Thursday, October 26, 2017

Amrita Express to run up to Madurai from Nov

Realising a long-pending demand of passengers, the Thiruvananthapuram-Palakkad Amrita Express will be extended to Madurai from November first week.
Enhancing rail connectivity to the district, Chennai Central-Palani Express will be extended to Palakkad Junction in another week.
The special passenger train connecting Thiruchendur in Tamil Nadu with Palakkad Town will be extended to Palakkad Junction and operated permanently.
Rail time table
As per the new railway time table which will come into effect from November 1, Amrita Express from Thiruvananthapuram will reach Palakkad Junction at 7 a.m. and Madurai at 1.10 p.m. via Pollachi and Palani.
The return journey will begin from Madurai at 3.45 p.m. and the train will reach Palakkad at 9.15 p.m. before proceeding to Thiruvananthapuram.
The Chennai-bound express train via Palani will be a daily service.
It will leave Palakkad Junction at 3 p.m. and reach Chennai at 4.15 a.m. the following day. The train will leave Chennai Central at 9.40 p.m. and reach Palakkad Junction at 11 a.m. the following day.
While the Chennai train will stop at Kollangode on the recently gauge converted Palakkad-Pollachi stretch, Amrita Express will not have any stop between Palakkad and Pollachi. The Thiruchendur passenger will stop at the Pudunagaram, Muthalamada, and Meenakshipuram stations on the stretch.
“Palakkad is getting better rail connectivity with the extension of the new trains. However, our long-pending demand for direct trains to Rameswaram continues to remain unaddressed,” said Khader Moideen of the Palakkad-Pollachi Passengers Association.

Kuvempu University dismisses four employees

Cracking the whip on its eight non-teaching employees for their alleged involvement in the fake marks card scam, Kuvempu University has dismissed four of them and has decided to nullify the service seniority of four others.
A racket related to issuance of fake marks cards and awarding high marks to students by taking bribes in Kuvempu University was unearthed by the Bhadravati police in May 2012. The police had filed cases against nine non-teaching staff of the university for their alleged role in the irregular practices. Of the nine employees, one died during the course of the probe. In addition to the police probe, the university had also ordered for an internal probe into the irregularities. Based on the report submitted by the probe panel and the recommendation of the meeting of the Syndicate, the university in July 2015 had dismissed four employees — Shivakumar, Siddacharya, L. Ramu, and Ramesh — who were serving as junior assistants from service and had decided not to consider the present service seniority of Assistant Registrar Palaksha Naik and junior assistants Peerya Naik, Madan, and Thimmaiah for future appraisals.
The order passed by the university was questioned by the employees in the High Court on the grounds that second show-cause notice was not issued for them prior to initiating disciplinary action against them and that their statements were not recorded during the inquiry conducted by the university. The order passed by the university was quashed by the Court as second show-cause notice were not served for the employees and that their statements were not recorded during the inquiry. Following this, the university had re-instated all the eight employees in their positions.
After this, the second show-cause notices were issued for all the eight employees and their statements were also recorded. After following the due legal process, H.S. Bhojya Naik, Registrar of the university, passed an order on October 23 to dismiss four employees — Shivakumar, Siddacharya, Ramu, and Ramesh — who were serving as junior assistants from service and to nullify the service seniority of four others — Assistant Registrar Palaksha Naik and junior assistants Peerya Naik, Madan, and Thimmaiah.

ICICI Bank directed to pay compensation of Rs. 50,000

For auctioning a car of 2003 model as 2007 model

Madurai District Consumer Disputes Redressal Forum on Wednesday directed ICICI Bank to pay a compensation of Rs. 50,000 to a city resident for having sold in auction a 2003-model car in the guise of a 2007-model vehicle.
S. Srinivasan, the petitioner, bought the car on seeing an advertisement in an e-commerce portal. The bank had seized the car from its owner for default in loan repayment. The advertisement had mentioned that it was a 2007-model vehicle.
Mr. Srinivasan paid Rs. 1.04 lakh in the name of the original owner of the car with the bank branch on Bypass Road as directed by the bank officials.
Later, he was asked to take delivery of the vehicle from the yard manager and collect the original R.C. Book from the car owner.
When Mr. Srinivasan took the car for service, he found that the vehicle model was 2003 and not 2007 as advertised. Besides, he could not collect the RC book from the owner as she claimed that she had pledged it with someone else.
Mr. Srinivasan filed a complaint with the forum seeking return of Rs. 1.04 lakh he paid for the vehicle, Rs. 6,000 he paid to the portal and service charge of Rs. 35,000 he had incurred. He also sought a compensation of Rs. 50,000.
The bank said it was not liable for refund of the auction price. The online portal said it was only a platform for buyers and sellers and was not a party to the transaction.
When the case came up for hearing, the forum, comprising chairman V. Balasundarakumar and members C. Packialakshmi and M. Maraikamalai, observed that ICICI Bank, which was the seller, neither handed over the R.C. Book nor gave any explanation as to why it was not recovered from the original owner.
Besides, it found the bank guilty of providing wrong information in the website regarding the model of the car and said it amounted to deficiency in service and unfair trade practice.
The Consumer Disputes Redressal Forum directed the bank to pay a compensation of Rs. 50,000 for the mental agony and monetary loss suffered by the complainant.
Besides, the bank should pay him Rs. 3,000 as cost, it ordered.

Court shocked over lawyers’ qualification

713 ‘non-graduates’ allowed to practice

The Madras High Court on Wednesday expressed shock over Bar Council of Tamil Nadu and Puducherry (BCTP) having permitted as many as 713 people, who had obtained law degrees on the basis of postgraduate courses completed through open university system without having undergone graduation courses, to get enrolled as lawyers between 2009 and 2016.
Justice N. Kirubakaran left it open to Advocate-General Vijay Narayan, now the ex-officio chairman of the council, to issue show-cause notices to all the 713 candidates seeking explanation as to why their enrolment should not be cancelled since the Supreme Court had, in 2009, held against obtaining master’s degrees without completing graduation.
The judge also said that it would be open to the Advocate-General to initiate appropriate action, against 42 other lawyers who had enrolled with the Bar Council, before the tenure of its elected office-bearers came to an end on April 19 last year, without even providing basic documents including address proof.
The court was told that though a special committee, which was now administering the BCTP under the chairmanship of Mr. Narayan, had issued notices to the 42 advocates through e-mail, only two had replied so far.
Curiously, one of the 42 advocates had enrolled twice with the council and he had been allotted two different enrolment numbers.
After recording the submission of the Advocate-General that an elaborate verification process of all lawyers enrolled with the Bar Council was under way, the judge said that the elections to the council could be conducted only after the process was completed in order to ensure that only “genuine” advocates participate in the election process.

FIR registered against V-C

FIR registered against

Pondicherry varsity V-C

Kalapet police on October 24 registered an FIR against Pondicherry Vice-Chancellor (in charge) Anisa Basheer Khan, Professor of Economics M. Ramachandran, data entry operator Veerappan and private secretary to V-C Rajkumar on charges of criminal conspiracy, fraud and forgery. Complainant A. Balasubramanian, a retired Deputy Registrar and former Law Officer had filed the complaint.

ஆன்லைனில் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? இதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா?

Published on : 25th October 2017 05:59 PM  |
credit_cards--621x414


ஆன்லைனில் டெபிட் கார்டைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் பழக்கமுள்ளவர்கள் அதனை தவிர்ப்பதே உங்கள் பார்ஸுக்கு நல்லது என்கிறது நாட்டு நடப்புகள்.
ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது என்பது பலருக்கும் பிடித்த விஷயமாக இருக்கலாம். சொல்லப்போனால் அதுவே தவறுதான். ஏன் எப்படித் தவறாகும்.. எத்தனை சலுகைகள், மற்ற பொருட்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு. வீட்டுக்கே வந்து டோர் டெலிவரி செய்யும் வசதி. இதில் என்ன குறை கண்டீர்கள் என்று கேட்கலாம்.
எல்லாம் சரிதான். ஆனால், ஆன்லைன் ஷாப்பிங்கில் மின்சாதன, செல்போன்களைத் தவிர்த்து, நீங்கள் பார்க்கும் பொருளின் தரமும், வாங்கிய பொருளும் பல நேரங்களில் ஒன்றாக இருப்பதில்லை. ஆன்லைனில் வாங்கினேன் என்று அலட்டிக் கொள்ளலாமே தவிர, நேரடியாக துணியோ பொருளோ பார்த்து பார்த்து வாங்குவது போல் அமையாது.
சரி முடியாதவர்கள், நேரமில்லாமை போன்ற பல விஷயங்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங் வரப்பிரசாதமாகவே இருக்கிறது. அதில் தவறில்லை.
ஆன்லைனில் டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்வது என்றால் நிச்சயம் அது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அதற்காக ஆன்லைன் ஷாப்பிங்கே பாதுகாப்பற்றது என்று நினைக்கவேண்டாம். ஆன்லைனில் டெபிட் கார்டைப் பயன்படுத்துவது தான் ஆபத்து என்கிறோம்.
முதல் காரணம் என்னவென்றால்...
ஒருவரிடம் இரண்டு வகையான அட்டைகள் இருக்கும். ஒன்று டெபிட் கார்டு, மற்றொன்று கிரெடிட் கார்டு. இரண்டைக் கொண்டுமே ஆன்லைனில் பொருட்களை வாங்கலாம். ஆனால் ஒரே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அதுதான் கிரெடிட் லிமிட் என்ற அந்த இரட்டை வார்த்தை.
டெபிட் கார்டில் இந்தக் கட்டுப்பாடு இல்லை. அதாவது உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருக்கும் வரை உங்களால் ஆன்லைனில் பொருட்கள் வாங்க முடியும். ஆனால், கிரெடிட் கார்டில் அப்படி இல்லை. அதற்கென்று ஒரு தொகை அளவு இருக்கும். 
இந்த இடத்தில்தான் ஒரு வில்லங்கம் இருக்கிறது. அதாவது, ஆன்லைன் ஷாப்பிங் மூலம் உங்கள் டெபிட் கார்டு விவரம் திருடப்பட்டால் நீங்கள் இழப்பது, உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் மொத்தப் பணமும். அதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
ஆனால், கிரெடிட் கார்டின் விவரம் திருடப்பட்டால் நீங்கள் இழப்பது அந்த அட்டையின் உச்ச வரம்புத் தொகை மட்டுமே.
இரண்டாவது காரணம் இதுதான்..
உங்கள் கிரெடிட் கார்டில் இருக்கும் உச்சவரம்புத் தொகை உங்கள் பணமல்ல. எப்போது நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருள் வாங்குகிறீர்களோ, அப்போது நீங்கள் உங்கள் வங்கியின் பணத்தைப் பயன்படுத்துகிறீர்கள். அந்த பணத்தை செலுத்த வேண்டிய காலத்துக்குள் செலுத்தி விடலாம்.
அதே சமயம், உங்கள் கிரெடிட் கார்டு திருடப்பட்டோ அல்லது தகவல் திருடப்பட்டோ பிறரால் பயன்படுத்த நேரிடும் போது அதற்கு நீங்கள் பொறுப்பாக மாட்டீர்கள். உங்கள் வங்கிதான் பொறுப்பேற்க வேண்டும்.
ஆனால் உங்கள் டெபிட் கார்டு மற்றவர்களால் பயன்படுத்தப்பட்டு, பணம் பறிபோகும் போது உங்களுக்கும் அதில் சிக்கல் இருக்கிறது. ஏன் என்றால் பறிபோனது உங்கள் பணம்.
இது குறித்து வங்கியில் புகார் அளித்தால், தகவல் எப்படி திருடப்பட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும். விசாரணையில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டால், உங்கள் பணம் திரும்ப செலுத்தப்படும்.
இதில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு இடையே என்ன வித்தியாசம் என்றால், டெபிட் கார்டில் உங்கள் பணம் களவுப் போகிறது - வங்கியில் புகார் அளிக்கிறீர்கள் - புகார் உண்மை என்று தெரிய வந்து பணம் செலுத்தப்படும் வரை உங்களிடம் பணம் இருக்காது. அதே சமயம், புகாரில் உண்மை இல்லை என்று மறுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இதில் அனைத்துக்கும் நீங்களே முழுமையாக வங்கியைத் தொடர்பு கொண்டு பேச வேண்டும்.
ஆனால் கிரெடிட் கார்டில் முறைகேடு நடக்கும் போது உங்கள் சொந்தப் பணம் திருடு போகவில்லை - வங்கியில் புகார் அளிப்பதோடு சரி, அது அவர்களது பிரச்னையாக மாறும். ஒரு வேளை உங்கள் புகார் நிராகரிக்கப்படுகிறது என்று வைத்துக் கொண்டாலும், பணத்தைத் திரும்ப அளிக்க முடியாது என்று உங்களால் வாதிடக் கூட வாய்ப்பு உள்ளது. இது டெபிட் கார்டில் இல்லை. போனது உங்கள் பணம். 
எனவே, ஆன்லைன் ஷாப்பிங்கின்போது டெபிட் கார்டு பயன்பாட்டை கூடிய வரை தவிர்ப்பது நலம்.

    கல்வி சான்றிதழ் இல்லாத 265 வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்


    By DIN  |   Published on : 25th October 2017 07:01 PM  |   
    கல்வி மற்றும் இருப்பிட சான்று சமர்ப்பிக்காத 265 வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மேலும் 15 நாட்களுக்குள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

      தீருமா கந்துவட்டிக் கொடுமை?


      By ஆர். வேல்முருகன்  |   Published on : 26th October 2017 01:23 AM  |
      திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள், பெற்றோர் என நான்கு பேர் கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டதைப் பார்க்கும்போது கல்மனம் கொண்டவர்கள்கூட கண்ணீர் வடித்திருப்பார்கள்.
      கந்து வட்டிக் கொடுமை இன்றும் ஊருக்கு ஊர் நடந்து கொண்டுதான் உள்ளது. பொள்ளாச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விஷமருந்தித் தற்கொலை செய்து கொண்டனர். 
      காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து கந்து வட்டி கேட்டுக் கொடுமைப்படுத்தியவர்களைக் கைது செய்தனர். அத்துடன் சரி.
      இந்த விஷயத்தில் அரசு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல கந்து வட்டிக்கு விடுபவர்கள் யாரென்று காவல்துறைக்கு நன்றாகத் தெரியும். இந்த விஷயத்தில் கந்து வட்டிக்கு விடுபவர்கள், காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளின் முக்கோணக் கூட்டணிதான் வெல்கிறது.
      இந்தப் பிரச்னையில் அப்பாவிகள் மட்டும் கந்து வட்டிக் கொடுமையை அனுபவிக்கவில்லை. மிகப் பெரிய தொழிலதிபர்கள், நடிகர்கள் கூட கந்துவட்டிக் காரர்களிடம் சிக்கிக் கொண்டு படாதபாடு படுகின்றனர். 
      தொழிலை விரிவுபடுத்தவும் வியாபாரத்துக்குத் தேவைப்படும் பணத்துக்காகவும்தான் இவ்வாறு வெளியிடங்களில் பணம் புரட்ட வேண்டியுள்ளது.
      வங்கிகளின் பாராமுகத்தாலும் தேவைப்படும் பணத்தை உடனே புரட்ட முடியாததாலும்தான் அனைவரும் தனியார் நிதி நிறுவனங்களையும் கந்து வட்டிக்காரர்களையும் நாட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. 
      நமது வங்கியாளர்களோ ஏமாற்றுப் பேர்வழிகளுக்குத்தான் தேவைப்படும் பணத்தைக் கொடுக்கிறார்களே தவிர உண்மையிலுமே தேவைப்படுவோர்களுக்குத் தொகையைக் கொடுப்பதற்கு ஏகப்பட்ட வழிமுறைகளையும் தேவையில்லாத நடைமுறைகளையும் சொல்லி உதாசீனப்படுத்துகிறார்கள்.
      சிறுதொழில்கள் கோலோச்சிக் கொண்டிருக்கும் கரூர், திருப்பூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட இடங்களில் கந்துவட்டிக் கொடுமை மிக அதிக அளவில் உள்ளது. 
      இங்கெல்லாம் ரூ.1 லட்சத்துக்கு தினமும் ரூ.500 முதல் ரூ.1,500 வரை கந்துவட்டி வசூலிக்கப்படுகிறது. பணத்தை வாங்கிவிட்டுத் தரத் தாமதப்படுத்தினால் வீட்டுக்கு வந்து தரக்குறைவாகப் பேசுகிறார்கள். 
      இதனால் அக்கம்பக்கத்தினர் வேடிக்கைப் பார்க்கும் சூழ்நிலை உருவாகிறது. இதற்குப் பயந்துதான் பலர் தங்கள் வாழ்க்கை மாய்த்துக் கொள்கின்றனர்.
      எல்லாம் முடிந்தபிறகு போலீஸார் தங்களிடம் எந்தப் புகாரும் இல்லை என்று தெளிவாகச் சொல்லிவிடுகின்றனர். பிறர் மீது மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் போலீஸார் மீது யார் நடவடிக்கை எடுப்பது?
      தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் கந்து வட்டிக் கொடுமையும் அதனால் பலர் பாதிப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் புகார் வந்தவுடன் சிறிது நாள்களுக்குப் போலீஸார் நடவடிக்கை எடுப்பது போலக் காட்டிக் கொள்கின்றனர். ஆனால் அதன்பின் எந்த நடவடிக்கையும் இருக்காது.
      கந்துவட்டிக் கொடுமை என்று புகார் வந்தவுடன் பல்வேறு தரப்பிலிருந்தும் புகார் கொடுப்பார்கள். இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக வாங்கிய பணத்துக்குக் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாகவும் பல பொய்ப் புகார்கள் வருகின்றன. 
      ஆனால் காவல்துறையினர் இதையும் பதிவு செய்து மொத்தம் இவ்வளவு புகார்கள் வந்தன. அதில் இத்தனை புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன என்ற கணக்குக்காகப் பதிவு செய்து தாங்கள் சரியாக இருப்பதாகக் காட்டிக் கொள்கின்றனர். அதற்கு மட்டுமே இந்தக் கணக்குகள் உதவும். வேறு எதற்கும் பயனில்லை.
      திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிகழ்ந்த சம்பவத்தில் யாரைக் குற்றம் சொல்வது? 
      கொடுத்த பணத்தை வட்டியுடன் வாங்கிக்கொண்டு மீண்டும் வட்டி தர மிரட்டியவரையா? புகார் கொடுத்தும் அதை விசாரிக்காமல் விட்ட காவல்துறையினரையா? புகாரைப் பெற்றுக் கொண்ட பின் நடவடிக்கை எடுக்க முடியாத மாவட்ட ஆட்சியரையா? தங்கள் குழந்தைச் செல்வங்களைத் தீக்குளிக்க வைத்துக்கொன்ற பெற்றோரையா? 
      பெற்றோர் செய்த தவறுக்கு குழந்தைகளுக்கு எதற்காகத் தண்டனை? தீயில் உடல் பற்றி எரியும்போது எதற்காகத் தனக்கு இந்தக் கொடுமை நடக்கிறது. இதற்கு யார் காரணம் என்று அந்தக் குழந்தைகளுக்குத் தெரிந்திருக்குமா? அப்போது அக் குழந்தைகளின் மனதில் என்ன தோன்றியிருக்கும்?
      இதற்கெல்லாம் அரசு எப்போது முடிவு கட்டப்போகிறது? வங்கிகளின் விதிகளில் மட்டுமல்லாமல் காவல்துறையினரிடமும் மனமாற்றம் வேண்டும். அவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டால் பல உயிர்கள் பலியாவதைத் தடுக்க முடியாது.
      வங்கிகளும் தேவையானவர்களுக்குத் தகுந்த பண உதவிகளைச் செய்ய வேண்டும். இதற்காக தங்கள் சட்ட திட்டங்களில் இருந்து சிறிது மாறினாலும் தவறில்லை. அதன் மூலம் சமுதாயத்துக்கு நன்மை செய்ய வேண்டும். 
      பணம் இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்களும் இல்லை. பணமில்லாத ஏழைகள் அனைவரும் மோசமானவர்களும் அல்ல.
      கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொழில் செய்யும் பலர் வங்கிகளின் விதிமுறைகளுக்கு பயந்து வங்கிகளில் கடன் வாங்காமல் கந்துவட்டிக் காரர்களை நாடுகின்றனர். வங்கிகள் பெரிய தொழிலதிபர்களுக்கு கடன் கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றன. ஆனால் அவர்கள் ஏமாற்றுகின்றனர். 
      தங்களுக்குக் கடன் தொகை குறைவாகக் கொடுத்தாலும் அதைக் கட்டி முடிக்கும் வரை தூங்காமல் பாடுபட வேண்டும் என்ற எண்ணமுள்ள ஏழைகளுக்கு வங்கிகள் தாராளமாகக் கடன் கொடுக்க முன்வந்தால் மட்டுமே இந்நாட்டில் ஏழைகள் உயிரைக் குடிக்கும் கந்து வட்டிப் பிரச்னை முடிவுக்கு வரும்.
       

      வாழ்வை வளமாக்கும் வாசிப்பு


      By கிருங்கை சேதுபதி  |   Published on : 26th October 2017 01:24 AM  
      sethupathi
      Ads by Kiosked
      அன்றாட வாழ்வில் உடல்நலம் காக்க இன்றியமையாத பயிற்சியாக நடை இருப்பதுபோல் உளநலம் பேண உதவும் ஒரு பயிற்சியாக நாம் வைத்துக்கொள்ள வேண்டியது, வாசிப்பு. 
      'பணிபெறுதலுக்கான அளவோடு முடிந்துவிடுகிறது, படிப்பு' என்பது மூடத்தனம். சுவாசிக்கும் காலம் வரை சுகமாய் வாழ, வாசிப்பே உயர்துணை; அதுவே உயிர்த்துணையும். 
      காலையும் மாலையும் கைகள் வீசிக் காலார நடப்பது உடலுக்கு எவ்வளவு சுகமோ, அவ்வளவு சுகம், மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து மனங்குளிர வாசிப்பது. 
      அருளுணர்வை, அல்லது தன்னம்பிக்கை தரும் மந்திரம் போன்ற நல்ல தொடர்களைத் தரும் உயர்ந்த புத்தகங்களில் இருந்து நெஞ்சம் ஏற்றுக் கொள்ளும் அளவுக்குக் கொஞ்சமாய்ப் படித்தால் கூடப் போதும். 
      வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகிறதோ இல்லையோ, வாய் விட்டு வாசித்தால் மனத்தைப் பீடித்திருக்கும் மௌன அழுத்தங்கள் தானே விடைபெற்றுப்போகும். 
      மௌனவாசிப்போ, மகத்தான சுகானுபவம். அதுபோல், மாலையில் இயலாவிடினும் இரவில்! 'உணவு முடித்தபின் நல்லுறக்கம் வாய்க்க மெல்லிய நடை தேவை' என்று சொல்கிறார்கள். அது உடலுக்கு; அதுபோல் மனதுக்கும் மெல்லிய வாசிப்பு இதந்தரும். 
      பலப்பல எண்ணங்கள், ஏக்கங்கள் எல்லாம் வந்து அழுத்த, நல்லுறக்கமின்றித் தவிக்கும் கணங்களில், மெல்லிய தென்றல் போன்ற உரைநடை நூல்கள் பெரிதும் உதவிடும். தனிமைக்குத் துணையாகும் எந்தவொரு நூலும் தன்னலங் கருதா உன்னதத்தோழன். 
      எத்தனை முறை எடுத்துப் படித்தாலும் முதல்முறை போலவே, ஈர்க்கும் புத்தகம், இனிய காதல்இணை; தடுமாறும் கணங்களில் தடம் மாறிவிடாமல் தாங்கி நெறிப்படுத்தும் நூல், நல்லாசான்; எந்த நிலையிலும் இன்னுயிர்க்கு, இன்னல் வாராமல் காப்பது தெய்வநூல்! 
      இப்படி எல்லா நிலைகளிலும் மனிதர்கட்குக் கூட வரும் ஞானப் பெட்டகங்கள் நூல்கள்; நெறியின் புறங்கொண்டு நிறுத்தி மனிதமனங்களை மாசுபடுத்தும் தீயசக்திகளை ஒட்டவிடாமல் துரத்துகின்ற தூய தேவதைகள்! 
      எழுதியவரையும், எடுத்து வாசிப்பவரையும் நேருற நிறுத்திச் சீருற ஆக்குவது வாசிப்பு. வாசிப்பு என்பது, வாழ்வை மேன்மையாக்கும் தவம். 
      வரிகளாய் விரியும் வாசகங்களின் உள்ளே, வாழ்க்கை அனுபவங்கள் பதிவான அழகை ஒன்றி வாசிப்பது, ஒருவகை தியானம்; நின்று சிந்திப்பது ஆழ்ந்த தியானம்; அனுபவத்தில் செயல்படுத்தும்போது, அது யோகம். இந்நிலை தொடர்ந்து வரவர, தத்தம் நிலையில், தொலைநோக்குத் திறனாகிய தீர்க்கதரிசனப் பார்வை புலப்படும். 
      நாட்பட நாட்படக் கூர்பெறும் இத்திறத்தினால், தனிநபர்க்கும், சமுதாயத்திற்கும் நன்மையே பெருகும். அத்தகைய தனிநபர்களே, சமுதாயம் போற்றும் சான்றோர்களாக என்றென்றும் வரலாற்றில் வாழ்கிறார்கள். 
      வாசல் இல்லாத வீடும் வாசிப்பு இல்லாத வாழ்நாளும் பயனற்றவை என்பதை அனுபவித்தவர்கள் உணர்வார்கள். அத்தகு அனுபவம் வாய்க்கப் பெறாதவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் பல்வேறு அல்லல்களுக்கு ஆட்பட்டுத் தவிப்பதைக் காண்கிறோம். 
      நலம் வேண்டி மருத்துவர்களை நாடுகிறவர்களின் உடற்கூறுகள்தாம் பெரும்பாலும் பரிசோதனைகளுக்கு ஆட்படுகின்றனவேயன்றி, உள்ளம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதேயில்லை. பல சமயங்களில் இனம்புரியாத மன அழுத்தங்களே, உடல்நலம் கெடுக்கும் காரணிகளாகவும் ஆகிவிடுகின்றன. 
      சின்னச் சின்ன உடல்சார் சிக்கல்கள்கூட, பென்னம்பெரிய மனக்கவலைகளை வளர்த்து நம்மை நோயாளிகளாக்கி விடக்கூடியவை. அவற்றில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும் கவசங்கள், புத்தகங்கள். 
      பிறர் அனுபவங்களையும் தன்னனுபவமாக்கித் தரக்கூடியது வாசிப்பு. பயன்படுத்தாத கத்தி, துருப்பிடிப்பதுபோலத்தான் பயன்பாடில்லாத புத்தியும். வரம்பு மீறிப் பயன்படுத்தப்படும் வாகனங்கள், கருவிகள் பழுதாகிவிடுகின்றன; அவைபோல், பயன்படுத்தாதவையும். 
      அந்த வரிசையில் உடல் உறுப்புகளும் அடங்கும்; அதில், உள்ளத்திற்கும் இடம் உண்டு. உள்ளும் தொழில் புரிவதால் அது 'உள்ளம்'. 'உள்ளத்தனையது உயர்வு' என்கிறது வள்ளுவம்; அதற்கு முன்னொட்டாய் 'மாந்தர்க்கு' என்று தனித்தும் உணர்த்திவிடுகிறது. 
      இன்னும் நுட்பமாய் விளங்கிக் கொள்ள, நம்மை நீர்நிலையின் முன் கொண்டுபோய் நிறுத்துகிறார் வள்ளுவர். நீரின் மட்டமும், மேல் மலர்ந்த மலர்களின் உயரமும் சமம். கரை உயர்ந்த நீர்நிலையில் கால் பங்குதான் நீர். 
      ஒருநாள் இரவில் பெய்த பெருமழையில் கரை தொட்டு நிறைகிறது குளம். அதனளவு உயர்ந்து சிரிக்கின்றன, அல்லியும், தாமரையும். 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்' என்று விளக்கிக் காட்டுகிறார் வள்ளுவர். 
      மலர்களைக் கைகாட்டிய வள்ளுவர் மானுடத்தை நோக்கி, மௌனமாக வினாத் தொடுக்கிறார்: 'உடல் உயரம் வளர்ந்த அளவிற்கேனும் உள்ளம் உயரவேண்டாமா?' 
      எத்தனை பெரிய பள்ளத்தில் அழுத்தப்பட்டுக் கிடந்தாலும் வெள்ளத்தின் பெருக்கைப்போல் மேவிவரும் கவிப் பெருக்கையும், கலைப்பெருக்கையும் உள்வாங்கிக் கொண்டால் உயரலாம் என்பதுதான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை. 
      இங்கே இன்னொரு உண்மையையும் உய்த்துணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தத்தம் துறைசார்ந்த அறிவிலும் சிந்தனையிலும் மட்டுமே, ஒருவர் உயர்ந்திருந்தால் போதாது. பல்துறைசார் அறிவும் பக்கபலமாக, தத்தம் துறைசார் அறிவும் மிக்கு உயர்வதே வளர்ச்சி. 
      இன்றைக்கு அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த ஊடகங்கள் அசுர வளர்ச்சி பெற்றிருக்கின்றன. வாசிப்பில் இருந்து, படிப்பிற்கும், படிப்பில் இருந்து பெறும் படிப்பினை கற்றலுக்கும் உள்ளத்தை உயர்த்திக் கொண்டு வளர்வது ஒவ்வொரு மனிதர்க்கும் உரிய கடமை! 
      கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்பார் என் தந்தையின் தோழர் ஒருவர். அவர் பண்டிதர் அல்லர்; ஆனால், எந்தப் பண்டிதரோடும் தர்க்கம் பண்ணக்கூடிய அளவிற்குக் கம்பனைக் கற்றவர்; வள்ளுவரை உள்வாங்கியவர்; காளமேகம்போல் அவ்வப்போது கவிபாடவும் வல்லவர்; கிடைத்தவற்றைப்படித்துப் பெற்றவற்றில் இருந்து தன்னறிவைத் தமிழறிவாக வளர்த்துக் கொண்டவர். 
      அவ்வாறு தான் கண்டதையெல்லாம் கற்றுக் கவிபாடினார் கண்ணதாசன். 'கண்டதைச் சொல்லுகிறேன் - உங்கள் கதையைச் சொல்லுகிறேன்' என்று பாடிக் கதையும் எழுதிநிலைநின்றார் ஜெயகாந்தன். 
      இவர்கள் எல்லாம் பள்ளிக் கல்விகூட முழுமையாக முடிக்காதவர்கள். ஆனால் இவர்களது எழுத்துக்கள் இல்லாமல் பள்ளி தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரையிலான எந்தப் பாடப்புத்தகங்களும் உருவாவதில்லை.
      'கண்டது கற்றுப் பண்டிதன் ஆகலாம்' என்று படித்து அவ்வாறே பழகுகிற நாம், கற்கிறபோது இன்னும் வளரத்தொடங்குகிறோம்.
      படிப்பது வேறு; கற்பது வேறு. உதட்டளவில் நிகழும் வாசிப்பு மனதில் படியும்படி தொடர்வது படிப்பு; மனதில் படியும்படியாகப் படிக்கும் பழக்கம் வழக்கமாகி, அதன்வழி, வாழ்க்கையின் அங்கமாக வளர்வது கற்றல்; அத்தகையதே கல்வி.
      இப்போது 'கண்டது கற்கப் பண்டிதனாகலாம்' என்கிற பழமொழி புதுமொழியாகத் தெரிகிறது. 'கண்ணில் கண்டது (எல்லாம் எடுத்துக்) கற்கிற ஒருவன் பண்டிதன் ஆகலாம்' என்பது பழமொழி தரும் கருத்து.
      'கண்டு அது கற்கப் பண்டிதன் ஆகலாம்' என்கிறபோது அது புதுமொழி. அதாவது, கண்ணில் காணக் கிடைக்கிற அனைத்தையும் கண்டு புத்தக எல்லைகள் கடந்த எந்த உண்மையையும் எந்த முறையிலும் கண்டு - அதில் தனக்கு எது தேவை எனத் தேடிக் கண்டு, அது கற்றால் பண்டிதன்; பண்டிதன் என்றால், வெறும்பண்டிதத்தனத்தை மட்டும் அது குறிக்காது; தத்தம் துறையில் தகுதிசால் அறிஞர் என்பதையும் பெற்றுத்தரும் ஒரு சொல். 'கற்றிலன் ஆயினும் கேட்க' என்றும் கட்டளையிடுகிறார் வள்ளுவர். 
      'யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
      சாந்துணையும் கல்லாத வாறு'
      என்றும் சாடுகிறார். 
      உலக அனுபவங்களை யெல்லாம் உள்வாங்கி, உலகம் உய்ய உயர்வழி காட்டிய வள்ளுவரின் வாசிப்புப் பயிற்சி, கற்றல் தவமாகிக் கற்பிக்கும் ஆசிரியர்கட்கெல்லாம் மேலான பேராசானாக உயர்த்தியிருக்கிறது. 
      அதுமட்டுமல்ல, மருத்துவர், பொறியாளர், பொருளியல் வல்லுநர், அரசியலாளர், அறிவியலாளர், ஆன்மிக, தத்துவப் பேராளர், இவர்களோடு எழுதப் படிக்கத் தெரிந்த, தெரியாத எல்லார்க்கும் 'எழுத்தறிவிக்கும் இறைவனாக' நிலை நிறுத்தியிருக்கிறதே! 
      அந்தவழி வந்து தத்தம் சொந்தத்துறைகளில் கால்பதித்துச் சரித்திரம் படைத்தவர்கள் எல்லாரும் வள்ளுவரின் சந்ததியர்தாமே!

      தமிழகம் முழுவதும் 1094 மருத்துவர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்


      By DIN  |   Published on : 26th October 2017 02:09 AM  |
      தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் 1094 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
      சிவகங்கையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற பூமி பூஜை மற்றும் கால்கோல் நடும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
      டெங்கு தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசுடன், அனைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அலுவலர்கள் இணைந்து போர்க்கால அடிப்படையில் தீவிரமாக செயலாற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
      இதன் காரணமாக, சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 
      மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் டெங்குவின் பாதிப்பு இன்னும் குறையவில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையை மாற்றுவதற்கு அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
      காய்ச்சலின் அறிகுறி இருந்தால் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். இவைதவிர, டெங்கு காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டால் ஊசி போடுவதை தவிர்க்க வேண்டும். 
      சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை ஆய்வு செய்தபோது, டெங்கு காய்ச்சலுக்கான பாதிப்புகள் அதிகமாக இல்லை, இருப்பினும் இந்நிலையை அடுத்து டெங்கு இல்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வோடு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
      தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களுக்கு கடந்த மாதம் 1113 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
      மருத்துவமனைகளில் லேப் டெக்னீசியன் பணியாளர் பற்றாக்குறை உள்ளதாக வந்த புகாரை அடுத்து, புற ஆதாரமுறையில் 300 லேப் டெக்னீசியன்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவை தவிர, நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் கூடுதலான படுக்கை அறைகள் கட்டவும், கட்டில், விரிப்புகள், மருத்துவ உபகரணப் பொருள்கள் வாங்குவதற்காக அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
      மேலும், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இன்னும் சில தினங்களில் தமிழகம் முழுவதும் 350 மருத்துவர்கள், 744 சிறப்பு மருத்துவர்கள் என மொத்தம் 1094 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றார்.
        மானாமதுரை, திருப்பாச்சேத்தியில் போலி டாக்டர்கள் 4 பேர் கைது

        சிவகங்கை: மானாமதுரை, திருப்பாச்சேத்தியில் போலி டாக்டர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
        'டெங்கு' காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்காங்கே சில போலி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் கிடைத்தது. போலி டாக்டர்களை கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி சிவகங்கைக்கு வந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டிருந்தார்.
        இதையடுத்து, மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் விஜயன் மதமடக்கி தலைமையில் பூவந்தி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு, மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் பிரபு, இணை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் கோவிந்தசாமி பல்வேறு குழுக்களாக பிரிந்து போலி மருத்துவர்களை
        கண்டறியும் பணியில் இறங்கினர்.
        இவர்கள் நடத்திய சோதனையில் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் பி.யூ.சி., படித்துவிட்டு கிளினிக் மற்றும் மருந்துக்கடை நடத்தி வந்த நாகராஜன்,51, அதே ஊரில் ஓமியோபதி படித்துவிட்டு நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்த பாண்டீஸ்வரி, 32, ஆகியோரை கைது செய்தனர்.
        இதேபோல் திருப்பாச்சேத்தியில் பிளஸ் 2 படித்து விட்டு காய்ச்சலுக்கு ஊசி போட 80 ரூபாய் என அறிவிப்பு பலகை வைத்தும், காய்ச்சல் நோயாளிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஊசி மருந்தை பயன்படுத்தியும் வந்த முகம்மது பாரூக்,40, கீழடியில் தனியார் மருத்துவமனையில் பணி செய்து ஓய்வு பெற்ற டேவிட் செல்லப்பா கைது செய்யப்பட்டனர்.
        மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் விஜயன் மதமடக்கி கூறுகையில், '' டெங்கு காய்ச்சல் அறிகுறியை கண்டறியும் 'செல் கவுன்ட்டர்' இயந்திரங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு 18 ம், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 10 ம் வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவர்களிடம் சென்று முறையான சிகிச்சை பெற வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு ஊசி மருந்து அவசியமற்றது. நோயாளிகள் தாங்களாகவே மருந்துக்கடைகளில் ஊசி, மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தக்கூடாது. போலி மருத்துவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும்,'' என்றார்.

        பட்டப்பகலில் கொள்ளை : சேலத்தில் அட்டகாசம்


        சேலம்: பட்டப்பகலில், முகமூடி அணிந்த கொள்ளையர்கள், டிக்கெட் புக்கிங் சென்டருக்குள் புகுந்து, பெண் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம், மொபைல், மடிக்கணினிகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
        சேலம், கிச்சிப்பாளையம் பிரதான சாலையில், மூன்றாவது மாடியில், பிரவீன்மவுரியா, 35, என்பவர் ரயில், பஸ் டிக்கெட் புக்கிங் சென்டர் நடத்தி வருகிறார். 
        நேற்று காலை, 11:45 மணிக்கு, அங்கு முகமூடி அணிந்து வந்த மூன்று மர்ம நபர்கள், கத்தியை காட்டி, பணியில் இருந்த பெண்களை மிரட்டி, முதலில், கண்காணிப்புகேமராவை பறித்துள்ளனர்.
        தொடர்ந்து, கடையில் இருந்த, 16 ஆயிரம் ரூபாய், எட்டு மொபைல், நான்கு மடிக்கணினிகளை கொள்ளையடித்து, தயாராக நிறுத்தி இருந்த மொபட்டில் ஏறிச்சென்றனர்.
        பின், கடை ஊழியர்கள், கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து, பிரவீன் மவுரியா அளித்த புகார்படி, போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம், மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

        'டெங்கு' கொசு வளர்த்தவர்களுக்கு சேலத்தில் ரூ.40 லட்சம் அபராதம்


        சேலம்: ''சேலத்தில் டெங்கு கொசு ஒழிக்கும் பணியில், மெத்தனம் காட்டும் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் அபராதத் தொகையை செலுத்த தவறினால், சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்,'' என, கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
        சேலம், ராமகிருஷ்ணா சாலையில், மாநகராட்சி உயர் அதிகாரிகள் பங்களாவுக்கு எதிரே, எல்.ஆர்.என்., பணிமனை உள்ளது. இங்கு நேற்று காலை, கலெக்டர், ரோகிணி, மாநகராட்சி கமிஷனர், சதீஷ் ஆகியோர் தலைமையில், அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர்.

        பணிமனையில் பழைய வாகனங்கள், டயர் உள்ளிட்ட உதிரிபாகங்கள், வாகனங்களை மூடி வைக்க பயன்படுத்தப்படும் தார்ப்பாய்கள் ஆகியவற்றில், டெங்கு கொசுக்களை உருவாக்கும் புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.அதிர்ச்சி அடைந்த கலெக்டர், எல்.ஆர்.என்., பணிமனைக்கு, 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

        தொடர்ந்து, கலெக்டர், ரோகிணி கூறியதாவது:சேலம் மாநகராட்சி, மாவட்டத்தில், பல நிறுவனங்கள் டெங்கு தடுப்பு பணிகளை முழுமையாக மேற்கொள்ளாமல், தங்களது பொறுப்புகளை தட்டி கழித்தன. தற்போது, ஆய்வு நடத்தி, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள், தங்களின் அனைத்து குறைகளையும், 24 மணி நேரத்துக்குள் சரி செய்ய வேண்டும்.

        நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை, மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கும் நாட்களுக்குள் செலுத்த வேண்டும். 

        இவ்வாறு அவர் கூறினார்.

        சேலம் மாநகராட்சி பகுதியில் நேற்று மட்டும், 40 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

        Madras university yet to get surplus grant from centre

        Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...