Tuesday, October 31, 2017


அரசு ஊழியர்களுக்கு ஊதியம்: புது உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஊதிய உயர்வை அறிவித்த தமிழக அரசு, அக்டோபர், முதல் நடைமுறைக்கு வரும் என, அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, ஊதிய உயர்வு வழங்குவதற்கான பணிகள் துவங்கின.
இந்நிலையில், நிதித்துறை செயலர், சண்முகம் நேற்று வெளியிட்ட உத்தரவில், 'அரசு ஊழியர்களுக்கு, நவம்பருக்கான ஊதியம், புதிய ஊதிய உயர்வுக்கேற்ப வழங்கப்படும். அத்துடன், அக்டோபருக்கான நிலுவை தொகையை சேர்த்து வழங்க, துறைத்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.


கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு

காரைக்குடி: கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்குவதற்கான பணிகளில் உயர்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. 

கலை அறிவியல் கல்லுாரிகளில் 3500, இன்ஜி., பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 2 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஆறு மாதத்துக்கு ஒரு முறை இவர்கள் புதிய பணி அமர்த்தலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கல்லுாரி விடுமுறை காலமான மே மாதம் மட்டும் சம்பளம் கிடையாது. பணி நிரந்தரம் வேண்டும், குறைந்த பட்ச சம்பளமாக ரூ.25 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இவர்களது சம்பளத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டு அவர்களின் விபரத்தை உயர்கல்வித்துறை சேகரித்து வருகிறது.

கவுரவ விரிவுரையாளர் ஒருவர் கூறியதாவது: 20 ஆண்டுக்கும் மேலாக பணி நிரந்தரம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறோம். ஆனால், காலி பணியிடங்களில் அண்ணாமலை பல்கலையில் உபரியாக உள்ளவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுக்கு முன்பே உரிய கல்வி தகுதிகளுடன் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என யு.ஜி.சி., பரிந்துரைத்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கவுரவ விரிவுரையாளருக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையிலும் குறைந்த பட்ச சம்பளம் ரூ.21 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கையை ஏற்க வேண்டும், என்றார்.

மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி வழக்கில் பச்சமுத்து விடுவிப்பு


மருத்துவ, மாணவர் சேர்க்கை, மோசடி, வழக்கு, பச்சமுத்து, விடுவிப்பு
சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம்.பல்கலை. வேந்தர் பச்ச முத்து விடுவிக்கப்பட்டார்.

எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் ரூ.85 கோடி மோசடி செய்ததாக பச்ச முத்து மீது புகார் கூறப்பட்டது. தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி பச்சமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். 
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ. 85 கோடியை திருப்பி தர உத்தரவாதம் அளித்த நிலையி்ல் நீதிமன்ற நடைமுறைகள் முடிவந்தன. இதையடுத்து நடந்த விசாரணையில் மனுவை விசாரித்த நீதிபதிகள், பச்சமுத்து மீதான வழக்கை ரத்து செய்து விடுவித்து உத்தரவிட்டனர்.

சென்னையில் மழை: வாகன நெரிசல்!



 சென்னையில், மழை, வாகன நெரிசல்!
Share this video : 
spaceplay / pause
 
qunload | stop
ffullscreen
shift + slower / faster
volume
 
mmute
seek
 
 . seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
புரட்டி எடுக்குது மழை: பீதியில் நடுங்குது சென்னை
சென்னை : சென்னையில் இன்று காலை முதல் மழை நின்று நின்று பெய்து வருகிறது.வடகிழக்குப் பருவமழையால் நகரின் பிரதான சாலைகளில் வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன.
கடும் போக்குவரத்து நெரிசல்

எனினும் மழை காரணமாகவும், சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததாலும் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. . இதனால் காலையில் அலுவலகத்திற்கு புறப்பட்டவர்கள் 12 மணியளவில் தான் அலுவலகம் சென்றடைய நேரிட்டது. இந்நிலையில் தொடர்ந்து விட்டு விட்டு பெய்த மழை 4 மணிக்குப்பிறகு ஓய்ந்த நிலையில் தற்போது மாலை 5.30 மணியையே இரவு போல மாற்றும் வகையில் கருமேகம் வானைச் சூழ்ந்து சென்னை மக்களை பீதிக்கு ஆளாக்கியுள்ளது. பலரும் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வேளையில் தொடங்கியுள்ள மழையால் மீண்டும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் முதல் எஸ்ஐடி சிக்னல் வரையில் வாகனங்கள ஊர்ந்தே செல்கின்றன. 

இதே போன்ற நந்தனம் தேவர் சிலை முதல் சின்னமலை வரையிலான சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து செந்நீர்குப்பம் வழியாக வேலப்பன்சாவடி செல்லும் சாலையிலும் வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதே போன்று கிண்டி, அசோக் நகர், சூளைமேடு, ஆழ்வார்பேட்டை, கோபாலபுரம், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

சென்னை மநாகர போலீசார் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்களை வழங்கி வருகின்றனர். இதே போன்று ஐடி அலுவலகங்கள் நிறைந்துள்ள வேளச்சேரி, மத்திய கைலாஷ், பெருங்குடி உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அம்பத்தூரில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளதாக வாகன நெரிசல் காணப்படுகிறது.
Advertisement


பொதுப்பணி துறையில் 250 பேருக்கு கட்டாய ஓய்வு


லக்னோ: உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு பதவியேற்றதும், அரசு துறைகளில் உள்ள குறைகள் களையப்படும் என, உறுதி அளித்தது. 
அரசுத் துறைகளில் நடக்கும் ஊழலை தடுத்து, ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, முதல்வர் யோகி உத்தரவிட்டார்.

இந்நிலையில், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யாவின் பொறுப்பில் உள்ள, பொதுப் பணித் துறை, ஊழலில் முதலிடத்தை பெற்றது. இதையடுத்து, அந்த துறையில் உள்ள, நிர்வாக பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், கீழ்நிலை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட, 550க்கும் மேற்பட்டவர்கள் மீது விசாரணை நடந்தது.

அதில், 250க்கும் மேற்பட்டோர் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இது, ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட மிகப் பெரிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், மற்ற துறைகளில் உள்ள, ஊழல் அதிகாரிகள், ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர்
சென்னையில் நள்ளிரவிலும் விடாத கனமழை

Chennai,சென்னை
சென்னை: சென்னையில் நேற்று பகல் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து சாலைகளில் மழை நீர் பெருகி ஓடிய நிலையில் நள்ளிரவிலும் மேடவாக்கம், பள்ளிக்கரணை, கீழ்பாக்கம், முடிச்சூர், தண்டையார்பேட்டை, வடபழனி, போரூர், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், உள்ளிட்ட இடங்களிலும் விடாத கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கனமழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை, ரெயில்கள் தாமதமாக இயக்கம்



மழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அக்டோபர் 30, 2017, 07:42 PM

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மாலையும் கனமழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை மற்றும் சாலையில் தண்ணீர் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர். விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வேலை முடித்து வீட்டிற்கு செல்பவர்கள் பெரும் சிரமத்தை எதிர்க்கொண்டு உள்ளனர். கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை மாலையில் முன்னதாகவே வீட்டிற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.

இலங்கையையொட்டி உள்ள வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்கள் உள்பட கடலோர மாவட்டங்களில் நாளை செவ்வாய்க்கிழமை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


மழை காரணமாக நாளை சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளநிலையில் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து உள்ளார் ஆட்சியர் சுந்தரவல்லி.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் விடுமுறையை அறிவித்து உள்ளார்.

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரெயில்கள் தாமதமாக இயக்கம்

சென்னையில் கனமழை காரணமாக மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் கனமழையால் விரைவு ரயில்கள் வழக்கமான வேகத்தைவிட குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Monday, October 30, 2017


தஞ்சை பெரிய கோயிலுக்கும் தலையாட்டி பொம்மைக்கும் என்ன தொடர்பு? #TanjoreSadhayaVizha

வெ.நீலகண்டன்

1,000 ஆண்டுகளைக் கடந்து தமிழினத்தின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள், அந்நியர்களின் படையெடுப்புகள்... அனைத்தையும் தாங்கி, காலத்தின் சாட்சியாக கம்பீரம் குலையாமல் நிற்கும் தஞ்சை பெரிய கோயிலில் 1032-ம் ஆண்டு சதயவிழா இன்று (29.10.2017) தொடங்கி நாளை வரை நடக்கிறது.



தஞ்சைப் பெரிய கோயில், ஏராளமான அற்புதங்களைத் தன்னுள்ளே பொதிந்துவைத்திருக்கிறது. புவி அச்சின் சாய்வுகளைக் கணித்து, மிக நுட்பமாக அடித்தளத்தை அமைத்து, இருகாற்படை நுட்பத்தில் தொடங்கி, கனமில்லாத ஒற்றைக்கல்லால் கோபுரத்தை வடிவமைத்து நிறுத்தியிருக்கிறார்கள் சோழச் சிற்பிகள். புவியின் சுழற்சிக்கேற்ப தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இக்கோயிலின் கட்டுமான நுட்பம் உலக வல்லுநர்களை எல்லாம் விழியுயர்த்தி வியக்கவைக்கிறது.

ஒவ்வொரு கல்லிலும் கலைநயம். ஒவ்வொரு சிற்பத்திலும் ஓராயிரம் கதைகள். வழிபாட்டுக்குரிய ஆலயமாக மட்டும் அல்லாமல், வங்கியாக, கலைக்கூடமாக, சமூக நிர்வாகத்துக்கான ஒருங்குகூடு மையமாக விளங்கியிருக்கிறது இந்தப் பெரிய கோயில். இதை இராஜராஜேச்வரம் என்று குறிப்பிடுகின்றன இங்குள்ள கல்வெட்டுகள்.

கல்லணை நீர் தழுவிச்செல்லும் திருச்சுற்று மாளிகை, நெடிதுயர்ந்த திருவாயில்கள், வான் கயிலாயமாகவே விளங்கும் விமானம், இயற்கையின் அத்தனை அம்சங்களையும் அணுக்கமாகச் சுமந்துகொண்டிருக்கும் சிற்பங்கள். என பிரபஞ்சத் தத்துவத்தின் கட்டுமான மொழிபெயர்ப்பாக இருக்கிறது இந்தக் கோயில்.



காஞ்சிபுரத்தில் ராஜசிம்மப் பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில்தான் பெரிய கோயில் எழுவதற்கான ஆதாரம். அக்கோயிலின் அழகிலும் கலையிலும் மயங்கிப்போன ராஜராஜன், தன் தலைநகரில் அப்படியான ஒரு கலைக்கோயிலை எழுப்ப வேண்டும் என்று விரும்பினான். அதன் விளைவுதான் இப்பெரிய கோயில்.

தஞ்சை பெரிய கோயில் உருவாக்கத்துக்குப் பல நூறு பேர் துணை நின்றிருக்கிறார்கள். ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொருவரின் உழைப்பு இருக்கிறது. பொருள் படைத்தோர் பொருள் தந்தார்கள். இல்லாதோர் கல் தந்தார்கள். எல்லோரின் பெயரும் கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கிறது.

சில வருடங்களுக்குத் திருப்பணி செய்தபோது திருச்சுற்று மாளிகையின் அஸ்திவாரத்தில் ஏராளமான முண்டுக்கற்கள் கிடைத்தன. ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொருவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பொன்னள்ளி கொடுத்தோர் முதல் கல் கொடுத்தோர் வரை எவரின் பெயரும் வரலாற்றில் விட்டுப்போய்விடக் கூடாது என்பதில் ராஜராஜன் காட்டிய அக்கறை வியக்கவைக்கிறது.



இக்கோயிலுக்கு ஏராளமானோர் பங்களிப்புச் செய்திருந்தாலும் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர்கள் 12 பேர். அரசன் ராஜராஜன், தலைமைத் தச்சன் குஞ்சரமல்லன், அவனது உதவியாளர்கள் நித்த வினோதப் பெருந்தச்சன், கண்டராதித்த பெருந்தச்சன். பெரும் கொடை வழங்கிய ராஜராஜனின் சகோதரி குந்தவை, பல்வேறு கட்டுமானப் பணிகளில் பங்கெடுத்துக்கொண்ட ராஜராஜனின் சேனாபதி கிருஷ்ணன் ராமன், நிர்வாக அதிகாரி பெய்கைநாட்டுக் கிழவன் தென்னவன் மூவேந்த வேளாண், ராஜராஜனின் குருமார்கள் ஈசான சிவபண்டிதர், சர்வ சிவ பண்டிதர், மகன் ராஜேந்திரன், கோயிலின் தலைமைக் குரு பவனப்பிடாரன், கல்வெட்டுகளைப் பதிப்பித்த இரவி பாருளுடையான்..!

தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டியது யார் என்பது பற்றி நெடுங்காலம் சர்ச்சைகள் இருந்தன. தஞ்சையை ஆண்ட கரிகாலன் தீரா நோயால் தவித்ததாகவும், இந்தப் பெரிய கோயிலைக் கட்டி இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் மூழ்கியெழுந்ததால் நோய் தீர்ந்ததென்றும், 'பிரகதீஸ்வர மகாத்மியம்' என்ற நூல் சொல்கிறது. 'கிருமி கண்ட சோழன்' என்ற கரிகாலனின் பட்டப் பெயரை இதற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டியது அந்த நூல். ஆராய்ச்சியாளர் ஜி.யு.போப், 'காடுவெட்டிச் சோழன் என்பவனே பெரிய கோயிலைக் கட்டினான்' என்று என்று எழுதினார்.

1886-ம் ஆண்டில், ஹீல்ஷ் என்ற ஜெர்மானிய அறிஞர் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வுசெய்யும் பணியில் இறங்கினார். ஆறு ஆண்டுகால தீவிர உழைப்பில் கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆராய்ந்த ஹீல்ஷ், பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம் என்ற வரியை முன்வைத்து, 'பெரிய கோயிலைக் கட்டியவன் ராஜராஜ சோழனே' என்று உறுதிசெய்தார்.



தஞ்சை பெரிய கோயில் அமைந்திருக்கும் பகுதி சுக்கான் பாறைகள் நிரம்பியது. இப்படி ஒரு சுக்கான் பாறை நிலத்தில் இவ்வளவு உயரம் கொண்ட ஒரு கோயில் எப்படி நிற்கிறது..? அதுதான் அக்காலத் தமிழர்களின் கட்டுமான நுட்பத்தின் சிறப்பு. இது குறித்து, கோயில் கட்டடக்கலை கலைஞரும், ஆராய்ச்சியாளருமான தென்னன் மெய்ம்மன் விரிவாகப் பேசுகிறார்.

"பெரிய கோயிலின் விமானம் மிகத் திறமையான தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுக்கான் பாறை நிலப்பரப்பில் 350 அடிக்குத் தொட்டி போன்ற பகுதியை உருவாக்கியிருக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்த காட்டாறுகளில் இருந்து மணலைக் கொண்டு அத்தொட்டியில் கொட்டியிருக்கிறார்கள். அதன் மேல் மரக்கால் வடிவில் அடித்தளம் அமைத்து கனமான கல் பொருத்தி தரைமட்டத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதுவரை ஒற்றைச் சுவராகக் கொண்டு வந்து தரைக்கு மேலே இரட்டைச் சுவராகக் கொண்டுபோய் கோபுரமாக உயர்த்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் வடிவத்தில் இருக்கிறது விமானக் கட்டுமானம். இதற்குப் பெயர், 'டைனமிக் ஆர்க்கிடெக்சர்'.

இதன் சிறப்பு என்னவென்றால், பூமியின் ஆட்டத்துக்கேற்றவாறு கோபுரமும் அசைந்து தன்னைத் தகவமைத்துக்கொள்ளும். அதனால்தான் எல்லா இயற்கைச் சீற்றங்களையும் தாக்குப்பிடித்து நிற்கிறது. பெரிய கோயில் இறைவனை `ஆடவல்லான்’ என்று சொல்வார்கள். தமிழகத்தில் எந்தப் பகுதியிலுமே இல்லாத தலையாட்டி பொம்மை தஞ்சாவூரில் மட்டும் எப்படிக் கிடைக்கிறது என்ற கேள்விக்குப் பதில், அந்தப் பொம்மையின் பெருவடிவம்தான் பெரியகோயில் என்பதுதான்..." என்கிறார் அவர்.



பெரிய கோயிலின் பிரதான நுழைவு வாயிலுக்குக் கிழக்கில் உடையார் சாலை இருக்கிறது. உள்ளே அக்னிதேவர் சந்நிதி இருக்கிறது. இந்த உடையார் சாலையில் 240 சிவயோகியர்கள் தங்கி, ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் 10 பேர் கொண்ட குழுவாகப் பிரிந்து 24 திருவிழாக்களை நடத்தியதாகவும் கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோயிலில் உள்ள செப்புத்திருமேனிகள் பற்றிய பல செய்திகள் இந்த உடையார் சாலையில் கல்வெட்டுகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணும் புத்தகங்களைப்போல எழுத்துகளால் நிறைந்திருக்கின்றன.

கேராளந்தக வாசல், ராஜராஜன் திருமண்டபம், திருச்சுற்று மாளிகை, அக்னி தேவர். எமராசா, பரிவார ஆலயத்துப் பிள்ளையார், உமா பரமேஸ்வரியார்... என்று பல பெயர்கள் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. ஆனால், சிவலிங்கம் என்ற பெயர் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. `உடையார் ஸ்ரீ ராஜராஜேஸ்வரமுடையார்’ என்றே இறைவனைக் குறிப்பிடுகின்றன கல்வெட்டுகள்.

இங்கிருக்கும் நந்தி மண்டபம், நந்தி, அம்மன் சந்நிதி, வாகன மண்டபங்கள் அனைத்தும் பிற்காலக் கட்டுமானங்கள். விமானத்தை ஒட்டி, கருவறைக்குத் தெற்கேயுள்ள தட்சிணாமூர்த்தியை உருவாக்கியது மராட்டியர்கள். வாராகியும் அண்மைக்கால வருகைதான். மகா மண்டபத்தின் மேற்பகுதியும் பிற்காலக் கட்டுமானம்தான். கோயிலைச் சுற்றியிருக்கும் திருச்சுற்றுமாளிகை, ராஜராஜன் காலமான பிறகு கட்டப்பட்டது.



"முகப்பில் உள்ள ஐந்து தளங்களைக் கொண்ட கேரளாந்தகன் திருவாயிலில் முதல்தளம் தவிர, மற்றவை செங்கற்களால் கட்டப்பட்டவை. இந்தச் செங்கற்கள் சிறப்பான தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை. அடப்பமரம், மாமரம், கடுக்காய் மரம், தாணிக்காய் மரம் ஆகியவற்றின் பட்டைகளையும், திரிபலா எனப்படும் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றையும் கஷாயமாக்கி, மண்ணில் ஊற்றி, ஐந்து மாதங்கள் புளிக்கப் புளிக்கப் பிசைந்து, செங்கலாக அறுத்து, சுட்டு, ஒரு மாதம் ஆறவிட்டு, தண்ணீரில் ஊறவிட்டு, நன்கு உலரச்செய்து அதன் பிறகே கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1,000 ஆண்டு சரித்திரத்தில் தஞ்சையை ஐந்து முறை பூகம்பங்கள் தாக்கியுள்ளன. அனைத்தையும் தாங்கி கனகம்பீரமாக நிற்கிறதென்றால், நுட்பமான கட்டுமானமே காரணம்.

கருவறையைச் சுற்றி, நான்கு சுவர்கள். வெளியே சுற்றரை. அதன் வெளியே நான்கு சுவர்கள். இந்த எட்டு சுவர்களையும் இணைத்து, அதன் மேல் கூடையைக் கவிழ்த்து வைத்தாற்போல விமானம் அமைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து 216 அடி உயரம் கொண்ட இந்தக் கோபுரம் 13 அடுக்குகள் உடையது. நான்கு பட்டை வடிவில், வெற்றிடமாகக் கூம்பிச் செல்லும் இதன் உச்சியில் 12 அடி உயரமுள்ள கலசம் பொருத்தப்பட்டுள்ளது..." என்கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.



மாலிக்குகளும், நவாப்களும், சுல்தான்களும் பலமுறை தஞ்சை பெரிய கோயிலைச்சூறையாடினர். பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயரும் பீரங்கிகளைவைத்துத் தகர்த்தனர். 30 ஆண்டுகளுக்கும் மேல் சிப்பாய்களின் கூடாரமாக இருந்த பெரிய கோயில் பல தாக்குதல்களைச் சந்தித்தது. இருந்தும் அதன் கம்பீரத்தை யாராலும் சிதைக்க இயலவில்லை. அதனால்தான் அது இன்றும் பெரிய கோயிலாக இருக்கிறது.


அடி தூள்... வெறும் கைகளால் சிறுத்தையைச் சமாளித்த இளம் பெண்..!

கார்க்கிபவா


மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மோரினா மாவட்டத்தில் இருக்கிறது அந்தக் கிராமம். காடுகளின் மடியில் அமைந்திருக்கும் அழகான கிராமம். 25 வயது ஆஷாவின் சொந்த ஊர் அங்கிருந்து சில கிலோமீட்டர்கள். திருமணமாகி வந்ததுதான் இந்த ஊர். இரண்டு வயது குழந்தையைத் தூக்கிக் கொண்டு தன் அம்மாவின் வீட்டுக்குப் போய்கொண்டிருந்தார். அவருடன் சூரியனும் வீடுதிரும்பிக்கொண்டிருந்த மாலை வேளை. ஊர் எல்லையைத் தாண்டும்வரை அறிமுகமான முகங்களை கடந்து வந்த ஆஷாவுக்கு, சிறிது தூரம் தாண்டியதும் கண்ணில்பட்ட அந்த முகம் அத்தனைப் பரிச்சயமில்லை. அது சிறுத்தையும் முகம்.



புதர்களின் உள்ளிருந்து திடிரென வில்லன் என்ட்ரி கொடுத்த சிறுத்தையைக் கண்டதும் ஆஷாவுக்கு பயம் தொற்றிக்கொண்டது. கையில் இரண்டு வயது குழந்தை. இரண்டு பேரையும் சுற்றி சுற்றி வந்த சிறுத்தை ஒரு கட்டத்தில் பாய்ந்திருக்கிறது. குழந்தையைக் காப்பாற்றியே தீருவேன் என நினைத்த ஆஷாவுக்கு தைரியம் வந்தது. வெறும் கைகளாலே சிறுத்தையை தாக்கியிருக்கிறார். அதன் கழுத்தைப் பிடித்து கடிக்க முடியாமல் தடுத்திருக்கிறார். இத்தனையும் நடக்கும்போதே உதவிக்கு குரலையும் எழுப்பியிருக்கிறார். சிறுத்தை ஆஷாவின் கைகளில் நல்ல காயங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் கடிக்கவில்லை. அதற்குள் அருகில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் சத்தம் கேட்டு உதவிக்கு ஓடிவர, வில்லன் எஸ்கேப்.

அந்தப் பகுதி காடுகளில் சிலர் சிறுத்தையைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் யாரையும் தாக்கியதாக இதுவரை எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை. அபப்டியிருக்க, ஆஷா சிறுத்தையையே எதிர்த்தது பெரிய விஷயமாக அவர்களால் பாராட்டப்பட்டது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ஆஷாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். “நான் நடந்துப் போய்க் கொண்டிருந்தேன். வயலைத் தாண்டியதும் எங்கிருந்தோ என் மீது சிறுத்தை பாய்ந்தது” என பயம் விலகாமல் நடந்தச் சம்பவத்தை விவரித்திருக்கிறார் ஆஷா.

விஷயம் வன அதிகாரிகளுக்கு சொல்லப்பட, அவர்கள் விரைந்து வந்திருக்கிறார்கள். நடந்ததை எல்லாம் விசாரித்திருக்கிறார்கள். சம்பவம் நடந்த இடத்தில்Pugmarks எதுவும் இல்லை என்கிறார்கள். (Pugmarks என்பது காட்டு விலங்குகளின் காலடித்தடம்.) வந்தது சிறுத்தைதானா என்பதில் வன அதிகாரிகளுக்கு சந்தேகம். ஆனால் கிரமாத்தினர் சிறுத்தைதான் என ஊர்ஜிதமாக சொல்கிறார்கள். ஆஷா உடம்பில் உள்ள காயங்களும் சொல்கின்றன.

இப்போது ஆஷா அந்தப் பகுதியின் வீரமங்கையாக பார்க்கப்படுகிறார். தைரியத்துக்கு அடையாளம் என்கிறார்கள். இவை எதுவும் புரியாமல் அந்த இரண்டு வயது குழந்தை மருத்துவமனையில் சிரித்துக் கொண்டிருக்கும். ஆஷா விரும்பியதும் அதுதான்.

சிறுத்தை:

பெண் சிறுத்தை ஒரு பிரசவத்தில் 2 முதல் 5 குட்டிகளைப் பெற்றெடுக்கும். குட்டியின் வாசனைகூட வெளியில் தெரியாத அளவுக்கு தடுப்பு வேலிகளை தாய் அமைக்குமாம். 18 மாதங்கள் முதல் இரண்டு வருடங்களுக்குப் பிறகு, தாயிடம் இருந்து தனியாக செல்வதற்கு சிறுத்தைக் குட்டி பழகிவிடும். பிற குட்டிகளுடன் சேர்ந்து திரியும். தாய் பூனை, தன் குட்டிப் பூனைகளுடன் மெல்லிய உறுமல் ஒலியுடன் பேசும். இதேபோலத்தான் சிறுத்தையும் தன் குட்டிகளுடன் பேசுமாம். ஆறு மாதத்தில் தன் குட்டிக்கு எப்படி வேட்டையாடுவது என்றும், பிற மிருகங்களிடம் இருந்து தப்பிப்பது பற்றியும் தாய் சிறுத்தை பயிற்சி கொடுக்கும். எனினும், பெரும்பாலான சிறுத்தைக் குட்டிகள் சிங்கங்கள், கழுதைப்புலிகளுக்கு இரையாகிவிடும் பரிதாபமும் நிகழ்கிறது.

போலி முகவரியில் சொகுசுக்கார்! -நடிகை அமலா பாலைத் துரத்தும் வரி ஏய்ப்புப் புகார்

தினேஷ் ராமையா

போலி முகவரி கொடுத்து சொகுசுக் கார் வாங்கி ரூ.20 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலா பால் மீது புகார் எழுந்துள்ளது.



கேரள மாநிலத்தைச் சேர்ந்த அமலா பால் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக விலைகொண்ட பென்ஸ் எஸ் கிளாஸ் சொகுசுக் காரை வாங்கியதாகத் தெரிகிறது. அந்த சொகுசுக் காரை புதுச்சேரியில் போலி முகவரி மூலம் அவர் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சொந்தமாநிலமான கேரளாவில் அந்த காரைப் பதிவு செய்திருந்தால் வரியாக மட்டுமே, காரின் மொத்த மதிப்பில் 20 சதவிகிதத்துக்கும் அதிகமாக, அதாவது ரூ.20 லட்சத்துக்கும் மேல் செலுத்த வேண்டும். அதைத் தவிர்ப்பதற்காகவே, அவர் புதுச்சேரியில் வசிப்பதாக போலி முகவரி கொடுத்து அங்கு பதிவு செய்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள மாணவர் ஒருவரின் முகவரியில் அந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவருக்கு எந்த தகவலும் தெரியாது என்றும் கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த காரை கொச்சியில் உள்ள தனது வீட்டில் நிறுத்தியுள்ள நடிகை அமலாபால், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அந்த காரைப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறப்படுகிறது.

Power shutdown areas in Chennai on 31-10-17
Posted on : 29/Oct/2017 10:48:28


 
 
 
Power supply will be suspended in the following areas on 31-10-17 between 9.00 A.M. to 2.00 P.M. for maintenance work. Supply will be resumed before 2.00 P.M. if the works are completed.

PADI AREA: Pandurangapuram, TVS nagar 1 to 10th st, Vallalar st, Sekizhar st, Ponni amman koil st, Balaji nagar, Thiru Gnana sambandar st, Sivan koil and surroundings.
ENJAMBAKKAM AREA: Karpaga vinayaga nagar, Ramalinga nagar, Vettuvankanni ECR main road, Blue beach road, Maraikayar nagar, Bismillah nagar, Pandian nagar, Bywatch farm Rajendra garden, Kohinoor complex, Periya neelankarai
kuppam.
NANGANALLUR AREA: MCN nagar and Extn., Foundry road, Pillaiyar koil st, SBI colony, Gangaiamman koil st, 200 ft Radial road, Post Office st, Vembuliamman koil st, Theradi st, Panchayat road, Kulakkarai st, Arumugam avenue, Kumaran nagar, Anand nagar, RE nagar, Balaji nagar, vinayaga nagar, Sai nagar, Mapel avenue, Selvaganapathy avenue, Saravana nagar, Corporation road, Selvakumar avenue, Seevaram, Thanikachalam st, Ramachandran st, Kamaraj st, Industrial estate road, MG road, Balavinayagar avenue, Prakasam st, Ellaiamman nagar, Sripuram salai, Raman nagar, part of OMR,Thirumalai nagar and Anex, Ramappa nagar, CBI colony, Rajiv nagar, part of velachery main road, IIT colony, Menatchipuram, Manohar nagar, VGP Santhi nagar, ETA Techno park.

Central Govt, MCI revising MBBS Course: Dr Jagdish Prasad, DGHS

Central Govt, MCI revising MBBS Course: Dr Jagdish Prasad, DGHS

SINGAPORE STUDENTS LEARN TAMIL ARTS

SCAN CENTRE ASKED TO PAY FOR WRONG REPORT

கோவிலம்பாக்கம், மேடவாக்கம் ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்: காஞ்சிபுரம் ஆட்சியர் தகவல்


By காஞ்சிபுரம்  |   Published on : 30th October 2017 12:22 AM  |
கோவிலம்பாக்கம், மேடவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் விரைவில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், கோவிலம்பாக்கம், மேடவாக்கத்தில் அரசுக்குச் சொந்தமான காலிமனை இடங்களை ஆட்சியர் பொன்னையா ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
கோவிலம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகில் குப்பை கொட்டும் இடத்தைப் பார்வையிட்டு, அங்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தார். பின்னர், ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள காலிமனை, மேடவாக்கம் வெள்ளக்கால் வடக்குப்பட்டு பெரிய ஏரி அருகிலுள்ள காலிமனை ஆகிவற்றை பார்வையிட்டு, அந்த இடத்தின் விஸ்தீரணங்களைக் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஆட்சியர் பொன்னையா கூறியதாவது:
கோவிலம்பாக்கம், மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் நகராட்சிக்கு இணையாகக் குப்பைகள் சேர்ந்து விடுகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பகுதிகளில் மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து, அவற்றிலிருந்து உரம் தயாரிப்பதற்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து விரைவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
டெங்கு கொசுப்புழு உருவாவதற்குக் காரணமாக உள்ள கழிவுகளை அகற்றவும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்கவும் வேண்டும். அதன்படி, வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் திங்கள்கிழமை வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இதற்குப் பிறகும், அலட்சியமாக இருந்து டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானாக இருந்தால், அரசு, தனியார் நிறுவனங்கள் எதுவானாலும் பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்பதோடு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர் கட்டணம் உயர்வு


By சென்னை,  |   Published on : 30th October 2017 02:12 AM  | 
சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் பார்வையாளர் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வரை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்காக கட்டணம் பெறப்பட்டது. இந்த நிலையில், புதிய முனையங்கள் தொடங்கப்பட்டதும் உள்நாட்டு முனையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டு பன்னாட்டு முனையத்தில் மட்டுமே பார்வையாளர் அனுமதி வழங்கப்பட்டது. பன்னாட்டு முனையத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கான கட்டணம் ரூ.70-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டணம் சனிக்கிழமை (அக்.28) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

ஒற்றுமையால் ஒடுக்குவோம்


By தி.வே. விஜயலட்சுமி  |   Published on : 30th October 2017 03:58 AM  |
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றே என்பர். குழந்தைகளும், தெய்வச் சிலைகளும் திருடப்படுவதும், விலைக்கு விற்கப்படுவதுமாகிய நிகழ்வுகள் நாடெங்கும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
 இதுபோன்ற குற்றங்கட்குத் தண்டனை விரைவில் கிடைத்து விடும் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு இல்லாமற் போனது. அண்மையில் மதுரை சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பவித்ரா என்ற ஐந்து வயதுச் சிறுமி, அரசு மருத்துவ மனைமுன் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், ஐந்து பேர் கொண்ட குழு அக்குழந்தையைக் கடத்திச் சென்று மகப்பேறு இல்லா தம்பதியருக்கு விற்று விட்டதாகவும் அறிந்தோம்.
 காவல்துறை நடவடிக்கை சரியின்மையால் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் அக்குழந்தையின் பெற்றோர் வழக்குத் தொடுத்ததில் நீதிமன்றமே வழக்கை விசாரித்து, தனிப்படையின் மூலம் விரைந்து நடவடிக்கை எடுத்து குழந்தையைக் கண்டுபிடித்துப் பெற்றோரிடம் ஒப்படைத்தது என அறிந்து மகிழ்ந்தோம்.
 இது நிரந்தர மகிழ்வல்ல. இது போன்ற கடத்தல் தொழில் நாடெங்கும் தொடர்ந்து நடைபெற்று வரும் மிகப்பெரிய பாதகச் செயலாகி, சமுதாயத்தை, குறிப்பாக பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
 நம் நாட்டில் பண்டைக் காலத்தில் பெண் குழந்தைகள் மணலில் வீடு கட்டுவார்கள். ஆண் பிள்ளைகள் அம்மணல் வீடுகளை அழித்து விளையாடுவர் என்று இலக்கியங்களால் அறிய வருகிறோம்.
 ஆனால் தற்காலத்தில் குழந்தைகட்கு சிறு வயதில் ஓடி விளையாடக்கூட பாதுகாப்பும் உரிமையும் இல்லை. இல்லத்தில் எந்நேரமும் அடைபட்டு, காற்றோட்டம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகள் உடல் உறுதியுடன் இருக்காது.
 மனத்தளவிலும் பாதிக்கப்படுபவர். நெல்லையில் இரண்டு வயது குழந்தை கடத்தப்பட்டு, கண்காணிப்புக் கேமரா மூலம் கண்டு பிடித்ததாக அறிகிறோம்.
 பெரும்பாலும் நகரங்களில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் இருந்து விலகி, பலர் தனிக்குடும்ப வாழ்க்கை முறையை பின்பற்றத் தொடங்கி விட்டனர். பெற்றோர், அவர்களின் மணமாகாத பிள்ளைகள், மணமான பிள்ளைகள், அவர்களது குடும்பம் என ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்வது கூட்டுக் குடும்பம் என்று அழைக்கப்படும்.
 அக்கூட்டுக் குடும்ப முறைகளில் பல நன்மைகள் இருந்தன. இடவசதியின்மை, உடன்பிறப்பிற்குள் ஒற்றுமையின்மை என்ற பல காரணங்களால் கணவனும், மனைவியும் தங்கள் பிள்ளைகளுடன் ஒன்றாக வாழுகின்ற தனிக்குடும்பம் என்ற முறையே பரவலாக இன்று காணப்படுகின்றன.
 அக்காலத்தில், மகளிர் பணிக்குச்
 செல்ல வேண்டிய நிலையில், குழந்தைகளைப் பராமரிக்க வீட்டில் பெரியவர்கள் இருந்தனர். தனி மரம் தோப்பாகாது. தனி மலர் மாலையாகாது. கூட்டம் கூட்டமாய்ச் சேர்ந்து வாழும் கூட்டு வாழ்க்கை சிறப்பான ஒன்றாக இருந்தது.
 இன்ப துன்பங்களில் இணைந்து பங்கேற்று, பிணைந்து வாழ்வதற்குத்தான் மனிதர்கள் துணையை நாடுவர். உணர்வுகள் காரணமாக மனிதர்களிடையே மாறுபட்ட கருத்துகளும், வேறுபட்ட கொள்கைளும் தோன்றுவது இயற்கை.
 குடும்பத்தில் மனத்தளவில் வேறுபாடுகள் இருப்பினும், ஒருவர்க்குத் துன்பமெனில் அனைவரும் பங்கு கொண்டு உதவிடுவர். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற ஒருமைப்பாடு கொண்ட பரந்த மனப்பான்மையால் விரிந்த நோக்கில் மனிதர்கள், அக்கம் பக்கத்தினருடன் ஒன்றுபட்டிருந்ததால் சமுதாயத்தில் எந்த ஊறும் இன்றி அன்று இன்ப வாழ்வு வாழ்ந்தனர்.
 இன்றோ, வறுமை, பேராசை, உடல் உழைப்பின்மை, பழி வாங்கும் உணர்ச்சி, பொறாமை, குறுக்கு வழயில் பொருள் ஈட்டல் என்பன புற்றீசல் போல் நாளும் பல்கிப் பெருகியுள்ளன. குழந்தைகளைக் கடத்தி, பொருளீட்டி வாழ பலரும் தலைப்படுவதும் கொடுஞ்செயல். இச்செயலைக் களைய முற்படுதல் வேண்டும்.
 குழந்தைகளை உரிய, தெரிந்த பாதுகாவலருடன் பெற்றோர்கள் வெளியில் அனுப்ப வேண்டும். பள்ளி நிர்வாகத்தினரும் பள்ளி நேரங்களில் எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளை வெளியில் விடக்கூடாது.
 பெற்றேர்களுக்கு ஒரு அடையாள அட்டை வழங்கி அதை எடுத்து வருபவருடன் குழந்தைளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பள்ளி நிர்வாகம் பள்ளி வாயிலில் குழந்தைகள் பாதுகாப்பாக வீட்டிற்குப் போவதை கவனிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
 அனைத்துப் பள்ளிகளிலும், பேருந்து.
 ரயில் நிலையங்கள், மக்கள் பெருவாரியாகக் கூடும் இடங்கள், அங்காடிகள் போன்ற இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
 சட்ட ரீதியாக, குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறார்களா என்பதைக் கணக்கீட்டு முறையில் ஆராய வேண்டும். இ.பி.கோ. 363, 365 ஆகிய காவல் துறைச் சட்டங்கள் குழந்தை கடத்துபவர்களை கண்டுபிடிக்க செயலாற்றுகின்றன.
 காவல்துறையினரின் கணக்கெடுப்பின் மூலம் இவ்வாண்டில் 2,345 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த 30 நாட்களில் 193 குழந்தைகள் கடத்தப்பட்டதாகவும் காவல் துறையினா 75 விழுக்காடுகள் மீட்டு உரிய இடங்களில் சேர்த்து விட்டதாகவும் அறிய முடிகிறது.
 திருட்டுக் கும்பல்களைக் கண்டு பிடிக்க காவல் துறை தனிப்படைகள் அமைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் அவர்கட்குத் தனிப் பயிற்சி வகுப்புகள் வட்டம், மாவட்டம் தோறும் நடத்தி, கடத்தப்பட்டோரை மீட்பதற்கான வழி வகைகளை விரைந்து மேற்கொள்ள காவல் துறை உயர் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
 பொது மக்களும் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும்.
 சமுதாயம் சிறப்புற, அச்சமின்றி நடமாட அனைவரும் இணைந்து ஒற்றுமை யுடன் வாழ்தல் நன்று.
 மனமிருந்தால் மார்க்கமுண்டு.

ஆதார்: தனிநபர் தகவல்களை பாதுகாக்க புதிய நடைமுறை

By புது தில்லி,  |   Published on : 30th October 2017 03:28 AM  |
n25

ஆதார் கோரி விண்ணப்பிக்கும் மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்காக புதிய நடைமுறையைக் கொண்டுவரப் போவதாக இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒருவரது தனிப்பட்ட விவரங்களை ஆதாருக்காகப் பதிவு செய்யும் பணிகளை மேற்கொள்ளும் அரசு அல்லது வங்கி ஊழியர்கள், தங்களது கை ரேகையையோ அல்லது விழிப்படலத்தையோ பயோமெட்ரிக் முறையில் சம்பந்தப்பட்டவரது விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதன் வாயிலாக அந்தத் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்ய முடியும் என்று யுஐடிஏஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, அத்தகைய பயோமெட்ரிக் பதிவுகளை ஆதார் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களே மேற்கொண்டு வருகின்றனர். இதனால், மக்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களால் எளிதில் கையாள முடியும் நிலை இருந்து வருகிறது. அதைத் தவிர்க்கும் பொருட்டே, இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாகத் தெரிகிறது.
ஆதார் எண் பெற விண்ணப்பிக்கும்போது மக்களின் கைரேகைகள், விழிப் படலங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அந்த விவரங்களைப் பதிவு செய்வதற்காக யுஐடிஏஐ அமைப்பால் அங்கீகரிப்பட்ட பல ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளை பெரும்பாலும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே மேற்கொள்கின்றனர். அதற்கு அடுத்தகட்டமாகவே ஆதார் விண்ணப்பங்கள் அரசு, அஞ்சலகங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கி ஊழியர்களின் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்த சூழலில், மக்களின் தனிப்பட்ட விவரங்களை தனியார் வசம் கொடுத்தால் அவை பாதுகாப்பாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து, புதிய நடைமுறை ஒன்றைக் கொண்டுவர யுஐடிஏஐ முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒருவரது தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும்போது அரசு ஊழியர்களும், வங்கி ஊழியர்களும் தங்களது சுயவிவரங்களை சம்பந்தப்பட்டவரது விண்ணப்பதில் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய வேண்டும்.
இதனால், அந்தத் தகவல்களை பெருமளவில் தனியார் ஊழியர்களால் கையாள முடியாத நிலை ஏற்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த புதிய நடைமுறையானது வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக ஆதாருக்கு விண்ணப்பிக்கும்போது மட்டுமல்லாமல், அவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கும்போதும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என்று யுஐடிஏஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







 

    மாணவர்களை நாசமாக்கும் அமைப்புகள்! ஐகோர்ட் நீதிபதி வேதனை

    சென்னை : கல்லுாரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவரை, வேறு கல்லுாரியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை தெரிவிக்கும்படி, அரசு வழக்கறிஞருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, பச்சையப்பன் கல்லுாரி, மூன்றாம் ஆண்டு மாணவர், வாசுதேவன்; ஒழுங்கீனத்தில் ஈடுபட்டதாக, கல்லுாரியில் இருந்து நீக்கப்பட்டார்.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், வாசுதேவன் மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். கல்லுாரி முதல்வர் ஆஜராகும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜரான, கல்லுாரி முதல்வர், ''கல்லுாரி விதிகளை மதிப்பதில்லை; வகுப்புகள் நடப்பதற்கு, இடையூறு செய்வார்; மற்ற மாணவர்களை, போராட்டங்களுக்கு துாண்டுவார்; எனக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த மாணவனை அனுமதித்தால், கல்லுாரியின் சூழ்நிலை கெட்டு விடும்,'' என்றார்.அதற்கு, நீதிபதி கிருபாகரன், ''மாணவர்கள் எல்லாம், உங்கள் பிள்ளைகள்; மனுதாரரை மன்னியுங்கள்; மன்னிப்பு கடிதம் கொடுக்கும்படி, மாணவனுக்கு உத்தரவிடுகிறேன்,'' என்றார். நீதிமன்றத்துக்கு வந்திருந்த மாணவருக்கும், நீதிபதி அறிவுரை கூறினார்.''சில அமைப்புகளால், மாணவர்கள் நாசமாகின்றனர்; படிப்பதற்காக தான், கல்லுாரிக்கு மாணவர்கள் வர வேண்டும்; சில சமூக விரோதிகளால், மாணவர்கள் திசை திரும்புகின்றனர். அப்பாவி மாணவர்களை காப்பாற்ற, அந்த அமைப்புகள் முன்வராது,'' என, நீதிபதி தெரிவித்தார்.இதையடுத்து, வேறு கல்லுாரியில், மனுதாரரை சேர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளதா என்பதை தெரிவிக்கும்படி, அரசு வழக்கறிஞருக்கு, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, வரும், ௩௦ம் தேதிக்கு, தள்ளிவைத்தார்
    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ஆண் குழந்தைக்கு ரூ.1,000, பெண் குழந்தைக்கு ரூ.500: குழந்தை பிறந்ததை பெற்றோரிடம் தெரிவிக்க பணம் வசூல் - புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் உறுதி
    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ஆண் குழந்தைக்கு ரூ.1,000, பெண் குழந்தைக்கு ரூ.500: குழந்தை பிறந்ததை பெற்றோரிடம் தெரிவிக்க பணம் வசூல்  புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் உறுதி
    ராயபுரம் அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் குழந்தை பிறந்ததை சொல்வதற்கு கட்டாயமாக பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் பொன்னம்பல நமச்சிவாயம் தெரிவித்தார்.
    வடசென்னையின் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றாக ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை உள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் 510 படுக்கை வசதிகளுடன் செயல்படும் இந்த மருத்துவமனைக்கு வடசென்னை மட்டுமின்றி திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தும் பிரசவத்துக்காக பெண்கள் அதிக அளவில் வருகின்றனர். படுக்கை வசதி கிடைக்காத கர்ப்பிணிகள் தரையில் படுத்திருக்க வேண்டியுள்ளது. இங்குள்ள ஊழியர்களுக்கு பணம் கொடுத்தால்தான் குழந்தை பிறந்ததையே சொல்கின்றனர். ஆண் குழந்தைக்கு ரூ.1,000, பெண் குழந்தைக்கு ரூ.500 என வசூலிக்கின்றனர்.
    அடிப்படை வசதிகள் இல்லை
    இவை தவிர மருத்துவமனையின் பின்பக்கம் உள்ள ஜன்னல் வழியாக குழந்தையை காட்டுவதற்கும், உணவு, துணிகள் போன்றவற்றை உள்ளே கொடுப்பதற்கும் பணம் வசூலிக்கப்படுகிறது. காலை, மதியம், மாலையில் பார்வையாளர்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த நேரத்தில் முறையான ஒழுங்குபடுத்துதல் இல்லாததால் தள்ளு முள்ளு ஏற்படுகிறது. தண்ணீர் வசதி, இருக்கை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத தால் நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் குழந்தை திருட்டு சம்பவங்களும் நடைபெற்று வருவதால், பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் பெண்கள் அச்சத்துடன் உள்ளனர்.
    பிரசவ வார்டுக்குள் உறவினர்கள் அனுமதிக்கப்படாததால் குழந்தையை ஜன்னல் வழியாக உறவினர்களுக்குக் காட்டும் பெண்.   -  படங்கள்: ம.பிரபு
    இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறும்போது, “மருத்துவமனையில் அடிப்படை வசதி கள் இல்லை. தண்ணீர் குடிக்கக்கூட வெளியே செல்ல வேண்டியுள்ளது. டாக்டர்களும் சரியாக வருவதில்லை. தனியார் மருத்துவமனைக்கு போக வசதி இல்லாததால்தான் இங்கு வருகிறோம். ஆனால் இங்கு எதற்கெடுத்தாலும் பணம் கேட்கின்றனர். பிறந்த குழந்தையை பார்க்கக் கூட அனுமதிப்பதில்லை.
    கருவிகள் பழுதானதால் இங்கு பரிசோதனை வசதிகளும் இல்லை. பரிசோதனைகளுக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்லுமாறு சொல்கின்றனர். கர்ப்பிணிகளை அழைத்துக் கொண்டு அவ்வளவு தூரம் செல்வது மிகவும் கஷ்ட மாக உள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்” என்றனர்.
    குறையும் நோயாளிகள்
    பிரசவத்துக்காக அதிக அளவில் பெண்கள் அனுமதிக்கப்படும் அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 20 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். அவர்களும் சரியாக பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த மருத்துவமனையில் 2015-16-ம் ஆண்டில் உள்நோயாளிகளாக 2 லட்சத்து 7 ஆயிரத்து 28 பேர் சிகிச்சைப் பெற்ற நிலையில், 2016-17-ம் ஆண்டில் இது 1 லட்சத்து 96 ஆயிரத்து 791 ஆக குறைந்துள்ளது. அதேபோல் உள்நோயாளிகளின் எண்ணிக்கையும் 566-ல் இருந்து 539 ஆக குறையத் தொடங்கியுள்ளது. 2015-16-ம் ஆண்டில் வெளிநோயாளிகளாக 89,992 பேர் சிகிச்சை பெற்ற நிலையில், 2016-17-ம் ஆண்டில் 84,004 ஆக குறைந்துள்ளது.
    புகார் கொடுத்தால் நடவடிக்கை
    இதுதொடர்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் டீன் பொன்னம்பல நமச்சிவாயத்திடம் கேட்டபோது, “ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்படும். 90 சதவீதம் பெண்களுக்கு தேவை யான அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. வலிப்பு நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ள பெண்கள் மட்டும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி எத்தனை டாக்டர்கள் இருக்க வேண்டுமோ அத்தனை டாக்டர்கள் உள்ளனர். குழந்தை திருட்டைத் தடுக்க மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    குழந்தை பிறந்ததை சொல்வதற்கு பணம் வசூலிப்பதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், யாரும் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுப்பதில்லை. அப்படி யாராவது புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
    மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

    news today 23.10.1024