Monday, January 12, 2015

Government likely to accept NRI e-vote suggestion

Days after extending more benefits to Persons of Indian Origin (PIOs), the government is likely to accept the recommendations of a committee which has favoured voting for NRIs through electronic means. The government is likely to tell the Supreme Court this week that it accepts the recommendations of the committee, including e-ballot for NRIs. The issue will come up before the apex court where government has to explain its position on the issue.

A committee comprising officials from the EC, law ministry and the ministry of external affairs (MEA) had taken the opinions from all sections before submitting a report to the apex court in 2014. Any move to allow NRIs to use proxy voting on the lines of defence personnel and e-ballot facility will require changes in the law. Under the proposal, NRIs will be sent ballot papers electronically and they will have to return it to poll authorities physically. According to reports, chief election commissioner V.S. Sampath had said recently that the MEA was opposed to the idea of allowing NRIs to vote at embassies as it will be difficult to allow such an exercise because, in some countries, the NRI population could be equal to the local populace and it will be difficult to hold such an exercise at the embassy.

கனவு நனவானதா?

Dinamani

இளைஞர்களே! தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தை நகர்த்த உங்கள் தோள்களைக் கொடுங்கள்.' "இளைஞர்களே! உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்'- இவை வீரத்துறவி விவேகானந்தரின் எழுச்சிமிகு வார்த்தைகள்.

சமயத் துறவியாக இருந்தாலும், நாட்டின் விடுதலைக்காக அவர் ஆற்றிய உரைகள் பல. அவரது உரைகள் இளைஞர்களைத் தட்டி எழுப்புபவையாக இருந்தன.

"சுதந்திரம் வேண்டும் என்றால், அதை என்னால் எளிதில் கொண்டு வர முடியும். ஆனால், பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள்' என்று அவர் கேள்வி எழுப்பினார்.

வலிமையான பாரதத்தை இளைஞர்களால்தான் உருவாக்க முடியும். அவர்களை ஒன்று திரட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவர் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து, 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன பின்னரும் அத்தகைய மகானின் கனவு நனவானதா? இல்லையே.

விவேகானந்தர் போன்றவர்களை அரசியல் தலைவர்கள்தான் அவ்வப்போது நினைவுகூர்கிறார்களே தவிர, இளைஞர்கள் அவர்களைப் பற்றி கவலை கொள்வதில்லை.

அத்தகைய மகான்களின் ஜயந்தியன்று அரசு விடுமுறை அறிவித்தது என்றால், அந்த நாளை திரையரங்குகளிலும், பூங்காக்களிலும், கேளிக்கை விடுதிகளிலும் செலவிடுவதையே முக்கியப் பணியாகக் கொண்டுள்ளனர்.

15 வயதில் இருந்து 35 வயது வரை உள்ளோரை இளைஞர்கள் என்று கூறுகின்றனர். இத்தகைய இளைஞர்கள்தான் நாட்டின் வருங்காலத் தூண்கள் என்று வர்ணிக்கின்றனர். அரசியல் கட்சிகள்கூட இளைஞர் அணியின் பலத்தையே பெரிய பலமாக நம்பி இருக்கின்றன.

ஆனால், இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோரின் செயல்களை எண்ணிப் பார்க்கும்போது, அவர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு காரணமாக இருப்பார்களா என்பது சந்தேகமே.

தற்போதைய சூழ்நிலையில், சுய முன்னேற்றத்துக்குக் கூட பெரும்பாலான இளைஞர்கள் முயற்சி மேற்கொள்வதில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்.

இளமைப் பருவம் என்பது துடிப்புமிக்க பருவம். கனவுகளை சுமந்து திரியும் பருவம். ஆனால், இன்றைய இளைஞர்களின் பாதை திசை மாறிச் செல்கிறது. நாட்டின் முன்னேற்றத்துக்கு எது பாதகமாக விளங்குகிறதோ, அதைத்தான் இன்றைய இளைஞர்கள் செய்கின்றனர்.

இவை பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ வழிவகுக்கின்றன. அன்னிய சக்திகளின் ஊடுருவலுக்கும் வழிவகுக்கின்றன.

வருங்காலத் தூண்கள் வழிதவறிச் செல்கின்றன. கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, காலை காட்சியைக் காண திரையரங்கில் அமர்ந்திருக்கின்றனர்.

கல்லூரியில் ஒரு பாடவேளைக்கு ஆசிரியர் வரவில்லையென்றால், பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களை கல்லூரியில் உள்ள சிற்றுண்டியிலும், ஓய்வறைகளிலுமே காண முடிகிறது. ஒரு சில மாணவ, மாணவியரைத்தான் நூலகங்களில் காணலாம்.

மாணவர்கள் பொறுப்பில்லாமல் செயல்படுகிறார்கள் என்று கூறவில்லை. அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான வழிமுறைகள் இல்லை என்றே கூறலாம்.

தற்போது புதிய வழக்கம் ஒன்று பள்ளி, கல்லூரிகளில் புகுந்துள்ளது. அதாவது, குழுவாக சேர்ந்து கொண்டு தங்களுக்குள் மோதிக் கொண்டு, உயிரை மாய்த்துக் கொள்வது. இதுதான் விவேகானந்தர் கண்ட கனவா?

அமெரிக்காவின் சிகாகோ நகரில் விவேகானந்தர் 1893}ஆம் ஆண்டு செப்டம்பர் 11}ஆம் நாள் "அமெரிக்க சகோதர-சகோதரிகளே' என்று தொடங்கி நிகழ்த்திய உரை அந்நாட்டு மக்களின் மனதில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது எனலாம்.

அதற்கு முதல்நாள் வரை சாதாரண துறவியாக இருந்த அவர், அடுத்த நாள் முதல் அந்த நாட்டு மக்கள் போற்றும் மகானாக விளங்கினார்.

இந்த உரையின்போது, "பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று இவற்றால் உண்டான மதவெறி... இவை இந்த உலகத்தை இறுக்கமாகப் பற்றியுள்ளன.

மேலும் உலகை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து, நாகரிகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்த கொடியச் செயல்கள் இல்லாமல் இருந்திருந்தால், மனித சமுதாயம் இன்று இருப்பதைவிட பல மடங்கு உயரிய நிலையை அடைந்திருக்கும்' என்று முழங்கினார்.

அந்த மகான் இன்றிருந்தாலும், அவரது சீற்றம் குறைந்திருக்காது. ஏனென்றால், இப்போது மதவெறியும், குரோதமும், பொறமையும் அப்போதிருந்ததைவிட பல மடங்கு அதிகரித்துள்ளன.

அதனால், ஏராளமான இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஒன்றுமறியாத அப்பாவி இளைஞர்கள் இவற்றுக்கு பலிகடா ஆகின்றனர்.

"மக்கள் சேவையே மகேசன் சேவை' என்ற கொள்கையின் அடிப்படையிலேயே ராமகிருஷ்ண மடம் துவங்கப்பட்டது. அச்சேவையை இன்று துறவியர் பின்பற்றி வருவதை நாம் நன்கு அறிவோம்.

ஆனால், வேறு சிலர் தங்களது மக்களின் சேவையே மகேசன் சேவை என்ற ரீதியில் செயல்பட்டு வருகின்றனர்.

வீரத்துறவி கூறியபடி, நாட்டை சீர்ப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதற்கு இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும். இதுவே இந்த நேரத்துத் தேவை.



இன்று விவேகானந்தர் பிறந்த நாள்.

சொல்லத் தோணுது 17 - யாருக்குப் பொங்கல்?

Return to frontpage

ஒரு மாதத்துக்கு முன்பே பல பேருடைய மனதில் பொங்கல் பண்டிகைக் குடிகொண்டுவிட்டது. சூரிய வெளிச்சத்தைக் கண்டால் ஓடி மறைபவர்கள், சூரியனைக் கண் டால் தொப்பியையும் கருப்புக் கண்ணாடி யையும் போட்டுக் கொள்பவர்கள், குடை இல்லாமல் வெளியில் செல்ல முடியாத வர்கள், ஒரு நொடி வியர்வைக்கே மின்சார வாரியத்தை தொலைபேசியில் அழைத்து புகார் தெரிவிப்பவர்கள், குளிர் சாதன வசதி இல்லாமல் ஒரு நிமிடத்தைக் கூட தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் என பொங்கல் பண்டிகைக்காகத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர, பரபரப்பாக… வாழ்த் துச் சொல்ல, மகிழ்விக்க, நடிகர் - நடிகைகளைத் தேடி ஓடிக் கொண் டிருக்கும் ஊடகக்காரர்களும், எந்தப் படத்தைப் போடலாம் என காத் திருக்கும் திரைப்படத் துறையினரும், விண்வெளிக் கலத்தை விண்ணில் செலுத்திவிட்டு பதைபதைப்புடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருக்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களைப் போல், திரைப் படத்தின் வெற்றி - தோல்விக்காகக் காத் திருக்கும் ரசிகர்களும்தான்… பொங்கல் திருநாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.

பொங்கல் திருநாள் வந்தால் யார் முகத்தில் மகிழ்ச்சி உருவாக வேண் டுமோ... யாரெல்லாம் கொண்டாடி மகிழ வேண்டுமோ… அந்த உழவர்கள் எல்லாம் கடன்காரனுக்கு எந்த பதிலைச் சொல்வது... பொங்கல் செலவுகளை எப்படி சமாளிப்பது... குழந்தை குட்டி களுக்கு துணி எடுக்க யாரிடம் கையேந்துவது என கலங்கிப் போய் நிற்கிறார்கள். ஆனால், மிகச் சிறப்பாக அதாவது ஊடகத்தினர் மொழியில் ‘கோலாகலமாக’ பொங்கலை தமிழ் நாட்டு உழவர்கள் கொண்டாடி மகிழ்ந்த தாக செய்திகள் வெளியாகத்தான் போகிறது, ஊடகங்களில்!

அதேபோல் மழை பெய்தாலும், காய்ந்தாலும் உழவன் கொத்துக் கொத் தாகத் தற்கொலை செய்துகொண்டு செத்தாலும், எப்போதும் போல் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவிக்க, வாழ்த்துச் செய்திகளை அச்சடித்து வைத்துக்கொண்டு அரசியல்வாதிகளும் காத்திருக்கிறார்கள்.

உழவனுடைய நிலை எப்படியிருந்தா லும், உழவர்கள் பெருவாழ்வு வாழ்வதா கச் சொல்லி ஆள்பவர்கள் வாழ்த்துவதில் ஒரு பொருள் இருக்கிறது. எதிர்க்கட்சியும் மற்ற இதரக் கட்சித் தலைவர்களும்கூட சிறிதும் சிந்திக்காமல் அதே போன்ற வாழ்த்துகளைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பது எந்த விதத்தில் சரியானது?

கரும்பு வெட்டத் தொடங்கி ஆறு வாரமாகிவிட்டது. கத்தியை வைத்து கரும்பை சாய்த்துவிட்டால், அது உடனே ஆலைக்கு ஏற்றப்பட்டு எடை போட்டுவிட வேண்டும். இல்லையென்றால் தாமதிக் கிற ஒவ்வொரு நொடியும் வெய்யி லில் காய்ந்து எடைகுறைந்து கொண்டே யிருக்கும். வெட்டாமல் விட்டு வைத்திருந் தாலும் முற்றிப்போய், பூ பூத்து, சாற்றை இழந்து கரும்பு தக்கையாகிவிடும். கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தச் சொல்லி போராட்டங்கள் நாள்தோறும் நடைபெற்றுக்கொண்டே தான் இருக்கின்றன.

நடுவண் அரசு 2012-ம் ஆண்டு அறிவித்த 1,700 ரூபாயிலிருந்து 2,200 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. ஆனால் தமிழக அரசு அளித்துவந்த 550 ரூபாயை 450 ரூபாயாக குறைத்து அறிவித்திருக் கிறது. உற்பத்திவிலை கூடிப் போனதால் தங்களின் வேதனையை யாரிடத்தில் சொல்வதென நமக்கெல்லாம் இனிக்கும் சர்க்கரையை தரும் உழவன் கசந்து போய் கிடக்கிறான்.

இதுபோக ஏற்கெனவே தனியார் ஆலை நிறுவனங்கள் இவர்களிடம் வைத் திருக்கிற நிலுவைத் தொகையைக் கொடுக்காததால் அத்தனைப்பேரும் வேதனையில் வெந்து கொண்டிருக் கிறார்கள் .

திரைப்பட நடிகர்கள் உண்ணாவிரதம் எனச் சொல்லி வள்ளுவர் கோட்டத் தின் முன் உட்கார்ந்தால், எல்லா தொலைக்காட்சிகளும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்து அங்கே வருகின்ற ஒவ்வொருவரின் வாயிலும் ஒரு ஒலிவாங்கியைக் கொடுத்து நேரலை ஒளிபரப்பைச் செய்கின்றன.

ஆனால், உழவருடைய போராட் டத்தை ஒரு போராட்டமாகவே எவருமே பார்ப்பதில்லை. சென்ற மாதம் டெல்லி வரைக்கும் சென்று நாடாளுமன்றத்தின் முன் இந்தக் கடுங்குளிர் பருவத்திலும் வேட்டி - சட்டையுடன் கிடந்து கத்திப் பார்த்தார்கள். ‘இவர்கள்’ செத்துத் தொலைந்தால்… தங்கள் கட்சிக்குத் தான் இழுக்கு என நினைத்த அமைச் சர்கள், பழச்சாறு கொடுத்து படம் எடுத்துக்கொண்டு அனுப்பி வைத்து விட்டார்கள்.

எந்தப் பொருளை யார் உருவாக்கி னாலும், அதற்கான விலையை அவன் குறித்துக்கொள்ள முடியும். உழவ னுக்கு மட்டும்தான் அந்த உரிமை இல்லை. வணிகர்கள் கேட்கிற விலைக் குக் கொடுத்துவிட்டு எப்போது பணம் கொடுப்பார்கள் என காத்திருக்க வேண் டும். பல நேரங்களில் விலையில்லை எனச் சொல்லி திருப்பி அனுப்பி விடுவதால், வீதியில் கொட்டிவிட்டு வீடு வந்து சேர்கிறான். அப்போதுகூட உழவனின் நிலையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், ஓடிப் போய் போட்டிப் போட்டு அள்ளிக் கொள்பவர்களும் நம் மதிப்புக்குரிய மக்கள்தான்.

வேலை செய்கிற நாட்களுக்கும், விடுமுறை நாட்கள் எனச் சொல்லி வேலை செய்யாத நாட்களுக்கும் சேர்த்து ஊதிய மும்; அதுபோக, ஊக்கத் தொகை என அனைத்தையும் பெற்றுக்கொள்கிற பல்வேறு அலுவலக ஊழியர்களுக்கும் பொங்கல் திருநாள்தான். தலைமுறைத் தலைமுறையாக கடனி லேயே உழன்று, வறுமையிலேயே செத்து மடிகிற உழவனுக்கும் பொங்கல் தான். அனைவருடைய வயிற்றுக்கும் உணவளித்துவிட்டு யார் கையையும் எதிர்பார்த்து வாழாத உழவன், அரசாங் கம் கொடுத்த 100 ரூபாயை வாங்குவதற் காக வெய்யிலில் வரிசையில் காத்துக் கிடந்த காட்சிகளையும் கண்டுகொண்டு தான் இருந்தோம்.

உழவனின் குரல் ஓங்கி ஒலித்த காலங்களும் உண்டு. இறுதிவரைப் போராட்டத்தை ஒடுக்க முடியாமல், வேறு வழியில்லாமல் உழவர் சங்கத் தலைவரை சந்திக்க, புதுடெல்லியில் இருந்து அப்போது தலைமை அமைச்ச ராக இருந்த இந்திரா காந்தியும், சென்னையில் இருந்து முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனும் அவருடைய கிராமத்துக்கேச் சென்று பேசித் தீர்த்ததெல்லாம் அன்று நடந்தன.

யார் ஆட்சிக்கு வந்தாலும் அவன் குறை தீர்ந்தபாடில்லை. அவனது சிக்க லின் அடிவேரை ஆராய்ந்து பார்க்கத் தெரியாததாலும், விரும்பாததாலும் வெறும் இலவசங்களையும், மானியங் களையும் கொடுத்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

உழவனின் மரபுக் குடிகளெல்லாம் உடம்பில் தீப்பிடித்துக் கொண்டதுபோல் தன் கிராமத்தை விட்டும், தன் நிலத்தை விட்டும் வெளியூருக்கும், வெளி நாட்டுக் கும் ஓடிவிட்டன. மீதமுள்ளவர்களும் ஓடிப் போக நெடுங்காலமாகாது. அப் போது இன்று கொண்டாடுவதுபோல் உழவனின் பெயரைச் சொல்லி பொங் கல் திருநாளைக் கொண்டாட முடியாது.

ஏற்கெனவே உழவன் இல்லாத பொங்கலும், கால்நடைகள் இல்லாத மாட்டுப் பொங்கலும் நம்மவர்களால் உருவாக்கப்பட்டுவிட்டன. ‘இல்லை… நாங்கள் பொங்கல் கொண்டாடியே தீருவோம். உழவன் அழிந்தால் எங்களுக்கென்ன? நாங்கள் தமிழர்கள்’ எனச் சொல்லி கொண்டாடலாம். அப்படி யானால் தமிழர்களாக இருக்கின்ற கிறித்துவர்களும், இசுலாமியர்களும் பொங்கலைக் கொண்டாட வேண்டு மல்லவா? அவர்களும் இந்த உழவுத் தொழிலை செய்கிறவர்களும், செய்த வர்களும்தானே. இதை ஒரு மதம் சார்ந்த பண்டிகையாக மாற்றியவர்கள் யார்? உணவளிக்கும் சூரியனுக்கு நன்றி சொல்லும் நாள் என்றால் அப்படி ஒன்றை நாம் எல்லோரும் கொண்டாடுவதுதானே சரி?

உலகத்தில் எந்த மொழியிலாவது ‘ஓர் அரசாங்கம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும்’ எனச் சொல்லியிருப் பார்களா?

‘வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயரும்!’

- என ஒளவை பாடியது போல நடந்தால் அப்போதுதான் அது அரசாட்சியாக இருக்கும். ஆனால், இங்கே எதெல்லாம் உயர்ந்துகொண்டு இருக்கிறது என்பதை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்.

திருக்குறளையும், திருவள்ளுவன் புகழையும் பரப்பி அவனுக்கு சிலை வைத்துவிட்டால் தமிழன் வாழ்ந்துவிடு வான் என நினைப்பவர்களுக்கு, ஒளவையின் இந்தப் பாடலை நினைவு படுத்த விரும்புகிறேன். வள்ளுவனை ஒருவேளை ஆட்சி யாளர்கள் மதித்தால் (நடுவண் அரசையும் சேர்த்துதான்) வள்ளுவன் பாடியிருக்கிற ஒரு குறளின்படியாவது உழவுத் தொழிலை முன்னேற்றும் காரியத்தை முதலில் செய்து காட்டுங்கள்.

- இன்னும் சொல்லத்தோணுது…

எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmail.com

தமிழகத்தில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள்: தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு

கோப்பு படம்

தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளனர். போலி டாக்டர்கள் பற்றி பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

பி.காம். படித்துவிட்டு ஓர் ஆண்டாக சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தில் கிளினிக் நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த போலி டாக்டர் வெங்கடேசன் (57) என்பவரை கடந்த நவம்பர் மாதம் போலீஸார் கைது செய்தனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் போலீஸ் அதிரடி சோதனையில் 14 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ராஜபாளையத்தில் 7, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு போலி டாக்டர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

எம்பிபிஎஸ் படிக்காமல் ஆங்கில மருத்துவ முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் போலி டாக்டர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதனால் மருத்துவம் படித்த உண்மையான டாக்டர் யார்? போலி டாக்டர் யார்? என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

80 ஆயிரம் டாக்டர்கள்

இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் வி.எஸ்.துரைராஜ் கூறியதாவது:

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் 1915-ம் ஆண்டு முதல் இதுவரை 1,09,252 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் இறந்து இருப் பார்கள். சில டாக்டர்கள் வெளிநாடுகளில் குடியேறி உள்ளனர். தற்போது தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் டாக்டர்கள் உள்ளனர்.

போலி டாக்டர்களை எளிதில் கண்டுபிடிக்க டாக்டர்கள்தான் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மருத்துவம் படித்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த டாக்டர்கள் அனைவரும் தங்களுடைய பதிவு எண் சான்றிதழை, சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டு மற்றும் லெட்டர் பேடில் தன்னுடைய பெயர், படிப்பு மற்றும் பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

30 ஆயிரம் போலிகள்

இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் துணை தலைவர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளித்து வரும் சுமார் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளனர். போலி டாக்டர் செய்யும் தவறு, உண்மையான அனைத்து டாக்டர்களையும் பாதிக்கிறது. இதனால் டாக்டர்கள் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை போய்விடுகிறது. எனவே போலி டாக்டர்களை கண்டுபிடிக்க மாவட்டந் தோறும் தனிப்படை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புகார் அளிக்கலாம்

பொதுமக்கள் சிகிச்சைக்கு செல்லும் போது, அந்த டாக்டர் போலி என்ற சந்தேகம் இருந்தாலோ அல்லது போலி டாக்டர் என தெரியவந்தாலோ உடனடியாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு, எண்.914, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம் என்ற முகவரியில் புகார் தெரிவிக்கலாம்.

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலை 044-26265678 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம். போலி டாக்டர் என தெரியவந்தால், போலீஸில் ஒப்படைத்து விடுவோம் என தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் வி.எஸ்.துரைராஜ் தெரிவித்தார்.

மின்னணு முறையில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தேர்தலில் ஓட்டுப்போட அனுமதி மத்திய அரசு தீவிர பரிசீலனை

புதுடெல்லி

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மின்னணு முறையில் தேர்தலில் ஓட்டுப்போட மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று தெரிகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டுப்போடுவது தொடர்பாக பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘தற்போதைய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், வெளிநாடுவாழ் இந்தியர்கள் தேர்தலின்போது தங்களது சொந்த தொகுதிக்கு நேரடியாக வந்து ஓட்டுப்போடலாம் என்கிற சமத்துவமற்ற முறை பின்பற்றப்படுகிறது. எனவே, அவர்கள் வெளிநாட்டில் இருந்தவாறே, எளிதாக வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

குழு அமைப்பு

இதைத்தொடர்ந்து இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையம், சட்ட அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு அனைத்து தரப்பினரிடமும் இதுபற்றி கருத்துகளை கேட்டறிந்து அதனை பரிந்துரையாக மத்திய அரசிடம் அண்மையில் அளித்தது.

இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு இந்த வாரத்தில் இதை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னணு முறையில் ஓட்டு

இந்த குழுவின் பரிந்துரைகள் பற்றிய விவரம் தெரிய வந்து உள்ளது.

அதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மின்னணு முறை (ஆன்லைன்) மூலம் தங்களுடைய தொகுதிகளில் ஓட்டுப்போடலாம்.

பரீட்சார்த்த சோதனை

இந்த ஓட்டுப்பதிவு முறை முதலில் நாட்டில் ஒன்றிரண்டு பாராளுமன்ற தொகுதிகளில் பரீட்சார்த்தமாக சோதனை செய்து பார்க்கப்படும். இது நடைமுறை மற்றும் செயல்முறை ரீதியில் அனைத்து விதத்திலும் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பட்சத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் இந்த முறைக்கு அனுமதி அளிக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல், நமது ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலமாக ‘மறைமுக வாக்குப்பதிவு’ செய்வதை போன்று வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஓட்டுப்போட அனுமதிக்கலாம் என்ற மற்றொரு முறையும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.

தேர்தல் விதிகளில் மாற்றம்

மத்திய அரசின் இந்த பரிந்துரைகளை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டால், மறைமுக வாக்கு மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு ஆகிய முறைகளை அமல்படுத்துவது தொடர்பான தேர்தல் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, January 11, 2015

Sweet surprise in suspicious parcel for VHP leader TNN | Jan 11, 2015, 02.00 AM IST

CHENNAI: Police were called in after a VHP leader in Chennai received an anonymous parcel delivered at his house in Puzhal on Saturday. However, the content turned out to be Tirunelveli halwa and Srivilliputhur milk-khoa. 

VHP leader Thanikachalam's wife Kalyani received the parcel from a courier agency. She grew suspicious as it weighed about 500g and there was no address of the sender on the parcel which had the words 'sweet khana'.

Kalyani informed her husband about the parcel after keeping it outside the house. He alerted the Puzhal police who took the parcel and kept it on a sand-laden bullock cart at the police station. A team of Bomb Detective and Disposal Squad (BDDS) sleuths came and found it was just a sweet box.

Puzhal police personnel tasted the halwa and milk-khao and later distributed them to the complainants and others. Police said the parcel also contained bills for the purchase. tnn

Mad Rush Eases at Gas Dealers Across City

The New Indian Express

CHENNAI: If you are one among the 55 per cent of registered gas consumers in Tamil Nadu who have not yet registered for Direct Benefit Transfer for LPG (DBTL), you need not dread at waiting for your turn in long queues at the gas agency.

According to gas suppliers in Chennai, the scene now is peaceful compared to the rush they witnessed prior to January 1. “We used to get around 500 forms daily, now we get only 150,” said a dealer in Adyar.

As a consequence of this, agencies have begun to accept the ‘name-change’ requests from many consumers who were turned away earlier. “In December we refused to collect these regularisation forms as we had to finish our seeding formalities. But now we are relatively free and are accepting them,” said another gas agency dealer.

Senior Oil company officials said as of January 8, 45 per cent of consumers have been keyed into the system to receive the subsidy directly into their bank accounts. While Ariyalur leads with 59 per cent, the figure for Chennai is again comparatively lower at 38.32 per cent. Across the country, half the 15.3 per cent consumers have been fully registered (Cash Transfer Compliant) and so far Rs.1260 Crore have been transferred.

“More people are aware of the scheme and have begun to trust it as the cash has begun to get transferred into the accounts,” said a senior Indane official.

The subsidy amount, around Rs.300, arrives in the account after 3 to 4 working days once the gas cylinder has been delivered, officials said.

NEWS TODAY 10.06.2026