indian students and this incident has given a bad name to the university , As Reported By DNAIndia

According to the Newspaper,We have to take a firm stand on the issue so that no other Indian student is cheated again." DNA had reported how 133 Indian students who had gained admission at SSMU for an MBBS course were left in the lurch after they were told that they were enrolled for the course in the Russian medium, not English, by a Delhi-based agency, Rus Education. While lessons were imparted in English for the initial year, the problems for the students began when the university started instructing them in the Russian medium from the second year onwards. Left stranded 133 Indian students were left in the lurch after they were told that they were enrolled for the course in the Russian medium and not English.. . . 


Power shutdown areas in Chennai on 16-10-17


Posted on : 14/Oct/2017 15:02:07




 
 
 
Power supply will be suspended in the following areas on 16-10-17 between 9.00 A.M. to 2.00 P.M. for maintenance work. Supply will be resumed before 2.00 P.M. if the works are completed. 

PERUNGALATHUR AREA: Old Perungalathur, Paravathy nagar, Mudichur, Royappa nagar, Krishna nagar, Lakshmi nagar, Varatharajapuram, Ranga nagar, Annai Indra nagar, Vinaya nagar.

Damage to Sabarimala will hit Travancore Devaswom as a whole’


By Express News Service  |   Published: 15th October 2017 01:19 AM  |  

Sabarimala, the abode of Lord Ayyappa, is the most important of the 1,304 temples under Travancore Devaswom Board (TDB). And by far the highest revenue earner, having netted around Rs 200 crore last season. The annual pilgrimage to the hill shrine finds devotees from Andhra Pradesh and Tamil Nadu outnumbering those from the home state, Kerala. It is estimated that around four crore devotees visit the temple in a year whereas the number of women is only six lakh.
The reason: There is a restriction on the entry of women in the 10-50 age category. 
For some time, there have been debates on why all women cannot be allowed but things came to a flash when Naushad Ahmed Khan, president of the Indian Young Lawyers’ Association (IYLA), filed a public interest litigation on the issue in 2006. On October 13, the Supreme Court referred the matter of restricting women “on a biological factor exclusive to the female gender” to a five-judge Constitution Bench. 
TDB president and former MLA Prayar Gopalakrishnan speaks to Express reporter Chandrakanth Viswanath on how the temple management looks at an array of issues that have led to the current stand-off.
Q What is your major opposition to women aged between 10 and 50 being allowed to visit Sabarimala temple?
A. According to belief, Ayyappa, the deity at Sabarimala, is a ‘naishtika brahmachari’. The unmarried can be termed celibate, while ‘naishtika brahmachari’ is one who recites mantras akin to respiration. Here, Ayyappa is placed in the ‘yoga thapasya’ mode. A temple’s rule is decided by the tantri (chief priest) after being consecrated in a ritual called ‘paditharam’.
This is the basis of the temple which cannot be changed. Here, the tantri has restricted the entry of women between the ages of 10 and 50 as a rule of the temple. Even though the tantri can make amendments, he cannot change it as a whole.
Q. Is the 41-day ‘vrata’ the only thing that stands in the way for women in the barred age-group?
A. The pilgrimage demands a 41-day ‘vrata’ that requires celibacy and abstinence. Due to biological reasons, women between the particular age-group are barred.
Q. In your opinion, how strictly do men observe the ‘vrata’?
A. To my understanding, pilgrims from outside Kerala who account for a majority, are strict about adhering to tradition. However, a large number of people from Kerala do not seem very keen to observe the ‘vrata’. This may be due to the influence of some political parties vouching against beliefs and a kind of hypocrisy which does not allow party workers to follow their beliefs in public. Hence, we are taking steps to propagate a period of abstinence from ‘Vrischikam’ to ‘Makaram’, the period of pilgrimage among the Hindu faithful, according to the Malayalam calendar.
Q. Is it only the legend of Ayyappa being a ‘naishtika brahmachari’ that restricts the entry of women, particularly as strenuous travel by foot and crossing dangerous terrains like forest land are no longer required?
A. It is the base. However, there are various factors which restrict the entry of women.  Moreover, the journey through the hilly terrain, the long time pilgrims have to spend in the queue for darsan, the number of women security personnel to be deployed and the toilet facilities to be set up for them are the other major points to be considered.
Q. Your comment about Sabarimala not being allowed to be turned into a ‘Thailand’ has stirred a hornet’s nest. Comment.
A. Sabarimala cannot be seen as just another temple, like the one in your village or town. The pilgrimage demands a lot of mental and physical sanctity. When everyone is admitted to such a place, we cannot prevent non-believers. I am sure it will spoil the sanctity of the pilgrimage. 
Q. Do you suspect that there is a vested interest or conspiracy afoot to tamper with the tradition of Sabarimala which runs on a unique model?
A. Certainly.  There has been a conspiracy to tarnish the image, belief and glory of Sabarimala. This is evident from the fire of 1949. However, it is not going down. Instead, its glory is going up. Last year, we had pilgrims from 33 countries, with some even taking chartered flights.
Q. Do you fear the pilgrim flow will reduce and thus negatively impact the earnings if women of all age-groups are allowed darsan?
A. We wish nothing goes against the tradition. As a constitutional institution, TDB will adhere to the ruling of the Supreme Court. However, it is up to the devotees to decide on how to practice their rituals. Any kind of damage to Sabarimala, and any fall in its revenue, will result in the damage of all temples under TDB, including 22 other major ones and their revenue.

Man’s certificate reads Rs 96 income p.a


By Express News Service  |   Published: 15th October 2017 02:58 AM  |  

TIRUPUR: A Man from at Samundipuram here was issued an income certificate with an annual income of `96. However, it was soon corrected.
N Mamundi (50), who runs a salon at Gandhinagar here, had applied for an income certificate online in September. He wanted it to avail of the government welfare for marriages as his daughter’s wedding was fixed for October 30. Mamundi got the certificate on October 12, but there was a mistake — the annual income of his family was given as `96. There was another mistake; his profession was given as a transport-related job. The family was hesitant to speak about the matter as they feared that they may not get the benefit, said Mamundi’s wife, Dhanalakshmi (45). They have two daughters.
“It was a computer error,” said Tirupur North Tahsildar K T  Subramaniam. “If more care was taken while printing, it would not have occurred. Nobody would deliberately give his annual income as `96 and nobody would issue such a certificate. We have called the person concerned and reissued the certificate with `72,000 as his annual family income”

Selaiyur, camp road expansion to begin in January: highways department


By Samuel Merigala  |  Express News Service  |   Published: 15th October 2017 02:58 AM  |  
Image used for representational purpose only
CHENNAI: The State highways department says that work on widening of Velachery main road between Selaiyur police station and Camp Road junction will begin by January. The 300-metre stretch is a bottleneck hampering smooth of flow of vehicles during peak hours.
In response to a petition filed through the CM special cell by P Viswanathan, a local activist, the highways department has said the department was involved in land acquisition process and work will commence once the acquisition was completed.
The Additional divisional engineer, Tambaram, Anandaraj told Express that the acquisition process was in its final stages and the department hopes to start work in the early part of next year.  
“We are trying to take 50 feet on either side of the road as mandated by CMDA,’’ he said.
The 300-metre stretch is lined with commercial establishments with new ones opening as late at last month.
A clothing shop along the stretch which opened recently is confident that the acquisition process would continue for atleast another few years.
While, a wide array of shops, from fast food to clothing stores and ice cream parlours line the stretch and cater to the nearby residents of Selaiyur and Camp road, residents rue crossing the stretch during peak hours.
“It takes 15-20 minutes to cross the 300-metre stretch when I leave for work in the morning,” said Sam Timothy of Camp road.
The highways department claims that road widening on the stretch will begin in three months. Work on the remaining part of 1.5 km stretch marked for expansion, from Aadhi Nagar, will take at least 18 months to begin.

DEEPAVALI 4.11.Cr.. BUS TICKETS SOLD

15 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த தனியார் பஸ் நிறுவனத்துக்கு சீல்! நகராட்சி ஆணையர் அதிரடி

RAGHAVAN M




கடந்த 15 ஆண்டுகளாக தொழில் உரிமம் பெறாமல் வரிஏய்ப்பில் இயங்கிவந்த யுனிவர்சல் என்ற தனியார் பஸ் நிறுவனத்துக்கு சீல் வைத்து, அபராதத்துடன் தொகையை வசூலித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் காரைக்கால் நகராட்சி ஆணையர்.

காரைக்காலில் சுமார் 35 ஆம்னி பேருந்துகள், 4 ரூட் பேருந்துகள் மற்றும் 10க்கு மேற்பட்ட லாரிகள் இவற்றை இயக்கிவரும் பெரிய தனியார் நிறுவனம் யுனிவர்சல் ஆகும். அதிகாரிகளை மரியாதைக் குறைவாகப் பேசுதல், ஓட்டுநர், நடத்துநர்களின் லைசன்ஸைப் பிடுங்கி வைத்துக் கொண்டு மிரட்டுதல், உரிய ஊதியம் தராமல் இழுத்தடித்தல், பி.எப்., இன்சூரன்ஸ், ஈ.எஸ்.ஐ. போன்றவற்றில் முறைகேடு செய்தல், அரசு மற்றும் தனியார் பேருந்துகளிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளுதல் - இப்படி பல குற்றச்சாட்டுகள் இந்த நிறுவனத்தின் மேல் அவ்வப்போது எழுவதுண்டு. உரிமையாளர்களின் செல்வாக்கால் அப்படியே அமுங்கிவிடுவதும் உண்டு.

இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக தொழில் உரிமம் பெறாமலும், அரசுக்குரிய வரியை செலுத்தாமலும், இந்நிறுவனம் செயல்பட்டு வருவதை புதிய நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்ற சுதாகர் கண்டுபிடித்தார். உடனே, வருவாய் ஆய்வாளர்கள் பாலன், கந்தசாமி ஆகியோர் மூலம் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ரவிச்சந்திரன், மகேந்திரன் ஆகியோருக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கினார். இதற்கு எவ்விதப் பதிலும் வராததால் ஆணையர் சுதாகர், தாசில்தார் பொய்யாதமூர்த்தி தலைமையில் புறப்பட்ட அதிகாரிகள் குழு, யுனிவர்சல் நிறுவனத்தைப் பூட்டி சீல் வைத்தது. இதுவரை எந்த ஆணையரும் செய்யாத துணிச்சலான காரியத்தை சுதாகர் செய்ததால் நகரில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

இதுபற்றி காரைக்கால் நகராட்சி ஆணையர் சுதாகரிடம் பேசியபோது, ''கடந்த 15 ஆண்டுகளாக தொழில் உரிமத்துக்கான நிலுவைத் தொகை, அதற்குண்டான அபராதத் தொகை ஆகியவற்றைச் சேர்த்து செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது. அதற்கு உரிய பதில் வராததால் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின், ஏதேனும் தொகையில் குறைத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டார்கள். அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று மறுத்தபோது, முழுத் தொகையும் இன்று செலுத்திவிட்டார்கள். சீல் அகற்றப்பட்டது. இதுபோல் அரசுக்கு வரி ஏய்ப்பு செய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும், சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும்'' என்றார்.

வேலை போனால் என்ன? என்னால் வடாபாவ் விற்றுக் கூட கோடிகளில் சம்பாதிக்க முடியும்! நிரூபித்த மும்பை இளைஞர்!


By RKV  |   Published on : 14th October 2017 11:47 AM  |
000sujay_sohani


2007 ஆம் ஆண்டில் இந்தியாவை உலுக்கிய ஆட்குறைப்பு அபாயத்தில் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் பணிபுரிந்து கொண்டிருந்த இந்தியர்கள் பலரும் கூடத் திடீரெனத்  தங்களது வேலையை இழந்து அவதியுறும் நிலை ஏற்பட்டிருந்தது. வேலையிழப்புக்கு முதல் மாதம் வரையிலும் கை நிறைய பையையும் நிரப்பிக் கொண்டிருந்த வருமானத்தை நிரந்தரம் என்றெண்ணித் தங்களது உழைப்பை அயராது வாரி வழங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள் பலர் வேலை இழப்பின் பின் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி செய்வதறியாது திகைக்கும் நிலை ஏற்பட்டது. அப்படித் தவிப்புக்கு உள்ளானவர்களில் ஒருவர் தான் மும்பையைச் சேர்ந்த சுஜய் சோஹானி. வேலை இழந்தவர்களின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நிகழும் என்பது இங்கே யாரும் அறியாத ரகசியமில்லை! ஆனால் நிகழ்ந்தவற்றில் அப்படியே தேங்கி மனம் குன்றிப் போனால் மிச்ச வாழ்க்கையை என்ன செய்வது?
இந்த யோசனை வந்த பின் சுஜயின் மனம் தெளிவாகி விட்டது. தெளிவான மனதுடன் சுஜய் தனது கல்லூரிக் கால நண்பருடன் இணைந்து ஒரு சுயதொழிலைத் தொடங்கினார். அதில் அவருக்குக் கிடைத்த வருமானம் அவர் முன்பு லண்டனில் பார்த்துக் கொண்டிருந்த பகட்டான வேலையில் கிடைத்த சம்பளத்தைக் காட்டிலும் மிக அதிகம். அப்படியென்ன தொழில் செய்தார் சுஜய்? புதிதாக ஒன்றுமில்லை, எல்லோரும் அறிந்த தொழில் தான். வட பாவ் கேள்விப்பட்டிருப்பீர்களே?! சென்னையில் கூட இன்று வடபாவ் விற்கப்படாத ஸ்னாக்ஸ் மற்றும் ஸ்வீட் கடைகளைக் காண்பது அரிது. வட இந்திய சாட் ஐட்டங்களில் ஒன்றான வட பாவ், பானி பூரியை அடுத்து வட இந்தியர்களின் தேசிய உணவுவகைகளில் ஒன்று. தென்னிந்தியர்கள் மசால் வடையை விரும்புவதைப் போலவே வட இந்தியர்கள் வட பாவ்க்காக தங்கள் இன்னுயிரையும் அளிக்கச் சித்தமாக இருப்பார்கள். வடபாவின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் அது வட இந்திய, தென்னிந்திய எல்லைகளைக் கடந்து தற்போது சர்வதேச ரசனைக்குரிய ஸ்னாக்ஸ் ஐட்டக்களில் ஒன்றாகி விட்டது.
சுஜய் தன் நண்பர் சுபோத்துடன் இணைந்து தொடங்கியது இந்த வடபாவ் தொழிலைத்தான்.
முன்னதாக சுஜய் லண்டனில் பார்த்துக் கொண்டிருந்த வேலையும் இதனோடு தொடர்புடையது தான். லண்டனில் இருக்கும் பிரசித்தி பெற்ற ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ஒன்றில் சுஜய் உணவு மற்றும் பானங்கள் பிரிவில் மேலாளராகப் பணிபுரிந்திருந்தார். 2009 இல் பூதம் போலக் கிளம்பித் தாக்கிய ஆட்குறைப்பு நேரத்தில் சுஜய் தனது வேலையை இழக்க நேரிட்டது. வேலையை இழந்தாரே தவிர வேலை தந்த அனுபவங்களை இழந்தாரில்லை, அந்த அனுபவம் தான் இப்போது சொந்தத்தொழில் தொடங்கிய நிலையில் கை கொடுத்தது.
மும்பை ரிஸ்வி கல்லூரியில் உடன் படித்த மாணவரும், நண்பருமான சுபோத்துடனான நட்பை சுஜய் தனது கல்லூரிக் காலத்தின் பின்னும் தொடர்ந்து பராமரித்து வந்ததால், ஆட்குறைப்பு நேரத்தில், தனக்கேற்பட்ட சிக்கல்களை ஒரு நண்பராக சுபோத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்படிப் பகிர்ந்து கொண்டதால், ஒரு கட்டத்தில் தெளிவு பெற்று உருவானது தான் சுஜயின் வடபாவ் தொழில். வேலையை இழந்தாலும், லண்டனை விட்டு வெளியேற விரும்பாத சுஜயுடன் அவரது நண்பர் சுபோத் கை கொடுத்தார். நண்பருக்காக சுபோத் லண்டன் சென்று அவருடன் கூட்டாகத் தொழில் செய்ய சம்மதம் தெரிவித்தார். 
இந்த இரு நண்பர்களும் லண்டனில், தங்களது சொந்த ஊர் ஸ்பெஷலான வடபாவை வெற்றிகரமாக லண்டனில் விற்று வருமானம் பார்க்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் அதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. முதன்முதலான வடபாவ் விற்கலாம் என்று முடிவு செய்ததும் அதற்கான இடம் தேடி இந்த நண்பர்கள் இருவரும் லண்டனில் ஒரு தெரு பாக்கியின்றி சுற்றி அலைந்திருக்கின்றனர். ஆனால், இடம் வசதியாகக் கிட்டினால், வாடகை கட்டுப்படியாகாது, வாடகை கட்டுப்படியானால் இடம் விற்பனைக்குத் தோதாக இல்லை எனும் நிலையில் தொடர்ந்து தேடி தங்களுக்கான சிறந்த இடத்தை ஒரு வழியாகக் கண்டு பிடித்து விட்டாலும் அங்கேயும் வாடகை சற்று அதிகம் தான். 2010 ஆம் ஆண்டில் இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதென்றால் வடபாவ் விற்க அனுமதி கிடைத்த மிகச்சிறிய இடத்திற்கு வாடகை மட்டும் மாதம் 35,000 ரூபாய்கள். வேற் வழியின்றி ஒப்புக் கொண்டு நண்பர்கள் இருவரும் கடையைத் தொடங்கினார்கள். முதலில் தங்களது பொருளை விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சாலையில் கடக்கும் அனைவருக்குமே இலவசமாக வடபாவ் சாப்பிடக் கொடுத்திருக்கிறார்கள். பண்டத்தின் ருசி வாடிக்கையாளரை ஈர்க்கவே மெது மெதுவாக தொழில் சூடு பிடிக்கத் தொடங்கியது. 
பிறகு முதலில் கிடைத்த கடையை விட்டு விட்டு இடவசதி நிறைந்த ஹவுன்ஸிலோ ஹை ஸ்ட்ரீட்டில் ஸ்ரீ கிருஷ்ணா வடபாவ் என்ற பெயரில் புதுக் கடையை கடையைத் திறந்தார்கள். 
ஆரம்பத்தில் வடாபாவ் மற்றும் டபேலி எனும் இரண்டே இரண்டு ஸ்னாக்ஸ்களுடன் ஒரு ஐஸ்கிரீம் பார்லரின் முன் பகுதியில் மிகச்சிறிய இடத்தில் தொடங்கப்பட்ட இவர்களது கடைக்கு இன்று லண்டனில் இரு இடங்களில் கிளைகள் உண்டு. அதில் தயாராகும் உணவு ஐட்டங்களின் எண்ணிக்கையும் பாவ் பாஜி, வட மிசல், பேல் பூரி, பானி பூரி, ரக்தா பட்டீஸ், கச்சோரி, சமோஸா, எனத் தற்போது 60 ஐத் தாண்டி விட்டது. வார இறுதி நாட்களில் போஹா மற்றும் சாபுதானா கிச்சடி கூட அங்கே கிடைக்கிறது. அது மட்டுமல்ல எல்லாவிதமான பண்டிகைகளுக்கும் கேட்டரிங் சர்வீஸ் செய்து கொடுக்கவும் இன்று அவர்கள் தயார். தங்களது விடாமுயற்சி மற்றும் தொழில் மீதிருந்து பக்தியால் இன்று அந்த நண்பர்கள் தொடங்கிய தொழிலின் ஆண்டு நிகர லாபம் எவ்வளவு தெரியுமா? இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதென்றால் கிட்டத்தட்ட 4.4 கோடி ரூபாய்.
7 வருட தொடர் போராட்டத்தில் விளைந்த வெற்றி இது. ஆட்குறைப்போ அல்லது வேறு ஏதாவது காரணத்தால் வேலை இழப்போ எதுவானாலும் சரி, எப்போதுமே கடின உழைப்பைத் தந்து வாழ்வில் முன்னோக்கி நகரத் தேவையான சவால்களுடன் புது முயற்சிகளைத் தொடங்கத் தயாராக இருப்பவர்களுக்கு வெற்றி உறுதி என்பது இவர்கள் மூலமாக மீண்டும் ஒருமுறை மெப்பிக்கப்பட்டிருக்கிறது.
வாழ்வின் இக்கட்டான தருணங்களிலும் மனிதர்களுக்குத் தேவையாக இருப்பது மூன்றே மூன்று தான்.
 
  • தெளிந்த சிந்தனை
  • நல்ல நட்பு
  • விடாமுயற்சி
இந்த மூன்றும் சுஜய்க்கு  கிட்டியதால் மட்டுமே அவர் இன்று ஒரு வெற்றிகரமான தொழிலதிபர்!

நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது ஏன் தெரியுமா? 


Published on : 14th October 2017 01:19 PM 
nandi1


சிவன் கோயில்களில், நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என்று சொல்வதுண்டு. குறிப்பாக பிரதோஷ காலத்தில் கட்டாயம் செல்லக்கூடாது என்கிறார்கள் அது எதற்காக தெரியுமா? 
சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவதுண்டு. 
நந்தியிவன் குறுக்கே செல்லக் கூடாது என தடை விதிப்பர். இதற்கு காரணம் உண்டு. நந்தி கர்ப்பக்கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவாத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் (இறைவன்) பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார். ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும். 
சன்னதியை மறைத்து நிற்காதீர்கள் என சொல்வதும் இதனால் தான். மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். மீறிச் செல்பவர்கள் ஏதோ கோயிலுக்குள் போய் வந்ததாக கணக்கில் கொள்ளப்படுமே தவிர, இறைவனின் அருள் அவர்களுக்கு கிட்டாது. அது மட்டுமல்ல, இறைவனின் முதல்வன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு கடிதம், பார்சல் அனுப்ப 4 இடங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள்


By DIN  |   Published on : 15th October 2017 04:13 AM 
வெளிநாடுகளுக்குப் புத்தகம், பதிவுத் தபால், பார்சல் உள்பட பல்வேறு பொருள்கள் அனுப்புவதற்காக 4 இடங்களில் சிறப்பு கவுன்ட்டர் திறக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு வட்டத் தலைமை தபால் துறைத் தலைவர் எம்.சம்பத் தெரிவித்தார்.
தி.நகரில் சிறப்பு கவுன்ட்டர் திறப்பு: சென்னை தியாகராயநகர் தலைமை தபால் அலுவலகத்தில் வெளிநாடுகளுக்கு புத்தகம், பார்சல், பதிவு தபால் ஆகியவற்றை பல்வேறு பொருள்களை அனுப்புவதற்காக சிறப்பு கவுன்ட்டர் சனிக்கிழமை (அக்.14) திறக்கப்பட்டது. இந்த கவுன்ட்டரை தமிழ்நாடு வட்டத் தலைமை தபால்துறை தலைவர் எம்.சம்பத் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியது: 
இரண்டாவது சிறப்பு கவுன்ட்டர்: சென்னை பரங்கிமலை தபால் அலுவலகத்தில் ஒரு சிறப்பு கவுன்ட்டர் செயல்படுகிறது. தற்போது, தியாகராய நகரில் இரண்டாவது கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பயிற்சி: வெளிநாடுகளுக்கு பார்சல் உள்பட பொருள்களை அனுப்புவது தொடர்பாக எல்லா விவரங்களும் தபால் துறையின் பொது கவுன்ட்டர்களில் பணியில் இருப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும் என்று கூறமுடியாது. சிறப்புக் கவுன்ட்டர் மூலம், எல்லாத் தகவல்களும் உடனுக்குடன் வழங்க முடியும். இந்த கவுன்ட்டரில் இரண்டு பேர் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சம் 35 கிலோ வரை...: கவுன்ட்டர் மூலம் வெளிநாடுகளுக்கு அதிகபட்சம் 35 கிலோ வரை அனுப்ப முடியும். வார விடுமுறை நாள்களிலும் இந்தச் சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் கூரியர் நிறுவனங்களை தபால் துறையில் கட்டணம் 50 சதவீதம் குறைவு.

    Chennai: HC holds nurses' strike prima facie illegal


    By PTI  |   Published: 14th October 2017 07:01 PM  |  

    Madras HC (File | PTI)
    CHENNAI: The Madras High Court has restrained the nurses of two hospitals here from continuing their stir till further orders, holding that their strike is prima facie illegal.
    The managements of the Kanchi Kamokoti Childs Trust Hospital and SRM Institute for Medical Sciences had submitted that the nurses were continuing their strike "illegally" from October 11.
    The nurses were demanding implementation of the recommendations of a committee formed by the Centre proposing minimum wages of Rs.20,000.
    The managements submitted that the strike was contrary to the "advice and law" of the Joint Commissioner of Labour at Chennai, and sought a direction to restrain the nurses from continuing their strike.
    The nurses are members of Global Nurses Association of Tamil Nadu (GNAT).
    In his order yesterday, Justice T. Raja said when poor injured patients are fighting for their life in these hospitals, the staff nurses, who are GNAT members, cannot be "oblivious to the serious consequences of their strike." If the members of the association are not prohibited from going on strike, the precious life of the patients would be put to irreparable loss and injury, the court said.
    Justice Raja said in the present case, conciliation proceedings were also pending relating to the issue for which strike notice had been given.
    Therefore during pendency of conciliation proceedings the prohibition contained in clause (d) of the sub-section (1) of section 22 of the Industrial Disputes Act has come into operation right from the date of notice issued by the conciliation officer on October 11, the judge said.
    "Therefore the strike being reported by the members of the association is prima facie illegal," the judge added.

    Health dept alone can’t work wonders’

    tnn | Oct 13, 2017, 00:47 IST

    Madurai: The state was on the verge of a dengue epidemic despite being on red alert as nothing was being done to eradicate the mosquito vector of the disease, the Tamil Nadu Government Doctors Association has alleged.

    Association president Dr K Senthil told mediapersons in Madurai on Thursday that the health department alone could not prevent the spread of the disease. ``The maximum period for which you can keep a department on alert is about 45 days, after which complacency would set in, which could be detrimental in the current situation,'' he said. Steps had to be taken to control mosquito breeding on a war footing.

    All government hospitals were geared up and doctors were also working round-the-clock to control the situation, but all the other departments were not doing their part, he alleged. Many doctors were also foregoing their weekly offs, but the government should also provide adequate nursing staff, he said. The local bodies did not seem to be working on mosquito eradication measures at the required speed. ``If mosquito eradication is not done on a war-footing the situation would go out of control,'' he said.

    Death of 16-year-old girl: Parents arrested for `honour' killing

    TNN | Updated: Oct 14, 2017, 09:50 IST

    HIGHLIGHTS

    The girl's father R Gnanavel and mother Seethalakshmi had told the police that she committed suicide due to severe stomach pain

    On being interrogated, the parents confessed to an 'honour' killing, saying they had murdered Annalakshmi after a fight with her over her “licentious behavior“



    MADURAI: Madurai district police on Friday arrested a couple for the alleged murder of their 16-year-old daughter. This comes a day after the Allahabad high court acquitted Rajesh and Nupur Talwar in the double murder case of their daughter Aarushi and domestic help Hemraj. Police said the victim G Annalakshmi, a resident of Kilavaneri village near Tirumangalam was found dead on October 7. The girl's father R Gnanavel and mother Seethalakshmi had told the police that she committed suicide due to severe stomach pain. Further investigations and post mortem report, however, revealed that the girl was murdered, said police.

    On being interrogated, the parents confessed to an 'honour' killing, saying they had murdered Annalakshmi after a fight with her over her "licentious behavior".

    Annalakshmi had dropped out of school after failing in Class X board examinations and had been attending tutorial classes in an attempt to pass the exams.That's when she came in contact with a few boys. Since then Annalakshmi was seen texting boys and occasionally meeting them, which did not go down well with her parents who kept warning her, police said.

    The parents came down heavily on her when fellow villagers started speaking ill about her. During an argument with the girl on the matter on October 7, Gnanavel allegedly strangulated her in a fit of rage. As she fell down unconscious the parents thought she was dead and hanged the body to convince others that she had committed suicide, police said.

    LATEST COMMENTHang that idiot couple to death killing their 16-year-old daughter.Evans Chris Sumitra

    The couple made others believe that their daughter was depressed over her poor performance in studies. She had recently developed stomach pain as well.

    Although the police had initially registered a case of suspicious death, the postmortem report that they received on Thursday suggested that she was murdered.

    HC asks police to submit status report on probe against TN minister

    PTI | Oct 14, 2017, 19:13 IST

    Kumar, in his petition, alleged that Kamaraj had promised to evict an occupant from his property and taken a b... Read More

    CHENNAI: The Madras High Court has directed the police to submit a status report on the probe into a case filed against Tamil Nadu minister R Kamaraj and an official in the secretariat for allegedly cheating a real estate businessman of Rs 45 lakh.

    Justice M S Ramesh gave the direction recently to the inspector of the Mannargudi police station, on a petition filed by the businessman, S V S Kumar, seeking to transfer the probe against Food Minister Kamaraj and the official either to the CB-CID or CBI.

    The judge has also directed Kumar to appear before the Mannargudi police on October 23.

    Kumar, in his petition, alleged that Kamaraj had promised to evict an occupant from his property and taken a bribe of Rs 45 lakh from him through Ramakrishnan, the official in the secretariat, in 2011 for the same.

    After becoming a minister, he neither got the job done nor did he return the money, the petitioner alleged.

    He also alleged that he was being threatened by some unidentified persons.

    Kumar had submitted before the court that though the Mannargudi police had lodged a case against the minister and the official on the basis of his complaint on May 5, no further action had been taken by them.

    Hence, he had prayed that the case be transferred to the CB-CID or CBI.

    Blank screen? Might be a sextortion call

    Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...